Jump to content

சுமந்திரனுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

இராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கும் திரு சுமந்திரன் அவர்களுக்கு
.
திரு சுமந்திரனுக்கு, நீங்கள் அயராத உழைப்பாளர் என்றும் ஆற்றல் மிக்கவர் என்றும் தமிழரசுக் கட்சி தோழர்கள் மத்தியில் கருத்துள்ளது. உங்களைப்போல டாக்டர் நாகநாதன் திருசெல்வம் பிற்காலத்தில் குமார் பொன்னம்பலம் போன்ற கொழும்புத் தமிழர்கள் பலர் கடந்த காலத்தில் தமிழர் விடுதலைக்கு பெரும் பணி ஆற்றியுள்ளனர். அவர்களுள் எப்போதும் த்மிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவுக்கும் கட்ச்சிக்கும் பணிந்து செயல்ப்பட்ட டாக்டர் நாகநாதன் மட்டும் மறந்தும் தலைமைக்கோ அமைச்சுப் பதவிகளுக்கோ ஒருபோதும் குறிவைக்காத உட்கட்சி ஜனநாயகத்தை பேணும் போராளியாக இருந்தார். குமார் பொன்னம்பலம் அவர்கள் விடுதலைப்புலிகளின் காலக்கட்டத்தில் தனது கடந்தகால அரசியல் போக்குகளில் இருந்து விலகி மிக அர்பணிப்போடு செயல்பட்டார். இந்த வகையில் டாக்டர் நாகநாதனும் பிற்கால குமார் பொன்னம்பலமும் கொழும்புத் தமிழருக்கும் கொழும்புக்கு அப்பால் பிற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்ககளுக்கும் மக்கள் ஆதரவுடன் கழத்தில் செயல்படும் முன்னணி தலமைக்கு கட்டுபட்டு இயங்க வேண்டும் என்கிற படிப்பினையை விட்டுச் சென்றுள்ளனர்.

.

திரு சுமந்திரன் அவர்களே, இன்றைய காலகட்டத்தில் தமிழரின் நாடாளுமன்ற அரசியலில் உங்கள் பணியை ஆற்றலை விபரம் தெரிந்த யாரும் நிராகரிக்கவில்லை. ஆனால் கட்சித் தலைமையைக் கட்டுப்படுத்தி பாராழுமன்ற உறுப்பினர்களைக்கூட அன்னியப்படுத்தி சுயநலன்களுக்காக கொழும்பு அதிகார பீடங்களோடு சமரம் செய்துகொண்ட ஜி.ஜி.பொன்னம்பலம் திருச்செல்வம் பாதையில் நீங்களும் சென்றுவிடக்கூடுமோ என்கிற அச்சமும் விமர்சனமும் பலருக்கு உள்ளது. அதுதான் உங்கள் மீதும் வைக்கபடுகிற ஒரே குற்றச்சாட்டாக உள்ளது.

.

நீங்கள் உட்பட விக்னேஸ்வரன் கஜேந்திரன் பொன்னம்பலம் போன்ற கொழும்புத் தமிழ் தலைவர்களின் ஆக்கமுள்ல விடுதலைப் பணிகளை யாரும் எதிர்க்கவில்லை. ஆயினும் கொழும்பு தமிழ் தலைவர்களுக்கு ஈழத் தமிழர் விடுதலை கொழும்பில் உள்ள தங்கள் நலன்களைக் காப்பாற்றுவது என்கிற இரட்டை நலன்கள் உள்ளது. மேலதிகமாக ம்முதல் அமைச்சர் விக்னேஸ்வரனைப்பொறுத்து தமிழர்களின் முதல் எதிரிகளாக கருதப்படுகிற அணியினருடன் திமண பந்தம் உள்ளது. மேலும் நமது முதல் அமைச்சர் கொலை பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆழாகிச் சிறையில் இருக்கும் பரமானந்தா என்கிற அசுத்த ஜீவனின் விடுதலைக்காக தனது பதவியை துஸ்பிரயோகம் செய்கிறது உலக அரங்கில் ஈழத் தமிழரை அவமானப் படுத்துவதாக உள்ளது. அதேபோல கஜேந்திரன் பொன்னம்பலம் கிழக்குப் பற்றிய எந்த அறிவும் செல்வாக்கும் இல்லாமல் தோல்வி நிச்சயம் என தெரிந்தும் தமிழ் வாக்குகளை சிதறடித்து சம்பந்தரை அழிக்கவேண்டுமென்கிற வன்மத்துடன் திருமலையில் போட்டியிட்டார். அதனால் சம்பந்தருக்கு எதிராக ஒரு தமிழரை நிறுத்தி தமிழர்களைத் தோற்கடிக்கும் மகிந்தவின் திட்டத்துக்கு அவசியமில்லாமல் போனது. அதனால் இரண்டு தமிழர் வெற்றிபெறவேண்டிய மயிரிழையில் சம்பந்தர் மட்டும் வென்றபோதும் தமிழர்கள் தோற்கடிக்கபட்டனர். உடுவில் மகளிர் கல்லூரிதொடர்பாக மத்தியஸ்துவம் வகிக்க வேண்டிய நீங்கள் பாரபட்சமாக நடந்துகொண்டமையும் கவலை தருவாதாக இருந்தது. வரலாற்றின் படிப்பனைகள் கொழும்பு தமிழ் தலைவர்கள் டாக்டர் நாகநாதன்போல தலைமைக்கு ஆசைப்படாமல் கட்ச்சிக்குக் கட்டுப்பட்டும் கட்சித் தலைவர்களை அனுசரித்தும் செயல்படவேண்டுமென உணர்த்துகிறது.

