Jump to content

போராட்டத்திற்கு ஆதரவில்லை: வழக்கம்போல இயங்கும் யாழ்ப்பாணம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்திற்கு ஆதரவில்லை: வழக்கம்போல இயங்கும் யாழ்ப்பாணம்!

June 11, 2018
11-1-1-696x522.jpg

வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடிக்கும் விவகாரத்தில் வடக்கு மாகாணம் முழுவதிலும் விடுக்கப்பட்ட அரைநாள் கடையடைப்புக்குக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. வழக்கம்போல மக்கள், வர்த்தகர்கள் தமது வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனமே இந்த அரைநாள் கடையடைப்புக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை அழைப்புவிடுவித்தது. கட்சிகள், பொது அமைப்புக்களுடன் கலந்தாலோசிக்காமல் பகிரங்க அழைப்பாகவே இதனை விடுப்பதாக கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டியிருந்தது.

 

இந்த நிலையிலேயே அரைநாள் கடையடைப்புக்கான அழைப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று வர்த்தக சங்கங்கள், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள் உள்பட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சாமாசங்களின் சம்மேளங்களைச் சேர்ந்தோர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்தனர்.

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் கடலட்டைத் தொழிலை முன்னெடுக்கும் தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரியும் கடலட்டைத் தொழிலாளை வடக்கில் தடை செய்யக் கோரியும் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத்தின் அலுவலகத்துக்கு முன்பாகவிருந்து பேரணியாகச் சென்று யாழ். மாவட்ட செயலகத்துக்குச் சென்று மனுக் கையளிப்பது என்று சமாசங்களின் பிரதிநிதிகள் தீர்மானம் எடுத்தனர்.

எனினும், இந்த போராட்டம் ஒரு தன்னிச்சையான போராட்டமென்ற விமர்சனம் எழுந்ததையடுத்து, இன்றைய போராட்டத்திற்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை. யாழ் நகரம், மானிப்பாய், திருநெல்வேலி, நெல்லியடி உள்ளிட்ட நகரங்கள் வழக்கம்போல இயங்குகின்றன. சாவகச்சேரியில் மட்டும் சில கடைகள் மூடப்பட்டுள்ளன.

 

இதேவேளை, காரைநகர், வலந்தலைச் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட வரவேற்பு அலங்கார வளைவு திறப்பு விழா இன்று காலை 9 மணிக்கு இடம்பெறுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். கிளிநொச்சி மாவட்டங்களின் அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.

அந்த நிகழ்வு நிறைவடைந்த பின்னரே கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத்தின் பேரணி ஆரம்பிக்கப்படும் என ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

யாழ் நகரில்

10-1-300x225.jpg11-1-1-300x225.jpg12-1-1-300x225.jpg13-2-300x225.jpg

தென்மராட்சியில்

20180518_084409-1-300x225-300x225.jpg

 

http://www.pagetamil.com/7960/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கன்ட சனமும் ரஜனியின் பேச்சை கேட்டு நடக்கத்தொடங்கிட்டினமோ:)

Link to comment
Share on other sites

கதவடைப்புக்கு பதிலாக மக்களின் நாளாந்த வாழ்வுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேறு ஏதாவது செய்யலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.