Jump to content

சிங்கள வைத்தியர்கள், தாதிகள் யாழில் பணிபுரிவதற்கு என்ன காரணம்?


Recommended Posts

சிங்கள வைத்தியர்கள், தாதிகள் யாழில் பணிபுரிவதற்கு என்ன காரணம்?

 

 

 

தமிழ் பகுதிகளில் தமிழ்வைத்தியர்கள் தாதியர்களின் எண்ணிக்கை அருகிக்கொண்டு செல்கின்றது இதன் காரணமாக சிங்கள வைத்தியர்கள் தாதிகள் எங்கள் பகுதிகளிற்கு வரும் நிலை உருவாகியுள்ளது என வடக்கு மாகாண கல்வியமைச்சர் கலாநிதி க  சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

வடக்கு மாகாணசபையின் 2017 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கற்கோவளம் மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்....

ஒரு நாட்டினுடைய உயர்ச்சியையும் வீழ்ச்சியையும் தீர்மானிப்பதென்பது அந்த நாட்டின் மக்களுடைய அறிவு வலிமை. இந்த அறிவு வலிமையினுடைய அடித்தளம் பாடசாலை. அதனைக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். ஆகவே எங்களுடைய சமூகத்திலிருக்கும் ஆசிரியர்களின் முக்கியத்துவம் இரட்டிப்பாகும்.

எங்களுடைய ஆசிரியர்கள் பல விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன். எங்களுடைய மாணவர்கள் ஒவ்வொருவரையும் நீங்கள் வல்லுனர்களாக ஆக்கவேண்டும். அவ்வாறு அவர்களை வல்லுனர்களாக ஆக்கவேண்டுமாக இருந்தால் அவர்களுடைய ஆற்றல்களை ஆசிரியர்கள் அடையாளம் காணவேண்டும். அவர்களின் ஆற்றல்களை அடையாளம் கண்டு அவர்களை உச்சாகப்படுத்த வேண்டும்.

sarveswaran.jpg

 

  தற்போது உயர் தரத்தில் அதிக மாணவர்கள் கலை வர்த்தக பாடங்களையே தெரிவு செய்கின்றனர். வடக்கு மாகாணத்திலே 70 ஆம் 80 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலே தன்னுடைய தேவைக்கு மேலதிகமாக கல்வி நிர்வாக சேவையாளர்களையும்  சிவில் சேவையாளர்களையும் நீதி நிர்வாக சேவையாளர்களையும் உருவாக்கியிருந்தது.

 ஆனால் தற்போது அந்த நிலை மாறி எமது மாகாணத்தில் கடமையாற்றக்கூடிய  வல்லுனர்களை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றது.

எங்களுடைய வைத்தியசாலைகளிலே தமிழ் வைத்தியர்கள்,தமிழ் தாதியர்கள் அருகிக்கொண்டு செல்கிறார்கள். அதிகமாக சிங்கள வைத்தியர்களும்,சிங்கள தாதியர்களும் தென்னிலங்கையிலருந்து வந்து பணி செய்துகொண்டிருக்கின்றார்கள். ஆகவே எங்களுடைய மாணவர்கள் அதிகமாக விஞ்ஞானத்துறையை நோக்கி நகர வேண்டும். மாணவர்கள் விஞ்ஞானத்துறையை நோக்கி நகர வேண்டுமாக இருந்தால் ஆசிரியர்களினுடைய பங்களிப்பு மிக மிக அவசியமானது. ஆசிரியர்கள் மாணவர்களை ஆரம்பத்திலிருந்தே விஞ்ஞானத்துறை நோக்கி நகர்த்த வேண்டும்.

 

இவ்வாறு நாங்கள் செய்வோமாக இருந்தால் கண்டிப்பாக நாங்கள் எங்களுடைய ஒவ்வொரு மாணவர்களையும் வல்லுனர்களாக்க முடியும். எந்தவொரு மாணவனும் குறைந்தவனல்ல. எல்லா மாணவர்களிடத்திலும் ஏதாவது ஒரு ஆற்றல் ஒளிந்திருக்கிறது. அந்த ஆற்றல்களை அடையாளம் காணுகின்ற ஆற்றல் ஆசிரியர்களுக்குத்தேவை.

மாணவர்களுடைய ஆற்றலைக் கண்டுபிடித்து வளர்ப்போமாக இருந்தால் ஒவ்வொரு மாணவர்களும் ஏதாவது ஒரு துறையில் வல்லுனர்களாவார்கள். அவ்வாறு வல்லுநர்களாக மாறுகின்ற போது எங்ளைப்பொறுத்தவரை எங்களுடைய இனம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அறிவிலும் வலிமையிலும் அதிகமாக இருக்கவேண்டும்.

