Jump to content

கற்பக தரு : பனை எனும் மூதாய்..!


Recommended Posts

கற்பக தரு 01: பனை எனும் மூதாய்..!

 

 

 

shutterstock274654706

பனை மரம் தமிழர்களின் மரம் எனக் கூறுவது நமது பெருமை என்று கருதும் அதேநேரம், பனை மரத்தின் பிரம்மாண்டத்தைச் சுருக்குவதாகவும் இருக்கிறது.

சுருக்கமாக பனை நம்மை உருவாக்கியது, நம் பண்பாட்டை வளர்த்தெடுத்தது என்று சொல்லலாம். நினைப்பதைக் கொடுக்கும் கற்பக விருட்சமாக பனை தழைத்து நின்றிருக்கிறது. வெயில் என்றும் பாராமல், மழை என்றும் பாராமல் ஒற்றைக்கால் தவம் இருந்து மக்களை பேணிப் பாதுகாத்திருக்கிறது. இப்படி உறவாடிய பனை மரத்தை நம் மூதாதையர்கள் தங்கள் மரமாகச் சுவீகரித்துக்கொண்டுவிட்டார்கள் என்று கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும்.

     
 

 

தாயாக வந்த மரம்

குழந்தைகள் முதல் பெரியோர்வரை ஆண்கள், பெண்கள் வேறுபாடு இன்றி பனையோடு நெருங்கி உறவாடியவர்கள் நம் மக்கள். மறத் தமிழச்சி பனை முறம் கொண்டு புலியை விரட்டியதை பண்டைய இலக்கியம் வியந்து பேசுகிறது. சிறார்கள் வாழ்க்கையில் விளையாடிக் களித்த மரங்களில், பனைபோல் மற்றொரு மரம் இருக்குமா?

shutterstock202717648
 

பனை மரத்தை தாயாக உருவகிக்கும் வழக்கம் தென் தமிழகத்தில் உள்ளது. அந்த தாய் தெய்வத் தன்மை கொண்டவளாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறாள். கட்டுக் கடங்காத உடல் கொண்டவள், பாலூறும் கனிவு கொண்டவள், அரம் - வாள் எனப்படும் கருக்கைக் (மட்டையின் இருபுறமும் கூர்மையாக இருக்கும் பகுதி) கொண்டவள், காற்றில் பேயாட்டம் ஆடுபவள், எந்தத் துன்பத்திலும் சாய்ந்து விடாதவள், ஏதாவது ஓர் உணவை அளித்து தன் பிள்ளைகளை காப்பவள் என பனை அன்னையின் ஆதி வடிவமாகத் திகழ்கிறது. பனையேறிகள் அதை காளி என அழைக்கிறார்கள்.

 

கேட்டது கொடுக்கும் கற்பகம்

பனை மரத்தின் சிறப்பை அறிந்த நமது முன்னோர்கள் அதை தெய்வீக மரமாகக் கருதினார்கள். அதனால்தான் புராணங்களில் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த சிறந்த பொருட்களில் ஒன்றாக பனைமரமும் எழுந்து வந்திருக்கிறது. கேட்டதைக் கொடுக்கும் கற்பக மரம், பஞ்சம் போக்கி, காளித் தாய் என காலத்துக்கு ஏற்பவும், சூழலுக்கு ஏற்பவும் பனை பல பெயர்களைப் பெற்றிருக்கிறது.

பனை ஒரு ஒப்புமையற்ற மரம். மக்களின் வாழ்வாதாரம், உணவு, கலை, பண்பாடு, வரலாறு, பொருளியல் முழுவதும் பனை விரவிக் கிடக்கிறது. இப்படி இந்த மரம் மக்களின் வாழ்க்கையோடு இணைந்தே பயணித்து வந்திருக்கிறது.

shutterstock213581902
 

சரி பனையிலிருந்து கிடைக்கும் பொருட்கள் என்னென்ன? அவை எங்கே கிடைக்கின்றன? பனை துணைப் பொருட்களை எவ்வகையில் தயாரிக்கிறார்கள்? பனை பொருட்கள் உருவான காலம், அவற்றின் மானுடத் தேவை போன்ற செய்திகள் முழுமையாக நம்மை வந்து அடையவில்லை. பனை சார்ந்த அறிவை உயர்த்திப் பிடிக்கும் சமூகமாக நாம் இன்னும் வளரவில்லை. குறைந்தபட்சமாக கடந்த அரை நூற்றாண்டில் தமிழகப் பனை சார்ந்த கவனத்தைக் குவித்தால், அடிப்படைப் புரிதலைப் பெறலாம்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

 

ருட்பணியாளர் காட்சன் சாமுவேல், குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மார்த் தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த ஹென்றி மார்ட்டின் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தோடு இணைந்து பனை மரம் குறித்த ஆவணப்படத்தைத் தயாரித்து வருகிறார். கடந்த 2016 மே 15-ம் தேதி மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா வழியாகத் தமிழகம், புதுச்சேரியைக் கடந்து தனது சொந்த ஊரான நாகர்கோவில்வரை பனை விழிப்புணர்வுக்காக இரு சக்கர வாகனப் பயணத்தை மேற்கொண்டவர்

 

http://tamil.thehindu.com/general/environment/article23535661.ece

 

தொடரும்...

Link to comment
Share on other sites

கற்பக தரு 02: கிரீடமான பனை நார்

 

21CHNVKPALMLEAVES3
21CHNVKPALMLEAVES1
21CHNVKPALMLEAVES2
 
 
 
 

உலகம் முழுவதும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பனை வகைகள் இருக்கின்றன. நாம் அறிந்த தென்னை, பேரீச்சை, ஈச்ச மரம் போன்ற மரங்கள் பனை (அரிகேசியே) என்ற வகைப்பாட்டில்தான் வரும். அரிகேசியே குடும்பத்தில் கொடிகள், புதர்கள் போன்றவையும் காணப்படும். ‘பொராஸஸ்’ எனும் தாவரப் பேரினத்தில் பொராஸஸ் எத்தியோபம், பொராஸஸ் அகியாசி, பொராஸஸ் ஃபிளாபெல்லிஃபர், பொராஸஸ் ஹீனியானஸ், பொராஸஸ் மடகாஸ்காரியென்ஸிஸ் என ஐந்து வகையான மரங்கள் காணப்படுகின்றன. ஆசியா, ஆப்பிரிக்கக் கண்டங்களில் 18 வகை பனை மரங்கள் காணப்படுகின்றன.

 

நம்மூர் பனை (பொராஸஸ் ஃபிளாபெல்லிஃபர்), தமிழக மாநில மரம்! இது 100 அடிவரை உயர்ந்து வளரும் தன்மையுடையது. இதன் தண்டுப் பகுதி மிக உறுதியான புறப்பகுதியை உடையது. இதன் உட்புறம் மிகவும் மென்மையாகக் காணப்படுகிறது. இதன் வெளிப்புறப் பகுதியை எடுத்து, கூரை வேயவும் பல்வேறு மரம் சார்ந்த பணிகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். இதன் உச்சியில் சுமார் 24 மட்டைகளும் அத்தோடு இணைந்த ஓலைகளும் காணப்படும். இவை சுமார் இரண்டு முதல் மூன்று மீட்டர் நீளம்வரை வளரும் தன்மை கொண்டவை.

 

ஆண் பனை, பெண் பனை

பனை மரத்தில் ஆண் பனை, பெண் பனை என இரு வகைகள் உண்டு. விரல்கள் போன்று நீளமாகப் பாளைகள் வந்தால் அதை ‘அலகு பனை’ (ஆண் பனை) என்றும் பனம்பழமாக மாறும் குரும்பைகள் உள்ள மரங்களை ‘பருவப் பனை’ (பெண் பனை) என்றும் அழைப்பார்கள்.

பனை மட்டையை மூன்றாகப் பிரித்து நமது முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். மட்டையின் இருபுறமும் உள்ள கருக்கை அரிவாளால் சற்றே தேய்த்துவிட்டு, அதைச் சிப்பம் கட்டும் பணிக்குப் பயன்படுத்தினர். மட்டையின் உள்புறம் இருக்கும் நாரை ‘அகணி’ என்றும் வெளிப்புறம் இருக்கும் பகுதியை ‘புறணி’ என்றும் பகுத்துப் பயன்படுத்தினர். அகணி நார் மிகவும் வலிமை வாய்ந்தது.

ஆகவே, ‘ஆயிரம் அகணியால் கட்டிய வீட்டுக்கு ஆனையின் பலம்’ என்ற சொலவடை வழக்கில் உண்டு. நாம் வேகமாக இழந்துவரும் பனை பயன்பாட்டுப் பொருட்களில் இதுவும் ஒன்று. நமது பண்பாட்டில், பனை நாருக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ‘நார் முடி சேரல்’ என்பது தமிழ் மன்னனுக்குக் கிடைத்த பட்டம். அதாவது பனை நாரைத் தனது கிரீடமாக அணிந்தவன் என்ற பொருளில் கூறப்பட்டிருக்கிறது.

 

ஆபத்தில் ‘ஈர்க்கில்’

பனை ஓலைகளையும் மூன்றாகப் பிரிப்பது தமிழக வழக்கம். உட்புறமிருந்து துளிர்த்துவரும் இளம் ஓலைகளை ‘குருத்தோலை’ என்பார்கள். தந்த நிறத்தில் காணப்படும் குருத்தோலைகள் ஒரு பனை மரத்தில் ஒன்றோ இரண்டோ மட்டுமே இருக்கும். பசுமையாகக் காணப்படும் ஓலைகளை ‘சாரோலை’ என்பார்கள். இவை பெருமளவில் பனை மரத்தில் காணப்படும். சுத்திகரிக்கப்படாத பனை மரத்தில் 24 முதல் 40 சாரோலைகள்வரை இருக்கும். காய்ந்துபோன ஓலைகளை ‘காவோலை’ என்பார்கள். இவை பனை மரத்தோடு சேர்ந்து தொங்கிக்கொண்டிருக்கும்.

பனை ஓலையின் நடுப் பகுதியில் தடித்த நரம்பு இருக்கும். அதை ‘ஈர்க்கில்’ என்பார்கள். ஈர்க்கில், பனை மரத்தின் ஒரு முக்கிய பாகம். நமது முன்னோர்கள் ஈர்கிலின் தன்மைகளை மிகச் சரியாகப் புரிந்து வைத்திருந்தார்கள். இன்று அந்த பாரம்பரிய அறிவு நம்மை விட்டு அகன்றுவிடும் ஆபத்தில் உள்ளது.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

http://tamil.thehindu.com/general/environment/article23616211.ece

Link to comment
Share on other sites

கற்பக தரு 03: பனையேறி எனும் ஆதி சூழலியலாளன்!

 

 
28chnvkpanai%20copy

னை மரத்தையும் பனை ஏறுபவர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. பனை ஏறுபவர்களை, படித்த சமூகம் தாழ்வாகப் பார்த்ததும், சாதி சார்ந்து அவர்கள் ஒடுக்கப்பட்டதும் வரலாறு. இன்றைக்குத் தமிழகத்தைப் பொறுத்தவரை, பனை ஏறுபவர்கள்தாம் ஆதி சூழலியலாளர்கள். பனை ஏறுபவர் பனை மரத்தைக் கட்டியணைத்து ஏறுகிறார். ஒரு நாளைக்கு அறுபது மரங்கள்வரை ஏறி இறங்கும் இவர்கள், சூழலியலை நேசித்தவர்களின் பட்டியலில் வராமல் இருப்பது ஆச்சரியம்தான்.

தன்னுடைய தளவாடங்களைக் கருத்தாகக் கவனிக்கும் பாங்கும் பனையேறிகளிடம் உண்டு. தான் ஏறும் நான்கு மரத்துக்கு ஒரு முறையாவது தனது பாளை அருவாளை அவர் கூர்தீட்டிவிடுவார். கூர்மையான ஆயுதத்தை எடுத்துக்கொண்டு மரம் ஏறுவதால், தவறி எவர் மீதும் தன் ஆயுதம் விழுந்துவிடாதபடி இருக்க அழகிய அருவா பெட்டியொன்றை இடுப்பில் கட்டியிருப்பார்.

 

 

ஆபத்தைத் தடுக்கும் பெட்டி

அரிவாள் என்பது மருவி, அருவா என வழங்கப்படலாயிற்று. அரிவாள் வைக்கும் பெட்டி என்பதால், ‘அருவா பெட்டி’ என காரணப் பெயரானது. பெயர் மட்டும்தான் அருவா பெட்டி. அது பனை ஏறுபவர்கள் பயன்படுத்தும் அனைத்து பயன்பாடுகளுக்கான பெட்டிதான்.

அருவா பெட்டியின் முக்கியத்துவத்தை அறிந்திருந்த பனையேறிகளை நாம் குறைத்தே மதிப்பிட்டு வந்திருக்கிறோம். பாதுகாப்புக் கருவிகளை / உறைகளை அணிந்தே ஆலைகள், கட்டுமானப் பணிகள் போன்ற வேலைகளுக்கு ஒரு பணியாளர் இன்றைக்குச் செல்ல முடியும். ஆனால், எந்தவித வசதியும் இல்லாத காலத்தில், ஆபத்து விளைவிக்கக்கூடிய கூர்மையான ஆயுதங்களை ஏனோ தானோவென்று தன்னுடைய பணிக்கெனப் பயன்படுத்தாமல், உரிய உறைகளுடன் முறைப்படி பயன்படுத்திய பனையேறிகள், சிறந்த முன்னெச்சரிக்கை உணர்வுள்ளவர்களாகக் காட்சியளிக்கிறார்கள்.

 

ஒரு பெட்டி - மூன்று பயன்பாடு

தென்னை மரத்தின் மூன்று தென்னங் ‘கொதும்பு’களை (தேங்காய்க் குலையின் மேல் இருக்கும் அகன்ற பாளைப் பகுதி) எடுத்து, தண்ணீரில் ஒருநாள் ஊறவைத்து, பனை நாரைக் கொண்டு நேர்த்தியாகக் கட்டிச் செய்யப்படுவதுதான் அருவா பெட்டி.

