Jump to content

எமக்கு வாய்ப்பு தாருங்கள் - வட மாகாணத்தில் பாலும் தேனும் ஓட வைப்போம்


Recommended Posts

 

எமக்கு வாய்ப்பு தாருங்கள் - வட மாகாணத்தில் பாலும் தேனும் ஓட வைப்போம்

1529171468-Douglas-devananda-2.jpg

 

மாகாண சபை தேர்தலின் போது, வாய்ப்புக் கொடுத்தால், வட மாகாணத்தில் பாலும் தேனும் ஓடும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியல் நிலவரங்கள் தொடர்பான ஊடகவியலாளர்கள் மாநாடு இன்று (16) ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. 

தமிழ் மக்களின் பின்னடைவிற்கு அரசாங்கம் காரணம் அல்ல, தமிழ் தலைமைகள் தான் அழிவிற்கும் பின்னடைவிற்கும் காரணம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். 

30 வருடத்தில் மக்கள் எதுவும் பெறவில்லை, அந்த பின்னடைவிற்கு தமிழ் தலைமைகள் தான் காரணம். மாகாண சபையினை தும்புத்தடியாலும் தொடமாட்டோம் என்றவர்கள் தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அந்த அதிகாரத்தினைப் பயன்படுத்தியுள்ளார்கள். 

அதனால், இந்த முறை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினருக்கு வாய்ப்பினைத் தந்து பாருங்கள். சந்தர்ப்பம் கிடைத்தால், வட மாகாணத்தில் பாலும் தேனும் ஓடும். எனவே, எமக்கு வாய்ப்பு தந்து பாருங்கள் சரிவர பயன்படுத்திக் காட்டுவோம் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார். 

(யாழ். நிருபர் சுமித்தி)

http://tamil.adaderana.lk/news.php?nid=103243

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கெனவே... கிடைத்த வாய்ப்பில்,
நெடுந்தீவை சிங்கப்பூராக மாத்தினது,  மணல் கொள்ளை,  வெள்ளை வான் கடத்தல்,
நாயின் தலையை வெட்டி... மற்றக்  கட்சிக்காரனின் வீட்டு  வாசலில்,  கொழுவினதை எல்லாம் நாம் மறக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல்வாதிகளை விட டக்ளஸ் எவ்வளவோ மேல்!...25%வது மக்களுக்கு செய்கிறார் 
 

Link to comment
Share on other sites

1 minute ago, ரதி said:

தமிழ் அரசியல்வாதிகளை விட டக்ளஸ் எவ்வளவோ மேல்!...25%வது மக்களுக்கு செய்கிறார் 
 

டக்ளசும் தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவர் என்றுதான் நான் இதுவரை எண்ணியிருந்தேன். :shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Paanch said:

டக்ளசும் தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவர் என்றுதான் நான் இதுவரை எண்ணியிருந்தேன். :shocked:

உங்களை பொறுத்த வரைக்கும் அவர் ஒட்டுக் குழு தானே 

 

Link to comment
Share on other sites

7 minutes ago, ரதி said:

உங்களை பொறுத்த வரைக்கும் அவர் ஒட்டுக் குழு தானே 

 

பொங்கலுக்கு நன்றி!  அதிகம் பொங்கி வழிந்தால் அடுப்பு அணைந்துவிடும்.!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

 தந்து பாருங்கள். சந்தர்ப்பம் கிடைத்தால், வட மாகாணத்தில் பாலும் தேனும் ஓடும்.

பாலும்  தேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்

ஆனால் மூன்று தமிழையும் அதற்கான பலனாக எனக்குத் தா என்று ஒவையார் அன்று கேட்டார்.

பாகையும் பருப்பையும் விட்டுவிட்டு
பாலும் தேனும் மட்டுமே தருவேன் ஆனால் நீங்கள் என்னை முதலமைச்சர் ஆக்குங்கள் என்று இவர் கூறுகின்றார்.
பாகும் பருப்பும் அதாவது சோறும் கறியும் யார் தருவது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

பாலும்  தேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்

ஆனால் மூன்று தமிழையும் அதற்கான பலனாக எனக்குத் தா என்று ஒவையார் அன்று கேட்டார்.

பாகையும் பருப்பையும் விட்டுவிட்டு
பாலும் தேனும் மட்டுமே தருவேன் ஆனால் நீங்கள் என்னை முதலமைச்சர் ஆக்குங்கள் என்று இவர் கூறுகின்றார்.
பாகும் பருப்பும் அதாவது சோறும் கறியும் யார் தருவது

சங்கக்  கடையில்... அரிசியும், பருப்பும்...  கூப்பனுக்கு  அரசு கொடுப்பதால்... 
டக்ளஸ்... பாலையும், தேனையும்   எமக்கு தரும் பொறுப்பை எடுத்துள்ளார்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு படுற பாட்டில் நரி உளுந்து வடை கேட்டிச்சாம்  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நாடு படுற பாட்டில் நரி உளுந்து வடை கேட்டிச்சாம்  :grin:

அப்போ காக்கா தூக்கியது பருப்பு வடையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

அப்போ காக்கா தூக்கியது பருப்பு வடையா?

இல்ல கவ்ப்பி வடையாம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

 

எமக்கு வாய்ப்பு தாருங்கள் - வட மாகாணத்தில் பாலும் தேனும் ஓட வைப்போம்

1529171468-Douglas-devananda-2.jpg

 

 

 

ஏன் வெள்ளைவானுக்கு எல்லாம் இயந்திர கோளாறு வந்துவிட்டதா ?

Link to comment
Share on other sites

On ‎6‎/‎17‎/‎2018 at 6:12 AM, nunavilan said:

 

எமக்கு வாய்ப்பு தாருங்கள் - வட மாகாணத்தில் பாலும் தேனும் ஓட வைப்போம்

1529171468-Douglas-devananda-2.jpg

 

 

மீன் பாடும் தேன் நாட்டை ஏன் மறந்தார்..? :(   இவர் அங்கு சென்றால் தேன் நாட்டின் தேன் குளவிகள் இவர் தாடியில் கூடுகட்டி விடுமோ...?? :shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

தமிழ் அரசியல்வாதிகளை விட டக்ளஸ் எவ்வளவோ மேல்!...25%வது மக்களுக்கு செய்கிறார் 
 

ஆமாம் சிறீதர் திரையரங்கில் வாடகையும் கொடுக்காமல் நல்லா செய்கிறார். முன்னர் கப்பம் கடத்தல் கொலை கொள்ளை வல்லுறவு என்று பட்டியல் கொஞ்சம் நீளம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.