Jump to content

கங்கம்மா


Recommended Posts

கங்கம்மா

 

 
k9

"பெத்த புள்ளையத் தொலைச்சிட்டு... பேதையா நிக்கிறேனே.... ஒத்தப் புள்ளைய காணாம.... ஒறக்கமத்துப் போனேனே....'' 
காலங்காத்தால பிலாக்கணத்தை ஆரம்பிச்ச கங்கம்மாளப் பாத்த தங்கவேலுவுக்கும் வவுத்தெரிச்சலாதானிருக்கு. புள்ளைய நெனைச்சி கங்கம்மா அறுத்துப் போட்டக் கதுரா தொவண்டு போய்ட்டா. 
"இந்தா புள்ள, ஒரு வாயாவது குடி கொவளையில கஞ்சிய வைச்சிக்கிட்டு கெஞ்சறாரு தங்கவேலு.''
மூச்ச வுடலையே அவ. பின்னயென்ன கோவம்னா கோவம் அப்பிடியொரு கோவம் புருசங்காரருமேல. "சேத்து வைச்சிருக்க சொத்தே நாலு தலமொறைக்குத் தாங்கும். அந்நிய தேசத்துல எம்புள்ள போய் செரமப்படணும்னு தலையெளுத்தா என்ன?'' சீலத்தலப்பு நனைஞ்சது.
"இந்த மனுசனோட கொடச்சல தாங்கமுடியாமதேன் சீமைக்குப் போனான் தவமா தவமிருந்து பெத்த புள்ள. எம்புள்ளையக் கரிச்சிக் கொட்டலன்னா இந்த மனுசனுக்கு ஒறக்கம் புடிக்காதே. ஆளு, அம்பு, தோட்டந்தொறவுன்னு அம்புட்டுயிருந்து என்னா புண்ணியம்? ஒத்தப்புள்ளையத் தவிக்க வுட்டுட்டு ஒருகவளஞ் சோறு உள்ள எறங்கமாட்டுதே.' கண்ண முந்தானைல தொடைச்சிக்கிட்டு மூக்கைச் சிந்தி செவுத்தில தடவுனா. பொங்கலுக்கு வெள்ளையடிச்ச செவுரு பூரா சளிக் கோலமாயிருக்கு.
"இப்பிடியே பச்சத் தண்ணி பல்லுல படாம கெடந்தா அந்த ஒடம்புதா என்னத்துக்காவும் புள்ள?''
"எம்புள்ளைய பாக்காம எனக்கொண்ணும் ஆவாது தலக்காணி ஊறிப்போய்க் கெடக்கு''
ஆலமரம் அரசமரமுன்னுட்டு கண்ணுல கண்ட மரத்தல்லாம் வுடாம சுத்தியதுல பொறந்த புள்ளன்னு துளியூண்டு செல்லங்கொடுத்து வளத்தது தப்பாப்போச்சி. நெதமும் பள்ளிக்கோடம் போறச்ச அவனுக்குன்னு ஒரு நோவு வந்துடும். வைத்தியக்காரரத் தேடிப் போறதே கங்கம்மாவோட பொளப்பாப் போச்சி. அந்தத் தொல்லைய அவளுக்கேந் தரணும்னு காலங்காத்தால வைத்தியக்காரரே அவ வூட்டாண்ட வந்துடுவாரு. 
பாவம் அந்த வாத்தியுந்தேன் எம்புட்டுக் காலம் பொறுத்துக்குவாரு. கடுப்புல ஒருநா மேல கையவைச்சிட்டாரு. தாங்கிக்குவாளா கங்கம்மா, பஞ்சாயத்தையே கூட்டிட்டாளே. ஏதோ அந்த நேரத்துல டவுனுக்குப் போயிருந்த தங்கவேலு வரவும் வாத்தியாரு தல தப்பிச்சது 
ஒவ்வொரு வருசமும் அவனை வேற கிளாசுக்கு அனுப்ப அரிசி, கம்பு, கேவுரு, ஆடு, கோழி, காய்கறின்னு வாத்தியாருங்களுக்கு கங்கம்மா குடுத்தத வச்சே வாத்தியாரு குடும்பம் கடத் தெரு பக்கமே போவாம காலந் தள்ளுனாங்க. 
