Jump to content

நீட் தேர்வில் தோல்வி- விழுப்புரம் மாணவி தற்கொலை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

நீட் தேர்வில் தோல்வி- விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை.

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா எலி மருந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழக மாணவர்கள் 60 பேர் தேர்ச்சி பெற முடியவில்லை.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து எலி மருந்தை குடித்தார்.

10-ம் வகுப்பில் 495 மதிப்பெண்களும் 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்களும் பெற்றவர் பிரதீபா. விஷம் குடித்த நிலையில் ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரதீபா மரணமடைந்தார்.

நீட் தேர்வு தோல்வியால் மாணவி அனிதா கடந்த தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டு நீட் தேர்வு தொலைதூர இடங்களில் போடப்பட்டதால் 3 மாணவர்களின் பெற்றோர்கள் உயிரிழந்தனர். தற்போது பிரதீபா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வு தமிழகத்தில் உயிர்களை காவு கொள்வது தொடரும் நிகழ்வாகிவிட்டது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/neet-exam-17-year-old-tn-student-commits-suicide-321606.html

 

####################################################################################################################

 

NEET Fail: Villupuram student attempts to commit suicide

நீட் தோல்வி: விழுப்புரம் அருகே மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி.

நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த 40% மாணவர்கள்தான் தேர்ச்சி பெற்றனர். அதனால் சுமார் 1 லட்சம் மாணவர்களின் மருத்துவ படிப்பு பாழானது.

தங்களது மருத்து படிப்பு கனவு பாழான நிலையில் மாணவ, மாணவிகள் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. விழுப்புரத்தில் பிரதீபா, டெல்லியில் பிரணவ் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த நிலையில் இன்று விழுப்புரம் செஞ்சி அருகே மேல்சேவூரைச் சேர்ந்த கீர்த்திகா என்ற மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/neet-fail-villupuram-student-attempts-commit-suicide-321608.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வுகள் எது சம்மந்தமானவை?... மருத்துவம்,பொது அறிவு  அல்லது ஆங்கிலம் 

 

Link to comment
Share on other sites

5 hours ago, ரதி said:

நீட் தேர்வுகள் எது சம்மந்தமானவை?... மருத்துவம்,பொது அறிவு  அல்லது ஆங்கிலம் 

 

இந்தியாவில் இரண்டு வகை பள்ளிக்கூட பாடத் திட்டங்கள் உண்டு.

1) மாநில பாட திட்டங்கள்
2) மத்திய (அரசு) பாடத்திட்டங்கள்

தமிழ்நாட்டில் பலர் மாநிலப் பாடத்திட்டங்களில் படிக்கின்றார்கள். நானும் அதில்தான் படித்தேன். இரண்டு பாடத்திட்டங்களில் கற்பிக்கப்படும் சிலபஸ் வேறானவை.

இப்போது மத்திய அரசு நீட் தேர்வுகளை புகுத்தியுள்ளது. அதாவது பிளஸ் 2 பாஸ் செய்தவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும். இந்த நீட் பெறுபேறுகளின் அடிப்படையில்தான் மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்கள் கொடுக்கப்படும். இதில் சிக்கல் என்னவென்றால் இந்த நீட் தேர்வின் கேள்விகள் மத்திய அரசு பாடத்திட்டங்கள் அடிப்படையில் கேட் கப்படும். ஒரு உதாரணத்துக்கு, இலங்கையில் தாவரவியல் படித்த ஒருவரை இந்தியாவில் பரீட்சை எழுத வைப்பது போன்றது இது.

பாடத்திட்டங்கள் இவ்வாறு வெவ்வேறாக இருப்பதால் தனியார் கல்விகூடங்களில் சிறப்பு பயிற்சி பெற்றால் மட்டுமே இதில் ஓரளவு தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த தனியார் பயிற்சிகளுக்கு இலட்சக்கணக்கில் பணம் அறவிடப்படுகிறது. இது பிரதீபா போன்ற ஏழை மாணவிகளுக்கு எட்டாக்கனி. ஆனால் அகில இந்திய அளவில் 12 ஆம் இடத்தைப் பெற்ற கீர்த்தனா எனும் மாணவி (இவர்தான் தமிழகத்தில் முதலிடம் பெற்றவர்) இது முடிந்த காரியம். இவரது தாயும், தந்தையும் மருத்துவர்கள். இரண்டு வருடங்கள் தனியார் பயிற்சிக் கூடத்தில் பயிற்சி பெற்றுள்ளார். பேச்சை பார்க்கும்போது ஒரு பிராமண வகுப்பை சேர்ந்தவர் என்பது தெரிகிறது.

