Jump to content

மல்லாகம் இளைஞர் சுட்டு படுகொலை – காவல்துறை உத்தியோகஸ்தர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மல்லாகம் இளைஞர் சுட்டு படுகொலை – காவல்துறை உத்தியோகஸ்தர் கைது

June 18, 2018

1 Min Read

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Roshan-Fernando.jpg?resize=228%2C221

Roshan-Fernando

யாழ்.மல்லாகம் பகுதியில் இளைஞர் ஒருவரை சுட்டு படுகொலை செய்த காவல்துறை உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வடமாகாண சிரேஸ்ட காவல்துறை மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அது தொடர்பி மேலும் தெரிவிக்கையில் ,

மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விஷேட காவல்துறைக் குழு அமைக்கபட்டு உள்ளது. அக்குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். விசாரணைகளின் முடிவிலேயே சம்பவம் தொடர்பில் கூற முடியும். விசாரணைகளின் முடிவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட காவல்துறை உத்தியோகஸ்தரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/84086/

Link to comment
Share on other sites

விசாரணை முடிவில் இளைஞனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கத்தி, கோடரி, மண்வெட்டி, அலவாங்கு அனைத்தும் சாட்சிக்கு வைக்கப்படலாம். :shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

UPDATE 2:மல்லாகத்தில் நடந்ததென்ன?; தடயங்களை சோடிக்கிறார்களா பொலிசார்?

June 18, 2018
w2-696x522.jpg

மல்லாகத்தில் நேற்றிரவு இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்தும் மேலதிக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

மல்லாகத்தில் என்ன நடந்ததென்பது குறித்து நேற்றிரவே முதற்கட்ட தகவல்களை வெளியிட்டிருந்தோம். பொலிஸ் விசாரணை, சம்பவத்தை நேரில் கண்டவர்கள், நீதவான் விசாரணை என்பவற்றின் அடிப்படையில் வெளியாகியுள்ள புதிய தகவல்களை இதில் இணைத்துள்ளோம்.

சம்பவ இடத்தில் நின்ற மக்களின் தெரிவித்தவை வருமாறு.

நேற்று மாலை 6.45 மணியளவில் சுன்னாகத்தில் இருந்து சுமார் 8 வரையான மோட்டார்சைக்கிள்களில் ரௌடிக்குழுவொன்று வந்துள்ளது. அவர்கள் வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தனர். ஆலயத்திற்கு அருகில் ஒருவரை விரட்டி வந்துள்ளனர். விரட்டப்பட்டவர், ஆலய திருவிழாவிற்குள் புகுந்து விட்டார். இதனால் ஆலய வாசலில் வாள்களுடன் ரௌடிகள் நின்றுள்ளனர்.

அந்த சமயத்தில் ஆலய திருவிழா கூட்டத்திற்குள் இருந்து இளைஞன் ஒருவர் வீதிக்கு போயிருக்கிறார். அவரை ரௌடிகள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.ஆலய திருவிழாவில் கலந்து கொண்டிருந்த கொல்லப்பட்ட இளைஞனான பாக்கியராசா சுதர்சன் (32) இதை பார்த்துவிட்டு, அங்கு சென்றிருக்கிறார். தாக்கப்பட்டவர் சுதர்சனின் உறவுமுறையானவர். சுதர்சன் அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் சுதர்சனும் மோதலில் ஈடுபட்டிருந்தார் என பொலிசார் கூறுகின்றனர்.

 

அந்த சமயத்தில் ஓட்டோ ஒன்றில் சுன்னாகம் பொலிசார் அந்த பகுதியால் வந்துள்ளனர். ஏழாலையில் நடந்த திடீர் உயிரிழப்பை விசாரிக்க சென்றுவிட்டு அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

மோதலை அவதானித்த ஓட்டோவில் வந்த பொலிசார், அதை நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். துப்பாக்கியுடன் இருந்த கான்ஸ்டபிள் அடிவாங்கியவரை நோக்கி சுட முயன்றதாக பிரதேசமக்கள் கூறுகின்றனர். சுதர்சன் அடி வாங்கியவரை காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார். பொலிசாரின் துப்பாக்கிச்சூடு சுதர்சனை தாக்க, அவர் அலவக்குரல் எழுப்பியவாறு நிலத்தில் விழுந்து துடித்தார்.

