Jump to content

லார்ட்ஸ் மைதானத்தில் உலக லெவனை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள் அணி!


Recommended Posts

லார்ட்ஸ் மைதானத்தில் உலக லெவனை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள் அணி!

 
 

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டி20 போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, உலக லெவன் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

ஐசிசி

 

கரீபியன் தீவுகளைக் கடந்த ஆண்டு இர்மா மற்றும் மரியா புயல்கள் தாக்கின. அதனால், கரீபியன் தீவுப்பகுதியில் உள்ள பல்வேறு நாடுகளிலும் கடும் சேதம் ஏற்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளின் புகழ்பெற்ற ஆண்டிகுவா, டொமினிகா உள்ளிட்ட 5 கிரிக்கெட் மைதானங்கள் புயலால் பெருத்த சேதமடைந்தன. இந்த மைதானங்களைச் சீரமைக்க பல்வேறு வகைகளில் நிதி திரட்டப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள்  மற்றும் உலக லெவன் அணிகள் மோதும் டி 20 போட்டி இன்று நடந்தது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற உலக லெவன் அணியின் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி , முதலில் பந்துவீச முடிவுசெய்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சார்பில் கெயில் மற்றும் லீவிஸ் களமிறங்கினர். துவக்கம் முதலே லீவிஸ் அதிரடியாக விளையாடினார். அவர், 26 பந்தில் 58 ரன்களைக் குவித்து ரஷித்கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பொறுமையாக விளையாடிய கெயில், 28 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சாமுவேல்ஸ்(43), ராம்தின்(44) மற்றும் ரஸல் ஆகியோர் அதிரடி காட்ட, மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. உலக லெவன் அணி தரப்பில் ரஷித் கான் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். 

மேற்கிந்திய தீவுகள்

 

பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது உலக லெவன் அணி. ஆனால், அந்த அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. இரண்டாவது ஓவரில் தமீம் இக்பால் ஆட்டமிழக்க, 3 -வது ஓவரில் ரோஞ்சி மற்றும் தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். உள்ளூர் வீரரான பில்லிங்ஸும் அடுத்த ஓவரில் நடையைக்கட்ட, உலக லெவன் அணி 8 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அந்த அணிக்கு இலங்கை வீரர் திசேரா பெரேரா மட்டும் சிறப்பாக விளையாடினார். அவர், அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். மாலிக் (11), அஃப்ரிடி(11) ரஷித் கான்(9) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இறுதியில் உலக லெவன் அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணி தரப்பில் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் சாய்த்தார். லீவிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

https://www.vikatan.com/news/tamilnadu/126479-west-indies-beat-world-eleven-team-in-lords.html

Link to comment
Share on other sites

லண்டன் டி20 போட்டி: விருப்பமில்லாதது போல் ஆடிய வேர்ல்டு லெவன் ; மேஇதீவுகள் வெற்றி; தினேஷ் டக்அவுட்

 

 
wi

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்கள்   -  படம் உதவி: ஐசிசி ட்விட்டர்

லண்டனில் நேற்று ஒருதரப்பாக நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் வேர்ல்டு லெவன் அணியை 72 ரன் வித்தியாசத்தில் மிக எளிமையாகத் தோற்கடித்தது மேற்கிந்தியத்தீவுகள் அணி.

ஐசிசி வேர்ல்டு லெவன் என்று இந்த போட்டியில் மட்டுமல்ல, இதற்கு முன் நடந்த பெரும்பாலான போட்டிகளிலும் தேர்வு செய்யப்பட்ட வேர்ல்டு லெவன் அணியில் ஃபார்மில் இல்லாத வீரர்களையும் தேர்வு செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் இதுபோன்ற கிரிக்கெட் போட்டியை பார்க்கும் ரசிகர்களுக்கு டி20 போட்டியின் சுவாரஸ்யத்தையே இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

     
 

அதிலும் வேர்ல்டு லெவன் கேப்டன் ஷாகித் அப்ரிடி இந்தப் போட்டியில் தரமான கிரிக்கெட்டை அளிக்க விரும்புகிறோம் எனக் கூறிவிட்டு 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் பிரீயமியர் லீக்கில் இடம்பெற்ற அப்ரிதி, சோயிப் மாலிக் சிறப்பாக ஆடிய நிலையில், இந்தப் போட்டியில் ஒரு சம்பிரதாய முறைக்காக விளையாடினார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் வளர்ச்சிக்காக நிதி திரட்டும் போட்டி என்பதால் அந்த நாட்டுக்கு அணி வீரர்கள் மட்டும்  தரமான கிரிக்கெட்டை அளிக்க வேண்டும் என்பது அவர்களுக்கான பொறுப்பு என்று தட்டிக்கழித்து விட்டார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது

எதிரணியில் விளையாடும் வேர்ல்டு லெவன் அணியில் இடம் பெற்ற வீரர்களும் சுவாரஸ்யமான கிரிக்கெட் போட்டிக்கு உறுதியளிக்கும் விதத்தில் விளையாட வேண்டியது அவசியம்.

