Jump to content

``மூன்றே ஷாட்... மூன்றும் கோல்... ரொனால்டோ மேஜிக்கிலிருந்து ஸ்பெயின் மீள வேண்டும்!’’ - ராவணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கால்பந்து ரசிகர்களுக்கு இதைவிட பெரிய சந்தோஷம் தேவையில்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோ தனி ஆளாக ஆட்சிபுரியும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பெரிய ஆனந்தம் என்ன இருந்துவிடப் போகிறது? உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே, அதுவும் ஸ்பெயினுக்கு எதிராக, தான் யார் என்பதை நிரூபித்துள்ளார் ரொனால்டோ! இந்த ஆட்டத்தை போர்ச்சுகல் vs ஸ்பெயின் என்று ஃபிஃபாவின் ரெக்கார்டுகள் சொல்லும். ஆனால், இதை ரொனால்டோ vs ஸ்பெயின் என்றுதான் வரலாறு சொல்லும். 

உலகக் கோப்பை அட்டவணை அறிவிக்கப்பட்டதும் இந்தப் போட்டிக்குத்தான் உச்சபட்ச எதிர்பார்ப்பு. அதை எந்தக் குறையும் இல்லாமல் நிவர்த்தி செய்துவிட்டனர் இரு அணியின் வீரர்களும். ஆட்டம் முழுக்க முழுக்க ஸ்பெயின் அணியின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஆனால், போட்டியின் முடிவை முடிவு செய்தது என்னவோ ரொனால்டோ என்னும் தனி ஆள். 90 நிமிடங்களில் போர்ச்சுகல் டார்கெட் நோக்கி அடித்தது வெறும் மூன்றே ஷாட்கள். மூன்றுமே அவர் அடித்தது. மொத்தப் போட்டியிலும் ஒன்றிரண்டு மிஸ்பாஸ்கள் மட்டுமே. அதைத்தவிர்த்து அவரது பாஸிங்கிலும் 100 சதவிகித பெர்ஃபெக்ஷன். 

ரொனால்டோ இந்தப் போட்டிக்கு மனதளவிலும் ரொம்பவே தயாராகியிருக்கிறார். தன் அணியின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை நன்கு அறிந்துகொண்டு அதற்கேற்ப திட்டமிட்டுள்ளார். அணியின் ஒரே பலம் - ரொனால்டோ! அவர்தான் தன் அணியின் முடிவை நிர்ணயிக்கப் போகிறார். பக்காவாக மேஜிக்கல் பாஸ் கொடுக்க இந்த அணியில் இஸ்கோ, அசேன்ஸியோ போன்றவர்கள் இல்லை. கிராஸ் செய்ய கர்வகாலும், கவுன்ட்டர் அட்டாக்கைத் தொடங்கும் லாங் பால் போட ரமோஸும் இல்லை. எல்லோரும் எதிரணியில்! அவர்தான் கோல் போடவேண்டும். அதற்கான வாய்ப்பையும் அவரே உருவாக்கவேண்டும். 

அதை அருமையாகச் செய்தும் முடித்தார் ரொனால்டோ. கால்பந்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு பாதியிலும் முதல் 10 நிமிடங்களும், கடைசி 10 நிமிடங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவை. ரொனால்டோ, அதைத் தெளிவாகப் பயன்படுத்திக்கொண்டார். அவர் ஸ்பெயினின் டிஃபன்ஸை அட்டாக் செய்தது அந்தத் தருணங்களில்தாம். அந்த ஒவ்வொரு தருணத்திலும் ஸ்பெயினை அசரடித்தார். கோலுக்கான வாய்ப்புகளைத் தானே உருவாக்கினார். நான்காவது நிமிடத்தில் பெனால்டி, 88-வது நிமிடத்தில் ஃப்ரீ-கிக். இதுதான் ஒரு ஜாம்பவானின் புத்திசாலித்தனம்...அனுபவம்..!

