Jump to content

``மூன்றே ஷாட்... மூன்றும் கோல்... ரொனால்டோ மேஜிக்கிலிருந்து ஸ்பெயின் மீள வேண்டும்!’’ - ராவணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கால்பந்து ரசிகர்களுக்கு இதைவிட பெரிய சந்தோஷம் தேவையில்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோ தனி ஆளாக ஆட்சிபுரியும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பெரிய ஆனந்தம் என்ன இருந்துவிடப் போகிறது? உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே, அதுவும் ஸ்பெயினுக்கு எதிராக, தான் யார் என்பதை நிரூபித்துள்ளார் ரொனால்டோ! இந்த ஆட்டத்தை போர்ச்சுகல் vs ஸ்பெயின் என்று ஃபிஃபாவின் ரெக்கார்டுகள் சொல்லும். ஆனால், இதை ரொனால்டோ vs ஸ்பெயின் என்றுதான் வரலாறு சொல்லும். 

உலகக் கோப்பை அட்டவணை அறிவிக்கப்பட்டதும் இந்தப் போட்டிக்குத்தான் உச்சபட்ச எதிர்பார்ப்பு. அதை எந்தக் குறையும் இல்லாமல் நிவர்த்தி செய்துவிட்டனர் இரு அணியின் வீரர்களும். ஆட்டம் முழுக்க முழுக்க ஸ்பெயின் அணியின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஆனால், போட்டியின் முடிவை முடிவு செய்தது என்னவோ ரொனால்டோ என்னும் தனி ஆள். 90 நிமிடங்களில் போர்ச்சுகல் டார்கெட் நோக்கி அடித்தது வெறும் மூன்றே ஷாட்கள். மூன்றுமே அவர் அடித்தது. மொத்தப் போட்டியிலும் ஒன்றிரண்டு மிஸ்பாஸ்கள் மட்டுமே. அதைத்தவிர்த்து அவரது பாஸிங்கிலும் 100 சதவிகித பெர்ஃபெக்ஷன். 

ரொனால்டோ இந்தப் போட்டிக்கு மனதளவிலும் ரொம்பவே தயாராகியிருக்கிறார். தன் அணியின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை நன்கு அறிந்துகொண்டு அதற்கேற்ப திட்டமிட்டுள்ளார். அணியின் ஒரே பலம் - ரொனால்டோ! அவர்தான் தன் அணியின் முடிவை நிர்ணயிக்கப் போகிறார். பக்காவாக மேஜிக்கல் பாஸ் கொடுக்க இந்த அணியில் இஸ்கோ, அசேன்ஸியோ போன்றவர்கள் இல்லை. கிராஸ் செய்ய கர்வகாலும், கவுன்ட்டர் அட்டாக்கைத் தொடங்கும் லாங் பால் போட ரமோஸும் இல்லை. எல்லோரும் எதிரணியில்! அவர்தான் கோல் போடவேண்டும். அதற்கான வாய்ப்பையும் அவரே உருவாக்கவேண்டும். 

அதை அருமையாகச் செய்தும் முடித்தார் ரொனால்டோ. கால்பந்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு பாதியிலும் முதல் 10 நிமிடங்களும், கடைசி 10 நிமிடங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவை. ரொனால்டோ, அதைத் தெளிவாகப் பயன்படுத்திக்கொண்டார். அவர் ஸ்பெயினின் டிஃபன்ஸை அட்டாக் செய்தது அந்தத் தருணங்களில்தாம். அந்த ஒவ்வொரு தருணத்திலும் ஸ்பெயினை அசரடித்தார். கோலுக்கான வாய்ப்புகளைத் தானே உருவாக்கினார். நான்காவது நிமிடத்தில் பெனால்டி, 88-வது நிமிடத்தில் ஃப்ரீ-கிக். இதுதான் ஒரு ஜாம்பவானின் புத்திசாலித்தனம்...அனுபவம்..!

