Jump to content

சிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி பேரணி – மாவையை அவமானப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்


Recommended Posts

சிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி பேரணி – மாவையை அவமானப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி – வாடிகளை அமைத்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி, யாழ். நகரில் நேற்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைமையகத்தில் இருந்து யாழ். மாவட்டச் செயலகம் வரை இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

அதையடுத்து. யாழ். மாவட்ட அரச அதிபரிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு நேற்று யாழ். மாவட்டத்தில் அரை நாள் அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், யாழ். மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மாத்திரம் வணிக நிலையங்கள் அடைக்கப்பட்டிருந்தன. ஏனைய பகுதிகளில் இயல்புநிலை காணப்பட்டது.

jaffna-demo.jpg

இதற்கிடையே, நேற்றைய பேரணியில் பங்கேற்கச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, பேரணியில் பங்கேற்ற சிலரால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

அரசியல்வாதிகளை வெளியேறுமாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிலர் கோசம் எழுப்பியதை அடுத்து, அவர் வெளியேறிச் சென்றார்.

அதேவேளை, மாவை சேனாதிராசா பேரணியில் பங்கேற்றவர்களால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டமைக்காக கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம் வருத்தம் தெரிவித்துள்ளது.

http://www.puthinappalakai.net/2018/06/12/news/31347

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு போனாலும் தமிழ் அரசியல் வாதிகளை அவமானப்படுத்துகிறார்...என்ன நடக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

எங்கு போனாலும் தமிழ் அரசியல் வாதிகளை அவமானப்படுத்துகிறார்...என்ன நடக்கின்றது

ஆமை(மாவை) புகுந்த விசயங்கள் ஒண்டும் சரியாய் உருப்படுறேல்லை எண்டு சனத்துக்குத்தானே தெரியும்  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவைக்கு எதிராக கோசமிட்ட ஈ.பி.டி.பி… இரண்டு பஸ்ஸில் ஆள் அனுப்பிய சுரேஷ்: இன்றைய போராட்டத்தின் முக்கிய சம்பவங்கள்!

June 11, 2018
IMG20180611113643-696x392.jpg

வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடிப்பவர்களை தடுக்கும்படி கோரி இன்று கடற்றொழிலாளர் சம்மேளனத்தால் நடத்தப்பட்ட போராட்டம் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் தோற்றுவித்திருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் இதில் அணிகளாக பிரிந்து செயற்பட்டதால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக தெரிகிறது.

சர்ச்சைகளிற்கும் குழப்பங்களிற்கும் குறைவின்றி இன்று நடந்த போராட்டத்தில் என்னவெல்லாம் நடந்தது?

1.மாவை சேனாதிராசாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஈ.பி.டி.பியினரே. சமாச தலைவராக உள்ள குழறி ராசன் என்பவர் ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினர். அவரது தலைமையில்தான் மாவைக்கு எதிர்ப்பு கோசம் எழுப்பப்பட்டது. குழறி ராசனை கட்சி கூட்டங்களிலேயே எழுந்து பேச டக்ளஸ் தேவானந்தா அனுமதிப்பதில்லை. அப்படி “அரசியல் முத்துக்களை“ உதிர்ப்பார்.

கடற்றொழிலாளர் சம்மேளன அலுவலகத்திற்குள் வந்த மாவை சேனாதிராசா பேசிக் கொண்டிருந்துவிட்டு, வெளியில் வந்தபோதே ஈ.பி.டி.பி குழறி ராசன் அணி அவருக்கு எதிராக கோசமிட்டது. அதை சிலர் படம்பிடித்து, மாவை போராட்ட களத்திலிருந்து விரட்டப்பட்டதாக பகிர, சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆனது.

2.மாவை அவமானப்படுத்தப்பட்டதற்கு, சம்மேளன பிரதிநிதிகள் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கோரினர்.