ரொனால்டோவைத் தவிர்த்து போர்ச்சுகல் அணியின் ஆட்டத்தை அலசினால், அங்கு பெரிதாக ஒன்றுமே இல்லை. இளம் வீரர் வில்லியம் சில நல்ல பாஸ்கள் கொடுத்தார். அது ஒன்றுதான் பாசிட்டிவ். ஆனால், அவரும் தடுப்பாட்டத்தில் அணிக்கு உதவவேண்டும். குறைந்தபட்சம் Midfield third ஏரியாவிலாவது டிஃபன்ஸுக்கு உதவவேண்டும். மற்ற நடுகள வீரர்கள் ரொனால்டோவுக்கு எந்த வகையிலும் உதவவில்லை. உலகின் மிகப்பெரிய Aerial threat அவர். ஆனால், அவருக்குக் கொடுக்கப்பட்ட கிராஸ்கள் மொத்தமே இரண்டுதான். கார்னர்களும் சரியாக எடுக்கப்படவில்லை. எல்லா ஆட்டத்திலும் ரொனால்டோவே ஆடுவார் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஒருவேளை அவருக்குக் காயம் ஏற்பட்டால்..?

ரொனால்டோ

போர்ச்சுகல் அணியின் டிஃபன்ஸ் ஆட்டம் முழுக்க திக்கற்றுத் திரிந்தது. ரமோஸ், பிக்கே இருவரும் நடுகளம் வந்து விளையாடிக்கொண்டிருக்க, இவர்கள் பாக்ஸுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். அதுவும் சரியான கெமிஸ்ட்ரியும் இல்லை. அனைத்து வீரர்களும் பாக்ஸுக்கு அருகிலேயே இருந்தபோதும், ஸ்பெயின் வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்தனர். இஸ்கோ, கோஸ்டா இருவருக்கும் அதிக ஸ்பேஸ் கிடைத்தது. இதையும் அவர்கள் சரிசெய்துகொள்ளவேண்டும். 

ஸ்பெயின் அணியைப் பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் நன்றாகவே விளையாடினார்கள். ஆனால், ரொனால்டோ என்ற தனிமனிதனை அவர்களால் தடுக்க முடியவில்லை. டியாகோ கோஸ்டா மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டார். முதல் கோல் மிகவும் சிறப்பாக அடித்தார். இஸ்கோ, இனியஸ்டா, சில்வா ஆகியோருக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர்களின் ஃபினிஷிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. வரும் போட்டிகளில் அவர்கள் இன்னும் கவனம் செலுத்தவேண்டும். டி கே - மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். அதிலிருந்து மீண்டுவருவது அவசியம்.

டியாகோ கோஸ்டா

பயிற்சியாளரை மாற்றியிருப்பது ஸ்பெயின் அணியின் ஆட்டத்தைப் பாதித்திருக்குமா என்ற கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. ஆனால், எனக்கு அப்படித் தோன்றவில்லை. இரண்டு நாள்களில் ஒரு பயிற்சியாளர் மாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடாது. அனைவரும் மிகப்பெரிய க்ளப்களில் ஆடுபவர்கள், மிகப்பெரிய தொடர்களில் ஆடியவர்கள். அமெச்சூர் வீரர்கள் இல்லை. சப்ஸ்டிட்யூஷன் தவிர்த்து புதிய பயிற்சியாளரால் இரண்டு நாள்களில் வேறு எந்தத் தாக்கமும் ஏற்படுத்த முடியாது. அதனால் அதைக் காரணமாகச் சொல்வது சரியாகாது. ஸ்பெயின் `ரொனால்டோ' அட்டாக்கிலிருந்து விரைவில் வெளிவரவேண்டும். 

ராவணன் தர்மராஜ் - தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர். டெம்போ, மோகன் பகான், சர்ச்சில் பிரதர்ஸ் போன்ற முன்னணி ஐ -லீக் அணிகளில் விளையாடிய அனுபவ டிஃபண்டர். இந்திய 23 வயதுக்குட்பட்ட அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடியுள்ளார். புனே சிட்டி அணிக்காக ஐ.எஸ்.எல் தொடரில் 34 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சிட்டி அணிக்கு விளையாடிவருகிறார். 

https://www.vikatan.com/news/sports/127874-portugal-should-come-back-from-the-ronaldo-attack.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.