அருவா பெட்டியின் நடுவில் இரண்டு தென்னங் கொதும்பைகளைக்கொண்டு மூன்று பாகங்களாகப் பிரித்திருப்பார்கள். ஒரு பக்கம் பாளை அருவா வைப்பதற்கும், நடுவில் மட்டையருவாள் வைப்பதற்கும் (இந்த அரிவாள்களைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்), மற்றொரு பகுதியில் சுண்ணாப் பெட்டி வைப்பதற்கான தகடு போன்ற கொடும்பு பயன்படும். அரிவாளைத் தீட்டிக் கூர்மைப்படுத்த வெள்ளைக்கல் பொடியைப் பயன்படுத்தும் வழக்கம் உண்டு. அதை வைக்கப் பயன்படும் மூங்கில் குழாயையும் இதில் வைத்துக்கொள்வார்கள். தமிழகம் மட்டுமல்லாமல் இலங்கைவரை இதே முறை இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

 

உடலின் ஒரு பகுதியாக

தென்னை, பாக்கு போன்றவற்றின் பயன்பாடுகளை உள்வாங்கிச் செய்யப்பட்ட அருமையான வடிவமைப்பு இது. ஒரு தொழிற் கருவியின் பயன்பாட்டைப் பொறுத்தவரை அது நீடித்து உழைக்க வேண்டும், எடுத்துச் செல்வதற்கு இலகுவான எடையுடன் இருக்க வேண்டும், தொழில் செய்ய இடைஞ்சல் கொடுக்காத வடிவமைப்புடன் இருக்க வேண்டும், உடையின் / உடலின் ஒரு பகுதியாக மாறிவிட வேண்டும், முக்கியமாகப் பாதுகாப்பை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். அந்த வகையில் அருவா பெட்டி தன்னிகரில்லா ஒரு வடிவமைப்பு எனலாம்.

கூர்மையான அரிவாளின் ‘பிடி’ மட்டுமே வெளியே தெரியும் வகையில், முக்கால் அடி உயரம் கொண்ட அருவா பெட்டி, ஒரு உடை வாளைப் போல அமைந்திருக்கும். அருவாப் பெட்டியின் மேற்பகுதி சற்று அகன்றும், கீழ்ப்பகுதி சற்று குறுகியும் காணப்படுவது அழகுணர்வுக்காக மட்டுமல்ல. அருவா நழுவிவிடாமல் இருக்கப் பொறியியல் கற்காத பனையேறிகளின் உன்னதமான வடிவமைப்பு அது. சுமார் 10 ஆண்டுகள் தொடர்ந்து உழைக்கும் தன்மை கொண்டது இந்த அருவா பெட்டி.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

http://tamil.thehindu.com/general/environment/article23707193.ece

Link to comment
Share on other sites

கற்பக தரு 04: எப்படிப் போட்டாலும் முளைக்கும்

 

 
05CHNVKPALMSEED1
 
 

தமிழகத்தில் பனை மரம் குறைந்து வருவதற்குக் காரணம் பனையோடு பாரம்பரியமாக இருந்த உறவுக் கண்ணி அறுந்ததுதான். பனைத் தொழிலாளர்களை மக்கள் பேணிய காலம் போய், அரசும் கைவிட்டுவிட்ட சூழலில் பனைத் தொழில் இழிவாகக் கருதப்பட்டது. பனைமரங்கள் ஏறுவார் இல்லாததாலும், நெகிழிப் பொருட்களின் வரவாலும், பனை சார்ந்த பயன்பாடு அருகி வருவது நிதர்சனம். பனை மரங்களைச் சொற்ப விலைக்கு விற்றுவிடும் ஓர் அவலச் சூழலில் இருந்து தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

 

பனை ஓலைகளிலிருந்து வீசப்படும் தென்றல், இன்று ஏ.சி. ஆகிப்போனதன் விளைவாகப் பனை மரங்களிலிருந்து பெற்ற தென்றலைக் குறித்து எண்ணும் நிதானமும் இல்லாமல் போய்விட்டது.

 

விதைப்பில் புது வடிவம்

இன்றைக்கு பனை விதைப்பு தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக வடிவம் பெறுகிறது. பனை விதை நடவு குறித்து ஆய்வுகள் இருந்தாலும், பாரம்பரியமாக விதைகள் நடப்படும் முறைகளைப் புரிந்துகொண்டால் போதும். பொதுவாக, பனை விதை நடுவது பனங்கிழங்கு அறுவடை செய்வதற்காகவே. அவ்விதம் விதைப்பவர்கள் சுமார் இரண்டடிக்கு மண்ணைக் குவித்து அதன் மேல் பனங்கொட்டைகளைக் கிடைமட்டமாகப் போட்டு, பேருக்காக இவற்றின் மேல் மண்ணைத் தூவி விடுவார்கள். இந்த விதைகளுக்கு எப்போதும் ஈரப்பதம் இருக்கவேண்டும் என்பதற்காக நீர் தெளித்து, அதன் மேல் முட்கள், ஓலைகளை வெட்டிப்போட்டு நிழல் அமைத்துக் கொடுப்பார்கள்.

இந்த முறையில் கவனிக்கத்தக்க சில குறிப்புகள் உண்டு. விதைகள் முளைப்பதற்கு குறிப்பிட்ட முறையில் விதைகள் ஊன்றப்பட வேண்டும் என்று விதி எதுவும் கிடையாது. ‘எப்படி பொரட்டிப் போட்டாலும், அது குருக்கும்’ என்றே ஒரு பெரியவர் சொன்னார். காட்டுப் பகுதியில் உறுதியான நிலங்களைத் துளைத்துக்கொண்டு அம்புகள் செல்லும் வீச்சோடு பனங்கிழங்குகள் வேர்பிடித்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

 

விதைப் பரவலின் நண்பர்கள்

விதைத்த இடங்களைச் சுற்றி முள் இடுவதற்கு முக்கியக் காரணம் உண்டு. பனம்பழங்களின் வாசனை நாய்களைச் சுண்டி இழுக்கும். நரி கடித்துச் செல்லும் பனம்பழங்கள் குறித்த கதைகளும் உண்டு. இவற்றால் எவ்விதத்திலும் விதைகள் சிதறிவிடக்கூடாதே என்பதே மேற்கண்ட பாதுகாப்புக்குக் காரணமாக இருக்கும்.

பனை விதைகளின் அமைப்பு அபாரமானது. இலகுவில் உடைத்துவிட முடியாத கெட்டியான ஓட்டுக்குள் விதை இருக்கும். என்றாலும் அதைச் சுற்றி மென்மையான நார் சூழப்பட்ட வழுவழுப்பான பகுதியும், அவற்றுக்குத் தோல் உறை அமைக்கப்பட்டது போன்ற மேல்பகுதியும் இருக்கும்.

இந்த அமைப்பே விதை முளைக்க ஏற்றது என்றாலும் முளைத்த பின் வரும் பருவமழை இவற்றுக்கு வரப்பிரசாதம். நாய், நரி, ஆடு, மாடு, கரடி, குரங்குகள் என விதைப் பரப்பலுக்குப் பல்வேறு நண்பர்களும் காரணமாக உள்ளனர்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

http://tamil.thehindu.com/general/environment/article23774938.ece

Link to comment
Share on other sites

கற்பக தரு 05: பனை தந்த மொழி

12CHNVKKAAVOLAI

காவோலை   -  THE HINDU

 

 

பனை மரம் தமிழர்களின் மரம் எனச் சொல்லப்படும் கூற்று உண்மையாகும் ஒரு தருணம் உண்டு. அது, பனை மரம் சார்ந்த சொற்கள், படிமங்கள், நாட்டார் வழக்காற்றியல், பழமொழிகள் என மொழி சார்ந்த பல நுட்பங்களில் பனைக்கும் தமிழுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.

   
 

தமிழின் தொன்மைக்கு ஓலைகளே சாட்சி. நமது மொழி வாழ, ஓலைகளைக் கொடுத்து உதவியது பனை மரமே. ஓலைகள் கோலோச்சிய காலத்தில், உலகில் வேறு எங்கும் இத்தனை எளிமையான எழுதும் நுட்பம் இருந்ததில்லை. இந்த மொழி வடிவம் தமிழரின் பயன்பாட்டு அறிதலில் இருந்து வருகிறது.

 

பனைக் கிளையும் ஓலையும்

ஓலை என்பது பொதுப்பெயராக இருந்தாலும், அது முளைத்து எழும் பகுதியை ‘குருத்தோலை’ என்பதும், பசுமையாகக் காணப்படும் ஓலைகளை ‘சாரோலை’ என்பதும், காய்ந்து போன ஓலைகளை ‘காவோலை’ என்பதும் ஒரு அறிதல்தான்.

12CHNVKSAAVOLAI

சாரோலை   -  THE HINDU

 

கிறிஸ்தவத் திருமறையில் இயேசு எருசலேம் நோக்கிப் பயணிப்பதை விளக்கும் ஒரு பகுதி உண்டு. ‘குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு’ (மத்தேயு 12:13) என அந்தப் பதம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும். ஆனால், இதே பகுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபொழுது ‘பாம் பிராஞ்ச்’ (Palm Branch) என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட பனையின் கிளை என்றே மேற்குலகில் ஒருவர் இதைப் புரிந்துகொள்ள இயலும்.

இந்த நுட்பமான வித்தியாசம் எதை முன்னிறுத்துகிறது? நமது கலாச்சாரத்திலும் மொழியிலும் பனை ஆற்றிய பெரும் பங்கை இது தெளிவுபடுத்துகிறது. எல்லா ஓலைகளையும் அரசனின் முன்பு பிடிக்க இயலாது. தலைவர்களுக்கு வரவேற்பு கொடுக்க குருத்தோலைகளே ஏற்றவை. விழாக்களில் இன்றும் பனையோலைத் தோரணம்தான் அலங்காரம். இப்படி ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு விரிவடையும் தன்மை பனையில் காணப்படுகிறது. அதற்கு அந்த மரமே ஒரு படிமமாக எழுந்து நிற்பதைக் காணலாம்.

 

புது வாழ்வின் அடையாளம்

ஏன் குருத்தோலை? குருத்தோலை என்பது புது வாழ்வின் அடையாளம் எனப் பொருள் கொள்ளப்பட்டது. மிக இளமையான ஓலை என்பதால், அதற்கு நீண்ட வாழ்வு உண்டு எனப் புரிந்துகொள்ளப்பட்டது. புதிய ஓலைக்கு இருக்கும் நறுமணம் யாரையும் கிறங்கடிக்கும் தன்மைகொண்டது. நறுமணம் என்பது கொண்டாட்டத்தின் அங்கமல்லவா? குருத்து தன்னுள் ஒரு தந்த நிறத்தைக் கொண்டிருக்கும். யானை கட்டி போரடித்த சமூகத்தில் தந்த நிறம் கொண்ட ஓலைகள் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கும் எனப் புரிந்துகொள்ளலாம். மேலும் குருத்தோலைக்கு ஒரு மென்மை உண்டு. நெகிழும் தன்மை உண்டு.

மற்ற ஓலைகளைப் போல் குருத்தோலை கைகளை விரித்தபடி இருப்பதில்லை. பணிவு கொண்ட மாந்தர்போல், அவை கூப்பியபடி இருக்கின்றன. அவற்றின் நுனிகள் வானத்தையே நோக்கியபடி நிமிர்ந்து நிற்கின்றன. எதிர்காலம் உண்டு என அவை உறுதி கூறுகின்றன. இவை யாவும் ஓலையின் வயதையொட்டி, அதன் பருவத்தைச் சார்ந்து நெடிய அவதானிப்பில் எழுந்த மொழி அறிவின்றி வேறென்ன?

12CHNVKKURUTHOLAI1

குருத்தோலை   -  THE HINDU

 

 

பனை விதித்த ‘இலக்கு’

ஓலையின் ஒரு பகுதியை ‘இலக்கு’ எனக் குமரி மாவட்டத்தில் கூறுவார்கள். ‘இலக்கில் எழுதப்பட்டு இயங்கியதுதான் இலக்கியம்’ என்று குமரி அனந்தன் கூறுவார். இலக்குகளைச் சீராக வெட்டி ஒரு கட்டாக மாற்றிவிட்டால் அது நூல். அந்த நூல் வடிவத்தை ‘ஏடு’ என்பார்கள். ஏடு என்பது சமய நூல் என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஓலைகளைக் கிழித்து அதைப் பயன்பாட்டுக்கு எடுக்கும் அளவை வைத்தும் ‘முறி’, ‘நறுக்கு’ எனப் பெயர்கள் மாறின.

இவ்விதமாக ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் தமிழ் மொழியில் மட்டும் பனை சார்ந்த ஆயிரக்கணக்கான சொற்களை நாம் சேகரிக்க இயலும். இச்சொற்களை நாம் இழக்கும்போது, நமது மொழியின் வீரியம் குறைகிறது. நாம் தொகுப்பதற்கு முன்பே பல வட்டார வழக்குகள் காணாமல் போய்விடுகின்றன.

உலகம் குருதியில் எழுதிக்கொண்டிருந்தபோது நாம் குருத்தில் எழுதியவர்கள் என்பதே நமக்குப் பெருமை. அப்பெருமை பனை மரத்தையே நம்பி வாழ்ந்த நம் முன்னோர்களையே சாரும்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

http://tamil.thehindu.com/general/environment/article23857667.ece

Link to comment
Share on other sites

கற்பகத் தரு 06: கருப்பட்டிகளின் அரசன்

 

 
19CHVANPalmyraJPG

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனீரைக் காய்ச்சினால் முதன்மையாகக் கிடைப்பது கருப்பட்டி எனப்படும் பனை வெல்லம். சற்றே கரிய நிறத்தைக் கொண்டிருப்பதால் கருப்பு எனவும் கல் போன்று கட்டியாக இருப்பதால் கருப்புக் கட்டி எனவும் அழைக்கப்பட்டது மருவி ‘கருப்பட்டி’ எனப்படுகிறது. பருவ காலத்தில் கருப்பட்டி காய்ச்சுவது தென் மாவட்டங்களைப் பொறுத்த அளவில் அன்றாடச் செயல்பாடு.

பொதுவாகப் பெண்களே கருப்பட்டி காய்ச்சுவார்கள். பெரும்பாலும் பனையேறிகளின் மனைவியே கருப்பட்டி காய்ச்சினாலும், பனைகளைக் குத்தகைக்கு / பாட்டத்துக்கு விட்டவர்கள்கூடப் பதனீர் காய்ச்சி, கருப்பட்டி எடுப்பது வழக்கம். கருப்பட்டி காய்க்கும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதால், அதற்கெனத் தனிக் கொட்டகை அமைத்திருப்பார்கள்.

