Jump to content

தமிழ்நதியின் 'மாயக்குதிரை'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நதியின் 'மாயக்குதிரை'

மிழ்நதியின் ‘மாயக்குதிரை’யில் பத்துக் கதைகள் இருக்கின்றன. இந்தத் தொகுப்பிலிருக்கும் கதைகள் அனைத்தையும் ஏற்கனவே அவை வெளிவந்த காலங்களில் வாசித்திருந்தாலும், இன்னொருமுறை தொகுப்பாக வாசித்தபோதும் அலுப்பில்லாது இருந்ததற்கு, தமிழ்நதியின் கதைகளுக்குள் இருக்கும் கவித்துவமான ஒரு நடை காரணமாயிருக்கக் கூடும். இதிலிருப்பவற்றில் முக்கிய கதைகளாக ‘நித்திலாவின் புத்தகங்கள்’, ‘மாயக்குதிரை’ மற்றும் ‘மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை’ என்பவற்றைச் சொல்வேன்.

‘தாழம்பூ’வும், ‘தோற்றப்பிழை’யும் நூற்றாண்டுகள் தாண்டிய கதையைச் சொல்வதில் ஒரே நேர்கோட்டில் வைத்து வாசிக்கப்படவேண்டியவை. பெண்களான தாழம்பூவும், ஆயியும் வரலாற்றுச் சம்பவங்களிலிருந்து முளைத்துவருகின்றார்கள். காலத்தின் தடங்களிலிருந்து இன்னமும் அழிந்துவிடாது, யாருடடையதோ தொடர்ச்சியாக அவர்கள் இருக்கின்றார்கள். ஒருவகையில் பார்த்தால் அவர்களினூடாக பெண்களின் துயரங்களும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும் இன்னமும் முடிவடையவில்லை எனவும் கூட வாசிக்கலாம்.

‘மாயக்குதிரை’யில் வரும் பெண் கஸினோவிற்குள் தன்னைத் தாரை வார்த்துக்கொடுப்பதைப் போல, ‘கடன்’ கதையில் வரும் ஆண், பிறருக்காய்க் கடன் வாங்கிக்கொடுப்பதால் தன் வாழ்வைச் சீரழிக்கின்றான். ‘கடன்’ கதை ஒரு நல்ல கதையாக ஆகமுடியாமைக்கு, அவன் கடனாளியாவதற்குக் காரணமாக இருந்த தன் தங்கையின் கணவனையோ அல்லது வன்கூவருக்கு தப்பிச் சென்ற தங்கையையோ அறையாமல், தனக்கு அறாவட்டியில் கடன் தந்த தன் நண்பனை மட்டும் அறைவதில் முடிவதும் ஒரு காரணமாக இருக்கின்றது.

புலம்பெயர் வாழ்வில் ஒட்டமுடியாமைக்குப் பலருக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அதன் பாதகமான ஒருபகுதியை மட்டும் புலம்பெயர் வாழ்வாக தமிழ்நதி சித்தரிக்கும்போது ஒருவகையில் சிக்கல் வருகின்றது. ‘கறுப்பன் என்றொரு பூக்குட்டி’யிலும், ‘மெத்தப் பெரிய உபகாரத்திலும்’ வரும் புலம்பெயர்ந்தவர்கள் தமது பெற்றோரில் அன்பைக் காட்டுவதைவிட, சொத்தில் மீது அபரிதமான ஆசை வைத்திருப்பவர்களாக வருகின்றார்கள். அதேபோல தமிழ்நதியின் அநேக புலம்பெயர் பாத்திரங்கள், தாம் இழந்துவந்துவிட்ட தாய் நிலத்தை மட்டுமே சொர்க்கமாகப் பார்க்கின்றன.
 