திரு சுமந்திரன் அவர்களே,

கட்சிக்குவெளியே அதிகாரங்களை கையகப்படுத்தி இயங்குகிறீர்கள் என்கிற சந்தேகம் மட்டுமே உள்ளது. அத்தகைய சந்தேகத்துக்கு இடமழிக்காமல் நீங்கள் தொடர்ந்தும் பணியாற்றவேண்டும் என்பதே தமிழரசுக்கட்சிக்கு உள்ளும் வெளியிலும் உள்ள பெரும்பாலான தமிழர்களது எதிர்பார்ப்பாக உள்ளது. விடுதலைக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகளில் உங்கள் அறிவும் செயல் திறனும்பற்றி யாருக்கும் சந்தேகமில்லை.
கட்சிக்கட்டுபட்ட வகையில் உங்கள் உழைப்பு தமிழர்களது பாராளுமன்ற அரசியலுக்கு அவசியமான ஒரு தருணத்தில் நீங்கள் ராஜினாமா பற்றிப் பேசுவதை ஏற்றுகொள்ளமுடியாது. - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் அவர்கள் சுமந்திரனுக்காகச் சங்கு ஊதுகிறார். தமழர் பிரதிநிதிகளில் அதிரடிப்படையின் பாதுகாப்புடன் வடக்குக் கிழக்கில் உலாவும் ஒருவர் இவர் மட்டும்தான் அந்த அளவுக்கு இவரது கேவலம். பரமானந்தாவின் சீடன் என விக்கியரை அழைக்கும் ஜெயபாலன் சுமந்திரன் தனது மனைவி இல்லாத ஒரு பெண்ணைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் படம் சமூகவலைத்தளங்களில் உலாவருவதை மறந்திட்டார்,  

சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொரர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எனும் வகையில் ஆவனசெய்யுமாறு மன்றாடிய முன்னைநாள் போராளிகளது கருத்தினைச் செவிமடுக்காது காலுக்குமேல் கால் போட்டுக்கொண்டு செய்திப்பத்திரிகை வாசிச்ச சம்பந்தர் தமிழர் தலைவராம். வடமராட்சியில் தான் வெல்லுவதற்காக புறியாணிப்பொட்டலமும் குவாட்டரும் கொடுத்த சுமந்திரன் தவிர அதிகூடிய வாக்குகள் பெறுவதற்காக சுரேஸ் பிரேமச்சந்திரனது வெற்றியை இரணிலுடன் சேர்ந்து பறிச்ச சுமந்திரன் அவரை ஜெயபாலம் ஒரு அரசியல்வாதியாகவும்  தமிழர்க்கு வராது வந்த மாமணியாகவும் வர்ணிப்பது சிரிப்பாக இருக்கிறது. 

 

Link to comment
Share on other sites

சுமந்திரனதும் சம்பந்தரதும் கட்சியின் தான் தோன்றித்தனமான போக்கால் பலரும் கூட்டமைப்பில் சேர முடியாமலும் விலக்கப்பட்டும் இருக்க முக்கிய கார\னமானவர்கள். கடைசி தமிழரின் நிலை கண்டாவது ஏதோ ஒரு அடிப்படையில் இணைந்து செயற்பட முடியாமல் முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் இந்த இருவரும் தான்.


கிழக்கின் பிறந்து வளர்ந்த சம்பந்தர்  தனது தொகுதியில்  உள்ள சம்பூருக்கு எததனை தடவை சென்றவர் என கூறுங்கள் பார்க்கலாம் திரு ஜெயபாலன் அவர்களே!!!!

தமிழர்களுக்கு சேவை செய்ய என வந்தால் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு  மேற்கு மலையகம் என பார்ப்பதில்லை. நீங்கள் அடிக்கடி கிழக்கு, கொழும்பு என விழிப்பது ஏனோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

ஆயிரம் மலர்கள் மலரட்டும். என் கடிதம் தொடர்பாக கருத்தெழுதிய எழுஞாயிறுக்கும் நுணாவிலானுகும் நன்றி. இன்னும் பலர்து கருத்துக்களை அறிய விரும்புகிறேன். சரிகளுக்காக உரத்து வாதிடுவதுபோல என் தரப்புப் பிழைகளை திருத்துவதிலும் எனக்குத் தயக்கமில்லை பொதுக்கருத்துக்கு எப்பவும் தலை வணங்கிறவன நான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயசு போயிட்டா எல்லாரும் ஒரே மாதிரியே ஆகிடுறாங்க.

கடிதம் எழுதிகள்... கட்டுமரம்.. சங்கரி.. வரிசையில்... இவரும் சேர்ந்திட்டார்.

எல்லாரும் தங்கள் இருப்பினை வெளிக்காட்ட இப்படி அடிக்கடி கடிதம் எழுத வேண்டி இருக்குது போல.

