Jump to content

எண்ட சைக்கிளை ஆட்டையை போட்டு விட்டார்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image result for carrera parva mountain bike

ஆசையாசையை ஒரு சைக்கிள் வாங்கினேன். ஸ்டேஷன் கார் பார்க் கொள்ளை அடிக்கிறார்கள். பிரீ பார்க்கிங் எண்டால் வீட்டில் இருந்து அரைவாசித் தூரத்தில். மிச்ச அரைவாசிக்கு நடக்க வேண்டும். நடப்பதில் பிரச்னை இல்லை ஆனால் காலையில் நேரம் முக்கியம்.

ஆகவே சைக்கிள் வாங்கி ஓடி போய் ஸ்டேஷன் முன்னாள் விட்டு விட்டு போவதும் வருவது இலகுவாயிருந்தது.

இரண்டு மாதம் நல்லா தானே போய் கிட்டு இருந்தது.

நமக்கு முதல் சைக்கிள் எண்ட படியால், விபரம் புரியாமல் சும்மா கேபிள் லாக் வாங்கி போட்டிருந்தேன். 

Image result for cycle lock

களவாணிகள் அந்தப் பக்கம் வந்து இருப்பினம்... 'அட இங்க பாரடா லட்டு மாதிரி என்று'.. யாரோ புதுசா... வந்திருக்கிறான் போல கிடக்குதே...' நினைத்திருப்பார்கள் போல இருக்கிறது. 

கேபிள் வெட்டினைப் பார்த்தால் , ஒரு 4 செகண்ட் கூட மினக்கெட்டிருப்பார்கள் போல தெரியவில்லை. அப்படி ஒரு நேர்த்தி!!

ஆகவே சைக்கிளை ஆட்டையை போட்ட தெய்வங்களே... சந்தோசமா இருங்கோ... £280 தர்மக் கணக்கில் போட்டாச்சு.

இருந்தாலும் இண்டைக்கு போய் இன்னோரு சைக்கிள் ஓடர் பண்ணி இருக்கு. ஆனால் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ரோங் ஆன பூட்டு வாங்கி இருக்கிறன்...

Image result for cycle lock

பாப்போம்... புண்ணிய வான்கள் என்ன விளையாட்டு காட்டுகினம் எண்டு.

Image result for police

என்ன போலீசோ...??

‘சோனமுத்தா போச்சா'... 'அதுதான் சைக்கிள் வாங்கினா.... சைக்கிள் விலைக்கு சமனா பூட்டும் வாங்கி இருக்க வேணும்... 'கிளம்புங்கோ... கிடைச்சா சொல்லி அனுப்புறம் எண்டு சொல்லி அனுப்பிடினம்'.

'அந்த CCTV எண்ட ஒரு விசயம் இல்லையோ.... அதை.... பார்க்க மாட்டியளே'...

'10 மணித்தியாலம் ஒக்காந்து பார்க்க உங்க ஆக்கள் இல்லை...'...

'எனக்கு நேரம் இருக்கு.... நான் பார்க்கிறேன்.... ஒழுங்கு செய்யுங்களன்....'

'இது.. சரி வராது.... பிறகு data protection act எண்டு பிரச்சனை வரும்'... 

'அப்ப.... நீங்கள் ஒண்டும் செய்ய மாட்டியல்... எண்டு தெரிந்து தான்... களவு நடக்குது'

'உண்மைதான்... உங்கட எம்பிக்கு எழுதி... போலீசுக்கு கூட காசை ஒதுக்க சொல்லுங்கள்'...

.... 'நான் முறைப்பாடு சொல்ல வர... நீர் எனக்கு முறைப்பாடு சொல்லுறீர் காணும்'...

'பின்ன... என்ன போட்டு வாறன்...'

எண்டு சொல்லி கிளிம்பி விட்டேன்.

ஆகவே சைக்கிள் வாங்க நினைப்பவர்கள் பூட்டையும் ... களவாணிகளையும் பத்தியும் நினையுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா வடை போச்சா?

