Jump to content

எண்ட சைக்கிளை ஆட்டையை போட்டு விட்டார்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image result for carrera parva mountain bike

ஆசையாசையை ஒரு சைக்கிள் வாங்கினேன். ஸ்டேஷன் கார் பார்க் கொள்ளை அடிக்கிறார்கள். பிரீ பார்க்கிங் எண்டால் வீட்டில் இருந்து அரைவாசித் தூரத்தில். மிச்ச அரைவாசிக்கு நடக்க வேண்டும். நடப்பதில் பிரச்னை இல்லை ஆனால் காலையில் நேரம் முக்கியம்.

ஆகவே சைக்கிள் வாங்கி ஓடி போய் ஸ்டேஷன் முன்னாள் விட்டு விட்டு போவதும் வருவது இலகுவாயிருந்தது.

இரண்டு மாதம் நல்லா தானே போய் கிட்டு இருந்தது.

நமக்கு முதல் சைக்கிள் எண்ட படியால், விபரம் புரியாமல் சும்மா கேபிள் லாக் வாங்கி போட்டிருந்தேன். 

Image result for cycle lock

களவாணிகள் அந்தப் பக்கம் வந்து இருப்பினம்... 'அட இங்க பாரடா லட்டு மாதிரி என்று'.. யாரோ புதுசா... வந்திருக்கிறான் போல கிடக்குதே...' நினைத்திருப்பார்கள் போல இருக்கிறது. 

கேபிள் வெட்டினைப் பார்த்தால் , ஒரு 4 செகண்ட் கூட மினக்கெட்டிருப்பார்கள் போல தெரியவில்லை. அப்படி ஒரு நேர்த்தி!!

ஆகவே சைக்கிளை ஆட்டையை போட்ட தெய்வங்களே... சந்தோசமா இருங்கோ... £280 தர்மக் கணக்கில் போட்டாச்சு.

இருந்தாலும் இண்டைக்கு போய் இன்னோரு சைக்கிள் ஓடர் பண்ணி இருக்கு. ஆனால் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ரோங் ஆன பூட்டு வாங்கி இருக்கிறன்...

Image result for cycle lock

பாப்போம்... புண்ணிய வான்கள் என்ன விளையாட்டு காட்டுகினம் எண்டு.

Image result for police

என்ன போலீசோ...??

‘சோனமுத்தா போச்சா'... 'அதுதான் சைக்கிள் வாங்கினா.... சைக்கிள் விலைக்கு சமனா பூட்டும் வாங்கி இருக்க வேணும்... 'கிளம்புங்கோ... கிடைச்சா சொல்லி அனுப்புறம் எண்டு சொல்லி அனுப்பிடினம்'.

'அந்த CCTV எண்ட ஒரு விசயம் இல்லையோ.... அதை.... பார்க்க மாட்டியளே'...

'10 மணித்தியாலம் ஒக்காந்து பார்க்க உங்க ஆக்கள் இல்லை...'...

'எனக்கு நேரம் இருக்கு.... நான் பார்க்கிறேன்.... ஒழுங்கு செய்யுங்களன்....'

'இது.. சரி வராது.... பிறகு data protection act எண்டு பிரச்சனை வரும்'... 

'அப்ப.... நீங்கள் ஒண்டும் செய்ய மாட்டியல்... எண்டு தெரிந்து தான்... களவு நடக்குது'

'உண்மைதான்... உங்கட எம்பிக்கு எழுதி... போலீசுக்கு கூட காசை ஒதுக்க சொல்லுங்கள்'...

.... 'நான் முறைப்பாடு சொல்ல வர... நீர் எனக்கு முறைப்பாடு சொல்லுறீர் காணும்'...

'பின்ன... என்ன போட்டு வாறன்...'

எண்டு சொல்லி கிளிம்பி விட்டேன்.

ஆகவே சைக்கிள் வாங்க நினைப்பவர்கள் பூட்டையும் ... களவாணிகளையும் பத்தியும் நினையுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா வடை போச்சா?

