Jump to content

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் மரணம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் மரணம்!

June 17, 2018
 

யாழ்ப்பாணத்தில் இன்று இரவு பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாகம் சந்தியில் சற்று முன்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மல்லாகம் சகாய மாதா தேவாலாய திருவிழாவில் இரு கும்பல்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலைத் தடுக்க முற்பட்ட போது, பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்த முன்ற இளைஞனே சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

இளைஞர் உயிரிழக்கவில்லை, துப்பாக்கிச்சூட்டில் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவிக்கின்ற போதும்,  அவர் உயிரிழந்து விட்டார் என்பதை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிசெய்துள்ளன.

ஏழாலையைச் சேர்ந்த பாக்கியராசா சுதர்சன் (வயது 27) என்ற இளைஞனே நெஞ்சில் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

தற்போது வரை மக்களை தேவாலயத்திற்குள்ளேயே பொலிசார் முடக்கி வைத்துள்ளனர். கொல்லப்பட்டவர் ஆவா குழு உறுப்பினர் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

http://www.pagetamil.com/8708/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப குழு சண்டை மட்டும் தான் மிஞ்சி நிற்கிறது அண்மையில் கல்லாறு என்ற இடத்தில் குழு சண்டையில் கத்து குத்துக்கிலக்காகி ஒரு இளைஞ்சன் உயிரிழந்தான் மட்டக்களப்பு வைத்திய சாலையில் பணி புரியும் ஒருத்தன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்

June 17, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

mallkam-6134.jpg?resize=720%2C540யாழில் காவல்துறையினரின் ;துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞன் தேவாலயத்தில் இடம்பெற்ற வழிபட்டு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர் என தேவாலயத்தில் நின்ற மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவிக்கையில் ,

மல்லாகம் சகாயமாத ஆலயத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதன் போது தேவாலயத்திற்கு வெளியே நின்ற இளைஞர் ஒருவரை வீதியால் வந்த இளைஞர் குழு ஒன்று தாக்க முற்பட்டு உள்ளது. அதனால் குறித்த இளைஞர் தேவாலய வளாகத்தினுள் ஓட முற்பட்ட போது அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அவ்வேளை அவ்விடத்திற்கு மோட்டார் சைக்கிளில் காவல்துறையினர் வந்துள்ளனர்.

காவல்துறையினரை கண்ணுற்ற தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றனர். அவ்வேளை தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் மீது துப்பாக்கியை காவல்துறையினர் நீட்டிய போது , அதனை கண்ணுற்ற தாக்குதலுக்கு இலக்கான இளைஞனின் சித்தப்பா (உயிரிழந்த இளைஞர்) குறித்த இளைஞரை கட்டி பிடிக்க முற்பட்ட போது காவல்துறையினர் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.

நான்கு தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டார். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞரை தேவாலயத்தில் நின்றவர்கள் மீட்டு தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது வழியில் அவர் உயிரிழந்தார்.இளைஞர் உயிரிழந்த செய்தியினை தேவாலயத்தில் நின்றவர்கள் கேள்வியுற்றதும் , காவல்துறையினர் வந்த மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கினார்கள். என தெரிவித்தார்.

அதேவேளை மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கி சூடு நடாத்திய காவல்துறை உத்தியோகஸ்தர் மது போதையில் நின்றதாகவும் அவ்விடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.அதேவேளை காவல்துறையினர் , வாள் வெட்டுக்குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தினை அடுத்தே அவ்விடத்திற்கு வந்ததாகவும் , அதன் போது தம் மீதும் தமது மோட்டார் சைக்கிளில் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த தாகவும் அதனால் தாம் தமது தற்பாதுகாப்புகாகவே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதகாவும் தெரிவித்தனர்.

