Jump to content

மீண்டும் ஆட்சியை பிடிக்க கருணாநிதியின் தந்திரத்தை பயன்படுத்துவோம் – மு.க.ஸ்டாலின்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஆட்சியை பிடிக்க கருணாநிதியின் தந்திரத்தை பயன்படுத்துவோம் – மு.க.ஸ்டாலின்

மீண்டும் ஆட்சியை பிடிக்க கருணாநிதியின் தந்திரத்தை பயன்படுத்துவோம் – மு.க.ஸ்டாலின்

கருணாநிதியின் தந்திரத்தை உரிய நேரத்தில் பயன்படுத்துவோம். தி.மு.க. ஆட்சி வெகு விரைவில் உதயம் ஆகும் என்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி யின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை அண்ணா நகரில் உள்ள எம்.ஜி.ஆர். காலனியில் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்துக்கு அண்ணாநகர் பகுதி செயலாளர் ச.பரமசிவம் தலைமை தாங்கினார். எம்.கே.மோகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-கருணாநிதி பிறந்தநாள் விழாவை தி.மு.க. சார்பில் ஜூன் 3-ந் தேதி மட்டும் நாம் கொண்டாடவில்லை. 3-ந் தேதியோடு அவருடைய பிறந்தநாளை முடித்துக்கொள்வது கிடையாது. அடுத்த ஆண்டு ஜூன் 3-ந் தேதி வரும் வரையில் கொண்டாட கூடிய வகையிலே, அந்த உணர்வு, தெம்பு, உரிமை, திமிரு நம்மிடம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் கருணாநிதி பிறந்தநாளை நாம் கொண்டாடவில்லை. தமிழகத்தை தாண்டி இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களில், கடல் கடந்தும், எங்கு எல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கு எல்லாம் கொண்டாடப்படுகிறது.

அதற்கு காரணம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு மட்டும் இல்லாமல், உலகம் எங்கும் பரவிக்கிடக்கிற தமிழர்களின் பாதுகாப்பு அரணாக விளங்கி கொண்டிருக்கும் ஒரே தலைவர் அவர் என்பதால் தான்.

கருணாநிதி இந்திய நாட்டிற்கு ஜனாதிபதியை உருவாக்கி தந்திருக்கிறார். பல பிரதமர்களை உருவாக்கி தந்திருக்கிறார். பல்வேறு மாநிலங்களின் பிரச்சினைகளை எல்லாம் மையமாக வைத்து, உரிமையோடு கேட்க கூடிய மாநில சுயாட்சி என்ற பிரகடனத்தை ஏற்படுத்தி தந்தவர் கருணாநிதி.

உடல் நலிவுற்ற நிலையில் அவர் இப்போது ஓய்வு எடுக்கிறார். நாங்கள் அவரை சென்று பார்க்கும்போது, அவரது காதுக்கு அருகில் சென்று பேசுவோம். அப்போது முக மலர்ச்சியை வெளிப்படுத்துவார்.

அண்ணா அறிவாலயத்துக்கு போகலாமா? என்று கேட்டால் அற்புதமாக ஒரு சிரிப்பு சிரிப்பார். அவருக்கு பேச்சு பயிற்சி நடைபெறும்போது, மிகவும் சிரமப்பட்டு ‘அண்ணா… அண்ணா…’ என்று சொல்வார். ஒரு பேனாவை கையில் கொடுத்தால், அண்ணா என்று எழுதுவார். அண்ணாவையே நாள் முழுவதும், வினாடி தோறும் நினைத்துக்கொண்டு இருக்கும் தலைவர் கருணாநிதி தான்.

சில கட்சி தலைவர்கள் இன்றைக்கு, கருணாநிதி இருந்தால் விட்டிருப்பாரா?, என்கிறார்கள். முன்பு விமர்சித்தவர்கள், இன்றைக்கு கரிசனம் காட்டுகிறார்கள். அதற்கு நன்றி. நாங்கள் கருணாநிதியுடன் வாழ்கிறவர்கள். பயின்றுகொண்டு இருப்பவர்கள்.

அவர் எப்போது எதை செய்வார் என்று யாருக்கும் தெரியாது. அதை கொஞ்சம் நாங்களும் கற்று உள்ளோம். எனவே செய்யலையே என்று வருத்தம் வேண்டாம். நேரம் வரும். உரிய தந்திரத்தை எங்களுக்கு கருணாநிதி கற்றுத்தந்து இருக்கிறார். உரிய நேரத்தில் அதை பயன்படுத்துவோம்.