அப்பிடியும் இப்பிடியுமா பத்தாங் கிளாசு மட்டும் இளுத்துக்கிட்டு வந்துட்டா கங்கம்மா. அதுக்கப்புறம் எந்த வாத்திக்குக் கொண்டுபோய்க் குடுக்கணும்னு அவளுக்குந் தெரியல. அவனும் அதான் சாக்குன்னு ஊர சுத்தறதையே பொழப்பா வைச்சுக்கிட்டான். பெறவென்ன அவன் சுத்தறதுக்கு கங்கம்மாவோட செறுவாட்டுக் காசெல்லாங் காணாமப் போச்சி. பெத்த புள்ளதானன்னு கண்டுங்காணாம இருந்துட்டா கங்கம்மா. காத்தாயிக்கு கண்டுக்காமயிருக்க தலையெழுத்தா என்ன? அவ ஒறங்கையில முந்தானையில முடிஞ்சிருந்ததுல கைவைச்சிட்டான். அந்த சேதி தெரிஞ்ச மனுசன் புள்ளைன்னுகூடப் பாக்காம உண்டுயில்லன்னு பண்ணிட்டாரு. அன்னையிலேருந்து காத்தாயி ஏன் வேலைக்கு வரலன்னு கங்கம்மாவுக்கு மட்டுந்தான தெரியும்.
அப்பிடியிருந்த வந்தேன் ஒருநா சிங்கப்பூரு நாட்டுக்குப் போறேன்னான். சீமைக்கெல்லாம் வேணா ராசான்னு கங்கம்மாவும் கெஞ்சி கூத்தாடிப் பாத்துட்டா. பாவிமவன் ஆத்தாகாரி பேச்சைக் கேக்கலையே. இங்க சுத்தனது பத்தாதுன்னு அங்க வேற போய் சுத்தணுமான்னு அவங்கய்யன் கேட்டாக. பணங்கொடுக்கலன்னா பாசானத்தக் குடிச்சிடுவேன்னு ஆத்தாகாரிகிட்ட மல்லுக்கு நின்னான். அவளுந்தா என்ன பண்ணுவா? அளுதளுது மாய்ஞ்சதுல வூடே வெள்ளக்காடா ஆச்சி. தொலையுதுன்னு அந்த மனுசனும் பேங்குல காலுகடுக்க நின்னு ரெண்டு லச்சத்த எடுத்துக் குடுத்தாரு, கொஞ்ச நாளாவது நிம்மதியா இருப்போமுன்னுட்டு. போன ரெண்டுநா களிச்சி ஒருக்கா போனுல பேசினான், அத்தோட சரி.
நல்ல இரும்பு ஒலக்க மாதிரி கிண்ணுன்னு இருந்த கங்கம்மா நஞ்சத்துணியா படுக்கையில கெடக்குறத கண்கொண்டு பாக்க சகிக்கல தங்கவேலுக்கு. உள்ளூரு வைத்தியரு வந்து பாத்து குடுத்த மருந்தை கங்கம்மா பொறங்கையாலத் தள்ளிட்டா. டவுனு டாக்டருவ வண்டிவச்சி கூட்டியாந்து காட்டுனாரு புருசங்காரரு. அதுக்கும் மசியலையே கங்கம்மா. அவளோட புடிவாதந்தேன் தெரியுமே, புடிச்சா உடும்புப் புடிதாங்கிறது. இருந்தும் அவருந்தேன் என்னா பண்ண முடியும். அந்த சீமயென்ன கூப்புடற தூரத்துலயா இருக்கு?

 

"ஆராங்கானும் அது? கேட்டுக்கிட்டே வந்த மருது, "ஐயா நீங்களா... வாங்க....வாங்க...உக்காருங்கன்னு அவசரமா சொல்லி, கொடில கெடந்த துண்டால நாக்காலியத் தொடச்சிட்டு, "ஏ பொன்னாத்தா'ன்னு உள்ளப் பாத்துக் கூப்புட்டான். கைவேலையா இருந்த பொன்னாத்தா முந்தானையில களுத்தத் தொடைச்சிக்கிட்டே ஆரு வந்துருக்காவோ?ன்னு கேட்டுக்கிட்டே வந்தவ பாத்து, "ஐயாமாருங்களா'' ன்னு கையெடுத்துக் கும்புட்டா.
