Jump to content

முஸ்­லிம்­களை நெருங்கும் ராஜ­பக்‌­ஷாக்கள்!


Recommended Posts

முஸ்­லிம்­களை நெருங்கும் ராஜ­பக்‌­ஷாக்கள்!

 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌ஷ, முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ உட்­பட ராஜ­பக்‌ஷ குடும்­பத்­தினர் அண்மைக் கால­மாக முஸ்லிம் சமூ­கத்­து­ட­னான தமது உறவை மீள்­பு­துப்­பிக்க ஆரம்­பித்­தி­ருப்­பதை பகி­ரங்­க­மா­கவே அவ­தா­னிக்க முடி­கி­றது.

முஸ்லிம் அமைப்­பு­களைச் சந்­தித்தல், முஸ்­லிம்­களின் பொது நிகழ்­வு­களில் பங்­கேற்றல், இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்­வு­களை நடத்­துதல் என பல வகை­களில் இந்த உறவு புதுப்­பித்தல் நிகழ்­வுகள் நடந்­தேறி வரு­கின்­றன.

கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ 'எளிய' அமைப்பை ஆரம்­பித்து 2020 ஆம் ஆண்டை நோக்­கிய தனது அர­சியல் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலை­யி­லேயே, அவர் முன்­னெப்­போ­து­மில்­லா­த­வாறு முஸ்­லிம்­க­ளுடன் அதிக நெருக்­கத்தைப் பேண ஆரம்­பித்­துள்ளார்.

இரு வாரங்­க­ளுக்கு முன்னர் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைமைக் காரி­யா­ல­யத்­துக்கு தானா­கவே கோரிக்­கை­ வி­டுத்து விஜயம் செய்த அவர், அதன் நிர்­வா­கி­க­ளுடன் முஸ்லிம் சமூக, சமய விவ­கா­ரங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

இதன்­போது "பௌத்த தேரர்­களில் சிலர் முஸ்­லிம்கள் மீது குரோத மனப்­பான்­மையைக் கொண்­டுள்­ளனர். அவர்கள் எப்­போதும் இன­வா­தத்­தையே பேசு­கி­றார்கள். முஸ்­லிம்கள் எப்­போதும் பெரும்­பான்மை மக்­க­ளுடன் சகோ­தர உற­வினை விரும்­பு­ப­வர்கள். உங்­க­ளுக்கு பௌத்த தேரர்­க­ளுடன் நெருங்­கிய தொடர்­புகள் உள்­ளன. எனவே, நீங்கள் பௌத்த தேரர்கள் சிலர் முஸ்­லிம்கள் மீது கொண்­டுள்ள குரோத மனப்­பான்­மையை களை­வ­தற்கு உதவ வேண்டும்" என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி கோத்­தபாய ராஜபக் ஷவிடம் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தார். இதற்கு பதி­ல­ளித்த அவர், “முஸ்­லிம்கள், பொது­ப­ல­சே­னாவை இயக்­கி­யவன் நான் என்றும் அந்த அமைப்பின் ஆத­ர­வாளன் நான் என்றும் தவ­றான கருத்­தைக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். அந்த அமைப்­புக்கும் எனக்கும் தொடர்­புகள் இருக்­க­வில்லை. பொது­ப­ல­சேனா அமைப்பு காலியில் தனது அலு­வ­ல­க­மொன்றின் திறப்பு விழா­வுக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தது. அத­னாலே நான் அந்­நிகழ்வில் கலந்து கொண்டேன். முஸ்லிம் சமூ­கத்­திடம் என்னைப் பற்றி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தப்பபிப்­பி­ரா­யங்கள் நீக்­கப்­பட வேண்டும் என நான் விரும்­பு­கிறேன்” என தெரி­வித்­தி­ருந்தார்.

இப் பின்­ன­ணி­யி­லேயே கடந்த வாரம் பேரு­வ­ளையில் நடை­பெற்ற இப்தார் நிகழ்­விலும் கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்­டி­ருந்தார். இந்­நி­கழ்வில் அவர் முஸ்­லிம்கள் தொடர்பில் தெரி­வித்த கருத்­துக்கள் இன்­றைய நாட்­களில் கவ­னக்­கு­விப்பைப் பெற்­றுள்­ளன.