எவ்வளவு பணத்தை செலவு செய்தாலும் மனம் தளராது.ஆனால் 5 சதத்தையேனும் யாரும் ஆட்டையைப் போட்டா அதன் வலியே வேறை.எனக்கென்றால் வெளியே சொல்ல வெட்கமாக இருக்கும்.

சரி அடுத்ததை வாங்கி முன் சில்லு பின் சில்லு சீற் என்று எங்கெங்கு பூட்டுகள் போட இயலுமோ அங்கெல்லாம் போடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா வடை போச்சா?

எவ்வளவு பணத்தை செலவு செய்தாலும் மனம் தளராது.ஆனால் 5 சதத்தையேனும் யாரும் ஆட்டையைப் போட்டா அதன் வலியே வேறை.எனக்கென்றால் வெளியே சொல்ல வெட்கமாக இருக்கும்.

சரி அடுத்ததை வாங்கி முன் சில்லு பின் சில்லு சீற் என்று எங்கெங்கு பூட்டுகள் போட இயலுமோ அங்கெல்லாம் போடுங்கள்.

இதில என்ன வெட்கம்...

யாரோ டெஸ்பேரேட் ஆனா ஒருத்தன் ரிஸ்க் எடுத்திருக்கிறான் என்று நினைத்தேன்... ஒகே ஆகி விட்டது...

முறையான பூட்டு வாங்கிப் போடாதது என் தவறு.... இரண்டு மாதம் ஒன்று நடக்காமல் இருந்தது ஆச்சரியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை வயித்தெரிச்சல் சயிக்கிள் களவெடுத்தவனை சும்மா விடாது பாருங்கோ. கடவுள் கள்ளனை  எப்பிடியும்
  உங்கடை கண்ணிலை காட்டியே தீருவான்.....ஒண்டுக்கும் கவலைப்படாதேங்கோ.. :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

அந்த CCTV எண்ட ஒரு விசயம் இல்லையோ.... அதை.... பார்க்க மாட்டியளே'...

'10 மணித்தியாலம் ஒக்காந்து பார்க்க உங்க ஆக்கள் இல்லை...'...

சைக்கிள் களவு போன கவலையிலும், குசும்பு வேறை.... ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

சைக்கிள் களவு போன கவலையிலும், குசும்பு வேறை.... ?

 

குசும்பல்ல, எரிச்சல்..

CCTV  பதிவு இருக்கும். போலீசுக்குப் போனால் போதும்.... கள்ளரையும் உள்ள போட்டு, சைக்கிள்ள வீட்ட வரலாம் எண்டு கண பேருக்கு ஜடியா இருக்குது.

உங்க அப்படி ஒரு கோதாரியும் நடவாது எண்டு சொல்ல வந்தேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் ‘மை’ போட்டுப் பாருங்கோ!

வெளிச்சாலும் வெளிக்கும்!?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பொழுதும் முதல்முறை சயிக்கிளை திருட்டுக்கு கொடுப்பது முதல் காதலியை இழந்ததுபோல் மிகவும் வேதனையான விடயம். பின்பு அடுத்து அடுத்து இரண்டு சயிக்கிள்கள் களவு போகும்போது இது பழகிப் போவது மட்டுமல்ல நினைக்க சிரிப்புகூட வரும். நான் அந்த படிநிலையில் இருப்பதால் உங்களின் வேதனையில் கவலையுடன் பங்கு கொள்கிறேன்......!

உங்களின் ஆறுதலுக்காக சில:

--- ஒரு புது சைக்கிள் 6 கியாருடன் கிபீர் போல பறக்கும். ஒரு கடையில் முன் சக்கரத்தை செருகி நிறுத்த ஸ்ராண்ட் வைத்திருந்தார்கள். நானும் காண்டாமிருகத்துக்கு காலில போடுறமாதிரி ஒரு கனமான வயர் பூட்டை பூட்டிவிட்டு போய் சாமான்கள் வாங்கி வந்து பார்த்தால் பூட்டும் முன் சில்லும் சிறு சேதமும் இல்லாமல் இருக்குது.அது குபீர் என்று பறந்துட்டுது.....!

