Jump to content

துனீசியாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தனி வானொலி நிலையம்: அரபு உலகில் புதிய மாற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

துனீசியாவில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானதாகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படாததாகவும் கருதப்படுகிறது. ஆனால், 2011 புரட்சிக்கு பிறகு செயற்பாட்டாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். தற்போது ஓரினச்சேர்க்கை தைரியமாக வெளியே வந்து தங்களுக்கான சம உரிமை குறித்து பேசிவருகின்றனர்.

வானொலி

''துனீசிய வானொலியில், ஓரினச்சேர்க்கையாளர்களின் பிரச்சனை குறித்து பேசிய முதல் ஊடக நபர் நான்தான்'' என்கிறார் ஷம்ஸ் ராட் எனும் வானொலி நிலையத்தின் இயக்குநர் பெஹடிட் பெல்ஹெடி.

துனீசியாவின் தலைநகரான துனீசில் உள்ள இயங்கும் ஷம்ஸ் ராட் வானொலி நிலையத்தைச் சுற்றிக்காண்பித்த 25 வயதான பெல்ஹெடி, இது அரபு உலகின் முதல் ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபால் உறவுக்கார்கள், திருநங்கை மற்றும் நம்பிகளுக்கான (LGBT) வானொலி நிலையம் என்கிறார்.

இது குறைந்த பட்ஜெட்டில் ஆனால் சிறந்த தொழில்முறையில் இயங்கும், இந்த வானொலி நிலையத்தில் ஏழு பேர் பணியாற்றுகின்றனர். நிலையத்தின் உட்புறத்தில் LGBT யின் ரெயின்போ கொடி நிறங்களில் வரையப்பட்டிருந்தது.

இந்த வானொலி நிலையம் இயங்க ஆரம்பித்த ஆறு மாதத்தில், 15 நாடுகளில் இருந்து 10,000 பேர் வானொலியைக் கேட்கின்றனர் என்றும், வாரத்தில் ஆறு நாட்கள் யு டியூப்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும் பெல்ஹெடி கூறுகிறார்.

இங்கு இசை ஒலிபரப்படுகிறது, பிரச்சனைகள் குறித்து ஆழமாக பேசப்படுகிறது. இங்கு பங்களிப்பை வழங்கிவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை. இந்த வானொலி நிலையம் தொடர்ந்து இயங்குவதை மக்கள் விரும்பவில்லை. தனக்கு கொலை மிரட்டல்களும், மோசமான மேசேஜ்களும் வந்ததாக பெல்ஹெடி கூறுகிறார். அவர் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.

துனீசியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஓரினச்சேர்க்கையாளர்கள் என சந்தேகப்படும் நபர்களுக்கான கட்டாய பரிசோதனையை நிறுத்தப்போவதாகக் கடந்த வருடம்தான் அரசு அறிவித்தது.

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சிறை தண்டனைப் பதில் அபராதம் விதிப்பது, இதனைக் குற்ற வழக்கில் இருந்து நீக்குவது என அரசுக்கு பல பரிந்துரைகள் வழங்கப்பட்டன. ஆனால், அரசு இதனை ஏற்றுக்கொண்டதாக என்பது தெளிவாக தெரியவில்லை.

நகர்ப்புறத்திற்கு வெளியே வாழும் பெரும்பாலான துனீசிய மக்கள் பாரம்பரிய கலாசாரம் மற்றும் மத சிந்தனைகளைப் பின்பற்றுகின்றனர்.

அரபு உலகத்தில் ஓரினச்சேர்க்கை என்பது முறையற்ற நடத்தையாகப் பார்க்கப்படுகிறது. இதை மாற்றவே ஷம்ஸ் ராட் வானொலி நிலையம் பணியாற்றுகிறது என்கிறார் ஹியூமன் வாட்ச் அமைப்பின் மூத்த ஆராய்ச்சியாளர் நீலா கோஷல்.

 

ஓரினச்சேர்க்கையாளர்களின் கண்ணியத்தையும், சமத்துவத்தையும் ஊக்குவிப்பதை வானொலி நிலையம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்கிறார் பெல்ஹெடி.

