Jump to content

தூற்றினாலும் பரவாயில்லை, இந்திய கால்பந்துக்கு ஆதரவு தாருங்கள்: கேப்டன் சுனில் உருக்கம்


Recommended Posts

தூற்றினாலும் பரவாயில்லை, இந்திய கால்பந்துக்கு ஆதரவு தாருங்கள்: கேப்டன் சுனில் உருக்கம்

 

 
Sunil_Chhetri

 

நீங்கள் தூற்றினாலும் பரவாயில்லை. தயவு செய்து களத்துக்கு வந்து இந்திய கால்பந்துக்கு ஆதரவு தாருங்கள் என இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமான கோரிக்கையை முன்வைத்தார்.

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட விடியோவில் பேசியதாவது:

இதுவரை மைதானத்துக்கு வராமல் இருக்கும் ரசிகர்களாகிய உங்களுக்காக தான் இந்த விடியோ பதிவை வெளியிடுகிறேன். நீங்கள் கால்பந்து விளையாட்டை நேசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தயவு செய்து நேரில் வந்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள். ஏனென்றால் உலகளவில் நாங்களும் சிறந்த அணிதான் மற்றும் தாய்நாட்டுக்காக விளையாடுகிறோம் என்பதே அதற்கு இரு முக்கிய காரணங்களாகும். நீங்கள் ஒருமுறை மைதானத்துக்கு வந்துவிட்டால், நிச்சயம் வீடு திரும்புபம்போது அதே மனநிலையில் இருக்க மாட்டீர்கள் என வாக்குறுதி அளிக்கிறேன். 

உங்களில் சிலர் ஐரோப்பிய காலபந்து லீக் அணிகளின் ஆதரவாளர்களாக இருக்கலாம். அதேநிலை இங்கு இல்லை என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும் உங்கள் நேரத்தை வீணடிக்கும் விதமாக நாங்கள் நிச்சயம் செயல்பட மாட்டோம். இங்கு இந்திய கால்பந்தின் மீது நம்பிக்கை இழந்த உங்கள் அனைவருக்கும் கூட இதே கோரிக்கையை முன்வைக்கிறேன். தயவு செய்து மைதானத்துக்கு வருகை தந்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள்.

மைதானத்தில் வந்து எங்களை தூற்றுங்கள், விமர்சியுங்கள், கடுஞ்சொற்களால் கூட வஞ்சியுங்கள், ஆனால் ஒருநாள் உங்கள் மனம் மாறும், எங்களுக்காக நிச்சயம் ஆதரவு அளிப்பீர்கள். நீங்கள் எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கே தெரியாது. உங்களின் ஆதரவு எங்களுக்கு எத்தனை முக்கியம் என்பதையும் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். 

ஆகையால், தயவு செய்து இந்திய கால்பந்து ஆட்டங்களுக்கு தயவு செய்து மைதானத்துக்கு நேரில் வந்து ஆதரவளியுங்கள். வீட்டிலும், அலுவலகத்திலும், பொது இடத்திலும் இந்திய கால்பந்து குறித்து விவாதியுங்கள். இந்திய கால்பந்துக்கு நீங்கள் அனைவரும் தேவை என்று உணர்வுப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். 

http://www.dinamani.com/sports/sports-news/2018/jun/03/abuse-us-criticise-us-but-please-come-watch-indian-team-play-sunil-chhetri-appeals-to-football-fans-2932448.html

Link to comment
Share on other sites

‘ரசிகர்களே, கால்பந்துக்கும் ஆதரவு தாருங்கள்’- சுனில் சேத்ரிக்கு விராட் கோலி ஆதரவு

 

 
virat11

விராட் கோலி, சுனில் சேத்ரி : கோப்புப்படம்

இந்திய கால்பந்து அணிக்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமாக ரசிகர்களிடம் பேசியதற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து அணிக்கு மக்களும்,ரசிகர்களும் ஆதரவு அளிக்க வேண்டும், இப்போது ரசிகர்களுக்குப் பிடிக்காவிட்டாலும், ஒருநாள் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் இந்திய கால்பந்து மாறும், களத்துக்கு வந்து ஆதரவு தாருங்கள் என்று இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டர் மூலம் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 
 