--- ஒரு நண்பனின் சைக்கிள் காணாமல் போய் விட்டது. (இடைக்கிடை நானும் பாவிக்கிறானான்). சில நாடாக்கள் சென்று விட்டன. ஒரு இடத்தில அந்த சயிக்கிள் பூட்டு கூட இல்லாமல் நிக்குது. நண்பரையும் கூப்பிட்டு அவரும் வந்து விட்டார்.யார் அந்த சாயிக்கிளை எடுக்க வருகினம் என்று பார்க்க சற்று எட்டத்தில் இருவரும் நிக்கிறம். அத்தான் வந்து அதை எடுக்க ஓடிப்போய் நிப்பாட்டிட்டம். 

இது எங்கட சயிக்கிள் ....! (எல்லாம் பிரெஞ்சில்)

இல்லை இது என்னுடையது.

வா போலீசுக்கு. நான் (போர்த்து பிளான்) களவு போனதை சொல்லி இருக்கிறன்.

அவர்: நான் என் நண்பனிடம் இரவலாய் வாங்கி வந்தனான்.கொண்டுபோய் குடுக்க வேணும்.

வா நாங்கள் முதல் போலீசுக்கு போவோம். உன் நண்பனை அங்கு ரிசிற்றுடன் வந்து கதைக்க சொல்லு. இப்ப நீயும் வா.

இப்படியே இழுபட சனமும் கூடுது.

அவரும் சரி உங்கட சயிக்கிள் எண்டால் கொண்டு போங்கோ, நான் அவனிட்ட சொல்லுறன் என்று சொல்லிட்டு நழுவிக் கொண்டு போயிட்டார். 

--- மகனை யூனிவசிட்டில கூட்டிக்கொண்டு போய் விடுகிறன்.வீட்டில் இருந்து 100 கி.மீ  தூரம். முதல் நாள். அவர் அங்கு தங்கி படிக்கவேணும். சாமான்கள் வாங்க கொள்ள ஒரு சயிக்கிள் இருந்தால் நல்லது என்று தோணுது. போய் கடை ஒன்றை தேடித் பிடிச்சி பார்த்தால் எல்லாம் 200 ஈரோ க்கு மேலதான் இருக்கு.சரி வாங்குவம் என்று முடிவெடுக்க கடைக்காரர் வந்து இங்க ஒரு சைக்கிள் இருக்கு பிடிச்சால் எடுங்கோ என்கிறார்.(முழுதாக திருத்திய சயிக்கிள்.அந்தாளுக்கு என்னுடைய டிசைன் எப்படி விளங்கிச்சோ தெரியவில்லை). மகனும் அதை எடுத்து ஓடிப்பார்த்து விட்டு இது நல்லா இருக்கு அப்பா, இது போதும் என்கிறார். 30 ஈரோக்கு  அதை வாங்கிக் குடுத்திட்டு வந்திட்டன். ஒரு மாதத்தில அது அங்கேயே களவு போயிட்டுது. மகன் போனில் அப்பா 170 ஈரோ உங்களுக்கு லாபம் என்கிறான்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

உங்கடை வயித்தெரிச்சல் சயிக்கிள் களவெடுத்தவனை சும்மா விடாது பாருங்கோ. கடவுள் கள்ளனை  எப்பிடியும்
  உங்கடை கண்ணிலை காட்டியே தீருவான்.....ஒண்டுக்கும் கவலைப்படாதேங்கோ.. :cool:

உங்கட கண் முன்னாலேயயே அதை களவு எடுத்தவன் ஓடிக் கொண்டு போவான் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

எப்பொழுதும் முதல்முறை சயிக்கிளை திருட்டுக்கு கொடுப்பது முதல் காதலியை இழந்ததுபோல் மிகவும் வேதனையான விடயம். பின்பு அடுத்து அடுத்து இரண்டு சயிக்கிள்கள் களவு போகும்போது இது பழகிப் போவது மட்டுமல்ல நினைக்க சிரிப்புகூட வரும்

நாதமுனி நினைத்துப் சிரிப்பதற்கு, இன்னும் இரண்டு சைக்கிள்களை இழக்க வேண்டும். பார்ககலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

இருந்தாலும் இண்டைக்கு போய் இன்னோரு சைக்கிள் ஓடர் பண்ணி இருக்கு. ஆனால் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ரோங் ஆன பூட்டு வாங்கி இருக்கிறன்...