எவ்வளவு பணத்தை செலவு செய்தாலும் மனம் தளராது.ஆனால் 5 சதத்தையேனும் யாரும் ஆட்டையைப் போட்டா அதன் வலியே வேறை.எனக்கென்றால் வெளியே சொல்ல வெட்கமாக இருக்கும்.

சரி அடுத்ததை வாங்கி முன் சில்லு பின் சில்லு சீற் என்று எங்கெங்கு பூட்டுகள் போட இயலுமோ அங்கெல்லாம் போடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா வடை போச்சா?

எவ்வளவு பணத்தை செலவு செய்தாலும் மனம் தளராது.ஆனால் 5 சதத்தையேனும் யாரும் ஆட்டையைப் போட்டா அதன் வலியே வேறை.எனக்கென்றால் வெளியே சொல்ல வெட்கமாக இருக்கும்.

சரி அடுத்ததை வாங்கி முன் சில்லு பின் சில்லு சீற் என்று எங்கெங்கு பூட்டுகள் போட இயலுமோ அங்கெல்லாம் போடுங்கள்.

இதில என்ன வெட்கம்...

யாரோ டெஸ்பேரேட் ஆனா ஒருத்தன் ரிஸ்க் எடுத்திருக்கிறான் என்று நினைத்தேன்... ஒகே ஆகி விட்டது...

முறையான பூட்டு வாங்கிப் போடாதது என் தவறு.... இரண்டு மாதம் ஒன்று நடக்காமல் இருந்தது ஆச்சரியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை வயித்தெரிச்சல் சயிக்கிள் களவெடுத்தவனை சும்மா விடாது பாருங்கோ. கடவுள் கள்ளனை  எப்பிடியும்
  உங்கடை கண்ணிலை காட்டியே தீருவான்.....ஒண்டுக்கும் கவலைப்படாதேங்கோ.. :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

அந்த CCTV எண்ட ஒரு விசயம் இல்லையோ.... அதை.... பார்க்க மாட்டியளே'...

'10 மணித்தியாலம் ஒக்காந்து பார்க்க உங்க ஆக்கள் இல்லை...'...

சைக்கிள் களவு போன கவலையிலும், குசும்பு வேறை.... ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

சைக்கிள் களவு போன கவலையிலும், குசும்பு வேறை.... ?

 

குசும்பல்ல, எரிச்சல்..

CCTV  பதிவு இருக்கும். போலீசுக்குப் போனால் போதும்.... கள்ளரையும் உள்ள போட்டு, சைக்கிள்ள வீட்ட வரலாம் எண்டு கண பேருக்கு ஜடியா இருக்குது.

உங்க அப்படி ஒரு கோதாரியும் நடவாது எண்டு சொல்ல வந்தேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் ‘மை’ போட்டுப் பாருங்கோ!

வெளிச்சாலும் வெளிக்கும்!?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பொழுதும் முதல்முறை சயிக்கிளை திருட்டுக்கு கொடுப்பது முதல் காதலியை இழந்ததுபோல் மிகவும் வேதனையான விடயம். பின்பு அடுத்து அடுத்து இரண்டு சயிக்கிள்கள் களவு போகும்போது இது பழகிப் போவது மட்டுமல்ல நினைக்க சிரிப்புகூட வரும். நான் அந்த படிநிலையில் இருப்பதால் உங்களின் வேதனையில் கவலையுடன் பங்கு கொள்கிறேன்......!

உங்களின் ஆறுதலுக்காக சில:

--- ஒரு புது சைக்கிள் 6 கியாருடன் கிபீர் போல பறக்கும். ஒரு கடையில் முன் சக்கரத்தை செருகி நிறுத்த ஸ்ராண்ட் வைத்திருந்தார்கள். நானும் காண்டாமிருகத்துக்கு காலில போடுறமாதிரி ஒரு கனமான வயர் பூட்டை பூட்டிவிட்டு போய் சாமான்கள் வாங்கி வந்து பார்த்தால் பூட்டும் முன் சில்லும் சிறு சேதமும் இல்லாமல் இருக்குது.அது குபீர் என்று பறந்துட்டுது.....!