2009 மே க்குப் பின் தலைமையின்றி.. வழிகாட்டல் இன்றி தவிக்கு தமிழ் மக்களாகிய  முயல்கள் மத்தியில் சிலர் நல்லாவே தவிச்ச முயல் அடிக்கினம்.. என்பது மட்டும் வெளிப்படை. ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயா அண்ணர் தங்களை எப்போதும் நான் திட்டமிட்டு மறுத்துப்பேச விருப்பம் இல்லாதவன், ஆனால் முள்ளிவாய்கலுடன் விடுதலைப்புலிகளது இராணுவப்பிரசன்னம் முடிந்தபோது தலைவர் நிறையப் பிழைவிட்டுவிட்டார் பேசாமல் இப்போது கிடைக்கக்கூடியதைப்பெற்றுக்கொண்டு மேலதிகமாகக் கிடைப்பதற்காகப் போராட அவர் பலமான நிலையை எதிர்காலத்தில் கட்டமைத்திருக்கலாம் ஆனால் அவரது தற்துணிச்சல் சொல் தவறாமை நேர்மை இவைகளே எமதும் விடுதலைப்புலிகளதும் தற்போதைய நிலைக்குக் காரணம் என் நான் பலருடன் உரையாடியதுண்டு காலம் எனது கருத்தினைத் தவறென உணத்தியது, இன்று எமது அரசியல் சக்திகள் இன்னுமொன்றுடன் பொருத்திப்பார்ப்பதற்கான உரைகல்லாக அவர்கள் தம்மை ஆக்கிவிட்டு அகன்றுவிட்டனர் அதுவரை அவர்களது கொண்ட கொள்கை தவறாமை என்பதே முன்னிற்கிறது அவர்களுடன் ஒப்பிட்டே அவர்களைப் பார்த்து வளர்ந்த நான் எதையும் மதிப்பிடவேண்டியுள்ளது. மிகப்பெரிய தியாகங்களைச் செய்த எங்கள் இனத்தின் மூதாதையராக அவர்கள் இருக்கும்பட்சத்தில் எமக்கான எதிர்கால அரசியலைச் செய்வோர் அவர்களைவிட கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக இருந்திடல்வேண்டும் என நான் நினைப்பதில் தவறேதும் இல்லையே. 

சிறீமாவோ பண்டார நாயக்கா பாராளுமன்றப் பதவிக்காலத்தை இருவருடங்களுக்கு நீடித்தபோது தமிழ் மக்கள் எனக்கு ஐந்துவருடங்களே பாராளுமன்ற உருப்பினராக இருப்பதற்கு அனுமதி தந்தார்கள் அதனால் நான் பதவி விலகுகிறேன் இன்னுமொரு தேர்தலைச் சந்திக்கிறேன் எனக்கூறி அதன்படிநடந்த தந்தை செல்வாவின் ஜனநாயகத்தைக் கண்டு வளர்ந்தவர்கள் நாம் நீங்கள் உட்படவே.

பிரபாகர நேர்மை இல்லையேல் எஸ் ஜே வி செல்வநாயக நேர்மை இதில் எதையாவது கடைப்பிடிக்க எதிர்பார்ப்பது தவறில்லையே

தண்ணீரோ கண்ணிரோ விட்டு வளக்கவில்லை இச்சுதத்திரத்திற்கான வேள்வித்தீயை செந்நீர் விட்டெல்லொ வளர்த்தோம். 

Link to comment
Share on other sites

Elugnajiru நலமா? இங்கு இருவர் கருத்துக்கூறியுள்ளீர்கள். இருவருக்கும் நன்றி. உங்களைப்போலவே நுணாவிலானும் பொதுவாக நிலவும் சந்தேகங்களை முன்வைத்திருக்கிறார். குறைந்தது மூவராவது கருத்துச் சொன்னபிறகு பதில் எழுதலாம் என காத்திருக்கிறேன். தொடர்ந்து விவாதிக்கவும்

 

Link to comment
Share on other sites

அய்யா,

உங்கள் கடிதத்தினை வாசித்தேன் சில விளக்கங்களை கேட்க முனைகிறேன். நீங்கள் ஆக குறைந்தது மூவராவது விமர்சனம் வைத்தால் மட்டுமே பதிலளிப்பேன் என்றமையால் வேறு வழியில்லாது நான் இந்த கருத்தை பதிவிடுகிறேன்.

அடியேன் அரசியலில் மற்றைய சாதாரண தமிழர்கள் போலவே ஒரு பேதை என்பதை மனதில் நிறுத்தி பதிலளியுங்கள்.

நீங்கள் மேலே எழுதிய கடிதம் ஒரு பொதுவெளி திறந்த மடலா அல்லது திரு. சுமந்த்திரனுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலா.?

திரு. சுமந்திரன் இதுவரை தமிழரின் அரசியல் தீர்வுக்காக ஆற்றிய பங்களிப்பின் முக்கிய பகுதிகளை விவரிப்பீர்களா .?? (முக்கியமாக அரசியல் கைதிகள் விடுவிப்பு உட்பட)

திரு. சுமந்திரனின் இராஜினாமா பற்றி இதுவரை அவர்சார்ந்த கட்சியே எந்தவித அறிக்கையும் விடாதவிடுத்து உங்கள் மடலின் உள்நோக்கம் என்ன .?

தமிழரின் விடுதலை திரு. சுமந்திரனின் கைகளில் தான் தங்கியுள்ளது என்ற உங்கள் கருத்தின் அடிப்படையை விளங்கப்படுத்த முடியுமா.?

மேலே நான் குறிப்பிட்ட கருத்துகள் அல்லது கேள்விகளால் உங்கள் மனம் ஏதேனும் காயப்பட்டிருந்தால் மன்னிக்க.

நன்றி.

 

ஆவலுடன்

Link to comment
Share on other sites

சுமந்திரனை வைத்து தமிழர்களின் உரிமைகளுக்காக, நீதி கிடைக்க அயராது உரத்து குரல் கொடுக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனை அடக்கிவிடலாம் என்று கனவு கண்ட தமிழினப் படுகொலைகாரர்களுக்கு சுமந்திரனின் விலகல் நாடகம் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது என்பது தெளிவாகிறது.   

 

On 6/11/2018 at 12:51 PM, poet said:

முதல் அமைச்சர் விக்னேஸ்வரனைப்பொறுத்து தமிழர்களின் முதல் எதிரிகளாக கருதப்படுகிற அணியினருடன் திமண பந்தம் உள்ளது. மேலும் நமது முதல் அமைச்சர் கொலை பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆழாகிச் சிறையில் இருக்கும் பரமானந்தா என்கிற அசுத்த ஜீவனின் விடுதலைக்காக தனது பதவியை துஸ்பிரயோகம் செய்கிறது

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் ஏற்பாடு செய்த திருமணங்கள் அல்ல என்றும், வயதுக்கு வந்த இளசுகள் செய்யும் காதல் திருமணங்கள் அவரவர் உரிமை  என்று தெரிந்தும், அவர் மீது வசைபாட வேறு வழியில்லை என்ற கடும் வறட்சி இந்த வரிகளில் பிரகாசமாக தெரிகிறது! 

