Jump to content

புலம் பெயர் தமிழ் ஊடகவியளாளர்களின் எதிர்காலம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தமிழ் ஊடகவியளாளர்களின் எதிர்காலம்?

புலம்பெயர் தமிழ் ஊடக்த்துறையின் எதிர்காலம் தொடர்பான சமூகப்பற்றுள்ள பலர் கேள்வியெழுப்ப ஆரம்பித்துள்ளனர். சரி, தவறு என்ற முரண்பாடுகளுக்கு அப்பால் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அப்பாலான வாதப்பிரதிவாதங்கள் புலம்பெயர் ஊடகங்களில் இடம்பெற்றிருந்ததைக் நிலை இன்று முற்றிலுமாக மாற்றமடைந்துள்ளது. முழு நேர ஊடகவியலாளர்களில் பலர் இன்று வேலையற்றவர்களாகவோ அன்றி வேறு வேலைகளை தெரிந்தெடுத்துக்கொண்டவர்களாகவோ காணப்படுகின்றனர். ஊடகத்துறை முழுவதுமாக அழிக்கப்பட்டு செய்திகளும் நிகழ்வுகளும் வெறுமனே நுகர்வுப் பண்டமாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

முழு நேர ஊடகவியலாளர்களின் அழிவும், ஊடகங்களின் இன்றைய நிலையும் ஆபத்தான எதிர்காலத்தின் முன்னறிவிப்பா என்ற அச்சம் பலர் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளன.

இணைய ஊடகங்கள் மரண அறிவித்தலுக்காகவும், இந்திய சினிமாவின் நுகர்விற்காகவும், பரபரப்புச் செதிகளுக்காகவும் மட்டுமே செயற்பட, காட்சி ஊடகங்களில் ஊடகவியலாளர்கள் காணாமல் போக ஆரம்பித்துள்ளனர்.

தமது அவல நிலை தொடர்பாக ஊடகவியாளர்கள் துணிச்சலுடன் பேச ஆரம்பித்தால் மட்டுமே புலம்பெயர் ஊடகத்துறையின் எதிர்காலம் தொடர்பான உரையாடலை காத்திரமான திசைய நோக்கி நகர்த்த முடியும்.

 

http://inioru.com/diaspora-tamil-medias-future/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டாம்பூச்சி பூச்சி போலத்தான் புலம்பெயர் வாழ்வில் ஊடகவியலாளர்கள் வாழ்க்கையும். கொஞ்ச நாட்களில் காணாமல் போய்விடுவார்கள்.

 ஐரோப்பாவில் உள்ள தமிழ் ஊடகத்துறையாளர்களுக்கு பெரிதாக எதையும் சாதிக்கவோ, சம்பாதிக்கவோ அதற்கான தளங்களில்லை. சரி இருக்கும் தளங்களில் ஒன்றைப் பிடித்துக் கொள்ளலாம் என்றால், தமிழ்  முதலாளியின் கீழ் வேலை பார்ப்பது  மிக மிகச் சிரமம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் முழுநேர தமிழ் ஊடகவியலாளராக, அதுவும் ஐரோப்பாவில் நீண்ட காலங்கள் செயலாற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

 உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன். வானொலி, தொலைக்காட்சி இரண்டிலும் தமிழில்  அள்ளி வீசிய வாத்தியார் ஒருவர், இன்று முகநூலில் தனதுநெஞ்சில் நிறைந்தவைஎல்லாவற்றையும் கொட்டி, “அரசனை நம்பி புருசனை இழந்ததுபோல் இவர்களை நம்பி இருந்த வேலையையும் விட்டிட்டனேஎன்றுபுலம்பிக் கொண்டிருக்கிறார்.

 வியாபாரிகள் எல்லாவற்றையம் தங்கள் வசப்படுத்தி வைத்துக் கொள்கிறார்கள். பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் எல்லாம் ஒரு குடையின் கீழ் தங்களிடமே இருக்க வேண்டும் என்பது அவர்களதுலைக்கா  இருக்கிறது. சின்னச்சின்ன ஊடகங்கள் அவர்களுடன்  முட்டி மோதி வளர முடியாமல் சோர்ந்து போய் விடுகின்றனஇத்தனைக்கும் பலம் பொருந்திய புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் ஆரோக்கியமான விசயங்களைச் சொன்னாலாவது ஆறுதல் படலாம். சரி அவர்களும் ஒருநாள் எல்லாவற்றையும் கைவிட்டால், மிச்சமாக இருக்கும் சின்னச் சின்ன ஊடகங்கள் அப்பொழுது நலிந்து போய்த்தான் இருக்கும்.