அதேவேளை அவ்விடத்திற்கு நேரில் சென்று மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் விசாரணைகளை மேற்கொண்டார்.குறித்த பகுதியில் பொதுமக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள நிலையில் தற்போது அவ்விடத்தில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

IMG_6137.jpg?resize=720%2C540IMG_6138.jpg?resize=720%2C540mallkam-_6136.jpg?resize=720%2C540mallkam-6135.jpg?resize=800%2C600

 

http://globaltamilnews.net/2018/84060/

Link to comment
Share on other sites

அதானே அப்பாவிகள் மீதுதான் வீரம் காட்டுவினம் ஆவா குழுவுக்கு போலிசே பயமாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப குழு சண்டை மட்டும் தான் மிஞ்சி நிற்கிறது அண்மையில் கல்லாறு என்ற இடத்தில் குழு சண்டையில் கத்து குத்துக்கிலக்காகி ஒரு இளைஞ்சன் உயிரிழந்தான் மட்டக்களப்பு வைத்திய சாலையில் பணி புரியும் ஒருத்தன் 

ஏதோ ஒரு ச‌ண்டை தேவைப்படுகிறது......ஜனநாய்கத்தில் இதெல்லாம் சகஜம் அப்பா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடற்கூற்றுப் பரிசோதனைகள் ஆரம்பம்- சடலத்துக்காக காத்திருக்கும் உறவுகள்- மல்லாகம் துப்பாக்கிச் சூடு!!

மல்லாகம் சகாய மாதா ஆலயத்துக்கு அருகில் நேற்றிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட இளைஞனது சடலத்தின் உடற்கூற்றுப் பரிசோதனைகள் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மல்லாகம் குளமங்கலம் பகுதியைச் சேர்ந்த பா.சுதர்சன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். குறித்த இளைஞனது சடலத்தைப் பெறுவதற்கு உறவினர்கள் இன்று காலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சடல அறை முன்பாகக் காத்திருந்தனர்.

நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரே பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்று மருத்துவமனையினர் தெரிவித்தனர். தற்போது நீதிமற்ன உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளதால் பரிசோதனைகள் சட்ட மருத்துவ அதிகாரிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று எமது செய்தியாளர் தெரிவித்தார்.

http://newuthayan.com/story/16/உடற்கூற்றுப்-பரிசோனைகள்-ஆரம்பம்-சடலத்துக்காக-காத்திருக்கும்-உறவுகள்-மல்லாகம்-துப்பாக்கிச்-சூடு.html

Link to comment
Share on other sites

நீதிபதியுடன் பொதுமக்கள் தர்க்கம். வன்முறைகளை இலங்கைப் பொலிஸார் துாண்டி விடுவதாகவும் குற்றச்சாட்டு

தமது பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு வேண்டுமென பெற்றோர் கோரிக்கை
 
பதிப்பு: 2018 ஜூன் 18 11:09
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 18 19:38
main photomain photomain photo
  •  
யாழ்ப்பாணம், மல்லாகம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை சுட்டுக்கொன்ற சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் இருவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார். மல்லாகம் நீதிபதி அந்தோணிப்பிள்ளை ஜூட்சன் உத்தரவுக்கு அமைவாகவே கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை, தெல்லிப்பழை வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது சம்பவ இடத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் கிளை அதிகாரிகள் சென்றுள்ளனர். 
 
அதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற மூன்று இளைஞர்கள், பதிவுப் புத்தகத்தில் கையொப்பமிட மறுத்துள்ளனர். பொலிஸார் விசாரணையை நீதியாக நடத்தமாட்டார்கள் என்று கூறி வைத்தியசாலை வளகத்தில் நின்று அவர்கள் சத்தமிட்டனர். வேறு குழப்பங்களிலும் ஈடுபட்டனர்.

 

இதனால் வைத்தியசாலை நிவர்வாகம் வழங்கிய முறைப்பபட்டின் அடிப்படையில் மூன்று இளைஞர்களையும் கைது செய்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழு மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதும் சம்பவ இடத்திற்குச் சென்ற மல்லாகம் நீதிபதி அந்தோணிப்பிள்ளை ஜூட்சன் மக்களிடம் விசாரணை நடத்தினார்.

இதன்போது நீதிபதிக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பொலிஸாரின் செயற்பாட்டை நீதிபதி நியாயப்படுத்தியதாக குறித்த இடத்தில் நின்ற ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

இரு குழுக்கள் வாள்கள் பொல்லுகளுடன் சகாயமாத கோவிலுக்கு அருகில் உள்ள ஒழங்கையில் நின்று மோதியதாகவும் நீதிபதி கூறினார். அந்த மோதலில் ஒருவர் காயமடைந்ததாகவும் நீதிபதி கூறினார்.