இன்றைக்கு ஆட்சியில் இல்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் செய்த நலத்திட்டங்கள் போல இனி செய்யப்படுமா? எவன் பிறந்து வந்தாலும் கருணாநிதி திட்டங்களை செயல்படுத்த முடியாது. ஆட்சிக்கு வரும் வாய்ப்பை நாம் இழந்தபோது 1.1 சதவீதம் மட்டுமே, அ.தி.மு.க.வுக்கும், நமக்கும் இருந்த வித்தியாசம். ஆனாலும் எதிர்க்கட்சியாக ஒவ்வொரு மக்கள் பிரச்சினைக்கும் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தோம். தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.,

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வேண்டும் என்று மக்கள் ஒன்று சேர்ந்து, அரசியல் சாயலின்றி, 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். 100-வது நாளில் ஒரு பேரணி நடந்தது. உரிய அனுமதி பெறப்பட்ட போராட்டம் அது. ஆனால் அப்போராட்டத்தில் மக்களை காக்கை, குருவிகளை சுட்டுத்தள்ளுவது போல, மாற்று உடையில் காவலர்கள் சுட்டு தள்ளியுள்ளனர். ‘சைலண்டு புல்லட்’ என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒன்று. இதன்மூலம் மத்திய அரசுக்கு, மோடிக்கு தெரிந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று தெளிவாக தெரிகிறது.

இந்த விவகாரத்தில் ஒரு அனுதாபமாவது மோடி தெரிவித்தாரா? குஜராத்தில் நடந்தால் சும்மா விட்டிருப்பாரா? வடமாநிலங்களில் இந்த விபரீதம் நடந்திருந்தால் பேசாமல் இருந்திருப்பாரா? அவருக்கு என் பகிரங்க கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

இன்றைக்கு தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல, காட்சி. ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருக்கவேண்டும் என்று மக்கள் வாக்களித்தனர். ஜெயலலிதா இப்போது இல்லை. இறந்தவரை பற்றி விமர்சிக்க எனக்கு மனதில்லை. கருணாநிதி அப்படி எங்களை உருவாக்கவில்லை. ஆனாலும் சொல்கிறேன், ஜெயலலிதா இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் கூட பெங்களூரு சிறைச்சாலையில் சசிகலாவுடன் இருந்திருப்பார், ஆட்சியில் இருந்திருக்க மாட்டார். இறந்த காரணத்தினால் அவர் சிறையில் இல்லை, சமாதியில் இருக்கிறார். ஆனால் இப்போது உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இப்போது மத்திய அரசுக்கு எடுபிடி பழனிசாமியாக இருக்கிறார். இந்த ஆட்சியில் எத்தனை கொடுமைகள் நடக்கிறது.

இனி தூத்துக்குடி என்று சொல்லக்கூடாது, சாத்துக்குடி என்று தான் சொல்லவேண்டும். தூத்துக்குடி எம்.எல்.ஏ. என்று கூட சொல்லக்கூடாது. ஏனென்றால் அங்கு நடந்த படுகொலையை பற்றி பேசக் கூட எங்களுக்கு சட்டசபையில் அனுமதிக்க மறுக்கிறார்கள்.

சட்டசபை ஒரு மாதிரியாக, வித்தியாசமாக நடக்கிறது. எனவே தான் ஒரு மாதிரி சட்டசபையை நாங்கள் நடத்தினோம். பெரும்பான்மை இல்லாதபோதும் திட்டங்கள் போடப்படுகிறது, சட்டங்கள் இயற்றப்படுகிறது. இது ஜனநாயக விரோதம்.

சமீபத்தில் பூவா? தலையா? என்று தமிழகமே நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருந்தது. ஆனால் இரண்டுமே இல்லாமல் நட்டுக்குத்தாக நிற்கிறது, தீர்ப்பு. இது நியாயமா… இது என் கேள்வி அல்ல, மக்களின் கேள்வி. தற்போது வந்துள்ள தீர்ப்பால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. ஆனால் மக்களுக்கு ஆபத்து. சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. நீதிமன்றத்தின் நிலையோ, இப்படிப்பட்ட நிலை. எனவே யாரை நம்புவது. இனி மக்களை தான் நம்ப வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இன்றைக்கு கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை கொண்டாடுகிறோம். 100-வது பிறந்தநாளையும் கொண்டாடுவோம் என்ற உறுதியுடன் சொல்கிறேன். அதே நேரத்தில் தமிழ்நாட்டில் மிக விரைவிலேயே தி.மு.க. வின் ஆட்சி உதயம் ஆக போகிறது. தயாராக இருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

http://akkinikkunchu.com/?p=58709

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.