இந்த வீடியோவைப் பார்த்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

virat11111jpg

விராட் கோலி

இது தொடர்பாக விராட் கோலி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

''என்னுடைய நல்ல நண்பரும், கால்பந்து அணியின் கேப்டனுமான சுனில் சேத்ரியின் வேண்டுகோளையும், கோரிக்கையையும் ரசிகர்கள் அனைவரும் கவனியுங்கள். கால்பந்துப் போட்டிக்கு ஆதரவு கொடுங்கள். அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். நான் கால்பந்துப் போட்டிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துவிட்டேன்.

என் ரசிகர்கள் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். இந்தியாவை உலகத்தின் சிறந்த விளையாட்டு தேசமாக உருவாக்க நினைத்தால் கிரிக்கெட் என்ற ஒரு விளையாட்டுக்கு மட்டும் ரசிகர்கள் முழுமையாக ஆதரவு அளிப்பது சரியன்று, அனைத்துப் போட்டிகளுக்கும் ரசிகர்கள் சமமான ஆதரவை அளிக்கவேண்டும். முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.''

இவ்வாறு விராட் கோலி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, மிகச்சிறந்த வீரர், ஐரோப்பிய வீரர்களுக்கு இணையாக விளையாடும் திறமை பெற்றவர். சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிகமான கோல் அடித்தவர்கள் வரிசையில் 59 கோல்கள் அடித்து சுனில் சேத்ரி 3-வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் சுனித் சேத்ரிக்கு முன்பாக, முதல் இரு இடங்களிலும் அர்ஜென்டீனா வீரர் லியோனல் மெஸ்ஸியும், போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மட்டுமே இருக்கின்றனர் என்பது எத்தனை இந்திய ரசிகர்களுக்குத் தெரியும் என்பது வியப்புதான்.

அமெரிக்க கால்பந்துவீரர் கிளிண்ட் டெம்ப்சே, ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா ஆகியோரின் கோல் சாதனைகளை எல்லாம் சுனில் சேத்ரி முறியடித்துள்ளார். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக இந்திய கால்பந்து அணி சர்வதேச தர வரிசையில் 97-வது இடத்தில் உள்ளது.

http://tamil.thehindu.com/sports/article24072016.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

சுனில் சேத்ரியின் வேண்டுகோளை ஏற்று அரங்கத்தில் திரண்டு நெகிழவைத்த ரசிகர்கள் -கால்பந்துப் போட்டிக்குக் கிடைத்த உற்சாக வரவேற்பு!

 
 
 

மும்பையில் இந்தியா, சீன தைபே, கென்யா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் இன்டர்கான்ட்டினென்டல் கோப்பைக்கான தொடர் நடைபெற்றுவருகிறது. ஜூன் 1-ம் தேதி நடைபெற்ற போட்டியில், இந்தியா சீன தைபே அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது. இந்நிலையில் நேற்று, இந்தியா - கென்யா அணிகள் மோதின. இது, கேப்டன் சுனில் சேத்ரிக்கு 100-வது போட்டியாகும்

சுனில் சேத்ரி

 

Photo: Twitter/IndianFootballTeam

 கடந்த சனிக்கிழமை, இந்திய கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், ”ரசிகர்கள் கால்பந்து விளையாட்டைக் காண மைதானம் வரவேண்டும். இணையத்தில் விமர்சித்தது போதும். மைதானம் வந்து முகத்துக்கு நேரே விமர்சனம் செய்யுங்கள். உங்கள் ஆதரவு எங்களுக்கு முக்கியம்” என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இவரது வீடியோவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, சச்சின் உள்ளிட்ட பல பிரபலங்களும் ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். 