 

 

பாட்டிகளின் பலம்

முன்பு மண் பானைகளில்தாம் கருப்பட்டியைக் காய்ச்சி வந்தார்கள். அப்படிக் கருப்பட்டி காய்ச்சுவதற்கு விறகு அதிகமாகத் தேவைப்பட்டது. பனையேறியின் மனைவியும் பிள்ளைகளுமாக விறகுத் தேவைக்கென்று நாள் முழுவதும் ஓடுகிற சூழல் ஏற்படும். ஆகவே 1960-களில் மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ. பதனீர் காய்ச்சும் பாத்திரம் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு, தகரத்தில் நீள்சதுரமாகவும் தட்டையாகவும் இருக்கும் பாத்திரம் ஒன்றை வடிவமைத்தது.

என்றாலும் இப்பிரச்சினை முழுமையாகத் தீர்ந்துவிடவில்லை. 1980-களில் இருந்து மார்த்தாண்டத்தில் செயல்பட்டுவரும் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம், விறகுகளை இவர்களுக்கு வழங்கி உதவியது.

கடுமையான இவ்வேலையைச் செய்த பாட்டிமார்கள் தங்கள் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘பதினஞ்சு கருப்பட்டி செய்த கையாக்கும்’ என்று பெருமையாகக் கூறிக்கொள்வார்கள். பதினைந்து கருப்பட்டிகள் என்பது சற்று ஏறக்குறைய 23 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இவ்வளவு கருப்பட்டி காய்ச்ச சுமார் 200 லிட்டர் பதனீர் தேவைப்படும். நாள் முழுவதும் இரண்டு மூன்று முறையாகத் தொடர்ந்து காய்ச்சிக்கொண்டே இருப்பார்கள்.

 

கருங்கல் கருப்பட்டி

கருப்பட்டிகளில் பல விதம் உண்டு. சுக்குக் கருப்பட்டி, புட்டுக் கருப்பட்டி, ஓலைக் கருப்பட்டி எனச் சேர்மானம் செய்யும் பொருளைக் குறிப்பிட்டு பேர் வைக்கும் வழக்கம் உண்டு. இவற்றில் சுவையும் வடிவங்களும் வேறுபடும். ஊர்ப் பெயரைக் கருப்பட்டிக்குச் சேர்த்து வழங்குவது, மற்றொரு மரபு. உடன்குடி கருப்பட்டி, வேம்பார் கருப்பட்டி, ராமநாதபுரம் கருப்பட்டி, சேலம் கருப்பட்டி எனத் தரத்தின்படி அவை வரிசைப்படுத்தப்படும். ஆனால், தமிழகத்தில் கருங்கல் கருப்பட்டியை அறிந்தவர்கள் மிகவும் குறைவு.

எனது தேடுதலில் இறுதியாகத்தான் கன்னியாகுமரி மாவட்டத்தின் கருங்கல் பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டியைப் பற்றி அறிந்தேன். ஆனால், அதுதான் கருப்பட்டிகளின் அரசன் எனத் துணிந்து கூறலாம். அதன் வடிவம் அனைத்துக் கருப்பட்டிகளையும்விடப் பிரம்மாண்டமானது. ஒரு கருப்பட்டியின் எடை சராசரியாக 1.650 கிலோ. அதன் சுவை நாக்கில் நின்று விளையாடும், அதன் விலை அதிகம்தான். கிலோ ரூ. 500-க்குத் தற்போது விற்பனையாகிக்கொண்டிருக்கிறது. இந்தக் கருப்பட்டிகளின் வரவு சந்தையில் மிகவும் குறைந்து வருகிறது. கருங்கலை ஒட்டிய பகுதிகளில் தயாரிக்கப்படும் கருப்பட்டிகள் அனைத்தும் ‘கருங்கல் கருப்பட்டிகள்’ என்றே அழைக்கப்படுகின்றன.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

http://tamil.thehindu.com/general/environment/article23928143.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கற்பகத் தரு 07: முதல் உணவுப் பாத்திரம்

 

 
26CHVANPalmPattai02JPG
 
 

ஓலைகளில் பல்வேறு பயன்பாட்டு வடிவங்கள் செய்வது உலகமெங்கும் வழக்கில் காணப்படுகின்ற ஒன்று. ஒவ்வொரு ஊருக்கும் இப்படி ஒரு பொருள் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இவை யாவும் பல நூற்றாண்டுகளாக நமது மரபில் ஊறி எழுந்தவை. இன்று இவற்றை நாம் எளிதில் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால், இவை அத்தனை எளிதாக உருவாக்கப்பட்டவை அல்ல என்பதை ஒருமுறை தொட்டுணர்ந்தாலே தெரிந்துவிடும்.

 

ஆதி மனிதர்கள் ஓலைகளுடன் கொண்டுள்ள உறவைச் சொல்லும் சான்றுதான் பனை ஓலை பட்டை. விழுந்து கிடக்கும் பனை ஓலைகளை எடுத்து சிறு குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் தாய்மார்களே, பனை ஓலை பட்டைகளைக் கண்டுபிடித்திருப்பார்கள். உணவை சாறு, கூழாக அருந்தும் ஒரு ஆதி நிலையை இன்றும் உணர்த்துவதாக இது இருக்கிறது.

 

மனிதக் கைகள்போல

உலகமெங்கும் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் வேட்டைச் சமூகங்கள் ஓலைகளில் தங்கள் வேட்டைப் பொருட்களை பொதிந்து செல்லும் வழக்கத்தைக் காணலாம். குமரி மாவட்டத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர்கூட பன்றி இறைச்சியை ஓலையில்தான் பொதிந்து கொடுப்பார்கள். இப்படிப் பொதியப்பட்ட ஓலைகளின் நடுவில் குழிவு இருப்பதைப் பார்க்கலாம்.

26CHVANPalmPattaiJPG
 

நான்கு முதல் ஐந்து 'இலக்குகள்' கொண்ட பனை ஓலைகளை ஒன்றாகப் பிய்த்தெடுத்து, அவற்றை மடக்கிச் செய்வதுதான் பனை ஓலைப் பட்டை. இந்த ஐந்து இலக்குகள் கொண்ட ஓலைகள் பார்ப்பதற்கு மனிதக் கைகளை ஒத்திருக்கும். ஓலையில் அடிப்பாகம் ஒன்றோடொன்று இணைந்து உள்ளங்கை போலவும், மேற்பகுதி விரல்கள் போன்று பிரிந்தும் இருக்கும். இது மனிதக் கைகளை குவித்து தண்ணீர் மொண்டு குடித்த ஆதி குடிகளின் மனதில் ஒரு வெளிச்சத்தைக் கொடுத்திருக்கும்.

பிரிந்திருக்கும் விரல்களை எப்படி சேர்த்துவைத்துத் தண்ணீர் மொண்டுகொள்ளுகிறோமோ, அதுபோலவே ஓலைகளையும் பிடித்துவிட்டால் தண்ணீரைத் தேக்கி குடிக்கும் ஒரு வடிவமாக மாற்ற முடியுமே என எண்ணியிருக்கலாம்.

 

ஓலை வாசம்

ஓலைகளைப் பரத்தி, பிரிந்திருக்கும் நுனிப்பகுதிகளை ஒன்றிணைத்தால் ஒரு குழிவுடன் கூடிய படகின் வடிவம் கிடைக்கும். ஒன்றிணைத்த ஓலைகளின் ஒரு சிறு பகுதியை மட்டும் பிரித்து, நீண்டு நிற்கிற ஓலைகளுக்குக் குறுக்காக சுற்றிக் கட்டிவிட்டால் பயன்பாட்டுக்கு ஏற்ற பனை ஓலை பட்டை தயார்.

பனை ஓலைப் பட்டைகளின் தொன்மையும் எளிமையும்தான் அவற்றை இன்றுவரை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. குமரியிலுள்ள அனைத்து மதத்தினரும் தங்கள் விழாக்களின்போது, சடங்குகளின்போது பனை ஓலைப் பட்டையில் ஏதேனும் வைத்து உண்ணும் வழக்கம் உண்டு.

இன்றளவும் புனித வெள்ளியோ குருத்தோலை ஞாயிறோ கிறிஸ்தவ தேவாலயங்களில் பனை ஓலை பட்டையில் கஞ்சி கொடுப்பது வழக்கம். கிடா அல்லது கோழி பலியிட்டு நாட்டார் தெய்வங்களை வணங்கும்போதும் பனை ஓலை பட்டையில் கறிசோறு வழங்கும் நடைமுறை இன்றும் உண்டு. பதனீரோ, கஞ்சியோ, கறிக்குழம்போ பனை ஓலை வாசத்துடன் நம் நாக்கில் வந்து விழுவது பசியை நன்கு தூண்டும்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

http://tamil.thehindu.com/general/environment/article23997474.ece

Link to comment
Share on other sites

கற்பகத் தரு 08: தோண்டி எனும் நீர் சேகரிப்பான்

 

 
02CHVANPalmThondi02JPG

02CHVAN_PalmThondi01

ஓலையில் பட்டைகளைச் செய்ய கற்றுக்கொண்ட தமிழ் குடி, குடிநீரைச் சுமந்து செல்வதற்கு ஒரு வடிவமைப்பை உருவாக்க முயற்சித்தது. பனை ஓலைப் பட்டைகளைப் பயன்படுத்தும்போது இரு கைகளையும் பிடித்து இணைத்தே பயன்படுத்தவேண்டும். ஆனால் தோண்டி என்பது ஒரு கையில் சுமக்கும் இலகுவான ஒரு பொருள். குழந்தைகளை இடுப்பில் சுமக்கும் ஒரு மூதயோ, தொல் மூதாதையோ இடம்பெயர்கையில் தண்ணீர்த் தேவைக்கென எடுத்துச் செல்ல கண்டுபிடிக்கப்பட்ட வடிவம் இது.

 

 

நேர்த்தியான வடிவமைப்பு

பனை ஓலைப் பட்டை ஒரு முற்றுப்பெறாத வடிவம். அதை உருட்டி வடிவம் ஏற்படுத்தி, குறுக்காக ஒரு கம்பை கொடுத்து சுமந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டதே தோண்டி. இப்படி ஒரு நேர்த்தியான வடிவமைப்பாளர் தமிழ் மண்ணில் இருந்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்ப்பது மெய்சிலிர்க்கும் அனுபவம்தான்.

ஒரு பொருளுக்கான தேவையை அந்த நிலமும் அங்கு வாழும் மனிதர்களுமே முடிவு செய்கிறார்கள். பனை மரம் நெய்தல் நில மரம். கடற்கரையில் வாழும் மனிதர்களுக்கு நல்ல தண்ணீர் எளிதில் கிடைக்கும் பொருளாக இல்லை. அதனால் தண்ணீரை சேமித்து வைக்க மண் கலயங்களை உருவாக்கும் முன்பே வடிவமைக்கப்பட்டதுதான் தோண்டி. இன்றைக்குத் தோண்டியின் செழுமைப்படுத்தப்பட்ட ஒரு வடிவம் உருவாகியிருக்கலாம். ஆனாலும் தோண்டி அதன் தொன்மை வடிவத்திலேயே பிரபலமாகி யிருக்கிறது.

02CHVANPalmThondi01JPG
 

 

சிறகிலிருந்து பிறக்கும்

தோண்டி செய்வதற்கு அகலமான ‘ஒற்றைச் சிறகு' ஓலை வேண்டும். குருத்தோலையிலிருந்து நான்கு ஓலைகள் விட்டு பசுமையான ஓலைகளையே தோண்டி செய்யத் தெரிந்தெடுப்பார்கள். குறிப்பிட்ட ஓலைகளை தெரிவுசெய்வது ஓலைகளின் முதிர்ச்சி, வலிமை, நீடித்த உழைப்பு, செய்யும் பொருளுக்கு ஏற்றபடி வளைந்துகொடுக்கும் தன்மை ஆகியவை அடிப்படைகளாக உள்ளன.

ஒரு பனை மட்டையிலிருந்து பிரியும் ஓலைகளை வலது, இடது என இரண்டாக பகுப்பார்கள். அவற்றை குமரியில் 'செறவு' (சிறகு) என்றே அழைப்பார்கள். ஒரு விரிந்த சிறகை எடுத்து, அதன் ஓரத்திலிருக்கும் சிறிய ஓலைகளை நீக்கிவிட்டு குறைந்தபட்சம் ஒன்பது இலக்குகள் கொண்ட ஓலைகளை தெரிந்து கொள்ளுவார்கள். இவற்றை முதலில் நன்றாகக் காய வைத்து ‘சுருக்கு'ப் பிடித்துக்கொள்ளுவார்கள்.

சுருக்குப் பிடித்தல் ஓலைகளை பாடம் பண்ணும் முறைகளில் அடிப்படையானது. விரிந்த ஓலைகளை அப்படியே வெய்யிலில் உலர்த்திவிட்டு மறுநாள் அதிகாலையில் பனி விழுந்து ஓலை பசுமையாக இருக்கும் நேரத்தில், குருத்தோலையின் வடிவத்தில் இணைந்திருக்கும்படி அவற்றைக் கட்டிவிடுவதுதான் சுருக்குப் பிடித்தல். இப்படிச் செய்யும்போது ஒருவர் அந்தப் பனை ஓலைகளை பதப்படுத்திவிடுகிறார் அதில் உள்ள மேடுபள்ளங்கள் யாவும் நீங்கி ஒரு நேர்த்தியான வடிவம் கிடைத்துவிடும்.

இவ்விதம் சுருக்குப் பிடிக்கப்பட்ட ஓலைகளை தண்ணீரில் ஊறப்போடுவார்கள். அவை சரியான அளவில் மென்மையாகும்படி செய்த பின்னர், கத்தியை வைத்து உட்புறமாக எழுந்து நிற்கும் ஈர்க்கை ஒரு வரிசை சிறிதாகக் கீறிவிடுவார்கள். இதுபோலவே இன்னும் எட்டு விரல்கடை விட்டு, மீண்டும் ஒரு வரி கீறி விடுவார்கள். இவ்விதம் பனை ஈர்க்கில் கீறப்பட்டதால், அவற்றை மடக்குவது எளிதாகிறது.