ஆனால், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனுக்கும் வாள்வெட்டுக் குழுவுக்கும் தொடர்புகள் இல்லை என்றும் மக்கள் குறிப்பிட்டனர். உயிரிழந்த இளைஞன் கோவில் திருவிழாவுக்கு வந்ததாகவும் மக்கள் கூறினார்.

அவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தால் காலுக்கு கீழே சுட்டிருக்கலாமே என்றும் பொதுமகன் ஒருவர் நிதிபதியிடம் கேள்வி எழுப்பினார். ஆனால், நீதிபதி அதற்கு பதில் கூறவில்லை.

தமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கைப் பொலிஸாரே கஞ்சா போன்ற போதைப் பொருட்களை சில இளைஞர்களுக்குக்கு கொடுத்து, பின்னர் அவர்களிடையே வன்முறைகளைத் தூண்டி விடுவதாகவும் மக்கள் ஆவேசமாகக் கூறினார்.

அதேவேளை, துப்பாக்கிச் சூட்டை நடத்திய இரு பொலிஸாரும் மதுபோதையில் இருக்கவில்லை என்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு முன்னர். வேறு மரணம் தொடர்பான விசாரணைக்காக குறித்த இரு பொலிஸாரும் தன்னுடைய வீட்டுக்கு வந்ததாகவும், அவ்வாறு வந்து விட்டுச் சென்றபோதுதான், இளைஞர்கள் வாள்களுடன் மோதுப்படுவதைக் கண்டு துப்பாகிப் பிரயோகம் செய்தார்கள் எனவும் நீதிபதி விளக்கமளித்தார்.

இதனால், பொதுமக்களுக்கும் நீதிபதிக்கும் இடையே மேலும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இது முன்னுக்குப் பின் முரணான தகவல் எனவும் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார், நீதிபதிக்குப் பொய்யான வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் கூறிய மக்கள், கோவில் திருவிழாவுக்கு வாள்களுடன் எவரும் வரவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், துர்ப்பாக்கிப் பிரயோகம் நடத்திய பொலிஸார் இருவரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மல்லாகம் குழமங்கால் பிரதேசத்தைச் சேர்ந்த பாக்கியராச சுதர்ஸன் என்ற 32 வயதுடைய இளைஞர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=101

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடாநாட்டின் இளையோர் வினையை விதைத்து வினையயே அறுக்கிறார்கள்.

வன்முறையில் ஈடுபடுவோர் அனைவரும் களையெடுக்கப்படல்வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால் யாழ் மாநகர சபையின் அங்கத்தவர் ரெமீடியஸ் ஒரு வழ்க்குரைஞர் அவர்தான் குடாநாட்டுப்பொறுக்கிகளை கூடிதலாகப் பிணையில் எடுப்பவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர் ஓய்ந்த பின்னும் தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும்.. சொறீலங்கா சிங்கள பெளத்த இனவெறியின் அரச பயங்கரவாதம் திமிர் கொண்டு திரிவது.. உலக அரச பயங்கரவாதிகளின் கண்ணுக்கு ஏன் தெரிவதில்லை.

குற்றவாளிகள் என்றாலும் சரி... சாதாரண பொதுமக்கள் என்றாலும் சரி.. ஒரு சிவில் நிர்வாகம் நடத்தும் அரசு.. மனிதர்களின் உயிர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அது அரசியல் சாசன அடிப்படை அம்சம்... ஒரு அரசு கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை விடயம்.

அதையே காப்பாற்றிக்க முடியாதது எல்லாம் ஒரு அரசா... இது தான் பயங்கரவாதம். எடுத்ததுக்கும் துப்பாக்கியால் சுடுவது.

2009 க்குப் பின்.. தமிழர் தாயகத்தில் இப்படி எத்தனை படுகொலைகள் நடந்திட்டுது. துப்பாக்கிகள் இளைய சமூகத்தை நோக்கி தான் அதிகம் சுடுகுது.