மேலும் பரமானந்தா என்ற இலங்கை சுவாமி சிறையில் அடைக்கப்பட்டது பற்றி மறுபக்க கதைகள் பலவுண்டு. உலகின் மிகமிகமோசமான நீதித்துறை உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பரமானந்தா மேல் நம்பிக்கை வைப்பது / வைக்காமல் இருப்பது அவரவர் உரிமை. அதில் அதிகார துஸ்பிரயோகம் என்ற பொய் வாந்தி எழுதியவரின் கீழான மனநிலையை பிரகாசமாக காட்டுகிறது.

இவ்வளவு வில்லங்கப்பட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்படும் முதலமைச்சர் மீது குறைகாணும் மனநிலை உள்ள நீங்கள்,

  •  ஈழமண்ணில் அமைதிப்படை என்ற பெயரில் பாலியல் பலாத்காரங்களை ஆயுத முனையில் அரங்கேற்றிய இந்திய இராணுவ பயங்கரவாதிகளை இயக்கும் இந்திய கொலைகார அரசுக்கு துதி பாடும் பேர்வழிகளை என்னவென்று சொல்லப்போகிறீர்கள்?  
  •  ஈழமண்ணில் அமைதிப்படை என்ற பெயரில் பலபடுகொலைகளை அரங்கேற்றிய இந்திய இராணுவ பயங்கரவாதிகளை இயக்கும் இந்திய போர்க்குற்றவாளி அரசுக்கு காவடி எடுக்கும் பேர்வழிகளை என்னவென்று சொல்லப்போகிறீர்கள்?  
  •  ஈழமண்ணில் அமைதிப்படை என்ற பெயரில் பல கொள்ளைகளை அரங்கேற்றிய, பத்திரிகைகளை அழித்த, வைத்தியர்களையும் நோயாளிகளையும் வைத்தியசாலையினுள் படுகொலை செய்த  இந்திய இராணுவ கயவர்களை இயக்கும் இந்திய காட்டுமிராண்டி அரசுக்கு ஜால்றா போடும் பேர்வழிகளை என்னவென்று சொல்லப்போகிறீர்கள்?  
  •  ஈழமண்ணில் திட்டமிட்ட தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றி வரும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கு பக்கத்துணையாக இருந்து கொண்டிருக்கும் இந்திய அரச பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவாக இயங்கும் ஒட்டுண்ணி கும்பலை பற்றி என்ன சொல்லப்போகிறீர்கள்?

 

Link to comment
Share on other sites

போர்க்காலம் 1996ல் என ஞாபகம் விடுதலைப்புலிகள் அமைப்பின் உழவுப்பிரிவு  ”நீங்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் என தலைவர் கூறுகிறார். நீங்கள் எங்களை குறிப்பாக முஸ்லிம் விவகாரங்களில் விமர்சிக்கின்றீர்கள். நீங்கள்  தாராளமாக விமர்சிக்கலாம்.  உங்களிடமிருந்து அரசியல் இராணுவ விடயங்களில்  விமர்சன அறிக்கைகளை பெறும்படி தலைவர் சொல்லியிருக்கிறார்.” எனக்கேட்டுக்கொண்டார்கள். அத்தோடு வெளிவிவகாரம் தொடர்பான குறித்த சில பணிகளை தமது வெளிநாட்டுக் கிழைகளோடு சம்பந்தப்படாமல் செய்யும்படி கேட்டார்கள். இதுதனால் திரு கஸ்றோ அவர்களோடு நேரடி முரண்பாடு ஏற்பட்டது.   வன்னியில் நிலந்தன் தலைமையில் நடந்த கூட்டத்தில்  திரு கஸ்றோ அவர்களை மிக கடுமையாக விமர்சித்தேன். மேற்படி கூட்டத்துக்கு பாலகுமாரன் உட்பட விடுதலைபுலிகளின் முக்கியஸ்தர் சிலர் வந்திருந்தனர். திரு கஸ்றோ அவர்கள் என்னை சிறைபடுத்த முனைந்தபோதும் என் பாதுகாப்பையும் விமர்சன உரிமையையும் வாக்களித்தபடி இயக்கம் பாதுகாத்தது.    இயக்கம் அளிக்க முன்வந்த வள உதவிகளை நான் ஏற்றுக்கொள்ள மறுத்தபோதும் இலங்கையிலும் வெளியிலும் மிகுந்த கரிசனையுடன்  என் பாதுகாப்பை இயக்கம் உறுதிப்படுத்தியது.  .  இவைபற்றி  வாழும் தலைவர்கள் அறிவார்கள். விரிவாக இராணுவ வரலாறு எழுதும்போது விரிவாக எழுதுவேன். என் விமர்சன உரிமையை நான் எப்போதும் எங்கும் விட்டுகொடுத்ததில்லை.   சுமந்திரனுக்கு எழுதிய கடிதமும் ஆழமாக வாசித்தால் எனது விமர்சனங்களின் தொடற்சிதான் என்பதை அறிவீர்கள். எனது கருத்துக்கள் எப்பவும் தீர்பாக இருந்ததில்லை. அவை ஒரு தேடலின் ஆரம்பம்தான். பதில் எழுதிய அனைவரும் என் தேடலுக்கு உதவி இருக்கிறீர்கள். என் அன்பும் நன்றிகளும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அரசியலை வென்றெடுபதற்கான காலநதியில் கலந்த "சாக்கடை நீர்"  சுமந்திரனாவார் அந்த நீரைச் சுத்திகரிக்கமுடியாது வேண்டுஎன்றால் பன்றிப்பண்ணைக்கு மடைமாற்றம் செய்யலாம். 