ஆகவே, ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இனிமேலும் மருத்துவக் கனவில் இருப்பது இயலாத காரியம் ஆகிவிட்டது.

அதைவிடவும், தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகள் (அரசு நடத்துபவை) உள்ளன. இவை தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டவை. பீகார், உபி போன்ற பெரிய மாநிலங்களில்கூட விரல் விட்டு எண்ணும் அளவில்தான் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இப்போது அந்த வெளி மாநில மாணவர்கள் நீட் தேர்வின் மூலம் தமிழக கல்லூரி இடங்களை எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படுத்தப்பட்டு விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் ராஜஸ்தான் பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள மாணவ மாணவியர் எவ்வாறு அதிக எண்ணிக்கையில் தேர்ச்சிபெற முடிகிறது?

எனக்கு  தெரிந்த  ஒரு பணக்கார பெண் இலங்கையில் B 2C  S எடுத்தவ  பிறகு இந்தியா சென்று MBBS முடிச்சு வந்து வேலை செய்யிறா.இப்படி பணக்கார தகுதியற்ற மாணவர்கள் டாக்டர் ஆவதை தடுக்கத்தான் NEET  தேர்வு என்பது என் கணிப்பு??

Link to comment
Share on other sites

2 hours ago, Eppothum Thamizhan said:

அப்படியென்றால் ராஜஸ்தான் பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள மாணவ மாணவியர் எவ்வாறு அதிக எண்ணிக்கையில் தேர்ச்சிபெற முடிகிறது?

எனக்கு  தெரிந்த  ஒரு பணக்கார பெண் இலங்கையில் B 2C  S எடுத்தவ  பிறகு இந்தியா சென்று MBBS முடிச்சு வந்து வேலை செய்யிறா.இப்படி பணக்கார தகுதியற்ற மாணவர்கள் டாக்டர் ஆவதை தடுக்கத்தான் NEET  தேர்வு என்பது என் கணிப்பு??

எனது புரிதல் சரியாக இருக்குமானால் பெரும்பாலான வட மாநிலங்களில் மத்திய அரசு பாடத் திட்டங்களில்தான் படிக்கிறார்கள். தமிழ்நாடு விலக்கு கேட்டது. ஆனால் இந்திய ஒன்றிய அரசும், உச்ச நீதி மன்றமும் மறுத்துவிட்டன. ஆனால் ஆந்திர மாநிலம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுவிட்டன.

தரம் என்று பார்த்தால் கேரளத்துக்கு அடுத்தபடியாக மருத்துவத்துறையில் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு. வெளிநாடுகளில் இருந்துகூட சிகிச்சைக்கு வருகிறார்கள். இது இப்படி இருக்கையில், இன்னும் ஆண் மயிலின் கண்ணீரில் பெண்மயில் கர்ப்பம் தரிக்கிறது எனும் எண்ணத்தில் உள்ள வட இந்திய மந்திரிகள் வந்த மாநிலங்கள் தேர்வு பெறுகின்றன என்றால் முறைக்கேடு செய்கிறார்கள் என்பதே எனது கணிப்பு.

சென்ற ஆண்டு தபால்துறைக்கு ஆள் எடுத்தார்கள். இதற்கு தேர்வு எழுத வேண்டும். தமிழ்நாட்டில் வேலை செய்ய தேர்வாகி வந்தவர்கள் யார் என்று பார்த்தால் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். :35_thinking: இவர்கள் "தமிழில்" தேர்வு எழுதி வெற்றி பெற்றார்களாம். ? தமிழகத்தில் தமிழில் எழுதியவர்கள் தோல்வி அடைந்தார்களாம். 