11.jpg

ஒருவகையில் தமிழ்நதியின் கதைகளை பொதுவாக வாசிக்கும்போது புலம்பெயர் வாழ்வு ஒரு திணிக்கப்பட்டுவிட்ட துயரம் என்கின்றதொரு சித்திரம் மட்டுமே எஞ்சுகின்றது. இதைச் சுயவிமர்சனத்திற்குட்படுத்த தமிழ்நதி முயலவேண்டும். இத்தொகுப்பில் தொடக்கத்தில் தமிழ்நதி கனடா-தமிழகம்-ஈழம்  என்கின்ற பல்வேறு நிலப்பரப்புக்களில் வாழ்கின்றார் என்ற ஒரு குறிப்பு வருகின்றது. தமிழ்நதி கனடாவிற்கு வராது, இலங்கையில் மட்டும் வாழ்ந்திருந்தால் இவ்வாறு அவர் விரும்பிய நிலப்பரப்புக்களுக்குச் சென்று வாழும் ஒரு 'வசதி'யான வாழ்வு அவருக்குக் கிடைத்திருக்காது என்பதை அவர் நினைத்துப் பார்க்கவேண்டும். ஆகவே புலம்பெயர் வாழ்வானது துயரத்தை மட்டுந்தானா தந்திருக்கின்றதா என்பதை அவர் தன் கதைகளினூடாக  எழுதியோ/ மீள வாசித்தோ பார்க்கவேண்டும்.

த்தொகுப்பிலிருக்கும் ‘காத்திருப்பு’ கதை அது வெளிவந்த காலத்திலேயே சர்ச்சைக்குள்ளாகிய கதை. காணாமல் போகின்ற ஒரு மகனைத் தாய் தேடுவது அதன் பேசுபொருள். அவரது மகன் இராணுவத்தால் பிடிக்கப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாகி சிறையில் இருந்து வந்தபின், நேரடியாக இயக்கத்தில் சேர்ந்து மரணமடைந்திருக்கின்றார் என்பதைப் பல ஆண்டுகள் காத்திருப்பின் பின் ஒரு தற்செயலான நிகழ்வாய் அந்தத் தாய் அறிந்துகொள்கின்றார். நெடுங்காலத் தேடலிலிருந்த அந்தத் துயரைவிட தாயிற்கு, மகனுக்கு என்ன நிகழ்ந்ததென்று அறிந்த நிம்மதியில் நிறைவாகச் சாப்பிடத் தயாராகின்றார் என்பதாக அந்தக் கதை முடியும். இதுகுறித்த சர்ச்சைகளுக்கு தமிழ்நதியும் தனது தரப்பு விளக்கத்தை அளித்து வாசித்ததாகவும் நினைவு.

அந்தச் சர்ச்சையில் சொல்லப்பட்டதைவிட எனக்கு இந்தக் கதையோடு இருக்கும் சிக்கல் என்னவென்றால், இன்று காணாமல் போன பிள்ளைகளுக்காக/சகோதரர்களுக்காக/துணைகளுக்காக எத்தனையோ பெண்கள் வருடங்கள் தாண்டியும் போராட்டங்கள் செய்து கொண்டிருக்கையில் இவ்வாறான கதைகள் அதன் வீரியத்தை dilute செய்துவிடும் என்பதாகும். இந்தக் கதைபோல காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பிவந்து இயக்கத்தில் சேர்ந்து இறந்துபோனது என்பது விதிவிலக்கான ஒன்று. அரிதாகவே நடக்கக்கூடிய ஒன்று.

அத்தோடு இக்கதையிலிருக்கும் பலவீனம் என்னவென்றால் அந்த இளைஞர் 2001ல் இறப்பதாகச் சொல்லப்படுகின்றது. புலிகள் இயக்கத்தில் சேரும்போது சேருபவரின் விபரங்களைக் கட்டாயம் எடுப்பார்கள். அதுபோலவே அவர்கள் மரணமடையும்போதும் உரிய மரியாதையைக் கொடுப்பதுபோல, பெற்றோரிடம் விபரத்தை எப்பாடுபட்டேனும் தெரிவிப்பார்கள். இறப்பு இறுதிப்போர் நிகழும்போது நடக்கும் நிகழ்வல்ல. 2001ல் மரணம் நடந்த பின், சிலவருடங்கள் சமாதான உடன்படிக்கை வந்து, சற்று அமைதியாக வன்னிநிலம் இருந்தபோது புலிகள் அதைப் பெற்றோருக்கு அறிவிக்காமல் விடுவார்களென்று – கதையாக இருந்தபோதும்- நம்பமுடியாது இருக்கின்றது.

சிலருக்கு எழுதுவதற்குக் கதைகள் இருக்கும். ஆனால் எழுதும் முறையில் எங்களுக்குத் தலைவலியைக் கொண்டுவருவார்கள். வேறு சிலருக்கு எழுதும் மொழி வாய்த்தாலும், அவர்கள் திணிக்கும் அரசியல் சார்புகள் தொடர்ந்து வாசிக்க முடியாது எரிச்சலைக் கொண்டு வந்துவிடும். இன்னுஞ் சிலர் பாலியல்/உளவியல் கதைகள் எழுதுகின்றேன் என்று தொடங்கி, எங்களின் இரத்தத்தைக் கொதிநிலைக்கு ஏற்றிவிடுவார்கள்.