 

நடைமுறைப் பயன்பாடு

குமரியைப் பொறுத்த அளவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்புகூட தோண்டிகள் கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுவாமித்தோப்பு பகுதிக்கு வரும் பக்தர்கள், அங்குள்ள கிணற்றில் தோண்டிப் பட்டையில் செய்யப்பட்ட வாளியில் நீர் இறைத்துக் குளிப்பது வழக்கம். இந்தத் தோண்டி வாளிகளில் சுமார் 15 நாட்கள் தண்ணீர் இறைக்க இயலும். இன்றும் திருமண வீடுகளில் சாம்பார் போன்ற குழம்புகளை பெரிய சட்டிகளில் இருந்து எடுத்து மாற்றுவதற்குத் தோண்டிகளையே பயன்படுத்துகிறார்கள். குமரி மாவட்டத்திலுள்ள சகாயதாஸ் (78) தோண்டிப் பட்டை செய்வதில் விற்பன்னர். சந்தைகளில் தற்போது விற்பனைக்கு வரும் தோண்டிப் பட்டைகள் நேர்த்தியாக இல்லை என்பது இவருடைய மதிப்பீடு.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

http://tamil.thehindu.com/general/environment/article24056688.ece

Link to comment
Share on other sites

கற்பகத் தரு 09: மழை அணிகளுக்கு முன்னோடி!

 

 
09chnvksambu1jpg

ஓலையில் வடிவங்கள் செய்வது மனித வாழ்வில் ஒரு தொடர் செயல்பாடாக இருந்து வந்துள்ளது.

ஓலைகளை வரிசையாக ஒன்றோடொன்று நெருக்கமாக இருக்கும்படி அடுக்கி, இணைப்பதற்கு பனை ஈர்க்குகளையே பயன்படுத்துவார்கள். இந்த வடிவமைப்பு தென்னை ஓலையில் செய்யப்படுவதை மாலத்தீவில் பார்த்திருக்கிறேன். இவை, அடிப்படையாகத் தடுக்காகப் பயன்படும். இத்துடன் ஈச்ச மட்டைகளை இணைத்துப் பலப்படுத்தி, அவற்றைக் குவித்து இணைத்துவிட்டால் சம்பு தயார்.

 

 

‘மழைக் கோட்டு’களின் முன்னோடி

சம்பு ஒரு சிறந்த மழை அணி. புயல் மழைக்கும் அசைந்து கொடுக்காதது என்றே குறிப்பிடுவார்கள். பண்டை காலத்தின் ‘மழை கோட்’ என்றே சொல்லுமளவு, இது தலை முதல் கால்வரை உடலைப் பாதுகாக்கும் ஓர் அமைப்பு. சம்பு என்ற வடிவம் காலத்தால் மிக தொன்மையானது என்பதை, அதன் வடிவத்திலிருந்தும் பயன்பாட்டுத் தன்மையிலிருந்தும் புரிந்துகொள்ளலாம்.

09chnvksambu2JPG

உலகின் பல்வேறு நாடுகளில் சம்புவை ஒத்த வடிவங்களில் மழை அணி செய்யப்படுவது பழங்குடியினரிடையே இருக்கும் வழக்கம். வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் பரவலாகப் பயன்பட்ட ஒரு வடிவம் இது. இன்று சம்புவைத் தொழில் முறையாகச் செய்தால் ரூ.150 முதல் ரூ.200 வரைக்கும் விற்க இயலும்.

 

குடையைவிடச் சிறந்தது

கிராம மக்களுக்குக் குடையைவிடச் சிறந்த வடிவமைப்பு இதுதான். சம்புவை வீட்டில் தட்டியாகவும், கூரை வேய்கையில் அடித்தளமாகவும், இரவுக் காவலிருப்பவர்களுக்கான கூடாரமாகவும் மாற்றி அமைத்துக்கொள்ளும் வழக்கமும் இருந்திருக்கிறது. சுமார் இருபது வருடங்களுக்கு முன்புவரை மிகப் பிரபலமான பயன்பாட்டுப் பொருளான சம்பு தற்போது வழக்கொழிந்துவிட்டது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த கல்யாணசுந்தரம் (63) என்ற பெரியவர், இன்றும் தடுக்குகளைச் செய்வதில் வல்லவர். சம்பு தேவைப்படுபவர்கள் பாண்டியன் என்ற அவரது உறவினரை அழைத்து (95006 27289) கூடுதல் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

கட்டுரையாளர்,பனை ஆய்வாளர்

http://tamil.thehindu.com/general/environment/article24115240.ece

Link to comment
Share on other sites

கற்பக தரு 10: மஞ்சணப்பெட்டி எனும் ‘மங்களம்’

 

 
16chnvkpanai1jpg
 
 

ஓலைப் பொருட்களில் மிகச் சிறிதானதும் வழிபாட்டில் முக்கியப் பங்கெடுக்கும் தன்மை கொண்டதுமான பெட்டியை ‘மஞ்சணப்பெட்டி’ எனக் கூறுவார்கள். சிறு தெய்வங்களுக்குப் படைக்கும் மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்றவற்றை வைக்கும் சிறிய பெட்டிதான் மஞ்சணப்பெட்டி. இப்பெட்டிக்கு மூடியும் உண்டு.

 

ஓலையில் முடையப்பட்டு நான் பார்த்த அழகிய பொருட்களில், இதுதான் முதன்மையானது. உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் அளவே சிறிதாயிருக்கும் இப்பெட்டி, மிகக் கவனமாக முடையப்பட்டிருக்கும். குருத்தோலைகளைப் பயன்படுத்தி முடையப்படும் இதை, இறைவனுக்குப் படைக்க உகந்ததாகப் புரிந்துகொள்ளலாம்.

முடைவது எனும் முறையில் உள்ளங்கை அளவிலிருந்து ஒரு ஆள் உயரம் வரையிலான பல்வேறு பொருட்கள் இன்றும் சந்தையில் கிடைக்கின்றன. எளிதாக முடையும் முறைகளைக் கற்க, மஞ்சணப்பெட்டி பொருத்தமானது. ஒரே நேரத்தில் இரண்டு பெட்டிகளைச் செய்து, பெரிய பகுதியைச் சிறிய பகுதியின்மேல் கவிழ்த்துவிட்டால் மஞ்சணப்பெட்டி தயார்.

 

பொளி எனும் நுட்பம்

இவ்வளவு சிறிய பெட்டியை முடைவதற்கு முன் ‘பொளி’ தயார் செய்ய வேண்டும். பொளி என்றால் ஓலைதான். ஆனால் ஓலையில் காணப்படும் ஈர்க்குகளை நீக்கி, தேவையான அளவில் அவற்றை வகுந்து கொள்ளுவதை இப்படிச் சொல்லுவார்கள். ஓலையில் முடைபவர்கள் தவறாது அறிந்துகொள்ள வேண்டிய ஒரு அடிப்படை நுட்பம் இது.

நவீன காலத்தில் ஓலைகளை வகுந்து எடுப்பதற்காக ஒரு கருவியைக் கண்டுபிடித்தார்கள். ஓர் இரும்பு ஆங்கிள் தண்டை எடுத்து, அதன் உயரத்தில் சமமாகவும் நீளத்தில் சரிபாதி வரும்படி ஒரு கட்டையை அதனுடன் இணைப்பார்கள். இவ்விதம் இணைக்கப்பட்ட மரத்துக்கு எதிர்புறம், அடுக்கடுக்காகச் சிறிய பட்டைகளை இணைத்து பிரி ஆணியைக் கொண்டு முறுக்கிவிடப்பட்டிருக்கும். இப்பட்டைகளின் நடுவில் சரியான அளவில் திணிக்கப்பட்ட சவரக் கத்திகளை மேலெழுந்தவாரியாக வைத்து, ஓலைகளை நீளவாக்கில் வகுந்தெடுப்பது நவீன முறை.

 

மஞ்சணப்பெட்டியை மீட்க

இன்று மஞ்சணப்பெட்டியை முடையும் திறன் கொண்டோரைக் காண்பது அரிது. கோயில்களிலும் கிராம வழிபாட்டு இடங்களிலும் மஞ்சணப்பெட்டியின் பயன்பாடு அற்றுப்போய்விட்டது.

மஞ்சணப்பெட்டிகளுக்கு நல்ல எதிர்காலம் அமைத்துக் கொடுக்கலாம். வீட்டின் சமையல் பொருட்களான கடுகு, சீரகம், வெந்தயம் போன்றவற்றை வைக்கும் பெட்டியாக மீண்டும் இதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியும்.

ஒரு மஞ்சணப்பெட்டியின் சந்தை விலை ரூ.15 மட்டுமே. ஒருவேளை நமது நகைக் கடைக்காரர்கள், இவற்றில் தங்க நகைகளை வைத்து விற்பனை செய்து, அதையே பொதிந்து கொடுப்பதற்காகப் பயன்படுத்தினாலும், மஞ்சணப்பெட்டிக்குப் புத்துயிர் கொடுக்கலாம். இன்றும் நுணுக்கம் நிறைந்த இந்தப் பெட்டியை முடைவது கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த கமலம் அம்மாள் (தொடர்புக்கு: 9952687897) மட்டுமே.

சிறிய பொளியும் குருத்தோலையின் அழகும் வாசமும் ஒருசேர, மஞ்சணப்பெட்டி மங்களமாகக் காட்சியளிக்கும். நாடார் சமூகத்தில் 120 குடும்பங்களுக்கு ‘திருமஞ்சணத்தார்’ என்ற பட்டம் உண்டு. மங்களகரமான பட்டம்தான். மஞ்சணை என்பது கிராம தெய்வங்களோ கன்னியரோ திருமணமானவரோ பூசிக்கொள்ளும் மங்களப் பொருள்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

http://tamil.thehindu.com/general/environment/article24179241.ece

Link to comment
Share on other sites

கற்பக தரு 11: ‘பாஸ்கெட்’ பிரியாணி சாப்பிடலாமா?

 

 
23chnvkkadavam1jpg
 
 

காலம் எனும் வாகனத்தில் பல்லாண்டு பயணித்து, நமது கரத்தில் இருக்கும் மிக அடிப்படைத் தேவையான, உறுதியான ஒரு படைப்பு, கடகம் (கடவம்). குமரி மாவட்டத்தில் அனைவரின் வீட்டிலும் தவறாது ஒரு கடகம் காணப்படும். கடகம் எத்தனை முக்கியமானதாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்று அது புறக்கணிக்கப்பட்ட ஒரு பொருளாகவும் மாறிவிட்டது.

 

கடகம் என்பது ஓலையில் செய்யப்படும் மிகப் பெரிய பெட்டி. கடகப் பெட்டி என்றும் கடாப்பெட்டி என்றும் அழைப்பார்கள். இரண்டு, மூன்று அடி அகலமும் ஒன்றிலிருந்து இரண்டரை அடி உயரத்துடனும் காணப்படும். மஞ்சணப்பெட்டியின் அடிப்படையை அறிந்தால் கடகப் பெட்டியைச் செய்துவிடலாம். ஆனால், இரண்டுக்குமான வித்தியாசம் என்பது மலைக்கும் மடுவுக்குமானது.

கடகம் என்ற வார்த்தையே குமரி மாவட்டத்தில் ‘வடிவ நேர்த்தியற்றது’ என்ற பொருளிலேயே பெருமளவில் கையாளப்படுகிறது. கடகம்போல் உறுதியான, ஆனால் இலகுவான ஒரு பொருளை நாம் செயற்கையாக உருவாக்க இயலாது.

 

பப்படங்கள் வைக்க

ஓலைக் கடகம் செய்வதற்குக் குறைந்தபட்சம் ஐந்து ஓலைகளை ‘அடி வைப்பார்கள்’. அடி என்றால் அடிப்படையாக என்று பொருள். தற்போது குறைந்தபட்சம் 6 அடி முதல் 11 அடிவரை வைக்கிறார்கள். கடகம் விற்பனைக்கு வரும்போது அதன் செய்நேர்த்தியும் தொழில் அறிவும் வியக்க வைக்கும். கடகம் பெரிதாக இருப்பதால், அவை இடத்தை அடைத்துக்கொள்ளும். ஆகவே, கடகம் செய்பவர்கள் 15 கடகங்கள் சேர்ந்த ஒரு தொகுப்பைச் செய்வார்கள். அவற்றை ஒன்றுக்குள் ஒன்றாக வரிசைப்படுத்தி அடுக்கி விற்பனைக்குக் கொடுப்பார்கள்.

23chnvkkadavam2JPG

கடகம், ஏழைகள் முதல் செல்வந்தர்கள் வீடுகள்வரைக்கும் இருக்கும். மண் சுமக்க, தேங்காய் சுமக்க, உரம் சுமக்க, பூ எடுத்துச் செல்ல, மீன் எடுத்துச் செல்ல எனப் பலவாறாக முன்பு அது பயன்படுத்தப்பட்டது. திருமண விசேஷங்களுக்குக் காய்கறி வாங்க வருபவர்களின் கைகளில் கண்டிப்பாகக் கடகங்கள் இருக்கும். கல்யாண வீடுகளில் பொறித்த மென்மையான பப்படங்கள் வைக்க, பழங்களைப் பறிமாற இன்றும் கடகம் தேவையாக இருக்கிறது.

 

சுவையூட்டும் பெட்டி

கடகம் நமது பாரம்பரியப் பண்டங்களைச் சுமக்கும் ஓர் உன்னத வடிவம். நமது வணிகம் எப்படி இருந்தது என்பதற்கான இறுதிச் சான்று. தலைச் சுமையாக மீன், காய்கறி, கிழங்குகளை எடுத்துச் செல்லும் வயோதிகர்கள் இன்றும் குமரி மாவட்டத்தில் இருக்கிறார்கள். ஒரு கடகம், நன்றாகப் பேணப்பட்டால் மூன்று முதல் ஐந்து வருடங்கள்வரை பயன்தரும். ஓலைவிளையைச் சார்ந்த பால் தங்கம் (93854 45773), கடந்த 40 வருடங்களாகக் கடகங்களைப் பின்னிக்கொண்டு வருகிறார்.

23chnvkkadavam3JPG
 

‘பக்கெட்’ பிரியாணியை மறக்கடிக்கச் செய்யும் சுவையையும் மணத்தையும் கடகத்தில் வைக்கப்பட்ட ‘பாஸ்கெட்’ பிரியாணி தரும். முயற்சி செய்துபாருங்களேன்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

http://tamil.thehindu.com/general/environment/article24231876.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "kadakam"

நம்மூர் கடகங்கள் இதைப்போன்று மேலே மட்டையால் வரிச்சு பிடித்து மற்றும் வண்ண ஓலைகளால் பின்னப் பட்டிருக்கும்.......!  tw_blush:

சிலர் சும்மா உதார் விட்டு கொண்டு திரிவார்கள், ஒரு விசயமும் இருக்காது.அவர்களை சொல்வது "மட்டக்கட்டு  நல்ல கட்டு ஆனால் பெட்டி பீத்தல்" என்று....!  tw_blush: 

Link to comment
Share on other sites

கற்பக தரு 12: நீர் வார்க்கும் வட்டி

 

 
30chnvkvatti2JPG
 
 
 

பனைத் தொழிலாளியின் முதன்மையான தொழில், வாழ்க்கை பனையைச் சார்ந்தே இருக்கும். ஆனால், பனைத் தொழிலின் காலம் ஆறு முதல் ஒன்பது மாதங்கள்வரை மட்டுமே. எஞ்சிய நேரத்தைப் பனையேறிகள் எப்படிச் செலவிட்டார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணம் ‘வட்டி’ அல்லது ‘றாவட்டி’.