அரியானா தேர்வில் வெற்றி பெறவர்களின் தொலைபேசி எண்ணில் அழைத்துப் பார்த்தபோது, அந்த எண்கள் வேலை செய்யவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, இசைக்கலைஞன் said:

எனது புரிதல் சரியாக இருக்குமானால் பெரும்பாலான வட மாநிலங்களில் மத்திய அரசு பாடத் திட்டங்களில்தான் படிக்கிறார்கள். தமிழ்நாடு விலக்கு கேட்டது. ஆனால் இந்திய ஒன்றிய அரசும், உச்ச நீதி மன்றமும் மறுத்துவிட்டன. ஆனால் ஆந்திர மாநிலம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுவிட்டன.

தரம் என்று பார்த்தால் கேரளத்துக்கு அடுத்தபடியாக மருத்துவத்துறையில் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு. வெளிநாடுகளில் இருந்துகூட சிகிச்சைக்கு வருகிறார்கள். இது இப்படி இருக்கையில், இன்னும் ஆண் மயிலின் கண்ணீரில் பெண்மயில் கர்ப்பம் தரிக்கிறது எனும் எண்ணத்தில் உள்ள வட இந்திய மந்திரிகள் வந்த மாநிலங்கள் தேர்வு பெறுகின்றன என்றால் முறைக்கேடு செய்கிறார்கள் என்பதே எனது கணிப்பு.

சென்ற ஆண்டு தபால்துறைக்கு ஆள் எடுத்தார்கள். இதற்கு தேர்வு எழுத வேண்டும். தமிழ்நாட்டில் வேலை செய்ய தேர்வாகி வந்தவர்கள் யார் என்று பார்த்தால் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். :35_thinking: இவர்கள் "தமிழில்" தேர்வு எழுதி வெற்றி பெற்றார்களாம். ? தமிழகத்தில் தமிழில் எழுதியவர்கள் தோல்வி அடைந்தார்களாம். 

அரியானா தேர்வில் வெற்றி பெறவர்களின் தொலைபேசி எண்ணில் அழைத்துப் பார்த்தபோது, அந்த எண்கள் வேலை செய்யவில்லை.

அனியாயம் தெரிந்தே நடக்குது .?மா புளிக்கிறது அப்பத்துக்கு நல்லத என்று சொல்வார்கள்.அப்பம் ஒட்டுப்டாமல் பிரிந்தால் நல்லது.எல்லா ஆண்மாவும் சாந்தி அடையும்.?

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வாறு ஆந்திரா நீட்டினை வெட்டியது? தமிழகம் அதை ஏன் செய்ய முடியவில்லை? 

Link to comment
Share on other sites

22 minutes ago, Nathamuni said:

எவ்வாறு ஆந்திரா நீட்டினை வெட்டியது? தமிழகம் அதை ஏன் செய்ய முடியவில்லை? 

சந்திரபாபு நாயுடுவை ஊழல் வழக்குகளை வைத்து மிரட்ட முடியவில்லை. அவர்கள் இந்திய ஒன்றிய அரசை வளைக்க முடிகிறது. தமிழகத்தின் ஊழல் பேர்வழிகளால் முடியவில்லை.

ஒரு உதாரணத்திற்கு, வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது என்பதை கையில் எடுத்தது ஆந்திரா. சிறப்பு மாநில அந்தஸ்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது. நாங்கள் உங்களுக்கு வரி செலுத்தவில்லை. நீங்களும் மத்திய தொகுப்பில் இருந்து பணம் தர வேண்டாம் என்று வலிமையான வாதங்களை முன்வைக்கிறது. தமிழக எடுபுடிகளால் இது முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை கடைசி 3-வது இடத்துக்கு தள்ளிய நீட் கொடுங்கரம்!

நினைக்க நினைக்க நெஞ்சு பதறுகிறது... உலகம் முழுவதும் தமிழ்நாட்டு கல்வி கூடங்களில் அதுவும் அரசு பள்ளிகளில் படித்து இன்று லட்சக்கணக்கானோர் வெளிநாடுகளில் கோலோச்சி வருகின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் படிப்பறிவற்றவர்கள்; அவர்களுக்கு கல்வித் தகுதியே கிடையாது என கூனிக் குறுக வைத்திருக்கிறது நீட் தேர்வு முடிவுகள். தமிழகத்துக்கு 35-வது இடமாம்... அதாவது கடைசியில் இருந்து 3-வது இடமாம்,

Only 40% TN Students clear in NEET Exam

37-ல் நாகாலாந்து; 36-ல் டையூ டாமன்... தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை 1,14,302. ஆனால் தேர்ச்சி பெற்றோர் வெறும் 45336. அதாவது 40% மட்டுமே.