"ஐயா ஒங்க புண்ணியத்துல என்ற மவன் நல்லா இருக்கான்யா. நீங்க தப்பா எடுத்துக்கக்கூடாது. தம்பியக் காணோம்னுட்டு அம்மா படுறபாட்டக் காண முடியல. அதனாலதான் ஒங்ககிட்டக்கூட ஒரு வார்த்தக் கேக்காம இந்தப் பயகிட்ட சொல்லி, தம்பியப் பாத்து பேசச் சொல்லியிருக்கேன்யா'' தப்பு செஞ்சவனப்போல தலயக் குனிஞ்சுக்கிட்டு பேசற மருதமுத்த பாத்து தங்கவேலுக்கு வாய்ப் பேச்சுக் கௌம்பல. தோள்ல கெடந்த துண்ட எடுத்து மூஞ்சத் தொடைக்கிறாப்ல கண்ண தொடச்சிக்கிட்டு "நானும் அதுக்குத்தான் வந்தேன்'' ன்னு சொல்லி கையெடுத்து கும்பிட்டாக.
பதறிப்போயிட்டான் மருது. பொன்னாத்தா மட்டுமென்ன ஓடியாந்து, "நாங் கும்புடுற சாமியே''ன்னு கதறிட்டாளே. பின்னே என்ன, தங்கவேலு வூட்ல வேல செஞ்சவந்தேன் இந்த மருது. அவன் புள்ளைக்கி படிப்புல என்னா தெறமையோ தெரியல. வாத்திமாருங்களே மூக்குமேல வெரல வைக்கிறாப்ல படிச்சான். பத்தாம்புல நெறையா அதென்னவோ மார்க்குன்னு சொல்றாகளே அத வாங்குனான்னு சொல்லி என்னமோ சட்டிபேட்டாமே அதெல்லாம் கொடுத்தாகளே. கலக்டரு குடுத்த அதுக்கு கண்ணாடிபோட்டு அதோ அந்த அலமாரி மேலதான் மாட்டிவச்சிருக்கான். மனுசாள போட்டோ புடிச்சி மாட்டுறதுதான் தெரியும். வெறுந்தாள எதுக்கு மாட்டணும்னு பொன்னாத்தாவுக்கு ஒண்ணும் வெளங்கல. அப்பால டவுனுக்குப் போய்ப் படிக்கணும்னான். கூடமாட ஒத்தாசையா வேலைக்கி வாடான்னு மருது சொல்ல, "நான் படிக்கோணும் எப்பிடியாவது பள்ளிக்கோடம் அனுப்பு''ன்னு சொல்லிக் கரஞ்சான். வெவரந் தெரிஞ்ச தங்கவேலு ஐயாதேன், "நீ படிடா, நா ஒன்ன படிக்க வைக்கிறேன்னாரு. பெறவென்ன அதையும் நல்லாதேன் படிச்சான். தோ செவுத்துக்கு இந்தாண்ட பக்கம் மாட்டியிருக்கே அதுக்குக் குடுத்த சட்டிபேட்டு''. 
அதுக்கப்புறம் காலேசுக்குப் போவோணும்னான். அதுக்கெல்லாம் நெறையா பணம் ஆவும் ராசான்னு புருசன் பொஞ்சாதி ரெண்டுபேரும் மாத்திமாத்தி வேப்பல அடிச்சாக. அவனப் புடிச்ச அந்தப் பூடதான் ஒளியலயே. அந்த நேரம் பாத்து தங்கவேலு ஐயா ஆளனுப்பி கூட்டியாரச் சொன்னாரு. என்னுமோ ஏதோன்னு ஓடுனா, "மேக்கொண்டு என்னா படிக்கப்போறே?''ங்கிறாரு மனுசன். அன்னைக்கி மருது முடிவு பண்ணான் இனி கல்லுலவுள்ள சாமியக் கும்புடறதுல்லன்னு.
