Jump to content

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டம்மான் தலைவருக்கு இறுதிவரை விசுவாசமாக இருந்தவர். கருணா அப்படி இல்லை. 

சுயநலத்திற்காக ஒரு இனத்தின் இருப்பையே ஆட்டம் காணச்செய்துவிட்டு மகிந்தவோடு கூட்டுச்சேர்ந்துள்ளார். 

பீஷ்மர் இன்னும் பல விடயங்களைச் சொல்லுவார்.

Link to comment
Share on other sites

  • Replies 315
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தினதும்,இயக்கத்தினதும் அஸ்தமனத்திற்கு தனி தனியாக ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்

பொதுவாக ஒரு காரணமும் இருந்தது ,அது மிக நீண்டகாலமாக ஒரு போராட்டத்தை நடத்தியது என்பது!

சர்வவல்லமை பொருந்திய ஒரு அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடும் ,வளங்களிலும் மக்கள் தொகையிலும்

மிகவும் சொற்பமாக உள்ள ஒரு சிறுபான்மையினம் எதிரிக்கு மிக நீண்டகால அவகாசம் கொடுத்தால் ,

என்றோ ஒருநாள் அவன் தன்னிடமுள்ள சகல வழிகளையும்,தந்திரங்களையும் பயன்படுத்தி எம்மை நசுக்கிவிடுவான் என்பதை,        ஆயுதம் தாங்கி இனிமேல் உலகில் அநீதியான அரசுகளுக்கெதிராக நீதிகேட்டு போராட நினைக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கு சொல்ல..

 அழிந்துபோன எமது போராட்ட சக்தியும்,இன்றும் முள்ளிவாய்க்கால் நிலப்பரப்பில் மிச்சம்மீதியாய் இருந்து நடந்து செல்பவர்களின் காலில் தடக்குபடும் எமது இனத்தின் மனித எலும்புகளின் எச்சங்களும்... ஒரு அரிவரி பாடமாக இருப்போம்.

யார் பிரிந்தாலும் பிரியாவிட்டாலும் எமதுபோராட்டம் இப்படித்தான் அழிவிற்கு வந்திருக்கும்,

ஏனென்றால் இறுதிபோரில் வென்றது ஆட்பலம் வீரம் என்பவை அல்ல, வென்றது.. போதிய அளவு கால இடைவெளியில் அளவிற்கு அதிகமாக எதிரி சேர்த்துவைத்த கனரக ஆயுதங்களும் தொழில்நுட்பமுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தராகி சிவராம் எழுதிய கட்டுரை ஒன்றிலும் புலிகள் ஆனையிறவைக் கைப்பற்றியதும் அதன் பின்னர் தீச்சுவாலை நடவடிக்கையை முறியடித்ததும் ஆயுதப் போராட்டத்தின் உச்சம் என்று கூறியிருந்தார். அதன் பின்னர் யுத்தம் இல்லாமல் ஒரு தீர்வுக்குப் போயிருக்கவேண்டும். ஆனால் தமிழீழம் என்ற இலட்சியத்தை கைவிடாமல் தீர்வு ஒன்றையும் எட்டியிருக்கமுடியாது. அதனைக் கைவிட்டாலும் தமிழீழ இலட்சியத்திற்காக மரணித்த போராளிகளுக்கு துரோகம் செய்ததாக கருதப்படும் இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கும்.

ஒரு இனத்தின் இருப்பா அல்லது இலட்சியமா முக்கியம் என்ற கேள்விக்கான விடையை தூரநோக்கத்துடன் எடுக்கவில்லை என்று மட்டும் சொல்லமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

ஒரு இனத்தின் இருப்பா அல்லது இலட்சியமா முக்கியம் என்ற கேள்விக்கான விடையை தூரநோக்கத்துடன் எடுக்கவில்லை என்று மட்டும் சொல்லமுடியும்.

அதைவிட இந்த அவல நிலைக்கு மிகவும் பிரதானமான காரணி எமது இனம் .... நிச்சயமாக எமது இனம்.. வன்னியில் நடந்த அவலத்தின்  பொது வடக்கு கிழக்கில்  அமைதியாக இருந்த எமது இனம் .... தான் மட்டும் தப்பினால் போதும் என்று அமைதி காத்த எமது இனம் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வாத்தியார் said:

அதைவிட இந்த அவல நிலைக்கு மிகவும் பிரதானமான காரணி எமது இனம் .... நிச்சயமாக எமது இனம்.. வன்னியில் நடந்த அவலத்தின்  பொது வடக்கு கிழக்கில்  அமைதியாக இருந்த எமது இனம் .... தான் மட்டும் தப்பினால் போதும் என்று அமைதி காத்த எமது இனம் ...

அமைதியாக இருந்தது என்று சொல்லமுடியாது. மகிந்த அரசின் அடக்குமுறைக்குள் உள்ளே குமுறிக்கொண்டிருந்தார்கள். ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம் கூடச் செய்யமுடியாதவாறு அடக்கப்பட்டிருந்தார்கள். தமிழ் அரசியல் தலைமைகள் தலைமைதாங்கி எதிர்ப்பை தெரிவிக்கமுடியாமல் கோழைகளாக இருந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, வாத்தியார் said:

அதைவிட இந்த அவல நிலைக்கு மிகவும் பிரதானமான காரணி எமது இனம் .... நிச்சயமாக எமது இனம்.. வன்னியில் நடந்த அவலத்தின்  பொது வடக்கு கிழக்கில்  அமைதியாக இருந்த எமது இனம் .... தான் மட்டும் தப்பினால் போதும் என்று அமைதி காத்த எமது இனம் ...

அந்த  நேரம்  யாழ்  பல்கலைக்கழகத்தின் இறுதி  ஆண்டு மருத்துவ  மாணவராக  இருந்த ஒருவருடன் பேசக்கிடைத்தது

அவர்  சொன்னார்

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள்   உட்பட  பல ஆயிரக்கணக்கான  இளைஞர்களும் யுவதிகளும்  பயிற்சிக்குள்ளாக்கப்பட்டு

அழைப்புக்காக  காத்திருந்தார்கள்

அழைப்பு  வரவே  இல்லை

எதைச்செய்தும்  பயன் இல்லை  என்ற  முடிவுக்கு  தலமை  வந்திருந்தது என்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டம்மான்- கருணா முதலாவது மோதல்!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 15

May 23, 2018
ltte-pottan.jpg

பீஷ்மர்

ஜெயசிக்குறு களமுனையில் 1997ஆம் ஆண்டு நடந்த சம்பவமொன்றை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். மாங்குளத்திற்கு அண்மையாக நிலைகொண்டிருந்த ஜெயந்தன் படையணி போராளிகளை மாற்றிவிடும்போது, புலனாய்வுத்துறையின் இரகசிய உறுப்பினர்களை கவனயீனமாக கையாளப்பட்டிருந்தனர், அந்த களமுனைக்கு கருணாதான் பொறுப்பானவர், இதனால் கருணாவிற்கும் பொட்டம்மானிற்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்ததென்பதை குறிப்பிட்டிருந்தோம்.