 

வட்டி என்றால் ஐஸ்கிரீம் கோன் போன்ற வடிவில் இருக்கும் மிகப் பெரிய ஓலைப்பெட்டி. இவ்விதமான பின்னல் முறை மிகவும் தொன்மையானது. பழங்குடியினரிடம் காணப்படும் பின்னல்களுக்கு நிகரானது. சுமார் 10 முதல் 15 லிட்டர் நீர் கொள்ளளவு கொண்ட ஒரு கலம். இக்கலத்தின் விளிம்புகள் உறுதியாக இருப்பதற்கு மட்டையைக் கட்டிவிடுவார்கள். அப்படியே, பனை நார் கொண்டு வட்டியை ‘பொத்துவதும்’ உண்டு. நார் கொண்டு பொத்தும்போது அதன் உழைப்புத் திறன் அதிகமாகிறது. வட்டியின் இரு முனைகளையும் இணைக்கும் பனை நார்க்கயிறும் உண்டு.

பனை ஓலைப் பொருட்களில் நெடுங்காலமாகப் பயன்பாட்டில் இருந்ததும், பார்வைக்கு அழகானதும், திறமைக்குச் சவாலானதும் வட்டிதான். வட்டி பின்னுவது என்பது மட்டுமல்ல, வட்டிப் பயன்பாடும் நமது மண்ணை விட்டு அகன்று கால் நூற்றாண்டு ஆகிறது.

30chnvkvatti3JPG
 

 

நுணுக்கம் நிறைந்த பொருள்

வட்டியின் இருபுறமும் நீண்ட இரு தென்னை நார்க்கயிறுகள் இருக்கும். இக்கயிறுகளை இருபுறமாக இருவர் பற்றிக்கொண்டு, தாழ்விடத்திலிருந்து இசைவாகத் தங்கள் பயிர்களுக்குத் தண்ணீரைப் பாய்ச்சப் பயன்படுத்தப்படுவதுதான் வட்டியின் வேலை.

இதன் ஒற்றைப்படையான பங்களிப்பு, நவீன வேளாண் கருவிகளின் வரவு போன்ற காரணங்களால், நாளடைவில் இது பயனற்றதாகிவிட்டது. மேலும் இதை முடைவது மிகவும் நுணுக்கம் நிறைந்த பணி என்பதால் இதை முடையத் தெரிந்தவர்கள் அருகிவிட்டனர். ஆனால் மலர்ச்செண்டு அமைப்பாளர்கள், இவற்றை இன்று பயன்படுத்த ஆரம்பித்தால், ‘வட்டி’க்கு மீண்டும் புது வாழ்வு கிடைக்கும். இதை முடையத் தெரிந்தவர் எனக்குத் தெரிந்தவரையில் குமரி மாவட்டத்தைச் சார்ந்த தங்கப்பன் (95782 61900) மட்டும்தான்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

http://tamil.thehindu.com/general/environment/article24298174.ece

Link to comment
Share on other sites

கற்பக தரு 13: மறப்பெண் எனும் ‘முற’ப்பெண்!

 

 
07CHNVKMURAM3

KHAMMAM, TELANGANA, 07/07/2017: A tribal woman winnowing Ippa seeds Collection in Agency Areas at Laxmi Nagaram of Bhadrachalam of Bhadradri Kothagudem district. Photo: G.N. Rao   -  THE HINDU

 

 

னை மரங்கள் தமிழ் இலக்கியம் முழுவதும் விரவியிருந்தாலும் பனை சார்ந்த பொருட்கள் வெகு அரிதாகவே இலக்கியங்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் அசையும் காட்சிகளுடன் பதிவு செய்யப்பட்டவற்றுள் முதன்மையானது, முறம் கொண்டு புலியை விரட்டிய தமிழ் மறப்பெண் குறித்த பதிவு.

 

இரு வகையில் இதைப் பொருள் கொள்ள இயலும். ஒன்று, பெண்ணின் வீரம் என்பதாக இதுவரை நிலவிய பொருள். மற்றொன்று, முறத்தின் உறுதி. இவ்விரண்டையும் சேர்த்து நாம் நோக்கும்போது முற்காலங்களில் நெல் அறுவடையின்போது, பதரை (சாவி) அகற்ற வட்ட வடிவில் நின்றுகொண்டு முறத்தையே வீசுவார்கள். கடின உழைப்பில் மெறுகேறிய ஒரு பெண்ணால்தான் இது சாத்தியம் என்பது புலனாகும்.

 

தமிழகத்தின் தனித்துவ வடிவம்

பனை மரத்தின் ஓலை, ஈர்க்கில், மட்டைகளைக் கொண்டு முறத்தை முடைவார்கள். ஈர்க்கில் கொண்டு செய்யப்பட்ட ஒரு தட்டை முதலில் செய்து வைத்துக்கொண்டு, மட்டைகளில் ஓலையைக்கொண்டு இணைப்பதுதான் முறம்.

பல்வேறு வகையான முறங்கள் இருந்தாலும், புடைப்பதற்குப் பயன்படுத்தப்படும் முறத்தையே இங்கு நாம் காணவிருக்கிறோம். முறத்தின் வடிவம் கொம்பில்லாத மாட்டின் முகத்தை ஒத்திருக்கும். இந்த வடிவம் அதிசயமானது. உலகில் பல்வேறு வடிவங்களில் முறம் பயன்பாட்டில் இருந்தாலும், வேறு எங்கும் இல்லாத தனித்துவமான வடிவமே நமக்கு வாய்த்திருக்கிறது. இதை ‘சுளவு’, ‘சுளகு’ என்றும் தென் மாவட்டங்களில் அழைப்பார்கள்.

 

வழக்கொழிந்து போன கலை

தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் அடுக்களையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய பயன்பாட்டுப் பொருள் முறம். சோளம், காணம், கேழ்வரகு போன்றவற்றைப் புடைக்க, காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது முறம். அரிசியில் உமி, கல் நீக்குவதற்கு இதைவிட வேறு சிறந்த கருவி கிடையாது.

முறத்தைப் பயன்படுத்துவது வழக்கொழிந்து போன ஒரு கலை. புடைக்க வேண்டியவற்றை முறத்தில் இட்டு வானத்தை நோக்கி எம்பவிட்டு, பின்னர் அவை சிதறாமல் முறத்தைக் கொண்டு லாகவமாகப் பிடிப்பது சிறந்த பயிற்சியால் மட்டுமே சாத்தியம். இவ்விதம் தூக்கிப்போட்டுப் பிடிக்கும்போது பதர்கள் பறந்துவிடும், கற்கள் அடியில் சேர்ந்துவிடும், குருணைகள் முன்பாகக் குவிந்துவிடும்.

07chnvkmur1JPG
 

 

தொன்மையான ஓலைத் தொடர்பு

அறுவடை நேரத்தில் ஒரு சேர 7 முறங்களை வாங்கி விசிறுவது வழக்கம். இல்லாவிட்டால் அருகிலுள்ள வீட்டினரிடம் இரவல் வாங்கிப் பயன்படுத்துவதும் உண்டு. திருமணத்தின்போது சீர்வரிசையில் பெண்களுக்குக் கண்டிப்பாக முறம் ஒன்றையும் கொடுத்து அனுப்புவார்கள். இன்றைய சூழலில் நியாய விலைக் கடையில் அரிசி வாங்குபவர்கள் அனைவருக்கும் முறம் ஒரு இன்றியமையாத கருவி. பல்வேறு நாட்டார் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் சாமிக்குப் படைக்கும் பூஜைப் பொருட்கள் முறத்தில் வைத்தே படைக்கப்படுகின்றன. தொன்மையான ஓலைத் தொடர்பு மனிதனுக்கு இன்றும் இருக்கிறது என்பதற்கு இது சிறந்த சான்று.

பல்வேறு மசாலா பொருட்களை வெயிலில் காய வைக்க இன்றும் முறம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. முறம் நமது பாரம்பரியத்தின் அடையாளம். இன்று இதை இழப்பது என்பது, இது சார்ந்த அருகிவரும் தொழிலாளர்களையும் சேர்ந்து இழப்பதுவே.

பணக்குடியிலுள்ள ராமகிருஷ்ணன் (86808 80385) கடந்த 40 வருடங்களாக முறத்தை மட்டுமே முடைவதில் தேர்ச்சி பெற்றவராக இயங்கிவருகிறார். சிறந்த முறம் ஒன்றைச் செய்ய 300 ரூபாய்வரை ஆகும் என்கிறார். சிறந்த முறம் பேணப்பட்டால் 15 வருடங்கள்வரை பயன்படுத்த இயலும். ஒரு 300 ரூபாய் ஒதுக்கி, இவர்களது வாழ்வை உயர்வடையச் செய்யலாமே?

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

http://tamil.thehindu.com/general/environment/article24352576.ece

Link to comment
Share on other sites

கற்பக தரு 14: அன்னமிடும் அரிவட்டி

14chnvka1JPG

 பனை ஓலைப் பெட்டிகள் நிறைந்திருந்த குமரி மாவட்டத்தில் ‘ப’னாவை ‘வ’னாவாக, அழைக்கும் வழக்கம் உண்டு. ஆகையால்தான் நீர் வார்க்கும் பெட்டி ‘இறை வட்டி’ என அழைக்கப்பெற்று பின் மருவி றாவட்டியாகி வட்டியெனச் சுருங்கிப்போனது. அவ்விதமாகவே அரிசி வடிக்கும் பெட்டியை ‘அரிவட்டி’ என அழைக்கலாயினர்.

அரிவட்டியை முடையும் முறை மிகவும் வித்தியாசமானது. மூன்று அடுக்குகளாகச் செல்லும் வரிசைகளைக் கொண்டது. அடிப்படையில் சுளகின் பின்னல்களை ஒத்திருக்கும் இது, மேலெழுந்து வரும்போது மிகவும் சிக்கலான பின்னல்களாக மாறிவிடும். முக்கு மடக்குவது தனித்திறமை. ஆகவே, சிலர் அடித்தட்டு மட்டும் செய்துவிட்டு, அனுபவசாலிகளிடம் மீதி வேலையை ஒப்படைத்துவிடுவார்கள். இந்தப் பின்னல்களில் ஆங்கில ‘V’ வடிவம் அமைந்திருப்பதைக் காணலாம். இவை, பழங்குடியினரிடம் காணப்படும் பின்னல்களை ஒத்திருப்பது அதிசயம் அல்ல. பனை சார்ந்தவர்கள், தொல்குடியினர்தானே?

 

 

பெட்டிக்கு மிஞ்சி பாய்

அரிவட்டியின் தனித்துவம், அது குமரி மாவட்டத்தில் மட்டும் செய்யப்படும் ஒரு பெட்டி வகை. பெரும்பாலும் குருத்தோலைகளிலிருந்து பெறப்படும் ஈர்க்கில்களைக் கொண்டு செய்யப்பட்டாலும், இன்று குருத்தோலைகள் கிடைப்பது அரிதானபடியால் சாரோலை ஈர்க்கில்களைக் கொண்டு செய்யப்படுவது, இன்றைய வழக்கமாக இருக்கிறது.

14chnvka2JPG
 

இதற்கான ஈர்க்கில் எடுப்பது என்பது சற்றே கடினமான வேலை. ஈர்க்கிலோடு சிறிது ஓலையும் இருக்கும்படியாய் முதலில் வார்ந்து எடுத்துவிடுவார்கள். மீதமிருக்கும் ஓலைகள் வீணாய்ப் போய்விடாமல் இருக்க அதில்தான் பாய் முடைவார்கள். வகிர்ந்தெடுத்த ஈர்க்கிலை இரண்டாகக் கிழித்தே அரிவட்டி செய்வார்கள்.

ஒருவகையில் குமரி மாவட்டத்தில் அரிவட்டி முடைவோர் அனைவருமே பாய் முடையத் தெரிந்தவர்களாக இருப்பது ஏன் என்பதற்கு விடை இதன்மூலம் கிடைத்துவிடுகிறது. ஓலையின் ஒரு பகுதியையும் வீணடிக்காமல் சிக்கனமாக மட்டுமல்ல பயனுள்ள வகையிலும் பெட்டிகளைப் பின்னியிருக்கின்றனர், நம் முன்னோர்கள்.

 

மண வீடுகளில் ‘மண’ப்பெட்டி

அரிவட்டியின் மேல் பகுதியில் ஒரு கிரீடம் போன்ற அமைப்பு பின்னலின் எதிர்த்திசையில் சீராகச் செல்லும். அதற்குக் காரணம், பின்னல் விடுபடாமல் இருக்க ஏற்படுத்தப்பட்ட பயன் முறைமைதான்.

குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சுவையான காலை உணவு புட்டுதான் (பிட்டு). புட்டு செய்ய அரிசியைத் தண்ணீரில் ஊறப்போட்டுப் பின்னர் உரலில் இட்டுக் குத்தி மாவைச் சலித்தெடுப்பார்கள். ஊறப்போட்ட அரிசியை வடித்து உலர்த்தி எடுப்பதற்காக அனைத்து வீடுகளிலும் அரிவட்டி தவறாது இடம்பெற்றிருக்கும்.

இதுவும் திருமண வீடுகளின் சந்தைப் பொருட்களின் பட்டியலில் தவறாது இடம்பெறும். அரிசியைக் கழுவி நீர் வடித்து உலையில் போட அரிவட்டிகள்தான் ஏற்ற கருவி.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்புவரை, அரிவட்டியில்தான் திருமண வீடுகளில் சோற்றை எடுத்து வந்தார்கள். ஓலையைத் தாண்டி பிடித்திருப்பவரை சுடு சோறு உறுத்தாது. அதைக் குவித்து சோற்றை இலையில் போடும்போது எழும் மணம், பசியைத் தூண்டும்.