புது சைக்கிள் வீட்டு வந்ததும் ஒரு படம் எடுத்து இங்கே இணைத்து விடவும். :cool:

Link to comment
Share on other sites

பேசாமல் இலங்கையிலேயெ வாழ்ந்திருக்கலாம் என்று தான் சொல்லத்தோணுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கா அப்பாவித்தனமா பிழைவிட்டாத்தான், அட எனக்கோடா விளையாட்டுக்காட்டிறியள் எணடு கொதி வரும். திருப்பியும் புது சைக்கிள் ஒன்றை, வைத்து கள்ளனைப் மடக்கிப்பிடிக்கலாம் தான்.

இருந்தாலும் Halfords சைக்கிள் கடையில நிண்ட வெள்ளப் பெடியக் கொஞ்சம் முன்னம் வெளியால வேலை முடிஞ்சு வரேக்க மடக்கிப் பிடித்துக் கேட்டேன்.

இதுக்கென்னப்பா வழி, இப்படியே வந்து வாங்கிக் கொண்டு இருக்க வேண்டியது தானோ என்றேன்.

சிரித்து விட்டு, பேசாமல் சோதில கலக்க வேண்டியது தானே எண்டான்.

அப்படி எண்டால்...?

காசை உங்க செலவழியாம, கள்ளர்களிடமே, eBay யில (buyers buying legally, in a public marketplace) வாங்கி ஓடவேண்டியது தானே.  உன்ற சைக்கிள் இப்ப £40 க்கு அங்க விப்பாங்கள்.

களவு போனாலும், டென்சன் ஆகத்தேவை இல்லை. ஓடிப்போய் வாங்கலாம். 

இன்னோரு விசயம்... தொழில் தர்மம் இருக்குது பாருங்க... தாங்கள் வித்தது எவை, எவை எண்டு அவையளக்கு தெரியும். அவை எடாகினம். 

என்ன செய்யிறது?

சுமே அக்கா ஸ்ரைலில பிரச்சணை சொல்லியாச்சு. மினக்கடாம தீர்வை சொல்லுங்க. 

36 minutes ago, பகலவன் said:

பேசாமல் இலங்கையிலேயெ வாழ்ந்திருக்கலாம் என்று தான் சொல்லத்தோணுது.

உந்தக் களவுக்காகவோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

Image result for carrera parva mountain bike

 

 

 

ஆகவே சைக்கிள் வாங்க நினைப்பவர்கள் பூட்டையும் ... களவாணிகளையும் பத்தியும் நினையுங்கோ.

அதோட வியைய் படமும் பாருங்கோ.?

2 hours ago, Nathamuni said:

உந்தக் களவுக்காகவோ??

இது இலங்கையில் அதுவும் தமிழர் பகுதியில் நடந்திருந்தால் இந்த திரி மட்டும் இல்லை யாழே பத்தி எரிந்திருக்கும்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

உங்களய நினைச்சா மனசிற்கு சரீ... கஸ்டமா ஈக்குதுவா.

உங்கட ராஹ்மாணயம் பாலய் கத செல்ல பெயிட்டுதான் இப்பிடி ஆவி ஈக்கி.

இனி அல்லாஹ் குடுக்கியெண்டாலும் முறையா குடுக்கிய, புடுங்கிரண்டாலும் முறையா புடுங்கிர தான்வா.

சும்மா தொது மாரி ஊரு பலாய் செல்லாம, 

இனி சரி இஸ்லாம் ஆக்கள் கூட ஜூக் வுடுறத ஸ்டொப் பண்ண பாருங்க சைய்யா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரும், சரி தான் அப்படியே வாங்குங்கள் என்று சொல்லவில்லை.... 

யாழ் தளம் அல்லவா...

கொஞ்சம் காசுக்காக... களவு சைக்கிள் வாங்குவது தேவையில்லாத பிரச்சனை..... இன்று லண்டன் மேஜர் கானுக்கு கடதாசி போட்டிருக்கிறேன்.