--- ஒரு நண்பனின் சைக்கிள் காணாமல் போய் விட்டது. (இடைக்கிடை நானும் பாவிக்கிறானான்). சில நாடாக்கள் சென்று விட்டன. ஒரு இடத்தில அந்த சயிக்கிள் பூட்டு கூட இல்லாமல் நிக்குது. நண்பரையும் கூப்பிட்டு அவரும் வந்து விட்டார்.யார் அந்த சாயிக்கிளை எடுக்க வருகினம் என்று பார்க்க சற்று எட்டத்தில் இருவரும் நிக்கிறம். அத்தான் வந்து அதை எடுக்க ஓடிப்போய் நிப்பாட்டிட்டம். 

இது எங்கட சயிக்கிள் ....! (எல்லாம் பிரெஞ்சில்)

இல்லை இது என்னுடையது.

வா போலீசுக்கு. நான் (போர்த்து பிளான்) களவு போனதை சொல்லி இருக்கிறன்.

அவர்: நான் என் நண்பனிடம் இரவலாய் வாங்கி வந்தனான்.கொண்டுபோய் குடுக்க வேணும்.

வா நாங்கள் முதல் போலீசுக்கு போவோம். உன் நண்பனை அங்கு ரிசிற்றுடன் வந்து கதைக்க சொல்லு. இப்ப நீயும் வா.

இப்படியே இழுபட சனமும் கூடுது.

அவரும் சரி உங்கட சயிக்கிள் எண்டால் கொண்டு போங்கோ, நான் அவனிட்ட சொல்லுறன் என்று சொல்லிட்டு நழுவிக் கொண்டு போயிட்டார். 

--- மகனை யூனிவசிட்டில கூட்டிக்கொண்டு போய் விடுகிறன்.வீட்டில் இருந்து 100 கி.மீ  தூரம். முதல் நாள். அவர் அங்கு தங்கி படிக்கவேணும். சாமான்கள் வாங்க கொள்ள ஒரு சயிக்கிள் இருந்தால் நல்லது என்று தோணுது. போய் கடை ஒன்றை தேடித் பிடிச்சி பார்த்தால் எல்லாம் 200 ஈரோ க்கு மேலதான் இருக்கு.சரி வாங்குவம் என்று முடிவெடுக்க கடைக்காரர் வந்து இங்க ஒரு சைக்கிள் இருக்கு பிடிச்சால் எடுங்கோ என்கிறார்.(முழுதாக திருத்திய சயிக்கிள்.அந்தாளுக்கு என்னுடைய டிசைன் எப்படி விளங்கிச்சோ தெரியவில்லை). மகனும் அதை எடுத்து ஓடிப்பார்த்து விட்டு இது நல்லா இருக்கு அப்பா, இது போதும் என்கிறார். 30 ஈரோக்கு  அதை வாங்கிக் குடுத்திட்டு வந்திட்டன். ஒரு மாதத்தில அது அங்கேயே களவு போயிட்டுது. மகன் போனில் அப்பா 170 ஈரோ உங்களுக்கு லாபம் என்கிறான்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

உங்கடை வயித்தெரிச்சல் சயிக்கிள் களவெடுத்தவனை சும்மா விடாது பாருங்கோ. கடவுள் கள்ளனை  எப்பிடியும்
  உங்கடை கண்ணிலை காட்டியே தீருவான்.....ஒண்டுக்கும் கவலைப்படாதேங்கோ.. :cool:

உங்கட கண் முன்னாலேயயே அதை களவு எடுத்தவன் ஓடிக் கொண்டு போவான் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

எப்பொழுதும் முதல்முறை சயிக்கிளை திருட்டுக்கு கொடுப்பது முதல் காதலியை இழந்ததுபோல் மிகவும் வேதனையான விடயம். பின்பு அடுத்து அடுத்து இரண்டு சயிக்கிள்கள் களவு போகும்போது இது பழகிப் போவது மட்டுமல்ல நினைக்க சிரிப்புகூட வரும்

நாதமுனி நினைத்துப் சிரிப்பதற்கு, இன்னும் இரண்டு சைக்கிள்களை இழக்க வேண்டும். பார்ககலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

இருந்தாலும் இண்டைக்கு போய் இன்னோரு சைக்கிள் ஓடர் பண்ணி இருக்கு. ஆனால் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ரோங் ஆன பூட்டு வாங்கி இருக்கிறன்...

