Jump to content

எங்கள் நாட்டுக்கு வாருங்கள்' - பரஸ்பரம் அழைப்பை ஏற்ற டிரம்ப், கிம்


Recommended Posts

 

 

'எங்கள் நாட்டுக்கு வாருங்கள்' - பரஸ்பரம் அழைப்பை ஏற்ற டிரம்ப், கிம்

'எங்கள் நாட்டுக்கு வாருங்கள்' - பரஸ்பரம் அழைப்பை ஏற்ற டிரம்ப், கிம்படத்தின் காப்புரிமைREUTERS

தென் கொரியாவுடனான ராணுவ பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததையடுத்து, பாதுகாப்பு அம்சங்களில் ''இரும்புக்கவசம்'' போன்ற உறுதி மற்றும் நிலைபாட்டினை தங்கள் கூட்டணி நாடுகளுக்கு அமெரிக்காவின்பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் மீண்டும் உறுதி செய்துள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு நடந்து முடிந்த நிலையில், மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தென் கொரியாவுடனான ராணுவ பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளும் என்று அறிவித்தார்.

டிரம்பின் இந்த அறிவிப்பு வட கொரியாவுக்கு மிகவும் சாதகமா பார்க்கப்படும் அதே வேளையில், கொரிய தீபகற்பத்தின் அருகாமை பகுதிகளில் உள்ள அமெரிக்காவின் கூட்டணி நாடுகளை இந்த அறிவிப்பு வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

'எங்கள் நாட்டுக்கு வாருங்கள்' - பரஸ்பரம் அழைப்பை ஏற்ற டிரம்ப், கிம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதனிடையே, வட கொரியாவின் அரசு ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவுக்கு வருகை தருமாறு டிரம்ப் விடுத்த அழைப்பை வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் நடந்த இரு தலைவர்கள் இடையிலான உச்சிமாநாட்டின்போது டிரம்ப் இந்த அழைப்பை விடுத்ததாக கூறப்படுகிறது.

அதே வேளையில், டிரம்புக்கு விருப்பமான சமயத்தில் அவர் வட கொரியாவுக்கு வருமாறு, கிம்மும் அழைப்பு விடுத்துள்ளார்.

''இரு தலைவர்களும் ஒருவருக்கொருவரின் அழைப்பை மகிழ்வாக ஏற்றுக் கொண்டனர்'' என்று கேசிஏன்ஏ மேலும் தெரிவித்துள்ளது.

'எங்கள் நாட்டுக்கு வாருங்கள்' - பரஸ்பரம் அழைப்பை ஏற்ற டிரம்ப், கிம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இரு நாடுகள் இடையிலான உறவை வேலும் அதிகரிக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், நேற்றைய சந்திப்பின் முடிவில் இரு தரப்பும் வெளியிட்ட கூட்டறிக்கையில், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத நீக்கத்தை நோக்கி வடகொரியா உறுதியுடன் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வடகொரியா மீதான தடைகள் விலக்கு எப்போது?

அணு ஆயுத பயன்பாடு முடியும்போதுதான் வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"நான் தடைகளை நீக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்," என்று கூறிய டிரம்ப் ''அணு ஆயுத நீக்கம் குறித்து வட கொரியா உத்தரவாதம் அளிக்கும்போது தடை நீக்கம் பற்றி முடிவு செய்யப்படும். தற்போதைக்கு இந்த தடைகள் தொடரும்'' என்று குறிப்பிட்டார்.

'எங்கள் நாட்டுக்கு வாருங்கள்' - பரஸ்பரம் அழைப்பை ஏற்ற டிரம்ப், கிம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அணு ஆயுதங்களை கைவிட்டால், வட கொரியா பல விஷயங்களை சாதிக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், "மற்ற நாடுகள் வட கொரியாவுடன் தொடர்பில் இருக்க வேண்டும்" என்றார்.

இந்நிலையில், வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகளில் ஏற்பட்டுள்ள சாதகமான நிலைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக வட கொரியாவுக்கு எதிரான தடைகள் விலக்கிக் கொள்ளப்படலாம் என்று சீனா தெரிவித்துள்ளது.

 

https://www.bbc.com/tamil/global-44463999

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

'எங்கள் நாட்டுக்கு வாருங்கள்' - பரஸ்பரம் அழைப்பை ஏற்ற டிரம்ப், கிம்

ஆருக்கோ பொறுத்த ஆப்பு இருக்கு ஆருக்கெண்டு தெரியேல்லை? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்குத்தான் அடுத்த  சமாதானத்திற்கான  நோபல்பரிசு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.