Jump to content

அடிக்கிறது கொள்ளை.. இதுல கோவம் வேறயா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Thieves involved in robbery near Chennai

அடிக்கிறது கொள்ளை.. இதுல கோவம் வேறயா கோவம்.. வீட்டு பொருட்களை அடித்து நொறுக்கிய திருடர்கள்!

அடிக்கிறதே கொள்ளை.. இதில் ஆத்திரம் பொங்கி வழியுது ஒரு வீட்டில் ஆட்டைய போட நினைத்த களவாணிகளுக்கு.

ஈஞ்சம்பாக்கம் பகுதியில் குடியிருப்பவர் பிரபாகர். இவர் பெருங்குடியில் உள்ள கார் கம்பெனியில் மேனேஜர் ஆவார். இவர் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், தனது மனைவி கல்பனா மற்றும் 3 குழந்தைகளை அழைத்து கொண்டு கொடைக்கானலுக்கு சென்றிருந்தார்.

இன்று காலை ஊர் திரும்பி பிரபாகர், தனது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, விலை உயர்ந்த பொருட்களாக பெரிய டி.வி., கண்ணாடிகளாலேயே ஜன்னல்கள், அலங்கார பெட்டிகள் ஆகியவை எல்லாம் சுக்குநூறாக நொறுங்கியுள்ளதை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பிரபாகர் நீலாங்கரை போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் விரைந்த வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதில், பூட்டிக் கிடந்த வீடு என்பதால் கொள்ளையர்கள் உள்ளே எளிதாக நுழைந்துவிட்டதாக கூறினர். வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லாததால் ஆத்திரமடைந்துள்ளதாகவும் அதனால் வீட்டிலிருந்த டிவி., மற்றும் கண்ணாடி பொருட்களை கொள்ளையர்கள் அடித்து நொறுக்கியதாகவும் கூறினர். ஆனால் கொள்ளையடித்து செல்லும்போது, பூஜை அறையில் சில வெள்ளிப் பொருட்களை மட்டும் அவர்கள் எடுத்து சென்றுள்ளனர் என்றனர்.

இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக கூறிய போலீசார், வீட்டினுள் நுழையும்போதே அங்கிருந்த சிசிடிவி கேமராக்களின் இணைப்பையும் துண்டித்துவிட்டுத்தான் கொள்ளை முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், எனினும் அவர்களது கைரேகைகள் எடுக்கப்பட்டுள்ளதால் விரைவில் பிடித்து விடுவோம் என்றனர்.

கொள்ளையடிக்க சென்ற வீட்டில் நகை, பொருட்கள் எதுவும் இல்லாத ஆத்திரத்தில் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/thieves-involved-robbery-near-chennai-322788.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கொள்ளை அடிப்பது அவ்வளவு லேசா? எவ்வளவோ ஆயுதங்கள் செய்து வந்திருப்பார்கள். எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் யாருக்குத்தான் கோபம் வராது. அடுத்தமுறை கோடைக்கானல் பக்கம் போகும்போது கொஞ்சமாவது வீட்டில் வைத்துவிட்டுப் போகச் சொல்லுங்கள். அடிச்சு உடைக்கிறார்களா எனப் பார்ப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

ஒரு கொள்ளை அடிப்பது அவ்வளவு லேசா? எவ்வளவோ ஆயுதங்கள் செய்து வந்திருப்பார்கள். எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் யாருக்குத்தான் கோபம் வராது. அடுத்தமுறை கோடைக்கானல் பக்கம் போகும்போது கொஞ்சமாவது வீட்டில் வைத்துவிட்டுப் போகச் சொல்லுங்கள். அடிச்சு உடைக்கிறார்களா எனப் பார்ப்போம் 

கொஞ்சம் கள்ள நோட்டு கில்ட் நகைகள் எண்டு சும்மா வாங்கி வைத்திருக்கலாமே... மிச்ச சாமான்கள் தப்பி இருக்கும்...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

கொஞ்சம் கள்ள நோட்டு கில்ட் நகைகள் எண்டு சும்மா வாங்கி வைத்திருக்கலாமே... மிச்ச சாமான்கள் தப்பி இருக்கும்...?

ஐரோப்பிய நாடு ஒன்றிலை கில்லிட்டு தாலிக்கொடி பதக்கம் சங்கிலி போட்டுக்கொண்டு ஒய்யாரமாய் போன பெண்மணிக்கும் கள்ளர் நாய்பேய் சாத்துப்படியாம். :grin:

போட்டால் ஒரிஜினல் பவுணிலை போடு இல்லாட்டி வெறும் கழுத்தோடை போ...ஆரை பேப்பட்டம் கட்டுறாய்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பிய நாடு ஒன்றிலை கில்லிட்டு தாலிக்கொடி பதக்கம் சங்கிலி போட்டுக்கொண்டு ஒய்யாரமாய் போன பெண்மணிக்கும் கள்ளர் நாய்பேய் சாத்துப்படியாம். :grin:

போட்டால் ஒரிஜினல் பவுணிலை போடு இல்லாட்டி வெறும் கழுத்தோடை போ...ஆரை பேப்பட்டம் கட்டுறாய்? :cool:

சாமான் கிடைக்கவில்லை எண்டால் சின்னக் கோள்வம்.

பேக்காட்ட வெளிக்கிட்டால், நிண்டு சாத்துவினம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.