 அத்தகைய வலிமைமிக்க சமூகமாக எமது சமூகம் நிலைபேறானதாக இருக்கும். நிலைபேறான ஒரு சமூகமாக இருப்பதற்கு எங்களுடைய பரம்பரை இங்கு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு எங்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பொறுப்பிருக்கிறது. அந்தப்பொறுப்பு சாதாரணமானதல்ல. அந்த மிகப்பெரிய பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு ஆசிரியர்களும் மேலும் தங்களுடைய சேவைகளை அதிகமாக்கி செயற்படவேண்டும். என்றார்.

http://www.virakesari.lk/article/34282

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 போதியளவு  மருத்துவர்கள்,தாதிகள் எம்மிடம் இருக்கும்போதே வேற்று இனத்தவர் வந்தால்தான் தப்பு மற்றும்படி,

 வைத்தியர்கள் தாதிகளிற்கு இனம் மதம் தேவையில்லை, அவர்கள் தொகை அதிகரிப்பதினால் , எந்தவிதமான பாதிப்பும் ஏற்படபோவதில்லை  .

எந்த இனத்திலிருந்து மருத்துவர்கள் பணியாற்றினாலும் காப்பாற்றப்படபோவது தமிழ் உயிர்கள் மட்டுமே!

எமது மாணவர்கள் மருத்துவதுறையில் முன்னேறணும் என்று மட்டும் சொல்லுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்தவர்கள் எல்லாம் கொழும்பு, வெளிநாடு என்று ஓடினால் சிங்களவர்கள் தானே வந்து வேலை செய்ய வேண்டும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

படித்தவர்கள் எல்லாம் கொழும்பு, வெளிநாடு என்று ஓடினால் சிங்களவர்கள் தானே வந்து வேலை செய்ய வேண்டும் 
 

கொழும்பிலயும் இல்ல ஊரில் படிச்சு பாஸ் ஆகும் போது சொல்லி கொள்வது ஊருக்கு சேவையென்று பேந்து வெளிநாட்டில போய் படித்து விட்டு வரும் போது வெளிநாடு  பிடித்து விட அங்கேயே செட்டிலாகிவிடுவது :)

Link to comment
Share on other sites

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொழும்பிலயும் இல்ல ஊரில் படிச்சு பாஸ் ஆகும் போது சொல்லி கொள்வது ஊருக்கு சேவையென்று பேந்து வெளிநாட்டில போய் படித்து விட்டு வரும் போது வெளிநாடு  பிடித்து விட அங்கேயே செட்டிலாகிவிடுவது :)

இந்தியாவிலும் சீனாவிலும் ஏற்படும் பொருளாதார முனேற்றம் காரணமாக இந்தியர்களும் சீனர்களும் தம் நாடுகளுக்கு திரும்பி போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2018 at 8:22 PM, ரதி said:

படித்தவர்கள் எல்லாம் கொழும்பு, வெளிநாடு என்று ஓடினால் சிங்களவர்கள் தானே வந்து வேலை செய்ய வேண்டும் 
 

வடபகுதி விவசாயிகள் எங்கும் விட்டு ஓடவில்லை......

தாங்கள் செய்த விவசாய சாகுபடிகளை விற்க முடியாமல் விவசாயத்தையே விட்டு விட்டார்கள்.

காரணம் தேங்காய் முதற்கொண்டு செத்தல் மிளகாய் வரைக்கும் சிங்களவர்கள் மலிவு எனும் பெயரில் ஆக்கிரமித்து விட்டார்கள்.

15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொழும்பிலயும் இல்ல ஊரில் படிச்சு பாஸ் ஆகும் போது சொல்லி கொள்வது ஊருக்கு சேவையென்று பேந்து வெளிநாட்டில போய் படித்து விட்டு வரும் போது வெளிநாடு  பிடித்து விட அங்கேயே செட்டிலாகிவிடுவது :)

நாடும் அரசியலும் ஒழுங்காய் இருந்தால்  அவனவன் ஏன் வெளிநாட்டுக்கு ஓடுறான்? அவனுக்கென்ன விசரே? :cool:

அது சரி பாஸ்! தாங்கள் ஏன் மத்தியகிழக்கிற்கு போய் தவம் செய்தீர்கள்????? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

வடபகுதி விவசாயிகள் எங்கும் விட்டு ஓடவில்லை......

தாங்கள் செய்த விவசாய சாகுபடிகளை விற்க முடியாமல் விவசாயத்தையே விட்டு விட்டார்கள்.

காரணம் தேங்காய் முதற்கொண்டு செத்தல் மிளகாய் வரைக்கும் சிங்களவர்கள் மலிவு எனும் பெயரில் ஆக்கிரமித்து விட்டார்கள்.

 

தேங்காய் முதல் செத்தல் வரை எப்படி சிங்களவர்களால் மலிவு விலையில் விக்க முடியுது? 

