Jump to content

முன்னோர் மொழி பொன்னே போல் - சுப.சோமசுந்தரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                  முன்னோர் மொழி பொன்னே போல் - சுப.சோமசுந்தரம்

 

  அறநெறிகளும் உவமைகளும் மீண்டும் மீண்டும் இலக்கியங்களில் மாறுதலின்றி கையாளப்படுவதும் எடுத்தாளப்படுவதும் தொன்று தொட்ட நிகழ்வே. இவற்றில் ஒருவரைப் பார்த்துதான் இன்னொருவர் எழுத வேண்டும் என்றில்லை. இடமும் காலமும் மாறுபடாத போது அறநெறிகள் மாறுபட வாய்ப்பில்லை. மங்கை நல்லாளின் ஒளிரும் முகம் மதிமுகமாய் பாமரனுக்கும் தோன்றும். அதனை முழுநிலவெனச் சொல்வதற்கு ஒரு புலவனிடம் இன்னொரு புலவன் கேட்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு புலவனின் ஒரு குறிப்பிட்ட வருணனையோ கூற்றோ அவனுக்கு முந்தையோரை நினைவு படுத்துதல் உண்டு. அவ்வாறான சில இடங்களில் அம்முந்தைய கூற்று கல்வி கேள்விகளிற் சிறந்த இப்புலவனுக்குத் தெரியாதிருக்க வாய்ப்பில்லை என்று அறுதியிட்டுச் சொல்லலாம். உதாரணமாய் திரைப்பாடலையே எடுத்துக் கொள்வோம். ‘வாழ்க்கை படகு’ திரைப்படத்தில் ‘நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ’ எனத் தொடங்கும் கண்ணதாசன் பாடலில் ‘உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே ! விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே !’ எனக் கேட்கும் பொழுது அதிகாரம் குறிப்பறிதலில்

  யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

  தான்நோக்கி மெல்ல நகும்

என நம் நினைவிற்கு வரும் குறள் கண்ணதாசன் அறியாததா ? இவ்வாறு எடுத்தாள்வது கண்ணதாசனின் சான்றாண்மைக்குச் சான்று பகர்வது. முன்னோரான வள்ளுவனின் மொழியைப் பொன்னே போல் போற்றுதல் கல்வி கேள்வியிற் சிறந்த, புலமையிற் சிறந்த கண்ணதாசனுக்கு மேலும் பெருமை சேர்ப்பது. அறிவுலகம் அறிந்த சான்றோரை வழிமொழிவது எடுத்தாள்வதாய் அமையும். அங்கு ‘சுடுதல்’ இல்லை. ஆங்கிலத்தில் “Reference out of reverence is acknowledgement, not plagiarism” என்பர். இவ்வகையில் நற்றிணையின் கூற்று வள்ளுவத்தில் எடுத்தாளப்படும் இரண்டு இடங்கள் நினைவுகூர்ந்து இன்புறத்தக்கவை. சங்க இலக்கியமான நற்றிணை சங்கம் மருவிய காலத்துப் பொய்யாமொழிக்கு முந்திய காலத்தது எனும் பெரும்பான்மை அறிவுலகக் கருத்தியலின் வழிநின்று எழுதுகிறேன். மேலும் இங்கு எது முந்தியது என்பதல்ல, எடுத்தாளும் ஆளுமையே பேசுபொருள்.

          நான் பேச வந்த முதற்குறள் ‘கண்ணோட்டம்’ எனும் அதிகாரத்தில் அமைந்த

  பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

  நாகரிகம் வேண்டு பவர்.

எல்லோரும் விரும்பத்தக்க நாகரிகம்(courtesy) விழைபவர் தம் சார்ந்தோர் தமக்கு வழங்குவது நஞ்சாகவே இருப்பினும் அதனை ஏற்று அமைவர் என்பதே பொருள். இங்கு ‘நஞ்சினை உண்டு’ என்பதை நேர் பொருளாய்(literal meaning) எடுப்பது இல்லை என்பதை இலக்கியம் அறிந்தோர் அறிவர். ‘உணவானாலும் கருத்தானாலும் தாம் விரும்பாதவற்றை தம்மைச் சார்ந்தோர் அளிக்கையில் சூழலைக் கருத்தில் லொண்டு ஏற்றமைதல்’ எனப் பொருள்கொள்வதே இங்கு சாலப் பொருத்தம். இக்குறளினால் பரிமேலழகர் முதல் பாக்களின் திறம் ஓரளவு அறிந்தோர் வரை நினைவு கூர்வது நற்றிணையில் 355வது பாடல் பகுதியான

 முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

 நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்

எனும் குறிஞ்சித் திணைப் பாடலாம்.