எஞ்சிய 60% மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். கடந்த காலங்களைப் போல பிளஸ் டூ தேர்வில் 1100க்கும் மேல் நல்ல மதிப்பெண் எடுத்து இயல்பாக மருத்துவ படிப்பு கிடைக்க வேண்டிய விழுப்புரம் பிரதீபா போன்றவர்கள் தோல்வியைத் தழுவி இன்று மரணித்துப் போய்விட்டனர்.

Only 40% TN Students clear in NEET Exam

தமிழ்நாட்டு மாநில கல்வி முறையில் பயின்ற கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கும் என தலையால் அடித்து சொல்லியும் அனிதா தன் உயிரையே மாய்த்த போதும் கேளா அரசாக மத்திய அரசு இருந்து வருகிறது. இப்போது விழுப்புரம் பிரதீபா மாண்டு போய் விட்டார்.

விழுப்புரத்து கீர்த்திகா மாண்டு போக முயற்சித்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய அநீதி?

கல்வியில் சிறந்த தமிழகத்தை கட்ட கடைசிக்கு தள்ளி டெல்லி கொடூரமாக சிரிக்கிறது.. இது நம்மை திட்டமிட்டு அவமானப்படுத்துகிற கல்வித் தரப்படுத்துதல் என்பது அல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்? நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் நீட் எனும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு!

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/only-40-tn-students-clear-neet-exam-321613.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

எவ்வாறு ஆந்திரா நீட்டினை வெட்டியது? தமிழகம் அதை ஏன் செய்ய முடியவில்லை? 

இம்முறை ஆந்திர தெலுங்கானா இரண்டுமே நீட் தேர்வு நடந்த மாநிலங்களே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎5‎/‎2018 at 3:33 AM, இசைக்கலைஞன் said:

இந்தியாவில் இரண்டு வகை பள்ளிக்கூட பாடத் திட்டங்கள் உண்டு.

1) மாநில பாட திட்டங்கள்
2) மத்திய (அரசு) பாடத்திட்டங்கள்

தமிழ்நாட்டில் பலர் மாநிலப் பாடத்திட்டங்களில் படிக்கின்றார்கள். நானும் அதில்தான் படித்தேன். இரண்டு பாடத்திட்டங்களில் கற்பிக்கப்படும் சிலபஸ் வேறானவை.

இப்போது மத்திய அரசு நீட் தேர்வுகளை புகுத்தியுள்ளது. அதாவது பிளஸ் 2 பாஸ் செய்தவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும். இந்த நீட் பெறுபேறுகளின் அடிப்படையில்தான் மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்கள் கொடுக்கப்படும். இதில் சிக்கல் என்னவென்றால் இந்த நீட் தேர்வின் கேள்விகள் மத்திய அரசு பாடத்திட்டங்கள் அடிப்படையில் கேட் கப்படும். ஒரு உதாரணத்துக்கு, இலங்கையில் தாவரவியல் படித்த ஒருவரை இந்தியாவில் பரீட்சை எழுத வைப்பது போன்றது இது.

பாடத்திட்டங்கள் இவ்வாறு வெவ்வேறாக இருப்பதால் தனியார் கல்விகூடங்களில் சிறப்பு பயிற்சி பெற்றால் மட்டுமே இதில் ஓரளவு தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த தனியார் பயிற்சிகளுக்கு இலட்சக்கணக்கில் பணம் அறவிடப்படுகிறது. இது பிரதீபா போன்ற ஏழை மாணவிகளுக்கு எட்டாக்கனி. ஆனால் அகில இந்திய அளவில் 12 ஆம் இடத்தைப் பெற்ற கீர்த்தனா எனும் மாணவி (இவர்தான் தமிழகத்தில் முதலிடம் பெற்றவர்) இது முடிந்த காரியம். இவரது தாயும், தந்தையும் மருத்துவர்கள். இரண்டு வருடங்கள் தனியார் பயிற்சிக் கூடத்தில் பயிற்சி பெற்றுள்ளார். பேச்சை பார்க்கும்போது ஒரு பிராமண வகுப்பை சேர்ந்தவர் என்பது தெரிகிறது.

ஆகவே, ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இனிமேலும் மருத்துவக் கனவில் இருப்பது இயலாத காரியம் ஆகிவிட்டது.

