Jump to content

ஏறாவூர்பற்றில் நுண்கடனுக்கு தடை: ஏகமனதாக தீர்மானம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏறாவூர்பற்றில் நுண்கடனுக்கு தடை: ஏகமனதாக தீர்மானம்!

June 18, 2018
112-696x392.jpg

வட்டி விகிதம் குறித்து நிதி நிறுவனங்கள் ஒரு தீர்க்கமான முடிவை அறிவிக்கும் வரை ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவில் நுண்கடன் வழங்க முடியாது என்ற தீர்மானத்தை ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நுண்கடன் தொடர்பான விசேட கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏறாவூர்பற்று பிரதேச பகுதியில் நுண்கடன் நிதி வழங்குவது தொடர்பாக இன்று அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாளேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இன்றைய கூட்டத்தை பகிஸ்கரித்த நான்கு நிறுவனங்களுக்கு பிரதேசத்தில் கடன் வழங்க அனுமதி மறுப்பு.

மத்திய வங்கியில் பதவி செய்யாத நிறுவனங்கள், மத்திய வங்கியின் சட்ட திட்டங்களை கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கும் குறிப்பாக வலிந்துதவும் நிறுவனமாக பதிவு செய்த நிறுவனங்களுக்கு கடன் வழங்க தடை.

நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற பயனாளிகள் தொடர்பான விபரம் பிரதேச செயலாளருக்கு இரண்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும்.

வீடுகளுக்கு சென்று இனி எந்த நிறுவனமும் கடன் அறவிட முடியாது.

கடன் ஒப்பந்தங்கள் குறித்த பத்திரங்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும்.

வட்டி விகிதம் குறித்து நிதி நிறுவனங்கள் ஒரு தீர்க்கமான முடிவை அறிவிக்கும் வரை ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவில் கடன் வழங்க முடியாது என்ற தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியான முதலாவது நுண்கடன் வழங்கும் நிறுவனங்களை அழைத்து நடாத்தப்பட்ட கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத அமைப்புக்களுக்கு கடன் வழங்க முடியாது. வலிந்து உதவும் அமைப்புக்களாக பதிவு செய்யப்பட்ட அமைப்புக்கள் இனிமேல் கடன் வழங்க தடை, மத்திய வங்கி சட்ட திட்டங்களை மீறும் நிதி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க முடியாது போன்ற பல்வேறு நிபந்தனைகளை பிரதேச செயலாளர் விடுத்துள்ளார்.

கடன் கட்ட முடியாதவர்களுக்கு அழுத்தங்களை பிரயோகித்து தற்கொலைக்கு தூண்டுவது கொலைக்குற்றமாக கருதி நீதிமன்றத்தை நாட முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு ஒன்பது நிறுவனங்கள் கடன் வழங்கி உள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஒன்பது நிறுவனங்கள் ஒரு குடும்பத்திற்கு கடன் வழங்கி உள்ளதாகவும் அந்த அளவுக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் பொறுப்பற்று செயல்படுவதாகவும் கூறினார்.

குறித்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தடுத்ததாகவும் கூறினர்.

 

இதேநேரம் பாலியல் இஞ்சம் கோருவதான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
இருதயபுரத்தில் இவ்வாறு கடன் வழங்கி நிறுவன ஊழியர் ஒருவர் பாலியல் இலஞ்சம் கோரியதாக அவரை கடன் பெற்ற பெண்ணின் கணவர் கோடாரியால் வெட்டி விட்டு பொலீசில் சரணடைந்த சம்பவமும் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டன.

இதை விட மக்களை ஏழையாக்குதல், கடனை திணித்தல், பாலியல் இலஞ்சம் கேட்பதை தூண்டுதல், வீடுகளுக்கு சென்று கடனை அறவிடுதல், பொது இடங்களில் அனுமதி இன்றி கூட்டம் கூட்டுதல், கிராம சேவை உத்தியோகத்தர்களின் அனுமதி இன்றி கடன் வழங்குதல், வருமானத்திற்கு அதிகமாக கடன் வழங்குதல், நோக்கமற்ற கடன் குடும்பங்களை சீரழித்தல், அதிக வட்டி அறவிடுதல், ஒரு குடும்பத்திற்கு பல நிறுவனங்கள் கடன் வழங்குதல், கடன் வழங்கும் ஒப்பந்தங்கள் குறித்து மக்களுக்கு தெளிவில்லாமல் இருத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் கூட்டத்தில் கலந்து கொண்டோரால் முன்வைக்கப்பட்டது.

11-2-300x169.jpg12-2-300x169.jpg14-2-300x169.jpg

 

http://www.pagetamil.com/8795/

Link to comment
Share on other sites

நல்ல விடயம். இது  நிறைய இடங்களில் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்

சமூகம்  மீது  அக்கறை கொண்டவர்களின்  செயற்பாடுகள் இவை  தான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.