 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

வடபகுதி விவசாயிகள் எங்கும் விட்டு ஓடவில்லை......

தாங்கள் செய்த விவசாய சாகுபடிகளை விற்க முடியாமல் விவசாயத்தையே விட்டு விட்டார்கள்.

காரணம் தேங்காய் முதற்கொண்டு செத்தல் மிளகாய் வரைக்கும் சிங்களவர்கள் மலிவு எனும் பெயரில் ஆக்கிரமித்து விட்டார்கள்.

நாடும் அரசியலும் ஒழுங்காய் இருந்தால்  அவனவன் ஏன் வெளிநாட்டுக்கு ஓடுறான்? அவனுக்கென்ன விசரே? :cool:

அது சரி பாஸ்! தாங்கள் ஏன் மத்தியகிழக்கிற்கு போய் தவம் செய்தீர்கள்????? :grin:

நாடு அரசியல் என்டுறதை விட்டுப்போட்டுப் விவசாயம் என்டு பாத்தால் எம் மக்களில் ஒரு குணம் என்ன என்டால் ஒரு சில காலம் காலமாக பயிரிடும் பயிர்களை விட்டு வெளியே வாறதில்லை.மற்றது எந்தப் போருளுக்கு நிகழ் காலத்தில விலை போகுதோ அதையே எல்லாரும் செயுறது.பின் அறுவடை செய்யும் போது அதன் விலை ஆதாள பாதாளத்திற்க்கு இறங்கி விடும்.உதாரனத்திற்ககு அண்மையில் அங்கு நான் நிக்கும் போது பச்சை புசனி கிலோ 80 ருபா போகுது என்டு எல்லாரும் ஓடுப்பட்டு அதையே பெரும் எடுப்பில செய்திசசினம்.இப்ப என்ன என்டால் கிலோ 20 க்கும் விக்க ஏலாமல் இருக்குதாம்.நிலையான விலையுள்ள எப்வும் தேவையுள்ள சில தானியங்கள் உள்ளன.மக்கள் அந்தப்பக்கமும் கவனம் செலுத்த வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

நாடும் அரசியலும் ஒழுங்காய் இருந்தால்  அவனவன் ஏன் வெளிநாட்டுக்கு ஓடுறான்? அவனுக்கென்ன விசரே? :cool:

அது சரி பாஸ்! தாங்கள் ஏன் மத்தியகிழக்கிற்கு போய் தவம் செய்தீர்கள்????? :grin:

ஆனால் நான் ஓடுன நான் செட்டில் ஆக வில்லை ஓடி வந்துட்டேன் நான் மைக்கில நாட்டுக்கும் எனது ஊர் மக்களுக்கும் சேவை செய்வேன் என அரசியல் வாதிகள் போலும் அதிகம் படிச்ச வைத்தியர் போலவும் பேட்டி கொடுக்கவும் இல்லை சாமி கிழக்கில் 2004 ம் ஆண்டு கிழக்கில் யாரை யார் பிடித்துப்போகிறார் என்று தெரியாது அந்த நிலையில் (க்டத்தல்) தான் நாங்கள் மத்திய கிழக்கு ஓடினோம் என்னால் முடிஞ்சது அந்த நாடுகள் மட்டுமே ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அடிக்கவில்லை அசைலம்  போன பின்பு சுனாமி அடித்து உடைமகளை இழந்து உயிர்களை இழந்த போது அங்கேயே இருக்க வேண்டிய சூழல் சூழ் நிலை 2010 மீண்டும் வந்து விட்டேன் அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.:grin::grin:

இலங்கையிலிருந்து ஓடுனவன் முன்பு சண்டை என்றான் பிறகு அரசியல் நிலை சரி இல்லை என்கிறான் இலங்கையில் அரசியல் நிலை சரிவரும் என்று நான் நினைக்கல நீங்கள் பத்திரமாக அங்கு இருக்கலாம்  :100_pray:

22 hours ago, Jude said:

இந்தியாவிலும் சீனாவிலும் ஏற்படும் பொருளாதார முனேற்றம் காரணமாக இந்தியர்களும் சீனர்களும் தம் நாடுகளுக்கு திரும்பி போகிறார்கள்.

நம்ம ஆழுகள் வெளிநாட்டுக்கு தாவிக்கொண்டிருக்கினும் ஆனால் இதை சொல்ல கூடாது பாருங்க  இப்ப முல்லைத்தீவில் புதுப்புது வாடிகள் வந்து விட்டது யாரு யாருட்ட போய் சொல்வது இப்படி இருக்கு நிலமை கடற்றொழிலினை பறித்துக்கொள்கிறார்கள் tw_unamused:

5 hours ago, ரதி said:

தேங்காய் முதல் செத்தல் வரை எப்படி சிங்களவர்களால் மலிவு விலையில் விக்க முடியுது? 