Link to comment
Share on other sites

அன்புக்குரிய இணையவன். பெண்போராளிகள் ஒருமுறை சொன்ன ஒரு சேதியை மட்டுமே உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். நீரில்லாமல் பலநாட்க்கள் அலைந்தபிறகு ஒருவீட்டு மலகூடத்து குந்துசட்டிக் குழி இருந்த தண்ணீரை பப்பாத் தண்டுக் குழல் மூலம் உறுஞ்சிக் குடித்து அவர்கள் உயிர்பிழைத்தார்களாம். இதன் படிபினைகளைப் புரிந்துகொள்ளாமல் எமக்கு எதிர்காலம் இல்லை. இருக்கிற தண்ணீரை சுத்திகரித்து அருந்தி உயிர்வாழும் நிலையில்தான் எங்கள் அரசியல் உள்ளது.

.

நாட்டில் எங்கள் சனத்தொகை (2012) வட மாகாணம்  987692 + கிழக்கு மாகாணம்609,564 =  1597256.  இது மதுரை () மாவட்ட குடித்தொகையில் பாதிமட்டுமே. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் ஒற்றுமை இல்லாவிட்டால் திருமலை நகரம் மட்டக்களப்பு மாவட்டம் ஆலையடி வேம்பு திருக்கோயில் பிரதேசங்கள் என  மூன்று தீவுகள்போல சிதறி உள்ளது தமிழர் இருப்பு.  

.

வடகிழக்கில் வாழும் 16 லட்சம் தமிழர்களில் வயோதிபர்களும் குழந்தைகளும் அதிக சதவீதத்தில் உள்ளனர். புலம்பெயர்ந்த தமிழர்  இனி தாயகம் வந்து போராடப்போவதில்லை. தங்கள் பிள்ளைகளையும் போராட அனுப்பப்போவதில்லை. அதேசமயம் அவர்கள் கழ சமூக பொருளாதார அரசியல் பாதுகாப்பு கழநிலமைகள் அறியாமல் நிதானமான அரசியலை ஆய்வுகளோ விமர்சனமோ இன்றி நிராகரிப்பவர்களாக உள்ளனர். மேலும் புலம்பெயர் தமிழர்கள் பாராழுமன்ற அரசியலில்  அதிதீவிரவாதத்தை தூண்டுகிறவர்களாக உள்ளார்கள். 

.

பெரும்தோல்வியின்பின்னர் அரச பயங்கரவாத அச்சுறுத்தல் மத்தியிலேயே  இன்றைய ஈழத் தமிழர் அரசியல் தொடர்கிறது. ஈழத்தில் மேற்க்கு நாடுகளினதும் அயல் நாடுகளதும் அரசியல் அழுத்தத்தாலும் அதன் அடிப்படையிலான  பாராளுமன்ற நடவடிக்கைகளாலுமே ஈழத் தமிழரது அன்றாட இருப்பை உறுதிப்படுத்தும் அரசியல் செய்யவேண்டியுள்ளது.  

பேரழிவான தோல்விக்குப்பின்னர் நாம் கையறு நிலையில் இருக்கிறோம்.    சிங்கள அரசுகள் சர்வதேச அழுத்தத்துக்கு மட்டுமே சற்று அசைந்து கொடுக்கின்றன. அதுவும்  சர்வதேசம் எங்களை ஒரு தரப்பாக அங்கீகரிக்கும் வரைக்கும்தான்.  எங்களுக்கான அங்கீகாரம் தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சிகள் பிரதிநிதித்துவம் பெறாத வரைக்குமே நீடிக்கும். முஸ்லிம் கட்சிகள் தேசிய கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடும் அவலநிலையாலேயே  அவர்களுக்கு தனித் தரப்பு அங்கீகாரம் கிடைக்கவில்லை.  கஜேந்திரன் பொன்னம்பலத்தின் வரவு SLFP UNP பேரின வாத அரசுகளுக்கு எதிராக அறவழி போராட்ட அரசியலை முன்னெடுத்து வளர்த்துச் செல்லவில்லை. SLFP UNP  ஆட்ச்சியாளர்களின் பேரின வாத செயல்பாடுகளுக்கு எதிராக  அவர்கள் போராடவோ சிறைகளை நிரப்பவோ இல்லை. பதிலாக புலம்பெயர் தமிழரதும் சர்வதேச தமிழ் ஆதரவாளர்களதும் காதுகளை நிரப்புகிறதில் மட்டுமே  குறியாகச் செயல்படுகிறார்கள். 

 ரணிலும் மகிந்தவும்  வடகிழக்கில்  தமிழர்களையும்  SLFP UNP கட்ட்சியின் சின்னங்களில் போட்டியிடவைத்து தமிழர்களின் தேசிய இனத் தன்மையையும் அதனால் கிட்டிய  தனித்தரப்பு அந்தஸ்தையும் அழிக்கிற முயற்சியில் தீவிரமாக உள்ளனர். அறவழியில்கூட போராடாமல் போலித் தீவிரவாதம்பேசி  கூட்டமைப்பை மட்டுமே குறிவைத்து   செயல்படுகிறவர்கள் நோக்கம் அச்சம் தருகிறது.  SLFP, UNPக்கு எதிராக தெருவில் இறங்கி தொடர்ந்து போராடாமல்  பதவிகளை தாருங்கள் என தேர்தலில் குதித்து கூச்சமைப்பின் வாக்குகளை பிரிபது SLFP, UNP போனற தேசிய கட்சிகளுக்கு வாசல் திறக்கிற அரசியல் செய்கிறார்களோ என  என அச்சத்தை ஏற்படுத்துகிறது.   