புது சைக்கிள் வீட்டு வந்ததும் ஒரு படம் எடுத்து இங்கே இணைத்து விடவும். :cool:

Link to comment
Share on other sites

பேசாமல் இலங்கையிலேயெ வாழ்ந்திருக்கலாம் என்று தான் சொல்லத்தோணுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கா அப்பாவித்தனமா பிழைவிட்டாத்தான், அட எனக்கோடா விளையாட்டுக்காட்டிறியள் எணடு கொதி வரும். திருப்பியும் புது சைக்கிள் ஒன்றை, வைத்து கள்ளனைப் மடக்கிப்பிடிக்கலாம் தான்.

இருந்தாலும் Halfords சைக்கிள் கடையில நிண்ட வெள்ளப் பெடியக் கொஞ்சம் முன்னம் வெளியால வேலை முடிஞ்சு வரேக்க மடக்கிப் பிடித்துக் கேட்டேன்.

இதுக்கென்னப்பா வழி, இப்படியே வந்து வாங்கிக் கொண்டு இருக்க வேண்டியது தானோ என்றேன்.

சிரித்து விட்டு, பேசாமல் சோதில கலக்க வேண்டியது தானே எண்டான்.

அப்படி எண்டால்...?

காசை உங்க செலவழியாம, கள்ளர்களிடமே, eBay யில (buyers buying legally, in a public marketplace) வாங்கி ஓடவேண்டியது தானே.  உன்ற சைக்கிள் இப்ப £40 க்கு அங்க விப்பாங்கள்.

களவு போனாலும், டென்சன் ஆகத்தேவை இல்லை. ஓடிப்போய் வாங்கலாம். 

இன்னோரு விசயம்... தொழில் தர்மம் இருக்குது பாருங்க... தாங்கள் வித்தது எவை, எவை எண்டு அவையளக்கு தெரியும். அவை எடாகினம். 

என்ன செய்யிறது?

சுமே அக்கா ஸ்ரைலில பிரச்சணை சொல்லியாச்சு. மினக்கடாம தீர்வை சொல்லுங்க. 

36 minutes ago, பகலவன் said:

பேசாமல் இலங்கையிலேயெ வாழ்ந்திருக்கலாம் என்று தான் சொல்லத்தோணுது.

உந்தக் களவுக்காகவோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

Image result for carrera parva mountain bike

 

 

 

ஆகவே சைக்கிள் வாங்க நினைப்பவர்கள் பூட்டையும் ... களவாணிகளையும் பத்தியும் நினையுங்கோ.

அதோட வியைய் படமும் பாருங்கோ.?

2 hours ago, Nathamuni said:

உந்தக் களவுக்காகவோ??

இது இலங்கையில் அதுவும் தமிழர் பகுதியில் நடந்திருந்தால் இந்த திரி மட்டும் இல்லை யாழே பத்தி எரிந்திருக்கும்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

உங்களய நினைச்சா மனசிற்கு சரீ... கஸ்டமா ஈக்குதுவா.

உங்கட ராஹ்மாணயம் பாலய் கத செல்ல பெயிட்டுதான் இப்பிடி ஆவி ஈக்கி.

இனி அல்லாஹ் குடுக்கியெண்டாலும் முறையா குடுக்கிய, புடுங்கிரண்டாலும் முறையா புடுங்கிர தான்வா.

சும்மா தொது மாரி ஊரு பலாய் செல்லாம, 

இனி சரி இஸ்லாம் ஆக்கள் கூட ஜூக் வுடுறத ஸ்டொப் பண்ண பாருங்க சைய்யா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரும், சரி தான் அப்படியே வாங்குங்கள் என்று சொல்லவில்லை.... 

யாழ் தளம் அல்லவா...

கொஞ்சம் காசுக்காக... களவு சைக்கிள் வாங்குவது தேவையில்லாத பிரச்சனை..... இன்று லண்டன் மேஜர் கானுக்கு கடதாசி போட்டிருக்கிறேன்.

