Jump to content

ரஃபேல் நடால் - ஃபிரென்ச் ஓபன் : தொடரும் காதல்கதை


Recommended Posts

செம்மண் கோர்ட் ராஜாவான நடால் 11-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்றார்

 

7-ம் நிலை வீரரான டொமினிக் தீமை வீழ்த்தி 11-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்று சாதனைப் படைத்துள்ளார் ரபெல் நடால். #FrenchOpen

 
 
 
 
செம்மண் கோர்ட் ராஜாவான நடால் 11-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்றார்
 
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி இன்று மாலை நடந்தது.
 
இதில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்)- ஏழாம் நிலை வீரரான டொமினிக் தீம் (ஆஸ்திரியா) பலப்பரீட்சை நடத்தினார்.
201806102136063398_1_nadal002-s._L_styvpf.jpg
செம்மண் கோர்ட் ராஜாவான நடாலின் ஆட்டத்திற்கு டொமினிக் தீமால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டை 6-4 எனவும், 2-வது செட்டை 6-3 எனவும் கைப்பற்றினார். 3-வது செட்டையும் 6- 2 எனக் கைப்பற்றி 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 11-வது முறையாக பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை ருசித்தார். #FrenchOpen2018 #Nadalvsthiem

https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/10213606/1169202/French-Open-2018-nadal-Beats-Thiem-and-captured-11th.vpf

Link to comment
Share on other sites

ரஃபேல் நடால் - ஃபிரென்ச் ஓபன் : தொடரும் காதல்கதை

பாரீஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 10) நடந்த ஃபிரென்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் பிரிவு இறுதியாட்டத்தில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆஸ்திரிய வீரரான டாமினிக் டீமை 6-4 6-3 6-2 என்ற நேர் செட்களில் வென்ற ரஃபேல் நடால் , 11-ஆவது முறையாக ஃபிரென்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

ஃபிரெஞ்ச் ஓபன் - ரஃபேல் நடால்: தொடரும் காதல்கதைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இறுதியாட்டம் தொடங்கியது முதல் ரஃபேல் நடால் ஆதிக்கம் செலுத்தி வந்தார். டாமினிக் டீமீன் சர்வீஸை பலமுறைகள் முறியடித்த நடால் இறுதி செட்டை மிகவும் 6-2 என்று வென்றார்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான ரஃபேல் நடால், இறுதியாட்டத்தில் தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டாலும் கடுமையாக போராடி வெற்றி பெற்றார்.

ஃபிரெஞ்ச் ஓபன் - ரஃபேல் நடால்: தொடரும் காதல்கதைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

''டாமினிக் டீம் சிறப்பாக விளையாடினார். நான் வெற்றி பெறுவதற்கு கடுமையாக போராடினேன். பிரென்ச் ஓபன் பட்டத்தை 11முறை வெல்வது ஒரு கனவு போல் இருக்கிறது'' என்று வெற்றி பெற்ற நடால் குறிப்பிட்டார்.

ஃபிரெஞ்ச் ஓபன் - ரஃபேல் நடால்: தொடரும் காதல்கதைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் நடால் வென்ற 17-ஆவது பட்டம் இதுவாகும். அசாத்திய சாதனை புரிந்த நடாலின் சில சிறப்பம்சங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

  • இதற்கு முன்னர் 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2017 ஆண்டுகளில் ஃபிரென்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நடால் வென்றுள்ளார்.
  • ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அதிகமுறைகள் (11 முறைகள்) வென்ற மார்கரெட் கோர்ட்டின் சாதனையை நடால் சமன் செய்துள்ளார்.
  • தனது 17-ஆவது வயதில், அதாவது 2003-ஆம் ஆண்டிலேயே காயம் காரணமாக ஃபிரென்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இருந்து பங்கேற்காமல் விலகினார். மீண்டுமொரு முறை அவரால் ஃபிரென்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அனைத்து கேள்விகளையும் தகர்த்து தற்போது 11-ஆவது முறையாக ஃபிரென்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று நடால் சாதனை படைத்துள்ளார்.
  • தனது சகவீரர்களான பெடரர், ஜோகோவிச் போன்றவர்களை போல் சிறந்த 'சர்வ்' போடும் திறமை நடாலுக்கு இல்லையெனினும், ஓவ்வொரு பாயிண்டுக்கும் நடால் செலவழிக்கும் அசாத்திய உழைப்பு அவரது எதிராளிகளையும் வியக்க வைத்துள்ளது.
  • க்ளே கோர்ட் என்றழைக்கப்படும் களிமண் தரையில் நடாலின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருக்கும். அதனால் அவர் 'க்ளே கிங்' என்றழைக்கப்படுகிறார்.
  • 18-ஆவது வயதில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற நடால், 32-ஆவது வயதில் 17-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
  • காயம் காரணமாக, எண்ணற்ற மாதங்கள் நடால் விளையாடவில்லை. இனி நடால் அவ்வளவுதான்; முடிந்துவிட்டது அவரது விளையாட்டு சகாப்தம் என்று எண்ணற்ற முறைகள் விமர்சர்களால் முடித்து வைக்கப்பட்ட நடாலின் கதை மீண்டும் அவரது போராட்ட குணத்தால் தொடர் கதையாகி உள்ளது.

