Jump to content

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்


Recommended Posts

துபாய் ஷாப்பிங் திருவிழா! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

 

 
sk6

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 31

 


உலகில் உள்ள எல்லா மக்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் இடமாக துபாய் இருக்க வேண்டும். சண்டையோ, வெறுப்புணர்ச்சியோ இல்லாமல், அன்பை வெளிப்படுத்த வேண்டும். மேலும் துபாயில் உள்ள விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழவேண்டும். அவ்வளவுதான்'.
- எச்.எச். ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்டும் 
(HH. Sheikh Mohamed bin Rashid Al Maktoum)
ஐக்கிய அரபு நாடுகளின் பிரதம மந்திரியும், எமிரேட்ஸ் ஆஃப் துபாயின் அரசருமான மக்டும், இப்படி துபாயைப் பற்றி சிலாகித்து கூறியிருக்கிறார். உலக நாடுகளிலிருந்து உல்லாசப் பயணிகள் துபாயை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள். எதற்காக? எண்ணிக்கையில் அடங்கா ஷாப்பிங் மால்கள், தங்க நகைகள் கொட்டிக் கிடக்கும் பஜார்கள், புர்ஜ் கலிபா, புர்ஜ் அல் அரப் போன்ற வானுயர்ந்த கட்டிடங்கள், பாலைவன சஃபாரி, மிராக்கில் தோட்டம், துபாய் மாலில் இருக்கும் மீன் காட்சியகம், பாலைவனத்தின் நடுவில் பனி கொட்டிக் கிடக்கும் ஸ்கி துபாய் என்று அப்பப்பா, இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று துபாய் நம்மை மலைக்க வைக்கிறது.
இவைகளுக்கு எல்லாம் கிரீடம் வைத்தாற் போன்று 1996-ஆம் வருடம் தோன்றி, வருடம்தோறும் துபாயில் கொண்டாடப்படும் துபாய் ஷாப்பிங் திருவிழா உலக மக்களைக் காந்தமாக தன் பக்கம் இழுத்துக் கொள்கிறது. ஜனவரி மாதத்தின் நடுவில் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கும் அந்த முப்பது நாட்களும் ஒரே கோலாகலம்தான்.
ஒரு புள்ளிவிவரம் என்னை "வாவ்' என்று கூவ வைத்து, எனக்கும் அப்படி ஒரு பரிசு கிடைக்குமா என்கின்ற கேள்விக்குறியை எழுப்பி, துபாய் ஷாப்பிங் திருவிழாவுக்குச் செல்லத் தேவையான ஊக்கத்தை அளித்தது.
(DSF) டி.எஸ்.எஃப் என்று அழைக்கப்படுகின்ற துபாய் ஷாப்பிங் திருவிழா தொடங்கிய 1996-ஆம் ஆண்டு 1.6 மில்லியன் மக்கள் கூடினார்கள், 215 மில்லியன் அரப் எமிரேட்ஸ் திரம் செலவானது. நாலே வருடங்களில் அதாவது 1999 - ஆம் ஆண்டில் 3.35 மில்லியன் பார்வையாளர்களையும், 9.8 மில்லியன் அரப் எமிரேட்ஸ் திரம் செலவானது என்றால், இந்த திருவிழா அடைந்த வெற்றியை அறிந்துகொள்ள முடிகிறது.
டி.எஸ்.எஃப், இதனுடைய வெற்றியின் ரகசியம் அரப் எமிரேட்ஸ் திரம் 60 மில்லியன்களை பரிசுப் பொருட்களை அள்ளி வழங்கியிருப்பதாக சொல்லப்படுவதுதான். 2010-ஆம் ஆண்டு வரை 643 கிலோ தங்கம், 33 ரோல்ஸ்ராய் கார்கள், இதைத் தவிர 1740 நிசான் மற்றும் லெக்ஸஸ் கார்களை துபாய் ஷாப்பிங் திருவிழாவிற்கு வந்தவர்கள் வென்று சென்றிருக்கிறார்கள் என்றால் எல்லோருக்கும் அந்த அதிர்ஷ்டசாலிகளில் நாமும் ஒருவராக இருக்க மாட்டோமா என்கின்ற எண்ணம் எழத்தானே செய்யும்.
அரசர் ஷேக் மொகமது பின் பெருமையாக சொல்லுகிறார், "துபாயில் நாங்கள் எந்தவிதமான நிகழ்வுகளுக்காகவும் காத்திருப்பதில்லை, ஏனெனில் அவற்றை நாங்கள் செய்து காட்டிவிடுவோம்.'
ஆமாம், துபாய் ஷாப்பிங் திருவிழாவை, உலக மேடையில் வெற்றி திருவிழாவாக நடத்தி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
டி.எஸ்.எஃப், துபாய் ஷாப்பிங் திருவிழாவின் சுருக்கம்தான் இது. இதனுடைய "சுலோகன்' என்ன தெரியுமா?
"ஒரு உலகம், ஒரு குடும்பம், ஒரு திருவிழா'. இந்த திருவிழாவின் மகத்துவத்தை, இந்த "சுலோகன்' எடுத்துக்காட்டுகிறது.
துபாய் ஷாப்பிங் திருவிழாவின்பொழுது அரங்கேறும் பலவிதமான கேளிக்கைகளுக்கு நடுவே இந்த திருவிழாவுக்கு மேலும் மெருகூட்டுகிறது குளோபல் வில்லேஜ் (Global Village). 27 கூடாரங்களுக்குள் உலகின் பல நாடுகள் தங்கள் பொருட்களை கடைவிரித்து, தங்கள் கலாசாரத்தையும் உணவு வகைகளையும் உல்லாசப் பயணிகளுக்கும், துபாய் மக்களுக்கும் வெளிப்படுத்தி மகிழ்கிறார்கள்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல, துபாய் ஷாப்பிங் திருவிழாவில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில், வேண்டிய பொருட்களை வாங்கிக் குவிப்பதோடு, இந்த குளோபல் வில்லேஜ் பொருட்காட்சியிலும் பன்னாட்டுப் பொருட்களை வாங்கலாம், அவர்களுடைய பாரம்பரிய நடனங்களைக் கண்டு ரசிக்கலாம், உணவுகளையும் உண்டு மகிழலாம் என்று எண்ணி மக்கள் வெள்ளம் துபாயை நோக்கி வருகிறது.
துபாய் ஷாப்பிங் திருவிழாவுக்குப் போனால், எத்தகைய அனுபவங்களையும் பெறலாம் என்பதை அங்கே போய் வந்தவர்கள் விவரித்தும், பத்திரிகைகளில் படித்தும் அறிந்திருந்ததால் நானும், என் கணவரும் ஒருமுறையேனும் அந்தத் திருவிழாவைக் கண்டு களிக்க வேண்டும் என்று துபாயை நோக்கி பயணப்பட்டோம்.
ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த ஏழு நகராட்சிகளில் ஒன்றாக துபாய் திகழ்கிறது. இது அரேபியன் தீபகற்பத்திற்கு கிழக்கிலும், அரேபியன் வளைகுடாவிற்கு தென்மேற்கு பகுதியிலும் அமைந்திருக்கிறது. இதனால் வருடம் முழுவதும் சூரிய ஒளியைப் பெற்றிருக்கிறது. பரந்து விரிந்த பாலைவனங்கள், கண்களைக் கவரும் கடலோரப் பகுதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
துபாய்க்கு பலமுறை சென்று வந்திருக்கிறோம். ஆனால் துபாய் ஷாப்பிங் திருவிழா நடக்கும்பொழுது சென்றதில்லை. துபாயில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் நடு இரவிலும் பயம் இன்றி தெருக்களில் வலம் வரலாம். வழிப்பறி கொள்ளைகளைப் பற்றி சிறிதும் கவலைப்படத் தேவையில்லை. சாதாரண சிறு கடைகளில்கூட தங்கம் வாங்கலாம். புகழ்பெற்ற கடையாக இருக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.
கம்ப்யூட்டர்கள், கைக்கடிகாரங்கள், தொலைக்காட்சி பெட்டிகள், சோபா செட்டுகள் என்று எதை வாங்கினாலும் மற்ற இடங்களைவிட விலை மலிவாக இருக்கும். பிராண்டட் அயிட்டங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம், கடல்போல குவிந்து கிடக்கும். அதுவும் துபாய் ஷாப்பிங் திருவிழாவின்போது மிக மலிவாக தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று என் மகன் என் கையில் பெரிய லிஸ்ட் ஒன்றைத் திணித்து அனுப்பி இருந்தான். துபாயை நெருங்கி விட்டோம் என்று விமான பணிப்பெண் அறிவிக்க, பல புதிய அனுபவங்களைப் பெற என் உள்ளம் தயாரானது.
தொடரும்...