ரொனால்டோவைத் தவிர்த்து போர்ச்சுகல் அணியின் ஆட்டத்தை அலசினால், அங்கு பெரிதாக ஒன்றுமே இல்லை. இளம் வீரர் வில்லியம் சில நல்ல பாஸ்கள் கொடுத்தார். அது ஒன்றுதான் பாசிட்டிவ். ஆனால், அவரும் தடுப்பாட்டத்தில் அணிக்கு உதவவேண்டும். குறைந்தபட்சம் Midfield third ஏரியாவிலாவது டிஃபன்ஸுக்கு உதவவேண்டும். மற்ற நடுகள வீரர்கள் ரொனால்டோவுக்கு எந்த வகையிலும் உதவவில்லை. உலகின் மிகப்பெரிய Aerial threat அவர். ஆனால், அவருக்குக் கொடுக்கப்பட்ட கிராஸ்கள் மொத்தமே இரண்டுதான். கார்னர்களும் சரியாக எடுக்கப்படவில்லை. எல்லா ஆட்டத்திலும் ரொனால்டோவே ஆடுவார் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஒருவேளை அவருக்குக் காயம் ஏற்பட்டால்..?

ரொனால்டோ

போர்ச்சுகல் அணியின் டிஃபன்ஸ் ஆட்டம் முழுக்க திக்கற்றுத் திரிந்தது. ரமோஸ், பிக்கே இருவரும் நடுகளம் வந்து விளையாடிக்கொண்டிருக்க, இவர்கள் பாக்ஸுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். அதுவும் சரியான கெமிஸ்ட்ரியும் இல்லை. அனைத்து வீரர்களும் பாக்ஸுக்கு அருகிலேயே இருந்தபோதும், ஸ்பெயின் வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்தனர். இஸ்கோ, கோஸ்டா இருவருக்கும் அதிக ஸ்பேஸ் கிடைத்தது. இதையும் அவர்கள் சரிசெய்துகொள்ளவேண்டும். 

ஸ்பெயின் அணியைப் பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் நன்றாகவே விளையாடினார்கள். ஆனால், ரொனால்டோ என்ற தனிமனிதனை அவர்களால் தடுக்க முடியவில்லை. டியாகோ கோஸ்டா மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டார். முதல் கோல் மிகவும் சிறப்பாக அடித்தார். இஸ்கோ, இனியஸ்டா, சில்வா ஆகியோருக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர்களின் ஃபினிஷிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. வரும் போட்டிகளில் அவர்கள் இன்னும் கவனம் செலுத்தவேண்டும். டி கே - மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். அதிலிருந்து மீண்டுவருவது அவசியம்.

டியாகோ கோஸ்டா

பயிற்சியாளரை மாற்றியிருப்பது ஸ்பெயின் அணியின் ஆட்டத்தைப் பாதித்திருக்குமா என்ற கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. ஆனால், எனக்கு அப்படித் தோன்றவில்லை. இரண்டு நாள்களில் ஒரு பயிற்சியாளர் மாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடாது. அனைவரும் மிகப்பெரிய க்ளப்களில் ஆடுபவர்கள், மிகப்பெரிய தொடர்களில் ஆடியவர்கள். அமெச்சூர் வீரர்கள் இல்லை. சப்ஸ்டிட்யூஷன் தவிர்த்து புதிய பயிற்சியாளரால் இரண்டு நாள்களில் வேறு எந்தத் தாக்கமும் ஏற்படுத்த முடியாது. அதனால் அதைக் காரணமாகச் சொல்வது சரியாகாது. ஸ்பெயின் `ரொனால்டோ' அட்டாக்கிலிருந்து விரைவில் வெளிவரவேண்டும். 

ராவணன் தர்மராஜ் - தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர். டெம்போ, மோகன் பகான், சர்ச்சில் பிரதர்ஸ் போன்ற முன்னணி ஐ -லீக் அணிகளில் விளையாடிய அனுபவ டிஃபண்டர். இந்திய 23 வயதுக்குட்பட்ட அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடியுள்ளார். புனே சிட்டி அணிக்காக ஐ.எஸ்.எல் தொடரில் 34 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சிட்டி அணிக்கு விளையாடிவருகிறார். 

https://www.vikatan.com/news/sports/127874-portugal-should-come-back-from-the-ronaldo-attack.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.