https://www.bbc.com/tamil/sport-44433158

Link to comment
Share on other sites

கிளாசிக் ஷாட்ஸ், கிரேட் டெக்னிக், வின்டேஜ் ரஃபா... நடால் ஏன் `கிங் ஆஃப் க்ளே?!’

 
 

20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், 97 டைட்டில்கள், 1,149 வெற்றிகள் என டென்னிஸ் உலகின் ஈடு இணையற்ற ராஜாவாக அரியணையில் அமர்ந்திருக்கிறார் ரோஜர் ஃபெடரர். டென்னிஸ் அரியாசனம் ஆஸ்திரேலியன் ஓப்பன், ஃபிரெஞ்ச் ஓப்பன், விம்பிள்டன், அமெரிக்க ஓப்பன் என நான்கு கால்களைக் கொண்டது. ஆனால், ஃபெடரரின் அரியாசனத்தில் இருப்பது மூன்று கால்கள்தான். அந்த மற்றொரு கால் இவன் கையில். அதை வாளாக்கினான்... வெற்றிகள் சூடினான்... அதுவும் 13 ஆண்டுகள்... இன்று அதையே செங்கோலாக்கி, தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கிவிட்டான். ரஃபேல் நடால்... ஃபிரெஞ்ச் ஓப்பனின் ராஜா... களிமண் தரையின் ராஜாதி ராஜா..! 

நடால்

 

 

ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமை வீழ்த்தி 11-வது முறையாக `ரோலண்ட் கேரோஸ்' அரங்கின் கதாநாயகனாகியுள்ளார் நடால். 2005-ம் ஆண்டு தொடங்கிய இவரது ஆதிக்கம் இன்றுவரை முடியவில்லை. இந்த 11 வெற்றிகளையும்விட, கடந்த ஆண்டு ஃபெடரர் சொன்ன அந்த ஒரு வார்த்தை நடாலின் ஆதிக்கத்தைப் பற்றி தெளிவாகச் சொல்லிவிடும்: ``என்னை எதிர்த்து விளையாடிய வீரர்களில் நடால் மிகவும் கடினமானவர். அவருக்கு எதிராக போதுமான அளவுக்கு களிமண் தரையில் ஆடவேண்டும். என்னை ஒவ்வொரு ஃபைனலிலும் தோற்கடித்துக்கொண்டே இருக்கிறார். இவரோடு ஆடிய போட்டிகள் என்னை மிகவும் பயமுறுத்தியுள்ளன". ஆம், களிமண் தரையில், டென்னிஸின் மகத்தான வீரனைப் பயமுறுத்தியுள்ளார் ரஃபா!

ஃபெடரர் மட்டுமல்ல... பீட் சாம்ப்ரஸ், போரிஸ் பெக்கர், ஜிம்மி கானர் போன்ற ஜாம்பவான்களாலும் ஃபிரெஞ்ச் ஓப்பனில் ஆதிக்கம் செலுத்த முடிந்ததில்லை. ஒற்றையர் பிரிவில் மொத்தம் 48 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் பெற்றுள்ள இந்த 4 ஜாம்பவான்களும் சேர்த்து, ஃபிரெஞ்ச் ஓப்பனில் வென்ற பட்டங்களின் எண்ணிக்கை - 1. நடால் - 11! ஏன்..? களிமண்தரையில் ஜெயிப்பதில் அப்படி என்ன கஷ்டம்..?

