Jump to content

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்காட்லாந்து வெற்றி


Recommended Posts

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 371 ரன் குவித்தது ஸ்காட்லாந்து

 

 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது. #SCOTvENG

 
 
 
 
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 371 ரன் குவித்தது ஸ்காட்லாந்து
 
ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி கடைக்கோடியில் இருக்கும் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஒரேயொரு போட்டி இன்று விளையாடி வருகிறது. இந்த ஆட்டம் எடின்பர்க்கில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணியின் கிராஸ், கோயெட்சர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கிராஸ் 39 பந்தில் 48 ரன்களும், கோயெட்சர் 49 பந்தில் 58 ரன்களும் சேர்த்தனர்.

அதன்பின் வந்த மெக்லியோட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 94 பந்தில் 16 பவுண்டரி, 3 சிக்சருடன் 140 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்கவும், அவருக்கு துணையாக முன்சே 51 பந்தில் 55 ரன்கள் சேர்க்கவும் ஸ்காட்லாந்து 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.

201806102025197228_1_England002-s._L_styvpf.jpg

இங்கிலாந்தின் முன்னணி பந்து வீச்சாளர்களான மார்க் வுட் 71 ரன்னும், டேவிட் வில்லே 72 ரன்னும், அடில் ரஷித் 72 ரன்னும், பிளங்கெட் 85 ரன்னும், மொயீன் அலி 66 ரன்களும் விட்டுக் கொடுத்தனர்.

பின்னர் 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
 
 
 
 

1.png&h=42&w=42

365 (48.5/50 ov, target 372)

Scotland won by 6 runs

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/10202519/1169197/Scotland-371-runs-against-England-in-ODI.vpf

Link to comment
Share on other sites

பரபரப்பான ஆட்டத்தில் வலுவான இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்காட்லாந்து

 
அ-அ+

ஸ்காட்லாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் வலுவான இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்து வீழ்த்தியது. #SCOTvENG #OnedayMatch

 
 
 
 
பரபரப்பான ஆட்டத்தில் வலுவான இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்காட்லாந்து
 
எடின்பர்க்:
 
ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி கடைக்கோடியில் இருக்கும் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஒரேயொரு போட்டியில் இன்று விளையாடியது. இந்த ஆட்டம் எடின்பர்க்கில் நடைபெற்றது.
 
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணியின் கிராஸ், கோயெட்சர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கிராஸ் 39 பந்தில் 48 ரன்களும், கோயெட்சர் 49 பந்தில் 58 ரன்களும் சேர்த்தனர்.
 
அதன்பின் வந்த மெக்லியோட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 94 பந்தில் 16 பவுண்டரி, 3 சிக்சருடன் 140 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்கவும், அவருக்கு துணையாக முன்சே 51 பந்தில் 55 ரன்கள் சேர்க்கவும் ஸ்காட்லாந்து 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.
 
இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், பிளங்கெட் ஆகியோர் 2 விக்கெட்டும், மார்க் வுட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
 
201806110218022004_1_bairstow-2._L_styvpf.jpg
 
அதன்பின், 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 129 ரன்களை எடுத்தது. ஜேசன் ராய் 34 ரன்னில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் பேர்ஸ்டோவுக்கு ஒத்துழைப்பு அளித்தார். 
 
பேர்ஸ்டோவ் தனது அதிரடியை காட்டினார். அவர் 59 பந்துகளில் 6 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய ஜோ ரூட் 29 ரன்னில் வெளியேறினார். அலெக்ஸ் ஹேல்சும் அரை சதமடித்தார். அவர் 52 ரன்களில் அவுட்டானார். மொயின் அலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 
இறுதியில், லியாம் பிளங்கெட் தனியாக நின்று போராடினார். கடைசி 2 ஒவர்களில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரின் முதல் பந்தில் அதில் ரஷித் ரன் அவுட்டானார். அடுத்த  3 பந்துகளில் தலா ஒரு ரன் பெறப்பட்டது. ஐந்தாவது பந்தில் மார்க் வுட் அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து அணி 48.5 ஓவரில் 365 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிளங்கெட் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
ஸ்காட்லாந்து சார்பில் மார்க் வாட் 3 விக்கெட்டும், அலாஸ்டெய்ர் எவன்ஸ், ரிச்சி பெரிங்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
 
வலுவான இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்து வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆட்ட நாயகன் விருதுக்கு மெக்லியோட் தேர்வு செய்யப்பட்டார். #SCOTvENG #OnedayMatch

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/11021802/1169229/Scotland-beat-england-by-6-runs-in-one-day-match.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.