இதையடுத்து வாள்களுடன் வந்த ரௌடிகள் தப்பியோடியுள்ளனர். முச்சக்கர வண்டியில் வந்த மற்றைய பொலிசாரும் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். துப்பாக்கியால் சூடு நடத்திய பொலிசார் அந்த பகுதியில் நின்றுள்ளார். நான்தான் சுட்டேன் என அங்கிருந்தவர்களிடம் தெனாவெட்டாக கூறியுமிருக்கிறார். பின்னர் அந்த பகுதியில் சிவில் உடையில் நின்ற பொலிசார் ஒருவர் அவரை ஏற்றிச்சென்றார்.

அந்த பகுதியில் ஏற்கனவே சிவில் உடையில் பொலிசார் இருந்ததாக நேற்றிரவே தமிழ்பக்கம் குறிப்பிட்டிருந்தது.

 

எனினும், இந்த சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திலிருந்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

“ஆலயத்தில் குழப்ப நிலைமை ஒன்று ஏற்பட்டது உண்மைதான். இளைஞர் ஒருவர் கையில் கம்பியுடன் வந்தார். அவரை நான்கு இளைஞர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அங்கு வந்த அவரது உறவினர் (உயிரிழந்தவர்) கம்பியுடன் வந்தவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து பாதுகாப்பாக அகற்ற முயன்றார். அப்போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இது நடந்து கொண்டிருந்தபோது திடீரெனப் பொலிஸார் வந்தனர். துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. மோதலைத் தவிர்க்க வந்த இளைஞர் நெஞ்சில் குண்டடி பட்டு நிலத்தில் கிடந்து சத்தமிட்டார். சிறிது நேரத்துக்குப் பின்னர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டார்”  என்றும் இன்னும் சிலர் சொல்கிறார்கள்.

சுதர்சனின் முன்பக்க வலது இடுப்பினூடாக நுழைந்த துப்பாக்கி ரவை, அவரது நுரையீரலின் அடிப்பகுதியை தாக்கியவாறு வெளியேறியுள்ளது.

இரண்டு ரௌடிக்குழுக்கிற்கிடையிலான மோதலை தடுக்க முற்பட்ட பொலிசார் மீது தாக்குதல் நடத்த முற்படடதையடுத்தே, தற்காப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர். நேற்று சம்பவ இடத்திற்கு வந்த நீதிவானிற்கும் அப்படியே கூறினர்.

 

ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் இதை மறுக்கின்றனர். தெல்லிப்பழை பொலிஸ் பகுதியில் நடந்த சம்பவத்திற்கு சுன்னாகம் பொலிசார் ஏன் சுட வேண்டும் என்றும் மக்கள் கேள்வியெழுப்பினர்.

வாள்வெட்டு கும்பல் கைவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் மாத்திரம் ஆரம்பத்தில் அங்கு நின்றது. நீதிவானுக்கு காண்பிக்கும்போது அந்த மோட்டார் சைக்கிளுடன் இரும்பு கம்பியையும் பொலிசார் காண்பித்துள்ளனர். இது விடயங்களை திசைதிருப்பும் மயற்சியென சந்தேகிப்பதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.

இதேவேளை, துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளார்.

 

http://www.pagetamil.com/8725/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லாகம் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தினை மனித உரிமைகள் ஆணைக்குழு பார்வையிட்டது

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தலமையிலான குழுவினர் இன்று காலை மல்லாகம் இளைஞர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இன்று காலை 10.30 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மனித உரிமைகள் ஆணைக்குழு மக்களுடன் கலந்துரையாடியுள்ளது. இதன்போது தமக்கு நீதி வேண்டும் என மக்கள் கூறியுள்ளதுடன், தமது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.

தொடர்ந்து சம்பவம் இடம்பெற்ற இடத்தைப் பார்வையிட்டதுடன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞருடைய உறவினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

http://globaltamilnews.net/2018/84137/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.