Jump to content

நூறாய் பெருகும் நினைவு


Recommended Posts

Sunday, June 17, 2018

நூறாய் பெருகும் நினைவு

 
5.jpg
 
நீங்க இலங்கையா? கேட்போருக்கு..., 
ஓமோம்... சொல்லியும்
 
நீங்க இந்தியாவா? கேட்போருக்கு...., 
ஆமாங்க... சொல்லியும் கடந்து போகிறேன் மனிதர்களை
 
அப்ப ஊரில எந்த இடம்?
 
சிலருக்கு பூராயம் ஆராயாமல்  பொச்சம் அடங்காது நீளும் கேள்விக்கு வாயில் வரும் ஊரைச் சொல்லிக் கடக்க முயல்வேன்.
 
அதையும் மீறி வரும் கேள்வி இது :...., 
அப்ப வெளிநாடு வந்து கனகாலமோ?  
இங்கை இப்ப எங்க  இருக்கிறியள்?  
 
சிலர் மேலும் விபரம் அறியும் ஆர்வத்தை இப்படியும் கேட்டு வழிமறிப்பார்கள்
 
நீண்ட காலம் வாழ்ந்த இடத்தை விட்டு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள்  தொலைவாக ஒதுங்கியது...., 
 
 பழைய நினைவுகளைத் தொலைத்து புதிய நினைவுகளைச் சேமித்து மீள வேண்டும் என்பதும் பிரதான காரணம்
 
அத்தோடு அதிகமாக தமிழர்கள் அல்லாத இடத்தை தேர்வு செய்தது யாருக்கும் என் தற்கால இருப்புப் பற்றி தெரியாமல் இருக்க வேண்டும் என்பதே
 
புதிய இடத்தில் வேலை. பெரும் நிறுவனம். 350பேருக்கு மேற்பட்டோரோடு வேலை செய்யும் சூழல். பணியில் சந்திக்கும் தருணங்களில் பொதுவான வணக்கம் நலவிசாரிப்பு அதோடு போகிறது முகங்கள். எந்த முகத்தையும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் அவசியம் இல்லை. எனக்கான பணியை செய்து கொள்வதே பணி.
 
அதிகம் யாருடனும் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. எல்லோரையும் போல அருகில் யாரும் வந்தால் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தால் சரி. அவர்களாகவே ஒதுங்கி விடுகிறார்கள். தற்காலம் அதிகம் பேரை ஆதரிக்கும் ஒரே இலத்திரனியல் சாதனம் மொபைல் பேசி. ஆதுவே என்னையும் இப்போது தன்னோடு சேர்த்துக் கொண்டுள்ளது.
 
இடைவேளை ஓய்வில் தனியே ஓரிடத்தை தேர்வு செய்து எனக்கான உணவை யாரோடும் கூட்டுச்சேராமல் தனித்து சாப்பிடுவதை வளமையாக்கிக் கொண்டேன். இதை கவனித்த சிலர் எனது மேசையில் வந்து சேர்ந்தார்கள்.
நீங்கள் வரேக்க எங்களையும் கூப்பிடுங்கோ சேர்ந்து சாப்பிடலாம்.
 
நெருங்கி வரும் உறவுகளை தட்டிவிட முடியாது சிலரது அன்பு இருக்கிறது. ஆனால் யாரையும் கூட்டுச்சேர்த்துக் கொள்ளும் மனநிலமை இல்லை. அதனால் எனக்கான இடைவேளை நேரத்தை மாற்றிக் கொண்டுள்ளேன். ஏனக்கு சௌகரியமாக இருக்கிறது தனித்திருத்தல்.
 
தொடர்புகளில் இருந்த பெருமளவு நண்பர்களின் தொடர்புகளைப் பேணிக் கொள்ளாமல் உறவுகளைத் துண்டித்துக் கொண்டுள்ளேன்
 
பலரை விட்டு ஏன் ஒதுங்கிப் போக எத்தனிக்கிறது மனம்
அவ்வப்போது எனக்குள்ளும் எழும் கேள்விக்கான பதிலை என்னாலும் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை
 
தவிர்க்க முடியாத சந்திப்புக்களை இயன்றவரை தற்கால இருப்பிடம் அடையாளம் சொல்லாமல் தவிர்த்துக் கொள்கிறேன்
 
சிலர் எனது அன்னியமாதல் புரிந்து எனக்கேற்ப பேசப்பழகியுள்ளார்கள்.  அதிகம் கேள்விகள் கேட்டு சங்கடம் தராமல் நாகரீகம் காக்கும் சிலரோடான தொடர்பாடலை மட்டும் பேணிக்கொள்கிறேன்
 
யாரையும் பார்க்க பேசும் மனநிலையை ஏனோ இந்த நாட்கள் தருவதில்லை
 
அதிக நேசிப்பு நம்பிக்கைக்கு கிடைத்த பரிசு துரோகம் ஏமாற்று. இவற்றைத் தந்து பொய்யாகிப் போனவர்களை அடிக்கடி ஞாபகவோடை இழுத்து வருகிறது
 