.

அரசுக்கு எதிராக தீவிரமாகப் போராடாமல் தேர்தலை மட்டும் குறிவைத்து தமிழர் கட்சிகளை உடைத்து அழித்தல் எனும் செயல்பாடு  கடந்த உள்ளூர் ஆட்சி தேர்தல்களிலேயே SLFP UNP கட்சிகளுக்கு வழ்விட்டு தமிழர் பலத்தை சிதறடித்துள்ளது.  வடகிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பு உடைந்தால் அதன் பலனாக SLFP மற்றும்  UNP கட்சிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். அதனால் தனி இன தமிழர் தனித்தரப்பு அந்தஸ்தை இழக்க நேரும். அதன்பிறகு எமக்கு SLFP UNP சொல்வதைத் தவிர வேறு குரலே இருக்காது. க்ஜேந்திரன் பொன்னம்பலம் விக்னேஸ்வரன் அணி அரசியல் த்ந்தை செல்வா முன்னெடுத்த அர்ப்பனிப்புள்ள அறப் போரட்ட அரசியலாக இருந்து ஆதரிப்பது வேறு. அவர்கள் செயல்படும் கட்சியாக இல்லை.  அவர்கள் தேர்தலில் தமிழர் கூட்டமைப்பை உடைத்து பதவியை எங்களுக்கு தாருங்கள் செயல்படுகிறோம் என்கிற அரசியலாக இருக்கிற ஆபத்தை நீங்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. 

.

கஜேந்திரன் பொன்னம்பலம் அணியை தேர்தல் நோக்கத்தை விட்டுவிட்டு அறவழியில் விடுதலை அரசியல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக கிழக்கு மாகானத்தில் தேர்தலில் குதித்தமை தமிழ அடையாளமான பிரதிநிதித்துவத்தைச் சிதைப்பதாகவே அமைதுள்ளது. பாராளுமன்ற பதவிக்காக மக்களைப் பிரிக்காமல் போராட்டங்களில் மக்களை இணைக்கிற பணியை செய்யுங்கள்.
கூட்டமைப்பு வெளியில் உள்ள அமைப்புகளை இன்னும் இன்னும் உள்வாங்கி வலுவடையும் அமைப்பாக ஜனநாயகத் தன்மைபெற்று விரிவடைய வேண்டும்.

தோழ தோழியரே, நமக்கு அதிக மக்களும் அதிக வாய்ப்புகளும் அதிக அதிக வளங்களும் அதிக காலமும் இல்லை

.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

அரசுக்கு எதிராக தீவிரமாகப் போராடாமல் தேர்தலை மட்டும் குறிவைத்து தமிழர் கட்சிகளை உடைத்து அழித்தல் எனும் செயல்பாடு  கடந்த உள்ளூர் ஆட்சி தேர்தல்களிலேயே SLFP UNP கட்சிகளுக்கு வழ்விட்டு தமிழர் பலத்தை சிதறடித்துள்ளது.  வடகிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பு உடைந்தால் அதன் பலனாக SLFP மற்றும்  UNP கட்சிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். அதனால் தனி இன தமிழர் தனித்தரப்பு அந்தஸ்தை இழக்க நேரும். அதன்பிறகு எமக்கு SLFP UNP சொல்வதைத் தவிர வேறு குரலே இருக்காது. க்ஜேந்திரன் பொன்னம்பலம் விக்னேஸ்வரன் அணி அரசியல் த்ந்தை செல்வா முன்னெடுத்த அர்ப்பனிப்புள்ள அறப் போரட்ட அரசியலாக இருந்து ஆதரிப்பது வேறு. அவர்கள் செயல்படும் கட்சியாக இல்லை.  அவர்கள் தேர்தலில் தமிழர் கூட்டமைப்பை உடைத்து பதவியை எங்களுக்கு தாருங்கள் செயல்படுகிறோம் என்கிற அரசியலாக இருக்கிற ஆபத்தை நீங்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை

குறைந்தது கூட்டமைப்பு சமீப காலத்தில் செய்த ஒரு அறவழிப்போராட்டத்தை  ஞாபகப்படுத்துங்கள்.பார்க்கலாம் .

காலிமுகத் திடலில் நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின் பின்னர்
தமிழ் அரசியல்வாதிகள் எல்லோருமே பேச்சளவில் மட்டுமே இயங்கினார்கள்.
சிங்கள அரசுகளுடன் ஒப்பந்தங்களை  செய்த தந்தை செல்வா கூட அந்த ஒப்பந்தங்கள் கிழிக்கப்பட்டபோது எந்த விதமான மிகப்பெரிய அளவிலான அறவழிப்போராட்டத்திலும்
ஈடுபடவில்லை .சில கடையடைப்புக்கள் , திருகோணமலைக்கான   பாத யாத்திரை என்பதோடு  சரி.
 

குறைந்தது ஒரு வாரமாவது உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டாரா?
ஆனாலும் அவர் மக்களைத் தனது பேச்சாற்றலால் ஒன்றுதிரட்டினார்.
தமிழ் மக்களுக்கு இதுதான் தீர்வாக முடியும் என்று பாதையைக் காட்டினார்.மக்களும் அவர் வழி செல்லத்தயாராகினர்.

அவரின் பின்னரான காலம் தமிழரசுக்கட்சியின் பதவி மோகக் காலமானது.

அமிர் அண்ணா எதிர்க்கட்சித் தலைவராகி ஒரு போராட்டத்தையும் செய்யவில்லை.

இப்போ சம்பந்தர், சுமந்திரன் போன்றவர்கள்  எத்தனை போராட்டங்களை நடாத்தினார்கள்.