 

50 ரூபாய்க்கு…

புட்டு அவித்து வைக்க, காய்கறிகள் இட்டு வைக்க எனப் பல பரிணாமங்கள் கொண்டது என்பதால், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சில அரிவட்டிகள் கண்டிப்பாக இருக்கும்.

மிகப் பெரிய அரிவட்டிக்குப் பெரிய ஓலைகளில் 10 அடுக்கும் சிறிய பெட்டிகளுக்குச் சிறிய ஓலைகளில் ஏழு அடுக்குமாக முடைந்து கடைகளுக்குக் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு பெட்டியின் விலையும் தோராயமாக 50 ரூபாய்க்குக் கிடைப்பது, சாமானியனும் வாங்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்புவரை சலிப்பில்லாமல் வீடுகளில் புழங்கிவந்த இதை முடைவோர், தற்போது அரிதாகி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தைச் சார்ந்த உத்தரங்கோடு என்ற பகுதியில் வசிக்கும் மேரி (94424 78407), 40 வருடங்களுக்கும் மேலாக இவற்றை முடைந்து வருகிறார்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

https://tamil.thehindu.com/general/environment/article24418243.ece

Link to comment
Share on other sites

கற்பக தரு 15: மீன்களை ‘பறி’ கொடுக்காமலிருக்க…

 

 
karpagajpg

னைப் பொருட்களைத் தேடி ஓடுவது ஒரு பண்பாட்டுச் செயல். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். அவை அந்த ஊரிலிருப்பவர்களுக்கே தெரியாமல், மறைந்து போயிருக்கும். பனை சார்ந்த பொருட்களைக் குறித்துப் பல வேளை, எதுவுமே தெரியாதிருப்பதன் பொருள், நமக்கு மிகச் சமீபமாக இருக்கும் எளிய மனிதர்களை விட்டு நாம் விலகிவிட்டிருக்கிறோம் என்பதுதான்.

 ஒரு வருடத்துக்கு முன்பு, எனது புதுச்சேரி பயணத்தின்போது பாண்டியன் என்ற நண்பர், ‘சுமார் 10 வருடங்களுக்கு முன்புவரை ஓலையில் செய்யப்பட்ட ‘பறி’ என்ற பையை எடுத்தபடிதான் அனைவரும் மீன் வாங்கச் செல்வார்கள்’ என்ற தகவலைச் சொன்னார். அதற்குப் பிறகு, அதைக் குறித்துப் பலரிடம் நான் கேட்டும், எனக்கு பறியைப் பார்க்கும் வாய்ப்போ அதைச் செய்பவர்கள் குறித்த தகவல்களோ கிடைக்கவே இல்லை.

 
 

இந்த முறை ‘பனை மரம்’ என்ற மிகச் செறிவான புத்தகத்தை எழுதிய பண்ருட்டி இரா. பஞ்சவர்ணம், பனை விதைகளைப் பரவலாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ராமநாதன் ஆகியோரின் உதவியை நாடினேன். புதுச்சேரியைச் சல்லடை போட்டுத் தேடினோம். அப்போது புதுச்சேரியிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சின்ன வீராம்பட்டினம் என்ற கிராமத்தை வந்தடைந்தோம்.

மீன்களுக்கான பெட்டி

மீனவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளில் பறி செய்வார்கள் என்று தேடிச் சென்ற எங்களுக்கு ஒருசேர ஏமாற்றமும் ஆச்சரியமும் காத்திருந்தன. பனை ஓலையில் மக்கள் பயன்பாட்டுக்கான பறி அவர்களிடம் இல்லை. ஆனால் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்படும், ஓலையில் செய்யப்பட்ட குடுவை ஒன்று அவர்களிடம் இருந்தது. குமரி, நெல்லை மாவட்டத்தில் அதற்கு ஒப்பான ஒரு வடிவத்தை நான் கண்டதில்லை.

karpaga%202jpg
 

உள்நாட்டு மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை இடுகின்ற ஒரு பெட்டிதான் ‘பறி’. இது பார்ப்பதற்குச் சுரைக் குடுவை போலவே இருக்கும். ஆனால் சில நூதனமான அமைப்புகள் இதற்குள் உண்டு. இதன் சிறிய வட்ட வடிவ வாயிலிருந்து பின்னல்கள் தொடங்குகின்றன. ஒருவிரல் அகலம் உள்ள ஓலைகளைக் கொண்டு உருவாகிவரும் இதன் பின்னலகள் இறுதியில் இரண்டாக கிழிக்கப்பெற்று, நேர்க்கோட்டில் முடிச்சு போன்ற பின்னல்களால் நிறைவு பெறுகிறது.

தப்பிக்க முடியாத மீன்கள்

குருத்தோலைகளைக் கொண்டே இவற்றைப் பின்னுகிறார்கள். ஆகவே நெகிழும்தன்மை கொண்டதாக இருக்கிறது. இந்த நெகிழும்தன்மைக்கும் ஒரு காரணம் இருக்கிறது. என்னதான் கையளவுள்ள சிறிய வாய் அமைத்திருந்தாலும், உயிருடன் பிடிக்கப்படும் மீன்கள், துள்ளி வெளியே சென்றுவிடாதபடி இருக்க ஒரு அமைப்பைச் செய்திருக்கிறார்கள்.

இடுப்பில் கட்டி, குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும்போது மீன்களைத் தவறவிடாமல் இருப்பதற்காகவே இந்த ஏற்பாடு. குருத்தோலையானபடியால் பின்னலை சற்றே மடக்கிவிடுவார்கள். அப்போது அது பார்ப்பதற்கு மனித பிருஷ்டம் போலக் காட்சியளிக்கும்.

பறி செய்வதில் திறன் வாய்ந்த நான்கு குடும்பங்கள் இன்றும் இந்தப் பகுதியில் வாழ்கின்றன. இவர்களுள் மறைமலை அடிகள் தெருவைச் சார்ந்த ராஜேந்திரன், இன்றும் பறி முடைந்து விற்பனை செய்கிறார்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

https://tamil.thehindu.com/general/environment/article24480895.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கற்பக தரு 16: நலம் தரும் நார்க் கட்டில்

 

 

 
tharujpg

பனை ஓலைகளைப் பயன்படுத்தி பொருட்களைச் செய்யக் கற்றுக்கொண்ட மனிதர்கள், பனை நார்களைப் பயன்படுத்திப் பொருட்களைச் செய்ய ஆரம்பித்தனர். பனை நார்களைக் கிழித்துப் பக்குவம் செய்யும் பணிகள், ஓலைகளைவிடச் சற்றே அதிகமாக இருப்பதால், ஓலைகளைவிடவும் குறைவான பொருட்களே பனை நாரிலிருந்து பெறப்பட்டன. ஆனால், கலாச்சார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் பனை மட்டையிலிருந்து பெறப்படும் அகணி நார் மிக முக்கியமானது.

பனை நார் என்றவுடனேயே பனை நார்க் கட்டில்தான் எவருக்கும் நினைவுக்கு வரும். சிறு வயதிலிருந்தே உறங்குவதற்காகப் பனை நார்க் கட்டில்களே தென் மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவ்விதக் கட்டில்கள், பனையோடு தொடர்புடைய மக்களின் பெருமைகளைப் பறைசாற்றுகின்ற வகையில் இவர்கள் வீடுகளில் இருக்கும்.

 

உலகுக்கே முன்னோடி

பனை நார்க் கட்டிலின் தோற்றம் குறித்துத் தெரியவில்லை. வெகு சமீப நூற்றாண்டுகளில்தான் பனை நார்க் கட்டில் புழக்கத்துக்கு வந்திருக்கக் கூடும். ஆனால், உலகில் வேறு எந்தப் பகுதியிலும் பனை நார்க் கட்டில் பின்னும் தொழில்நுட்பம் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. அந்த வகையில் தென் தமிழகம் உலகுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது.

நெல்லை மாவட்டத்தில் நார்க் கட்டில்களை வேகமாகப் பின்னுவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், குமரியைப் பொறுத்தவரையில் மித வேகம்தான். பனை மட்டையின் உட்புறம் இருக்கும் அகணி நாரை எடுத்துக் காயவைப்பார்கள். காய்ந்த பின்பு, அதைத் தண்ணீரில் ஊறப்போட்டு நாரின் பிற்பகுதியில் இருக்கும் தும்புகளை நீக்கிச் சுத்தம் செய்வார்கள். இவற்றை ஒரு சீராக ‘வகிர்ந்து’ எடுக்க, இரண்டு நாட்கள் ஆகிவிடும்.

‘கால்’ கொடுக்கும் பூவரசு

பனை நார்க் கட்டில் தனித்தன்மை வாய்ந்தது எனச் சொல்லும்போது, அதன் சட்டங்கள்கூட பனை மரத்தால் செய்யப்பட்டவை என்பது முக்கியக் குறிப்பு. ஆனால், அதன் கால்கள் பெரும்பாலும் சீலாந்தி எனப்படும் பூவரச மரத்தில் செய்யப்படுபவை. இன்று தேவை கருதி வேறு மரங்கள் இட்டாலும், மிகச் சிறந்த மரம் என்பது பூவரசுதான். ஆசாரி இவற்றை ஒன்று கூட்டிச் செய்த பின்பு கட்டில் பின்னுபவர் தனது பணிகளைச் செய்யத் தொடங்குவார்.

சிறிதாக வகிர்ந்து வைத்திருக்கும் பனை நார்களைக் கட்டில் சட்டங்களில் பின்னி எடுப்பதுதான் பனை நார்க் கட்டில். இந்தப் பாவுகள், வலதும் இடதுமாகப் பிரிந்து 45 டிகிரியில் சாய்வாகச் செல்லும். தொய்வாக இருக்கும் இந்தப் பாவுகளை ஊடறுத்துச் செல்லும் நேர் பாவு அனைத்தையும் சீராக்கிவிடும் தன்மை வாய்ந்தது. ஓட்டைகள் தெரியும் இந்த விதப் பின்னல்களை ‘சக்கரக் கண்ணி’ என்று அழைக்கிறார்கள். சுமார் நான்கு முதல் 5 அடி நீளம் மட்டுமே உடைய இந்த நார்கள், முடிச்சுகள் இடப்பட்டே இணைக்கப்படுகின்றன. என்றாலும் இதன் பலம் அதிகம்தான்.

தொட்டிலான கட்டில்

தமிழகம் உலகுக்கு வழங்கக்கூடிய அதி அற்புதமான ஒரு கலை வேலைப்பாடு பனை நார்க் கட்டில். சிறு வயதில் குளிக்க வைத்துவிட்டு, கட்டிலில் கிடத்தி சாம்பிராணிப் புகை போடுவார்கள். பிரசவம் ஆன பச்சை உடம்புப் பெண்களுக்கும் நோயுற்றிருக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும் இது ஒரு சிறந்த கட்டில். இன்றும் இந்தக் கட்டில் பின்னுபவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் என்றால், அது மருத்துவ உலகால் பரிந்துரைக்கப்படுவதே காரணம். இந்தக் கட்டிலிலிருக்கும் நெகிழும் தன்மை, இவற்றில் கிடைக்கும் காற்றோட்டம், உலகில் வேறு எந்த வடிவிலாவது இணை செய்யப்பட்டிருக்கிறதா என்பது சந்தேகமே.

வயதில் மூத்தவர்கள் மட்டுமே செய்யும் இந்தப் பொருள் இளைய தலைமுறையினர் மத்தியில் அறியப்படாததாக மங்கிவிட்டது. பொன்பாறைக்குளம் என்ற கருங்களை அடுத்த ஊரில் வசிக்கும், குமரி மாவட்டத்தைச் சார்ந்த அருணாச்சலம், இப்போதும் இந்தக் கட்டிலைச் செய்து வருகிறார்கள்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

https://tamil.thehindu.com/general/environment/article24538996.ece

Link to comment
Share on other sites

கற்பக தரு 17: ஓல ஓலக் குடிசையில…

 

 

 
karpagajpg

உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் தங்குமிடம் உண்டு. அவை எப்படித் தம் சந்ததிகளுக்கு வசதியாக அமைய வேண்டும் என்பதைக் குறித்து அவை கவனம் எடுத்துச் செய்கின்றன. இந்த வகையில் மனிதர்களும் தங்கள் நிலப்பரப்பில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தங்கள் வீடுகளை அமைத்துக்கொண்டனர். அப்படிப் பார்க்கும்போது, பனையோலைகள் மனித வாழ்வில் ஆற்றிய பங்கை அளவிட முடியாது.

பொதுவாக, பனை மரம் நிழல் தராது என்பார்கள். அது சார்ந்த பழமொழிகள் பனை மரத்தை மட்டுமல்ல; நம் தொல்குடிகளையும் இழிவுசெய்யும் நோக்குடன் புனையப்பட்டவையே! ஓலையால் வேயப்பட்ட வீடுகள் நமது கலாச்சார அடையாளங்கள். அவை தன்னம்பிக்கையுடன் வாழ்ந்த நமது சமூகத்தின் மாறா அடையாளங்கள்.

 

ஒன்றின் மீதொன்றாக ஓலை

பனைத் தொழில் நடைபெறும் காலத்தில் ஓலைகளை மரத்திலிருந்து வெட்டுவது கிடையாது. ஆனால், ஓலைகளைப் பனை ஏறும் தொழிலுக்கு முன்பாக வெட்டிவிடுவார்கள். இது ‘பனைக்குச் சிரை எடுப்பது’ என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. சிரை எடுப்பது என்பது முடிவெட்டிவிடுவது போன்ற பொருளிலேயே இங்கே எடுத்தாளப்படுகிறது.

வெட்டிய ஓலைகளை மட்டை தனி, பத்தை தனி, ஓலை தனி எனப் பிரித்துக்கொள்வார்கள். ஓலைகளைத் தனித் தனியாகக் கால்களால் மிதித்துப் பரப்புவார்கள். அதன் பின்பு, ஓலைகளை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டி வைத்து, இவற்றின்மேல் பாரமான பொருட்களை ஏற்றி வைப்பார்கள். இப்படிச் செய்தால் ஓலையில் இருக்கிற சில வளைவுகள் மாறி அவை சீராகிவிடும். ஒரு சில நாட்களுக்கு அவை அப்படியே இருக்க விடப்படும்.

வீட்டுக்கு ஆனை பலம்

பின்னர், இவற்றை எடுத்து வீடுகளுக்குக் கூரை வேயப் பயன்படுத்துவார்கள். அப்போது, ஓலைகளை ஒன்றிணைத்துக் கட்ட பனை நாரைப் பயன்படுத்துவார்கள். ஆகவேதான் ‘ஆயிரம் அகணியால் கட்டிய வீட்டுக்கு ஆனையின் பலம்’ என்ற சொலவடை வழக்கில் இருந்தது.