உறவுச் சேர்ப்பில் கண்ணீரை விதைத்து மனவழுத்தத்தைக் கூட்டிக் கொண்டது தவிர வேறு பயனில்லை
 
மறந்துவிட நினைக்கும் முகங்களும் அவர் தம் துரோகங்களும் மனவோடையை ரணமாக்கிய காயம் அவ்வளவு இலகுவாய் ஆறிவிடக்கூடியதல்ல
 
இதுவும் கடந்து போகட்டும் இப்படித்தான் என்னை ஆற்றுகிறேன்
 
தனிமையின் முழுமையான அழுத்தத்தை அணுவணுவாக அனுபவிக்கத் தொடங்கியுள்ளேன்
 
இந்தக்காலம் என்னை முழுதாக மாற்றிப் புதிதாக்குமென்ற நம்பிக்கையில் ஒதுங்கிப் போகிறேன்
 
ஆறாய் ஓடிவரும் கண்ணீருக்கு 
அணைகட்டி ஓயத்தெரியாது. நூறாய் பெருகும் நினைவுகளைத் தூர எறியவும் முடியாது கடக்கிறது காலம்
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, shanthy said:

 

அதிகம் யாருடனும் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. எல்லோரையும் போல அருகில் யாரும் வந்தால் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தால் சரி. அவர்களாகவே ஒதுங்கி விடுகிறார்கள். தற்காலம் அதிகம் பேரை ஆதரிக்கும் ஒரே இலத்திரனியல் சாதனம் மொபைல் பேசி. ஆதுவே என்னையும் இப்போது தன்னோடு சேர்த்துக் கொண்டுள்ளது.
 
இடைவேளை ஓய்வில் தனியே ஓரிடத்தை தேர்வு செய்து எனக்கான உணவை யாரோடும் கூட்டுச்சேராமல் தனித்து சாப்பிடுவதை வளமையாக்கிக் கொண்டேன். இதை கவனித்த சிலர் எனது மேசையில் வந்து சேர்ந்தார்கள்.
நீங்கள் வரேக்க எங்களையும் கூப்பிடுங்கோ சேர்ந்து சாப்பிடலாம்.
 
நெருங்கி வரும் உறவுகளை தட்டிவிட முடியாது சிலரது அன்பு இருக்கிறது. ஆனால் யாரையும் கூட்டுச்சேர்த்துக் கொள்ளும் மனநிலமை இல்லை. அதனால் எனக்கான இடைவேளை நேரத்தை மாற்றிக் கொண்டுள்ளேன். ஏனக்கு சௌகரியமாக இருக்கிறது தனித்திருத்தல்.
 
தொடர்புகளில் இருந்த பெருமளவு நண்பர்களின் தொடர்புகளைப் பேணிக் கொள்ளாமல் உறவுகளைத் துண்டித்துக் கொண்டுள்ளேன்
 
பலரை விட்டு ஏன் ஒதுங்கிப் போக எத்தனிக்கிறது மனம்
அவ்வப்போது எனக்குள்ளும் எழும் கேள்விக்கான பதிலை என்னாலும் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை
 

சாந்தி அக்கா... தனிமை சில நேரத்தில், மனதுக்கு இதமாக இருந்தாலும்,
உங்களைப் போல் முற்றான தனிமை என்பது, எதிர்காலத்தில்  மன உழைச்சலையும்  தரக் கூடும்.

குடும்பத்திலும், வேலை இடத்திலும், அயலவர்களுடனும்... 
மனிதன் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டிய நிலைமை தவிர்க்க முடியாதது.

அதற்காக... கண்ட எல்லோருடனும் பழக வேண்டியது இல்லை.
உங்களுக்கென ஒரு சிலரை தேர்ந்தெடுத்துக்கொண்டு... 
அவர்களுடன் உங்கள் மனப் பாரங்களை இறக்கி வைப்பது  மனதுக்கு ஒரு வடிகாலாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் ஏற்படுத்திய காயங்கள்...உங்களுக்கு அதிக மன உளைச்சல்களை ஏற்படுத்தியுள்ளன போலத் தெரிகின்றது சாந்தி!

முற்றாக ஒதுங்குதல் என்பது ....முனிவர்களுக்கு மட்டுமே சாத்தியமானது!

சாதாரண மனிதர்கள் நாங்கள்.....கொஞ்சம் பட்டும்...கொஞ்சம் படாமலும் வாழ்க்கையை நகர்த்த வேண்டியது தான் வழி!

காலம் ஏற்படுத்திய காயங்களைக்....காலமே குணப்படுத்தும் வலிமையுள்ளது!

எனினும் வடுக்கள்...என்றும் அழியாமல் இருக்கத் தான் போகின்றது!

ஒரு காலத்தில்....நீங்களே.....நான் தான் இப்படி எழுதினேனா என்று ஆச்சரியப்படக் கூடிய விதத்தில்....காலம்..உங்களுக்கும் கை கொடுக்கும் எனும் நம்பிக்கை என்னிடம் உள்ளது!