சிங்களவர்களுக்கு வரி இல்லை அதனால் அதை அதிகம் இறக்குமதி செய்து விற்கிறார்கள் என்று சொல்லுவம் :27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிங்களவர்களுக்கு வரி இல்லை அதனால் அதை அதிகம் இறக்குமதி செய்து விற்கிறார்கள் என்று சொல்லுவம் :27_sunglasses:

அப்படி இல்லை தனி தேங்காய் இப்பவும் சிங்களப் பகுதியில் இருந்து கிளிநொச்சி பளை போன்ற இடத்திற்க்கு வந்து தான் வாங்குறார்கள்.எமது யாழ் உறவகளுக்கு தாயத்தில் இருக்கும் அக்கறை அளவிற்க்கு தாயக நிலமை தெரிவதில்லை. இதுக்கெல்லாம் ரென்சன் படக்குடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

அப்படி இல்லை தனி தேங்காய் இப்பவும் சிங்களப் பகுதியில் இருந்து கிளிநொச்சி பளை போன்ற இடத்திற்க்கு வந்து தான் வாங்குறார்கள்.எமது யாழ் உறவகளுக்கு தாயத்தில் இருக்கும் அக்கறை அளவிற்க்கு தாயக நிலமை தெரிவதில்லை. இதுக்கெல்லாம் ரென்சன் படக்குடாது.

சந்தையிலை சொந்தக்காணி தேங்காய் வித்துக்கொண்டிருக்கேக்கை.....இடையிலை சிங்கள தேங்காய் லொறி வந்து அரைவிலை விக்கேக்கை ...அதாலை பாதிக்கப்பட்டு தவிச்சவனுக்குதான் அதின்ரை வேதனை தெரியும். 

Link to comment
Share on other sites

5 minutes ago, குமாரசாமி said:

சந்தையிலை சொந்தக்காணி தேங்காய் வித்துக்கொண்டிருக்கேக்கை.....இடையிலை சிங்கள தேங்காய் லொறி வந்து அரைவிலை விக்கேக்கை ...அதாலை பாதிக்கப்பட்டு தவிச்சவனுக்குதான் அதின்ரை வேதனை தெரியும். 

அறாவிலையில் அழுகின தேங்காயை வேறு வழியில்லாமல் வேதனயுடன் வாங்கி தின்ற சனத்துக்கு சிங்கள லொறியில் வந்த அரை விலை தேங்காய் பெரும் விடுதலையாக இருந்திருக்கும். சிங்களவர் வரத்தொடங்கின பிறகு சனத்துக்கு இப்படி தேங்காய் மாதிரி வேறு பல நன்மைகளும் கிடைச்சு இருக்கு. சிங்களவர் வர முடியாமல் இருந்த காலத்தில் இந்த காணி சொந்தகாரரும் கடைக்காரரும் சனத்தை போட்டு படுத்தின பாடு பெரும்பாடு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சுவைப்பிரியன் said:

நாடு அரசியல் என்டுறதை விட்டுப்போட்டுப் விவசாயம் என்டு பாத்தால் எம் மக்களில் ஒரு குணம் என்ன என்டால் ஒரு சில காலம் காலமாக பயிரிடும் பயிர்களை விட்டு வெளியே வாறதில்லை.மற்றது எந்தப் போருளுக்கு நிகழ் காலத்தில விலை போகுதோ அதையே எல்லாரும் செயுறது.பின் அறுவடை செய்யும் போது அதன் விலை ஆதாள பாதாளத்திற்க்கு இறங்கி விடும்.உதாரனத்திற்ககு அண்மையில் அங்கு நான் நிக்கும் போது பச்சை புசனி கிலோ 80 ருபா போகுது என்டு எல்லாரும் ஓடுப்பட்டு அதையே பெரும் எடுப்பில செய்திசசினம்.இப்ப என்ன என்டால் கிலோ 20 க்கும் விக்க ஏலாமல் இருக்குதாம்.நிலையான விலையுள்ள எப்வும் தேவையுள்ள சில தானியங்கள் உள்ளன.மக்கள் அந்தப்பக்கமும் கவனம் செலுத்த வேணும்.

நூற்றுக்கு நூறு வீதம் இயற்கையை நம்பி வாழும் பகுதி வடபகுதி. மாணிக்க கங்கையோ இல்லை மாபெரும் மகாவலியோ பாயாத பூமி அது......இவ்வளவு போர் பாதிப்புகள் இருந்தும் தலை நிமிர்ந்து நிற்கும் பூமி அது... பாரம்பரியத்தை மறக்காத பூமியென இன்று பலர் பாராட்டும் பூமி அது....
அங்கே...
கொட்டையில்லாத பயித்தங்காயும்....கொட்டையில்லாத பூசணிக்காயும்....கொட்டையில்லாத கத்தரிக்காயும் பயிரிட்டு அதன் மூலம்  நோய் எதிப்புச்சக்தியில்லாத மரக்கறிகளை சாப்பிட்டு சர்வதேச நோய்களை வரவேற்கின்றீர்கள்.
 