http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/aug/19/துபாய்-ஷாப்பிங்-திருவிழா---சாந்தகுமாரி-சிவகடாட்சம்-2982995.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 32: வாசனை திரவியங்களின் மழை!

 

 
sk4

"நீ வெற்றியாளனாக இருந்தால் அதை அனுபவிக்க வேண்டும். துணிகளையும், பிராண்டட் துணிகளையும் வாங்க விரும்புவேன். துபாயிலும், இங்கிலாந்திலும் ஷாப்பிங் செய்ய பிடிக்கும். என்னால் முடிந்தபொழுது எல்லாம் பயணிப்பேன்.
- சுரேஷ் ரெய்னா.

எல்லோருக்கும் பிராண்டட் துணிகளை வாங்க பிடிக்கும்தான், ஆனால் விலை அட்டையைப் பார்த்தால் வயிறு சிறிது கலக்கத்தானே செய்கிறது. சரி, பிராண்டட் துணிகள் மீது காதலா, கவலையை விடுங்கள். துபாய் ஷாப்பிங் திருவிழாவில், ஆசைதீர வாங்கிக் குவிக்கலாம். எப்படி என்று மலைக்காதீர்கள். அங்கே பல பிராண்டட் கடைகளில் 75% தள்ளுபடி விலைகளில் அவைகளை வாங்கலாம். சில சமயங்களில் அதிர்ஷ்ட தேவதையின் பார்வை நம்மீது பட்டால் 90% தள்ளுபடியும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

"விசா இம்பாசிபிள் டீல்ஸ்' என்று ஒரு அமைப்பு இருக்கிறது. அதில் பதிவு செய்து கொண்டால், நாள்தோறும் கிடைத்தற்கரிய பொருட்களின் தகவல்களைப் பற்றி இமெயிலிலும், டெக்ஸ்டிலும் அறிவிப்பார்கள். முதல் முதலில் அதைப் பதிவு செய்யும் ஆறு நபர்களுக்கு நினைத்தே பார்க்கமுடியாத விலையில் அந்தப் பொருள் கிடைக்கும். உதாரணத்திற்கு ஒரு பிராண்டட் கைக்கடிகாரத்தின் விலை 12,650 அரப் எமிரேட்ஸ் திரமாக (அஉஈ) இருந்தால் அது 2000 எஇடி-க்கு கிடைக்கும் என்றால், "சும்மா அதிருது இல்ல' என்று அதிர வைக்கத்தானே செய்யும்.

என் கணவருக்கும் வாசனை திரவியங்களின் மீது அதிக விருப்பம் உண்டு. உள்ளூர் ஜவ்வாது தொடங்கி எகிப்து, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் பெர்ஃபியூம்களை வாங்கி உபயோகப்படுத்துவார். நாள் தவறினாலும் பெர்ஃபியூம் அடித்துக் கொள்வது தவறாது. ஆனால் அவரே ஐயகோ! போதும், போதும் என்று பெர்ஃபியூம் மழையில் நனைந்த நிகழ்ச்சியும் துபாய் ஷாப்பிங் திருவிழாவில் அரங்கேறியது.

"பெர்ஃபியூம் வில்லேஜ்' என்ற இடத்தில் முதல் நாள் அன்று வாசனை திரவியங்களை சாம்பிள் செய்யும் நிகழ்ச்சி நடக்கும் என்றதும் நாங்கள் ஆவலோடு அங்கே சென்றோம். வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த இருநூறுக்கும் மேலான ஆட்கள் கைகளில் பிடித்திருந்த பலவகையான பிராண்டட் பெர்ஃபியூம் குடுவைகளை ஒரே சமயத்தில் அழுத்தி, வந்திருந்த பார்வையாளர்கள் மீது மழைபோல விழச்செய்ய, திக்குமுக்காடிப் போனோம். பலவிதமான வாசனை கலவை படிந்த உடலோடு என் கணவர் வாயிலை நோக்கி ஓடிய காட்சியை இன்று நினைத்தாலும் என் வயிறு குலுங்குகின்றது.