பொட்டம்மான்- கருணாவிற்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதற்கு, மாங்குளத்தில் நடந்த அந்த சம்பவம் மட்டுமே காரணமா என்று கேட்டால்… பதில் இல்லையென்பதே!

பொட்டம்மானிற்கும் கருணாவிற்குமிடையில் கிட்டத்தட்ட பதினேழு வருடத்திற்கும் அதிகமான உள்மோதல் இருக்கிறது. இப்படி நாம் குறிப்பிடுவது பலரிற்கு அதிர்ச்சியாக இருக்கலாம். இத்தனை நாளாக நாம் இதை அறியாமல் விட்டுவிட்டோமே என்றும் நினைக்கலாம். விடுதலைப்புலிகளிற்குள் உள் மோதலா என்றும் சிலர் நினைக்கலாம்.

விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் தளபதிகளிற்குள் உள்மோதல் வருவது அரிது. அதற்காக அப்படியொரு மோதல் வரவேயில்லையென்று அர்த்தமல்ல. முன்னரும் மோதல் நடந்திருக்கிறது. அதில் பகிரங்கமாக வெளியில் தெரிந்த பெரிய மோதல் மாத்தையா- கிட்டு மோதல். இதைவிட, வேறு தளபதிகளிற்குள் சின்னசின்ன மோதல் அடிக்கடி இடம்பெற்றுக்கொண்டுதானிருந்தது.

Image result for à®à®¿à®à¯à®à¯ கிட்டு- மாத்தையாவுடன் பிரபாகரன்

1984 இல் கிட்டு யாழ்ப்பாண தளபதியானார். மாத்தையா வன்னித்தளபதி. பொதுவாகவே தமிழ் சமூகத்திற்குள் யாழ்ப்பாண மேலாதிக்க மனோபாவம் இருக்கும். வன்னிக்குள் யாழ் உணவகம், யாழ் கல்விச்சாலை, யாழ் உற்பத்திகள் என்ற பெயரில் பல நிறுவனங்கள் இருக்கும். ஆனால் யாழ்ப்பாணத்திற்குள் வன்னி உணவகம் என்றோ, கிளிநொச்சி பாதணியகம் என்றோ கிடையாது. அரசஅதிகாரிகள் என்றாலும் சம பொறுப்பில் இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றுபவர் வன்னிக்குள் கடமையாற்றுபவர்களை விட அதிக முக்கியத்துவம் பெறுவார்கள். புலிகளிற்குள்ளும் இதுதான் நடந்தது.

கிட்டு விரைவில் புகழ்பெற்றுவிட்டார். கிட்டுவை பிரபாகரனிற்கும் நன்றாக பிடித்தது. அதிகமாக நம்பினார். வெளிநாட்டில் இருந்து இந்தியா வழியாக வரும் ஆயுதங்கள் யாழ்ப்பாணத்திற்குத்தான் வந்துசேர்ந்தது. அப்பொழுது பிரபாகரன் இந்தியாவில் தங்கியிருந்தார். யாழ்ப்பாணத்தை கிட்டு, மன்னாரை விக்டர், வன்னியை மாத்தையா, திருகோணமலையை புலேந்திரன், மட்டக்களப்பை குமரப்பா கவனித்துக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்திற்கு வரும் ஆயுதங்கள் முறையாக பகிரப்படுவதில்லையென மாத்தையா நினைத்தார். புலேந்திரனிடமும் இந்த அதிருப்தி இருந்தது. யாழ்ப்பாணத்தில் புலிகள் அதிக நிதி வசூலித்தார்கள். ஆனால் அதில் கணிசமான பணம் யாழ்ப்பாணத்திலேயே புலிகளால் செலவிடப்பட்டது. புலிகளின் நிர்வாக மையம் யாழ்ப்பாணத்தில் இருந்ததும் அதற்கு ஒரு காரணம்.

மாத்தையா இந்தியா போகும்போதெல்லாம் வன்னிக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக பிரபாகரனிடம் முறையிட்டார். கிட்டுவும் இந்தியா போகும்போது பிரபாகரன் இதுபற்றி பேசியிருக்கிறார். ஆனால் யாழ்ப்பாண களம்தான் முக்கியமானதென்ற அபிப்பிராயம் பிரபாகரனிடமும் இருந்தது.

Image result for à®à®¿à®à¯à®à¯

கிட்டுவின் நடவடிக்கைகளால் எரிச்சலடைந்த மாத்தையா வன்னிக்குள் ஒரு வரி நடைமுறையை கொண்டு வந்தார். யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை கொண்டு செல்லும் லொறிகள் கிளிநொச்சியில் வரி செலுத்த வேண்டும். இதில் சிக்கல் என்னவென்றால், யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை கொண்டுவரும் வர்த்தகர்கள் ஏற்கனவே யாழில் வரி கட்டிக்கொண்டிருந்தார்கள். இரண்டு இடத்தில் வரி கட்டவேண்டும் என்றதும், வர்த்தகர்கள் நிலைகுலைந்து விட்டார்கள். வர்த்தகர்கள் குழுவாகவும் தனிப்பட்டரீதியிலும் கிட்டுவை சந்தித்து முறையிட்டனர். அப்பொழுது வர்த்தகர்களிடம் கிட்டு சொன்ன பதில்- “வன்னி வரியை நான் கட்டுப்படுத்த முடியாது. நான் தலைவருடன் பேசுகிறேன். எதற்கும் நீங்களும் ஒரு கடிதம் மூலம் தலைவரிடம் முறையிடுங்கள். அந்த கடிதத்தின் பிரதியை என்னிடம் தாருங்கள். நானும் தலைவரிடம் அதை சேர்ப்பிக்கிறேன்“ என்பதே.

 

இந்த பிரச்சனை பிரபாகரன் வரை சென்றது. ஆனால் மாத்தையா கிளிநொச்சி வரியை நிறுத்திக்கொள்ளவேயில்லை.

கிட்டு மீது யாழ்ப்பாணத்தில் கைக்குண்டு தாக்குதல் நடந்தபோது, அது மாத்தையா அணியின் வேலையாக இருக்கலாமென்ற அபிப்பிராயம் புலிகளின் ஒரு சிறுபகுதியிடம் இருந்தது. மாத்தையா- கிட்டு மோதலை அறிந்து வைத்திருந்த மாற்று இயக்கங்கள், மாத்தையா குறூப்தான் கைக்குண்டை வீசியதாக கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்யாத குறையாக சொன்னார்கள். அவர்கள் இதை தொடர்ந்து சொல்லியும் எழுதியும் வந்ததால் மக்களில் ஒரு பகுதியினரும் அதை நம்பினார்கள்.