குறைந்தது முள்ளி வாய்க்கால் தமிழ் இனவழிப்பின்போதாவது ஏதாவது செய்தாரா? சரி

சம்பந்தர் இந்தியாவில், தமிழ் நாட்டில்  ஒளித்திருக்காமல்  அரசியற்போராட்டங்களிலாவது கலந்து கொண்டாரா?

ஆனால் கஜேந்திரன் கட்சி ஆரம்பித்ததும் வீதி  மறியல், உண்ணாவிரதம், பாத யாத்திரை என்று போராட்டத்திலேயே வாழ வேண்டும்.
தமிழரசுக்கட்சி நோகாமல் நொங்கு சாப்பிட வேண்டும் அப்படித்தான் கவிஞர் ஐயா சொல்ல வருகின்றாரா?     

 

 

Link to comment
Share on other sites

விவாதங்கள் எப்படி அமைந்தாலும் சம்பந்தர் தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டமைப்பும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் தமிழர் விடுதலைக்கான பொது போராட்டங்களிலும் தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழர் சிங்கள முற்போக்காலர்

 உறவு போன்ற பொதுப் பிரச்சினைகளிலும் கைகோர்ப்பது அல்லது புரிந்துணர்வுடன் செயல்படுவது பற்றி உடனடியாக சந்தித்துப்பேசி முடிவுக்கு வரவேண்டும் என கோருகிறேன். தமிழர் விடுதலைக் கூட்டமைப்புக்கும் தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் கூட்டமைப்பாக இணைந்தாலும் தனித்தனியே செயல்ப்பட்டாலும் தமிழர் விடுதலையின் இரண்டு சக்கரங்களாகச் செயல்ப்படவேண்டும் என்பதே காலத்தின் கோரிக்கையாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

பொதுப் பிரச்சினைகளிலும் கைகோர்ப்பது அல்லது புரிந்துணர்வுடன் செயல்படுவது பற்றி உடனடியாக சந்தித்துப்பேசி முடிவுக்கு வரவேண்டும் என கோருகிறேன். தமிழர் விடுதலைக் கூட்டமைப்புக்கும் தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் கூட்டமைப்பாக இணைந்தாலும் தனித்தனியே செயல்ப்பட்டாலும் தமிழர் விடுதலையின் இரண்டு சக்கரங்களாகச் செயல்ப்படவேண்டும் என்பதே காலத்தின் கோரிக்கையாகும்.

ஐயா இந்த ஒற்றுமையைப் பற்றி ஆராய்ந்த்துதான் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
அதிலிருந்து கஜேந்திரன் வெளியேறக் காரணம் நீங்கள் உங்கள் முதல்ப் பந்தியிலே விழித்துக் கடிதம் வரைந்தவரது செயல்களே.
கஜேந்திரனையும் வேறு சிலரையும் ஓரங்கட்டிவிட்டால் தானே அடுத்த தளபதி என நினைத்த சுமந்திரன் அவர்களே இன்றைய குழறுபடிகளுக்கான முக்கிய காரணி.
இந்த ஒற்றுமையைப் பற்றி நீங்களே சுமந்திரன் அவர்களுக்கு ஒரு கடிதம் வரைந்து பாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து விவகாரங்களுக்கான இண அமைச்சராக ஒரு இஸ்லாமியரை சிங்களம் நியமித்தபோது அந்த நியமனத்தைப் பெரும்தன்மையுடன் இல்லை நான் ஒரு இஸ்லாமியன் என்னால் இந்து விவகாரங்களுக்கான இணை அமைச்சராக பதவியிலிருக்கமுடியாது ஆகவே சரியானவர்களை நியமியுங்கள் என சம்பந்தப்பட்டவர் தெரிவித்தால் முஸ்லீம்களது பெருந்தனமையும் சக தமிழர்களோடு அவர்கள் சேர்ந்து அரசியல் செய்வதற்கு ஆவலுள்ளவர்கள் என எம்மால் கணித்திருக்கலாம் ஆனால் நிலைமை அப்படி இல்லையே எகிக்கொடுத்தாலும் எனது பாத்திரத்தில் போடு அது பன்றிக்கறியாகவிருந்தாலும் பறுவாயில்லை எனக்கூறி அமைச்சர் பதவியை அது என்ன அமைச்சுக்குச் சார்ந்தது யார் சார்ந்தது என சிறிதுகூட யோசிக்காது ஏற்றுக்கொள்ளும் பக்குவமுள்ள முஸ்லீம்களுடன் எம்மால் இணைந்து செயல்படலாம் என நீங்கள் எண்ணுகிறீகள  ஜெயா அண்ணர் அவர்களே 

Link to comment
Share on other sites

 குடும்பம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய அக்கறை இல்லாதிருந்தால் பல கணவன் மனைவிகளுக்கு  சேர்ந்துவாழ விட்டுக்கொடுத்து சமரசம் செய்கிற அவசியம் இருந்திருக்காது. தாய்மண்னின் சந்ததிகளின் எதிர்காலம் பற்றிய அக்கறையே தமிழர் முஸ்லிம்களிடையே எப்படியும் சமரசமாகி இணைந்து செயல்படுகிற வழிவகைகலை கண்டடை நிர்பந்திக்கிறது தோழா

Link to comment
Share on other sites

On 6/11/2018 at 3:21 AM, poet said:

 