நாலு வருசம் அவம் படிச்சி முடிக்கிறதுக்குள்ள அவனுக்கு வேலையுங் கெடச்சுது. வேல கெடச்ச சந்தோசத்த வந்து சொன்ன மவன மருது பாத்த பார்வையிருக்கே இன்னிக்கி நெனைச்சாலும் பொன்னாத்தாவுக்கு குளுரு சொரமே வந்துரும். வெளங்காம முளிச்சப் புள்ளையாண்ட, "இங்கிட்டு ஏண்டா வந்து சொல்ற? வாளவச்ச சாமியாண்ட போய்ச் சொல்லுடா''ன்னு வெரட்டில்ல வுட்டுட்டாக.
அந்தக் கெலியிலதேன் பொறவு அவன் வேல செஞ்ச எடத்துலேருந்து அவுகளே சீமைக்கு அவனை அனுப்புறாகன்னு மவன் மொதல்ல தங்கவேலு ஐயாவாண்டதான போய் சொன்னான். தங்கவேலு ஐயாவுக்குப் பெரும தாங்கல. அன்னைக்கிக் கோளியடிச்சி கொளம்பு வைக்கல்ல சொன்னாக சம்சாரத்துகிட்ட. அந்தப் புண்ணியவதி மட்டும் என்ன சும்மாவா? தங்கம்னா தங்கம் அப்பிடியொரு தங்கம். வூட்டுல வேல செய்றவகதானேன்னு யாரையும் அதுந்து பேசமாட்டாகளே. அன்னிக்கி காத்தாயிகிட்ட அப்பிடி பேசினாகன்னா, புருசங்காரரு அடிச்ச அடியில புள்ளைக்கி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிட்டா என்னாவுங்கிற வெசனத்துலதேன். என்னயிருந்தாலும் பெத்தமனசில்லையா பின்ன?
பொன்னாத்தா கலக்கி குடுத்த மோர குடிச்சிட்டு தங்கவேலு ஏதும் பேசாம ஒக்காந்திருந்தாரு. அந்த நேரம் பாத்து மருதோட போனு அடிச்சது. அதப் பாத்த மருது "இந்தப் பயதேன் பேசுதேன்''ன்னு சொல்லி, "ஐயாவாண்ட போனக் குடுக்க, நீ பேசிட்டுக் குடு'' ன்னு ஐயா சொன்னாக. 
"நீங்களே பேசுங்கையா''ன்னுட்டு குடுத்துட்டான் மருது.
தங்கவேலு போன எடுத்தாரு. "அப்பா, நான் ஐயா மகன் வேலைக்கி வந்த கம்பனிக்குப் போயி விசாரிச்சேம்பா. அவுரு அங்க ஒரு வாரந்தேன் வேலைக்கி வந்தாராம். அதுக்கப்புறம் வரவேயில்லையாம். எங்க போனார்னு தெரியலப்பா, இதெல்லாம் நீங்க அவசரப்பட்டு ஐயாவாண்ட சொல்லிடாதீங்க, நான் இன்னும் நல்லா வெசாரிக்கிறேன்''னு வெசனத்தோட சொன்னான் மருது மவன். அதைக் கேட்ட தங்கவேலு பதறிப் போயிட்டாரு, "என்னப்பா சொல்றே''ன்னு கேக்கிறதுக்குள்ள கண்ணு தண்ணிய வுட்டுட்டாரு.
கொரல்லயிருந்த வித்யாசம் அவனுக்குத் தெரிஞ்சிடுச்சிபோல, "ஐயாவா அது?''ன்னு கேட்டான். அவசரப்பட்டு வாய வுட்டுட்டமேன்னு அவனுக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியல. மலங்க மலங்க முளிச்சாங்கிறதுதான் இந்தாண்ட கேக்கிறவுகளுக்கேத் தெரியுதே.
"ஐயா கவலைப் படாதீங்கைய்யா, நம்ம தம்பி நல்லாயிருக்குங்கைய்யா''ன்னு மருது சொன்னான். ஐயாகிட்டயிருந்து போன வாங்கி, "என்னடா சொன்ன?''ன்னு மெரட்டில்ல வுட்டுட்டான் மருது.
"ஐயான்னு தெரியாம சொல்லிட்டேம்பா''ன்னு கலங்கிப்போய் சொன்னான் மருதுமவன்.
"நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது. அந்த தேசத்துல நம்ம தம்பியத் தேடிக் கண்டுபிடிச்சிட்டுதான் எங்களாண்ட பேசணும்''ன்னுட்டு போன வச்சிட்டான் மருது.