இங்கே இருந்த பெர்ஃபியூம் அருங்காட்சியகத்தில் பலவிதமான மிக உயர்தர வாசனை திரவியங்களை காட்சிக்கு வைத்திருந்தனர். அவற்றை தள்ளுபடி விலையிலும் விற்கின்றனர்.

பெண்ணாக பிறந்துவிட்டு பொன் நகைக்கு ஆசைப்படாமல் இருக்கமுடியுமா? தங்க அங்காடியை நோக்கி சென்றோம். "கோல்ட் சூக்' என்று அழைக்கப்படுகின்ற அங்காடிக்குள் காலடி எடுத்து வைத்ததுமே தலைசுற்றிப் போனேன். எண்ணிக்கையில் அடங்கா கடைகள், அதீதிய விளக்கொளியில் ஜொலித்த நகைகள், அவைகளின் பல டிசைன்கள் அப்பப்பா!  எதை வாங்குவது எதை விலக்குவது, விக்கித்து நின்றேன். மலைபோல குவிந்திருந்த நகைகளில் நான் தேர்ந்தெடுத்த ஒருஜோடி வளையல் என்னை ஏளனப் பார்வை பார்த்தது. ஆனால் நான் மனம் கலங்கவில்லை 500 அரப் எமிரேட்ஸ் திரத்திற்கு தங்கத்தை வாங்கினாலே, அது வைரமாகக்கூட இருக்கலாம், நம் கைகளில் சில அதிர்ஷ்ட கூப்பன்களை திணிக்கிறார்கள். அதிர்ஷ்ட லஷ்மியின் பார்வை நம் மீது பட்டுவிட்டால் வீட்டிற்கு ஒரு கிலோ தங்க நகைகளோடு திரும்பலாம் முதல் பரிசுக்கு இது. இரண்டாம் பரிசுக்கு அரைகிலோ, மூன்றாவதுக்கு கால்கிலோ தங்கம் என்றால் கசக்குமா என்ன?

துபாய் மால் தொடங்கி, சீனப் பெருஞ்சுவராக நீளும் பல மால்களில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் பொருட்களைப் போய் கண்களால் பார்த்தால்தான் நம்ப முடியும். மால்களில், கடைகள் திறக்கும் நேரமான காலை பத்து மணிக்கு சென்றால், கூட்டத்தின் நெரிசலில் இருந்து தப்பித்து ஷாப்பிங் செய்யலாம் என்றார் எங்களுடைய கைட். நாங்களும் சென்றோம் பயன் அடைந்தோம்.

மால்களில் சுற்றி, தங்க அங்காடியில் இடிபட்டு, "போதுமடா சாமி' என்று நினைத்து, ஆனாலும் ஷாப்பிங் ஆசை விடவில்லை என்றால் நேராக செல்லுங்கள் "மார்க்கெட் அவுட் சைட் தி பாக்ஸ்' என்ற இடத்திற்கு திறந்த வெளியில், வெளிநாடுகளில் "பிளி மார்க்கெட்' (flea market) என்று அழைப்பார்களே அப்படிப்பட்ட கூடாரங்களுக்குள் அமைக்கப்பட்ட கடைகள் இங்கே வரிசைகட்டி நிற்கின்றன. திறந்தவெளி என்பதால் இயற்கை காற்று சூழ, பலவிதமான உள்நாட்டு கைவினைப் பொருட்கள், துபாயைச் சார்ந்த டிசைனர்கள் உருவாக்கிய உடுப்புகள், நகைகள் இங்கே கிடைக்கின்றன. பலவிதமான உணவுகளை விற்கும் ஸ்டால்களில் இதுவரை சுவைக்காத உணவுகளை சுவைத்தோம். திறந்தவெளி அரங்கில் நாள்தோறும் பலவிதமான கலைநிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தோம்.

லாட்டரி சீட்டுகளில் மோகம் கொண்டிருந்தால் பெட்ரோல் பங்குகளில் விற்கப்படும் 200 எஇடி மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை வாங்கினால் போதும். வாரத்தின் முடிவில் குலுக்கலில் இரண்டு மில்லியன் எஇடிகளை மூட்டை கட்டி எடுத்துச் செல்லலாம். ஹி.. ஹி.. அதற்கு அதிர்ஷ்டம் இருக்கனுமுங்கோ!

நிசான் கிராண்ட் லாட்டரி சீட்டில் அடிடா சக்கை என்று வென்று புத்தம் புதிய நிசானை ஓட்டி செல்லலாம். அதிர்ஷ்ட சீட்டில் நம்பிக்கை இல்லா என் கணவர், இந்த சீட்டுகளை வாங்க பர்ûஸத் திறக்கவே இல்லை. என் நிசான் கனவு பகல் கனவானது.

கடைசியாக ஒரு பகல் நேரத்தில் குளோபல் வில்லேஜுக்கு ஒரு விசிட் அடித்தோம். அங்கேயும், மிராக்கிள் கார்டனிலும் என் கண்களுக்கு விருந்தானவைகளை விவரிக்கவும், குளோபல் வில்லேஜில் உண்ட உணவுகள், பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் எனக்கு ஒரு முழு கட்டுரை தேவைப்படுகிறது.

பாலைவன நாட்டில், தண்ணீர் மிகக் குறைவாக கிடைக்கும் இடத்தில், எப்படி இப்படிப்பட்ட பூந்தோட்டத்தை உருவாக்கினார்கள் என்பதை நினைத்து, நினைத்து ஆச்சரியம் அடைந்தேன்.

எத்தனை விதமான பூச்செடிகள், எப்படி அவை இப்படி பூத்துக் குலுங்குகின்றன,  என்பதைக் கேட்டு அறிந்தேன். மே, ஜூன், ஜூலை மாதங்களில் இந்த மிராக்கிள் தோட்டத்தைப் பார்க்க முடியாது. ஏனெனில் மிகவும் சூடான காற்று அந்த மாதங்களில் வீசும். நவம்பர் தொடங்கி, மார்ச் மாதம் வரை அங்கே இந்த மிராக்கிள் கார்டனை திறந்து வைத்திருக்கிறார்கள்.