ரசிகர்கள்

இந்நிலையில் நேற்று, மும்பை மைதானத்தில் போட்டி நடைபெற்றது. இது, சுனில் சேத்ரி இந்திய அணிக்காக விளையாடும் 100-வது போட்டியாகும். இதனால், போட்டி தொடங்கும்போது இந்திய வீரர்கள் இருபுறமும் நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். போட்டியைக் காண முன்னாள் கேப்டன் பாய்சங் பூட்டியா, விஜயன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். அவர்கள், ’சேத்ரி 100’ என்ற டி-ஷர்ட் அணிந்து வந்திருந்தனர். போட்டி தொடங்கும் முன், சுனில் சேத்ரிக்கு 100 போட்டியில் விளையாடியதற்காக சிறப்பு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.  இந்தப் போட்டியில், இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தியது. 2 கோல் அடித்து போட்டி நாயகனாக ஜொலித்தார் கேப்டன் சுனில் சேத்ரி.

சுனில் சேத்ரி

Photo: Twitter/IndianFootballTeam

சுனில் சேத்ரியின் ட்விட்டர் கோரிக்கைக்கு பலத்த வரவேற்பு இருந்ததை மைதானம் முழுவதும் பார்க்க முடிந்தது. மைதானத்தின் பெரும்பாலான பகுதிகள் ரசிகர்களால் நிரம்பிவழிந்தன. மும்பை மட்டுமல்லாது, டெல்லி, கொல்கத்தா போன்ற பல பகுதிகளிலும் இருந்தும் ரசிகர்கள் மைதானத்துக்கு வந்திருந்தனர்.  அவர்கள் பெரும்பாலும், சுனில் சேத்ரியின் வீடியோ பதிவு நெகிழ வைத்ததாகவும், அதற்காகப் போட்டியைக் காண வந்ததாகவும் தெரிவித்தனர். வீரர்கள், பேருந்தில் மைதானத்துக்கு வந்தது முதல் ரசிகர்கள் அவர்களை வரவேற்று உற்சாகம் அளித்தனர். இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு இந்தமுறை கால்பந்து விளையாட்டுக்குக் கிடைத்தது. டிக்கெட் வாங்குவதற்கு மைதானத்தின் முன் நீண்ட வரிசையும் காணப்பட்டது. 

அபிஷேக் பச்சன்

Photo: Twitter/IndianFootballTeam

நிகுன்ஞ் லோட்டியா என்பவர் மைதானத்தின் 4 -வது ஸ்டாண்ட் முழுவதிலும் உள்ள 1000 டிக்கெட்டுகளையும் தனி ஆளாக வாங்கி மைதானத்துக்குப் பலரை அழைத்துவந்தார். இவர், சுனில் சேத்ரியின் வீடியோ பதிவுக்குப் பின்னர்தான் இந்த டிக்கெட்டுகளை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஆதித்தியா, ”சுனில் சேத்ரியின் கோரிக்கையை ஏற்று இத்தனை பேர் மைதானத்துக்கு வந்ததில் மகிழ்ச்சி. இது வெறும் தொடக்கம்தான். இந்திய கால்பந்து அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் மைதானங்களை நிரப்புவோம். அவர்கள் நமக்காக இதயபூர்வமாக விளையாடுகிறார்கள். நம்மால் முடிந்தது, அங்கு அவர்களுடன் இருப்பது” என்றார். 

flag100_08289.png

போட்டி தொடங்கும் முன் பேசிய கேப்டன் சுனில் சேத்ரி, “நான் பேசியதுக்கு இத்தனை வரவேற்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. நாட்டுக்காக விளையாடும்போது, ரசிகர்கள் ஒவ்வொருவரின் ஆதரவு மிக முக்கியம்” என்றார். இதுவரை 100 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி, 61 கோல்கள் அடித்து இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார். உலக அளவில் தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடிக்கொண்டிருப்பவர்களில் சுனில் சேத்ரி 3-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் போர்ச்சுகளின் ரெனால்டோவும்(81) மற்றும் இரண்டாவது இடத்தில் அர்ஜெண்டினாவின் மெஸ்சியும்(64) உள்ளனர். 

Perfect ending to a memorable night! #Chhetri100 #INDvKEN #BackTheBlue #IndianFootball #InquilabEIndianFootball @IndianFootball @fni @chetrisunil11 pic.twitter.com/ngOnjy4OKK

 
— Blue Pilgrims (@BluePilgrims) June 4, 2018

https://www.vikatan.com/news/sports/126822-football-fans-gave-great-response-in-mumbai-football-match-against-kenya.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.