Jump to content

50 அடி பள்ளத்தில் உருண்ட அரசு பேருந்து; உதகை அருகே 7 பேர் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

unnamed%202jpg
Published : 14 Jun 2018 16:47 IST
Updated : 14 Jun 2018 17:06 IST

உதகையிலிருந்து குன்னூர் நோக்கி சென்ற அரசு பேருந்து 50 அடி பள்ளத்தில் உருண்டது. இதில் 2 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 26 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து இன்று (வியாழக்கிழமை) காலை சுமார் 11.30 மணிக்கு அரசு பேருந்து குன்னூர் நோக்கி சென்றது. இந்த பேருந்த ஓட்டுநர் ராஜ்குமார் (42) என்பவர் ஒட்டிச் சென்றார். பேருந்து மந்தாடா பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென சாலையோரத்திலிருந்து 50 அடி பள்ளத்தில் உருண்டது. இதில், பயணித்தவர்கள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கேத்தி போலீஸார், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். கேத்தி ஆய்வாளர் விநாயகம், உதகை தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையில் தீயணைப்புத் துறையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

தவறவிடாதீர்

காலை முதல் கன மழை பெய்ததாலும், பேருந்து விவசாய தோட்டத்தில் கவிழ்ந்ததால் மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டது. கடும் வழுக்கலான பாதையில் பயணிகளை மீட்பதில் கடும் சிக்கல் நேரிட்டது. விபத்தில் சம்பவயிடத்திலேயே ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். மீட்கப்பட்டவர்கள் உதகை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டனர். விபத்து காரணமாக உதகை-குன்னூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் உதகையிலிருந்து சென்ற வாகனங்கள் கோத்தகிரி மார்க்கமாக திருப்பி விடப்பட்டன.

சம்பவ இடத்தக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, காவல்துறை கண்காணிப்பாளர் தெ.சண்முகப் பிரியா சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப்பணிகளை ஆய்வு செய்தனர்.

விபத்தில் பேலிதளாவை சேர்ந்த தர்மன் (64), குன்னூரை சேர்ந்த தினேஷ், உதகை நொண்டிமேட்டை சேர்ந்த நந்தகுமார், பிரபாகரன், உதகை கார்டன் சாலையை சேர்ந்த சாந்தகுமாரி (55) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த மற்றொரு பெண்ணின் அடையாளம் தெரியவில்லை.

இந்நிலையில், சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்படும் வழியில் ஆல்மாஸ் என்பவர் உயிரிழந்தார். பேருந்தில் பயணித்த 34 பேரில் 26 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் வெங்கடேஷ், பாலசுந்தரம், கிருஷ்ணகுமார், நிவேதா, மணி, மவுலீஸ்வரன் மற்றும் ராஜ்குமார் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயமடைந்த ஆல்தொரை, ஆனந்தன், சீனிவாசன், ஜோதிலட்சுமி, சுமதி, யசோதா, ஜெயராமன், சுகன்யா, பானுமதி உட்பட 22 பேர் உயர் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை எம்.பி.அர்ஜூனன் சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவ உதவி கிடைக்க தாமதமானதாக விபத்தை நேரில் பார்த்த குன்னூரை சேர்ந்த டோமினிக் தெரிவித்தார்.

அவர் கூறும் போது, “விபத்து காலை 11.30 மணிக்கு ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டவுடன் தொலைபேசியில் 108 ஆம்புலேன்சுக்கு தகவல் அளித்தோம். ஆனால், ஆம்புலன்ஸ்கள் வரவில்லை. இதனால், ஒரு மணி நேரமாக மருத்துவ உதவி கிடைக்காமல் பயணிகள் அவதியடைந்தனர். போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டதால், பொதுமக்கள் அவர்களுடன் இணைந்து பயணிகளை மீட்டனர்” என்றார்.