இப்படியான நிகழ்வுகள் கண்டிக்கப்படுவதும்.. பின் ஒரு நடவடிக்கையும் இன்றி குற்றங்கள் கைவிடப்படுவதும்.. குற்றவாளிகள் அரசால் காப்பாற்றப்படுவதும்.. பின் இன்னொரு படுகொலை நடப்பதும்...  தொடர்வதுமாக இது உள்ளது.

இதனை தடுக்க வேண்டிய பொறுப்பு.. தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாக விளங்கிய விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று உச்சரித்து கொன்றொழிக்க உதவிய சர்வதேச நாடுகள் தான். அவர்கள் இந்தப் பொறுப்பில் இருந்து விலகி இருக்க முடியாது. அவர்களை நோக்கி தான் இந்த விடயம் உரத்துச் சொல்லப்பட வேண்டும்.

தமிழர்கள் இலங்கைத் தீவில் இன்று பாதுகாப்பு உத்தரவாதம்..  அரசியல் உரிமை இன்றி வாழ நேர்ந்தமைக்கு முழுப் பொறுப்பும் சர்வதேச சமூகம் ஆகும். ?

Link to comment
Share on other sites

சிங்கள மொழியில் பதிவு செய்யப்பட்ட வாக்கு மூலங்களில் முரண்பாடுகள்- மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்பாளர்

நேரில் கண்டவர்களிடமும் உறவினர்களிடமும் சாட்சியங்களை இலங்கைப் பொலிஸார் பதிவு செய்யவில்லை
 
பதிப்பு: 2018 ஜூன் 19 09:45
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 19 10:37
main photomain photomain photo
  •  
தமிழர் தாயகமான யாழ்ப்பாணம் மல்லாகம் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து, கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் இலங்கைப் பொலிஸார் வாக்கு மூலங்களை சிங்கள மொழியில் பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின் யாழ் மாவட்ட கிளை பணிப்பாளர் கனகராஜ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் தமிழ்மொழியில் கூறிய வாக்குமூலங்களுக்கும் சிங்கள மொழியில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகவும் அவர் கூறினார். அதேவேளை கைதான மூன்று இளைஞர்களும் குற்றவாளிகள் அல்ல என்றும், அவர்கள் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை தெல்லிப்பழை வைத்தியசாலையில் கையளிப்பதற்காகக் கொண்டு சென்றவர்கள் எனவும் உறவினர்கள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர். 
 
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்ட இளைஞனின் உறவினர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரிடம் தகவல்களை மனித உரிமைகள் ஆணைக்குழு பதிவு செய்துள்ளது.

 

மல்லாகத்திற்கு நேரில் சென்று அவதானித்து தேவையான தகவல்களை பெற்றுள்ளதாக கனகராஜ் கூறினார்.

கைதான இளைஞர்களிடம் சிங்கள மொழியில் மாத்திரம் இலங்கைப் இலங்கைப் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதால் அந்த வாக்கு மூலங்களில் பாரிய முரண்பாடுகள் உள்ளன.

இதனால், மனித உரிமைகள் ஆணைக்குழு தமிழ் மொழியில் வாக்குலங்களை பதிவு செய்ய நேரிட்டதாகவும் கூறிய அவர், சம்பவத்தை நேரில் கண்டவர்களிடமும் உறவினர்களிடமும் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆகவே. சம்பவத்தை நேரில் கண்டவர்களிடமும் மற்றும் உறவினர்களிடமும் வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் கனகராஜ் கூறினார்.

அதேவேளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு காரணமான, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸாரும் வெளியே சென்றபோது, துப்பாக்கிகளை எடுத்து சென்றமை குறித்து பொலிஸ் நிலைய பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளனரா என்பது தொடர்பாகவும் தகவல்களை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள். விசாரணைகள் பற்றிய நடவடிக்கைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானித்து வருவதாகவும் கனகராஜ் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்திய இரு பொலிஸாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கூறியுள்ளனர்.