“மஹிந்த ராஜ­பக் ஷவுக்கு அப்­போது முஸ்லிம் மக்­களின் முழு­மை­யான ஆத­ரவு இருந்­தது. எனினும் தேசிய மற்றும் சர்­வ­தேச சக்தி­களின் மூல­மாக பொய்­யான கருத்­துக்­களை உரு­வாக்கி எம்­மிடம் இருந்து முஸ்லிம் மக்­களை வேறு­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனினும் முஸ்லிம் மக்­களை பாது­காக்க நாம் விரை­வான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தோம். இரா­ணு­வத்தை பயன்­ப­டுத்தி குழப்­ப­கர சூழலை கட்­டுப்­ப­டுத்தி முஸ்லிம் மக்­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தோம்” எனக் குறிப்­பிட்ட அவர், “இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும் ராஜ­பக் ஷ ஆட்­சியில் அச்­சத்தில் வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்க நான் இட­ம­ளிக்­க­மாட்டேன். இந்த வாக்­கு­று­தியை நான் வழங்­கு­கின்றேன். முஸ்லிம் தலை­மைகள், மத தலை­வர்கள் ஆகிய பல­ருடன் இன்றும் நாம் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். முஸ்லிம் மக்­களின் மனங்­களில் உள்ள அச்சம் என்ன என்­பதை அறிந்து அவற்றை நீக்கும் வேலைத்­திட்டம் ஒன்­றினை முன்­னெ­டுப்­பது குறித்து கலந்­து­ரை­யாடி வரு­கின்றோம்” என்றும் தெரி­வித்­தி­ருந்தார்.

இதே­போன்று, சில வாரங்­க­ளுக்கு முன்னர் கோத்­த­பாய ராஜ­பக்‌­ஷ­வுக்கு மிக­நெ­ருக்­க­மான முஸ்­லிம்கள் சில­ரது ஏற்­பாட்டில் கொழும்பில் கலந்­து­ரை­யாடல் ஒன்றும் நடத்­தப்­பட்­டது. இதில் முஸ்லிம் சமூ­கத்தின் சம­காலப் பிரச்­சி­னைகள், புதிய தலை­மைத்­துவ சபை ஒன்றை உரு­வாக்­குதல் தொடர்­பான பல விட­யங்கள் ஆரா­யப்­பட்­டுள்­ளன. இதே குழு­வினர் அடுத்த வாரம் கொழும்பில் இப்தார் நிகழ்­வொன்றை ஏற்­பாடு செய்­துள்­ள­தா­கவும் இதில் கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ பிர­தம அதி­தியாகக் கலந்து கொள்­ள­வுள்­ள­தா­கவும் பிந்திக் கிடைத்த தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

கோத்­த­பா­யவின் முஸ்லிம் சமூ­கத்தை இலக்கு வைத்த நகர்­வுகள் இவ்­வா­றி­ருக்க முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌­ஷவும் முஸ்லிம் விவ­கா­ரங்­களில் அக்­கறை காட்டத் தொடங்­கி­யுள்ளார். சில மாதங்­க­ளுக்கு முன்னர் தனது முஸ்லிம் விவ­கார இணைப்புச் செய­லாளர் ஒரு­வரை நிய­மித்­துள்ள மஹிந்த, முஸ்­லிம்­களில் தன்­னுடன் இணைந்து செயற்­ப­டக்­கூ­டி­ய­வர்­களை அடை­யாளம் கண்டு அவர்­க­ளு­ட­னான உற­வு­க­ளையும் பலப்­ப­டுத்தி வரு­கிறார். குறிப்­பாக மஹிந்த ராஜ­பக்‌­ஷ­வு­ட­னான முஸ்லிம் வர்த்­த­கர்கள் பலர் தொடர்ந்தும் நல்ல உறவைப் பேணி வரு­கின்­றனர். இந்­நி­லையில், மஹிந்த ஏற்­பாடு செய்­தி­ருந்த இப்தார் நிகழ்வு நேற்று முன்­தினம் கொழும்பு விஜே­ராம மாவத்­தையில் அமைந்­துள்ள அவ­ரது உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் இடம்­பெற்­றது. இதில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான ஏ.எச்.எம்.பௌஸி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தமை கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

அத்­துடன் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ், பஷீர் சேகு­தாவுத், எம்.ரி.ஹச­னலி ஆகி­யோரும் இதில் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இவர்­க­ளி­டையே மஹிந்­தவின் இல்­லத்தில் மு.கா. தலைவர் ஹக்­கீமின் பிர­சன்­னமே அதிக கவ­ன­யீர்ப்பை பெற்­றி­ருந்­தது.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தின் பின்னர் ரவூப் ஹக்கீம், மஹிந்த ராஜ­பக்‌­ஷவை சந்­தித்த முதல் சந்­தர்ப்­ப­மாக இது கரு­தப்­ப­டு­கி­றது. மஹிந்த அர­சாங்­கத்தை கடு­மை­யாக விமர்­சித்நு வந்த ஹஸன் அலியும் குறித்த இப்தார் நிகழ்வில் பங்­கு­பற்­றி­யி­ருந்தார்.

மேற்­படி நிகழ்­வுகள் எல்லாம் முஸ்­லிம்கள் தொடர்பில் ராஜ­பக்‌­ஷாக்­க­ளி­டமும் ராஜ­பக்‌­ஷாக்கள் தொடர்பில் முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் ஒரு மன­மாற்றம் வந்­துள்­ள­தையே சுட்­டி­நிற்­கின்­றன.