5 minutes ago, Jude said:

அறாவிலையில் அழுகின தேங்காயை வேறு வழியில்லாமல் வேதனயுடன் வாங்கி தின்ற சனத்துக்கு சிங்கள லொறியில் வந்த அரை விலை தேங்காய் பெரும் விடுதலையாக இருந்திருக்கும். சிங்களவர் வரத்தொடங்கின பிறகு சனத்துக்கு இப்படி தேங்காய் மாதிரி வேறு பல நன்மைகளும் கிடைச்சு இருக்கு. சிங்களவர் வர முடியாமல் இருந்த காலத்தில் இந்த காணி சொந்தகாரரும் கடைக்காரரும் சனத்தை போட்டு படுத்தின பாடு பெரும்பாடு.

 

அழுகின தேங்காய்க்கும் அழுகாத தேங்காய்க்கும் வித்தியாசம் தெரியாத சனத்தாலைதான் நாடு இப்பிடி உருக்குலைஞ்சு போச்சுது...

சிங்களவன் ஒல்லித்தேங்காயை வித்தாலும் ஒரு சில சனத்துக்கு அது  பொன் தேங்காய்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனால் நான் ஓடுன நான் செட்டில் ஆக வில்லை ஓடி வந்துட்டேன் நான் மைக்கில நாட்டுக்கும் எனது ஊர் மக்களுக்கும் சேவை செய்வேன் என அரசியல் வாதிகள் போலும் அதிகம் படிச்ச வைத்தியர் போலவும் பேட்டி கொடுக்கவும் இல்லை சாமி கிழக்கில் 2004 ம் ஆண்டு கிழக்கில் யாரை யார் பிடித்துப்போகிறார் என்று தெரியாது அந்த நிலையில் (க்டத்தல்) தான் நாங்கள் மத்திய கிழக்கு ஓடினோம் என்னால் முடிஞ்சது அந்த நாடுகள் மட்டுமே ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அடிக்கவில்லை அசைலம்  போன பின்பு சுனாமி அடித்து உடைமகளை இழந்து உயிர்களை இழந்த போது அங்கேயே இருக்க வேண்டிய சூழல் சூழ் நிலை 2010 மீண்டும் வந்து விட்டேன் அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.:grin::grin:

இலங்கையிலிருந்து ஓடுனவன் முன்பு சண்டை என்றான் பிறகு அரசியல் நிலை சரி இல்லை என்கிறான் இலங்கையில் அரசியல் நிலை சரிவரும் என்று நான் நினைக்கல நீங்கள் பத்திரமாக அங்கு இருக்கலாம்  :100_pray:

நீங்கள் ஓடின மைலை விட நாங்கள் கொஞ்சம் தூர ஓடீட்டம் எண்டது உண்மைதான்....எங்களுக்கு செட்டில் ஆக வசதி இருந்தது...உங்களுக்கு அந்த வசதி இல்லை...இருந்திருந்தால்.?????

அரசியல் விரோதமில்லாமல் மக்களுக்கும் நாட்டுக்கும் உதவி செய்வோம் என்றதினால்தான் பல வீடுகளில் அடுப்பும் விளக்கும் எரிகின்றது என்பதையிட்டு நான் பெருமிதம் அடைகின்றேன்.

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

நூற்றுக்கு நூறு வீதம் இயற்கையை நம்பி வாழும் பகுதி வடபகுதி. மாணிக்க கங்கையோ இல்லை மாபெரும் மகாவலியோ பாயாத பூமி அது......

ம் ... நீர்வளம் இல்லை, ஆனால் விவசாயத்தை நம்பி வாழ்க்கை - முட்டாள்தனமாக தெரியவில்லையா?

சிங்கப்பூரில் உப்பற்ற குடிநீர் இல்லை. மலேசியாவில் இருந்து குடிநீரை வாங்கி தாமும் பயன்படுத்தி, மேலதிகமாக நீரை வடிகட்டி போத்தலில் அடைத்து மலேசியாவுக்கே திருப்பி விற்று இலாபமும் சம்பாதிக்கிறார்கள்.  இத்தனைக்கும் மலேசியாவில் இருந்து இன மேலாதிக்கம் காரணமாக பிரிந்து உருவான நாடு சிங்கபூர்.

3 hours ago, குமாரசாமி said:

இவ்வளவு போர் பாதிப்புகள் இருந்தும் தலை நிமிர்ந்து நிற்கும் பூமி அது... 