நீங்கள் மட்டுமல்ல....பலரும்...இப்படியான பிரச்சனைகளை...வென்று தான் வாழ்கிறோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லி அழுதால் தீர்ந்துவிடும் - அதை

சொல்லத்தானே வார்த்தையில்லை..” என்று கண்ணதாசன் ஒரு பாடலில் சொல்லியிருப்பார். உங்களின் நிலையைப் பார்ததால் வார்த்தைகள் இருக்கிறன. சொல்லுவதற்கு ஆட்கள்தான் இல்லை.

உங்களின் வேதனை புரிகிறது. அதற்காக விழுந்துவிட முடியாது. ஒரு இடத்தில் தேங்கி விடவும் முடியாது. ஓடிக்கொண்டே இருப்பதுதான் உகந்தது.

எழுந்து, நிமிர்ந்து, வாழ்ந்து காட்டுவதுதான் துரோகங்களுக்கு நாங்கள் அளிக்கும் பரிசு.

கண்ணதாசனின் இன்னுமொரு பாடல் வரி,

உனக்கு கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பக்கங்களுக்குள் நிறைய அறிந்து கொள்ள வேண்டிய வாசிக்க வாசிக்க திரும்ப படிக்க தோன்றும் பக்கம் ...இவ்வாறன விடையங்களில் கவனத்தை செலவிடுங்களேன்.

http://geethamanjari.blogspot.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமை பொல்லாதது....
அதுவும் புலம்பெயர் நாடுகளில்?????
நாமாக ஒதுங்கினால் ஒதுக்கப்பட்டு விடுவோம்.
வாய்விட்டு அழ வேண்டும்.
பிறருடன் மனம் விட்டு பேச வேண்டும்.
இதுதான் நிவாரணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை மிகப் பெரிய புத்தகம். போராடி  வாழத்தான் வாழ்க்கை. புறமுதுகிட்டு ஓடுவதற்கல்ல. பலருக்கு வாழ்க்கை இனிமையான பக்கங்கள். சிலருக்கு கிழித்தெறியப்பட வேண்டிய பக்கங்கள். தனிமை மிகவும் கொடியது. தனிமைச் சிறையை உடைத்து வெளியே வர முயற்சி செய்யுங்கள். உங்கள் சாதனைகளுக்காக எத்தனையோ விடயங்கள் காத்திருக்கின்றன.வலிகளைக் கடந்து வழிகளைத் தேடுங்கள்.உங்கள் திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு சந்தர்ப்பம் என நினைத்து அடி எடுத்து வையுங்கள். எதற்காகவும் காலங்கள் காத்திருப்பதில்லை. அட்வைஸ் பண்ணுவது இலகுதான்.ஆனாலும் ஆறுதல் சொல்லாமல் இருக்க முடியவில்லை. பிள்ளைகளின் உயர்வுகளைக் கண்டு பெருமையுற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில இடர்களில் இருந்து மீள குறுகிய தனிமை தேவைப்படலாம். ஆனால் நீண்டகாலமாக தனித்தோ, ஒதுங்கியோ வாழ்வது இலகுவானதல்ல. ஒவ்வொரு நாளும் நேரத்தை எப்படிக் கடத்தவேண்டும் என்று திட்டமிட்டால் தனிமை ஓர் வரமாகவும் அமையலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/20/2018 at 7:36 AM, குமாரசாமி said:

தனிமை பொல்லாதது....
அதுவும் புலம்பெயர் நாடுகளில்?????
நாமாக ஒதுங்கினால் ஒதுக்கப்பட்டு விடுவோம்.
வாய்விட்டு அழ வேண்டும்.
பிறருடன் மனம் விட்டு பேச வேண்டும்.
இதுதான் நிவாரணி.

எனது கருத்தும் இதுதான் 

Link to comment
Share on other sites

  • 1 month later...

நீண்டநாட்கள் கணணிப்பாவனை மறந்து போய்விட்டது. கருத்திட்டவர்களுக்கான பதிலையும் இடவில்லை முதலில் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.

கருத்திட்ட தமிழ்சிறி, புங்கையூரான்,கவி அருணாசலம் , மருதங்கேணி, யாயினி,குமாரசாமி, காவலூர் கண்மணியக்கா, கிருபன்,கந்தப்பு அனைவருக்கும் நன்றி.

சுமைக்குமேல் சுமை. ஒரு வழி மீண்டு வர மறுவழி தொலையும் நிலை இதுவே இப்போதைய நிலையாக இருக்கிறது.

காலமே எல்லாக்காயங்களையும் ஆற்றும் ஆயுதம். அந்தக்காலத்தையே நம்புகிறேன். அனைவரின் அன்புக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/13/2018 at 8:16 PM, shanthy said:

 

காலமே எல்லாக்காயங்களையும் ஆற்றும் ஆயுதம். அந்தக்காலத்தையே நம்புகிறேன். அனைவரின் அன்புக்கும் நன்றி.

காலம் தான் பதில் சொல்ல வேணும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.