குளோபல் வில்லேஜ் மற்றும் மிராக்கிள் கார்டனை அடுத்த வாரம் சுற்றி வருவோம்.

தொடரும்...

http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/aug/26/சிந்தை-கவர்ந்த-திருவிழாக்கள்---32-வாசனை-திரவியங்களின்-மழை-2987428.html

Link to comment
Share on other sites

சுதந்திரமாகப் பறந்து திரியும் பட்டாம்பூச்சிகள்! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

 

 
SANTHA

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 33
 "ஓடுகின்ற தண்ணீர், ஒரு பாறையை அடைந்த உடன் நின்று விடுமா? அப்படி நடக்காது, அது வலது பக்கமோ அல்லது இடது பக்கமாகவோ திரும்பி, போகத் தொடங்கும். அதுபோல ஏறுமுக சிந்தனையாளன் நம்பிக்கையோடு, தன்னை எதிர்கொள்ளும் சவால்களை புறம்தள்ளி தன் இலக்கை அடைவான்.
 - மக்டும்
 துபாயின் அரசன் மக்டும் சொல்லியதை அந்நாட்டு மக்கள் நிறைவேற்றி காட்டியிருக்கிறார்கள் என்பதை மிராக்கிள் கார்டன் பறைசாற்றி நிற்கின்றது. பாலைவனத்தின் நடுவே ஒரு சோலைவனம். மொத்தம் 7.2 ஹெக்டர் நிலப்பரப்பில், 109 மில்லியனுக்கும் அதிகமான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன, சிந்தையைக் கவர்கின்றன.
 மிராக்கிள் தோட்டத்திற்குள் காலடி வைத்ததுமே, என் கண்கள் இமைக்க மறந்தன, இதயம் ஒரு துடிப்பை இழந்தது, மனமோ கண்ட காட்சியை உள்வாங்கி அலைபாயும் இயல்பை மறந்து, ஸ்தம்பித்து நின்றது.
 கண்களுக்கு எட்டியவரை மலர்கள், மலர்கள், மலர்கள். 120-க்கும் மேலான மலர் வகைகளில், (Petunia) பெட்யூனியா என்கின்ற மலர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. "எதனால் இப்படி?'' என்று எங்களுடன் வந்த கைடைக் கேட்டேன். "பெட்யூனியா பன்னிரண்டுக்கும் அதிகமான நிறங்களில் கிடைக்கிறது, அதிக நாட்கள் வாடாமல் இருக்கிறது. ஆகையினால் இவைகளைக் கொண்டு பலவிதமான உருவங்களை பூக்களால் அமைக்கலாம்'' என்றார்.
 ஆர்ட்டின் வடிவத்தில் அமைக்கப்பட்ட வளைவுகளுக்கு, நடுவே நடந்து சென்று பூங்காவின் உள்பகுதியை அடைந்தோம். இந்த வளைவுகளில் எல்லாம் சிகப்பு நிற பெட்யூனியா மலர்கள் பூத்துக் குலுங்கின, தலைகளை அசைத்து நம்மை வரவேற்கின்றன.
 "ஏன் இந்த ஆர்ட்டின் வடிவமைப்பு
 தெரியுமா?'' என்றார் கைட்.
 "தெரியலையே'' என்றேன். "இந்த மிராக்கிள் தோட்டத்தை 2013- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், வேலன்டைன்ஸ் நாள் அன்றுதான் திறந்தார்கள், அதனால் காதலின் சின்னமான ஆர்ட்டின் இங்கே ஆதிக்கம் செலுத்துகிறது'' என்று புன்னகைத்தார்.
 ஒரு கிலோ மீட்டர் நீண்டு செல்கின்ற மலர்களால் ஆன சுவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. குழாயில் இருந்து நீர் கொட்டுவதுபோல அமைத்திருந்தார்கள், கொட்டுவது மலர்கள் பூத்துக் குலுங்கிய கொடிகள். பார்ப்பதற்கு குழாயிலிருந்து மலர்கள் வழிந்தோடுவதுபோலத் தெரிந்தது. அப்பப்பா, கற்பனை சக்தியின் விளிம்புவரை சென்று பல வடி வமைப்புகளை அமைத்திருந்தனர்.
 அதில் ஆண் மயில்கள் விரிந்த தோகைகளோடு காட்சி கொடுத்தன. தோகை முழுவதும் பலவகைப் பூக்கள் கண்சிமிட்டி சிரிக்கின்றன. வளைவுகள், பூந்தொட்டிகள், கடிகாரம், கோபுரம் போன்ற அமைப்புகள், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது வீடுகளின் கூரைகள், அதன் சுவர்கள் என்று எல்லாவற்றின் மீதும் பூக்கள். நடந்து செல்லும் பாதைகளின் இருபக்கங்களிலும் விதவிதமான பூக்கள். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலைகளிலும் பூக்களின் ஆக்கரமிப்பு.