சம்பவம் நடைபெற்றபோது வாள்களுடன் நின்ற இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய்வில்லை என்றும், வாள்களுடன் நின்ற இளைஞர்கள் பொலிஸாருடன் சேர்ந்து குற்றச் செல்களில் ஈடுபடுபவர்கள் எனவும் தமது முறைப்பபட்டில் கூறியுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் ஊடகங்களுக்கு கூறியுள்ளனர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழு மணிக்கு மல்லாகம் பிரதேசத்தில் இலங்கைப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில். மல்லாகம் குழமங்கால் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா சுதர்ஸன் என்ற இளைஞன் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=103

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Elugnajiru said:

யாழ் குடாநாட்டின் இளையோர் வினையை விதைத்து வினையயே அறுக்கிறார்கள்.

வன்முறையில் ஈடுபடுவோர் அனைவரும் களையெடுக்கப்படல்வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால் யாழ் மாநகர சபையின் அங்கத்தவர் ரெமீடியஸ் ஒரு வழ்க்குரைஞர் அவர்தான் குடாநாட்டுப்பொறுக்கிகளை கூடிதலாகப் பிணையில் எடுப்பவர்.

முன்னாள் அரச ஒட்டுக்குழு கூலிகள் தான் அதிகம்.. சொறீலங்கா பொலிஸ் ரவுடிகளின் கையாட்களாக அலைகிறார்கள்.  

எப்படி இந்திய இராணுவம்.. மண்டையன் குழுக்களை வளர்த்ததோ.. அதையே சொறீலங்கா அரசும் செய்கிறது.

இதன் மூலம் போரற்ற.. ஆனால் அச்ச சூழலுக்குள் தமிழ் மக்களை வைத்திருப்பதே சொறீலங்கா சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நோக்கம்.. தேவை.

இது தமிழர்கள் மீதான அடக்குமுறை..  இனப்படுகொலையின் இன்னொரு வடிவமே அன்றி வேறில்லை.

இந்த நிலை தமிழர்களுக்கு நேர முழுக்காரணம்.. இணைத்தலைமை நாடுகளும்.. சர்வதேசமும் ஆகும்.

ஆனால் அவர்கள் இன்று மெளனமாக இருந்து வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர். இவற்றை தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. 

இவர்கள் தான் தமிழ் மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அளித்தார்கள்.. புலிப் பயங்கரவாதம் அழிக்கப்பட்டதும்.. தமிழ் மக்களுக்கு எல்லா  உரிமைகளையும் பாதுகாப்பையும் பெற்றுத் தந்துவிடுவோம் என்று.

அந்த வாக்குறுதிகளுக்கு என்னவாயிற்று..??????!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடாநாட்டில் இப்போது நடக்கும் வன்முறைகளுக்குக்காரணம் சுமார் இருபத்து ஐந்து வயதுக்குட்பட்ட அல்லது அதைவிட ஓரிரு வயது கூடிய தமிழ் இலைஞர்களே, இவர்கள் அனைவுரும் பாரிய இடம்பெயர்வுக்கு பின்பு குடாநாட்டுக்கு நாம் திரும்பவும் போகும்போது சிறுவர்களாகவிருந்தவர்கள் போர்பற்றியோ அதன் வரலாறுபற்றியோ எந்தவித புரிதலும் இல்லாதவர்கள்.

சிறுவயதிலிருந்தே இராணுவச்சூழலில் வளர்ந்த இவர்களுக்கு இப்படித்தான் நீண்டகாலமாகக் குடாநாட்டுத்தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் எனும் பிம்பம் படிந்துள்ளது இவர்களை வளைப்பது இலகு தவிர இல்லாதுபோன சாதி அடையாளங்கள் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் திடீர்ப் பணப்புழக்கம் தவிர கல்வியறிவு இல்லாமலே பணம் இருந்தால் எப்படியும் வாழலாம் தவிர வெளிநாட்டுப்பணவரவு இவை அனைத்தும் வன்முறையைத் தூண்டுகிறது. இதைவிட யாழ்குடாநாட்டின் மேல்சாதி இனத்தவர்கள் மீதான காலம்காலமாக மனதில் படிந்த வன்மம், மேலும் பத்துவீட்டுக்குள் புகிந்து கொள்ளையடித்தால் ஒருவீட்டில் கொள்ளையடித்த வருமானத்தை சிறீலங்காப்ப் போலீசுக்கும் இன்னுமொரு வீட்டில் கொள்ளையடித்த வருமானத்தை வக்கீலுக்கும் கொடுத்தால் சிறையில் சுகசீவியம் நடாத்திவிட்டு வெளியே வந்திடலாம் இதைவிட சிறைகளில் ஏற்படும் வன்முறையாளர்களது மேலதிக தொடர்பு வன்முறையை விரிவாக்கம்செய்ய உதவுகிறது. 