பேருந்து சாலையிலிருந்து விலகி சென்றதால் விபத்து ஏற்பட்டது என ஓட்டநர் ராஜ்குமார் தெரிவித்தார். அவர் கூறும்போது, “மந்தாடா பகுதியில் பேருந்து சென்றுக்கொண்டிருந்த போது, சாலையில் குழியை தவிர்க்க பிரேக் போட்டதில், மழையினால் சக்கரம் வழுக்கி சாலையிலிருந்து விலகி பள்ளத்தில் உருண்டது” என்றார்.

அரசு போக்குவரத்து கழக உதகை கிளை மேலாளர் (நிர்வாகம்) கணேசன், “விபத்து குறித்து விசாரித்து வருகிறோம். 34 பேர் பயணம் செய்துள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். பிறருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பெருமபாலானோர் கோவைக்கு சிகிச்சைக்காக அனுப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

ஓட்டை உடைசல் பேருந்துகள்:

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் வழித்தடத்தை கருத்தில் கொண்டு புதிய பேருந்துகள் இயக்க வேண்டும். ஆனால், சமவெளிப்பகுதிகளில் ஓடி பழுதான பேருந்துகளை மாவட்டத்தில் இயக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சு.மனோகரன் கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தில் போதுமான பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. மேலும் சமவெளிப்பகுதிகளில் ஓடி தேய்ந்த பேருந்துகளை பெயிண்ட் அடித்து விட்டு இங்கு இயக்குகின்றனர். பெரும்பாலான பேருந்துகள் சக்கரங்கள் தேய்ந்தும், பழுதடைந்தும் இயக்கப்படுகின்றன. அவற்றிக்கான ஸ்பேர் பார்ட்ஸ் இல்லை. சாலையில் சக்கரங்கள் பஞ்சரானால், உதகையிலிருந்தோ அல்லது குன்னூரிலிருந்தோ சக்கரங்கள் கொண்டு வரப்பட்டு மாற்றி பேருந்துகள் இயக்க வேண்டிய நிலை உள்ளது” என்றார்.