உண்மையில் கிட்டுவுக்கு கைக்குண்டு வீசியது மாத்தையா குழு அல்ல. புளொட்டில் இருந்து பிரிந்து தீப்பொறி என்ற குழு தனியாக செயற்பட்டது. அவர்கள்தான் இந்த தாக்குதலை செய்தனர். அந்த குழுவின் பத்து, பதினைந்து பேர்தான் இருந்தனர். இந்த தாக்குதலுடன் இரகசியமாக கொழும்பு சென்றுவிட்டனர். பின்னர் வெளிநாடுகளிற்கு சென்றுவிட்டனர். இந்த கைக்குண்டு தாக்குதலை நடத்தியவர்கள் இப்பொழுது கனடாவில் இருக்கிறார்கள். யுத்தம் முடியும் வரை இதற்கு அவர்கள் பொறுப்பேற்கவில்லை. புலிகளின் எதிர்வினை எப்படியிருக்குமென தெரியாதென்ற பயத்தில் சத்தமின்றி இருந்து விட்டார்கள். யுத்தம் முடிந்த பின்னர் இப்பொழுதுதான் யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்கிறார்கள்.

 

Image result for பà¯à®à¯à®à®®à¯à®®à®¾à®©à¯

புளொட்டில் நடந்த உள் படுகொலைகளை புதியதோர் உலகம் என்ற நாவலாக எழுதிய கோவிந்தனும் தீப்பொறி குழுவில்தான் இருந்தார். இப்பொழுது கனடாவில் உள்ள கந்தர்மடத்தை சேர்ந்த ஒருவரும் தீப்பொறி குழுவில் இருந்தார். புலிகளின் கட்டுப்பாட்டில் 1990இல் யாழ்ப்பாணம் இருந்தாலும் இவர் வவுனியா, மன்னார் காடுகளிற்குள்ளால் கொழும்பிலிருந்து தமது அமைப்பு ஆட்களை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்து கொண்டிருந்தார். இப்படி ஒருமுறை வந்து கோவிந்தன், செல்வியுடன் (கவிஞர் செல்வி) தொடர்பேற்படுத்தி, மீள அமைப்பை யாழ்ப்பாணத்திற்குள் செயற்பட முயற்சித்த சமயத்திலேயே கோவிந்தனும், செல்வியும் புலிகளால் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் புலிகளின் சிறைச்சாலையில் கொல்லப்பட்டனர்.

தீப்பொறி குழுவின் தாக்குதலை மாத்தையாவின் தாக்குதலாக இன்றும் பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். 1993இல் புலிகளும் அப்படித்தான் நம்பினார்கள். மாத்தையா புலிகளிற்கு எதிராக சதி செய்தாரா என்பதற்கு அப்பால், கிட்டு மரணமானதும் புலிகளின் சந்தேகம் மாத்தையா மீது விழுந்தது. காரணம், பழைய கிட்டு- மாத்தையா மோதல்.

இரண்டு தளபதிகளிற்கிடையிலுமான மோதல் 1994இல் புலிகளிற்குள் பெரிய புயலை வீசச்செய்தது. சுமார் நானூறு வரையான போராளிகள் கொல்லப்பட்டனர். கிட்டுவும் இல்லை. மாத்தையாவும் இல்லை.

இதற்கு பின்னர் உக்கிரமாக தளபதிகளிற்குள் நடந்த உட்பகை, பொட்டம்மான்- கருணா விற்கிடையில் நடந்ததுதான். இதன் முடிவு என்னவென்பதை நாம் உங்களிற்கு சொல்ல வேண்டியதில்லை. தமிழர் தரப்பின் உள்ளக மோதல்கள்தான் நமது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

 

சரி, விடயத்திற்கு வருகிறேன். பொட்டம்மானிற்கும் கருணாவிற்குமிடையிலான மோதல் எப்படி ஆரம்பித்தது?

(தொடரும்)

 

http://www.pagetamil.com/5784/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎22‎/‎2018 at 9:49 AM, கிருபன் said:

பொட்டம்மான் தலைவருக்கு இறுதிவரை விசுவாசமாக இருந்தவர். கருணா அப்படி இல்லை. 

சுயநலத்திற்காக ஒரு இனத்தின் இருப்பையே ஆட்டம் காணச்செய்துவிட்டு மகிந்தவோடு கூட்டுச்சேர்ந்துள்ளார். 

பீஷ்மர் இன்னும் பல விடயங்களைச் சொல்லுவார்.

பொட்டு,கடைசி வரைக்கும் தலைவரோடு இருக்கத் தானே வேண்டும் ...தானா,கருணாவா என்ட  போட்டியில் அவரை இயக்கத்தை விட்டு துரத்தியவரே  இவர் தானே...இருந்து பாருங்கள் இன்னும் நிறைய வரும் ....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

பொட்டு,கடைசி வரைக்கும் தலைவரோடு இருக்கத் தானே வேண்டும் ...தானா,கருணாவா என்ட  போட்டியில் அவரை இயக்கத்தை விட்டு துரத்தியவரே  இவர் தானே...இருந்து பாருங்கள் இன்னும் நிறைய வரும் ....
 

பொட்டம்மான் சுயநலத்திற்காக சூழ்ச்சி செய்தவரில்லை. அவரும் தன்னையும் தனது குடும்பத்தையும் தனிநாட்டுக்கான போரில் ஆகுதியாக்கியவர்களில் முக்கியமானவர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

பொட்டம்மான் சுயநலத்திற்காக சூழ்ச்சி செய்தவரில்லை. அவரும் தன்னையும் தனது குடும்பத்தையும் தனிநாட்டுக்கான போரில் ஆகுதியாக்கியவர்களில் முக்கியமானவர்.

 

 

மற்றவர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற மாதிரி கருணாவையும் தன்னுடைய ஆளுமைக்குள் வைத்திருக்கலாம் என்று பொட்டு நினைத்தார்...அது சரி வரேல்ல...இயக்கம்  பிரிஞ்சது தான் மிச்சம்...கருணா பிரிஞ்சது சுயநலம் தான்...ஆனால் பிரித்தது அதை விட சுயநலம் ...

 மனைவி  எங்கை சண்டைக்கு போனவ?.(பொட்டாரே போகேல்ல).....மூத்த பிள்ளைக்கே அந்த நேரம் 18 வயசுக்குள் தான் இருக்கும்....சில நேரம் கடைசி யுத்தத்தில் பங்கு பற்றி இருக்கலாம்...காணாமல் போனவர்களின் லிஸ்ட்டில் பேர் வந்து இருக்கு பார்க்கேல்லையா?

ஊரான் பிள்ளைகளை எல்லாம் பலவந்தமாய் இயக்கத்திற்கு கொண்டு வந்தவை தங்கட குடும்பத்தையும் தியாகம் செய்யத் தான் வேண்டும் .. 

