Jump to content

இரண்டு வாரங்களில் புதிய கட்சி: வடக்கு முதல்வரின் முக்கிய முடிவு?


Recommended Posts

இரண்டு வாரங்களில் புதிய கட்சி: வடக்கு முதல்வரின் முக்கிய முடிவு?

 

cv-vigneswaran_0.jpg

 

வடக்குமான முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இரண்டு வாரங்களில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக செயற்பட்டு வரும் அவர் அடுத்த மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் புலம்பெயர் அரசியல் கட்சி ஒன்றினை எதிர்வரும் 2 வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்தகாலங்களில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சி அல்லது முன்னணி ஒன்றை ஆரம்பித்தால், அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வரக் கூடிய சாத்தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாகத் தேர்தலில் நிற்கலாம் என விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

ஆனால் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்சினைகள் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும் புதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்கின்றார்கள். அதற்குரிய காலம் கனிந்து விட்டதோ நான் அறியேன். என அவர் முன்னர் தெரிவித்திருந்தார்.

ஆனால் தமிழ் மக்களை பிரித்து எமது இனத்தை அழிப்பதற்கும், எமது ஒற்றுமையைச் சீர் குலைக்கவும் பல சக்திகள் முயன்று கொண்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமனற உறுப்பினர் சிவமோகன் நேற்று தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமன்றி இவ்வாறு தமிழ் மக்களை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டால் பிரபாகரனை காட்டிக்கொடுத்த கருணாவை போல வடக்கை காட்டி கொடுத்தவர் விக்னேஸ்வரனாக இருப்பார் எனவும் கூறியிருந்தார்.

இவ்வாறு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலர், விக்னேஸ்வரன் கட்சியை ஆரம்பிப்பது தொடர்பில் முரணான கருத்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் எவ்வித கருத்துக்களும் தெரிவிக்காமல் இருப்பதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

எது எப்படியாயினும் விக்னேஸ்வரன் கட்சி ஆரம்பித்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இருக்கும் மக்களின் செல்வாக்கு குறைவடையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட முதலமைச்சர், அக்கட்சியை பாதிக்கின்ற வகையில் செயற்பட மாட்டேன் என கடந்த காலங்களில் தெரிவித்துவந்தாலும் கூட இரு தலைவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றால் இந்த முடிவு மாற்றமடையக் கூடும் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/?p=682188-இரண்டு-வாரங்களில்-புதிய-கட்சி:-வடக்கு-முதல்வரின்-முக்கிய-முடிவு?

Link to comment
Share on other sites

1 hour ago, நவீனன் said:

ஆனால் தமிழ் மக்களை பிரித்து எமது இனத்தை அழிப்பதற்கும், எமது ஒற்றுமையைச் சீர் குலைக்கவும் பல சக்திகள் முயன்று கொண்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமனற உறுப்பினர் சிவமோகன் நேற்று தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமன்றி இவ்வாறு தமிழ் மக்களை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டால் பிரபாகரனை காட்டிக்கொடுத்த கருணாவை போல வடக்கை காட்டி கொடுத்தவர் விக்னேஸ்வரனாக இருப்பார் எனவும் கூறியிருந்தார்.

சிவமோகன் போன்ற எட்டப்பர்களுக்கு வால்பிடிக்கும் கும்பலிடம் இதைப் போன்ற கருத்துக்களையே எதிர்பார்க்க முடியும்! 

1 hour ago, நவீனன் said:

வடக்குமான முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இரண்டு வாரங்களில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எப்போது சம்மந்தன், சுமந்திரன், மாவை கும்பல் தமிழின விரோத அரசியலில், தமிழின படுகொலைகாரர்களை பாதுகாக்கும் ஈனச் செயல்களில்  ஈடுபட ஆரம்பித்ததோ அன்றிலிருந்தே புதிய கட்சி ஒன்றின் தேவையை தமிழ் மக்கள் சிந்திக்க தொடங்கியிருந்தனர்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் முயற்சி மிகவும் தாமதமானது என்றாலும் தமிழர்களின் சுயகௌரவத்துக்கும் அரசியல் ஈடேற்றத்துக்கும் இதைவிட வேறுவழியில்லை!

இதற்கான உறுப்பினர்களை தெரிவுசெய்யும் போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவும் கவனமாக நல்லதொரு குழுவை அமைத்து செயற்பட வேண்டும். பட்டப்படிப்பு உள்ளவர்கள் என்ற போர்வையில் சத்தியமூர்த்தி, டெனிஸ்வரன் போன்ற கயவர்கள் உள்நுழையாமல் கவனமெடுக்கவேண்டும். பட்டபடிப்பில்லாத திறமையாளர்களும் உள்ளனர். இன்றும் கௌரவமாக வாழ்ந்துவரும் அனுபவமுடைய சில போராளிகளையும் உள்வாங்குவது சிறப்பானது. விலை போகமுடியாத, இணைந்து செயற்படும் பக்குவமுடைய  பலவித அறிஞர்களை உள் வாங்குவதும் அவசியம்.

சொந்த, பந்தங்களுக்கு இடம்கொடுக்கும் பேர்வழிகளை தவிர்க்க வேண்டும்.  

