Jump to content

`64 பவுண்டரிகள்; 7 சிக்ஸர்கள்!’ - ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 490 ரன்கள் குவித்த நியூசிலாந்து


Recommended Posts

`64 பவுண்டரிகள்; 7 சிக்ஸர்கள்!’ - ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 490 ரன்கள் குவித்த நியூசிலாந்து

 
 

அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. 

நியூசிலாந்து

 

Photo Credit: Twitter/ICC

அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற போட்டியில் முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸை கேப்டன் சூஸே பேட்ஸ் மற்றும் ஜெஸ் வாட்கின் ஆகியோர் தொடங்கினர். அயர்லாந்து பந்துவீச்சாளர்களை ஆரம்பம் முதலே பதம்பார்த்த இந்த இணை, முதல் விக்கெட்டுக்கு 18.5 ஓவர்களில் 172 ரன்கள் சேர்த்தது. வாட்கின் 59 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு மேடி கிரீனுடன் கைகோத்த சூஸே பேட்ஸ், அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 94 பந்துகளில் 151 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில், 24 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். இந்த இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த சேட்டர்த்வொயிட் 21 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஐந்தாவது விக்கெட்டுக்குக் களமிறங்கிய அமீலியா கெர் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த மேடி கிரீன், 77 பந்துகளில் 121 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதில், 15 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து வரலாறு படைத்தது. கெர் 81 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அயர்லாந்து அணி தரப்பில் காரா முர்ரே 10 ஓவர்கள் பந்துவீசி 119 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சர்வதேச அரங்கில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீராங்கனை என்ற மோசமான சாதனையை இதன்மூலம் அவர் படைத்தார். அதேபோல், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து மகளிர் அணி குவித்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதேபோல், மகளிர் கிரிக்கெட்டில் 21 ஆண்டுகளுக்கு முன்னர் படைத்த தனது சொந்த சாதனையை நியூசிலாந்து மகளிர் அணி இன்று முறியடித்தது. கடந்த 1997ம் ஆண்டில் பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 455 ரன்கள் குவித்திருந்தது. சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவே அதிகபட்ச ஸ்கோராக இருந்துவந்தது.   
 

https://www.vikatan.com/news/tamilnadu/127182-new-zealand-women-score-world-record-4904-in-odis.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.