கருணாவும் சரி ,பொட்டும் சரி தங்கட சுயநலத்திற்காக இயக்கத்தை அழித்திடடினம் (தெரிந்தோ/தெரியாமலோ)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரதி said:

 

மற்றவர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற மாதிரி கருணாவையும் தன்னுடைய ஆளுமைக்குள் வைத்திருக்கலாம் என்று பொட்டு நினைத்தார்...அது சரி வரேல்ல...இயக்கம்  பிரிஞ்சது தான் மிச்சம்...கருணா பிரிஞ்சது சுயநலம் தான்...ஆனால் பிரித்தது அதை விட சுயநலம் ...

 மனைவி  எங்கை சண்டைக்கு போனவ?.(பொட்டாரே போகேல்ல).....மூத்த பிள்ளைக்கே அந்த நேரம் 18 வயசுக்குள் தான் இருக்கும்....சில நேரம் கடைசி யுத்தத்தில் பங்கு பற்றி இருக்கலாம்...காணாமல் போனவர்களின் லிஸ்ட்டில் பேர் வந்து இருக்கு பார்க்கேல்லையா?

ஊரான் பிள்ளைகளை எல்லாம் பலவந்தமாய் இயக்கத்திற்கு கொண்டு வந்தவை தங்கட குடும்பத்தையும் தியாகம் செய்யத் தான் வேண்டும் .. 

கருணாவும் சரி ,பொட்டும் சரி தங்கட சுயநலத்திற்காக இயக்கத்தை அழித்திடடினம் (தெரிந்தோ/தெரியாமலோ)

 

 

தெரிந்துதான் அடிபட்டவை ஆனால் ஆயதம் மவுநித்தபின் பத்து வருடங்களின் பின் தமிழ் மக்களின் தே000000 கர்ணாவை விட பாலசிங்கத்தை வி000பொட்ட0000 தெளிவா தெரிந்து இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

மற்றவர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற மாதிரி கருணாவையும் தன்னுடைய ஆளுமைக்குள் வைத்திருக்கலாம் என்று பொட்டு நினைத்தார்...அது சரி வரேல்ல...இயக்கம்  பிரிஞ்சது தான் மிச்சம்...கருணா பிரிஞ்சது சுயநலம் தான்...ஆனால் பிரித்தது அதை விட சுயநலம்

கருணா சொன்னது போலவே வடக்கர்கள் (அதாவது யாழ்பாணிகள்) கிழக்கர்களை (அதாவது மட்டக்கிளப்பாரை), அல்லது நீங்கள்குறிப்பிட்டு சொன்னது  போலவே பொட்டர் கருணாவை அடக்கி வைத்திருக்கலாம் என்று நினைத்தை, உடைத்த கருணாவை, கருணாவுடன் பிரிந்தவர்கள், முன்பு போலவே கேட்டுக் கேள்வி இன்றி பணம் வருவதை விருப்பியோரை தவிர,  ஏன் கருணாவிடம் இருந்து பிரிந்தனர். இதில் முக்கியமாக, கருணாவின் மெய்ப்பாதுகாவல் துறைக்கு தலைமை தாங்கிய வரதன் மற்றும் அணியினர்.

சரி, பிழை, உட்பூசல்களுக்கு அப்பால், கொள்கையளவில் கருணா புலிகளிடம் இருந்து பிரிந்து, சிங்கள புலனாய்வுடன் இயங்கத்  தொடங்கிவிட்டார்.

ரணில் ஓர் இடத்தில மிகவும் வெளிப்படையாக கூறியிருந்தார், அதாவது கருணாவை புலிகள் எம்மை உளவு பார்ப்பதற்கு அனுப்பினார், ஆனால் கருணா புலிகளைப் பிரிந்து எம்பக்கம் வந்து விட்டார் என்று.

நீங்கள் எத்தனையோ விதமாக கருணாவை நியப்படுத்தலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

கருணாவும் சரி ,பொட்டும் சரி தங்கட சுயநலத்திற்காக இயக்கத்தை அழித்திடடினம் (தெரிந்தோ/தெரியாமலோ)

வேற்றுமை, கருணா தெரிந்தே கொள்கையைக் கைவிட்டது.

கருணா புலிகளின் ஓர் பகுதி தனது என்றும் பொட்டு தானும் தான் பொறுப்பாக இருக்கும் பகுதியும் புலிகளின் ஓர் பகுதியாக என்று எண்ணியதுமே வேறுபாடு.

பொட்டு பொறுப்பாகவிருந்த பகுதிக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டது, அந்தப் பகுதியின் எதிரியோடு இரண்டறக் கலந்த தன்மையில் இருப்பதால், பொட்டு விரும்பி அன்று.

எந்தவோர் சிறிய அரசிலும் அதுவே நடை முறை.

நீங்கள் ஒன்றை கவனிக்க தவறி விட்டீர்கள், பொட்டு எந்தவோர் முடிவையும் தானாக எடுக்கவில்லை. பெறப்பட்ட துல்லியமான தகவல்களை தலைமையிடம் அளித்து முடிவை தலைமையிடமே விட்டார். இதுவே, வலரசிலும் கூட வளமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

 

மற்றவர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற மாதிரி கருணாவையும் தன்னுடைய ஆளுமைக்குள் வைத்திருக்கலாம் என்று பொட்டு நினைத்தார்...அது சரி வரேல்ல...இயக்கம்  பிரிஞ்சது தான் மிச்சம்...கருணா பிரிஞ்சது சுயநலம் தான்...ஆனால் பிரித்தது அதை விட சுயநலம் ...

 மனைவி  எங்கை சண்டைக்கு போனவ?.(பொட்டாரே போகேல்ல).....மூத்த பிள்ளைக்கே அந்த நேரம் 18 வயசுக்குள் தான் இருக்கும்....சில நேரம் கடைசி யுத்தத்தில் பங்கு பற்றி இருக்கலாம்...காணாமல் போனவர்களின் லிஸ்ட்டில் பேர் வந்து இருக்கு பார்க்கேல்லையா?

ஊரான் பிள்ளைகளை எல்லாம் பலவந்தமாய் இயக்கத்திற்கு கொண்டு வந்தவை தங்கட குடும்பத்தையும் தியாகம் செய்யத் தான் வேண்டும் .. 

கருணாவும் சரி ,பொட்டும் சரி தங்கட சுயநலத்திற்காக இயக்கத்தை அழித்திடடினம் (தெரிந்தோ/தெரியாமலோ)

 

 

பிரிவது அவரவர் விருப்பம்.  

பிரிந்த பின் தனியாக, தனி மாநிலமாக, மாவட்டமாக நின்றிருக்கலாம்.

தான் துணை நின்று வளர்த்தெடுத்த போராட்டத்தை எதிரியுடன் நின்று அழிக்க உதவியதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.

தனிமன உழைச்சலுக்காக கொள்கை மாறியவர் அல்லவா?