அரசு பேருந்துகளின் தகுதி குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் லட்சுமிபதி ராஜூவிடம் கேட்ட போது, “தகுதி சான்றுக்கு வரும் பேருந்துகளை முழுமையாக சோதித்த பின்னர் தகுதி சான்று வழங்குகிறோம். அதற்கு பின்னர் சக்கரங்கள் மாற்றப்படுகிறதா என்பது தெரியவில்லை. இந்நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்துக்கு புதிதாக 30 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் பயணிகள் வசதியாக பயணிக்க 52 இருக்கைகள் மட்டுமே கொண்டதாகும்” என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article24163002.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையெல்லாம் மீண்டும் மீண்டும் அரைக்க வேண்டிய நிலையில் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள் எனும் போது..நேரம் விரயமாக்காமலே இருந்து விடத் தோன்றுகிறது😇.
    • படம் இல்லாத இலங்கைப் பயணம் - மூன்று ---------------------------------------------------------------------- இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமே கோவிலுக்கு போவது தான் என்று பல நாட்களாகவே மனதில் பதிய வைக்கப்பட்டிருந்தது. அம்மன் கோவிலின் 15 நாட்கள் திருவிழாவில் சரி நடுவில் போய் அங்கே இறங்கியிருந்தோம்.   எல்லா ஊர்களிலும் அவர்களின் ஊரையும், ஊர்க் கோவில்களைப் பற்றியும் பெருமையான கதைகள் இருக்கும். இங்கும் அதுவே. உலகிலேயே ஒரு சிவன் கோவிலும், ஒரு அம்மன் கோவிலும் அருகருகே இருந்து, ஒரே பொது வீதியை கொண்டிருப்பது இரண்டே இரண்டு இடங்களில் தான் இருக்கின்றது என்று சொல்வார்கள். அதில் ஒன்று இங்கு. அம்மன் கோவிலின் தெற்கு வீதியும், சிவன் கோவிலின் வடக்கு வீதியும் ஒன்றே. சிவன் கோவில் பிரமாண்டமானது. அது தலைவர் அவர்களின் குடும்பக் கோயில் என்ற வரலாறு கிட்டத்தட்ட எல்லோருக்குமே தெரியும். இன்றும் அவர்களின் குடும்பமே சிவன் கோவிலின் சொந்தக்காரர்களும், நிர்வாகிகளும்.   சிவன் கோவிலின் பிரமாண்டம் அதைக் கட்டியவர்கள் ஒரு காலத்தில் இருந்த செல்வாக்கான, மிக வசதியான நிலையைக் காட்டுகின்றது. இன்று அந்தக் கோவிலின் உள்ளே நிற்கும் போது, கோவிலுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய செய்யாமல் விடப்பட்டிருக்கின்றன என்றே தோன்றியது. இன்றைய நிலையில் அவர்களால் எல்லாப் பணிகளையும் செய்வது இயலாத காரியம். ஆட்பலமும் இல்லை, பலரும் இடம் பெயர்ந்து போய்விட்டனர். ஒரு தனியார் கோவிலாகவே சதாகாலமும் இருந்த படியால், பெரிய வரும்படியும் என்றும் இருந்ததில்லை என்று நினைக்கின்றேன். அவர்களும் அதை எதிர்பார்த்ததும் இல்லை. ஆனாலும் எக் காரணம் கொண்டும் அவர்கள் அந்தக் கோவிலை வேறு எவரிடமும் கொடுக்கமாட்டார்கள். புரிந்து கொள்ளக் கூடிய பெருமையே.   அம்மன் கோவில் பொதுக் கோவில். சிவன் கோவில் அளவிற்கு கட்டுமானத்தில் பிரமாண்டமானது இல்லை. ஆனால் இதுவும் ஒரு பெரிய கோவில். ஊரே பயந்து பணியும் தெய்வம் அங்கு குடியிருக்கின்றது என்பது பெரும்பாலான ஊரவர்களின் நம்பிக்கை. இங்கு வளரும் காலத்தில் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை, ஆனாலும் அடி மனதில் ஒரு பயம் என்றும் தங்கியிருந்தது. இருட்டில் பேய்க்கு பயப்படுவது போல. அம்மை, பொக்குளிப்பான் போன்ற நோய்கள் அதிகமாக வரும் சித்திரை, வைகாசி மாதங்களில் கோவில் திருவிழா நாட்கள் வருவதும் 'சாமி, கண்ணைக் குத்தும்' என்ற பயத்தை உண்டாக்கி வைத்திருந்தது.   இந்த ஊரவர்கள் படம் பார்க்க கடல் கடந்து தமிழ்நாடு போய் வருவார்கள், அம்மன் திருவிழாவிற்கு சேலைகள் எடுக்க போய் வருவார்கள், வேட்டைத் திருவிழா அன்று நடக்கும் வாண வேடிக்கைக்கு வெடிகளும், வாணங்களும் எடுத்து வர போய் வருவார்கள் என்பன பல வருடங்களின் முன்னர் நிகழ்ந்த உண்மையான நிகழ்வுகளே.   