nadal

புல்தரை ஆடுகளங்களைப்போல் இங்கு சர்வீஸால் ஆதிக்கம் செலுத்தமுடியாது. பந்து மற்ற ஆடுகளங்களைவிட மெதுவாக வரும். அதிகம் பௌன்ஸ் ஆகும். அதனால் எதிர்ப்புறம் இருக்கும் வீரருக்குப் பந்தை அடிக்க அதிக 'டைமிங்' கிடைக்கும். வீரர்கள் base line-ல் இருந்து தள்ளி நின்றே விளையாட முடியும். அதனால் ரேலிகளின் எண்ணிக்கை அதிகமாகும். மற்ற ஆடுகளங்களில் 10 ரேலிகளில் முடியும் கேம், இங்கு 15 ரேலிகளை எளிதாகத் தாண்டும். அதிக 'மூவ்மென்ட்' தேவைப்படும். தொடர்ந்து ஆடிக்கொண்டே இருக்க, ஸ்டாமினா விரைவில் குறையும். களிமண் தரையில் ஒரு வீரன் ஜொலிக்கவேண்டுமென்றால் டெக்னிக்கோடு சேர்ந்து, ஃபிட்னஸும், அதிகபட்ச கவனமும், உச்சபட்ச பொறுமையும் தேவை. இவை அனைத்தும் ஒருங்கே பெற்ற ஒருவரால் மட்டும்தான் களிமண் தரையில் சாதிக்க முடியும். நடால் களிமண்ணில் ஆட்சி புரியக் காரணம் இதுதான். 

ஃபிட்னஸ்... நடால் பற்றிப் பேசும்போது அவசியம் விவாதம் செய்யப்படவேண்டிய விஷயம். எத்தனை காயங்கள், எத்தனை அறுவை சிகிச்சைகள், எத்தனை நாள்கள் ஓய்வு... இவ்வளவு ஏன் நேற்றைய போட்டியிலும் ஃபிட்னஸ் பிரச்னையால் டைம் அவுட் கேட்கிறார். ஆனால், நேற்றைய காயம் நடாலுக்குப் புதிது. ஏனெனில், நடால் நேற்று விளையாடியதும் புதிது. புது நடால், புது கேம் பிளான், அதனால் புது காயம்! 

nadal

 

 

நடால், தன் உடலை மிகவும் வருத்திக்கொண்டு விளையாடும் ஒரு வீரர். ஃபெடரர் போல் டெக்னிக் கிடையாது. அவரைப் போல் டெக்னிக்கலான ரிஸ்க் எடுத்து பாயின்ட் எடுக்க அவர் எப்போதும் விரும்ப மாட்டார். தன் உடலால் எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயங்கமாட்டார். எதிராளி அடிக்கும் ஒரு கிராஸ் கோர்ட் ஷாட்டுக்கு, ஆடுகளத்தின் ஒரு எண்டில் இருந்து மற்றொரு எண்டுக்கு விரைந்து சென்று பந்தைத் திருப்பி அனுப்புவார். தன் ஆட்டத்தில் தவறுகள் இல்லாமல் பார்த்துக்கொள்வதில் கில்லாடி. களத்தின் எந்த மூலையையும் எளிதில் அடைந்துவிடும் வேகம் அவரது பலம். களிமண் தரையில் ஆதிக்கம் செலுத்த முக்கியக் காரணம் அதுதான். ஆனால், காலப் போக்கில் அதுவே அவரது பலவீனமானது. அதீத உடல் உழைப்பு காயங்களை அதிகமாக்கியது. ஒருகட்டத்தில் நடாலின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிவிட்டது. 

ஆனால், நேற்றைய போட்டி... வேற லெவலில் ஆடினார் ரஃபா. எப்போதும் முதல் புள்ளியிலிருந்தே முழு உடல் உழைப்பையும் கொட்டுபவர், நேற்று ஆரம்பத்தில் இருந்தே தன் எனர்ஜியை சேமித்தார். உடல் ரீதியாக அதிக ரிஸ்க் எடுக்கவில்லை. முதல் செட்டில் தன் வழக்கமான டிஃபண்டிங் பாணியில்தான் விளையாடினார். இரண்டாம் செட்டில் டொமினிக் தீம், தன் திட்டங்களை மாற்ற, அதிரடி காட்டத் தொடங்கினார் நடால். வழக்கமாக பேஸ் லைனிலேயே நின்று விளையாடுபவர், அடிக்கடி சர்வீஸ் லைன் வரை சென்று டொமினிக்கை மிரளவைத்தார். தன் கால்களை முன்பைப் போல் வேலை வாங்காமல், டிராப்களில் கவனம் செலுத்தினார். சும்மாவே அவரின் டாப் ஸ்பின் ஷாட்களுக்கு எதிர்த்து விளையாடும் வீரர்கள் திணறுவார்கள். இதில் டிராப்கள் வேறு. டிராப்களுக்கு அதிகமாக மணிக்கட்டைப் பயன்படுத்தியதுகூட நடாலின் காயத்துக்குக் காரணமாக இருக்கலாம். 

