Jump to content

சம்பந்தர் போன்றவர்களின் உண்மை முகத்தை


Recommended Posts

சம்பந்தர் போன்றவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்த சிங்கள அமைச்சர் - வெளிவருகிறது திரைமறைவு நடவடிக்கைகள்

 

·         Gokulan

·         1 hour ago

 

Image

'நாடாளுமன்றில் எதிர்கட்சி தரப்பிலும், ஆளும் கட்சி தரப்பிலும் அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக சண்டைபிடித்துக்கொள்வார்கள். ஆனால் உணவு விடுதிக்குச் சென்றால் ஒன்றாக அமர்ந்து சிரித்துக்கொண்டு உணவு உண்பார்கள்'.

அதேபோல் நாடாளுமன்ற அவைக்குள் கடும் வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி சண்டைபிடித்தவர்கள் வெளியில் வந்ததும் 'மச்சான் பொருட்படுத்த வேண்டாம்' என்ற கூறி கட்டி அணைத்துக்கொள்வார்கள்'.

ஆனால் இந்த அரசியல்வாதிகளது ஆதரவாளர்களோ கைகலப்பில் ஈடுபட்டு, உயிரை மாய்த்துக்கொண்டு, அவையவங்களை இழந்து, நட்பையும் உறவுகளையும் இழந்து, ஒரே கிராமத்தில் சகோதரர்களாக இருந்தவர்கள் அரசியல் காரணமாக இரு துருவங்களாக பிளவுபட்டு இருக்கின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பத்து இலட்சம் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் தேசிய செயற்திட்டத்தின் கீழ் அநுராதபுரம் கலாவெவ தேர்தல் தொகுதியின் இராஜாங்கணை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மைத்ரி ரணில் தலைமையிலான ஸ்ரீலங்காவின் தற்போதைய தேசிய முக்கிய அமைச்சர்களில் ஒருவரான துமிந்த திஸாநாயக்க அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை வெளிச்சம்போட்டுக் காண்பித்திருக்கின்றார்.

அநுராதபுரம் ராஜாங்கணை மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட துமிந்த திஸாநாயக்க, 'நாடாளுமன்றில் எம்.பிக்களும், அமைச்சர்களுமான நாம் அனைவரும் எந்தவித முரண்பாடும் இன்றி ஒரே மேசையில் அமர்ந்து உணவு அருந்துவதுடன், மிகவும் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

'நாடாளுமன்றில் எதிர்கட்சி தரப்பிலும், ஆளும் கட்சி தரப்பிலும் அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக சண்டைபிடித்துக்கொண்ட போதிலும், உணவு விடுதிக்குச் சென்றால் ஒன்றாக அமர்ந்து சிரித்துக்கொண்டு உணவு உண்பார்கள்' என்றும் அமைச்சர் துமிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக நாடாளுன்ற அவைக்குள் கடும் வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி சண்டைபிடிப்பவர்கள் வெளியில் வந்ததும் ' மச்சான் பொருட்படுத்த வேண்டாம் என்ற கூறி கட்டி அணைத்துக்கொள்வார்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகள் ஆளும் கட்சியில் இருந்தாலும், எதிர்கட்சியில் இருந்தாலும் அவர்கள் தமது அரசியலை செய்துகொண்டிருப்பதாக குறிப்பிடும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, மக்களோ அரசியல் காரணமாக திட்டமிட்டு பிரிக்கப்பட்டதற்கு அமைய இன்னமும் 77 – 78 களில் இருந்தது போல் அரசியல் பழிவாங்கல்களை மனதில் வைத்துக்கொண்டு ஆத்திரத்துடனும், வெறுப்புடனுமே வாழ்ந்து வருவதாக கவலை வெளியிட்டார்.

http://www.ibctamil.com/politics/80/101864

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.