துனீசில் உள்ள 24 வயதான முடி ஒப்பனையாளரான அப்திசலீம், இந்த வானொலி நிலையத்தைத் தான் தினமும் கேட்பதாக கூறுகிறார். மேலும், தன்னை வலுவானதாக உணர இது உதவுவதாகவும் அவர் கூறுகிறார்.

துனீசியாவில் புரட்சி ஏற்பட்டது திருப்புமுனையாக அமைந்தது. அப்போது முதல், தங்கள் உரிமைக்காக மக்கள் குரல் கொடுத்தனர்.'' என்கிறார் கோஷல்.

''தற்போதைய காலங்களில், பெண்கள் உரிமை இயக்கங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஓரினச்சேர்க்கையாளர் தங்கள் உரிமை குறித்து பேசுவதற்கும், பெண் இயக்கங்கள் ஊக்குவிக்கின்றன'' எனவும் கூறுகிறார் கோஷல்.

ஜனவரி 2018-ல் மத்திய துனீசில் LGBT திரைப்படத் திருவிழா நடக்க உள்ளது.

 

''இது போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. அரசும், காவல்துறையும் இதில் தலையிடாமல் இருக்க வேண்டும்'' என்கிறார் கோஷல்.

துனிசிய சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத கருத்துக்களை அந்த வானொலி நிலையம் ஊக்குவித்து வருகிறது என்கிறார் துனீசிய மசூதிகளின் இமாம் கவுன்சிலை சேர்ந்த ஹாஹிப் அல்-தின்

''அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. பாதிக்கப்பட்ட அவர்களுக்குச் சிகிச்சை தேவைப்படுகிறது'' என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/global-44523030

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சிலுவையை மீண்டும் சுமப்போம்!"     "உன்னைக் காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய்! அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான்!"   "அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!"   "உன்னைக் நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர்! அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர்!"   "அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையாய் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம்!"   "உன்னைக் கண்டதால் தியாகம் அறிந்தோம் சிலுவையின் பெருமை உணர்ந்தோம்! அன்னை தெய்வத்தின் அருமை அறிந்தோம் சிறந்த பண்பு கண்டோம்!"   "அன்று நம்பி மோசம் போனதால் சிதைந்து மதிப்பு இழந்தோம்! இன்று படும் துயரம் போக்க சிலுவையை மீண்டும் சுமப்போம்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • Published By: VISHNU 16 APR, 2024 | 07:48 PM   முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தேவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்ட அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார். பாலித தேவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை  மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வனவிலங்கு இராஜாங்க அமைச்சரும் ஆவார். https://www.virakesari.lk/article/181258
    • "உனக்கு தலை குனியும் !"     நேற்று:   "சிந்து சம வெளியில் இயற்கை ஒன்றி இவன் இருந்தான் குந்து வைத்து பல மாடி கட்டி நன்று இவன் வாழ்ந்தான் வந்து ஏறு குடிகள் ஆரியராம் வென்று இவன் தாழ்ந்தான் தந்து மயக்கி மனு தர்மத்தால் நேற்று இவன் சூத்திரனானான்!"   இன்று:   "புராணங்கள் - பொய் புரட்டுகள் இன்று இவன் பழகிவிட்டான் காரணங்கள்- சான்று உண்மைகள் இன்று இவன் விலக்கிவிட்டான் தோரணங்கள்- ஆலாத்தி அபிசேகங்கள் இன்று இவன் வாழ்க்கையாயிற்று சரணங்கள்[முருகா!] - ஸ்கந்தனை கொன்று என்று இவனைக் காப்பற்றுவாய்!"   நாளை:   "கண்ணை திறந்து கோபுரத்தை பார் சிற்பம் தலை குனியும்! உன்னை அறிந்து வேதத்தை படி தேவர் தலை குனியும்!! பொண்ணை புரிந்து சடங்கை நடத்து மந்திரம் தலை குனியும்!!! விண்ணை மறந்து மண்ணில் நில் மாயை தலை குனியும்!!!!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.