இன்று வீடுகள் அனைத்தும் கூரையிலிருந்து மாறி, ஓட்டு வீடுகள் எனப் பதவி உயர்வு பெற்று, அடுக்கு மாடிக் குடியிருப்புகளாகக் கொலுவீற்றிருக்கின்றன. ஓலை வீடுகளில் இருந்த சுகம் போய்விட்டது. அதனால் நமது பாரம்பரிய அறிவும் பெருமளவில் நம்மை விட்டு அகன்றுவிட்டது.

சுற்றுலாவுக்காகப் படையெடுப்பு

ஒரு நண்பர் தனது வாழ்வில் பார்த்த ஒரு நிகழ்வைக் கூறும்போது, தனது ஓலைக் குடிசை எரிவதைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பனையேறி, உள்ளே ஓடிச் சென்று தனது ரேடியோ பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து ரேடியோவைக் கேட்க ஆரம்பித்தாராம். செய்வதற்கு ஒன்றுமில்லை என்றான பின் எஞ்சி இருக்கும் ஒரே மகிழ்ச்சியை (பாடல் கேட்பதை) அவர் தவறவிடவில்லை.  அவருக்குத் தெரியும் பனை ஓலைகளைக் கொண்டு தன்னால் இரண்டே நாட்களில் அருமையான வீடு ஒன்றை மீண்டும் அமைத்துவிட முடியும் என்று!

பனை ஓலைகளைக் கூரையாக வேய்வதுதான் வழக்கம். ஆனால், சுவருக்காகவும் பனை ஓலைகளை வைக்கும் வழக்கம் இன்று விழுப்புரம் பகுதிகளில் இருக்கிறது. இன்றைய கால கட்டத்தில், நட்சத்திர விடுதிகளில்தான் இப்படியான பாரம்பரியங்கள், நவீன வடிவங்கள் உட்புகுத்தப்பட்டு மீண்டெழுகின்றன. ஆனால், நமது ஊர்கள் ‘பாதுகாப்பான’ கட்டிட அமைப்பை நோக்கிச் சென்று பெரும் பணத்தை விழுங்கிவிடுகின்றன.

ஒரு ஊர் முழுவதும் பனை ஓலையால் செய்யப்பட்ட வீடுகள் நிறைந்திருந்தால், உலகமே அந்தக் கிராமத்தை நோக்கிச் சுற்றுலாவுக்காகப் படையெடுக்கும் காலம் விரைவில் வரும்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

https://tamil.thehindu.com/general/environment/article24600357.ece

Link to comment
Share on other sites

கற்பக தரு 18: பனை நாரில் பயன்மிகு செருப்பு

 

 

பனை மரம் ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது எனக் கூறுவார்கள். ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் எங்கெங்கு சென்றதோ அவ்விடங்களில் எல்லாம் ஆதி மனிதர்கள் பனை விதைகளை தங்களுடன் எடுத்துச் சென்றனர் எனச் சொல்லப்படுகிறது. ஏனென்றால், பனை மரங்கள் மக்கள் வாழும் பகுதிகளின் அருகிலேயே இருக்கிறது.

அடர் காடுகளில் பனை மரங்களை நாம் காண இயலாததற்கு மனிதனோடு பனை மரம் கொண்டுள்ள உறவே காரணம். இப்பயணம் ஒரே நாளில் நடைபெற்றதில்லை ஆகையால் இப்பயணத் திட்டத்தில் ஏற்பட்ட சவால்களும் படிப்பினைகளும் மிக முக்கியமானவை.

 

பாதையில் காணும் கல்லும் முள்ளும் சிறு பாதங்களைத் தீண்டாவண்ணம் இருக்கவே காலணிகளைக் கண்டுபிடித்திருப்பார்கள். தோல் காலணிகள் கி. மு. 8,000-ம் ஆண்டு முதலே பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது என்பது தொல்லியல் கண்டுபிடிப்பு.

பனை ஓலையில் செய்யப்பட்ட மிக அழகிய ஆதிகாலப் பயன்பாட்டுப் பொருள் காலணிதான். மொத்தம் நான்கே இலக்குகளில் இரு பகுதி காலணியையும் செய்துவிடலாம். தேவையைப் பொறுத்து பெரிதும் சிறிதுமான ஓலைகளைத் தெரிந்துகொண்டு பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் ஏற்ற காலணிகளைச் செய்யலாம்.

பனைமட்டையிலிருந்து அகணி (ஊட்புற) நார் எடுத்து அவற்றால் காலணியைக் கட்டிக்கொள்ளலாம். இத்தொன்மையான வடிவமைப்பு குமரி மாவட்டத்தில் வழக்கொழிந்து போய்விட்டது. நினைவுகளிலிருந்து மட்டுமே இன்று இவற்றை மீட்டெடுக்க இயலும்.

ஒரு காலகட்டத்தில் மண் சுமப்பவர்கள், சந்தைக்குப் பொருட்களைத் தலைச் சுமடாக எடுத்து வருபவர்கள் இதை அணிந்திருப்பார்கள். ஒரு நாள் பயணத்துக்குச் சரியாக இருக்கும், பிய்ந்து போய்விட்டதென்றால் மற்றொன்று செய்து போட்டுக் கொள்ளலாம்.

இச்செருப்பின் பயன்பாடு அறிய ஒருநாள் முழுவதும் இதை அணிந்து பயணித்தேன். இதமாக இருந்தது. மிக அடிப்படையான பின்னல் ஆகையால், நீர் உட்புகும் வண்ணமே இக்காலணி அமைக்கப்பட்டிருக்கிறது. அதே நாளில் இதே செருப்போடு இரு சக்கர வாகனத்தை இயக்கி 30 கிலோ மீட்டர் தடையின்றி பயணம் செய்யவும் முடிந்தது.

குளிர் காலங்களில் ரப்பர் செருப்புகளையோ பிளாஸ்டிக் செருப்புகளையோ பயன்படுத்துவதைத் தவிர்த்து இந்தப் பனைச் செருப்பு செருப்புகளைப் பயன்படுத்துவது கால்களுக்கு நல்ல பலனளிக்கும். மாதக்கணக்கில் வைத்து பயன்படுத்தலாம். இன்னும் ஒரு சுற்று ஓலைகளைக் கட்டிக்கொண்டால் மேலும் பல நாட்கள் உழைக்கும். இவ்விதச் செருப்புகள் காலைக் கடிப்பதில்லை.

இன்றும் திருநெல்வேலி ஏரல் பகுதிகளில் உள்ள குடும்பங்களில் நாட்டார் தெய்வங்களுக்கான நோன்புகள் கடைப்பிடிக்கும்போது, பனை ஓலையால் செய்யப்பட்ட இவ்விதச் செருப்புகளையே பயன்படுத்துவார்கள். இவ்விதச் செருப்புகள் நமது கலாச்சார அடையாளமாகச் சுற்றுலாத் தலங்களில் விற்கலாம். தற்போதைய செருப்புகளூக்கு மாற்றாகக்கூட இதைப் பயன்படுத்தலாம்.

குமரி மாவட்டத்திலுள்ள மிடாலக்காட்டைச் சார்ந்த அருணாச்சலம் (76) தனது இந்தப் பனை ஓலைச் செருப்பு செய்து தருகிறார். ஒரு ஜோடி செருப்பு செய்வதற்கு 60 ரூபாய் மாத்திரமே வாங்குகிறார். பயன்படுத்திதான் பார்க்கலாம்தான் இல்லையா

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

https://tamil.thehindu.com/general/environment/article24663711.ece

Link to comment
Share on other sites

கற்பக தரு 19: விடிலி

 

 
karpagajpg

பனையேறும் தொழிலில் ஈடுபட்டுவரும் சமூகம் தொன்மையானது; ஒரு நாடோடி சமூகம்போல் வாழ்க்கைமுறைகளைக் கொண்டது. இந்தச் சமூக மக்களின் வீடுகள் இந்த அம்சங்களைப் பறைசாற்றும். இந்த எளிமையான வீடுகளை மாற்றி, அரசே குடிசை மாற்றுத் திட்டங்கள் மூலம் நவீனக் கட்டுமான பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்துகிறது.

விடிலி என்பது குடிசை என்றுகூட பொருள் படாது. குடிசை என்றால் மண்ணும் பிற மரங்களும் அதன் கட்டுமானத்தில் இடம்பெற்றிருக்கும். விடிலி என்பது பனை ஓலைகளையும் மட்டைகளையும் பனந்தடிகளையும் கொண்டு கட்டப்படும் ஒரு எளிய கட்டுமானம். இது பனை ஏறுபவர்கள் தாங்கள் பணி செய்யும் இடத்தில் தங்குவதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படும் தாழ்ந்த அளவில் காணப்படும் வாழ்விடமும்கூட. இங்கேதான் காலையில் பதனீர் காய்ச்சுவார்கள். இரவில் உறங்குவார்கள். பனையேறிகள் தங்கள் அனைத்துத் தளவாடங்களையும் வைத்துக்கொள்ளும் ஒரு அறையாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

 

முழுவதும் பனை சார்ந்த பொருட்களாலேயே கட்டப்படும் இவ்வீடுகளை நவீன வாழ்வு தனது வசதிகளைக் கருத்தில் கொண்டு தவறவிட்டுவிட்டது எனலாம். விடிலிதான் பனையேறிக்கு வீடு, பாதுகாப்புப் பெட்டகம், இளைப்பாறும் இடம், பணியறை, தளவாடங்கள் வைக்குமிடம் எல்லாம்.

எளிமையான இந்த தங்கும் கூடாரங்கள், இந்தச் சமூகத்தின் வாழ்வில் ஆற்றிய பங்களிப்புகள் சார்ந்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. விடிலி பொதுவாக பனந்தோப்பில் காணப்படும் உடை மரங்களுக்கு அருகில் அமைக்கப்படும். புதிதாகத் தொழில் தொடங்குவதற்கு முன்பதாக எப்படியாவது விடிலி ஒன்றைப் பனையேறிக் குடும்பம் அமைத்துக்கொள்ளும். விடிலிக்கும் குடிசைக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம், பனை ஓலைகளாலேயே விடிலியின் சுவர் பகுதியும் அமைக்கப்பட்டிருக்கும். இவ்வோலைகள் முடையப்படாமல் அப்படியே வைத்து சுவர் அமைக்கப்பட்டிருக்கும்.

விடிலியைச் சுற்றி பனையேறிகள் பயன்படுத்தும் மண்பாண்ட கலங்கள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை வெயிலில் காய்ந்தபடி கிடக்கும். ஆனால், அவர்கள் காய்சும் கருப்பட்டியும் கற்கண்டும் இந்தச் சிறிய பகுதிக்குள்ளேயே பரண் அமைக்கப்பட்டு கருத்துடன் பாதுகாக்கப்படும். ஒரு சமூகம் நவீன வாழ்வில், தன்னை எவ்விதம் குறுக்கி நமது வாழ்வின் இனிப்புச் சுவையை கொடுக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கையில் மலைப்புதான் ஏற்படுகிறது.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

https://tamil.thehindu.com/general/environment/article24723300.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கற்பக தரு 20 : வெற்றிலைப் பெட்டி

 

 
karpagajpg

வெற்றிலை போடுவது ஆசியா முழுவதும் காணப்படும் ஒரு வழக்கம். வெற்றிலையில் இணைத்துச் சுவைக்கப்படும் பாக்கு, சுண்ணாம்பு ஆகிய சேர்மானங்களுக்குப் பனையோடு நெருங்கிய தொடர்பு உண்டு. பாக்கு மரம் பனை குடும்பத்தைச் சார்ந்ததுதான். பனை மரங்களின் தோற்றம் ஆசியாவில் இருந்துதான் வந்திருக்கும் என்ற கோணத்திலும் இன்று ஆய்வுகள் செய்யப்படுகின்றன. சுண்ணாம்பு எப்படி உணவின் ஒரு பகுதி ஆனது என்பது குறித்த ஒரு தேடல், நம்மைப் பதனீரின் அண்டைக்கு இழுத்துச்செல்லும்.

வெற்றிலை குதப்பும் கோளம்பி எனும் பித்தளைப் பாத்திரம் குமரி - கேரள வழக்கத்தில் கடந்த காலங்களில் இருந்துள்ளது. மங்கல காரியங்களுக்கு வெற்றிலை வைத்து அழைக்கும் நம் பண்பாட்டில் இன்றும் வழக்கம் இருக்கிறது. வெற்றிலை மருந்தாகவும் வாய் துர்நாற்றத்தைப் போக்கவும் பண்பாட்டின் அடையாளமாகவும் இருக்கிறது. வெற்றிலையையும் இடும் பொருட்களையும் வைக்க பயன்படுத்தும் பெட்டியின் பெயர்தான், வெற்றிலைப்பெட்டி. இந்த வெற்றிலைப் பெட்டிக்கெனத்

 

தனி மரியாதை உண்டு.

பொதுவாக, வெற்றிலை என்பது மென்மையான இலை. வெயில் பட்டால் துவண்டுவிடும் தன்மை கொண்டது. ஆகவே, வெற்றிலை இடுவது ஒரு பழக்கமான பின்பு, அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் வந்தது. பனையோலையில் வைக்கப்பட்ட பொருட்கள் கெடாது. அந்த அடிப்படையில் வெற்றிலையைப் பாதுகாக்க பனையோலையில் பெட்டி செய்யும் வழக்கம் வந்தது. மேலும் பொருட்கள் பாதுகாப்பாகவும் சிதறாமலும் இருக்க ஒரு வடிவம் தேவைப்படும். ஆகையால், பல்வேறு வடிவங்களுக்கும் பின்பு உருபெற்ற ஒரு வடிவமாக இது இருக்க வேண்டும்.

karpaga%202jpg

குருத்தோலையில்  செய்யப்படும் இவ்வித வெற்றிலைப்பெட்டிகள் கைக்கு அடக்கமானவை. இவை ஒரு பகுதி பொருட்களை வைக்கவும் மற்றொரு பகுதி மூடியாகவும் செயல்படும். இரண்டும் ஒன்று போல் காணப்பட்டாலும், இவற்றின் வடிவம் ஒன்று ஒன்றை நிறைத்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இவ்வித வடிவங்களுக்கு இருமுனை முக்கு என்ற பின்னல் வடிவம் ஆதாரமானது.