"நீயேன் புள்ளைய கடிஞ்சுக்கிற?''ன்னு தங்கவேலு ஐயா சத்தம்போட்டாரு.
காலுபோன போக்குல போன மனுசன் ஒரு முடிவுக்கு வந்து வூடு திரும்பினாரு. "ஏ புள்ள டவுனுக்கு கௌம்பு''ன்னாரு. மனுசனுக்குக் கிறுக்குப் புடுச்சிடுச்சோன்னு பாத்தா கங்கம்மா. தலையுமில்லாமே வாலுமில்லாமே சொன்னா அவதேன் என்னா நெனைப்பா?
"டவுனுக்கு என்னாத்துக்கு?'' கூரையப் பாத்து கேட்டா.
"போட்டா புடிக்கணும். அதுக்குதேன்''
"புள்ளயக் காங்கலன்னு ஒருத்தி கெடந்து தவிக்கேன் கூறுகெட்டு பேசறியளே''
"அட... புத்திகெட்டவளே, இங்க ஒக்காந்துகிட்டு புள்ளையக் காணோம்னு ஒப்பாரி வைச்சிக்கிட்டிருந்தா என்னாவறது? அதேன் அந்த சீமைக்கே போயி தேடலாமுன்னு சொல்லுதேன்'' அன்னந்தண்ணி ஆகாரம்னு இல்லாம அப்பிடியேக் கெடக்குற பொஞ்சாதிக்கு வேற எதனா ஆயிட்டா என்ன பண்றதுங்குற வெசனம் அவருக்கு.
"நெசமாதேன் சொல்லுறீயளா?''
"ஆமா கௌம்பு''
அவயம் வச்சக் கோழி மாதிரி ஒறங்கிக் கெடந்த பொம்பளைக்கி அம்புட்டுத் தெம்பு எங்கிட்டிருந்து வந்துச்சோ, அது அந்த ஈசனுக்குதேன் வெளிச்சம். அவுரு தோட்டத்துப் பக்கம்போயி மூஞ்சி மோர கழுவிட்டு வர்றதுக்குள்ள இவ கௌம்பி நிக்கா. பாத்த மனுசன் ஒத்த வாத்த பேசலையே. டவுனுக்குப் போய் போட்டா புடிச்ச பெறவு எப்ப போவுணும்?ங்கிறா.
இந்தப் போட்டாவக் குடுத்து "பாசுபோட்டு எடுக்கோணும், அப்பாலதேன் ஏரோபிளேனுக்கு டிக்கட்டு வாங்கமுடியும்''ன்னாரு.
கங்கம்மா மூஞ்சி வெளக்கு அணஞ்சிபோன வூடு மாதிரி ஆயிப்போச்சி. இருந்தாலும் மனசத் தேத்திக்கிட்டு, மவன் கெடச்சதோட அந்த சீம மண்ணுலேயே சாமிக்கு முடி கொடுக்குறேன்னு வேண்டிக்கிட்டா. அவ புள்ளையக் காணாத இந்த நாளுக்குள்ள அவ வேண்டாத சாமியுமில்லே. செய்யணும்னு சொல்லாத பரிகாரமுமில்லே. புள்ளைக்கி பொசுக்குன்னு ஒரு சொரம் வந்தாலே மகமாயிக்கி நேந்துகிட்டு நெருப்புசட்டி தூக்கி அங்க பெரதச்சன பண்றவளாச்சே. இப்ப எப்பிடி சும்மாயிருப்பா. பெறவுதேன் அவ தொண்டக்குளியில கஞ்சி எறங்குச்சி. டவுனு ஆசுபத்திரிக்குக் கூட்டியாந்து, என்னுமோ சத்து தண்ணியாமே குளுக்கோசுன்னு அத கொளாயில மாட்டி ஊசி குத்தி ஏத்துனாக. வாயத் தெறக்கலையே கங்கம்மா. இதுவே வேற சமயன்னா ஊசியப் பாத்ததும் கத்தி ஊரயே ஒண்ணா கூட்டியிருப்பாளே.