சைக்கிள் ஓடு... என்று காது கிழிய கத்துறியள்.... என்ன பாதுகாப்பது இருக்கிறது... குறைந்த பட்சம் ebay , gumtree போன்ற second hand சைக்கிள் விற்கும் தளங்கள் ஏன்.. சைக்கிள் பிரேம் நம்பர் கட்டாயம் விளம்பரத்தில் போட வேண்டும் என வலியுறுத்தக் கூடாது?

சைக்கிள் தொலைத்தவர்கள் தமது பிரேம் இலக்கத்தினை அந்த தளங்களில் பதிந்து வைத்தால்... களவினை குறைக்க முடியுமே என்று சொல்லி உள்ளேன்.

கொப்பி, எம்பிக்கு அனுப்பி உள்ளேன். பார்க்கலாம்.

புது சைக்கிள், நாளை கிடைக்கிறது... இன்சூரன்ஸ் பணம் வருவதால் செலவு இல்லை...

உறவுகளுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

raeder1.jpg

10314677.jpg

4282366_web.jpg?1522298573

இஞ்சை ஜேர்மனியிலை ஒவ்வொரு ரயில் ஸ்ரேசனுக்கு பக்கத்திலை சையிக்கிளெல்லாம் குப்பை மாதிரி பார்க் பண்ணியிருப்பாங்கள். ஒரு காக்கா குருவி கூட திரும்பிப்பாக்காது....வருசக்கணக்காய் நிக்கும்....அடியிலை புல்லுக்கூட முளைச்சு நிக்கும்.  ஒருத்தரும் களவெடுக்கிற சிந்தனையோடை பாக்கிறதேயில்லை.
என்ன செய்ய.....சனம் நாட்டுக்கு நாடு வித்தியாசம்.:grin:

இரவு பகலாய் எந்தவொரு பாதுகாப்பில்லாமலும் சைக்கிள் விட்ட இடத்திலையே அப்பிடியே நிக்கும் எண்டதை இந்த இடத்திலை சொல்லியே ஆகணும்.   :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் luton னில இருக்கேக்க இதை அனுபவிச்சனான். ரெண்டு மாசமா luton ரெயில்வே ஸ்ரேசனில சைக்கில விட்டிட்டு சந்தோசமா வேலைக்கு போய் வந்தனான். ஒரு களவானி பயல்   கடும் முயற்சி செய்து கடைசில கைவிட்டான். நானும். அதோட சைக்கிள் ஓடுறத விட்டிட்டன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நந்தன் சொன்னது போல... ஸ்டேஷனுக்கு போக சைக்கிள் வேண்டாம்.... கொஞ்சம் வெள்ளனவா வெளிக்கிட்டு  நடப்பம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

நாமு,

உங்களய நினைச்சா மனசிற்கு சரீ... கஸ்டமா ஈக்குதுவா.

உங்கட ராஹ்மாணயம் பாலய் கத செல்ல பெயிட்டுதான் இப்பிடி ஆவி ஈக்கி.

இனி அல்லாஹ் குடுக்கியெண்டாலும் முறையா குடுக்கிய, புடுங்கிரண்டாலும் முறையா புடுங்கிர தான்வா.

சும்மா தொது மாரி ஊரு பலாய் செல்லாம, 

இனி சரி இஸ்லாம் ஆக்கள் கூட ஜூக் வுடுறத ஸ்டொப் பண்ண பாருங்க சைய்யா?

உங்களுக்கு விருப்பமானால் ஒரு தனித்திரியை ஆரம்பித்து எதையும் எழுதுங்கள். வேறு விடயமாக தொடங்கிய திரியில்  வந்து அலப்பறை... அதுவும் அரைகுறை மொழி...

அட... அந்த திரியிலாவது பதிவு போட்டிருக்கலாம்... அதுவும் இல்லை. 

அது கொழும்பில் பேசப்படும் பேச்சு மொழி... சென்னைத் தமிழ் போன்ற அழகிய மொழி... நான்,
இங்கும் பலர் அழகாக பேசிக் கூடிய மொழி. உங்களுக்கு என்ன பிரச்னை....?

