Jump to content

நீட் தேர்வில் தோல்வி- விழுப்புரம் மாணவி தற்கொலை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

நீட் தேர்வில் தோல்வி- விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை.

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா எலி மருந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழக மாணவர்கள் 60 பேர் தேர்ச்சி பெற முடியவில்லை.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து எலி மருந்தை குடித்தார்.

10-ம் வகுப்பில் 495 மதிப்பெண்களும் 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்களும் பெற்றவர் பிரதீபா. விஷம் குடித்த நிலையில் ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரதீபா மரணமடைந்தார்.

நீட் தேர்வு தோல்வியால் மாணவி அனிதா கடந்த தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டு நீட் தேர்வு தொலைதூர இடங்களில் போடப்பட்டதால் 3 மாணவர்களின் பெற்றோர்கள் உயிரிழந்தனர். தற்போது பிரதீபா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வு தமிழகத்தில் உயிர்களை காவு கொள்வது தொடரும் நிகழ்வாகிவிட்டது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/neet-exam-17-year-old-tn-student-commits-suicide-321606.html

 

####################################################################################################################

 

NEET Fail: Villupuram student attempts to commit suicide

நீட் தோல்வி: விழுப்புரம் அருகே மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி.

நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த 40% மாணவர்கள்தான் தேர்ச்சி பெற்றனர். அதனால் சுமார் 1 லட்சம் மாணவர்களின் மருத்துவ படிப்பு பாழானது.

தங்களது மருத்து படிப்பு கனவு பாழான நிலையில் மாணவ, மாணவிகள் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. விழுப்புரத்தில் பிரதீபா, டெல்லியில் பிரணவ் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த நிலையில் இன்று விழுப்புரம் செஞ்சி அருகே மேல்சேவூரைச் சேர்ந்த கீர்த்திகா என்ற மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/neet-fail-villupuram-student-attempts-commit-suicide-321608.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வுகள் எது சம்மந்தமானவை?... மருத்துவம்,பொது அறிவு  அல்லது ஆங்கிலம் 

 

Link to comment
Share on other sites

5 hours ago, ரதி said:

நீட் தேர்வுகள் எது சம்மந்தமானவை?... மருத்துவம்,பொது அறிவு  அல்லது ஆங்கிலம் 

 

இந்தியாவில் இரண்டு வகை பள்ளிக்கூட பாடத் திட்டங்கள் உண்டு.

1) மாநில பாட திட்டங்கள்
2) மத்திய (அரசு) பாடத்திட்டங்கள்

தமிழ்நாட்டில் பலர் மாநிலப் பாடத்திட்டங்களில் படிக்கின்றார்கள். நானும் அதில்தான் படித்தேன். இரண்டு பாடத்திட்டங்களில் கற்பிக்கப்படும் சிலபஸ் வேறானவை.

இப்போது மத்திய அரசு நீட் தேர்வுகளை புகுத்தியுள்ளது. அதாவது பிளஸ் 2 பாஸ் செய்தவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும். இந்த நீட் பெறுபேறுகளின் அடிப்படையில்தான் மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்கள் கொடுக்கப்படும். இதில் சிக்கல் என்னவென்றால் இந்த நீட் தேர்வின் கேள்விகள் மத்திய அரசு பாடத்திட்டங்கள் அடிப்படையில் கேட் கப்படும். ஒரு உதாரணத்துக்கு, இலங்கையில் தாவரவியல் படித்த ஒருவரை இந்தியாவில் பரீட்சை எழுத வைப்பது போன்றது இது.

பாடத்திட்டங்கள் இவ்வாறு வெவ்வேறாக இருப்பதால் தனியார் கல்விகூடங்களில் சிறப்பு பயிற்சி பெற்றால் மட்டுமே இதில் ஓரளவு தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த தனியார் பயிற்சிகளுக்கு இலட்சக்கணக்கில் பணம் அறவிடப்படுகிறது. இது பிரதீபா போன்ற ஏழை மாணவிகளுக்கு எட்டாக்கனி. ஆனால் அகில இந்திய அளவில் 12 ஆம் இடத்தைப் பெற்ற கீர்த்தனா எனும் மாணவி (இவர்தான் தமிழகத்தில் முதலிடம் பெற்றவர்) இது முடிந்த காரியம். இவரது தாயும், தந்தையும் மருத்துவர்கள். இரண்டு வருடங்கள் தனியார் பயிற்சிக் கூடத்தில் பயிற்சி பெற்றுள்ளார். பேச்சை பார்க்கும்போது ஒரு பிராமண வகுப்பை சேர்ந்தவர் என்பது தெரிகிறது.