திருவிழா நாட்களில் பூசைகள் நீண்டவை. சில மணித்தியாலங்கள் எடுக்கும் ஒவ்வொரு பகல் பூசையும், இரவுப் பூசையும். மக்களில் எவருக்கும் நேரம் பற்றிய உணர்வு ஒரு துளி கூட இருக்கவில்லை என்றே எனக்குப் பட்டது. அத்துடன் பூசைகள் பல காரணங்களால் மிகவும் பிந்தி விடுகின்றது அல்லது அதிக நேரம் எடுத்து விடுகின்றது. ஆனாலும் 'இன்று கொஞ்சம் பிந்தி விட்டது...' என்ற ஒரு வரியுடன் எல்லோரும் கடந்து போகின்றனர். கோவிலை சுற்றி மூன்று மடங்களில் அன்னதானம் கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சிறு வயதில் இருந்த காலங்களில், பல திருவிழாக்களின் போது ஒரு மடத்தில் கூட அன்னதானம் கொடுக்கப்பட்டதில்லை. இன்று புலம் பெயர்ந்தவர்களே அன்னதான உபயம். அன்றைய உபயகாரர்களின் பெயர்கள் மடங்களிற்கு வெளியே அறிவிப்புக்களாக எழுதப்பட்டிருக்கின்றது.   மிகவும் ஆச்சாரம் பார்ப்பார்கள். கோவில் வீதியில் கூட மேல் சட்டை அணிய முடியாது. அப்படி மீறி அணிந்திருந்தால், யாராவது வந்து ஏதாவது சொல்லுவார்கள். தாங்க முடியாத வெக்கையும், வேர்வையும் என்று வெளியே முன் வீதியில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் வந்து நின்றேன். வேறு சிலரும், வயதானவர்கள், அங்கே இருந்த ஒரு திண்ணையில் ஏற்கனவே முடியாமல் அமர்ந்திருந்தனர். அதற்குப் பின்னே ஒரு மடம் இருந்தது. ஒருவர் வந்து அருகே நின்றார். சிறிது நேரம் பேசாமல் நின்றவர் மெதுவாக ஆரம்பித்தார்.   'தம்பி, இந்த மேல் சட்டை போடக் கூடாது என்று சொல்வது எல்லாம் அந்த நாட்களில் அவர்கள் செய்த சதி' என்றார். இவர் சொல்லும் அந்த 'அவர்கள்' யாராக இருக்கும் என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முதலில் இவர் யார் என்று எனக்குத் தெரியாது, நான் யாரென்றும் அவருக்கும் தெரிந்திருக்காது. ஆனாலும், எங்கள் இருவருக்குமிடையில் நிச்சயம் ஒரு தொடர்பு, உறவுமுறை இருக்கும். 'யார் பூணூல் போட்டிருக்கின்றார்கள், யார் போடவில்லை என்று பார்ப்பதற்கே இந்த மேல் சட்டையை கழட்டும் வழக்கம் வந்தது' என்றார். பெரியாரின் சீடர் ஒருவர்! சும்மா வெறுமனே இருவரும் பேசி விட்டு போக வேண்டியது தான், வெக்கை தெரியாமல் நேரம் போக இந்தப் பேச்சு உதவுமே தவிர ஒரு மாற்றமும் ஏற்படாத, ஏற்படுத்த முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று.   காலை பத்து மணிக்கு ஆரம்பித்த பூசை முடியும் போது கிட்டத்தட்ட இரண்டு மணி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு மடத்தில் அன்னதானம். மடத்தில் வயது போனவர்கள் இருப்பதற்கு சில கதிரைகளும், ஒன்றிரன்டு வாங்கில்களும் போட்டிருந்தனர். மற்றவர்கள் நிலத்தில் சம்மணம் போட்டே இருக்கவேண்டும். நிலத்தில் இருந்து சாப்பிட்டு விட்டு எழும்பும் போது சிரமமாகவே இருந்தது. போதாக்குறைக்கு அந்த வாரம் கரப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் அடிபட்டு இடது முழங்கால் சில்லில் ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டிருந்தது. விமானப் பயணம் நல்லதல்ல என்ற மருத்துவர்களின் ஆலோசனையை மீறியே பயணம் போய்க் கொண்டிருந்தது.   தினமும் மதியமும், இரவும் இதுவா நிலைமை என்ற நினைப்பு கண்ணைக் கட்டியது.   (தொடரும்..........)    
    • இல்லாத விடுதலை புலிகளை பார்த்து இன்னும் ஹிந்தியா வுக்கு பயம்...,  தமிழர்கள் Now: அந்த பயம் இருக்கனும்🔥🔥  
    • ஏதோ ஒரு நாட்டின் சரணாகதியாகத் தானே அரசு போகிறது. சீனாவாக இருந்துட்டு போனால் என்ன?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.