Jump to content

அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வும்,நினைவுப் பேருரையும்…


Recommended Posts

அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வும்,நினைவுப் பேருரையும்…

IMG-20180602-WA0006.jpg?resize=800%2C600
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வும்,நினைவுப் பேருரையும் இன்று சனிக்கிழமை மாலை தென்மராட்சி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
 
வடக்கு மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் “ஈழத்தமிழ் அரசியல் செல் நெறியும், ஊடகங்களும் ஓர் சுய பரிசோதனை ” எனும் தொனிப் பொருளில் சிரேஸ்ட ஊடகவியலாளர் திரு.நடேசபிள்ளை வித்தியாதரன் நினைவுப் பேருரை ஆற்றியிருந்தார்.
 
மேலும் அஞ்சலி உரைகளை தமிழீழ விடுதலை இயக்க செயலாளர் நாயகம் ந.சிறீகாந்தா,வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
IMG-20180602-WA0012.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/81988/

Link to comment
Share on other sites

தலைவர் பிரபாகரனுக்கு இருந்த பெருந்தன்மை எந்தவொரு தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் கிடையாது!

 

 
Image

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இருந்த பெருந்தன்மை எந்தவொரு தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இன்றைக்கும் கிடையாது என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு தினமும் நினைவு பேருரையும் தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது, இந் நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலையே ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது..

விநாயகமூர்த்தியும் நானும் நீண்ட காலமாக ஒன்றாக இணைந்து பயணித்திருக்கின்றோம். அவருக்கும் எனக்கும் இடையில் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. அதில் எங்களுக்குள் இடம்பெற்ற ஒரு சம்பவம் குறித்து நான் இந்த இடத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

அதாவது இலங்கை படைகள் கடந்த 1990 ஆம் ஆண்டு இருந்ததைப் போன்று மீண்டும் முகாம்களுக்கு செல்ல வேண்டுமென அரசாங்கத்தை கோருவதற்கு தமிழ் தரப்புக்கள் தீர்மானிக்கின்றன. இதனை அன்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எனக்கு அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்த போது என் மனதில் வஞ்சகம் ஏதுமில்லாமல் அவ்வாறு நாம் கோரினால் அரச தரப்பினர் ஆனையிறவை தம்மிடமே மீள தர வேண்டுமெனக் கேட்கலாம் என்று நான் கூறியிருந்தேன். அப்போது எனக்கருகில் இரா.சம்மந்தனும் ,விநாயகமூர்த்தியுமே இருந்தனர்.

அவ்வாறு நான் கூறிய கருத்து கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்காணம் என சுழன்று வந்து திரிவுபடுத்தப்பட்டு ஆணந்த சங்கரி ஆணையிறவை அரச படைகளிடம் புலிகள் ஒப்படைக்க வேண்டுமெனக் கோருவதாக செய்திகள் பரவியிருந்தது.

ஆனால் அந்தக் கருத்தை நான் சொல்லவில்லை என்பதுடன் அப்போதைய அரச தரப்பினர்களிடம் ஆணையிறவை நீங்கள் இனி புலிகளிடமிருந்து பிடிப்பதென்பது பகல்க்கனவு என்றும் அதனை எந்தக் காலத்திலும. நீங்கள் பிடிக்க முடியாதென்றுமே குறிப்பிட்டிருந்தேன். அத்தோடு இனத்திற்காகவும் மண்ணுக்காகவும் எத்தனையோ இழப்புக்களையும், தியாகங்களையும் புலிகள் செய்திருந்ததையும் குறிப்பிட்டிருந்தேன்.

இவ்வாறான கருத்துக்களை தெரிவித்த நான் ஆணையிறவை கொடுக்க சொல்லி கேட்டிருப்பனா என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும். இருந்தும் நான் ஆணையிறவை கொடுக்க வேண்டுமெனக் கோரியதான செய்திகள் பரவி என்மீதான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் தன்னாலேயே இவ்வாறானதொரு நிலைமை வந்துவிட்டதாக கருதிய விநாயகமூர்த்தி என்னிடம் பேசுவதற்கு பலதடவைகள் முயற்சித்து ஒருக்கா என்னிடம் பேசியும் இருந்தார். அதன் போதுதான் இவ்வாறு எந்தக் கருத்தையும் எவருக்கும் சொல்லவில்லை என்று என்னிடம் கூறிய போது அதனை நானும் ஏற்றுக் கொண்டு அதனை நீங்கள் கூறவில்லை என்றும் எவ்வாறு அது திரிவுபடுத்தப்பட்டது என்று எனக்குத் தெரியும் என்றும் நான் விநாயகமூர்த்தியிடம் கூறியிருந்தேன்.

இவ்வாறானதொரு நிலையில் தம்பி பிரபாகரனுக்கும் இந்த விடயம் தெரிய வந்த போதும் அவரும் இதனை இலகுவில் நம்பவில்லை. அவ்வாறு அவர் எந்த சம்பவம் என்றாலும் அதனை ஆராய்ந்தே முடிவுகளை எடுக்கின்ற பண்பு அவரிடம் இருந்தது. அவ்வாறு அவருக்கு இருக்கின்ற பண்புகளோ, பெருந்தன்மைகளோ இன்றிருக்க கூடிய எந்தவொரு அரசியல் தலைமைகளுக்கும் கிடையாது. ஆனாலும் அன்று முதல் மலை உச்சியிலிருந்து உருட்டி விடப்பட்ட நான் இன்றுவரைக்கும் எழுந்திருக்கவே இல்லை.