ஆகவே, ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இனிமேலும் மருத்துவக் கனவில் இருப்பது இயலாத காரியம் ஆகிவிட்டது.

அதைவிடவும், தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகள் (அரசு நடத்துபவை) உள்ளன. இவை தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டவை. பீகார், உபி போன்ற பெரிய மாநிலங்களில்கூட விரல் விட்டு எண்ணும் அளவில்தான் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இப்போது அந்த வெளி மாநில மாணவர்கள் நீட் தேர்வின் மூலம் தமிழக கல்லூரி இடங்களை எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படுத்தப்பட்டு விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் ராஜஸ்தான் பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள மாணவ மாணவியர் எவ்வாறு அதிக எண்ணிக்கையில் தேர்ச்சிபெற முடிகிறது?

எனக்கு  தெரிந்த  ஒரு பணக்கார பெண் இலங்கையில் B 2C  S எடுத்தவ  பிறகு இந்தியா சென்று MBBS முடிச்சு வந்து வேலை செய்யிறா.இப்படி பணக்கார தகுதியற்ற மாணவர்கள் டாக்டர் ஆவதை தடுக்கத்தான் NEET  தேர்வு என்பது என் கணிப்பு??

Link to comment
Share on other sites

2 hours ago, Eppothum Thamizhan said:

அப்படியென்றால் ராஜஸ்தான் பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள மாணவ மாணவியர் எவ்வாறு அதிக எண்ணிக்கையில் தேர்ச்சிபெற முடிகிறது?

எனக்கு  தெரிந்த  ஒரு பணக்கார பெண் இலங்கையில் B 2C  S எடுத்தவ  பிறகு இந்தியா சென்று MBBS முடிச்சு வந்து வேலை செய்யிறா.இப்படி பணக்கார தகுதியற்ற மாணவர்கள் டாக்டர் ஆவதை தடுக்கத்தான் NEET  தேர்வு என்பது என் கணிப்பு??

எனது புரிதல் சரியாக இருக்குமானால் பெரும்பாலான வட மாநிலங்களில் மத்திய அரசு பாடத் திட்டங்களில்தான் படிக்கிறார்கள். தமிழ்நாடு விலக்கு கேட்டது. ஆனால் இந்திய ஒன்றிய அரசும், உச்ச நீதி மன்றமும் மறுத்துவிட்டன. ஆனால் ஆந்திர மாநிலம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுவிட்டன.

தரம் என்று பார்த்தால் கேரளத்துக்கு அடுத்தபடியாக மருத்துவத்துறையில் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு. வெளிநாடுகளில் இருந்துகூட சிகிச்சைக்கு வருகிறார்கள். இது இப்படி இருக்கையில், இன்னும் ஆண் மயிலின் கண்ணீரில் பெண்மயில் கர்ப்பம் தரிக்கிறது எனும் எண்ணத்தில் உள்ள வட இந்திய மந்திரிகள் வந்த மாநிலங்கள் தேர்வு பெறுகின்றன என்றால் முறைக்கேடு செய்கிறார்கள் என்பதே எனது கணிப்பு.

சென்ற ஆண்டு தபால்துறைக்கு ஆள் எடுத்தார்கள். இதற்கு தேர்வு எழுத வேண்டும். தமிழ்நாட்டில் வேலை செய்ய தேர்வாகி வந்தவர்கள் யார் என்று பார்த்தால் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். :35_thinking: இவர்கள் "தமிழில்" தேர்வு எழுதி வெற்றி பெற்றார்களாம். ? தமிழகத்தில் தமிழில் எழுதியவர்கள் தோல்வி அடைந்தார்களாம். 

