Jump to content

டி20 போட்டியில் ரஷித்கான் புதிய சாதனை


Recommended Posts

டி20 போட்டியில் ரஷித்கான் புதிய சாதனை

 

 
rasid%20kha

ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான் : கோப்புப்படம்   -  படம்: கெட்டி இமேஜஸ்

சர்வதேச டி20 போட்டிகளில் மிக விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையை ஆப்கானிஸ்தான் சுழற்பந்தவீச்சாளர் ரஷித்கான் பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்துவைத்த 220 நாட்களில் ஒருநாள் போட்டியிலும், டி20 போட்டியிலும் குறிப்பிட்ட சாதனைகளை ரஷித்கான் புரிந்துள்ளார்.

   
 
 

இதற்கு முன் 40 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகவிரைவாக 100 விக்கெட்டுகளைச் சாய்த்த வீரர் எனும் பெருமையை ரஷித்கான் பெற்று இருந்தார். இப்போது டி20 போட்டிகளிலும் மிகவிரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

டேராடூனில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்கள் வீசிய 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ரஷித்கான் அசத்தியபோது, டி20 போட்டியில் இந்த முத்திரையைப் பதித்தார்.

Rashid-Khan-ajpg
 

கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி லெக் ஸ்பின்னரான ரஷித்கான் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் அறிமுகமாகினார். அதன்பின் 31 போட்டிகளில் தனது 50-வது விக்கெட்டை வீழ்த்தி ரஷித்கான் சாதித்துள்ளார்.

இதற்கு முன் டி20போட்டிகளில் மிகவிரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையை இலங்கை வீரர் மென்டிஸ் வைத்துள்ளார். அவர் 26 போட்டிகளில் இந்த சாதனையைச் செய்தார். அதற்கு அடுத்து,  தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் 31 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார். அவருக்கு இணையாக இப்போது ரஷித்கான் 50 விக்கெட்டுகளை 31 போட்டிகளில் வீழ்த்தியுள்ளார்.

மேலும், 3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின்(35-வதுபோட்டி), பாகிஸ்தானின் உமர் குல்(36), சயித் அஜ்மல்(37) என முறையே 4-வது, 5-வது இடங்களில் உள்ளனர்.

07rashid2%201jpg
 

19வயதான ரஷித்கான் தனது கூக்ளி பந்துவீச்சு மூலம் எதிரணிகளை மிரட்டி வருவது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த ரஷித்கான் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

சன்ரைசர்ஸ் அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரஷித்கானின் பந்துவீச்சு முக்கியக் காரணம் என்று கூறமுடியும். சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டிகளில் பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக சன்ரைசர்ஸ் அணி திகழ்ந்ததற்கு ரஷித்கான், புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட சில வீரர்கள் இருந்தது முக்கியக் காரணமாகும்.

இதற்கு முன் ரஷித்கான் ஒருநாள் போட்டியில் தனது 100-வது விக்கெட்டை 44-வது போட்டிகளில் வீழ்த்தி, உலகிலேயே மிக விரைவாக 100-வது விக்கெட்டை வீழ்த்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். அதுமட்டுமல்லாமல் இந்த சாதனையைச் செய்த மிக இளம் வீரர் என்ற பெயரும் ரஷித்கானுக்கு உண்டு.

இதற்கு முன், மிட்ஷெல் ஸ்டார்க் 52 போட்டிகளிலும், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாக்லின் முஷ்டாக் 53 போட்டிகளிலும் 100-வது விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். மேலும்,ஆஸ்திரேலிய வீரர் ஷேன் பாண்ட்(54), பிரட் லீ (55) ஆகியோர் 4-வது, 5-வது இடங்களில் உள்ளனர்.

ரஷித்கான் ஒட்டுமொத்த(44ஒருநாள், 31 டி20) 75 போட்டிகளில் விளையாடி 152 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 100 ஒருநாள் விக்கெட், 52 டி20 விக்கெட் அடங்கும்.

http://tamil.thehindu.com/sports/article24077562.ece

Link to comment
Share on other sites

குண்டு வெடிப்பில் நண்பனை இழந்தேன்; ஓராண்டாக வீட்டுக்குச் செல்லவில்லை: ஆப்கான் நட்சத்திரம் ரஷீத் கான் உருக்கம்

 

 
rashid%20khan

ரஷீத் கான். | படம்: சந்தீப் சக்சேனா.