 

ஒருநா வூட்டாண்ட போலீசுக்காரவ வரவும் என்னுமோ ஏதோன்னு பதறிப்போயிட்டா கங்கம்மா. என்ற புள்ளைக்கி என்னாச்சின்னு ஒப்பாரி வச்சிட்டா. வந்திருந்தவகளுக்கு ஏதும் வெளங்கல. பாசுபோட்டுக்காக வெசாரிக்க வந்ததா சொன்னாக. அத அவ எங்க காது குடுத்துக் கேட்டா? பெறவு புருசன்காரரு சத்தம் போட்ட பிந்திதான அடங்குனா. அப்பாலதான அவளுக்கு வெவரமே தெரிஞ்சது.
ஒரு வாரத்துல பாசுபோட்டு வரவும் புருசன்காரரு டிக்கட்ட போட்டுட்டு வந்துட்டாக. ரெண்டுபேரும் பட்டணத்துக்கு போனாக. பிளேனு போற டேசனுக்கு போனாக்கா அங்கிட்டிருந்த படிக்கட்டப் பாத்துட்டு கால வைக்கமாட்டேன்னுட்டா. "இதென்ன அதிசயமாயிருக்கு, படிக்கட்டு நவுருது''ன்னு. "அட இதுக்கேயிப்பிடி சொன்னா எப்பிடி புள்ள, சிங்கப்பூருல எல்லா எடத்திலயும் இந்தப் படிக்கட்டுதானாம்''னு சொன்னவரு கையப் புடிச்சில்ல படியில நிக்க வச்சாரு. வெடவெடத்துப் போயில்ல வந்தா கங்கம்மா. ஒருவழியா ஏரோபிளேன்ல ஏறி ஒக்காந்ததும், பக்கத்துல இருந்த பையனாண்ட "என்ற புள்ளைய காணோம் சாமி, அவனைத் தேடித்தான் போறோம்''னா. 
"அப்படியா'ன்னவன் போன்லயிருந்த பொண்ணையே பாத்துக்கிட்டிருந்தான். 
"சீமைக்குப் போயி ஆயி அப்பனுக்குப் போனப்போட்டு பேசு ராசா''ன்னா அவனாண்ட. அத்தோட அவன் காதுல ஒயர மாட்டிக்கிட்டு கண்ண மூடிட்டான்ல. ஏரோபிளேன்ல தவிச்ச வாய்க்குத் தண்ணி தருமே அந்தப் புள்ளையாண்ட, "தாயி என்ற புள்ளைய காணோம்மா, அதுக்குதேன் அந்த நாட்டுக்குப் போறேன்''னா. அந்த திமிரு புடிச்ச பொண்ணு தலைய மட்டும் ஆட்டிட்டுப்போச்சி.
ஒருவழியா வந்து சேர்ந்தாக. கண்ணாடிக்கு அப்பால நிக்கிறது ஆரு? அதோ கையக்காட்டறது மருது மவனா, அட ஆமாம். அவந்தேன் காருல கூட்டிக்கிட்டு போனான் அவன் ரூமுக்கு. ரெண்டுவேரையும் குளிச்சிட்டு சாப்பிட சொன்ன பிறகு அந்தக் கம்பனிக்கு அழைச்சிக்கிட்டுப் போனான். நல்லவேளையா அங்க வாசல்ல நெத்தியில விபூதியோட ஒரு மவராசன் ஒக்காந்திருந்தாரு. அவருகிட்டப் போயி மவன காங்கலன்னு சொன்னா கங்கம்மா. அவுரு உள்ளபோயி கேளுங்கன்னாரு. அங்கிருந்தவுக பேசுறது ஆருக்கு வெளங்குது? மருது மவன்தேன் அவுக சொன்னதக் கேட்டு, அவுக போலீசுல சொல்லியிருக்காங்களாம், சீக்கிரம் கண்டு புடிச்சிடுவாங்களாம். "நாட்டவுட்டு வெளிய எங்கியும் போகலங்கிறாங்க'னான்.
ரூமுக்கு வந்த பொறவு மருதுமவன், "ஐயா எனக்கு ஒரு யோசனையிருக்கு, நீங்க தப்பா எடுத்துக்கக்கூடாது''ன்னான்.