அதைவிடவும், தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகள் (அரசு நடத்துபவை) உள்ளன. இவை தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டவை. பீகார், உபி போன்ற பெரிய மாநிலங்களில்கூட விரல் விட்டு எண்ணும் அளவில்தான் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இப்போது அந்த வெளி மாநில மாணவர்கள் நீட் தேர்வின் மூலம் தமிழக கல்லூரி இடங்களை எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படுத்தப்பட்டு விட்டது.

 

இசை பதிலுக்கு நன்றி ... மத்திய அரசின் பாடத் திடடத்திற்கும்,மாநில அரசின் பாட திடட சிலபஸ் வேறானாலும் அது மருத்துவம் சம்மந்தமானவை தானே.....சில நேரம் மாநில அரசின் பாடத் திடடமானது சர்வதேச தரத்துக்கு இல்லாமையால் தான் இந்த திடடத்தை கொண்டு வந்தார்களோ தெரியாது.


எது எப்படி இருந்தாலும் இதற்காக தற்கொலை செய்வது என்பது கோழைத்தனமானது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2018 at 11:17 AM, ரதி said:

நீட் தேர்வுகள் எது சம்மந்தமானவை?... மருத்துவம்,பொது அறிவு  அல்லது ஆங்கிலம் 

 

Physics, Chemistry and Biology, ஆகிய பாடங்களே NEET  தேர்வில் பரீட்சிக்க  படுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

Physics, Chemistry and Biology, ஆகிய பாடங்களே NEET  தேர்வில் பரீட்சிக்க  படுகின்றன.

 

நன்றி...தமிழ்நாடு மருத்துவ துறையில் சிறந்து விளங்குறது....ஆனால் அங்கு வேலை செய்பவர்கள் தமிழ்நாட்டுக்குள் மட்டும் படித்தவர்களா என்பது எனது கேள்வி ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

NEET: Trichy Student commits suicide

நீட் தேர்வில் தோல்வி - திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீட் எனும் நாசகார தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த செஞ்சி பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் திருச்சி மாணவி சுபஸ்ரீ நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ் டூ தேர்வில் 907 மதிப்பெண்கள் எடுத்திருந்த சுபஸ்ரீ நீட் தேர்வில் தோல்வி அடைந்தார். இது குறித்து திருச்சி நெ.1 டோல்கேட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/neet-trichy-student-commits-suicide-321800.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் சீமானைக் கடாசிவிட்டு இந்தத் திரியில் எழுதியதுமாதிரி உருப்படியாக தொடர்ந்தும் எழுதவேண்டும்?

Link to comment
Share on other sites

8 hours ago, கிருபன் said:

இசைக்கலைஞன் சீமானைக் கடாசிவிட்டு இந்தத் திரியில் எழுதியதுமாதிரி உருப்படியாக தொடர்ந்தும் எழுதவேண்டும்?

சாது மிரண்டால் காடு கொள்ளாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

இசைக்கலைஞன் சீமானைக் கடாசிவிட்டு இந்தத் திரியில் எழுதியதுமாதிரி உருப்படியாக தொடர்ந்தும் எழுதவேண்டும்?

மணியான... கருத்து,  கிருபன்.  ?
இசை.... வருவார்... என்று, நான் நினைக்கவில்லை. ?
ஆனால்.... கட்டாயம்  வரவேண்டும்.  சீமானை பற்ரி, என்னிடம்   நாலு கேள்வி,  பாக்கி இருக்கு...... ?️‍?️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

இசைக்கலைஞன் சீமானைக் கடாசிவிட்டு இந்தத் திரியில் எழுதியதுமாதிரி உருப்படியாக தொடர்ந்தும் எழுதவேண்டும்?

 

என்ட மச்சான் குறைந்த பட்சம் நான் எழுதினத்திற்காவது பதில் சொல்லி இருக்கலாம் 
 

Link to comment
Share on other sites

On 6/6/2018 at 11:29 AM, ரதி said:

 

இசை பதிலுக்கு நன்றி ... மத்திய அரசின் பாடத் திடடத்திற்கும்,மாநில அரசின் பாட திடட சிலபஸ் வேறானாலும் அது மருத்துவம் சம்மந்தமானவை தானே.....சில நேரம் மாநில அரசின் பாடத் திடடமானது சர்வதேச தரத்துக்கு இல்லாமையால் தான் இந்த திடடத்தை கொண்டு வந்தார்களோ தெரியாது.