அரியானா தேர்வில் வெற்றி பெறவர்களின் தொலைபேசி எண்ணில் அழைத்துப் பார்த்தபோது, அந்த எண்கள் வேலை செய்யவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, இசைக்கலைஞன் said:

எனது புரிதல் சரியாக இருக்குமானால் பெரும்பாலான வட மாநிலங்களில் மத்திய அரசு பாடத் திட்டங்களில்தான் படிக்கிறார்கள். தமிழ்நாடு விலக்கு கேட்டது. ஆனால் இந்திய ஒன்றிய அரசும், உச்ச நீதி மன்றமும் மறுத்துவிட்டன. ஆனால் ஆந்திர மாநிலம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுவிட்டன.

தரம் என்று பார்த்தால் கேரளத்துக்கு அடுத்தபடியாக மருத்துவத்துறையில் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு. வெளிநாடுகளில் இருந்துகூட சிகிச்சைக்கு வருகிறார்கள். இது இப்படி இருக்கையில், இன்னும் ஆண் மயிலின் கண்ணீரில் பெண்மயில் கர்ப்பம் தரிக்கிறது எனும் எண்ணத்தில் உள்ள வட இந்திய மந்திரிகள் வந்த மாநிலங்கள் தேர்வு பெறுகின்றன என்றால் முறைக்கேடு செய்கிறார்கள் என்பதே எனது கணிப்பு.

சென்ற ஆண்டு தபால்துறைக்கு ஆள் எடுத்தார்கள். இதற்கு தேர்வு எழுத வேண்டும். தமிழ்நாட்டில் வேலை செய்ய தேர்வாகி வந்தவர்கள் யார் என்று பார்த்தால் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். :35_thinking: இவர்கள் "தமிழில்" தேர்வு எழுதி வெற்றி பெற்றார்களாம். ? தமிழகத்தில் தமிழில் எழுதியவர்கள் தோல்வி அடைந்தார்களாம். 

அரியானா தேர்வில் வெற்றி பெறவர்களின் தொலைபேசி எண்ணில் அழைத்துப் பார்த்தபோது, அந்த எண்கள் வேலை செய்யவில்லை.

அனியாயம் தெரிந்தே நடக்குது .?மா புளிக்கிறது அப்பத்துக்கு நல்லத என்று சொல்வார்கள்.அப்பம் ஒட்டுப்டாமல் பிரிந்தால் நல்லது.எல்லா ஆண்மாவும் சாந்தி அடையும்.?

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வாறு ஆந்திரா நீட்டினை வெட்டியது? தமிழகம் அதை ஏன் செய்ய முடியவில்லை? 

Link to comment
Share on other sites

22 minutes ago, Nathamuni said:

எவ்வாறு ஆந்திரா நீட்டினை வெட்டியது? தமிழகம் அதை ஏன் செய்ய முடியவில்லை? 

சந்திரபாபு நாயுடுவை ஊழல் வழக்குகளை வைத்து மிரட்ட முடியவில்லை. அவர்கள் இந்திய ஒன்றிய அரசை வளைக்க முடிகிறது. தமிழகத்தின் ஊழல் பேர்வழிகளால் முடியவில்லை.

ஒரு உதாரணத்திற்கு, வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது என்பதை கையில் எடுத்தது ஆந்திரா. சிறப்பு மாநில அந்தஸ்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது. நாங்கள் உங்களுக்கு வரி செலுத்தவில்லை. நீங்களும் மத்திய தொகுப்பில் இருந்து பணம் தர வேண்டாம் என்று வலிமையான வாதங்களை முன்வைக்கிறது. தமிழக எடுபுடிகளால் இது முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை கடைசி 3-வது இடத்துக்கு தள்ளிய நீட் கொடுங்கரம்!

நினைக்க நினைக்க நெஞ்சு பதறுகிறது... உலகம் முழுவதும் தமிழ்நாட்டு கல்வி கூடங்களில் அதுவும் அரசு பள்ளிகளில் படித்து இன்று லட்சக்கணக்கானோர் வெளிநாடுகளில் கோலோச்சி வருகின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் படிப்பறிவற்றவர்கள்; அவர்களுக்கு கல்வித் தகுதியே கிடையாது என கூனிக் குறுக வைத்திருக்கிறது நீட் தேர்வு முடிவுகள். தமிழகத்துக்கு 35-வது இடமாம்... அதாவது கடைசியில் இருந்து 3-வது இடமாம்,

Only 40% TN Students clear in NEET Exam

37-ல் நாகாலாந்து; 36-ல் டையூ டாமன்... தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை 1,14,302. ஆனால் தேர்ச்சி பெற்றோர் வெறும் 45336. அதாவது 40% மட்டுமே.