இதற்குமேல் வெளியாலை வீதியில் நடந்தால் மரியாதையானவன் ஒதுங்கிப்போவதை அவர்கள் தங்களுக்குக்கிடைக்கும் கெத்து என மதிப்பிடுகிறார்கள்.  பருமனுக்கு மேலதிகமான மோட்டார் சைக்கிள் ஊரெங்கும் நிறைந்துகிடக்கும் நிதி நிறுவனங்கள் கடன் நிறுவனங்கள் வருமானமில்லாதுவிட்டாலும் இருவரது பிணைக்கையெளுத்துடன் இவைகளை எளிதில் வாங்கிவிடலாம் இவைகளே வன்முறைக்கு முதல் விதை.
 
வாங்கிய வாகனத்துக்கு மாதப்பணம் கட்டமுடியாதுவிடின் ஏனைய மாதத்தவணப்பணம் கட்டாதவர்களது வாகனங்களைப் பிடுங்கி கடன் கொடுத்தவனுக்கு ஒப்படைப்பதால் ஈடுகட்டிவிடலாம் ஒரு ஏரியாவிலிருந்து இன்னுமொரு ஏரியாவுக்குப் போகும்போது இவர்களால் உருவாக்கப்பட்ட வலைப்பின்னல் இவர்களில் யார் கை ஓங்குகிறதோ அவர்களுக்கிடையிலான மோதல் மீண்டும் தொடங்கிய இடத்திலிருந்து ஆரம்பிப்பது, நிதி நிறுவனங்களுக்கு இவர்களது தேவை அதிகம் ஆகவே நிதிநிறுவனங்கள் இவர்களது வன்முறையைக்கண்டுகொள்ளாதிருக்க நீத்தித்துறையை வளைத்துபோட்டு வைத்திருக்கு. 

இவைகளே குடாநாட்டின் வன்முறையாளர்களது வரலாறு.

இதைவிட மோசம் பத்திலிருந்து பதின்நாலு வயதுக்குள்ளேயே அங்குள்ள சிறுமிகள் காதல் வயப்படுகிறார்கள் பெற்றோரால் நெருக்கடி வந்ததும் அவர்களது தொடர்பிலிருக்கும் பெடியன் உள்ளூர் வெளியூர் சண்டியஙள் துணையுடன் பெட்டையைத் தூக்குறான் இதில் சாதிப்பிரச்சனை இருந்தால் இரு பகுதியில் ஒருவர் சப்போட்டும் நிதி உகவியும் தாராளமாக இருக்கும். 

இதுக்குமேல் என்ன வேண்டும் கூறுவதற்கு. சண்டித்தனம் என்பதும் குற்றப்பின்ணணி என்பதும் இப்போது குடாநாட்டில் சமூகக் கெளரவம்

Link to comment
Share on other sites

எப்படியான பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதற்கு மற்றைய இனங்களையும் அரசாங்கத்தையும் காரணமாக காட்டிவிட்டு எங்களை ஒரு புனிதர்களாக படம்பிடித்து காட்டி குற்றவாளிக்கூண்டில் இருந்து தப்பித்துவிடுவது எமது திறமை.

சாதி பாகுபாடுகள், வேறுபாடுகள் களையப்படாதவரை தமிழர்கள் ஒருபோதும் ஒருமித்து வாழப்போவது இல்லை. 

எமக்குள்ளேயே சமூக அஸ்தஸ்து, கெளரவம், பதவிகள்,  செல்வம், செல்வாக்கு, பிரதேசவாதம் என்று பல விடயங்களில் ஒருவருக்குள் ஒருவர் கடும்போட்டி, புடுங்குப்பாடு உள்ளது.

பல விடயங்கள் வெளிப்படையாக பேசப்படுவது இல்லை. ஆனால், பல்வேறு பிரச்சனைகளின் மூலாதாரமாய் அவைதான் விளங்கும்.