நற்றிணையின் நனிநாகரிகம் வள்ளுவத்தில் நயத்தக்க நாகரிகமானது. நற்றிணையின் வலியுறுத்தல் தேர்ந்து தெளிந்த நட்பில் அமைந்தது. குறளின் வலியுறுத்தல் நாகரிகத்தில் அமைந்தது.

           பேச வந்த இரண்டாவது குறள் பிரிவாற்றாமையில் தலைவனிடம் தலைவியின் கூற்று,

 செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

 வல்வரவு வாழ்வார்க் குரை

என்பது.  

          சிறிது காலம் போர்க்களத்திற்கோ தொழில் மேற்கொண்டோ பிரியப் போகும் தலைவன் உற்றாரிடம் விடைபெற்று தலைவியிடம் விடைபெற வருகிறான். “சில மாதங்களில் வந்து விடுவேனே. ஏன் கவலை கொள்கிறாய்?” என ஏற்கெனவே அவளைத் தேற்ற முயன்று தோற்றுப் போனவன் அவன். தலைவி அவனிடம் சொல்கிறாள், “ ஏதாவது மாற்றம் ஏற்பட்டு நீ செல்லவில்லை என்றால் மட்டும் என்னிடம் சொல். ‘அதுதான் சீக்கிரம் வந்து விடுவேனே ! ’ எனும் உன் (வல்)வரவு பற்றிய செய்தியை நீ வரும்போது யார் உயிருடன் இருக்கப் போகிறார்களோ அவர்களிடம் சொல்!” பொதுவாக எவரது வரவையும் நல்வரவாகக் கொள்வதே தமிழர் மாண்பு,மரபு. ஆனால் இங்கு வல்வரவு என்று வள்ளுவன் சொல்லாக்கம் தருவது, தலைவன் வரப்போவது தலைவியை இழந்த இழவு வீட்டிற்கு என்பதால். சொற்சிக்கனத்திற்கும் வள்ளுவனே ஆசிரியன். பிரிவாற்றாமையினால் தலைவியின் மேனியில் பசலை தோன்றுவதும், மேனி இளைத்து கை வளையல்கள் பிறர் அறிய நிலத்தில் கழன்று விழுவதும் அகப்பாடல்களில் எங்கும் விரவி நிற்கக் காணலாம். ஆனால் தலைவி உயிர் துறப்பது (மிகைப்படுத்தலாகவே இருப்பினும்) என்பது இலக்கியங்களில் அருகி நிற்பது. எனவே மேற்கண்ட குறளோவியம் நம் நினைவிற்குக் கொணரும் நற்றிணைக் காட்சி நெய்தல் நிலத்துத் தோழி தலைவியின் பிரிவாற்றா நிலை பற்றி தலைவனிடம் எடுத்துரைப்பது (பாடல் – 19; நக்கண்ணையார் எனும் பெண்பாற் புலவர் பாடியது – அவர்தாம் தோழியோ ! )

 வருவை யாகிய சின்னாள்

 வாழா ளாதல்நற் கறிந்தனை சென்மே   

[ வருவை ஆகிய சின்னாள்(சில நாள்)

 வாழாள் ஆதல் நன்கு அறிந்தனை சென்மே (செல்வாயே) ]

அஃதாவது ‘சில நாட்களில் வருவாய் எனினும் அவள் வாழாள் என்பது நன்கு அறிந்து செல்வாயே’ என்பதாம்.

              “ யாமறிந்த மொழிகளிலே……….” எனும் பாரதியின் கூற்று உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை என்பது நம்மவர்க்காவது புரிந்தால் சரி.

                                                      

                                                                                                                                                                                                                      -சுப.சோமசுந்தரம்     

           

Link to comment
Share on other sites

"தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை!", சொல் நயமும், உரை நயமும், மொழி நடையும் இனிதாயின்!

அவ்வண்ணமே உளதாயிருப்பதால், நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் நும் தமிழ்க் காதல் இனி!

கவியரசுவின் பாடல் நயம் கருதி,

 படகு’ திரைப்படத்தில் ‘நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ’ எனத் தொடங்கும் கண்ணதாசன் பாடலில்

‘உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே !

விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே !’ என!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் said:

"தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை!", சொல் நயமும், உரை நயமும், மொழி நடையும் இனிதாயின்!

அவ்வண்ணமே உளதாயிருப்பதால், நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் நும் தமிழ்க் காதல் இனி!

கவியரசுவின் பாடல் நயம் கருதி,

 படகு’ திரைப்படத்தில் ‘நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ’ எனத் தொடங்கும் கண்ணதாசன் பாடலில்

‘உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே !

விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே !’ என!

 

நன்றி தோழர் கிருஷ்ணன். 'விண்ணை' சரி (Edit) செய்து விட்டேன். மண்ணை என் ஒருவனால் சரி செய்ய இயலாது என்பது 'வேறு'.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.