Jump to content

`எனக்கு ஒன்றுமே புரியவில்லை’ - எஸ்.வி.சேகர் விவகாரத்தில் கலகலத்த தமிழிசை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.வி.சேகருக்காக 89 எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்கிறார்கள் என்றால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அரசாங்கத்தின் கடமை" என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

தமிழிசை

சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீட்டினால் தமிழகத்தில் ஏற்படும் தற்கொலைகளை அரசியலாக்கி அரசியல்கட்சிகள் அதன்மூலம் லாபம் காண்கின்றன. இந்தத் தற்கொலைகள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். தற்கொலைகள் நடக்காமல் அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும். ஆனால், தற்கொலை நடந்தால், தங்கள் அரசியல் லாபத்துக்காக அரசியலாக்கிக் கொண்டிருப்பதை உயர் நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. இதைத்தான் எங்களின் கருத்தாகவும் பதிவு செய்கிறேன். சென்னை - சேலம் பசுமைத் திட்டம், பின் தங்கிய ஐந்து மாவட்டங்களுக்குப் பொருளாதார ரீதியில் மிகப் பெரிய பலனை அளிக்கக்கூடியது. ஆனால், இதற்கு மிகத்தவறான பிரசாரங்களைச் சில குறிப்பிட்ட நபர்கள், சில குறிப்பிட்ட கட்சிகள் மறுபடியும் அதை ஒரு தூத்துக்குடியாக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்து, சூழ்ச்சியோடு பணியாற்றுகிறார்கள். இந்தச் சூழ்ச்சிக்கு அந்தப் பகுதி மக்களும் விவசாயிகளும் பலியாகிவிடக் கூடாது. 

எதிர்க்கட்சித் தலைவர், அங்கே ஒரு பிரச்னை ஏற்பட்டுவிடாதா, அதன்மூலம் அரசியல் குளிர்காயலாமா என்கிற சூழ்நிலையைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கு எவ்வளவு கடமை இருக்கிறதோ, அதே கடமை எதிர்க்கட்சிக்கும் இருக்கிறது. ஆனால், ஸ்டாலின் வெளிநடப்பு செய்வதற்கான காரணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அதுவும், எஸ்.வி.சேகருக்காக 89 எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்கிறார்கள் என்றால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அரசாங்கத்தின் கடமை. காவலாளிகளின் கடமை. அது எல்லாம் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த திராவிட முன்னேற்றக் கழக எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்கிற அளவில் எடுத்துச் சென்றது அவர்கள் வெளிநடப்பு செய்வதற்கு காரண காரியங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த ஆக்கபூர்வமான  திட்டங்களுக்கும் உறுதுணையாக இருப்பதில்லை என்பதைத்தான் இது காண்பிக்கிறது.

தமிழகத்தில் மக்கள் நலம் சார்ந்த பிரச்னைகள் எவ்வளவோ இருக்கும்போது எஸ்.வி.சேகர் பிரச்னையை முன்னிறுத்தி அதைப் பற்றிப் பேச வேண்டும் என்று சொன்னால் தமிழக அரசியலில் ஸ்டாலின் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். காவிரிக்காக அவ்வளவு போராடினார்கள். நேற்றோடு கர்நாடகாவின் டைம்லைன் முடிந்துவிட்டது. உறுப்பினரை இன்னும் கொடுக்கவில்லை. இதைப்பற்றி யாராவது பேசுகிறோமா. ஒருவேளை எடியூரப்பா அங்கு வந்து, ஓர் உறுப்பினரைக் கொடுக்கவில்லை என்றால் இன்றைக்கு தமிழ்நாடு எப்படி இருந்திருக்கும் என்று என்னால் சிந்தித்துக்கூட பார்க்க முடியவில்லை. ஸ்டாலின் ஒருவேளை பெங்களூருக்கே பாதிதூரம் போயிருப்பார். ஆனால், இன்றைக்கு அப்படியே அமுக்கமாக இருக்காங்க. அவங்களுக்கு பிரச்னை காவிரி கிடையாது. மோடி எதிர்ப்புதான். அவர்கள் எதிர்மறை அரசியலிலேயே சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் நேர்மறை அரசியலுக்குத் திரும்பட்டும்.

ஒரு எஸ்.வி.சேகரைப் பார்த்து 89 எம்.எல்.ஏவும் வெளியே போனீர்கள் என்றால் நீங்கள் யாரைப் பார்த்து பயப்படுகிறீர்கள். இது ஒன்றுதான் தமிழகத்தின் மக்கள் பிரச்னையா, எனது கருத்துப்படி எதிர்க்கட்சித் தலைவர் ஏதாவது காரணத்தைக் காண்பித்து வெளிநடப்புச் செய்வதில் குறியாக இருக்கிறாரே தவிர, மக்கள் பிரச்னையில் அக்கறை இல்லை. எவ்வளவோ மக்கள் பிரச்னைகள் இருக்கும்போது  ஒன்றுமே இல்லாததை எடுத்து மக்கள் உணர்வுகளைத் தூண்டும் வகையில்தான் இவர்கள் அரசியல் இருக்கிறது என்பது எனது குற்றச்சாட்டு" என்று தெரிவித்தார்.

 

https://www.vikatan.com/news/tamilnadu/127568-i-do-not-understand-why-89-mlas-walk-out-from-assembly-for-sv-shekher-says-tamilisai.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.