கடந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் பெறு­பே­றுகள் மஹிந்த தரப்­புக்கு சாத­க­மாக அமைந்­த­மையும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களில் ஏற்­பட்­டுள்ள குழப்ப நிலை­களும் முஸ்­லிம்­களை மஹிந்த தரப்பு தொடர்பில் சிந்­திக்­கத்­தூண்­டி­யுள்­ளது எனலாம். 2020 இல் ராஜ­பக்‌­ஷாக்­களில் ஒரு­வரே இந்த நாட்டின் தலை­வ­ராக வரு­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன என முஸ்­லிம்­களில் ஒரு­சாரார் நம்­பு­கின்­றனர். இந்த நம்­பிக்­கையை நாடி­பி­டித்­துப்­பார்த்­ததன் பல­னா­கவே தற்­போது மஹிந்த, கோத்­த­பாய ஆகியோர் முஸ்­லிம்­க­ளுடன் நெருங்கிச் செயற்­படத் தொடங்­கி­யுள்­ளனர்.

இந்த இடத்தில் கடந்த கால ஆட்­சியில் ராஜ­பக்‌ஷ தரப்­பி­ன­ருக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டை­யி­லான உறவு தொடர்பில் மீட்­டு­வதும் பொருத்­த­மா­ன­தாகும்.

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பௌத்த இன­வாத சக்­தி­களின் தாக்­கு­தல்கள் மேலெ­ழுந்த சமயம், நாட்டின் பாது­காப்பு தொடர்­பான முழு­மை­யான அதி­கா­ரத்­தையும் தன்­வசம் கொண்­டி­ருந்த கோத்­த­பாய ராஜ

­பக் ஷ அவற்றைத் தடுத்து நிறுத்த காத்­தி­ர­மான முயற்­சி­களை முன்­னெ­டுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு அவர் மீது முஸ்­லிம்கள் தரப்பில் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. இது நியா­ய­மா­ன­து­மாகும். இதன் கார­ண­மா­கவே அவர் சார்ந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தை தோற்­க­டிப்­பதில் முஸ்­லிம்கள் பெரு­மெ­டுப்பில் முன்­னின்று வாக்­க­ளித்­தனர்.

மஹிந்த ராஜ­பக்‌ஷ நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யா­க­வி­ருந்த போதிலும் கூட தனது ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற சுமார் 350 க்கும் மேற்­பட்ட சம்­ப­வங்­களைக் கட்­டுப்­ப­டுத்த காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. இதுவே முஸ்­லிம்கள் கடந்த தேர்­தலில் மஹிந்­தவை எதிர்த்­த­மைக்கு பிர­தான கார­ண­மாகும்.

இருந்­த­போ­திலும் கோத்­த­பாய ராஜ­­பக்‌ஷ பேரு­வளை இப்தார் நிகழ்வில் தெரி­வித்த கருத்­தா­னது, தான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கும்­பட்­சத்தில் முஸ்­லிம்­களின் ஆத­ரவு அவ­சியம் என்­பதை உணர்ந்­ததன் வெளிப்­பா­டா­கவே பார்க்­கப்­பட முடியும்.

முஸ்­லிம்­களின் ஆத­ர­வின்றி தனித்து பௌத்த பெரும்­பான்மை மக்­களின் வாக்­கு­களால் ஆட்­சி­ய­மைக்க முடியும் என்ற நிலைப்­பாட்டில் இருந்­த­வர்கள், இன்று முஸ்­லிம்­க­ளையும் அர­வ­ணைத்துச் செல்­வதன் மூல­மா­கத்தான் இந்த நாட்டில் நிலை­யான ஆட்­சி­யொன்றை அமைக்க முடியும் என்­பதை உணர்ந்­தி­ருக்­கி­றார்கள் எனின் அதுவே கடந்த தேர்தல்களில் முஸ்லிம்கள் எடுத்த நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும்.

ராஜபக்‌­ஷாக்கள் மோசமானவர்கள், நல்லாட்சியினர் நல்லவர்கள் என்று சொல்ல முடியாதளவுக்கு இரு சாராரினதும் ஆட்சிக்காலங்களில் முஸ்லிம்கள் மிகக் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் இலங்கையின் கட்சி அரசியல் கலாசாரம் மற்றும் தேர்தல் முறைமைகளுக்கிணங்க முஸ்லிம்கள் இதில் ஏதேனுமொரு சக்தியை ஆதரித்தேயாகவேண்டிய நிலையுள்ளது. எனினும் நாட்டுக்கு தலைமை வகிக்க இவர்களில் யார் பொருத்தமானவர்கள் என்ற தீர்மானத்தை முஸ்லிம் சமூகம் எடுப்பதற்கு இன்னமும் காலம் இருக்கின்றது.

எனினும் முஸ்லிம்கள் கடந்த தேர்தலைப் போன்று ராஜபக்‌ஷ தரப்பு வேட்பாளரை முற்றாக எதிர்த்து நிற்கமாட்டார்கள் என்பதை மாத்திரம் இப்போதைக்கு குறிப்பிட்டுச் சொல்ல முடியும். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-02#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.