வெளிநாட்டு காசில் தலை நிமிர்ந்து நிற்கிறது. உள்ளூர் உற்பத்தியில் தலை நிமிர்ந்து நின்றால் பெருமை படலாம். 

 

3 hours ago, குமாரசாமி said:

சிங்களவன் ஒல்லித்தேங்காயை வித்தாலும் ஒரு சில சனத்துக்கு அது  பொன் தேங்காய்...

அறாவிலைக்கு ஊரில் காணிக்காரர் விற்பதிலும் பார்க்க சமைக்க கூடிய தேங்காய் குறைவான விலைக்கு கிடைப்பது தான் மக்களுக்கு தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Jude said:

ம் ... நீர்வளம் இல்லை, ஆனால் விவசாயத்தை நம்பி வாழ்க்கை - முட்டாள்தனமாக தெரியவில்லையா?

சிங்கப்பூரில் உப்பற்ற குடிநீர் இல்லை. மலேசியாவில் இருந்து குடிநீரை வாங்கி தாமும் பயன்படுத்தி, மேலதிகமாக நீரை வடிகட்டி போத்தலில் அடைத்து மலேசியாவுக்கே திருப்பி விற்று இலாபமும் சம்பாதிக்கிறார்கள்.  இத்தனைக்கும் மலேசியாவில் இருந்து இன மேலாதிக்கம் காரணமாக பிரிந்து உருவான நாடு சிங்கபூர்.

 

'

விவசாயிகள் மழை நீரையே நம்பியிருக்க வேண்டியுள்ளதால் மூன்று  போகமும் விவசாயம்  செய்ய  நீராதாரம்  இல்லையென்பதை பற்றி நாங்கள் கதைத்தால் நீங்கள் குடிக்கவும் ........... கழுவவும் தண்ணீர் இறக்குமதி ஏற்றுமதி  பற்றி கதைக்கிறீர்களே??

காவிரியில் நீர் வரத்து இல்லாமையால் தமிழக விவசாயிகள் படும் அவஸ்தையை பார்க்கவில்லைபோலும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Jude said:

ம் ... நீர்வளம் இல்லை, ஆனால் விவசாயத்தை நம்பி வாழ்க்கை - முட்டாள்தனமாக தெரியவில்லையா?

சிங்கப்பூரில் உப்பற்ற குடிநீர் இல்லை. மலேசியாவில் இருந்து குடிநீரை வாங்கி தாமும் பயன்படுத்தி, மேலதிகமாக நீரை வடிகட்டி போத்தலில் அடைத்து மலேசியாவுக்கே திருப்பி விற்று இலாபமும் சம்பாதிக்கிறார்கள்.  இத்தனைக்கும் மலேசியாவில் இருந்து இன மேலாதிக்கம் காரணமாக பிரிந்து உருவான நாடு சிங்கபூர்.

வெளிநாட்டு காசில் தலை நிமிர்ந்து நிற்கிறது. உள்ளூர் உற்பத்தியில் தலை நிமிர்ந்து நின்றால் பெருமை படலாம். 

 

அறாவிலைக்கு ஊரில் காணிக்காரர் விற்பதிலும் பார்க்க சமைக்க கூடிய தேங்காய் குறைவான விலைக்கு கிடைப்பது தான் மக்களுக்கு தேவை.

மனிதன் விவசாயத்தை நம்பி வாழாமல் இரசாயன தொழிற்சாலைகளை நம்பியா வாழ்வது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

நீங்கள் ஓடின மைலை விட நாங்கள் கொஞ்சம் தூர ஓடீட்டம் எண்டது உண்மைதான்....எங்களுக்கு செட்டில் ஆக வசதி இருந்தது...உங்களுக்கு அந்த வசதி இல்லை...இருந்திருந்தால்.?????

அரசியல் விரோதமில்லாமல் மக்களுக்கும் நாட்டுக்கும் உதவி செய்வோம் என்றதினால்தான் பல வீடுகளில் அடுப்பும் விளக்கும் எரிகின்றது என்பதையிட்டு நான் பெருமிதம் அடைகின்றேன்.

