Jump to content

பேராசிரியராக ரஜினி; வெளியீட்டுக்கு தயாரான விஸ்வரூபம் 2: சுவாரசிய திரைத்துளிகள்


Recommended Posts

பேராசிரியராக ரஜினி; வெளியீட்டுக்கு தயாரான விஸ்வரூபம் 2: சுவாரசிய திரைத்துளிகள்

முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்.

வெளியீட்டுக்கு தயாரான விஸ்வரூபம் 2

விரைவில் வெளியாகிறது விஸ்வரூபம் 2படத்தின் காப்புரிமைTWITTER

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விஸ்வரூபம் 2. முதல் பாகம் வெளியான உடன் இரண்டாவது பாகத்துக்கான வேலைகளையும் தொடங்கினார் கமல்ஹாசன். ஆனால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, விஸ்வரூபத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தில் நிறுத்தப்பட்டது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் கிடந்த விஸ்வரூபம் படத்தின் வேலைகளை மீண்டும் கடந்த ஆண்டு தொடங்கினார் கமல்ஹாசன். அந்த படத்துக்கான வேலைகள் தற்போது முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவுள்ளது. முதல் பாகம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில் விஸ்வரூபம் படத்தின் ட்ரைலரை வரும் 11ம் தேதி வெளியிடுகின்றனர்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் விஸ்வரூபம் 2 உருவாகியுள்ளது. இதனால் தமிழ் ட்ரைலரை ஸ்ருதிஹாசனும், ஹிந்தி ட்ரைலரை அமீர்கானும், தெலுங்கு ட்ரைலரை ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிடுகின்றனர். ட்ரைலரை வெளியிட்ட பின் விஸ்வரூபம் 2 படத்துக்கான ரிலீஸ் தேதியை அறிவிக்கவுள்ளனர். முதல் பாகம் பல பிரச்சனைகளை சந்தித்து வெளியாகியிருந்தாலும், மிகப்பெரிய வசூலை குவித்தது. அந்த சாதனையை இந்த விஸ்வரூபம் 2 படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Presentational grey line

சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதையுடன் களமிறங்கும் கார்த்திக் ராஜூ

சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதையுடன் மீண்டும் களமிறங்கும் கார்த்திக் ராஜூபடத்தின் காப்புரிமைTWITTER

அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான திருடன் போலீஸ், உள்குத்து ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜூ. ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த இவர், சினிமா மீது இருந்த ஆசைக்காரணமாக இயக்குனரானார்.

அவரின் முதல் படமான திருடன் போலீஸ் வெற்றியடைந்த நிலையில், இரண்டாவது படம் உள்குத்து தோல்வியை தழுவியது. இதனால் அடுத்த படத்தை இயக்க சிறிது காலம் எடுத்துக்கொண்ட கார்த்திக் ராஜூ தற்போது சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதையை எழுதியுள்ளார். புதுமையான முறையில் உருவாகவிருக்கும் அந்த படத்தில் மா நகரம், நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த சந்தீப் நடிக்கிறார்.

மேலும், இவர் தெலுங்கு சினிமாவில் பரீட்சியமான நடிகர் என்பதால் தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் தன்னுடைய அடுத்தப்படத்தை இயக்க கார்த்திக் ராஜூ திட்டமிட்டிருக்கிறார். இதில் தெலுங்கு பதிப்பை ஹீரோ சந்தீப்பே வாங்கி வெளியிடும் முடிவில் இருக்கிறாராம். இதுக்கான முதல்கட்ட வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.

Presentational grey line Presentational grey line

தொடர்ந்து மூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி - அருண்குமார்

திரைத் துளிகள்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கியவர் அருண்குமார். இந்த படங்களை தொடர்ந்து தன்னுடைய மூன்றாவது திரைப்படத்திலும் விஜய் சேதுபதியை ஹீரோவாக்கியுள்ளார்.

இதற்கான அறிவிப்பு இரண்டு மாதங்களுக்கு முன் வெளியானது. இதற்கு பின் கதைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வேலையில் இயக்குனர் இறங்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது சூட்டிங்கை தொடங்கியுள்ளனர். தென்காசி அருகேயுள்ள இலஞ்சியல் என்ற கிராமத்தில் பூஜையுடன் சூட்டிங் ஆரம்பமாகியுள்ளது.