சைக்கிள் ஓடு... என்று காது கிழிய கத்துறியள்.... என்ன பாதுகாப்பது இருக்கிறது... குறைந்த பட்சம் ebay , gumtree போன்ற second hand சைக்கிள் விற்கும் தளங்கள் ஏன்.. சைக்கிள் பிரேம் நம்பர் கட்டாயம் விளம்பரத்தில் போட வேண்டும் என வலியுறுத்தக் கூடாது?

சைக்கிள் தொலைத்தவர்கள் தமது பிரேம் இலக்கத்தினை அந்த தளங்களில் பதிந்து வைத்தால்... களவினை குறைக்க முடியுமே என்று சொல்லி உள்ளேன்.

கொப்பி, எம்பிக்கு அனுப்பி உள்ளேன். பார்க்கலாம்.

புது சைக்கிள், நாளை கிடைக்கிறது... இன்சூரன்ஸ் பணம் வருவதால் செலவு இல்லை...

உறவுகளுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

raeder1.jpg

10314677.jpg

4282366_web.jpg?1522298573

இஞ்சை ஜேர்மனியிலை ஒவ்வொரு ரயில் ஸ்ரேசனுக்கு பக்கத்திலை சையிக்கிளெல்லாம் குப்பை மாதிரி பார்க் பண்ணியிருப்பாங்கள். ஒரு காக்கா குருவி கூட திரும்பிப்பாக்காது....வருசக்கணக்காய் நிக்கும்....அடியிலை புல்லுக்கூட முளைச்சு நிக்கும்.  ஒருத்தரும் களவெடுக்கிற சிந்தனையோடை பாக்கிறதேயில்லை.
என்ன செய்ய.....சனம் நாட்டுக்கு நாடு வித்தியாசம்.:grin:

இரவு பகலாய் எந்தவொரு பாதுகாப்பில்லாமலும் சைக்கிள் விட்ட இடத்திலையே அப்பிடியே நிக்கும் எண்டதை இந்த இடத்திலை சொல்லியே ஆகணும்.   :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் luton னில இருக்கேக்க இதை அனுபவிச்சனான். ரெண்டு மாசமா luton ரெயில்வே ஸ்ரேசனில சைக்கில விட்டிட்டு சந்தோசமா வேலைக்கு போய் வந்தனான். ஒரு களவானி பயல்   கடும் முயற்சி செய்து கடைசில கைவிட்டான். நானும். அதோட சைக்கிள் ஓடுறத விட்டிட்டன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நந்தன் சொன்னது போல... ஸ்டேஷனுக்கு போக சைக்கிள் வேண்டாம்.... கொஞ்சம் வெள்ளனவா வெளிக்கிட்டு  நடப்பம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

நாமு,

உங்களய நினைச்சா மனசிற்கு சரீ... கஸ்டமா ஈக்குதுவா.

உங்கட ராஹ்மாணயம் பாலய் கத செல்ல பெயிட்டுதான் இப்பிடி ஆவி ஈக்கி.

இனி அல்லாஹ் குடுக்கியெண்டாலும் முறையா குடுக்கிய, புடுங்கிரண்டாலும் முறையா புடுங்கிர தான்வா.

சும்மா தொது மாரி ஊரு பலாய் செல்லாம, 

இனி சரி இஸ்லாம் ஆக்கள் கூட ஜூக் வுடுறத ஸ்டொப் பண்ண பாருங்க சைய்யா?

உங்களுக்கு விருப்பமானால் ஒரு தனித்திரியை ஆரம்பித்து எதையும் எழுதுங்கள். வேறு விடயமாக தொடங்கிய திரியில்  வந்து அலப்பறை... அதுவும் அரைகுறை மொழி...

அட... அந்த திரியிலாவது பதிவு போட்டிருக்கலாம்... அதுவும் இல்லை. 

அது கொழும்பில் பேசப்படும் பேச்சு மொழி... சென்னைத் தமிழ் போன்ற அழகிய மொழி... நான்,
இங்கும் பலர் அழகாக பேசிக் கூடிய மொழி. உங்களுக்கு என்ன பிரச்னை....?