அதற்கு விநாயகமூர்த்தி தான் காரணமென பலரும் நினைத்தனர். ஆனால் உண்மையில் அவர் காரணமல்ல. எவர் அதனை இவ்வாறு சொன்னவர் யார் என்று எனக்கு தெரியும். அதன் விளைவு தான் இன்று நடக்கிறது என்றார். இதேவேளை தமிழ் கட்சிகள் பலவும் இன்றைக்கு தேசியம் பேசுகின்றன. அதில் தேசியம் பேசுகின்ற அல்லது அந்த கொள்கையுடன் பயணிக்கின்ற கட்சிகள் எவை என்பதையும் பார்க்க வேண்டும். இன்றைக்கு கூட்டமைப்பில் இருக்கின்ற ரெலோ, புளொட் போன்ற கட்சிகள் அரசுடன் இருந்த அரச கட்சிகளாகவே பார்க்கப்பட்டன. அவர்களுடன் இன்று பலரும் தேசியம் பேசுகின்றவர்களாக இருக்கின்றனர்.

இதற்கு மேலதிகமாக தற்போதும் தேசியம் பேசுகின்ற கூட்டமைப்பினர் ஈபிடிபியுடனேயே ஒன்றாக சேர்ர்ந்து செயற்படும் நிலைக்கு வந்துள்ளீர்கள். ஆக இப்ப என்றாலும் உங்களுக்கு கொஞ்சமாவது தேசியம் இருக்கிறதா என்று எண்ண வேண்டும்.

ஈ.பீ.டி.பியுடனே சேர்ந்து செயற்படும் கூட்டமைப்பினரின் தேசியம் என்ற கொள்கை, கெளரவம் எல்லாம் எங்கே சென்று விட்டது. தமிழ்த் தேசியத்திற்காக உயிரிழந்த பொன்னம்பலம், சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் கட்டிக்காத்து வளர்த்த கெளரவம் எங்கே? இதுவா இன்று நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் கெளரவம் என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆகவே தற்போது எல்லோரையும் ஏமாற்றி வருகின்ற நீங்கள் எல்லோரையும் மீண்டும் கண்ணீர் விட்டு அழும் நிலைக்கு கொண்டு செல்லாதீர்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நான் கூறுவது எல்லாம் என்னுடைய வேதனையல்ல. அவை ஒவ்வொன்றும் இந்த மக்களின் வேதனைகள் தான்.

மேலும் எமது இளைய தலைமுறையினர் வரலாறுகளையும், உண்மைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். மக்களுக்காக செயற்பட முன்வந்தவர்கள் பணம் சேர்ப்பதும் பட்டம் பதவிகளைப் பெறுவதையுமே நோக்கமாக கொண்டிருக்காது மக்களுக்காக நீதியாகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டும் என ஆணந்தசங்கரி மேலும் தெரிவித்தார்.

http://www.ibctamil.com/politics/80/101459

Link to comment
Share on other sites

ஆனந்தசங்கரியின் பேரனே எம்.ஏ. சுமந்திரன்; அரசியல் ரீதியாக இவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லையாம்!

 

 
Image

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் பேரனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் என சிரேஸ்ர ஊடகவியிலாளர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.,

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் பேரனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எனத் தெரிவித்துள்ள சிரேஸ்ர ஊடகவியிலாளர் என்.வித்தியாதரன் சங்கரி சுமந்திரன் இருவருக்கும் இடையில் உறவு முறையில் தான் பிரச்சனை இருக்கின்றது. அதனால் தான் இருவரும் கதைப்பதில்லை, அரசியல் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை என உண்மையை போட்டுடைத்துள்ளார்.

கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நேற்றைய தினம் (01.06.2018) சாவகச்சேரியில் நடைபெற்ற போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

http://www.ibctamil.com/relationship/80/101456

Link to comment
Share on other sites

அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் நினைவுப் பேருரையும்

b5aa8ed46c64eb5ac312bb4e4042301e?s=48&d=

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் நினைவுப் பேருரையும் இன்றையதினம் சாவகச்சேரியில் அமைந்துள்ள கலாமன்ற கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் மாலை மூன்று மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில் அஞ்சலி உரைகளை சிரேஷ்ட சட்டத்தரணியும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான ந.ஸ்ரீகாந்தா, பாராளுமன்ற உறுப்பினர், இலங்கை தமிழரசு்கட்சித் தலைவர் மாவை.சேனாதிராசா, வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன், தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் ஆற்றினர்.

“ஈழத்தமிழர் அரசியல் செல்நெறியும் ஊடகங்களும் ஓர் சுய பரிசோதனை” என்ற தலைப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் நினைவுப்பேருரை ஆற்றினார்.

இந்த நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

4C0A0713.jpg4C0A0715.jpg4C0A0716.jpg4C0A0717.jpg4C0A0718.jpg4C0A0719.jpg4C0A0720.jpg4C0A0721.jpg4C0A0724.jpg4C0A0727.jpg4C0A0728.jpg4C0A0730.jpg4C0A0733.jpg4C0A0734.jpg4C0A0736.jpg4C0A0738.jpg4C0A0739.jpg4C0A0741.jpg4C0A0742.jpg4C0A0743.jpg4C0A0747.jpg4C0A0753.jpg4C0A0754.jpg4C0A0755.jpg4C0A0756.jpg4C0A0758.jpg4C0A0759.jpg4C0A0762.jpg4C0A0765.jpg4C0A0767.jpg4C0A0768.jpg4C0A0769.jpg4C0A0771.jpg4C0A0772.jpg4C0A0781.jpg4C0A0782.jpg4C0A0783.jpg4C0A0784.jpg4C0A0787.jpg

http://www.newsuthanthiran.com/2018/06/03/அமரர்-அப்பாத்துரை-விநாயக/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.