3.சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது உதவியாளர்களுடன் காரில் வந்தார். அந்த பகுதியில் நின்ற ஊடகவியலாளர்கள் மாவைக்கு நடந்த வரவேற்பை கூறி, அங்கே போக வேண்டாமென அவரை தடுத்து விட்டனர். இல்லையெனில், சுரேஷ் பிரேமச்சந்திரனின் வீடியோவும் வந்திருக்கும்! இந்த பேரணிக்கு இரண்டு பேரூந்துகளில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஏற்பாட்டில் ஆட்கள் கொண்டு வரப்பட்டிருந்தனர். கடற்றொழிலாளர் சம்மேளன தலைவர் தவச்செல்வம் இப்படி உதவி கோரிவிட்டு, அரசியல்வாதிகளை வேண்டாமென எப்படி சொல்வதென சுரேஷின் உதவியாளர் ஒருவர் தமிழ்பக்க செய்தியாளரிடம் விசனம் தெரிவித்தார்.

4.யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு பேரணி சென்றபோது, மாவைக்கு எதிராக குரல் எழுப்பிய அணிதான் முன்னிலையில் சென்றது. அவர்கள் கொஞ்சமும் விவஸ்தையின்றி நடந்து கொண்டனர். “ஏ.டி இலஞ்சம் வாங்கி விட்டாயா?“? “ஏ.டியை உடனே மாற்றுங்கள்“ என கோசமெழுப்பத் தொடங்கினார்கள். போராட்டக்காரர்கள் வந்ததும், அவர்களை சந்திக்க வந்த பிரதி நீரியல்வள திணைக்கள அதிகாரி, ஏன் வில்லங்கம் என அலுவலகத்திற்குள் திரும்பி சென்றுவிட்டார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. போராட்டக்காரர்கள் வெளியில் நீண்டநேரம் காத்திருந்த பின்னரே, நிலைமை ஓரளவு அமைதியான பின்னரே வெளியில் வந்தார்.

5.வடமராட்சி கிழக்கில் வாடிகள் அமைத்து கடலட்டை பிடிக்க ஐந்து கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களிற்கும், பல தனியாட்களிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீரியல்வள திணைக்கள பிரதி பணிப்பாளர் ஜே.சுதாகரன் கூறினார்.

 

சட்டத்தின் பிரகாரம் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியை மத்திய கடற்றொழில் அமைச்சின் பணிப்பாளர் வழங்குகிறார். அந்த அனுமதியை கொண்டு கடலட்டை பிடிக்கலாம். ஆனால் வாடிகள் அமைப்பதற்கு அந்த பிரதேசத்தின் பிரதேச செயலருடைய ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும். ஒப்புதல் பெறப்படவில்லையென்றால் அதனை பார்க்கவேண்டியது பிரதேச செயலர்தான். யாழ்.மாவட்டத்தில் 14 நிறுவனங்கள் கடலட்டை பிடித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களால் எமது பகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாம் காலத்திற்கு காலம் மத்திய கடற்றொழில் அமைச்சுக்கு எழுத்துமூலம் கடிதங்களை எழுதியிருப்பதுடன், எமது மீனவர்கள் தென்பகுதி மீனவர்களுக்கு எதிராக நடாத்தும் போராட்டங்கள், எதிர்ப்புக்கள் குறித்தும் நாங்கள் மத்திய கடற்றொழில் அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறோம் என்றார்.

6.ஆளுனர் அலுவலகத்தில் மகஜர் கொடுத்துவிட்டு வெளியில் வந்தபோது, கஜேந்திரனிற்கு அருகில் வந்த ஈ.பி.டி.பி அணியினர் அவருக்கு எதிராகவும் குரல் எழுப்பினர். அரசியல்வாதிகளிற்கு இங்கு என்ன வேலை, அரசியல்வாதிகளே வெளியேறுங்கள் என குரல் எழுப்பினர். இந்த சந்தர்ப்பத்தில் சில ஊடகவியலாளர்களும் அந்த பகுதியில் நின்றபோதும், யாரும் அதை செய்தியாக்கவோ, படமாக்கவோ இல்லை!

7.வரும் 13ம் திகதி- புதன்கிழமை கடற்றொழிலாளர் பிரதிநிதிகளை ஆளுனர் தனது அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். கடலட்டை பிடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

http://www.pagetamil.com/8008/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.