 ரோஜாக்கள், மெரிகோல்ட், கேலன்டியுலாஸ், டியுலீப் போன்ற மலர்கள் தங்கள் அழகில் என்னைக் கொள்ளை கொண்டன. ஒரு பாலைவனத்தில், எப்படி இவ்வளவு மலர்களை பயிர் செய்ய முடிகிறது என்று வியந்த எனக்கு கிடைத்த தகவல், உபயோகித்த பிறகு சாக்கடைக்கு செல்லும் நீரை சேமித்து சுத்தப்படுத்தி, நீண்ட ரப்பர் குழாய்களில் ஓட்டையிட்டு அதன் வழியாக சொட்டு முறையில் தண்ணீரை செடிகளுக்கு பாய்ச்சி இப்படிப்பட்ட சொர்க்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள். "வாவ்' துபாய் என்று கூவத் தோன்றியது, நாகரிகம் கருதி வாயை மூடிக்கொண்டாலும் மனம் மானாய் துள்ளியது.
 துபாய் மிராக்கிள் கார்டனுக்கு அருகில் இருக்கின்ற பட்டாம்பூச்சி தோட்டத்திற்கும் சென்றோம். சுண்டுவிரல் அளவிலிருந்து, உள்ளங்கை அளவில் இருந்த 32 வகையான பட்டாம்பூச்சிகளைக் கண்டு மகிழ்ந்தோம். வெளியில் பறந்து செல்லமுடியாதபடி அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களுக்குள் சுதந்திரமாகப் பறந்து திரியும் பட்டாம்பூச்சிகள் நம் தலையில், நீட்டிய கரங்களில் வந்து அமர்ந்து சிறகுகளை அடித்துக் கொள்ளும் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. துபாய் சூடான பருவநிலையைக் கொண்ட நாடு, ஆனால் பட்டாம்பூச்சிகளுக்கு 28 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலைதான் உகந்தது என்பதால், கூடாரங்களின் உள்ளே 28 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை இருக்குமாறு அமைத்திருக்கிறார்கள்.
 துபாய் ஷாப்பிங் திருவிழாவுக்குச் சென்ற எங்களுக்கு இந்த மிராக்கிள் தோட்டமும், பட்டாம்பூச்சி தோட்டமும், இயந்திரமயமாகிப் போன ஓட்டத்தை நிறுத்தி, இயற்கை அன்னையின் மடியில் இளைப்பாற வைத்தது.
 அடுத்த நாள் குளோபல் வில்லேஜ் நோக்கி பயணப்பட்டோம். ஒரே நாளில் மாங்கனி பெறுவதற்காக உலகைச் சுற்றி வந்த முருகப் பெருமானின் அனுபவத்தை நாமும் அந்த குளோபல் வில்லேஜ் வளாகத்தைச் சுற்றி வந்தால் அடையலாம்.
 உலகின் பல நாடுகள், நாங்கள் சென்றிருந்தபொழுது ரஷ்யாவும், ஜப்பானும் கூட இங்கே புதியதாக சேர்ந்து தங்களுடைய கூடாரங்களை அமைத்திருந்தன. மொத்தம் 17,200,000 ஸ்கொயர்
 ஃபீட் நிலப்பரப்பில், வருடத்திற்கு 5 மில்லியன் பார்வையாளர்கள் இங்கே வந்து குவிகின்றனர். டர்க்கி, ஓமான், சவுத் ஆப்பிரிக்கா, யுஎயி, ஈராக், இந்தியா, பாகிஸ்தான், சைனா, எகிப்து என்று நீளும் பட்டியலில், எது சிறந்தது என்று எப்படி சொல்வது.
 ஒவ்வொரு நாட்டின் விதவிதமான கைவினைப் பொருட்கள், துணி வகைகள், உணவு வகைகள், விளையாட்டுகள், நாட்டுப்புறப் பாடல்கள், நடனங்கள், விளைபொருள்கள் என்று என்னை திக்குமுக்காட வைத்தன.
 ஆவலோடு இந்திய கூடாரத்துக்குள் நுழைந்தேன், மொத்தம் 300 ஸ்டால்கள், நம் நாட்டின் பல மாநிலங்களின் பொருட்கள் மலைபோல் குவிந்து கிடந்தன. பாரம்பரிய நடனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி பார்வையாளர்களை மகிழ்வித்தன.
 டர்க்கி கூடாரத்தில் விலை உயர்ந்த பாதாம்பருப்பு, பிஸ்தா, அக்ரோட் போன்ற கொட்டைகளையும், ஓமான் கூடாரத்தில் அந்த நாட்டில் விளைந்த குங்குமப்பூவின் வாசனையில் மயங்கி ஒரு பெரிய டப்பாவில் அதை அடைத்து வாங்கி வந்தேன். பாகிஸ்தானின், எம்பிராய்டர் செய்யப்பட்ட துணி, சைனாவின் பீங்கான் செட் என்று வாங்கி மகிழ்ந்தேன்.
 பல நடனங்கள் பார்த்ததில் சவுத் ஆப்பிரிக்க மக்கள் ஆடிய நடனம் எங்களை மிகவும் கவர்ந்தது. படுவேகமாக அடிக்கப்பட்ட டிரம்ஸ்க்கு, இடுப்பையும், உடம்பையும் வளைத்து அவர்கள் போட்ட ஆட்டத்தை இன்று நினைத்தாலும் மனம் அதிர்கின்றது.
 டர்க்கிஸ் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்று சென்றேன். கோன்களில் ஐஸ்கிரீமை வைத்து அதை விற்பவர் நீட்ட, நான் வாங்க முனைந்தபொழுது அந்த கோன் மேல் நோக்கிப் பறந்து, பிறகு விற்பனையாளர் கையில் வந்து அமர்ந்தது. மீண்டும் நான் கைகளை நீட்டியபோது அந்த கோனை தலைகீழாக சடக் என்று அவர் நீட்ட, நான் குலுங்கி மகிழ்ந்தேன்.
 டிஎஸ்எப் என்கின்ற துபாய் ஷாப்பிங் திருவிழாவுக்குச் சென்றால் இத்தனை அனுபவங்களையும் பெறலாம், பெரும் மகிழ்ச்சியில் திளைக்கலாம்.
 தொடரும்...