எமது தவறுகளை கண்டுகொள்ளாமல் இப்படியே தொடர்ந்து சொறி லங்கா போலிஸ், ஒட்டுக்குழு, இத்தியாதி என்று கத்திக்கொண்டு இருப்போம். நிச்சயம் விடிவு பிறக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கலைஞன் said:

சாதி பாகுபாடுகள், வேறுபாடுகள் களையப்படாதவரை தமிழர்கள் ஒருபோதும் ஒருமித்து வாழப்போவது இல்லை. 

இதை யார் முன் நின்று செய்யலாம் / செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

இதை யார் முன் நின்று செய்யலாம் / செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

சுத்திகரிப்பை எங்களில் இருந்து ஆரம்பிக்கலாம்? ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய குருடி கதவைத் திறவடி கணக்கா.. மீண்டும் சாதியம்.. பிரதேசம் மீது பழியைப் போட்டுவிட்டு.. ஆக்கிரமிப்புக் கொடுமைகளுக்கு அடிமைப்படும் இழி புத்தி தான் தமிழர்களின் இன்றைய அவலத்துக்கு முக்கிய காரணம்.

இதே சாதியம்.. பிரதேசம்.. 1990 களிலும் இருந்தது. ஆனால்.. அப்போ சமூக வன்முறைகள் மிக அரிதாக இருந்தன. காரணம்.. சிவில் நிர்வாகம்.. புலிகளின் கையில் இருந்தது.

இன்று.. சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் கையில். அவர்கள்.. கஞ்சாவில் இருந்து.. கத்தி பொல்லு.. சாதி.. பிரதேசம்...ஒட்டுக்குழுக்கள்.. பாலியல்.. என்று... எல்லாத்தையுமே தமிழர்களைப் பலவீனப்படுத்த பாவிக்கிறார்கள். அத்தோடு இனப்படுகொலையையும் அரங்கேற்றுகிறார்கள்.

வன்முறைகள்.. உலகம் பூராவும் தான் நிகழ்கின்றன. ஆனால்.. எடுத்ததற்கும் துப்பாக்கியால் சுடுவது சொறீலங்காவில் வடக்குக் கிழக்கில் தான் அதிகம். அதுவும் முஸ்லீம்கள் மீதோ.. சிங்களவர்கள் மீதோ துப்பாக்கி சுடுவது அரிது. ஆனால்.. தமிழர்கள் மீது அடிக்கடி சுடுகுது. இப்ப மாதத்திற்கு ஒன்றிரண்டாவது நடக்குது. எனி கிழமைக்கு என்றாகும். பின் நாளுக்கு என்றாகும். 

இப்படித்தான்.. 1980 களிலும் சிங்கள அரச பயங்கரவாதம்.. தமிழினப் படுகொலையை ஆக்கிரமிப்பு இராணுவம்.. பொலிஸை வைத்து நடத்தியது. அதன் விளைவு..பொலிஸ் நிலையங்கள் மீதான தாக்குதல்கள்..  இராணுவ முகாம்களுக்குள் இராணுவத்தை முடக்க இளையர்கள் முயன்றனர். மண் விடுவிப்பு போர் உக்கிரமடைய ஆரம்பித்தது.

பழைய வரலாற்று நீட்சிகளை சரியாக உணராமல்.. எடுத்ததற்கும் சொந்த இனத்தில் மட்டும் குறைகண்டு கொண்டிருப்பதும்.. தமிழர்களுக்குள் இருக்கும் ஒரு வகை தாழ்வுமனப்பாண்மையுடன் கூடிய அடிமைப் புத்தி. இதுவே இந்த இனம் காட்டுக்கொடுப்புகளின் ஊடாக இன்றைய இழி நிலையை அடைய முக்கிய காரணமும் ஆகும். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில இடங்களில் சான்டமருதன் எழுதும் கருத்துக்களை எத்தனை பேர் வாசித்து 
புரிந்து கொள்கிறார்களோ தெரியவில்லை.