எது எப்படி இருந்தாலும் இதற்காக தற்கொலை செய்வது என்பது கோழைத்தனமானது

 

மத்திய பாடத்திட்டம் என்பதை முதலில் பார்ப்போம். இந்த மத்திய பாடத் திட்டத்தை முதலில் கொண்டு வந்த நோக்கம் என்பது மத்திய அரசு பணிகளில் உள்ளவர்கள் நாடு முழுமைக்கும் எங்காவது இடமாற்றலில் போக நேரிடும். அப்போது அவர்களது குழந்தைகள் ஒரே பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும் அல்லவா.. அதற்காக CBSE எனப்படும் இந்த பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. மற்றும்படி, அரசியலமைப்பு சட்டத்தின்படி கல்வி என்பது மத்திய / மாநில பட்டியலில் உள்ளது. அதாவது மாநில அரசுக்கும் அதனை நிர்ணயிக்கும் உரிமை உள்ளது. அதனை பறிக்கும் ஒரு சட்ட வடிவமே இந்த நீட் என்பது.

எந்த பாடப் பரப்பாக இருந்தாலும் ஒரு மனிதனால் அதனை முழுமையாக படித்துவிடவே முடியாது, சாகும் வரையில்கூட.

ஒரு உதாரணத்துக்கு, தாவரவியல் என்றால் அதில் மாநில பாடத்திட்டத்தில் சில பாடங்கள் இருக்கும். மத்திய பாடத்திட்டத்தில் சில பாடங்கள் இருக்கும். மாநில பாடத்திட்டத்தில் கத்தரிக்காயை படிப்பதாக வைத்துக்கொள்வோம். மத்திய பாடத்திட்டத்தில் அவரைக்காய் பற்றிய படிப்பாக இருந்தால் எப்படி அதை எழுதுவது? இந்த மாணவர்களின் வயது 17, 18 என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

இங்கே மாநில பாடத்திட்டத்தில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். எல்லோருக்கும் +2 தேர்வு முடிவுகளே பிரதானமாக போய்விட்டதால் +1 பாடங்களை சில உயர்ந்த பாடசாலைகளில் கற்பிப்பது இல்லை என்று சொல்கிறார்கள். இது அறிவுச் செழுமையை குறைக்கும் செயல். அதனால்தான், இப்போது +1 கூட பொது தேர்வு என கொண்டுவந்துவிட்டார்கள்.

இந்த "நீட்" என்பது அதிக தரம் வாய்ந்த மாணவர்களை தேர்ந்தெடுக்கும் என்று சொன்னார்கள். ஆனால் பீகாரில் தேர்வு பெற்ற முன்னணி மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வுகளில் அரைகுறையாக பாஸ் செய்தவர்கள் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

அந்த மாணவி... 9,ம் மாடிக்கு ஏறிப்  போய், கீழே குதிக்கும் மட்டும் படம் எடுத்தவர்களை.. என்னவென்று சொல்வது. ?

Link to comment
Share on other sites

48 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text

அந்த மாணவி... 9,ம் மாடிக்கு ஏறிப்  போய், கீழே குதிக்கும் மட்டும் படம் எடுத்தவர்களை.. என்னவென்று சொல்வது. ?

 

இறந்த மாணவியும் அவர் இறக்கும் வரை படம் எடுத்த கூட்டமும் இந்தியாவின் இரட்டை முகத்தை காட்டுகின்றது. இதே போல் தான் எல்லா விசயங்களும். வாழ்வுக்காக போராடிய தமிழர்களை தமிழக காவல் துறையே சுட்டுக்கொல்கின்றது. உலக அழகிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரதமர் கொல்லப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கமாட்டார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவனை நியாப்படுத்தி ஊர்வலம் போகுது ஒரு கூட்டம். அரசியல் புலனாய்வு ஒட்டுமொத்த அறிவு வளம் ஊடகத் துறை சட்டம் எல்லாம் கேலிக்குரியதாகி வெள்ளையரின் ஆட்சியில் இருந்ததை விட மோசமாக காப்பரேட்டுகளுக்கு அடிமையாகின்றது இந்தியா. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.