Jump to content

சபாஷ் நாயுடு முதல் களவாணி-2 வரை: சுவாரசிய திரைத் துளிகள்


Recommended Posts

சபாஷ் நாயுடு முதல் களவாணி-2 வரை: சுவாரசிய திரைத் துளிகள்

முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்.

வேதிகா நடிக்கும் பாலிவுட் படம்

வேதிகா

தமிழில் வெளியான முனி, சக்கரக்கட்டி, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வேதிகா. தமிழை தவிர தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் தற்போது தென்னிந்திய சினிமாக்களில் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் வேதிகா, பாலிவுட் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வேதிகா

த்ரிஷ்யம் படம் மூலம் பிரபலமான மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப், தன் முதல் இந்தி படத்தில் வேதிகாவை ஹீரோயினாக்கியுள்ளார். 2012ல் ஸ்பேனிஷ் மொழியில் வெளியான தி பாடி படத்தின் ரீமேக்காக உருவாகவிருக்கும் அந்த படத்தில் இம்ரான் ஹஷ்மி ஹீரோவாக நடிக்கிறார்.

Presentational grey line

55 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கார்த்திக்

கடைக்குட்டி, சிங்கம் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகும் படம் தேவ். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்குகிறார். ஆக்‌ஷன், காமெடி, அட்வெஞ்சர் கலந்து உருவாகும் இந்த படத்திற்கு பட்ஜெட் 55 கோடி ரூபாய். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.

ரகுல்படத்தின் காப்புரிமைTWITTER/KARTHI_OFFL

ஆக்‌ஷன் படம் என்பதால் விறுவிறுப்பானக் கார் சேசிங்க் காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கி வருகின்றனர். அதேபோல் பாடல்காட்சிகளையும் படமாக்குகின்றனர். இதை முடித்த கையோடு அடுத்தடுத்தக் கட்ட சூட்டிங்கை சென்னை, இமயமலை, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் படமாக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான இடங்கள் தேர்வும் நடந்துமுடிந்துள்ளது.

ரகுல்படத்தின் காப்புரிமைTWITTER/RAKULPREET

தேவ் படத்தில் கார்த்தியை தவிர ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யாக் கிருஷ்ணன், ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நவரச நாயகன் கார்த்தியும் நடிக்கிறார்.

Presentational grey line

ஓவியா - விமல் - சற்குணம்

விமல் - இயக்குநர் சற்குணம் கூட்டணியில் 2010ம் ஆண்டு வெளியான படம் களவாணி. கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் ஓவியா ஹீரோயினாக அறிமுகமானார். கமர்ஷியல் விஷயங்களோடு 1 அரை கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட களவாணி படம் 8 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதற்குபின் சற்குணம் இயக்கிய வாகை சூடவா, நையாண்டி, சண்டிவீரன் ஆகிய படங்கள் வியாபார ரீதியில் வெற்றியடையவில்லை. ஆனால் வாகை சூடவா படம் சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான தேசிய விருதை வென்றது. இந்த நிலையில் சற்குணம் தன்னுடைய முதல் படமான களவாணி படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். விமல்  நடிக்கும் இந்த படத்தில் மீண்டும் ஓவியாவையே ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தனர்.

ஓவியாபடத்தின் காப்புரிமைTWITTER/OVIYAASWEETZ

முதலில் விமல் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிய சற்குணம் தற்போது ஓவியா காட்சிகளை படமாக்கிவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Presentational grey line

மீண்டும் தனுஷ் அனிருத்

தனுஷ் - அனிருத் கூட்டணியில் வெளியான 3, மாரி, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. அதேபோல் பின்னணி இசையையும் சிறாப்பாக உருவாக்கியிருந்தனர். இதனால் தனுஷ் அனிருத் கூட்டணி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

தனுஷ்படத்தின் காப்புரிமைTWITTER.COM/DHANUSHKRAJA

இதற்கு பின்பு தனுஷ், சந்தோஷ் நாரயாணன் மற்றும் ஷேன் ரோல்டனோடும் (Sean Roldan), அனிருத் மற்ற இயக்குனர்களோடும் பயணித்தனர். இருந்தாலும் தனுஷ் அனிருத் கூட்டணி போல் எதுவும் அமையவில்லை. இந்த நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தின் மூன்றாவது பாகத்திற்கு தனுஷ் அனிருத் ஆகியோர் மீண்டும் இணையவுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதை உறுதிபடுத்தும் வகையில் அனிருத் சமீபத்தில் அடுத்த ஆண்டு தனுஷோடு இணையவுள்ளேன் என்று கூறியுள்ளார். இதனால் தனுஷ் - அனிருத் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Presentational grey line

கவுதம் கார்த்திக் - மஞ்சிமா:

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தொடர்ந்து தேவராட்டம் படத்தில் நடிக்கிறார் கவுதம் கார்த்திக். கொம்பன் மருது உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்குகிறார். இதற்கான பூஜை சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் தற்போது படத்துக்கான ஹீரோயினை அறிவித்துள்ளனர். கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமான மஞ்சிமா மோகனை தேவராட்டம் படத்திற்கு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மஞ்சிமாபடத்தின் காப்புரிமைTWITTER/MOHAN_MANJIMA

அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு மஞ்சிமா மோகன் நடித்த சத்ரியன், இப்படை வெல்லும் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இதனால் அவருக்கான வாய்ப்பு குறைந்து படங்கள் இல்லாமல் உள்ளார். இந்த நிலையில் தேவராட்டம் திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Presentational grey line

சபாஷ் நாயுடு

கமல்ஹாசன் நடித்து இயக்கும் படம் சபாஷ் நாயுடு. இந்த படத்தின் வேலைகள் 2016ல் தொடங்கியது. அமெரிக்காவில் முதல்கட்ட சூட்டிங்கை முடித்து சென்னை திரும்பிய கமல்ஹாசன், ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் தவறிவிழுந்தார். இதில் அவருக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது.

கமல்ஹாசன்படத்தின் காப்புரிமைTWITTER/IKAMALHAASAN

இதனால் ஓய்வில் இருந்த கமல்ஹாசன், தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கினார். இதனால் சபாஷ் நாயுடு படத்தின் வேலைகள் தொடங்காது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சபாஷ் நாயுடு வேலைகளை தொடங்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் தொடங்கும் என்று கூறப்படுக்கிறாது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் சபாஷ் நாயுடு படத்தை கமல்ஹாசன் உருவாக்குகிறார்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44344578

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.