Jump to content

சினிமா விமர்சனம்: பரத் எனும் நான்


Recommended Posts

சினிமா விமர்சனம்: பரத் எனும் நான்

சினிமா விமர்சனம்: பரத் எனும் நான்
   
நடிகர்கள் மகேஷ் பாபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், சித்தாரா, கியாரா அத்வானி, ராஹுல் ராமகிருஷ்ணா
   
இசை தேவி ஸ்ரீ பிரசாத்
   
ஒளிப்பதிவு ரவி கே சந்திரன்
   
இயக்கம் கொரட்டல சிவா

’Bharat Ane Nenu’ என்ற தெலுங்குப் படத்தின் டப்பிங். தெலுங்கில் வெளியானபோது, விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம்.

மாநில முதல்வரான ராகவனின் (சரத்குமார்) மகன் பரத் (மகேஷ் பாபு) ஜாலியாக லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார். திடீரென ராகவன் இறந்துவிட நாடு திரும்புகிறான் பரத். ராகவனின் நெருங்கிய நண்பரும் அந்தக் கட்சியின் தலைவருமான வரதராஜன் (பிரகாஷ் ராஜ்), புதிய முதல்வராக பரத்தை பதவியேற்க வைக்கிறார். ஆனால், பதவியேற்ற பிறகு வரதராஜனின் பேச்சைக் கேட்காமல் செயல்பட ஆரம்பிக்கிறார். இதனால், கட்சியினரும் கோபமடைகின்றனர்.

சினிமா விமர்சனம்: பரத் எனும் நான்

ஆனால், பரத்தின் நடவடிக்கைகளால் மக்களின் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகுகிறது. ஒரு கட்டத்தில் அவர் காதலிக்கும் பெண்ணான வசுமதியை (கியாரா அத்வானி) வைத்து அவதூறு பரப்ப, முதல்வர் பதவியிலிருந்து விலகுகிறார் பரத். அதற்குப் பிறகு வரதராஜனே முதல்வராகி, பரத்தை ஒழித்துக்கட்ட முயல்கிறார். அப்போதுதான் தன் தந்தையைக் கொன்றதும் வரதராஜன் என்பது பரத்திற்கு புரிகிறது. வரதராஜனை என்ன செய்தார், மீண்டும் முதல்வரானாரா என்பது மீதிக் கதை.

அர்ஜுனை வைத்து ஷங்கர் இயக்கிய முதல்வன் பாணியில் உருவாக்கப்பட்ட படம். அந்தப் படத்தில் ஒரு நாளில் பல காரியங்களைச் செய்து மக்கள் முதல்வராவார் கதாநாயகன். இந்தப் படத்தில் ஐந்து மாதங்களில் அதைச் செய்கிறார் பரத். ஆனால், முதல்வன் படத்தில் இருந்த சுவாரஸ்யம் இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.

நாட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் ரொம்பவுமே மேம்போக்காக, மேல்தட்டுப் பார்வையில் பார்க்கிறது படம். அதிலும் சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து தவறுசெய்பவர்களாகவும் சட்டத்தை மீறுபவர்களாகவும் இருக்கிறார்கள். கார் ஓட்டுபவர்கள் ஒழுங்காக நடந்துகொள்கிறார்கள்; ஆனால் இருசக்கர வாகன ஓட்டிகளும் ஆட்டோக்காரர்களும் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. அதனால் சிக்னலை மீறுபவர்களுக்கு 20,000 ரூபாய் அபராதம் விதித்து, மாநிலத்தில் யாரும் விதிமீறலில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்கிறார்.

சினிமா விமர்சனம்: பரத் எனும் நான்

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதில்லை என்பதால் ஆங்கில வழி வகுப்புகளை ஆரம்பிக்கச் சொல்கிறார். விவசாயிகளுக்கு விவசாயம் செய்வது பற்றி அறிவுரை சொல்கிறார். பிறகு எல்லாப் பஞ்சாயத்துக்கும் வருடத்திற்கு ஐந்து கோடி ரூபாய் அளிப்பதன் மூலம் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வுகாண்கிறார். இப்படி போய்க்கொண்டே இருக்கிறது படம்.

படத்தின் முக்கியமான பிரச்சனை, முதலமைச்சராக இருக்கும் பரத்திற்கும் கட்சித் தலைவராக இருக்கும் வரதராஜனுக்கும் இடையிலான முரண் முற்றுவதும் எதிர்ப்பாக மாறுவதும் திரைக்கதையில் சரியாக வெளிப்படவில்லையென்பதுதான். தவிர, கதை ஆரம்பித்ததிலிருந்தே, இதுபோல பல காட்சிகளை மேலோட்டமாக வைத்திருப்பதால் படத்தோடு ஒட்டவே முடியவில்லை.

சினிமா விமர்சனம்: பரத் எனும் நான்

எம்எல்ஏவாக இல்லாமலேயே முதல்வராகிறார், பிறகு முதல்வர் பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண்ணைப் பார்த்து காதலிக்க ஆரம்பிக்கிறார், பிறகு அந்தப் பெண்ணுக்காக பதவியை ராஜினாமா செய்கிறார், பிறகு கடைசியில் மீண்டும் முதல்வராகிறார் என்று தலைசுற்ற வைக்கிறார்கள்.

முதல்வராக பதவியேற்று வாகன அணிவகுப்பில் அலுவலகத்திற்குச் செல்லும்போதே பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண்ணைப் பார்த்துக் காதலிக்கிறார். அந்தக் காதல் கடைசியில் என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இதெல்லாம் போக படத்தின் நீளம் இன்னொரு பெரிய பிரச்சனை. சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடுகிறது.

மகேஷ் பாபுவில் துவங்கி, எல்லோரும் வழக்கம்போல நடித்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ் வழக்கம்போல தனித்துத் தெரிகிறார். அவர் மட்டும் இல்லையென்றால் ரொம்பவுமே படம் சோதித்திருக்கும்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44331661

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.