Jump to content

நல்லாட்சி அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெறப்போவதாக கூட்டமைப்பு அறிவிப்பு


Recommended Posts

நல்லாட்சி அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெறப்போவதாக கூட்டமைப்பு அறிவிப்பு

 

 
 

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என கூறப்பட்ட புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் அரசாங்கம் ஆதரவு வழங்கப் போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்திற்கான ஆதவினை கூட்டமைப்பு வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே சர்வதேசமும் விரும்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.

எனினும், நல்லாட்சி அரசாங்கம் கூறியவாறு அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்வர்களின் பிரச்சினைக்கான தீர்வு, காணி விடுவிப்பு, புதிய அரசியல் யாப்பு திருத்தம் ஆகிய பணிகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன.

இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக பொது மக்கள், பொது அமைப்புக்கள் விமர்சனங்களை முன்வைத்து வந்திருந்த நிலையில் அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவினை வாபஸ் பெறவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அதேவேளை, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக இலங்கை தமிழரசுக் கட்சி நிறுத்தாது எனவும் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார்.

http://www.ibctamil.com/politics/80/101821

 

 

 

இனிமேலும் அரசுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்கிறது கூட்டமைப்பு!

தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினையை தீர்ப்பதற்கு புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டிய தேவை இருந்தமையாலேயே பலரது விமர்சனங்களையும் மீறி கூடிய காலம் அரசுக்கு ஆதரவு வழங்கியிருந்தோம். ஆனால் இனிமேலும் இவ்வாறு ஆதரவு வழங்க வேண்டும் என எவரும் எதிர்பார்க்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாள் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இனிமேலும் பொறுமையோடு இருக்க வேண்டும் என சர்வதேச சமூகம் கூட எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தீர்வுத் திட்டத்திலோ மக்களது அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதிலோ முன்னேற்றம் ஏற்படவில்லையாயின் நிர்வாக முடக்கல் போராட்டங்களைச் செய்வோம் என ஏற்கனவே நாம் கூறியிருந்தோம்.

குறிப்பாக 2014ம் ஆண்டே நாம் அதனைச் செய்வதற்கு ஆயத்தமாக இருந்த போது அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது.

அதன் பின்னர் புதிய அரசுக்கு நாம் ஒத்துழைப்பாகச் செயற்பட்டாலும் எமது இலக்குகளை நாம் மறந்து விடவில்லை. புதிய அரசுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டிய தேவை எமக்கு இருந்தது.

அவ் அவகாசத்தை நாம் கொடுத்திருக்கின்றோம். குறிப்பாக பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் நாம் அதனை அதிகமாகவே கடந்த மூன்றாண்டில் கொடுத்திருக்கின்றோம்.

அந்நேரத்தில் சர்வதேச சமூகமும் நாங்கள் சேர்ந்து இயங்கப வேண்டும் என எதிர்பார்த்திருந்தது.

நாம் அரசுக்கு ஆதரவு கொடுக்காததாலேயே அவர்களால் எதனையும் செய்ய முடியாமல் போனது என்ற நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே பலத்த விமர்சனங்களுக்கு மத்தியிலும் நாம் ஆதரவு வழங்கியிருந்தோம்.

ஆனாலும் இனிமேலும் நாம் அவ்வாறு தான் இருக்க வேண்டும் என எவரும் எதிர்பார்க்கவில்லை.

சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான தொடர்பினை பேணுகின்றவன் என்ற அடிப்படையிலும் அவர்களது நாடித்துடிப்பை அறிந்தவன் என்ற அடிப்படையிலும் இனிமேலும் நாமத் பொறுமையோடு இருக்க வேண்டும் என சர்வதேசம் கூட எதிர்பார்க்கவில்லை. இனிமேல் எதிர்ப்புகளை காட்டவேண்டும் என்றே சர்வதேசம் எதிர்பார்க்கின்றது.

அந்தவகையில் கடந்த வெள்ளிக்கிழமை யாழில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு மேற்கொண்ட நிர்வாக முடக்கல் போராட்டமானது வெறுமனே ஒத்திகை மாத்திரமே என்றார் சுமந்திரன் எம்.பி.

 

http://www.tamilwin.com/politics/01/185067?ref=home-feed

Link to comment
Share on other sites

உங்களின் சர்வதேசம் என்பது இந்தியா மட்டும் தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு தளபதிகளுக்கு மஹிந்தவுடன் தேனிலவு ஆரம்பமாயிட்டுது என்பதன் மறுவடிவமே அண்மைய அரசுக்கெதிரான போராட்ட ஒத்திகைகளும், ஆதரவு வாபஸ் வாங்கபோகும் எச்சரிக்கைகளும்.

கூடிய சீக்கிரம் ஐயாவுக்கு வழங்கப்பட்ட அதிரடிப்படை பாதுகாப்பு வாபஸ் வாங்கப்படலாம்.

Link to comment
Share on other sites

Quote

நல்லாட்சி அரசாங்கத்திற்கான ஆதவினை கூட்டமைப்பு வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே சர்வதேசமும் விரும்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அரசுக்கு ஆதரவு வழங்கச் சொல்லி எந்த சர்வதேச நாடு சொன்னது அப்போது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேட்பாளர்கள்  யாரென்று தீர்மானிப்பது கூட்டமைப்பா? தமிழ் அரசு கட்சியா?

Link to comment
Share on other sites

1 hour ago, Eppothum Thamizhan said:

வேட்பாளர்கள்  யாரென்று தீர்மானிப்பது கூட்டமைப்பா? தமிழ் அரசு கட்சியா?

சம்பந்தரும் சுமந்திரனும் மட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2018 at 12:46 PM, நவீனன் said:
 

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என கூறப்பட்ட புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் அரசாங்கம் ஆதரவு வழங்கப் போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

 நடு ரோட்டிலை நிக்கப்போறியள் கவனம்.....அவையை விட்டால் உங்களுக்கு வேறை ஆர் இருக்கினம்? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மகிந்த கையில் வந்துவிடும் என்பதை சுமந்திரன் இப்போதே அறிந்து அதன் பக்க விளைவுகளை ஆராய்ந்து விட்ட அறிக்கை இது.
ஒருமுறையாவது  ஸ்ரீலங்காவின் அமைச்சரவையை ஒரு எட்டு  எட்டிப்பார்க்காமல் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கத் தயாராக இல்லை

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

 நடு ரோட்டிலை நிக்கப்போறியள் கவனம்.....அவையை விட்டால் உங்களுக்கு வேறை ஆர் இருக்கினம்? :(

பழைய குருடி கதவைத் திறவடி.... பிறகென்ன இந்தியாதான் தஞ்சம்.!  Details zu ähnlichen Bildern anzeigen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மகிந்த கையில் வந்துவிடும் என்பதை சுமந்திரன் இப்போதே அறிந்து அதன் பக்க விளைவுகளை ஆராய்ந்து விட்ட அறிக்கை இது.
ஒருமுறையாவது  ஸ்ரீலங்காவின் அமைச்சரவையை ஒரு எட்டு  எட்டிப்பார்க்காமல் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கத் தயாராக இல்லை

இணக்க அரசியல் என்று வந்த பின்பு அரசுடன் இணையத்தான் வேண்டும்...?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.