எடுத்த சத்தியபிரமாணத்தையே தவறவிட்டவருக்கு எப்படி உங்களால் வக்காலத்து வாங்க முடிகின்றது????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா கொம்மான் ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை 

பொட்டு அவர்கள் பாரிய துரோகம் செய்துவிடடர்.

இதுக்கு பிறகும் ஏன் போராட்டம் தோத்தது என்று விவாதம் வேற. 
தமிழன் கேட்ட கேட்டுக்கு விடுதலைதான் ஒரு கேடு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டருக்கு வழங்கப்பட்ட பணியும் பொறுப்பும் இதர தளபதிகளுடன் ஒப்பிடமுடியாதது. உண்மையில் பொட்டர் தேசியதலைவரையும் கட்டுப்படுத்தும் பொறுப்பான பணியில் இருந்தார் என்றுதான் கருதவேண்டும். ஆனால் அந்தளவுக்கு சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இந்த ஜதார்த்தத்தை கடஞ்சா(Kadancha)  மட்டும் தனது கருத்தில் சிறிது தொட்டுச்சென்றிருக்கிறார். 
பொட்டரின் மேல் மற்றைய தளபதிகளின் விருப்பு வெறுப்பு தவிர்க்கமுடியாதது. தங்களை பிறர் ஒருவர் வேவுபார்ப்பதையும் அதை பின்னர் தலைமையிடம் கொண்டு செல்வதையும் எந்த தளபதியும் விரும்பியிருக்கமாட்டார்கள். அதனால் வந்ததுதான் பொட்டரின் மீதுவந்த காழ்ப்புணர்வு. இதுபோன்ற சம்பவங்களை  தளபதிகளுக்கிடையிலான தனிப்பட்ட மோதலாக சித்தரிப்பதும் தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

பிரிவது அவரவர் விருப்பம்.  

பிரிந்த பின் தனியாக, தனி மாநிலமாக, மாவட்டமாக நின்றிருக்கலாம்.

தான் துணை நின்று வளர்த்தெடுத்த போராட்டத்தை எதிரியுடன் நின்று அழிக்க உதவியதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.

தனிமன உழைச்சலுக்காக கொள்கை மாறியவர் அல்லவா?

எடுத்த சத்தியபிரமாணத்தையே தவறவிட்டவருக்கு எப்படி உங்களால் வக்காலத்து வாங்க முடிகின்றது????

 

ஐயோ அண்ணா மீண்டும் முதலில் இருந்தா ? ....வரலாற்றை திரும்பி பாருங்கோ 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, vanangaamudi said:

பொட்டருக்கு வழங்கப்பட்ட பணியும் பொறுப்பும் இதர தளபதிகளுடன் ஒப்பிடமுடியாதது. உண்மையில் பொட்டர் தேசியதலைவரையும் கட்டுப்படுத்தும் பொறுப்பான பணியில் இருந்தார் என்றுதான் கருதவேண்டும். ஆனால் அந்தளவுக்கு சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இந்த ஜதார்த்தத்தை கடஞ்சா(Kadancha)  மட்டும் தனது கருத்தில் சிறிது தொட்டுச்சென்றிருக்கிறார். 
பொட்டரின் மேல் மற்றைய தளபதிகளின் விருப்பு வெறுப்பு தவிர்க்கமுடியாதது. தங்களை பிறர் ஒருவர் வேவுபார்ப்பதையும் அதை பின்னர் தலைமையிடம் கொண்டு செல்வதையும் எந்த தளபதியும் விரும்பியிருக்கமாட்டார்கள். அதனால் வந்ததுதான் பொட்டரின் மீதுவந்த காழ்ப்புணர்வு. இதுபோன்ற சம்பவங்களை  தளபதிகளுக்கிடையிலான தனிப்பட்ட மோதலாக சித்தரிப்பதும் தவறு.

நீ என்ட பகுதிக்கு வந்து என்னையே  உளவு பார் எண்டிட்டு வாயை மூடிட்டு இருக்கோனுமாக்கும்.....கருணாவில் நம்பிக்கை இல்லாட்டில் எதற்கு மடடக்கிளப்புக்கு அனுப்பனும்?... வன்னியிலே ஒரு பதவியைக் கொடுத்து தங்கட பக்கத்தில் வைத்திருக்கலாமே!...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் உளவுப்பிரிவு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்க மாவட்டத் தளபதியின் அனுமதி தேவை என்று சொன்னால் எதை விவாதிக்கமுடியும்?

உளவுப் பிரிவு எல்லாம் தெரிந்திருந்தும் தலைவர் பிரபாகரனுக்கு தெரியப்படுத்தியிருந்தும் அவருக்கு கருணா மேல் அதீத நம்பிக்கை இருந்ததும் பலவீனமே. அது தெரிந்தும் தலைவரின் அனுமதி இன்றி தன்னிச்சையாக எதுவும் செய்யாமல் இருந்தது பொட்டரின் விசுவாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவட்டத்தை உளவு பார்க்க என்று  வந்து, தளபதியை உளவு பார்த்ததால் தான் பிரச்சனை ஆரம்பம் ...நீயும்,நானும் சரி சமனாக இருக்கும் போது என்னில் நம்பிக்கை இல்லாமல் என்னை உளவு பார்க்கிறாயோ என்ட கோபம்,ஈகோ …
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் உளவுப் பிரிவு, புலிகளின் இராணுவ கட்டமைப்பை விட கூடிய காலத்துக்கு முன்பு ஓர் சிறப்பு தேர்ச்சி அடிப்படையிலான (specialised professional)   முறையில் இயங்காத தொடங்கி விட்டது.

டெலோ இல் ஒப்பீட்டளவில் மூத்த உறுப்பினராகவும் அதே நேரத்தில் டெலோ இன்டெலிஜென்ஸ் இல் தொடங்குவதற்கு முயறசித்தவர்களில் ஒருவருடன் உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது.

அவரின் கூறுப் படி, மற்ற எல்லா இயக்கங்ளிற்கும் உளவு என்பது ஓர் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலையிலே தேவையாக நோக்கப்பட்டது. மற்றும் மற்ற எல்லா இயக்கங்ளிற்கும் உளவு அறிதல் பயிற்சி என்பது ராணுவ பயிற்சியின் ஓர் அங்கமாகவே வழங்கப்பட்டது, அதுவும் இந்தியா அல்லது லெபனான் மற்றும் பலஸ்தீனின் தொடர்புகளூடாகவே வழங்கப்பட்டது.

புலிகளும் அப்படி படர்ச்சி பெற்றுக்கொண்டார்கள். ஆனால், இறுதியில் மற்ற இயங்கங்கள் அறிந்தது, புலிகள் அதை விட வேறு ஓர் மிகவும் திறமை வாய்ந்த உளவு பிரிவிடம் பயிட்சி பெற்றார்கள் என்று தாம் வெகு காலம் பின்பு அறிந்ததாகவும், அதை புலிகள் கனகச்சிதமாக வெகுகாலம்  மறைத்துவிட்டதாகவும்.  