 அப்பொழுது  புலம்பெயர் தமிழ் ஊடகவியளாளர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேட வேண்டி இருக்கும். அல்லது புலம்பெயர் சமூகம் அவர்களை மறந்து போயிருக்கும்.

 ஏதாவது வழி இருக்கிறதா?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களில் பகுதி நேரமாக வேலை செய்யலாமே தவிர முழு நேரமாக வேலைசெய்து புலம்பெயர் நாடுகளில் வாழ்க்கையைக் கொண்டு நடாத்தமுடியாது. எனவே ஆர்வம் உள்ளவர்கள் உள்ளே போய் பின்னர் கையைச் சுட்டுக்கொண்டு வெளியே வருவதுதான் நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய புலம்பெயர் ஊடகங்கள் எல்லாம் கொப்பி அன்ட் பேஸ்ட் தான்.

உலக/பொது அறிவுகள் இல்லாமல் தங்களுக்கு தெரியாதையும் தெரிந்த மாதிரி எழுதுகின்றார்கள்.

உண்மைத்தன்மையற்ற ஆய்வுகள் கட்டுரைகளை எழுதி மக்களை குழப்பத்துக்கு உள்ளாக்குகின்றார்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசர்களை பொறுத்தே வாசகம் அமையும் 
"புலம்பெயர் ஊடகவியலார்கள்" இதை வாசிக்கவே எனக்கு 
இங்கு கருத்து எழுதி காணாமல் போன சில ஜோக்கர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள் 
ஊடகம் என்றால் அதன் பொருள் தெரியாமல் பரோட்டா போடுபவர்கள்தான் 
புலம்பெயர்ந்து இருக்கிறார்கள் .... இப்போது தாயகத்தில் இருந்துவரும் செய்திகளும் 
அதைத்தான் சொல்லி கொள்கின்றன.

முதலில் யாரும் ஊடக துறை சார்ந்து கல்வி தகமை கொண்டவர்கள் இல்லை 
சாதாரணமாக ஒரு கட்டுரை என்றால் அதை இவாறு எழுத வேண்டும் எனும் அடிப்படை 
அறிவே இல்லாதவர்கள்தான் கட்டுரை எழுதுகிறார்கள்.
எந்த அடிப்படை அறிவும் கிடையாது.
திறமையானவர்கள் முதலாம் படியிலேயே தள்ளிவிட படுகிறார்கள் விழுந்தவர்கள் 
இந்த விசர்ருகளுடன் வேலையா? என்றுவிட்டு வேறுவேலை தேடி போய்விடுகிறார்கள். 

நேரம் காலம் பணம் முதலீடு செய்து திறமையான வகையில் ஊடகம் நடத்த போனால் 
ரசிக்க கூடிய நிலையில் தமிழ் மக்கள் இல்லை. அவர்களுக்கும் ப்ரோட்டா தான் பிடிக்கும். 
அனுமானுக்கு கோவில் கட்டி கும்பாவிஷேகம் செய்ய கூடிய 
அறிவு நிலையில்தான் யாழ்ப்பாண தமிழர்கள் இருக்கிறார்கள். 
அனுமான்   யார்? ஏன் ? எதற்கு ? என்ற சாதாரண அறிவுக்கு வர கூடிய கேள்விகளே 
வருவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Maruthankerny said:

 

வாசர்களை பொறுத்தே வாசகம் அமையும் 

 

மருதங்கேணி,

அறுபதுகளில் வெளிவந்தமித்திரன்பத்திரிகை நீண்டகாலம்  கிளுகிளுப்பு செய்திகளை வெளியிட்டு பணம் பார்த்தது..

 

தம்பியைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட அக்கா

நள்ளிரவில் ஆடையைக் களைந்து சூடு வைத்த நாத்தனார்கள்

வவுனியாவில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மருத்துவர்

திருமணத்திற்கு முன்னர் இவருடன் டேட்டிங் செல்ல வேண்டும் அம்பானி மகளின் ஆசை

பறக்கும் விமானத்தில் இளம் ஜோடியின் இழிவான செயல் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள்

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஷாரிக் ஹாசனின் பாட்டி யார் தெரியுமா? கேட்டால் அசந்து விடுவீர்கள்.

இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகரின் மனைவி! அதிர்சித் தகவல்

இது ஒரு இணையத்தளத்தில் இருக்கும் ஒருநாள் செய்தியில் ஐந்து சதவீதமானவை.

“அந்த நடிகைக்கு இவ்வளவு அழகான மகனா?”என்று ஆச்சரியமான விடயங்கள்  நிறைய அந்த இணையத்தளத்தில் இருக்கின்றன . போதாததற்கு அதைச் சாப்பிடாதே இதைச்சாப்பிடாதே என்ற பயமுறுத்தல்களையும்ஒருநாளில் எப்படி வெள்ளையாகலாம். ஒரு வாரத்தில் தொப்பையை எப்படிக் குறைக்கலாம் என்ற ஆலோசனைகளையும் காணலாம்

சிறீ லங்காவையே தைரியமக வலம் இடமாக மாற்றிப் போட்ட இணையத்தளம். புலம்பெயர் தமிழர்களை  உண்டு இல்லை என்று பண்ணிவிடாதா என்ன?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் இப்படியான நாலாம், ஐந்தாம் தரச் செய்திகளை உள்ளேவிடுவதில்லை. ஆனால் கிளுகிளு செய்திகளையும் கிசுகிசு செய்திகளையும் யாழில் காணக்கிடைக்கவில்லையே என்று மூக்கால் அழுபவர்களும் உண்டு!

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழர்களுக்கு என்று பொதுவான எதிர்காலம் அல்லது  பொது நோக்கு என்று எதுவும் இல்லை அவ்வாறான ஒன்றை நோக்கிய ஆசைகள் அங்காங்கே உண்டு. அவ்வாறானவற்றை அடிப்படையாக வைத்தே ஊடகவியலாளர் இயங்க முடியும். தாயகத்தில் உள்ள அரசியல் வாழ்வியல் நிலவரங்களுக்கும் அதுசார்ந்த புலம்பெயர் தமிழர்களின் அக்கறை ஈடுபாடுகளை இணைப்பதே ஊடகவியலாளர்களின் எதிர்கால அடிப்படையாக இருக்கும். ஆனால் இவ்வாறான அடிப்படை இயக்கத்துக்கு புலம்பெயர் தமிழர் ஐக்கியப்ட்ட மக்கள் சமூகமாக மாறவேணும். போராட்ட காலத்தில் போராட்டம் என்ற ஒரு புள்ளியை வைத்து ஐக்கியப்பட்டார்கள் இன்று ஊர்சங்கங்கள் என்றளவில் சிதைந்துபோகின்றார்கள். அடுத்தடுத்த தலமுறையில் இந்த ஊர்ச்சங்கங்களும் காணாமல் போய்விடும். ஒவ்வொருவரும் தனித்தனித் தீவுகளாக வேறு வேறு சமூகங்களுக்குள் மறைந்து காணாமல் போகும் எதிர்காலம் தான் உள்ளது. இதில் ஊடகவியலாளர்கள் இயங்க என்ன தளம் உள்ளது என்ற கேள்வி எழுகின்றது. இன்று நாம் உலவிப் படிக்கும் தமிழ் இணையங்கள் செய்திகள் என்பவற்றில் எமது அடுத்த தலைமுறைக்கு எவ்வளவு ஈடுபாடு உள்ளது என அவதானித்தால் இது புரியும். இனிவரும் காலங்களில் தமிழர்கள் என்பது இலங்கை தமிழகம் மலேசியா சிங்கபூர் என உலகம் முழுவதும் உள்ள தமிழர்களைக் குறிப்பதாகவே அமைய முடியும். எமது சிதைவு அல்லது புலம்பெயர்வு என்பது நாம் அடயாளங்களை தொலைப்பதா அல்லது எமது அடயாங்களை பெருவட்டமாக மீள வேறு ஒரு வடிவத்தில் உருவாக்குவதா என்பதை தீர்மானிக்க வேண்டிய காலம் இது. ஊடகவியலாளர்களின் எதிர்காலமும் இவ்வாறான கோணத்திலேயே அமைய முடியும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.