எஞ்சிய 60% மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். கடந்த காலங்களைப் போல பிளஸ் டூ தேர்வில் 1100க்கும் மேல் நல்ல மதிப்பெண் எடுத்து இயல்பாக மருத்துவ படிப்பு கிடைக்க வேண்டிய விழுப்புரம் பிரதீபா போன்றவர்கள் தோல்வியைத் தழுவி இன்று மரணித்துப் போய்விட்டனர்.

Only 40% TN Students clear in NEET Exam

தமிழ்நாட்டு மாநில கல்வி முறையில் பயின்ற கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கும் என தலையால் அடித்து சொல்லியும் அனிதா தன் உயிரையே மாய்த்த போதும் கேளா அரசாக மத்திய அரசு இருந்து வருகிறது. இப்போது விழுப்புரம் பிரதீபா மாண்டு போய் விட்டார்.

விழுப்புரத்து கீர்த்திகா மாண்டு போக முயற்சித்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய அநீதி?

கல்வியில் சிறந்த தமிழகத்தை கட்ட கடைசிக்கு தள்ளி டெல்லி கொடூரமாக சிரிக்கிறது.. இது நம்மை திட்டமிட்டு அவமானப்படுத்துகிற கல்வித் தரப்படுத்துதல் என்பது அல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்? நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் நீட் எனும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு!

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/only-40-tn-students-clear-neet-exam-321613.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

எவ்வாறு ஆந்திரா நீட்டினை வெட்டியது? தமிழகம் அதை ஏன் செய்ய முடியவில்லை? 

இம்முறை ஆந்திர தெலுங்கானா இரண்டுமே நீட் தேர்வு நடந்த மாநிலங்களே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎5‎/‎2018 at 3:33 AM, இசைக்கலைஞன் said:

இந்தியாவில் இரண்டு வகை பள்ளிக்கூட பாடத் திட்டங்கள் உண்டு.

1) மாநில பாட திட்டங்கள்
2) மத்திய (அரசு) பாடத்திட்டங்கள்

தமிழ்நாட்டில் பலர் மாநிலப் பாடத்திட்டங்களில் படிக்கின்றார்கள். நானும் அதில்தான் படித்தேன். இரண்டு பாடத்திட்டங்களில் கற்பிக்கப்படும் சிலபஸ் வேறானவை.

இப்போது மத்திய அரசு நீட் தேர்வுகளை புகுத்தியுள்ளது. அதாவது பிளஸ் 2 பாஸ் செய்தவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும். இந்த நீட் பெறுபேறுகளின் அடிப்படையில்தான் மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்கள் கொடுக்கப்படும். இதில் சிக்கல் என்னவென்றால் இந்த நீட் தேர்வின் கேள்விகள் மத்திய அரசு பாடத்திட்டங்கள் அடிப்படையில் கேட் கப்படும். ஒரு உதாரணத்துக்கு, இலங்கையில் தாவரவியல் படித்த ஒருவரை இந்தியாவில் பரீட்சை எழுத வைப்பது போன்றது இது.

பாடத்திட்டங்கள் இவ்வாறு வெவ்வேறாக இருப்பதால் தனியார் கல்விகூடங்களில் சிறப்பு பயிற்சி பெற்றால் மட்டுமே இதில் ஓரளவு தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த தனியார் பயிற்சிகளுக்கு இலட்சக்கணக்கில் பணம் அறவிடப்படுகிறது. இது பிரதீபா போன்ற ஏழை மாணவிகளுக்கு எட்டாக்கனி. ஆனால் அகில இந்திய அளவில் 12 ஆம் இடத்தைப் பெற்ற கீர்த்தனா எனும் மாணவி (இவர்தான் தமிழகத்தில் முதலிடம் பெற்றவர்) இது முடிந்த காரியம். இவரது தாயும், தந்தையும் மருத்துவர்கள். இரண்டு வருடங்கள் தனியார் பயிற்சிக் கூடத்தில் பயிற்சி பெற்றுள்ளார். பேச்சை பார்க்கும்போது ஒரு பிராமண வகுப்பை சேர்ந்தவர் என்பது தெரிகிறது.

ஆகவே, ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இனிமேலும் மருத்துவக் கனவில் இருப்பது இயலாத காரியம் ஆகிவிட்டது.