நம்பர் 1 டி20 பவுலரான ஆப்கான் கிரிக்கெட் அணியின் லெக்ஸ்பின்னர் ரஷீத் கான், டெஸ்ட் கிரிக்கெட், ஆப்கான் குண்டு வெடிப்புகள், நண்பனை இழந்தது என்று பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

“டெஸ்ட் கிரிக்கெட்டராக இருப்பது ஒருநாள், டி20யிலிருந்து அதிகம் வேறுபட்டதல்ல. எனக்குக் கிடைத்த 4 நாட்கள் போட்டி வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டேன். டெஸ்ட் கிரிக்கெட் என்று யோசித்து பந்து வீச்சை மாற்றினேன் அது எனக்கு நல்லதல்ல. நான் இப்போது என்ன வேகத்தில் வீசுகிறேனோ அப்படித்தான் டெஸ்ட் போட்டியிலும் வீசுவேன்.

 

பதற்றமடையக் கூடாது என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும், 20 ஓவர்கள் வீசியும் விக்கெட் விழாமல் கூட இருக்கும், பிறகு 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளைக் கூட வீழ்த்துவேன், இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் சாராம்சம்.

பொறுமைக்கு விடுக்கப்படும் சவாலாகும் டெஸ்ட் கிரிக்கெட், ஏன் விக்கெட்டுகளே கூட வீழ்த்த முடியாமல் போனாலும் போகும்.

நான் என் வீட்டுக்கு ஓராண்டாகச் செல்லவில்லை, என்னுடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் பெரிதும் இழக்கிறேன். ஆப்கானில் குண்டுவெடிப்புகள் என்று செய்திகள் என் காதுகளைத் துளைக்கின்றன. ஐபிஎல் ஆட்டத்தின் போது கூட என் ஊரில் குண்டு வெடிப்பு, எனக்கு கடும் ஏமாற்றமாக இருந்தது, அதில் என் நெருங்கிய நண்பரை இழந்தேன்.

என்னுடைய இன்னொரு நண்பர் அந்தப் போட்டிக்குப் பிறகு என்னிடம் தொடர்பு கொண்டு ஏன் சிரித்த முகத்துடன் இருக்கும் நீ அவ்வாறு இல்லை என்று வினவினார்.

ஆகவே இந்தச் சம்பவங்கள் என்னைப் பெரிதும் பாதிக்கின்றன. ஆனாலும் என் மனத்தை சரியான நிலையில் நிறுத்துகிறேன். என் ஆட்டத்தின் மூலம் என் நாட்டு ரசிகர்கள் இந்த பயங்கரக் காலக்கட்டத்திலும் கொஞ்சம் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்பதற்காகத்தான் ஆடுகிறேன்.

இவ்வளவு குறுகிய காலத்தில் என் வாழ்க்கையில் சாதனைகளை நிகழ்த்துவேன் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. இது கனவு போன்றதுதான்.

சச்சின் என்னைப் பாராட்டி ட்வீட் செய்தது மெய்சிலிர்க்க வைத்தது, அவருக்கு என்ன பதிலளிப்பது என்று மணிக்கணக்காக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

கடந்த 2 மாதங்கள் ஏன் கடந்த 2 ஆண்டுகள் கூட எனக்கு நல்லதாக உள்ளது. தேசிய அணியில் இணைந்ததால் எனக்கு சேர வேண்டிய வெற்றி எனக்குக் கிடைத்தது. இதில் எனக்கு மகிழ்ச்சியே. நான் ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆடுகிறேன் அதனால்தான் வெற்றி பெறுகிறேன்.

நிறைய அணிகளில் ஆடுகிறேன், உலகம் முழுதும் சுற்றுகிறேன், ஒரு தொழில்பூர்வ வீரராக இது கடினமே, ஆனால் பழகிக் கொள்ள வெண்டும். கடந்த சில ஆண்டுகளாக நிறைய பயணங்கள். தொடர்ந்து பயணங்கள் இறங்கியவுடன் கிரிக்கெட் போட்டிகள் என்றால் உடல் தகுதி அதற்கு உரியதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார் ரஷீத் கான்.

http://tamil.thehindu.com/sports/article24080841.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.