"நீ சொன்னா சரியாத்தேன் இருக்கும் சொல்லுயா''
"பேசுபுக்குன்னு ஒண்ணு இருக்குய்யா, நாம அதுல ஒரு சேதியப் போட்டா எல்லாருமே பாப்பாங்க. அப்ப ஒருத்தர் கண்ணுல படாட்டியும் ஒருத்தர் கண்ணுல படலாமுல்ல''ன்னான்.
நல்ல யோசனைதான். இவ்ளோ நாளா இதையேன் பண்ணல?
"ஒங்களுக்குத்தான் தெரியுமே ஐயா, அவருக்கு என்னக்கண்டாலே பிடிக்காதுன்னு. அதுக்கு பயந்துதான்யா அப்பிடி பண்ணல''
"அவன் கெடக்கான், நீ பண்ணு''
அவனும் அப்படியே செஞ்சான். பேசுபுக்குல போட்டு ரெண்டு நாளாச்சி தகவல் ஒண்ணுமில்லே. 
"ஏனுங்க என்ற புள்ளைய எங்கனா பாத்தியேளா?'' கங்கம்மாவும் போறவ வர்றவககிட்டல்லாம் கேட்டுக் கேட்டு ஓய்ஞ்சி போயிட்டா.
"இந்த பொம்பளப் புள்ளைவோ கூட கொஞ்சம் துணிய போடக்கூடாதோ?'' அதுக்குவேற வெசனப்
படறா கங்கம்மா.
"சைனீஸ்தான் அப்படி உடுத்துவாங்கம்மா'' மருது மவன்தேன் சமாதானம் சொல்லுவான்.
"ஆராயிருந்தா என்னங்காணும் பாக்குறதுக்கு நல்லாவாயிருக்கு'' அலுத்துக்குவா கங்கம்மா.
மூணாவது நாள் பன்னண்டு மணிவாக்குல மருது மவன் அரக்கபறக்க ஓடியாந்தான். ஒரு கடையில சாப்பாடு வாங்குறதுக்காக வந்திருக்கிறவரு அவுரு மாதிரி இருக்குன்னு போனு வந்ததுன்னான். அவ்ளோதான் போட்டது போட்டபடி வண்டி புடிச்சி அந்த எடத்துக்கு ஓடுனாக. 
அட, ஆமா அவனேதேன்.
"என்ற ராசா'' ன்னு அவனப் புடிச்சிக்கிட்டா கங்கம்மா. 
அத்தோட அவன் "ஆத்தா' ன்னு கதறிக்கிட்டு கட்டிப்புடிச்சி அழுதான். அப்புறந்தேன் பக்கத்துலயிருந்த வர பாத்தான். அப்பான்னு அவரு கையப்புடிச்சிக்கிட்டு கலங்கிட்டான். தங்கவேலுவுக்கு ஒண்ணும் புரியல. மவன்காரன் தன்ன அப்பான்னு கூப்புட்டு எம்புட்டுக்காலம் ஆவுதுன்னு ரோசன பண்ணாரு.
"என்ன மன்னிச்சிக்கோங்க, வேல கஸ்டமா இருந்திச்சி. அதான் செய்ய பயந்துகிட்டு ஓடிட்டேன். அப்புறம் என்ன பண்றதுன்னும் தெரியல. எங்கியும் போகவும் வழியில்லே. போலீசு புடிச்சுக்குமேன்னு பயந்து பயந்து ஒளிஞ்சிக்கிட்டிருந்தேன்''
"நீங்க ஏதும் தப்பு செய்யலையே, அப்புறம் ஏன் பயப்படுறீங்க?'' கேட்டான் மருது மவன்.
"இந்த மாதிரி ஓடிட்டா ஜெயில்லப் போட்டு, பெரம்பால அடிப்பாங்களாமே''
"அதெல்லாம் தப்பு செஞ்சாதான், உங்கள ஒண்ணும் பண்ணமாட்டாங்க''ன்னு தெகிரியம் கொடுத்தான் மருது மவன். நேரா அவன கம்பெனிக்கு கூட்டிக்கிட்டுப் போனா, அங்க போனதோட அவங்ககிட்ட அங்கேயே ஒழுங்கா வேல செய்யறேன்னு சொன்னான். 