அப்படி ஒரு வசது வந்தது 

ஹாஹா அப்படி அனுமதி தந்தும் உதறி விட்டு வந்தது எத்தனை வருடங்களுக்கு பாலைவனத்தில் பலியாகுவது என்று ( அரச விசா எந்த்தனை வருடங்களும் வேலை செய்யலாம் ஆனால் குடியுரிமை கொடுக்கப்பட மாட்டாது சம்பளமும் லட்சங்களை தாண்டி விடும் இறுதியில் பணம் மட்டும் மிஞ்சும் உறவும் மிஞ்சாது சந்தோசமும் மிஞ்சாது 6 வருடங்கள் அடி பணிந்தது போதும் என:104_point_left:

நீங்கள் பெருமிதம் அடைவதில் மிக்க மகிழ்ச்சி சாமி அண்ண:unsure:

19 hours ago, சுவைப்பிரியன் said:

அப்படி இல்லை தனி தேங்காய் இப்பவும் சிங்களப் பகுதியில் இருந்து கிளிநொச்சி பளை போன்ற இடத்திற்க்கு வந்து தான் வாங்குறார்கள்.எமது யாழ் உறவகளுக்கு தாயத்தில் இருக்கும் அக்கறை அளவிற்க்கு தாயக நிலமை தெரிவதில்லை. இதுக்கெல்லாம் ரென்சன் படக்குடாது.

அதான் உண்மை இப்ப தேங்காய் நூறு ரூபாயில் இருந்து 75 ரூபா விலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2018 at 5:34 PM, Jude said:

இந்தியாவிலும் சீனாவிலும் ஏற்படும் பொருளாதார முனேற்றம் காரணமாக இந்தியர்களும் சீனர்களும் தம் நாடுகளுக்கு திரும்பி போகிறார்கள்.

இது சீனர்களுக்கு முற்றிலும் உண்மை.

ஏனெனில், சீனர்களின் இருவகையான குடிபெயர்வாளர்கள் உண்டு.

ஒன்று தாமாகவே குடிபெயந்தவர்கள். மற்றது சீனவே சீனர்களை, முக்கியமாக மேலை நாடுகளுக்கு தொழிநுட்ப, நிர்வாக மற்றும் நிறுவன மயப்படுத்தும் அறிவையும் அனுபவ ரீதியாக பெறுவதற்கு அனுப்பியது.

ஆயினும், தற்போதைய சீனர்களின் தாய் வீட்டைல் நோக்கிய குடி வரவு என்பது தானாகவே குடிபெயந்தவர்கள் விரும்பி தாய் வீட்டுக்கு திரும்புவது, சீனாவின் ஆட்சியில் பல்வேறுபட்ட தனிப்பட்ட மனித உரிமைகள் அராசால் மதிக்கப்படாத நிலையிலும்.

இது, சீன அரசின், முக்கியமாக் க்ஸி ஜின்பிங் இன் தகுதி அடிப்படையிலான நவீன மயப்படுத்தும் கொள்கைகள் முழு மூச்சாக அமுல் செய்யப்படுவதால்.

சீனாவின் உள்நாடு நிர்வாகமும் தற்போது, முக்கியமாக நீதித் துறையும், சொத்து உரிமை சட்டங்களும் பெரும்பாலும் தனிப்பட்ட உரிமைகளை மிகவும் வலுப்படுத்தும் போக்கில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்ல, சீன தொழில் நுட்ப துறையில் பல நிலைகளில் மேற்கத்தைய தொழில்நுட்பத்துடன் நிகராக அல்லது விஞ்சும் வகையிலும் உள்ளது.   

இது கிந்தியாவிற்கு பொருந்துமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kadancha said:

இது சீனர்களுக்கு முற்றிலும் உண்மை.

ஏனெனில், சீனர்களின் இருவகையான குடிபெயர்வாளர்கள் உண்டு.

ஒன்று தாமாகவே குடிபெயந்தவர்கள். மற்றது சீனவே சீனர்களை, முக்கியமாக மேலை நாடுகளுக்கு தொழிநுட்ப, நிர்வாக மற்றும் நிறுவன மயப்படுத்தும் அறிவையும் அனுபவ ரீதியாக பெறுவதற்கு அனுப்பியது.

ஆயினும், தற்போதைய சீனர்களின் தாய் வீட்டைல் நோக்கிய குடி வரவு என்பது தானாகவே குடிபெயந்தவர்கள் விரும்பி தாய் வீட்டுக்கு திரும்புவது, சீனாவின் ஆட்சியில் பல்வேறுபட்ட தனிப்பட்ட மனித உரிமைகள் அராசால் மதிக்கப்படாத நிலையிலும்.

இது, சீன அரசின், முக்கியமாக் க்ஸி ஜின்பிங் இன் தகுதி அடிப்படையிலான நவீன மயப்படுத்தும் கொள்கைகள் முழு மூச்சாக அமுல் செய்யப்படுவதால்.

சீனாவின் உள்நாடு நிர்வாகமும் தற்போது, முக்கியமாக நீதித் துறையும், சொத்து உரிமை சட்டங்களும் பெரும்பாலும் தனிப்பட்ட உரிமைகளை மிகவும் வலுப்படுத்தும் போக்கில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்ல, சீன தொழில் நுட்ப துறையில் பல நிலைகளில் மேற்கத்தைய தொழில்நுட்பத்துடன் நிகராக அல்லது விஞ்சும் வகையிலும் உள்ளது.   