http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/sep/03/சுதந்திரமாகப்-பறந்து-திரியும்-பட்டாம்பூச்சிகள்---சாந்தகுமாரி-சிவகடாட்சம்-2993275.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 34: திருநாங்கூர் 11 கருடசேவை திருவிழா!

 

 
GARUDA

'கருடன்' மஹாவிஷ்ணுவின் வாகனம். ஐந்து வயது சிறுமியாக என் பெரியம்மா ராணி அம்மையாரின் மடியில் படுத்து கதை கேட்டுக் கொண்டிருந்தேன். கருடன் அங்குதான் எனக்கு அறிமுகமானார். "முதலையின் வாயில் தன் கால் மாட்டிக் கொள்ள ஓங்கி குரல் கொடுத்து நாராயணா என்று பிளிறிய கஜேந்திரனைக் காப்பாற்ற மகாவிஷ்ணு தன் கருட வாகனத்தில் ஏறி விரைந்து வருகிறார்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கருட பகவான் மின்னல் வேகத்தில் பறக்க, கஜேந்திரனின் மோட்சத்தைப் பார்க்க ஆசைப்பட்டு வந்த சிவன், இந்திரன், பிரம்மாவின் வாகனங்கள் கருடனின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவிக்க, கருடன் தன் வேகத்தை சிறிது குறைத்துக் கொண்டான். தக்க நேரத்தில் கஜேந்திரன் மோட்சம் அடைந்தான். பிற தெய்வங்கள் அந்த அரிய காட்சியைக் கண்டு களித்தனர்'' என்று முடித்துக் கொண்டார் என் பெரியம்மா.
அந்த சிறு வயதில் கருடனின் உருவமும், வேகமும் என் மனதில் பசையாய் ஒட்டிக் கொண்டன. கிருபானந்தவாரியார் சுவாமிகளின் கதாகாலட்சேபம், எட்டு வயது சிறுமியாக, சிறுவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தேன். சுவாமிகள் கதை சொல்லத் தொடங்கினார். ""அமிர்தத்தைக் கடைந்தெடுக்கும் தருணம், அதற்கு மந்தார மலையை மத்தாகப் பயன்படுத்த வேண்டியிருந்தது. அந்த மலையைப் பெயர்த்து கொண்டுவர தேவர்களும், அசுரர்களும் முயன்றும் அதை அவர்களால் செய்து முடிக்க முடியவில்லை. ஆனால் கருடன் விஷ்ணுவை சுமந்து பறந்து கொண்டிருந்த நிலையிலும், அந்த மலையை மிக எளிதாகப் பெயர்த்து அதை சமுத்திரத்தில் எறிந்தார். அதனால் அவர் சோர்வடையவில்லை. வீரியத்திற்கு அவர் ஒரு உதாரணம்'' என்றார்.
அவ்வளவுதான் என் மனதில் மேலும் பீடம் போட்டு கருட பகவான் அமர்ந்து கொண்டார். இராமாயணத்தில், இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கிறது, இந்திரஜித் விட்ட நாக அஸ்த்திரத்தின் பாதிப்பால், இராமனும் லஷ்மணனும் மயங்கி சாய, அங்கே வந்த கருடனின் பார்வை பட்டதுமே, நாகத்தின் பாதிப்பு விலக, அந்த புண்ணிய புருஷர்கள் காப்பாற்றப்பட்டனர். இப்படி கருடனைப் பற்றிய நிகழ்வுகளைக் கேட்டபின், கருடன் எப்படி விஷ்ணுவின் வாகனம் ஆனார் என்பதை என் பதினைந்தாவது வயதில் அறிந்துகொள்ளத் துடித்தேன்.
புராண ஏடுகளைப் புரட்டினேன். ஆகா இந்த கருடன் இந்தியா, இந்தோனேஷியா மற்றும் தென்கிழக்கு நாடுகளின் காவியங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறான். புராணங்களின் கூற்றுப்படி கருடன் காஷ்யப முனிவருக்கும் அவருடைய பத்தினி (Vinata) விநதாவுக்கும் மகனாக அவதரித்தார். விநதாவுக்கு (Kadru) கட்ரு என்றொரு சகோதரி இருந்தாள். அவளுடைய பிள்ளைகள் பாம்புகளாக இருந்தன. 
கருடனின் வலிமையை உணர்ந்த கட்ரு தன்னுடைய சகோதரியையே சிறை எடுத்தாள். அவளை விடுவிக்க வேண்டும் என்றால் கருடன் அமிர்த கலசத்தை சொர்க்கத்தில் இருந்து கொண்டு வரவேண்டும். அதைத் தன் பிள்ளைகள் குடித்து அழிவில்லாத நிலையையும், இணையில்லா பராக்கிரமத்தையும் அடையவேண்டும் என்று விரும்பினாள். தாயைக் காப்பாற்ற சுவர்க்கம் சென்று பெரும் போர்புரிந்து அமிர்த கலசத்தைக் கருடன் கைப்பற்றினான். அமிர்தத்தைக் குடிக்கவேண்டும் என்று கருடன் எண்ணவில்லை. அதைத் தன் அன்னையை விடுவிக்க மட்டுமே பயன்படுத்த எண்ணினான்.
இந்த நிகழ்ச்சி விஷ்ணுவின் கவனத்தைக் கவர்ந்தது. கருடனைப் பார்த்து சொன்னார், அமிர்தத்தைக் குடிக்காமலேயே நீ அமரத்துவம் அடைவாய். இந்த அமிர்தத்தைக் கொடுத்து உன் அன்னையை மீட்டு விடு, ஆனால் அதை அந்த பாம்புகள் குடிக்காமல் பார்த்துக்கொள் என்றார்.
கருடன் தன் அன்னையை விடுவித்தபின் விஷ்ணுவின் வேண்டுகோளின்படி அமுதத்தைக் குடிக்க வந்த பாம்புகளை, போய் உங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டான். அந்த சமயம் பார்த்து இந்திரன் வந்து அமுத கலசத்தைக் கவர்ந்து செல்ல, அவனோடு கருடன் போர் புரிந்தான். அப்படியும் இந்திரன் அமுத கலசத்தோடு தப்பி ஓடிவிட்டான்.
கீழே சிந்திய சில அமுதத் துளிகளை நக்கி பாம்புகள் தங்களைத் திருப்திப்படுத்திக் கொண்டன. அமுதத்தின் வீரியம் தாங்காமல் அவைகளுடைய நாக்குகள் பிளந்து, அன்று முதல் பிளவுபட்ட நாக்குகளோடு ஊர்கின்றன.
விஷ்ணுவின் நெஞ்சத்தைக் கருடனின் வீரமும், தனக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய பண்பும் கவர்ந்துவிட, கருடனை பட்சிகளின் தலைவனாக்கியதோடு, அவனைத் தன் வாகனமாகவும் ஆக்கிக் கொண்டார்.
இளம் மங்கையாக திருமணம் புரிந்து என் கணவருடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் அதாவது திருவரங்கத்துக்குள் ரங்கநாதரைப் பார்க்கச் செல்லும்பொழுது, கையில் அமிர்த கலசத்தோடு, உலகிலேயே பெரிய கருடனாகக் காட்சி கொடுத்த கருடாழ்வாரைக் கண்டு மதிமயங்கினேன். கருடன்தான் ரங்கவிமானத்தை சத்தியலோகத்தில் இருந்து அயோத்திக்கு கொண்டு வந்தார். ஸ்ரீராமர், ரங்கநாதரை வணங்கி, அவரைப் பூஜித்து வந்தார். பிறகு அந்தச் சிலையை விபீஷணருக்குப் பரிசாக அளித்தார்.
திருப்பதி பிரம்மோர்ச்சவத்தில் ஐந்தாவது நாளான கருடசேவைக்கு சென்றிருந்தேன். அந்த நாளில் கூடிய மக்கள் வெள்ளத்தைக் கண்டு கருட ஆழ்வாரின் மீது மலையப்பசாமி பவனி வருவதைக் காண இப்படிப்பட்ட கூட்டமா என்று திகைத்தேன். மகர கண்டி, சாலிக்கிராம மாலை, லஷ்மி ஹாரம், வைரகிரீடம், உள்ளங்கை அளவு மரகதம் நெஞ்சை அலங்கரிக்க, பல ரத்தின ஹாரங்களால் அலங்கரிக்கப்பட்ட கருடாழ்வார் மீது மலையப்பசாமி அமர்ந்து மேல்நோக்கி நீண்டிருக்கும் அவருடைய உள்ளங்கைகளில் தன் திருப்பாதங்களைப் பதித்து உலாவரும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்.
விஷ்ணுவின் திருப்பாதங்கள் மண்ணில்பட்டு புண்படக்கூடாது என்று கருடாழ்வார் எப்பொழுதும் அவற்றைத் தன் உள்ளங்கைகளில் தாங்குவாராம்.
இப்படி சிறுவயது முதல் இன்றுவரை கருடாழ்வாரின் மகிமைகளைக் கேட்டும், படித்தும், கண்டும் உள்ளம் நெகிழும் என்னை எப்படி திருநாங்கூர் 11 கருடசேவை ஈர்த்தது என்பதை அடுத்தவாரம் சொல்கிறேன்.