அந்த டெலோ மூத்த உறுப்பினர் அதை இஸ்ரேல் என்றும், அது mossad என்றும்  கூறினார். அனாலும் புலிகளின் உலவுப் பிரிவின் செயற்பாடுகள், அது மொசாட் மட்டுமல்ல, ஷின் பெட் (இஸ்ரேல் இன் உள்ளக புலனாய்வு துறை) இடமும் புலிகள் பயிட்சி பெற்றானோரோ என்று தாம்  சந்தேகிப்பதாக சொன்னார்.           

அவர் மேலும், புலிகள் சிக்னல் இன்டெலிஜென்ஸ் இல் பயிட்சி பெற்றவர்கள் (அந்த நேரத்தில்  மிகவும் அருமையும், மிகவும் செலவு கூடியதும்) தனிப்பட்ட காரணங்களிற்காக விலகியதாகவும், அவர்களை புலிகள் அரசியல் பிரிவில் உறக்க நிலையில் நீண்ட கால வைத்திருந்து, உளவு அமைப்பு  மாற்றிய பின்பே விடுவிக்கப்பட்டதாகவும்.  

அவரின் கருத்துப்படி, ஏனைய இயக்கங்களின் ஒவொரு அடுத்த அசைவுகளையும் புலிகள் அறிந்து வைத்திருந்ததாக சொன்னார்.         

இதை நான் இங்கு சொல்வத்திடற்கு காரணம், புலிகளின் புலனாய்வு அமைப்பு professional  ஆகவே செயற்றப்பட்டது.

அதாவது துல்லியமான தகவல்களை நேரத்திற்குள் தலைமையிடம்  கொண்டு செல்லுதல். தலைமை எடுக்கும் முடிவை செயற்ப்படுத்துவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

உளவுப் பிரிவு எல்லாம் தெரிந்திருந்தும் தலைவர் பிரபாகரனுக்கு தெரியப்படுத்தியிருந்தும் அவருக்கு கருணா மேல் அதீத நம்பிக்கை இருந்ததும் பலவீனமே. அது தெரிந்தும் தலைவரின் அனுமதி இன்றி தன்னிச்சையாக எதுவும் செய்யாமல் இருந்தது பொட்டரின் விசுவாசம்.

புலிகளின் உளவுப் பிரிவு, புலிகளின் இராணுவ கட்டமைப்பை விட கூடிய காலத்துக்கு முன்பு ஓர் சிறப்பு தேர்ச்சி அடிப்படையிலான (specialised professional)   முறையில் இயங்காத தொடங்கி விட்டது.

டெலோ இல் ஒப்பீட்டளவில் மூத்த உறுப்பினராகவும் அதே நேரத்தில் டெலோ இன்டெலிஜென்ஸ் இல் தொடங்குவதற்கு முயறசித்தவர்களில் ஒருவருடன் உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது.

அவரின் கூறுப் படி, மற்ற எல்லா இயக்கங்ளிற்கும் உளவு என்பது ஓர் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலையிலே தேவையாக நோக்கப்பட்டது. மற்றும் மற்ற எல்லா இயக்கங்ளிற்கும் உளவு அறிதல் பயிற்சி என்பது ராணுவ பயிற்சியின் ஓர் அங்கமாகவே வழங்கப்பட்டது, அதுவும் இந்தியா அல்லது லெபனான் மற்றும் பலஸ்தீனின் தொடர்புகளூடாகவே வழங்கப்பட்டது. அதுவும் இந்தியாவின் உளவு பயிற்சி கிந்தியாவின் தேவைகளுக்காக வழங்கப்பட்டது என்பதை ஓர் கணிசமான காலத்தின் பின்பே மற்ற இயக்கங்கள் உணர்த்தின என்றும் சொன்னார். 

புலிகளும் அப்படி படர்ச்சி பெற்றுக்கொண்டார்கள். ஆனால், இறுதியில் மற்ற இயங்கங்கள் அறிந்தது, புலிகள் அதை விட வேறு ஓர் மிகவும் திறமை வாய்ந்த உளவு பிரிவிடம் பயிட்சி பெற்றார்கள் என்று தாம் வெகு காலம் பின்பு அறிந்ததாகவும், அதை புலிகள் கனகச்சிதமாக மறைத்துவிட்டதாகவும்.  

அந்த டெலோ மூத்த உறுப்பினர் அதை இஸ்ரேல் என்றும், அது mossad என்றும்  கூறினார். அனாலும் புலிகளின் உலவுப் பிரிவின் செயற்பாடுகள், அது மொசாட் மட்டுமல்ல, ஷின் பெட் (இஸ்ரேல் இன் உள்ளக புலனாய்வு துறை) மற்றும் அமான் (இஸ்ரேல் இன்  ராணுவ புலனாய்வு) இடமும் புலிகள் பயிட்சி பெற்றானோரோ என்று தாம்  சந்தேகிப்பதாக சொன்னார்.        

அவர் மேலும், புலிகள் சிக்னல் இன்டெலிஜென்ஸ் இல் பயிட்சி பெற்றவர்கள் (அந்த நேரத்தில்  மிகவும் அருமையும், மிகவும் செலவு கூடியதும்) தனிப்பட்ட காரணங்களிற்காக விலகியதாகவும், அவர்களை புலிகள் அரசியல் பிரிவில் உறக்க நிலையில் நீண்ட கால வைத்திருந்து, உளவு அமைப்பு  மாற்றிய பின்பே விடுவிக்கப்பட்டதாகவும்.          

எனவே, இதை புலிகல் சரியானா தொழில் முறை (PROFESSIONaL )ஆலோசனை பெற்றே செய்திருக்கின்றனர் என்பது தெளிவு.

இதை நான் இங்கு சொல்வத்திடற்கு காரணம், புலிகளின் புலனாய்வு அமைப்பு professional  ஆகவே செயற்றப்பட்டது.