எமது இனம் திருந்த இன்னும் ஆயிரம் வருஷம் இருக்கு 
காரணம் மற்ற இனங்கள் இப்போ திருந்தி கொண்டு இருக்கின்றன 
தமிழர்கள் பல ஆயிரம் வருடம் முன்பு சிறப்புடன் நல்ல மதம் மனிதர்கள் 
என்று வாழ்ந்து ....... இப்போ கெட்டு குறுகி கொண்டு இருக்கிறார்கள் 
இனி இந்த சுற்று முடிய ஒரு ஆயிரம் வருஷம் எடுக்கும் பின்பு திருந் தொடக 
ஒரு 500 வருஷம் செல்லும்.  
 

Link to comment
Share on other sites

19 hours ago, nedukkalapoovan said:

பழைய குருடி கதவைத் திறவடி கணக்கா.. மீண்டும் சாதியம்.. பிரதேசம் மீது பழியைப் போட்டுவிட்டு.. ஆக்கிரமிப்புக் கொடுமைகளுக்கு அடிமைப்படும் இழி புத்தி தான் தமிழர்களின் இன்றைய அவலத்துக்கு முக்கிய காரணம்.

இதே சாதியம்.. பிரதேசம்.. 1990 களிலும் இருந்தது. ஆனால்.. அப்போ சமூக வன்முறைகள் மிக அரிதாக இருந்தன. காரணம்.. சிவில் நிர்வாகம்.. புலிகளின் கையில் இருந்தது.

இன்று.. சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் கையில். அவர்கள்.. கஞ்சாவில் இருந்து.. கத்தி பொல்லு.. சாதி.. பிரதேசம்...ஒட்டுக்குழுக்கள்.. பாலியல்.. என்று... எல்லாத்தையுமே தமிழர்களைப் பலவீனப்படுத்த பாவிக்கிறார்கள். அத்தோடு இனப்படுகொலையையும் அரங்கேற்றுகிறார்கள்.

வன்முறைகள்.. உலகம் பூராவும் தான் நிகழ்கின்றன. ஆனால்.. எடுத்ததற்கும் துப்பாக்கியால் சுடுவது சொறீலங்காவில் வடக்குக் கிழக்கில் தான் அதிகம். அதுவும் முஸ்லீம்கள் மீதோ.. சிங்களவர்கள் மீதோ துப்பாக்கி சுடுவது அரிது. ஆனால்.. தமிழர்கள் மீது அடிக்கடி சுடுகுது. இப்ப மாதத்திற்கு ஒன்றிரண்டாவது நடக்குது. எனி கிழமைக்கு என்றாகும். பின் நாளுக்கு என்றாகும். 

இப்படித்தான்.. 1980 களிலும் சிங்கள அரச பயங்கரவாதம்.. தமிழினப் படுகொலையை ஆக்கிரமிப்பு இராணுவம்.. பொலிஸை வைத்து நடத்தியது. அதன் விளைவு..பொலிஸ் நிலையங்கள் மீதான தாக்குதல்கள்..  இராணுவ முகாம்களுக்குள் இராணுவத்தை முடக்க இளையர்கள் முயன்றனர். மண் விடுவிப்பு போர் உக்கிரமடைய ஆரம்பித்தது.

பழைய வரலாற்று நீட்சிகளை சரியாக உணராமல்.. எடுத்ததற்கும் சொந்த இனத்தில் மட்டும் குறைகண்டு கொண்டிருப்பதும்.. தமிழர்களுக்குள் இருக்கும் ஒரு வகை தாழ்வுமனப்பாண்மையுடன் கூடிய அடிமைப் புத்தி. இதுவே இந்த இனம் காட்டுக்கொடுப்புகளின் ஊடாக இன்றைய இழி நிலையை அடைய முக்கிய காரணமும் ஆகும். ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்.. உலகம் தெரியாததுகளுக்கு சிலர் எழுதும் வெட்டிக்கதையை நம்புவதுதான் முடிந்த முடிவாம். ?

உங்களையோ.. கிருபண்ணாவையோ சொல்லவில்லை. நாட்டில் வெட்டிக்கதைகள் எழுதுபவர்களையும் அவர்களின் கதைகளை நம்புவர்களையும் சொன்னம்.

இப்ப எல்லாம் புலிகளை வைச்சு ஜோசியம் சொல்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.

நாங்கள் ஜோசியம் சொல்லவில்லை.. கடந்த கால உண்மையின் தரிசனத்தைச் சொல்கிறம். அதுதான் வேறுபாடு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.