http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/sep/09/சிந்தை-கவர்ந்த-திருவிழாக்கள்---34-திருநாங்கூர்-11-கருடசேவை-திருவிழா-2995780.html

Link to comment
Share on other sites

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 35: கனக்கும் கருடனும் கனக்காத கருடனும்!

 

 

 
sk5

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோயிலில் சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. சிறப்புமிக்க இத்தலத்தில் ஆண்டிற்கு இரண்டு முறை தமிழ் மாதங்களான  மார்கழி மற்றும் பங்குனியில் நடைபெறும் கல் கருடசேவை உலகப் பிரசித்தி பெற்றதாகும். சாதாரணமாக மற்ற பெருமாள் கோயில்களில் மரத்தினாலோ அல்லது உலோகத்தினாலோ ஆன கருட வாகனத்தின் மீது பெருமான் பவனி வருவார். ஆனால் நாச்சியார் கோயிலில் கல்லால் ஆன கருடன் மீது சீனிவாச பெருமாள் பவனி வருகிறார். கல் என்றால் எடை அதிகமாக இருக்குமே என்கின்ற எண்ணம் எழத்தானே செய்கின்றது. ஆனால் கல் கருடனின் கருவறையில் இருந்து அவரை வெளியே எடுக்கும்பொழுது நான்கு ஆட்களே தேவைப்படுகின்றனர். ஆனால் வாகன மண்டபத்தை நோக்கி கல் கருடனை சுமந்து செல்லும்பொழுது அவருடைய எடை அதிகரிக்க, 8, 16, 32, 64 என்று ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்து, விமான மண்டபத்தில் சீனிவாச பெருமாள் கருடனின் மீது நிலைகொண்ட பிறகு வெளியே வரும்பொழுது 128 ஆட்கள் சுமக்க வேண்டி வருகிறது. இப்படி நான்கு மாடவீதிகளில் ஆறு மணி நேரம் சுற்றிய பிறகு மீண்டும் கல் கருடன் கருவறைக்கு திரும்பும்பொழுது 128 ஆட்கள் என்பது 64, 32, 16, 8 என்று குறைந்து பிறகு வெறும் நான்கு ஆட்கள் மட்டுமே அவரை தூக்கி கருவறை மேடையின் மீது அமர்த்துகிறார்கள்.
இது எப்படி சாத்தியமாகிறது. இதுவரையில் விடை காணமுடியாத புதிராக உள்ளது. இந்த கல் கருடனையும், அவருடைய மார்கழி புறப்பாடையும் கண்டபின் கருடன்மீது எனக்கு இருந்த ஈர்ப்பு இன்னும் அதிகமானது. என்னுடைய மகன் சிதம்பரம் அண்ணாமலை மருவத்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம் அது, அவரைப் பார்ப்பதற்காக சிதம்பரம் செல்லும்போது எல்லாம், சுற்றுவட்டாரத்தில் உள்ள கோயில்களை சென்று பார்த்து அங்குள்ள தெய்வங்களை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டு இருந்தேன். அப்படி ஒரு முறை சென்றபொழுது சிதம்பரத்திற்கு அருகில் உள்ள திருநாங்கூரில் 10-12 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பதினொரு பெருமாள் கோயில்கள் உள்ளன என்று கேள்விப்பட்டேன். விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களுக்குள் இந்த பதினொரு கோயில்களும் அடக்கம், இதைத்தவிர, 12 ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாரால் இந்த கோயில்கள் பாடப்பட்டிருக்கின்றன என்றவுடன் அவைகளைச் சென்று பார்க்க ஆவல் கொண்டேன்.
இந்த கோயில்களில் சில சோழ அரசரான பராந்தகன் காலத்தைச் சேர்ந்ததாகும். இந்த பதினொரு கோயில்களில் பல வயல்களுக்கு நடுவே இருந்தன. சோழநாடு சோறுடைத்து என்கின்ற பழமொழக்கு ஏற்ப எங்கும் பசுமையான நெற்கதிர்கள் சூழ்ந்திருக்க, விவசாய பெருமக்களின் சூழல்களுக்கு நடுவே ஆங்காங்கே இந்த பதினொரு திவ்ய தேசங்கள் கொலுவிருக்கின்றன. 