தமிழ்நதி தனக்கென்று வெளிப்படையான ஒரு அரசியல் சார்பு வைத்திருந்தாலும், அதைத் தாண்டியும் வாசிக்க தமிழ்நதியிற்கு வசமாக்கியிருந்த எழுத்து நடை எங்களை உந்தித் தள்ளுகின்றது. இத்தனை விமர்சனங்களையும் எதிர்கொண்டு நம் தமிழ்ச்சூழலில் தொடர்ந்து ஒருவர் இயங்குவது அவ்வளவு எளிதுமல்ல. அந்தவகையில் தமிழ்நதி பாராட்டுக்குரியவர். நாடகீயமான பாவனைகளை அவ்வப்போது தன் எழுத்துக்களிலும் தன்னைப்பற்றியும் உருவாக்குவதிலிருந்தும் அவர் சற்று வெளியே வரவேண்டும் என ஒரு வாசகராக –வேண்டுமானால்- அவருக்குச் சொல்லிக்கொள்ளலாம்.

அண்மையில் வெளிவந்து உதிரிகளாக வாசித்துக்கொண்ட எத்தனையோ கதைகளை விட – ஒருகாலத்தில் நன்றாக எழுதியவர்கள் என்று நினைத்துக்கொண்டவர்களின் கதைகள் உட்பட- மாயக்குதிரையில் இருக்கும் கதைகள் பல தன்னளவில் மேலுயர்ந்தே நிற்கின்றன. அந்தவகையிலும் ‘மாயக்குதிரை’ தொகுப்பு அண்மையில் வந்தவற்றில் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு தொகுப்பாகும்.
........................

(நன்றி: 'அம்ருதா' - சித்திரை/2018)

 

http://djthamilan.blogspot.com/2018/05/blog-post_31.html?m=1

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வாசித்து விட்டிர்களா கிருபன்?....எனக்கும் ஒரு பிரதி வேண்டி வையுங்கோ ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

நீங்கள் வாசித்து விட்டிர்களா கிருபன்?....எனக்கும் ஒரு பிரதி வேண்டி வையுங்கோ ?

 

போன வாரம்தான் பெளசரிடம் இருந்து ஒரு பிரதியை வாங்கியிருந்தேன்? பத்துக் கதைகளில் அநேகமானவை அவரது தளத்தில் இருப்பதால் முன்னரே வாசித்துவிட்டேன். எனினும் மீள்வாசிப்புக்கு என்று வாங்கியுள்ளேன். குணா கவியழகவினின் கர்ப்பநிலமும் கூடவே வாங்கியிருக்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎3‎/‎2018 at 1:40 AM, கிருபன் said:

போன வாரம்தான் பெளசரிடம் இருந்து ஒரு பிரதியை வாங்கியிருந்தேன்? பத்துக் கதைகளில் அநேகமானவை அவரது தளத்தில் இருப்பதால் முன்னரே வாசித்துவிட்டேன். எனினும் மீள்வாசிப்புக்கு என்று வாங்கியுள்ளேன். குணா கவியழகவினின் கர்ப்பநிலமும் கூடவே வாங்கியிருக்கின்றேன்.

 

இங்கே லண்டனில் இப்படியான நூல்களை அவர் மட்டுமா விக்கிறார்?...வேறு எங்காலும் வாங்கேலுமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

இங்கே லண்டனில் இப்படியான நூல்களை அவர் மட்டுமா விக்கிறார்?...வேறு எங்காலும் வாங்கேலுமா?

 

 வேறு எங்காவது வாங்கமுடியுமா என்று தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள கிழக்கு போன்ற ஒன்லைன் புத்தகக்கடைகளில் வாங்கலாம். அதுவும் ஒரே விலையாகத்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 வேறு எங்காவது வாங்கமுடியுமா என்று தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள கிழக்கு போன்ற ஒன்லைன் புத்தகக்கடைகளில் வாங்கலாம். அதுவும் ஒரே விலையாகத்தான் இருக்கும்.

நன்றி கிருபன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.