முதல்கட்ட சூட்டிங்கை தென்காசி பகுதிகளில் முடித்துவிட்டு, இரண்டாம்கட்ட சூட்டிங்கை மலேசியாவில் நடத்த இயக்குனர் திட்டமிட்டுள்ளார். விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதோடு படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Presentational grey line Presentational grey line

மீண்டும் தொடங்கிய பிரபு தேவா படத்தின் சூட்டிங்

மீண்டும் தொடங்கிய பிரபு தேவா படத்தின் சூட்டிங்படத்தின் காப்புரிமைTWITTER

சினிமாவில் நடிப்பு, நடன இயக்கம், இயக்குனர் என பிஸியாக வலம் வந்தவர் பிரபுதேவா. அதுவும் 2005க்கு பிறகு இயக்கத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். இதனால் ஹீரோவாக நடிப்பதை குறைத்தார். இந்த நிலையில் அவர் இயக்கத்தில் வெளியான சில படங்கள் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் நடிப்பதில் ஆர்வம்காட்ட தொடங்கினார்.

அதன் விளைவாக தேவி, குலேபாகவலி ஆகிய படங்களில் நடித்தார். மேலும் பல படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் யங் மங் சங் படமும் ஒன்று. புதுமுக இயக்குனர் அர்ஜூன் என்பவர் இயக்கும் இந்த படத்துக்கான சூட்டிங் ஒரு வருடத்திற்கு முன்பே தொடங்கியது.

ஆனால் ஒரு சில நாட்கள் மட்டுமே நடந்த யங் மங் சங் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த படத்துக்கான சூட்டிங்கை மீண்டும் ஈரோட்டில் தொடங்கியுள்ளனர். யங் மங் சங் படத்தில் லட்சுமி மேனன், ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Presentational grey line

ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்கான சூட்டிங் தொடக்கம்

ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்கான சூட்டிங் தொடக்கம்படத்தின் காப்புரிமைTWITTER

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கும் புது படத்தின் சூட்டிங் டார்ஜிலிங்கில் தொடங்கியுள்ளது. இதில் ரஜினிகாந்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகிறது. கபாலி, காலா ஆகிய படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த ரஜினிகாந்த், கார்த்திக் சுப்ராஜ் படத்தில் டை அடித்து நடிக்கிறார்.

இருந்தாலும் 45 வயது மிக்கவராக நடிக்கிறார். மேலும் ரஜினிகாந்த் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் ரஜினிகாந்த் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்றும் அதற்கான காட்சிகள் டார்ஜிலிங்கில் எடுக்கப்படுகிறது என்று தகவல் கிடைத்துள்ளது.

தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி பேராசிரியராக நடித்திருந்தார். அதற்கு பின் டான், ரோபோ உள்ளிட்ட பல கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் பேராசிரியராக மாறுகிறார். கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதால், ஒவ்வொரு காட்சியையும் ரசித்து எழுதியுள்ளார் என்று கூறப்படுகிறது. ஜூன் 7ம் தேதி தொடங்கியிருக்கும் புது படத்துக்கு 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

Presentational grey line

நாடோடிகள் 2 படத்தின் திரைப்பிடிப்பு பணிகள் நிறைவு

திரைத் துளிகள்

சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் சசிக்குமார். அந்த படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இவருடைய நடிப்பில் நாடோடிகள், சுப்ரமணியபுரம் உள்ளிட்ட பல படங்கள் வெற்றியடைந்துள்ளன.

ஆனால், பிரம்மன் படத்தில் இருந்து இறுதியாக வெளியான கொடிவீரன் வரை அவரின் அனைத்து படங்களும் தோல்வியடைந்துவிட்டன. இந்த நிலையில் தனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நாடோடிகள் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க முடிவெடுத்தார். சமுத்திரகனி இயக்கத்தில் உருவாகும் அந்த படத்தின் சூட்டிங் மார்ச் மாதம் தொடங்கியது. இதுக்கு பின் தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம் நடைப்பெற்றாதால் ஒரு மாதகாலம் சூட்டிங்கை நிறுத்தி வைத்திருந்தனர். இருந்தாலும் வேலை நிறுத்தம் முடிந்ததும் சூட்டிங்கை தொடங்கிய இயக்குனர் சமுத்திரகனி மிக குறுகிய நாட்களில் நாடோடிகள் 2 படத்தை படமாக்கியுள்ளார்.

இதற்கான அனைத்து காட்சிகளையும் கடந்த வெள்ளிக்கிழமையோடு எடுத்து முடித்துவிட்டார். இதை தொடர்ந்து போஸ்ட் புரெடெக்‌ஷன் வேலைகளுக்கு தயாராகிவிட்டார் சமுத்திரகனி. இந்த படத்தில் அஞ்சலி, அதுல்யா ரவி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். தொடர் தோல்விகளில் இருக்கும் சசிகுமாரை நாடோடிகள் 2 வெற்றி பாதைக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடோடிகள் படத்தை முடித்திருக்கும் சசிகுமார் மீண்டும் நாடோடிகள் 3 படத்திற்காக சமுத்திரகனியுடன் இணையவுள்ளதாக கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44430302

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.