இது கிந்தியாவிற்கு பொருந்துமா?

உங்கள் கருத்து உண்மைதான்

 

அத்துடன் வியட்நாம்  போரை சார்ந்தே  சீனர்களின் குடி  பெயர்வது  அதிகரித்தது அல்லது  தள்ளப்பட்டது

அதன்படி  பார்த்தால்  சீனர்கள்  தமது  பென்சன்  காலத்தை   தொட்டுவிட்டனர்

எனவே  அவர்கள்  கூடு  திரும்பவது  இயற்கை

இது  தாயகத்திலும்  தொடங்கியிருக்கிறது

இனி  மேலும்  மேலும்  அ◌திகரிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணமாக, ' சீனாவின் 2025 மட்டில் சுய உற்பத்தி' என்ற கேந்திர பொருளாதார கொள்கையை சீனாவை இறக்குமதி தீர்வை என்ற போர்வையில் மிரட்டி பணிய வைக்கும் முயற்சியை அளவிற்கு அமெரிக்கா ஆடிப்போயிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உங்கள் கருத்து உண்மைதான்

 

அத்துடன் வியட்நாம்  போரை சார்ந்தே  சீனர்களின் குடி  பெயர்வது  அதிகரித்தது அல்லது  தள்ளப்பட்டது

அதன்படி  பார்த்தால்  சீனர்கள்  தமது  பென்சன்  காலத்தை   தொட்டுவிட்டனர்

எனவே  அவர்கள்  கூடு  திரும்பவது  இயற்கை

இது  தாயகத்திலும்  தொடங்கியிருக்கிறது

இனி  மேலும்  மேலும்  அ◌திகரிக்கும்

மிகமிக அதிகரிக்கும்.அதைவிடை கனிசமான இளையோரும் தாயக வாழ்வை நேசிக்கிறார்கள்.இந்த தகவலும் இதே களத்தில் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

அத்துடன் வியட்நாம்  போரை சார்ந்தே  சீனர்களின் குடி  பெயர்வது  அதிகரித்தது அல்லது  தள்ளப்பட்டது

அதன்படி  பார்த்தால்  சீனர்கள்  தமது  பென்சன்  காலத்தை   தொட்டுவிட்டனர்

எனவே  அவர்கள்  கூடு  திரும்பவது  இயற்கை

இது  தாயகத்திலும்  தொடங்கியிருக்கிறது

இனி  மேலும்  மேலும்  அ◌திகரிக்கும்

 இங்கே எனக்கு தெரிந்து  பலர் ஓய்வூதிய காலத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றார்கள். தருணம் வந்ததும் பெட்டிபடுக்கைகளுடன் சொந்த ஊரின் மடியில் வாழ்க்கையை தொடர்வர்.

நான் எப்பவோ திரும்பியிருப்பேன்.....திரும்பவும் மண்வெட்டி தூக்க தென்பில்லாத உடம்பு.:(

Link to comment
Share on other sites

11 hours ago, குமாரசாமி said:

மனிதன் விவசாயத்தை நம்பி வாழாமல் இரசாயன தொழிற்சாலைகளை நம்பியா வாழ்வது? 

சிங்கப்பூரில் எங்கே விவசாயம் நடக்குது? அங்கே மனிதன் வாழவில்லையா? "பாரம்பரியத்தை மறக்காத பூமி" என்று நீங்கள் பெருமைப்படும் பூமியிலும் பார்க்க சிங்கப்பூரில் மனிதன் வசதியாகவும் பாதுகாப்பாகவும் (வாள்வெட்டு குழுக்கள் அங்கே இல்லை ?.) வாழுகிறானே?

3 hours ago, குமாரசாமி said:

நான் எப்பவோ திரும்பியிருப்பேன்.....திரும்பவும் மண்வெட்டி தூக்க தென்பில்லாத உடம்பு.:(

மண்வெட்டி எதுக்கு அண்ணை? வளர்ச்சி அடைந்த நாட்டில் இருந்து போறீங்கள், சூரிய சக்தியில் வேலை செய்யும் உழவு இயந்திரத்தை கொண்டுபோவம் எண்டு கூட யோசிக்காமல்  பழைய மண்வெட்டிக்கு திரும்ப பார்க்கிறீங்கள்? எப்பவும் பின்னோக்கி போக தானா  விருப்பம் உங்களுக்கு?? நீங்கள் போனால் நாடு உருப்பட்ட மாதிரி தான்!

Link to comment
Share on other sites

தமிழர்கள் கல்வி பல்வேறு தொழில்களையும் நாடியதாக பரந்துபட்டிருக்க வேண்டும்!
தற்போது இலங்கையில் தாதியர் பட்டப்படிப்பு கூட உள்ளதாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.