nadal

நடால் ஒவ்வொரு முறை சர்வீஸ் லைனை நெருங்கியபோதும், ஒவ்வொரு முறை டிராப் போட்டபோதும் தீம் பதிலற்றவராகவே இருந்தார். நடாலின் அந்த ஆட்டத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. அவரது ஸ்டாமினாவைச் சோதிக்க முழுக்க முழுக்க கிராஸ் கோர்ட் ஷாட்களில் கவனம் செலுத்தியவருக்கு, நடாலின் அந்த டெக்னிக்கல் ஆட்டம் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால், நடால் நேற்று களிமண் தரையில் அல்ல...புல்தரையில் ஆடியிருந்தாலும் நிச்சயம் வென்றிருப்பார். அவரது ஆட்டம் அவ்வளவு அருமை. 

முதல் செட்டில் நடாலை அதிகமாக 'பேக் ஹேண்ட்' ஷாட் ஆடச் செய்தார் தீம். ஆனால், அப்போது மிகவும் கவனமாக ரிப்ளை செய்த நடால், 'ஃபோர் ஹேண்ட்' ஷாட்களில் சில தவறுகள் செய்தார். அதைத் தெளிவாக அலசிய தீம், இரண்டாவது செட்டில் கிராஸ் கோர்ட் ஷாட்கள் ஆடத் தொடங்கினார். தான் பேக் ஹேண்ட் ஆடும்போதும், யோசிக்காமல் நடால் ஃபோர் ஹேண்ட் ஷாட் ஆடுவதற்குத் தோதாக கிராஸ் கோர்ட் ஷாட்கள் ஆடினார். முதல் செட்டில் செய்த தவறுகளை நடால் மீண்டும் செய்வார் என்று. ஆனால், இந்த முறை நடாலின் பெர்ஃபெக்ஷன் லெவல் 100 சதவிகிதத்தை அடைந்தது. 

nadal

 

தீமின் கிராஸ் கோர்ட் ஷாட்களை, அவரது வலதுபுற சைட் லைனுக்கு அருகே மிகக் கச்சிதமாக 'place' செய்தார். ஒவ்வொரு ஷாட்டும் கோட்டின் ஓரத்தை லேசாகத் தொட்டுப் பறந்துகொண்டிருந்தன. அந்த ஷாட்களுக்கு தீமால் பதில் சொல்ல முடியவில்லை. அதைத் திருப்பி அனுப்ப அவர் கொஞ்சம் கூட அதனருகில் இல்லை. போதாக்குறைக்கு ஒவ்வொரு முறை 'அவே' சேலஞ்ச் செய்தபோதும், பந்து எப்படியேனும் கோட்டைத் தொட்டிருந்தது. நடாலின் ஒவ்வொரு ஷாட்டும் அவ்வளவு பெர்ஃபெக்ட்! இது வின்டேஜ் ரஃபா!

உண்மையைச் சொல்லப்போனால் நேற்று நடால் ஆடியது ஆட்டத்துக்கு 'கிராஸ் கோர்ட்', 'ஹார்ட் கோர்ட்' என எங்கு ஆடியிருந்தாலும், எந்த கிராண்ட் ஸ்லாமாக இருந்தாலும் வென்றிருப்பார். 13 ஆண்டுகளாக தன் உடலில் மொத்த பாரத்தையும் இறக்கி, அதை வருத்தி வென்றுகொண்டிருந்தவர், நேற்று புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். 17-வது கிராண்ட் ஸ்லாமை வென்றுவிட்டார். அடுத்து விம்பிள்டன்... புல்தரை... பிரச்னையில்லை; ரோஜர் ஃபெடரர்... பிரச்னையில்லை; இது நடால் 2.0! களங்கள் இனி வெற்றிகளை நிர்ணயிக்கப் போவதில்லை. இனி கிராண்ட் ஸ்லாம்களை அடையப் போவது யார் என்பதை இந்தக் களிமண் தரையின் ராஜா தான்... சாரி, களிமண் தரையின் சக்ரவர்த்திதான் நிர்ணயிக்கப் போகிறார்! இவர் செல்லமாகக் கடிக்க இன்னும் சில கிராண்ட் ஸ்லாம்கள் காத்திருக்கின்றன!

https://www.vikatan.com/news/sports/127343-rafael-nadal-won-la-undecima-in-roland-garros.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.