திருநாங்கூருக்கு உள்ளே இருக்கும் கோயில்கள் 

1.திருக்காவளம்பாடி -கோபாலகிருஷ்ண பெருமாள்
2.திருவண்புருஷோத்தமம் - புருஷோத்தம பெருமாள்
3.திருஅரிமேய விண்ணகரம் - குடமுடகோதன் பெருமாள்
4.திருச்செம்பொன் செய்கோயில் - பேரருளாளன் பெருமாள்
5.திருமணிமாடக் கோயில் - பத்திரி நாராயணப் பெருமாள்
6.திருவைகுண்ட விண்ணகரம் - வைகுண்டநாதப் பெருமாள்
திருநாங்கூருக்கு வெளியே இருக்கும் கோயில்கள் :
7.திருத்தேவனார்த்தொகை - மாதவப் பெருமாள்
8.திருத்தெற்றியம்பலம் - பள்ளிகொண்ட பெருமாள்
9.திருமணிக்கூடம் - வரதராஜப்பெருமாள்
10. திருவெள்ளக்குளம்    - அண்ணன் பெருமாள்
11. திருப்பார்த்தன்பள்ளி - பார்த்தசாரதி

உடல் சிலிர்க்க கண்கள் பனிக்க, உள்ளம் உருக இத்தனை பெருமாள்களையும் ஒரே நாளில் கண்டு களித்தேன். அங்கே இருந்த குருக்களில் ஒருவர் சொன்னார், "தை மாதத்தில் அமாவாசைக்கு மறுநாள் இந்த பதினொரு கோயில்களில் உள்ள உற்சவ பெருமாள்கள் அனைவரும், பதினொரு கருட வாகனத்தின் மீது அமர்ந்து உலா வருவார்கள். திருமணிமாடக் கோயில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சந்நிதிக்கு வெளியே போடப்பட்டிருக்கும் பந்தலின்கீழ் இந்த திவ்ய அணிவகுப்பை கண்ணாரக் காணலாம்' என்றார்.
சில்லென்று பனிக்காற்று, என்னுடலுக்குள் ஊடுருவிச் சென்று என்னை மெய் குளிரச் செய்தது. திருநாங்கூரில் ஒரு வீட்டின் திண்ணையில் நானும் என் கணவரும் சில நண்பர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தோம். இந்த வீட்டின் வழியாகத்தான் கருட வாகனங்கள் செல்லும் என்று எங்களோடு வந்த  "கைட்'  சொன்னதினால் நாங்கள் அந்த திண்ணை
களில் உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தோம். அந்த வீட்டில் இருந்தவர்கள், டம்ளர்களில் சுடச் சுட "
சுக்கும், பனைவெல்லமும் கலந்த பாலைக் கொண்டுவந்து கொடுத்து, குடிக்கும்படி உபசரித்தனர்.
அந்த குளிருக்கு சூடான பால் தொண்டைக்கு இதமளித்தது. சிறிது நேரத்தில் அந்த வீட்டுக்குள்ளிருந்து எழுபத்து ஐந்து வயது மதிக்கத்தக்க தாத்தா ஒருவர் வெளியே வந்து எங்களுடன் அமர்ந்து கொண்டார்.
""எங்கிருந்து வர்றீங்க''
""தாத்தா, நாங்க சென்னையிலிருந்து வருகிறோம்'' என்றார் என் நண்பர்.
""பரவாயில்லையே பதினொரு கருட சேவையைப் பார்க்க நேரத்தை ஒதுக்கி வந்திருக்கிறீர்களே''என்றார்.
""எல்லாம் என் மனைவி சொல்லித்தான் நாங்கள் வந்தோம்'' என்று கணவர் கூற,
""சரி, இந்த திருநாங்கூர் கோயில்கள் எப்படி உருவாயின தெரியுமா?''  என்றார் தாத்தா.
""தெரியாது'' என்று பலமாக நாங்கள் தலைகளை ஆட்ட, தாத்தா சொல்லத் தொடங்கினார்.
""பராசக்தி பார்வதி தேவியின் தந்தையான தக்க்ஷன் தன் மாப்பிள்ளையான சிவபெருமானை, தான் நடத்திய யாகத்தில் கலந்துகொள்ள அழைக்கவில்லை. சிவன் இதனால் வெகுண்டெழுந்தார், கோபத்துடன் ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கினார். இது (மக்ஷஹஹ்ஹ)
உபய காவேரி என்ற இடத்தில் நடைபெற்றது.
"இது எங்கு இருக்கிறது' என்று ஆவலை அடக்க முடியாமல் கேட்டேன்.  "தெற்கில் காவேரி நதிக்கும், மேற்கில் மணி ஆற்றிற்கும் நடுவே இந்த இடம் இருக்கிறது. சீர்காழிக்கு தென்கிழக்கில் சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது' என்றார்.
""பிறகு என்ன நடந்தது'' என்றார் என் கணவர்.
""கோபத்தோடு ஆடிய சிவனின் முடிகள் ஒவ்வொன்றாக தரையில் விழ, ஒவ்வொரு முடியும் ஒரு சிவனாகி, அந்த சிவன்களும் ருத்ர நடனத்தை ஆடத் தொடங்கினர். இப்படியாக பதினொரு முடிகள் உதிர பதினொரு சிவன்கள் ருத்ர நடனம் ஆட,  ஒரு ருத்ர நடனத்திற்கே இந்த பூமி தாங்காதே, பதினொரு சிவன்கள் ஆடினால் பூவுலகிற்கு அழிவுதான்''  என்று உணர்ந்த விஷ்ணு, சிவனின் முன்னால் தோன்றி பரமபத நாதனாகக் காட்சி அளித்தார்.
மனசாந்தி அடைந்த சிவன், விஷ்ணுவின் பல ரூபங்களைக் காண விருப்பம் கொண்டு தன் ஆசையை வெளியிட, விஷ்ணு பதினொரு, வேறு வேறு உருவங்களில் காட்சி அளிக்க, அந்த சம்பவம் நடந்தேறிய திருநாங்கூரிலேயே இந்தந்த உருவங்களுக்கான கோயில்கள் ஏற்பட்டன. பின்பு அவைகளே திவ்விய தேசங்கள் ஆயின'' என்றார். தொலைவில் டமர, டமர, டம் என்று சத்தம் கேட்க, அனைவரும் ஒரு எதிர்பார்ப்போடு எழுந்து நின்றோம்.
தொடரும்...

http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/sep/16/சிந்தை-கவர்ந்த-திருவிழாக்கள்---35-கனக்கும்-கருடனும்-கனக்காத-கருடனும்-3000905.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.