பயன்பாட்டைப் பொறுத்த அளவில் பத்து வருடங்களுக்கு மேலும் வைத்து அன்றாடம் பயன்படுத்தும் மக்கள் இருக்கிறார்கள். இன்றைய சூழலில், இவ்விதச் சிறு பெட்டிகள் பரிசளிக்க ஏற்றவை. குறிப்பாக, நகைக் கடைகள் இவற்றில் நகைகளை வைத்து விற்பனை செய்யலாம் எனும் அளவுக்கு மங்கலகரமானது.

குமரி மாவட்டைத்தைச் சார்ந்த, கருங்கல் பகுதிக்கு அருகில் உள்ள காட்டுவிளை செல்லதுரை அவர்கள் இவ்விதமான பெட்டிகளைச் செய்துவருகிறார்கள். ஒரு பெட்டியைச் சுமார் 150 ரூபாய்க்கு விற்கிறார். மேலும் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு அவர் பயிற்சியும் வழங்க ஆயத்தமாக இருக்கிறார்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

https://tamil.thehindu.com/general/environment/article24778027.ece

Link to comment
Share on other sites

கற்பக தரு 21: சுண்ணாப்பெட்டி

 

 
panaijpg

பனையேறிகளது வாழ்வில் சுண்ணாம்பு இரண்டரக் கலந்த ஒன்று. நேர்த்தியான சுண்ணாம்பு இருந்தால் மட்டுமே பதனீர் இறக்க இயலும். கடலோரங்களில் இருக்கும் பனையேறிகள் பெரும்பாலும் கடல் சிப்பியை நீற்றி சுண்ணாம்பு எடுக்கிறார்கள். கடலோரப் பகுதிகளில் இல்லாத பனையேறிகள் சுண்ணாம்புக்கல்லை நீற்றித் தேவையான சுண்ணாம்பு எடுக்கிறார்கள். சுண்ணாம்பு எடுப்பதற்காகக் காளவாய் அமைப்பார்கள்.

பனை மரம் ஏறுபவர்களுக்குக் கள் இயற்கையாகக் கிடைக்கும் என்றாலும், கள்ளின் பயன் சார்ந்த ஆயுள் ஒரு நாள் மட்டுமே. மிக அதிகமாகக் கிடைக்கும் கள் வீணாவது சேகரிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த தொல் குடிகளுக்குச் சவாலாக இருந்தது. ஆகவே, அவர்களின் தேடலின் ஒரு அங்கமாக பனையிலிருந்து ஊறும் சுவைமிக்க நீரில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து புளித்துப்போவதை  ஒருசில மணி நேரத்திற்குத்  தள்ளி வைத்தனர். இவ்விதமான செயல்பாடுக்காகச்  சுண்ணாம்பை எடுத்துச் செல்வதற்கு என அவர்கள் செய்துகொண்ட பெட்டியின் பெயர்தான் சுண்ணாப்பெட்டி.

 

பனை ஓலையில் செய்யப்படும் பெட்டிகளின் அடிப்பாகம் தரைக்குச் சமமாக இருக்கும். அப்படி இருந்தால்தான் அவற்றை ஒரு சமதளத்தில் வைக்க முடியும். ஆனால், பனையேறிகள் செய்யும் சுண்ணாப்பெட்டியின் வடிவம் மட்டும் மற்ற பனை பொருட்களின் வடிவமைப்பிலிருந்து வெகுவாக மாறுபடும். இதன் அடிப்பாகம் ஆங்கில எழுத்து ‘V’ போல் காணப்படும். இவ்விதமான ஒரு வடிவமைப்பு, பனைத் தொழில் சார்ந்த பல அவதானிப்புகளை உள்ளடக்கியது. 

ஒரு மனிதருக்குச் சுண்ணாப்பெட்டி செய்யத் தெரிந்தால் அவரைத் தேடி எண்ணற்ற பனையேறிகள் வருவார்கள். குறிப்பாக, சுண்ணாப்பெட்டியின் வாய் அதில் சுண்ணாம்பை இடுமளவுக்கு விரிந்தும் கலக்குமட்டை (சுண்ணாம்பைப் பதனீர் பானையில் தடவும் கருவி) உள்ளே நுழையும் அளவுக்குக் கச்சிதமாகவும் செய்யப்பட்டிருக்கும். தொழில் சார்ந்து மட்டுமே இவை பயன்படுத்தப்பட்டதால் இன்று இது குறித்துப் பொதுமக்களிடம் போதுமான அளவில் விழிப்புணர்வு இல்லை.

குருத்தோலைகளைக் கொண்டு ஒரு முறைக்கு நான்கு முறை பின்னல்கள் ஊடுபாவாகச் செல்லவைத்து அமைக்கப்படும் இவ்விதச் சுண்ணாப்பெட்டிகளிலிருந்து ஒரு துளி சுண்ணாம்பு வெளியில் சிந்தாது. குருத்தோலைகளைக் கொண்டு அடைக்கும் விதம் இதன் பயன்பாட்டையும் ஆயுளையும் நீட்டிக்கும் வண்ணம் செய்யப்படுகின்றன. சுண்ணாப்பெட்டியின் மேல் பகுதியில் கருக்குவைத்து சுற்றிக் கட்டி அதைப் பலம் வாய்ந்ததாக மாற்றிவிடுவார்கள். கண்டிப்பாக மூன்று வருடங்கள் இதைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

இதன் ‘V' வடிவ அடிப்பாகம் அமைப்பில் ஒரு சுவாரசியம் உண்டு. பனையேறிகள் பயன்படுத்தும் தளவாடங்களை வைக்க பயன்படுத்தும் அருவாப்பெட்டியின் உள்ளே இதை வைக்கையில் இதன் அடிப்பாகம் குவிந்து இருந்தாலே உள்ளே நிற்கும் என்ற பயன்பாட்டுப் புரிதலை பனையேறிகளிடமிருந்தே பெறமுடிந்தது. ஆகவே, இது எத்துணை அர்த்தம் பொதிந்த  வடிவமைப்பு என வியப்பே மேலிடுகிறது. மேலும் இவர்களின் வாழ்வு முறையே போர் வீரர்களின் வாழ்வியலை ஒத்தது. ஆகவே, உடைவாளை வைப்பது போன்ற ஒரு வடிவமைப்பில் இது இருக்கிறது என்றும் எண்ண வாய்ப்பிருக்கிறது.

குமரி மாவட்டத்தைச் சார்ந்த காட்டுவிளை என்ற பகுதியில் வாழும் செல்லத்துரை  இவ்விதமான சுண்ணாப்பெட்டியைச் செய்வதில் வல்லவர். இன்று இப்பெட்டியைச் சுவரில் மலர்கள் வைக்கும் அலங்காரப் பொருளாகப் பாவிக்க ஏற்றது. விலை ரூ 150/- செல்லத்துரை இதற்கான பயிற்சியையும் அளிக்கிறார்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

https://tamil.thehindu.com/general/environment/article24900127.ece?utm_source=environment&utm_medium=sticky_footer

Link to comment
Share on other sites

கற்பக தரு : ஓலைப் பட்டாசுகளின் கொண்டாட்டம்

 

 
karpagajpg

தமிழ்ச் சமூகத்தில் பட்டாசு வெடிக்கும் வழக்கம் எப்போது தோன்றியது என்பது குறித்துப் பலதரப்பட்ட கருத்துகள் இருக்கின்றன. ஆனால், நான் பட்டாசுகளை ஒரு புது வரவாகவே பார்க்கிறேன்.

ஒரு சமூகம் தன்னுள் ஏற்படும் புது மாறுதல்களைக்கூடத் தனது கலாச்சாரத்தையே மையப்படுத்தி உள்வாங்கும் விதம் அழகானது. அப்படித்தான் ஓலைப் பட்டாசு அல்லது ஓலைவெடி இங்கு அறிமுகமாகிறது. புது விஷயங்களை உள்வாங்கும் விதத்தில்கூட ஆழ்ந்த புரிதலைக் கொண்டிருக்குமானால் அச்சமூகம் எத்துணை நெருக்கத்தை ஒரு மரத்துடன் கொண்டிருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 

இந்த ஓலைப் பட்டாசு, ஓலைபடக்கு என்றும் அழைக்கப்படுகிறது. இது காகிதம் விலை அதிகமாக இருந்த நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும். சுமார் ஐந்து தலைமுறைகளாக இந்த வகைப் பட்டாசுகளைத் தயாரிப்பவர்கள் இருந்திருக்கிறார்கள். சுமார் 120 வருடங்களுக்கு முன்பு வள்ளியூரில் ஒருவர் ஓலைபடக்குகளைச் செய்யும் விதத்தை கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இன்றும் திருவனந்தபுரத்துக்கு அருகிலுள்ள நெய்யாற்றின்கரையில் கூடைப் பனையோலையில் செய்யப்படும் ஓலை வெடிகள் உண்டு. முக்கோண வடிவில் செய்யப்படும் இவ்விதப் பட்டாசுகள் மூன்று அளவுகளில் கிடைக்கிறன. நகங்களை விடச் சற்றே பெரிதாக இருப்பவை சிறுவர்கள் வெடிப்பதற்கானவை. இவ்வித வெடிகளுக்கு வால் இருக்காது.

ஆனால், ஒரு ஈர்க்கிலை ஓலைக்குள் நுழைத்து குழந்தைகள் பாதுகாப்பாக வெடிக்கலாம். சத்தம் அதிகம் வராது. சற்றே அளவில் பெரிய வெடிக்கு ஓலையிலேயே வால் இருக்கும். அது இளைஞர்களுக்கானது.அதாவது ஓலையின் ஒரு பகுதியைக் கையில் பிடித்துக்கொண்டு வெடியைக் கொளுத்தி வீசிவிட வேண்டும்.

எல்லாவற்றையும்விட மிகப் பெரிய ஓலை படக்கு சமோசா அளவில் இருக்கும். சமோசா வெடிதான் இதன் பெயர். ஆனால் அது சரம் என்று சொல்லப்படும் கயிற்றோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும். தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களிலும், கோயில் திருவிழாக்கள் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளில் பேரொலியுடன் வெடிக்கப்படும். அதைக் கம்பம் என்று அழைப்பார்கள். திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பாரம்பரியமாக இவற்றைத் தயாரிப்பவர்கள் இருக்கிறார்கள்.

பனை ஓலையில் செய்யும் வெடிகளில் சிறியவற்றை ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 5,000 வரை செய்வார்கள். இந்த வேகம் அசரவைப்பது. இரண்டு அல்லது மூன்று வினாடிகளில் ஒரு வெடியைச் செய்பவர்கள்கூட இருக்கிறார்களாம். இந்தத் திறமைகள் மடை மாற்றம் செய்யப்பட வேண்டும்.

பனை ஓலைப் பட்டாசு செய்பவர்களுக்குச் சில சரும நோய்களும், உடல் உபாதைகளும் ஏன் சில வேளைகளில் தீக்காயங்களும் விபத்துகளும் ஏற்படும். ஆகவே, வருங்காலத்துக்கு நாம் எவ்வகையிலும் பரிந்துரைக்க முடியாத தொழில் இது.

எனினும், தற்போது தமிழகத்தில் வாழும் சில குடும்பங்கள் இவற்றை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளன. ஆனால், இப்போது இந்தத் தொழில் நசிவடைந்துவிட்டது. அரசு இவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதுவரையில் இந்த எளிய தொழிலை ஆதரிப்பது நமது கடமை.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

https://tamil.thehindu.com/general/environment/article24947011.ece

Link to comment
Share on other sites

கற்பக தரு 23: ஓலைச் சுவடி

 

 
f7ac25c9P1531369mrjpg

இந்தியாவைப் பொறுத்த அளவில் தோல் சாராத மூன்று தொல் எழுதுபொருட்கள் புழக்கத்தில் இருந்தன. ஒன்று பூர்ஜ் (Himalayan Birch) மரப்பட்டை, அடுத்தது தாலிப்பனை (Thalipot Palm) ஓலை, மூன்றாவது பனையோலை. இந்த மூன்றில் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகத் தனி ஆவர்த்தனம் செய்தது பனை ஓலைச் சுவடிதான்.

தமிழ் மரபில் மட்டுமல்ல. தென்னிந்திய இலக்கியங்களிலும் அதன் வளர்ச்சியிலும் பனை ஓலைகள் முக்கியப் பங்களிப்பை ஆற்றியிருக்கின்றன. ஓலைகளே நமது மொழியின் வரி வடிவ அமைப்பை நிறுவியிருக்கின்றன.

 

தமிழின் அத்தனை செவ்வியல் படைப்புகளும் ஓலைகளில் எழுதப்பட்டன.

சுமார் 60 வருடங்களுக்கு முன்புவரை குமரி மாவட்டத்தில் நிலம் சார்ந்த பட்டாக்களை எழுதிவைக்கும் ஓலைப்பத்திரங்கள் வழக்கில் இருந்துள்ளன. ஓலைச் சுவடிகளின் இறுதி மூச்சு என்பது ஜாதகம் பார்ப்பவர்களால் 21-ம் நூற்றாண்டுவரை வெகு பிரயத்தனப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வகை எழுத்துகள் எழுத்தாணிகளால் ஓலையில் கீறல் முறையில் எழுதப்பட்டுப் பின்னர் மஞ்சள் பூசப்படுவதால் தெளிவாக வாசிக்கக் கிடைப்பவை. இவ்வகை ஓலைச் சுவடிகள் 400 ஆண்டுகள் வரையிலும் கெடாமல் இருக்கும்.

ஓலையில் எழுதுவதைக் கலைப் பொருளாக விற்பனைக்குக் கொண்டுவரலாம். அது பனை சார்ந்து வாழ்பவர்களுக்கு வருவாயை ஈட்டிதரும். தமிழ்நாடு சுற்றுலாத் துறை இதற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம். 

இன்றும் பனையோலையில் எழுதத் தெரிந்தவர்கள் தமிழகத்தில்  இருக்கிறார்கள். அவ்வகையில் விழுப்புரம் மாவட்டம் ஈஸ்வரகண்ட நல்லூரைச் சேர்ந்த ஜோதிடர் வேலாயுதம், இன்றும் ஜாதகத்தை ஓலைகளில் எழுதிவருகிறார். பனைமரம் என்ற புத்தகத்தை எழுதிய பண்ருட்டி பஞ்சவர்ணத்தின் உதவியாளர் லெட்சுமி இம்மனிதரைக் கண்டடைய உதவினார்.

 கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

https://tamil.thehindu.com/general/environment/article25013771.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.