அதைவிடவும், தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகள் (அரசு நடத்துபவை) உள்ளன. இவை தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டவை. பீகார், உபி போன்ற பெரிய மாநிலங்களில்கூட விரல் விட்டு எண்ணும் அளவில்தான் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இப்போது அந்த வெளி மாநில மாணவர்கள் நீட் தேர்வின் மூலம் தமிழக கல்லூரி இடங்களை எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படுத்தப்பட்டு விட்டது.

 

இசை பதிலுக்கு நன்றி ... மத்திய அரசின் பாடத் திடடத்திற்கும்,மாநில அரசின் பாட திடட சிலபஸ் வேறானாலும் அது மருத்துவம் சம்மந்தமானவை தானே.....சில நேரம் மாநில அரசின் பாடத் திடடமானது சர்வதேச தரத்துக்கு இல்லாமையால் தான் இந்த திடடத்தை கொண்டு வந்தார்களோ தெரியாது.


எது எப்படி இருந்தாலும் இதற்காக தற்கொலை செய்வது என்பது கோழைத்தனமானது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2018 at 11:17 AM, ரதி said:

நீட் தேர்வுகள் எது சம்மந்தமானவை?... மருத்துவம்,பொது அறிவு  அல்லது ஆங்கிலம் 

 

Physics, Chemistry and Biology, ஆகிய பாடங்களே NEET  தேர்வில் பரீட்சிக்க  படுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

Physics, Chemistry and Biology, ஆகிய பாடங்களே NEET  தேர்வில் பரீட்சிக்க  படுகின்றன.

 

நன்றி...தமிழ்நாடு மருத்துவ துறையில் சிறந்து விளங்குறது....ஆனால் அங்கு வேலை செய்பவர்கள் தமிழ்நாட்டுக்குள் மட்டும் படித்தவர்களா என்பது எனது கேள்வி ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

NEET: Trichy Student commits suicide

நீட் தேர்வில் தோல்வி - திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீட் எனும் நாசகார தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த செஞ்சி பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் திருச்சி மாணவி சுபஸ்ரீ நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ் டூ தேர்வில் 907 மதிப்பெண்கள் எடுத்திருந்த சுபஸ்ரீ நீட் தேர்வில் தோல்வி அடைந்தார். இது குறித்து திருச்சி நெ.1 டோல்கேட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/neet-trichy-student-commits-suicide-321800.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் சீமானைக் கடாசிவிட்டு இந்தத் திரியில் எழுதியதுமாதிரி உருப்படியாக தொடர்ந்தும் எழுதவேண்டும்?

Link to comment
Share on other sites

8 hours ago, கிருபன் said:

இசைக்கலைஞன் சீமானைக் கடாசிவிட்டு இந்தத் திரியில் எழுதியதுமாதிரி உருப்படியாக தொடர்ந்தும் எழுதவேண்டும்?

சாது மிரண்டால் காடு கொள்ளாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

இசைக்கலைஞன் சீமானைக் கடாசிவிட்டு இந்தத் திரியில் எழுதியதுமாதிரி உருப்படியாக தொடர்ந்தும் எழுதவேண்டும்?

மணியான... கருத்து,  கிருபன்.  ?
இசை.... வருவார்... என்று, நான் நினைக்கவில்லை. ?
ஆனால்.... கட்டாயம்  வரவேண்டும்.  சீமானை பற்ரி, என்னிடம்   நாலு கேள்வி,  பாக்கி இருக்கு...... ?️‍?️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

இசைக்கலைஞன் சீமானைக் கடாசிவிட்டு இந்தத் திரியில் எழுதியதுமாதிரி உருப்படியாக தொடர்ந்தும் எழுதவேண்டும்?

 

என்ட மச்சான் குறைந்த பட்சம் நான் எழுதினத்திற்காவது பதில் சொல்லி இருக்கலாம் 
 

Link to comment
Share on other sites

On 6/6/2018 at 11:29 AM, ரதி said:

 

இசை பதிலுக்கு நன்றி ... மத்திய அரசின் பாடத் திடடத்திற்கும்,மாநில அரசின் பாட திடட சிலபஸ் வேறானாலும் அது மருத்துவம் சம்மந்தமானவை தானே.....சில நேரம் மாநில அரசின் பாடத் திடடமானது சர்வதேச தரத்துக்கு இல்லாமையால் தான் இந்த திடடத்தை கொண்டு வந்தார்களோ தெரியாது.