ஒரு நகைச்சுவைக்காக சொன்ன விசயத்தில்.... மத விசத்தினை தயவு செய்து நுழைக்கவேண்டாம்.....

இவ்வளவு பேர் ரசிக்க.... இவருக்கு மட்டும்.... புடுங்குது... போங்க...  போய்... புள்ளை குட்டியை படிக்க வையுங்க...

உங்கள் பதில் எதுவானாலும் இங்கே உடுக்கடிக்க வேண்டாம்... தனித்திரி தொடங்கி அடியுங்கோ..

Link to comment
Share on other sites

நாதமுனி, உங்கள் வலி புரிகின்றது. எனது சைக்கிள் 14 வருடங்களின் முன் திருட்டு போனது. பல்கலைக்கழகத்து நூல்நிலையம் முன்னால் விட்டு சென்றபோது உங்களுக்கு நடந்தது மாதிரியே கேபிளை வெட்டிவிட்டு கொண்டு சென்றுவிட்டார்கள். அப்போது அதன் பெறுமதி ஆயிரம் டொலர் சொச்சம். வயிறு பத்தி எரிஞ்சது. நான் கனடா வந்து கார் வாங்க முன் சைக்கிள்தான் வாங்கினேன். அந்த சைக்கிளில் தான் வேலைக்கு, கடைக்கு எல்லா இடமும் சென்று வருவது. பின்னர் கார் வாங்கிய பின் குறுந்தூர பிரயாணங்களுக்கு சைக்கிளை பாவித்தேன். கள்ளப்பயலுகள். எல்லாம் போதை அடிக்கும் திருட்டு கோஸ்டி.

நீங்கள் சைக்கிளுக்கு பூட்டு போடும்போது வெட்டப்படமுடியாது பெரிய இரும்பு பூட்டு போடவேண்டும். கேபிளை வெட்டி எடுத்துக்கொண்டு தப்பி ஓட சில செக்கன்களே போதும். 

எமது தனபாலன் மாஸ்டர் (சென். ஜோன்ஸ்) 1987ம் ஆண்டிலேயே யூகேயில் சைக்கிள் திருட்டு போவது பற்றி எங்களுக்கு வகுப்பில் சொல்லி இருக்கிறார். ஆட்கள் சைக்கிளை பூட்டிவிட்டு ஒரு சில்லையும் கழற்றிக்கொண்டு போவார்களாம் திருடப்படாமல் இருப்பதற்கு.

Link to comment
Share on other sites

களவு எந்த நாட்டில் இல்லை. இங்கு ஜெர்மனிலும் தாராளமாக சைக்கிள் திருட்டு நடக்கிறது.

வீட்டுக்கு முன்பு விடும் சைக்கிளையே வெட்டி எடுத்து போவார்கள்.

 

 

Deutschlandkarte-Fahrraddiebstahl-2017-GDV

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமு நானா அதி சும்மா ஜாய்க்கு எழுதினதுவா. 
ஒங்களுக்கு நடந்த ஷுட் டி எங்களுக்கும் சரீ ஆத்திரம் தான் நானா.
உங்க பைக் கிடைக்கணும் நாங்களும் துவா கேட்டேதானே?
கேந்தி ஆக வாணாம்.
 
நான் நினக்கேன், உங்கட ஸ்டோரியப் பார்துட்ட்டு நம்மடவன் எவனோ ஒங்களிக்கு குனூத் ஓதி ஈக்கான்.
அய் தான் பைக் இல்லாம ஆவின.

3 hours ago, நவீனன் said:

களவு எந்த நாட்டில் இல்லை. இங்கு ஜெர்மனிலும் தாராளமாக சைக்கிள் திருட்டு நடக்கிறது.

வீட்டுக்கு முன்பு விடும் சைக்கிளையே வெட்டி எடுத்து போவார்கள்.

 

 

Deutschlandkarte-Fahrraddiebstahl-2017-GDV

கு.சா அண்ணை இருக்கிற ஜேர்மனிய இந்த மேப்பில காணேல்ல?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.