திரு சுமந்திரன் அவர்களே,

கட்சிக்குவெளியே அதிகாரங்களை கையகப்படுத்தி இயங்குகிறீர்கள் என்கிற சந்தேகம் மட்டுமே உள்ளது. அத்தகைய சந்தேகத்துக்கு இடமழிக்காமல் நீங்கள் தொடர்ந்தும் பணியாற்றவேண்டும் என்பதே தமிழரசுக்கட்சிக்கு உள்ளும் வெளியிலும் உள்ள பெரும்பாலான தமிழர்களது எதிர்பார்ப்பாக உள்ளது. விடுதலைக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகளில் உங்கள் அறிவும் செயல் திறனும்பற்றி யாருக்கும் சந்தேகமில்லை.
கட்சிக்கட்டுபட்ட வகையில் உங்கள் உழைப்பு தமிழர்களது பாராளுமன்ற அரசியலுக்கு அவசியமான ஒரு தருணத்தில் நீங்கள் ராஜினாமா பற்றிப் பேசுவதை ஏற்றுகொள்ளமுடியாது. - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

வணக்கம் ஜெயபாலன் ,

உங்களுடைய ஆதங்கம் புரிகின்றது ,தற்போதைய சூழ்நிலையில் சுமந்திரன் ராஜினாமா செய்வதென்ற பேச்சுக்கு இடமில்லை .

Link to comment
Share on other sites

On 6/11/2018 at 7:05 AM, Elugnajiru said:

 

சுமந்திரன் தனது மனைவி இல்லாத ஒரு பெண்ணைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் படம் சமூகவலைத்தளங்களில் உலாவருவதை மறந்திட்டார்,  

 

 

 

கருத்துக்களை எழுதுகின்றவர்களுக்கு  எது உண்மை /பொய் என்று பகுத்தறியும் தகுதி இருக்கவேண்டும் .அல்லது ஆராய்ந்து உறுதிப்படுத்தி கருத்துக்களை முன்வைக்க வேண்டும் .முகப்புத்தகத்தில் உலவிய படங்கள் சுமந்திரனின் மனைவி,மகள் ஆகியோரது படங்கள் .கருத்துக்களை கருத்துக்களால் எழுத துணிவில்லாத வர்கள்தான் இப்படியான கேவலமான விடயங்களை அரங்கேற்றுவார்கள் .நாளைக்கு உங்களுடைய மனைவி பிள்ளைகளுக்கு இப்படி ???

On 6/15/2018 at 10:56 AM, வாத்தியார் said:

ஐயா இந்த ஒற்றுமையைப் பற்றி ஆராய்ந்த்துதான் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
அதிலிருந்து கஜேந்திரன் வெளியேறக் காரணம் நீங்கள் உங்கள் முதல்ப் பந்தியிலே விழித்துக் கடிதம் வரைந்தவரது செயல்களே.
கஜேந்திரனையும் வேறு சிலரையும் ஓரங்கட்டிவிட்டால் தானே அடுத்த தளபதி என நினைத்த சுமந்திரன் அவர்களே இன்றைய குழறுபடிகளுக்கான முக்கிய காரணி.
இந்த ஒற்றுமையைப் பற்றி நீங்களே சுமந்திரன் அவர்களுக்கு ஒரு கடிதம் வரைந்து பாருங்கள்

2010இல் தேர்தலில் TNA வென்றதன் பின்புதான் சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார் .தேர்தலுக்கு முன்னமே தங்களுக்கு சந்தர்ப்பம் தரவில்லை என்று TNA யில் இருந்து வெளியேறி விட்டார்களே .வரலாறு முக்கியம் வாத்தியாரே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரி,
நான் ஒன்றும் வெள்ளை வேட்டிக்கள்வன் இல்லை 

அதேவேளை சுமந்திரனைப்பற்றி சமூக வலைத்தளங்களில் உலவிய இந்த விடையத்தை யாரும் இதுவரை மறுக்கவில்லை தவிர இச்செய்தி தகவல் ஊடகங்களுக்கான சட்டதிட்டங்கள் மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் நாடுகளிலேயே அதிகமாக வெளிவ்ந்தது. அதேவேளை சுமந்திரன் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் உலகம் முளுமைக்கும் அவருக்கான இராங்க ரீதியான பாதுகாப்பு இருக்கும் சும்ம காமா சோமா என அவரைப்பற்றி தவறாகச் சித்தரித்துவிட முடியாது தவிர அவரொரு திறமை வாய்ந்த வழக்குரைஞர் இலங்கை அரசியிலமைப்புச்சட்டம் பிரித்தானிய அரசியல் அமைப்பின் அத்திவாரத்திலிருந்தே வரையப்பட்டது. ஆகவே இவரைப்பற்றிய தகவல்கள் பிரித்தானியாவிலும் சமூக வலைத்தளங்களில் உலாவியது நீங்கள் வாழ்வது கனடாவில் கனடாவின் சட்டதிட்டங்களும் போலியான தகவல்களுக்கு அதிகூடிய தண்டனையளிக்கும்.

விருப்பமென்றால் சுமந்திரன் சட்ட நடவடிக்கையை தனது பாராளுமன்ற இராயாங்கத் தகுதி மூலமும் அப்புக்காத்துப் புலமைமூலமும் அவதூறாளர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கலாம். 

மீண்டும் மீண்டும் கூறுகிறேன்

தமிழர் அரசியலை வென்றெடுபதற்கான காலநதியில் கலந்த "சாக்கடை நீர்"  சுமந்திரனாவார் அந்த நீரைச் சுத்திகரிக்கமுடியாது வேண்டுஎன்றால் பன்றிப்பண்ணைக்கு மடைமாற்றம் செய்யலாம். 

Link to comment
Share on other sites

On 6/18/2018 at 12:42 AM, Elugnajiru said:

தமிழர் அரசியலை வென்றெடுபதற்கான காலநதியில் கலந்த "சாக்கடை நீர்"  சுமந்திரனாவார் அந்த நீரைச் சுத்திகரிக்கமுடியாது வேண்டுஎன்றால் பன்றிப்பண்ணைக்கு மடைமாற்றம் செய்யலாம்.

உண்மை தான்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.