எது எப்படி இருந்தாலும் இதற்காக தற்கொலை செய்வது என்பது கோழைத்தனமானது

 

மத்திய பாடத்திட்டம் என்பதை முதலில் பார்ப்போம். இந்த மத்திய பாடத் திட்டத்தை முதலில் கொண்டு வந்த நோக்கம் என்பது மத்திய அரசு பணிகளில் உள்ளவர்கள் நாடு முழுமைக்கும் எங்காவது இடமாற்றலில் போக நேரிடும். அப்போது அவர்களது குழந்தைகள் ஒரே பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும் அல்லவா.. அதற்காக CBSE எனப்படும் இந்த பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. மற்றும்படி, அரசியலமைப்பு சட்டத்தின்படி கல்வி என்பது மத்திய / மாநில பட்டியலில் உள்ளது. அதாவது மாநில அரசுக்கும் அதனை நிர்ணயிக்கும் உரிமை உள்ளது. அதனை பறிக்கும் ஒரு சட்ட வடிவமே இந்த நீட் என்பது.

எந்த பாடப் பரப்பாக இருந்தாலும் ஒரு மனிதனால் அதனை முழுமையாக படித்துவிடவே முடியாது, சாகும் வரையில்கூட.

ஒரு உதாரணத்துக்கு, தாவரவியல் என்றால் அதில் மாநில பாடத்திட்டத்தில் சில பாடங்கள் இருக்கும். மத்திய பாடத்திட்டத்தில் சில பாடங்கள் இருக்கும். மாநில பாடத்திட்டத்தில் கத்தரிக்காயை படிப்பதாக வைத்துக்கொள்வோம். மத்திய பாடத்திட்டத்தில் அவரைக்காய் பற்றிய படிப்பாக இருந்தால் எப்படி அதை எழுதுவது? இந்த மாணவர்களின் வயது 17, 18 என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

இங்கே மாநில பாடத்திட்டத்தில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். எல்லோருக்கும் +2 தேர்வு முடிவுகளே பிரதானமாக போய்விட்டதால் +1 பாடங்களை சில உயர்ந்த பாடசாலைகளில் கற்பிப்பது இல்லை என்று சொல்கிறார்கள். இது அறிவுச் செழுமையை குறைக்கும் செயல். அதனால்தான், இப்போது +1 கூட பொது தேர்வு என கொண்டுவந்துவிட்டார்கள்.

இந்த "நீட்" என்பது அதிக தரம் வாய்ந்த மாணவர்களை தேர்ந்தெடுக்கும் என்று சொன்னார்கள். ஆனால் பீகாரில் தேர்வு பெற்ற முன்னணி மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வுகளில் அரைகுறையாக பாஸ் செய்தவர்கள் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

அந்த மாணவி... 9,ம் மாடிக்கு ஏறிப்  போய், கீழே குதிக்கும் மட்டும் படம் எடுத்தவர்களை.. என்னவென்று சொல்வது. ?

Link to comment
Share on other sites

48 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text

அந்த மாணவி... 9,ம் மாடிக்கு ஏறிப்  போய், கீழே குதிக்கும் மட்டும் படம் எடுத்தவர்களை.. என்னவென்று சொல்வது. ?

 

இறந்த மாணவியும் அவர் இறக்கும் வரை படம் எடுத்த கூட்டமும் இந்தியாவின் இரட்டை முகத்தை காட்டுகின்றது. இதே போல் தான் எல்லா விசயங்களும். வாழ்வுக்காக போராடிய தமிழர்களை தமிழக காவல் துறையே சுட்டுக்கொல்கின்றது. உலக அழகிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரதமர் கொல்லப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கமாட்டார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவனை நியாப்படுத்தி ஊர்வலம் போகுது ஒரு கூட்டம். அரசியல் புலனாய்வு ஒட்டுமொத்த அறிவு வளம் ஊடகத் துறை சட்டம் எல்லாம் கேலிக்குரியதாகி வெள்ளையரின் ஆட்சியில் இருந்ததை விட மோசமாக காப்பரேட்டுகளுக்கு அடிமையாகின்றது இந்தியா. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.