Jump to content

நிம்மதியான சிகரெட்


Recommended Posts

நிம்மதியான சிகரெட்

- பா.திருச்செந்தாழை

ஓவியங்கள் : ரமணன்

 

120p2_1525086894.jpg

ன்று வரும் வழியில் பாதிரி செல்லையாவைப் பார்த்தேன். காய்கறி வாங்கிக்கொண்டு சைக்கிளில் வந்தவர், என்னைப் பார்த்ததும் நிதானித்தார். “பச்சை படியும்விதம் ஷேவ் செய்யப்பட்டு, மீசையற்ற மொழுமொழு கன்னங்கள் கொண்ட ஆண்களைப் பார்த்தால் gay போலவே தோன்றுகிறது” என்றவுடன், 120p3_1525087192.jpgதிடுக்கிட்டு கன்னத்தைத் தடவியபடி சிரித்தார். எனது வெள்ளைப் பக்கங்கள், அவரது கறுப்புப் பக்கங்கள் மீது இருவரும் பரஸ்பர மரியாதைகொண்டிருந்தோம். உரையாடலைக் காய்கறிகளின் நச்சுத்தன்மையிலிருந்து தொடங்கியவர் பிறகு, சர்ச்சில் சிறு வேலைகள் செய்யும் லாரன்ஸும், விக்டரும் குடித்துவிட்டு சர்ச்சுக்கு வருவது குறித்தும், தேர்தல் காலங்களில் தேவாலயத்தை அம்போவென விட்டுச் சென்றுவிடுவது பற்றியும் குறைபட்டுக்கொண்டு, “சர்ச்சுக்கு வரும் பெண் பிள்ளைகள் ஒரு கையில் பைபிளும், மறு கையில் மொபைல் போனும் வைத்தபடி ஜெப வேளைகளில் ரகசியமாக அதன் வெளிச்சத் திரைகளைப் பார்த்து கீழ்த்தரமாகச் சிரித்துக்கொள்வதெல்லாம் ஊழிக்காலத்தின் ஆரம்பமின்றி வேறில்லை” என்றார். நான் மெள்ளப் புன்னகைத்தபடி, “பேசாமல் இயேசுவை ஒரு APP-ஆக மாற்றிவிடுவதுதான் எதிர்காலத்தின் மீதான சிறந்த பணி” என்றேன். அவர் அறிவியல் நகைச்சுவைகள் தனக்குச் சட்டென புரியாதென்றார். நான் தோளைக் குலுக்கிக்கொண்டேன். பிறகு, என் எழுத்து வேலை குறித்து அவர் வினவியவுடன் நான் லேசாகச் செருமியபடி “நிகழ் சமூகத்தின் மூளை, குண்டியிலும்... இதயம் பாதத்திற்குக் கீழேயும் இடம்மாறிவிட்ட பின்பு அதன் மனம் குறித்தும் அறம் பற்றியும் மதிப்பீடு செய்ய, மீண்டுமொருமுறை பிறந்து வளர வேண்டுமெனக் குழம்பினேன். அவரும் என்னைச் சமாதானப்படுத்த “இப்போதெல்லாம் பாவமன்னிப்பு வேண்டி யாரும் வருவதில்லை” என்றார். நான் சன்னமாக, “இப்போது பாவமென்பதே இல்லை!” என்றேன்.

“பேசாமல் சொந்தமாக ஒரு கனவுநிலத்தை உருவாக்கி, அதிலேயே படைப்புகளை உருவாக்கவேண்டியதுதான்” என விரக்தி தளும்ப நான் கூறி முடிக்கும் முன் அவர் மிகவும் சிரத்தையாக, “பரமபிதாவின் ராஜ்ஜியம் அங்கும் விரியட்டும்” என்றார். நான் கொஞ்சம் சினமேறி வாயெடுப்பதற்குள் பக்கத்து டீக்கடை வானொலியில் “ஏங்க... நானே பீடி வாங்க பத்து காசில்லாம பிச்சையெடுத்துக்கிட்டிருக்கேன். இதுல நீங்க வேற...” எனக் குரல் ஒலித்ததும் நான் சட்டென அசரீரி கேட்டதுபோல லகுவானேன். பாதிரி செல்லையாவோ “இவன் வேற...” என்றார் சலித்தபடி. பிறகு, தீவிர முகபாவனையைக் கொண்டுவந்தபடி “80-களில் பிறந்து 90-களில் உலகம் புரிய ஆரம்பித்தவர்கள் கிளாஸிக்கிற்கு நுனிவாலையும் நவீனத்திற்கு தலையையும் கொடுத்துவிட்டு பல்லிகளைப்போல அப்பிக்கிடக்கவேண்டியதுதான். சரி... நான் கொடுத்த ரஷ்ய இலக்கியங்களிலிருந்து ஏதேனும் திரட்ட முடிந்ததா உன்னால்...” என்றார். நானும் இறுக்கமான குரலுடன், “ஓ... எல்லா இங்கிலிஷ் வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு விஸ்கி பாட்டிலை வைத்தால் சந்தேகமற்ற ஒரு ரஷ்யப் பெயர் கிடைத்துவிடும் என்றேன். நொடித் தாமதத்திற்குப் பின்னால் வெடித்துச் சிரித்தவர், நீண்ட நாள்களுக்குப் பின்பாக சிகரெட் ஒன்றை ரகசியமாக இரவல் வாங்கிச் சென்றார்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.