ஒரு நகைச்சுவைக்காக சொன்ன விசயத்தில்.... மத விசத்தினை தயவு செய்து நுழைக்கவேண்டாம்.....

இவ்வளவு பேர் ரசிக்க.... இவருக்கு மட்டும்.... புடுங்குது... போங்க...  போய்... புள்ளை குட்டியை படிக்க வையுங்க...

உங்கள் பதில் எதுவானாலும் இங்கே உடுக்கடிக்க வேண்டாம்... தனித்திரி தொடங்கி அடியுங்கோ..

Link to comment
Share on other sites

நாதமுனி, உங்கள் வலி புரிகின்றது. எனது சைக்கிள் 14 வருடங்களின் முன் திருட்டு போனது. பல்கலைக்கழகத்து நூல்நிலையம் முன்னால் விட்டு சென்றபோது உங்களுக்கு நடந்தது மாதிரியே கேபிளை வெட்டிவிட்டு கொண்டு சென்றுவிட்டார்கள். அப்போது அதன் பெறுமதி ஆயிரம் டொலர் சொச்சம். வயிறு பத்தி எரிஞ்சது. நான் கனடா வந்து கார் வாங்க முன் சைக்கிள்தான் வாங்கினேன். அந்த சைக்கிளில் தான் வேலைக்கு, கடைக்கு எல்லா இடமும் சென்று வருவது. பின்னர் கார் வாங்கிய பின் குறுந்தூர பிரயாணங்களுக்கு சைக்கிளை பாவித்தேன். கள்ளப்பயலுகள். எல்லாம் போதை அடிக்கும் திருட்டு கோஸ்டி.

நீங்கள் சைக்கிளுக்கு பூட்டு போடும்போது வெட்டப்படமுடியாது பெரிய இரும்பு பூட்டு போடவேண்டும். கேபிளை வெட்டி எடுத்துக்கொண்டு தப்பி ஓட சில செக்கன்களே போதும். 

எமது தனபாலன் மாஸ்டர் (சென். ஜோன்ஸ்) 1987ம் ஆண்டிலேயே யூகேயில் சைக்கிள் திருட்டு போவது பற்றி எங்களுக்கு வகுப்பில் சொல்லி இருக்கிறார். ஆட்கள் சைக்கிளை பூட்டிவிட்டு ஒரு சில்லையும் கழற்றிக்கொண்டு போவார்களாம் திருடப்படாமல் இருப்பதற்கு.

Link to comment
Share on other sites

களவு எந்த நாட்டில் இல்லை. இங்கு ஜெர்மனிலும் தாராளமாக சைக்கிள் திருட்டு நடக்கிறது.

வீட்டுக்கு முன்பு விடும் சைக்கிளையே வெட்டி எடுத்து போவார்கள்.

 

 

Deutschlandkarte-Fahrraddiebstahl-2017-GDV

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமு நானா அதி சும்மா ஜாய்க்கு எழுதினதுவா. 
ஒங்களுக்கு நடந்த ஷுட் டி எங்களுக்கும் சரீ ஆத்திரம் தான் நானா.
உங்க பைக் கிடைக்கணும் நாங்களும் துவா கேட்டேதானே?
கேந்தி ஆக வாணாம்.
 
நான் நினக்கேன், உங்கட ஸ்டோரியப் பார்துட்ட்டு நம்மடவன் எவனோ ஒங்களிக்கு குனூத் ஓதி ஈக்கான்.
அய் தான் பைக் இல்லாம ஆவின.

3 hours ago, நவீனன் said:

களவு எந்த நாட்டில் இல்லை. இங்கு ஜெர்மனிலும் தாராளமாக சைக்கிள் திருட்டு நடக்கிறது.

வீட்டுக்கு முன்பு விடும் சைக்கிளையே வெட்டி எடுத்து போவார்கள்.

 

 

Deutschlandkarte-Fahrraddiebstahl-2017-GDV

கு.சா அண்ணை இருக்கிற ஜேர்மனிய இந்த மேப்பில காணேல்ல?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.