அதாவது துல்லியமான தகவல்களை நேரத்திற்குள் தலைமையிடம்  கொண்டு செல்லுதல். தலைமை எடுக்கும் முடிவை செயற்ப்படுத்துவது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

 

ஐயோ அண்ணா மீண்டும் முதலில் இருந்தா ? ....வரலாற்றை திரும்பி பாருங்கோ 

 

வரலாறு???????
எந்தளவிற்கு உண்மை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

மாவட்டத்தை உளவு பார்க்க என்று  வந்து, தளபதியை உளவு பார்த்ததால் தான் பிரச்சனை ஆரம்பம் ...நீயும்,நானும் சரி சமனாக இருக்கும் போது என்னில் நம்பிக்கை இல்லாமல் என்னை உளவு பார்க்கிறாயோ என்ட கோபம்,ஈகோ

அக்கோய் ....கும்மான் தாக்குதல்/ கட்டளை தளபதி ...பொட்டர் புலனாய்வுப்பிரிவு தளபதி எல்லோரையும் உளவு பார்ப்பது அவரது Duty 
கும்மானின் நாற்றத்தை முதலிலேயே மோந்து பிடித்தாரா இல்லையா பொட்டர் ....?.அவர் அவரது கடமையை சரியாகத்தான் செய்திருக்கிறார்.
புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையாவின் நாற்றத்தையும் ஈகோ,பீகோ என்று பார்த்து  மோந்து பிடிக்காமல் விட்டிருந்தால் போராட்டம் எப்போதோ காலி  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டம்மானின் மனைவியின் சகோதரரின் மரணத்திற்கு காரணம் கருணா?- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 16

May 26, 2018
main-qimg-992c9f5d302b67783aa420e31cac01 மட்டக்களப்பு தளபதியாக செல்வதற்கு முன்னர் கருணா

பொட்டம்மான்- கருணாவிற்கிடையில் 17 வருட பகை இருந்ததாக குறிப்பிட்டிருந்தோம். விடுதலைப்புலிகள் அமைப்பையே உடைப்பது வரை வளர்ந்து சென்ற அந்த பகையின் பின்னணி என்ன?

விடுதலைப்புலிகள் அமைப்பின் உயர்மட்டத்தில் மட்டுமே அறியப்பட்டிருந்த தகவலொன்றை இப்பொழுது உங்களுடன் பகிரப்போகிறோம். கருணா பிரிவு சமயத்தில், கொஞ்சம் அதிகமாக கோபப்பட்ட சில விசமறிந்தவர்கள் இந்த பிரச்சனையை பற்றி மற்றவர்களுடன் பேசியிருக்கிறார்கள். அதனால், அரசல்புரசலாக கதை வெளியில் வந்திருந்ததையும் குறிப்பிட்டு விடுகிறோம்.

 

1987 ஒக்ரோபர் மாதம் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட பன்னிரண்டு விடுதலைப்புலிகள் கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டபோது புலேந்திரன் திருகோணமலை மாவட்ட தளபதி. குமரப்பா மட்டக்களப்பு மாவட்ட தளபதி.

இவர்கள் மரணமானதும், தளபதி வெற்றிடம் ஏற்பட்டது. இந்தியப்படைகளுடன் மோதல் ஏற்படும் தறுவாயிலிருந்த நாட்கள் அவை. உடனடியாக திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களை மீள் ஒழுங்கமைக்க வேண்டுமென பிரபாகரன் நினைத்தார். இதற்காக மிக நம்பிக்கையான ஒருவரை அங்கு அனுப்ப விரும்பினார்.

13_003-300x224.jpg தளபதி வேலவன்

திருகோணமலையில் புலேந்திரனிற்கு அடுத்ததாக சஞ்சய் இருந்தார் (யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் உமைநேசன் என்ற பெயரில் முள்ளியவளை கோட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தவர் அவர்தான்) அவரையே திருகோணமலை மாவட்ட தளபதியாக்கினார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணியில் இருந்தவர் கருணா. பிரபாகரனும், புலிகளின் மையமும் வடக்கில் இருந்ததால் கிழக்கில் புலிகள்- வடக்கைவிட குறைந்தளவான இராணுவ வளர்ச்சியை பெற்றிருந்தனர்.

 

நினைத்த மாத்திரத்தில் கிழக்கில் உள்ளவர்கள் வடக்கிற்கு வந்துபோகவும் முடியாது. கொஞ்சம் தனித்து, சிறப்பாக இயங்க கூடியவர்கள் கிழக்கிற்கு தளபதியாக இருக்க வேண்டுமென நினைத்த பிரபாகரன், தனது மெய்ப்பாதுகாவலர் அணியிலிருந்த கருணாவை கிழக்கு தளபதியாக நியமிக்க முடிவெடுத்தார். கருணாவை மட்டக்களப்பு தளபதியாக்க வேண்டுமென்று பிரபாகரன் சிலகாலமாக திட்டமிட்டு, அதற்கேற்ப கருணாவை வளர்த்து வந்தார்.

இந்த இடத்தில் இடையீடாக இன்னொரு தகவலையும் குறிப்பிட்டு விட வேண்டும். புலிகள் அமைப்பிற்குள் மாவட்ட தளபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் இரண்டு வகையானவர்கள். முதலாவது, நீண்டகாலமாக களங்களில் தொடர்ந்து செயற்பட்டு, களத்தில் இருப்பவர்கள் மத்தியில் திறமையால் முன்னுக்கு வருபவர்கள். சாள்ஸ் அன்ரனி படையணி தளபதிகள் எல்லோரும் இந்தவகையானவர்கள்தான்.

இன்னொரு வகையலும் தளபதிகள் நியமிக்கப்பட்டனர். பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இருப்பவர்கள் நினைத்த மாதிரி யுத்தகளங்களிற்கு செல்ல முடியாது. இரகசிய சிவை தடுப்பதும், அடிக்கடி புதியவர்களை அந்த இடத்தில் நியமிக்க முடியாது என்பதும் காரணங்கள்.

தனது மெய்பாதுகாவலர் அணியிலுள்ள திறமையானவர்களை பிரபாகரன், தருணம் வரும்போது முக்கிய இடங்களில் அமர்த்துவார். கருணாவில்தான் இந்த வழக்கம் ஆரம்பித்தது. அதன்பின் சொர்ணம், கடாபி, ஜெயம் என நீண்டு, 1995 இல் தனது பாதுகாப்பு அணி பொறுப்பாளராக இருந்த  குமரனை மிக இள வயதில் மணலாறு தளபதியாக்கினார்.

 

பின்னர் பாதுகாப்பு அணி தளபதியாக இருக்காவிட்டாலும் ராஜேஷை 1996 இல் மணலாறு தளபதியாக்கினார். 2000 இன் தொடக்கத்தில் வேலவனை இம்ரான் பாண்டியன் படையணிக்கே தளபதியாக்கினார். இதில் குறிப்பிட வேண்டிய விசயம், இந்த நியமனங்கள் எதுவுமே சோடை போகவில்லை!

மட்டக்களப்பிற்கு சென்ற கருணா, அப்போதைய தளபதி குமரப்பாவிற்கு கீழ் செயற்பட்டார்.

Karuna-1-300x194.jpg மட்டக்களப்பு தளபதியாக செல்வதற்கு முன்னர் கருணா

குமரப்பாவிற்கு அப்பொழுது திருமணம் திட்டமிடப்பட்டிருந்தது. அவர் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டால் கருணாவால் மாவட்டத்தை தனியாக நடத்த முடியுமா என்ற கேள்வியும் பிரபாகரனிடம் இருந்தது. ஏனெனில் அவர் அப்பொழுதுதான் புலிகளில் இணைந்து நான்கு வருடமாகியிருந்தது. சிறியவர்.