சுரேஷ் பிரேமச்சந்திரன்,நிமலன் கார்த்திகேயன், மனோகணேசன்  ...  போன்ற சுயநலவாதிகள் சொற்களை நம்பாமல் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் வித்தியாதரன், ஆனந்தசங்கரி, .... போன்ற கைக்கூலிகளை, அவர்களின் முகவர்களை,  அருகில் நெருக்கவே விடக்கூடாது.

கூல் கும்பல் போன்ற எட்டப்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

பக்குவமான இளைஞர்கள் சிலரையும் உள்வாங்க வேண்டும்! பிச்சைக்கார பட்டதாரிகளை தூரவைப்பது நலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் புதிய கட்சி துவங்கி வாக்குகள் பிளவுபட்டு சிங்களக் கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் பெறக்கூடிய வாய்ப்புக்களை உருவாக்காமல் ஏற்கனவே உருவாக்கப்பட்டு கொள்கைப் பிடிப்புடன் இயங்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதே வாய்ப்பானது .சுரேஸ் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆனந்த சங்கரியுடன் கூட்டு வைத்து சொதப்பின மாதிரி இருக்கக்கூடாது.

Link to comment
Share on other sites

On 6/3/2018 at 10:32 PM, புலவர் said:

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதே வாய்ப்பானது .

விக்னேஸ்வரன் அவர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற சுயநல அரசியல்வாதிகளின் கீழ் செயற்படுவதுவும், சம்-சும் குழுவுடன் செயற்படுவதுவும் ஓன்று தான்.

முடிவெடுக்கும், வழிநடத்தும் பங்கெடுப்பில்லா ஒரு கூட்டணி விக்னேஸ்வரன் அவர்களின் திறமையை தற்போதுள்ள நிலை போலவே 70% க்கு மேல் கட்டிப்போட்டுவிடும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும்  மேலும்  எம்மவரிடையே  பிரிவுகளும் பிளவுகளும்

கட்சிகளும்  தேவையற்றது  மட்டுமல்ல

எமது  பலத்தை  பாதிக்கும்

அத்துடன்  மற்றவர்களின்  (தமிழர்  விரோத  போக்குடையவர்கள் மற்றும் தேசியக்கட்சிகளின்)

பலத்தை  அதிகரிப்பதினூடாக எமது கோரிக்கைகளை  வலுவற்றதாக்கும்

எனவே  கூடிப்பேசி  எல்லோரும் ஒரு  முடிவுக்கு  வருவதே  சிறந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதவிக்கும் பணத்திற்கும் புகழுக்கும் ஏங்கித்தவிக்கும் அரசியல்வாதிகள் எப்படிக் கூடிப்பேசி முடிவு எடுப்பார்கள்.
ஏமாறும் மக்கள் இருக்கும்வரை அவர்கள் ஏமாற்றிக்கொண்டேயிருப்பார்கள்.
தெளிவாகவேண்டியவர்கள் மக்கள் மட்டுமே
அதுவரை அவர்களின் தலையில் அவர்களே மண் தூவிக்கொண்டிருப்பார்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
    • அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதுவும் ஆதவன் இதை தூக்கி, தூக்கி அல்லவா அடித்திருக்க வேண்டும். சுபாஷ் கவனத்துக்கு - லைக்காவில் நல்ல சம்பளத்தில் PR Director வேலை இருந்தால் - நான் தயார்🤣. தமிழ் யுடியூப் - அவர்கள் எங்கே சுயமாக செய்தி சேகரிக்கிறார்கள்- ஹைகோர்ட்டுக்கு எப்படி போவது என்பதே தெரிந்திருக்காது. எவனாவது செய்திபோடுவான் - அதை பற்றி ஒரு பத்து நிமிடம் விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு, பின் வாங்குகிறார்கள், பாண் வாங்குகிறார்கள் என கமெரா முன் வந்து வாயால் வடை மட்டும் சுடுவார்கள். முன்பு நிலாந்தன், அரூஸ், ரிசி, திருநாவுகரசர் பேப்பரிலும், ரமேஷ் வவுனியன், நிராஜ் டேவிட் ரேடியோவிலும் சுட்ட அதே வடைதான். இப்போ யூடியூப்பில். இவர்கள் புலம்பெயர் தமிழர் இயலுமை பற்றி  சுட்ட வடைகளை அவர்கள் நம்ப, அவர்கள் பற்றி இவர்கள் சுட்ட வடையை புலம்பெயர் தமிழர் நம்ப - இப்படி உருவான ஒரு மாய வலை - 2000 பின்னான அழிவுக்கு பெரும் காரணமானது. அத்தனை அழிவுக்கு பின்னும் இவர்கள் வடை வியாபார மட்டும் நிற்கவே இல்லை. வடைகளை வாங்க வாடிக்கையாளர் இருக்கும் போது, யூடியூப் காசும் தரும் போது - அவர்கள் ஏன் விடப்போகிறார்கள். நான் இப்போ யூடியூப்பில் தமிழ் வீடியோ என்றால் - மீன் வெட்டும் வீடியோத்தான். ஒரு சாம்பிள். நான் ஸ்பீட் செல்வம்னா ரசிகன். ஆனாலும் உங்க அளவுக்கு Artificial intelligence   இல்லை Sir.
    • இன்றைய கால கட்டங்களிலும் இப்படியான நம்பிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயம் ..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.