"நீதானே வேலையிலேருந்து போயிட்டேன்னு கேட்டாக. அது தெரியாம செஞ்சிட்டேன், இனி அப்பிடில்லாம் செய்யமாட்டேன் மன்னிச்சிடுங்க''ன்னு கால்ல வுளுவாக் கொறையா கேட்டுக்கிட்டான். மொதத்தடவையா இருக்கிறதால மன்னிக்கிறோமுன்னு சொல்லி ஏத்துக்கிட்டாங்க மொதலாளி.
புருஷன் பொஞ்சாதிக்கு ஏதும் வெளங்கல. மருது மவந்தேன் வெசயத்த சொன்னான். " " " நெசமாவா ராசா''ன்னா கங்கம்மா. அவங்கய்யன் மூஞ்சிய பாக்கணுமே. சந்தோசம்னா சந்தோசம் அம்புட்டு சந்தோசம்.
"ஆமா, இந்த ஒரு மாசமா இருக்க எடம், சாப்பாடு எல்லாத்துக்கும் அப்பிடியொரு கஷ்டப்பட்டுட்டேன். நான் ஒழுங்கா ஒளைச்சிருந்தா எனக்கு இப்பிடியொரு நெலம வந்திருக்காதுல்ல''
தங்கவேலுக்கு மனசு குளுந்து போவ, கங்கம்மாவப்பத்தி கேக்கணுமா? என்ற மவனுக்கு கண்ணுப்பட்டுப்போகுமேன்னு சொல்லி சுத்திப்போட மண்ண பாக்குறா, எங்கிட்டும் மண்ணையே காங்கல.
பெறவு என்ன சிங்கப்பூர சுத்திக் காமிச்சாக. நேந்துக்கிட்டேன்னு சொல்லி தைப்பூசத்தன்னைக்கி அவ முடி குடுத்தது மட்டுமில்லாம, அந்த மனுசனையும் குடுக்க வச்சிட்டால்ல. பாலுகொடம், காவடி, அலகு குத்துறதுன்னு ஒண்ணையும் உடலையே கங்கம்மா. இருக்காதா பின்னே. அவ இத்தன வருஷம் கும்புட்ட சாமியில இந்த சிங்கப்பூரு சாமிதான கண்ண தொறந்து பாத்துச்சி.
சிங்கப்பூரு மண்ணோட பெருமையதான் கங்கம்மா வாய் ஓயாம பேசிக்கிட்டிருக்கா." ரயிலு வண்டியாயிருந்தா என்ன? பஸ்ஸô இருந்தா என்ன? அந்நிய சனங்களா இருந்தாலும் நம்ம பாத்ததோட ஒக்காந்திருக்குறவக எழுந்தி குந்த எடம் குடுக்குதுகளே. இதுவே நம்மூருன்னா நடக்குமா? சேப்பா ஒருபுள்ள வந்தா அதுகளுக்குதானே எடம் குடுக்குதுக எளவட்டப் பயலுக''
"எம்மாங் கூட்டமாயிருந்தா என்ன? எங்கியாயிருந்தா என்ன? கீவரிசையில நின்னுதான போகுதுக. நா முந்தி நீ முந்திங்கிற பளக்கமேயில்லியே''
"இம்மா ஒசர செருப்பப் போட்டுக்கிட்டு எப்பிடி நடக்குதுவோ'' ஆன்னு அவ பாத்துக்கிட்டு நிக்கையிலே வூட்டுக்காரரும் ரெண்டு பயலுவளும் அம்புட்டுத் தூரம் போயிருப்பாக. இப்பல்லாம் நவுர்ற படிக்கட்டப் பாத்து பயப்படறதில்லையே அவ.
"ஏனுங்க ஊருக்குப் போறச்சே இந்த பேசுபுக்கோ பேசாதபுக்கோ அத்த ஒண்ணு வாங்கிட்டுப் போலாமுங்களா?''
"அதெதுக்கு ஒனக்கு?''
"சுத்த வெவரெங் கெட்ட மனுசனா இருக்கீய? நம்மூட்ட வெடக்கோளி ஒண்ணு மூணுமாசம் முந்தி காணாவ போச்சில்லே...'' 


மணிமாலா மதியழகன்

 

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெடக்கோழி காணாமல் போனதையும் பேஸ்புக்கில போட்டு கண்டு பிடிக்க போறாவாம் கங்கம்மா..... tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.