இதேபோலத்தான் திருகோணமலை நிலவரமும் இருந்தது. புலேந்திரனுக்கு பதிலாக சென்ற சஞ்சயும் புதியவர்.

இருவரும் பெரிய நிர்வாகங்களை தனித்து நடத்திய அனுபவம் இல்லாதவர்கள். அவர்களின் கையில் மாவட்ட பொறுப்பை வழங்காமல், பிரபாகரன் வேறொரு ஐடியா போட்டார்.

அப்போது யாழ்ப்பாண தளபதியாக இருந்த பொட்டம்மானை கிழக்கிற்கு அனுப்பினார். மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள் இரண்டையும் கண்காணிக்கும் பொறுப்பு பொட்டம்மானுக்கு வழங்கப்பட்டது. அவரின் கீழ் சஞ்சயும், கருணாவும் சிறிதுநாள் செயற்பட்டு அனுபவத்தை பெற்றதும், தனித்து செயற்பட விடலாம் என பிரபாகரன் நினைத்தார்.

பொட்டம்மான் மட்டக்களப்பிற்கு கிளம்பினார்.

இதற்கு பின்னர்தான் மட்டக்களப்புடன் பொட்டம்மானிற்கு தொடர்பு ஏற்பட்டது. பொட்டம்மானின் மனைவி மட்டக்களப்பை சேர்ந்தவர் என்பது பலர் அறியாதது. அது காதல் திருமணம்.

1987 இல் மட்டக்களப்பிற்கு பொட்டம்மான் வந்தபோது, இந்த காதல்கதை ஆரம்பித்தது. விரைவிலேயே அந்த காதல் திருமணத்தில் முடிந்தது. ஆரம்பத்தில் இந்த திருமணத்திற்கு பிரபாகரன் அவ்வளவாக சம்மதிக்கவில்லை.

 

முதலாவது, இந்தியப்படைகளுடன் கடுமையான மோதல் நடந்து கொண்டிருந்தது. புலிகளும் கணிசமான இழப்பை சந்தித்து கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் பொட்டம்மான் திருமணம் முடிப்பது நல்லதல்லவென பிரபாகரன் நினைத்தார். பொட்டம்மானிற்கு திருமணம் முடிக்க அனுமதியளித்தால், ஏனையவர்களிற்கும் திருமணம் முடிக்க அனுமதிக்க வேண்டும். இந்தியப்படைக் காலத்தில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலையில், அமைப்பின் இறுக்கமான தன்மையிலிருந்து விலக பிரபாகரன் விரும்பவில்லை. ஓரிரண்டு வருடத்தில் இந்தியப்படையின் பிரச்சனையை முடித்து விட்டு, திருமணம் செய்பவர்கள் செய்யலாமென்பது அவரின் நிலைப்பாடு.

பொட்டம்மான் விடாக்கண்டன். அந்த பெண்ணையே திருமணம் செய்வேன், அதுவும் விரைவில் செய்வேன் என ஒற்றைக்காலில் நின்று திருமணத்தை செய்தார். இதனால்தானோ என்னவோ, புலிகளிற்குள் காதல் திருமணங்களிற்கு அதிக ஆதரவாக பொட்டம்மான் இருந்தார். புலனாய்வுத்துறைக்குள்ளும் காதல் பிரச்சனைகள் வரும். அப்போதெல்லாம் சம்பந்தப்பட்ட போராளியை அழைத்து தனது காதல் கதையை சொல்வார். காதலுக்கு தானும் ஆதரவானவன், காதல் திருமணத்தின் முன் அதற்காக சகலவழிகளிலும் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென ஆலோசனை சொல்வார்.

ஆனால், மாலதி படையணி தளபதி விதுஷா நேர்மாறு. காதலென்றாலே அவருக்கு கண்ணில்காட்டக்கூடாது. மாலதி படையணி பெண்போராளிகளில் யாராவது ஆண் போராளிகளிற்கு காதலோ, விருப்பமோ இருந்து, அந்த தகவல் விதுஷாவின் காதிற்கு சென்றால், அடுத்த கணமே இந்த பெண்போராளியை களமுனைக்கு அனுப்பிவிடுவார். இப்படி களமுனையில் மரணமானவர்கள் பலர்.

பொட்டம்மான் மட்டக்களப்பில் தங்கியிருந்தபடி மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை கவனித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மட்டக்களப்பில் செயற்பட்ட கண்ணன் என்ற போராளியுடன் பொட்டம்மானிற்கு நெருக்கம் ஏற்பட்டது. மட்டக்களப்பில் இருந்த புலிகளின் உயர்மட்ட தளபதிகளில் கண்ணனும் ஒருவர்.

இந்த கண்ணனின் நெருங்கிய உறவு- சகோதரிமுறையானவர்தான் பின்னாளில் பொட்டம்மானின் மனைவியானவர்!

கண்ணன் நீண்டகாலமாக மட்டக்களப்பில் செயற்பட்டு கொண்டிருந்தவர். திறமையான சண்டைக்காரர். அதனால் விரைவிலேயே மாவட்டத்தின் முக்கிய ஸ்ரார்களில் ஒருவராகி விட்டார்.

Image result for பà¯à®à¯à®à¯ à®à®®à¯à®®à®¾à®©à¯

கண்ணனின் திறமைகளில் பொட்டம்மானிற்கு ஈர்ப்பிருந்தது. அவரை தளபதியாக்கலாமென பொட்டம்மான் விரும்பியிருக்கலாம். ஆனால், பிரபாகரனின் தேர்வுக்கு மாறாக எதையும் அவர் கதைத்திருக்கவில்லை. பிரபாகரனால் நியமிக்கப்பட்ட கருணாவும் மட்டக்களப்பிற்கு வந்து செயற்பட்டுக் கொண்டிருந்தார்.

 

ஆனால் கண்ணன் மூலமாகவும் சில விசயங்களை பொட்டம்மான் செய்வார். இந்தி இராணுவம் மீதான சில பதுங்கித்தாக்குதல்களை கண்ணனே தலைமையேற்று நடத்தியிருக்கிறார்.

இது கருணாவிற்கு பிடிக்கவில்லை. ஒரே உறையில் இரண்டு வாளை வைக்கும் வேலையை பொட்டம்மான் செய்கிறார் என்றுதான் கருணா நினைத்தார்.

பொட்டம்மான் மட்டக்களப்பை விட்டு, யாழ்ப்பாணம் வந்த சிறிது நாளிலேயே இந்தியப்படைகளுடனான மோதலில் கண்ணன் மரணமடைந்தார் என்ற அறிவிப்பு மட்டக்களப்பில் இருந்து புலிகளின் தலைமைக்கு போனது.

ஆனால் கண்ணன் இந்தியப்படைகளுடனான மோதலில் மரணமாகவில்லை!

(தொடரும்)

 

http://www.pagetamil.com/6161/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.