ஆனால், நேற்றைய போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் மட்டுமே நல்லதரமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினார்கள், வேர்ல்டு லெவன் அணி வீரர்களில் இலங்கை வீரர் பெரேராவைத் தவிர மற்ற அனைவரும் சம்பிரதாய முறைக்காக கிரிக்கெட் விளையாடிவிட்டுச் சென்றனர்.

அதிலும், டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடிய பில்லிங்ஸ், தினேஷ் கார்த்திக், அப்ரிடி, சோயிப் மாலிக் போன்றோர் பொறுப்பற்ற முறையில் பேட் செய்ததை என்னவென்று சொல்வது?

இதுபோன்ற கண்காட்சிப் போட்டிகள், நிதிதிரட்ட நடத்தும் போட்டிகளுக்கு வரும் மக்களுக்குத் தரமான கிரிக்கெட்டை உறுதியளிக்குமாறு செய்வது ஐசிசியின் கடமையாகும். வெற்றிக்காகப் போராடலாம், ஆனால், தோல்வி அடைவதற்காகப் போராடுவது என்பது வேர்ல்டு லெவன் அணியிடம் இருந்து கற்கலாம்.

அதேசமயம், டி20 போட்டியில் தாங்கள் சாம்பியன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது மேற்கிந்தியத்தீவுகள் அணி. 26 பந்துகளில் 58ரன்கள் குவித்த லூயிஸ், சாமுவேல்ஸ் 43, ராம்தின் 44 ரன்கள் ஆகியோரின் ரன் குவிப்பு அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. எவின் லூயிஸ் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

lewisjpg

ஆட்டநாயகன் விருது பெற்ற லீவிஸ்

 

மேற்கிந்தியத்தீவுகளில் கடந்த 2017-ம் ஆண்டு இர்மா, மரியா புயலில் 5 கிரிக்கெட் அரங்குகள் சேதமடைந்தன. அதைச் சீர்செய்வதற்காக நிதி திரட்டும் பொருட்டு கண்காட்சி கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக லண்டன் ஓவல் மைதானத்தில் ஐசிசி வேர்ல்டுலெவன் அணிக்கும், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கும் இடையே ஒரே ஒரு டி20 போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டு, இந்தப் போட்டி நேற்று நடந்தது.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு கேப்டனாக பிராத்வெய்ட்டும், வேர்ல்டு லெவன் அணிக்கு ஷாகித் அப்ரிடியும் கேப்டனாக நியமிக்கப்பட்டனர்.

டாஸ்வென்ற வேர்ல்டு லெவன் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய கெயில், லூயிஸ் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். கெயில் நிதானமாக பேட்டிங் செய்ய, லூயிஸ் காட்டடி அடித்தார். மில்ஸ், மெக்லநகென், சோயிப் மாலிக் பந்துவீச்சை வெளுத்து வாங்கி சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும்  பறக்கவிட்டார். அதிரடியாக பேட் செய்த லூயிஸ் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

58 ரன்கள் சேர்த்திருந்த போது ராஷித் கான் சுழலில் லூயிஸ் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து பிளட்சர் களமிறங்கி, கெயிலுடன் இணைந்தார்.

ஐபிஎல் போட்டியில் கிங்ஸ்லெவனில் இடம் பெற்று அதிரடியாக ஆடிய கெயில் இந்தப் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சோயிப் மாலிக் பந்துவீச்சில் கெயில் ஒருபவுண்டரி உள்ளிட்ட 18 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். கெயில் சென்ற அடுத்த ஓவரில் பிளெட்சர் 7 ரன்களில் வெளியேறினார்.

gaylejpg

கெயில் போல்டான காட்சி

 

தன் சொந்த நாட்டுக்கு அணிக்காக கெயில் சமீபகாலமாக விளையாடும்போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதும், ஐபிஎல் போன்ற அதிகவருமானம் தரும் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

4-வது விக்கெட்டுக்கு சாமுவேல்ஸ்,ராம்தின் இருவரும் இணைந்து ஓவருக்கு பவுண்டரி, சிக்சர் அடிக்கத் தவறவில்லை .இதனால், அணியின் ஸ்கோர் 10 ரன்ரேட்டில் உயர்ந்தது. விளாசலில் ஈடுபட்ட சாமுவேல்ஸ் 22 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ராஷித்கான் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவரின் கணக்கில் 4 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும்.

அடுத்து வந்த ரஸல், ராம்தினுடன் சேர்ந்து கடைசி நேரத்தில் அதிரடியாக பேட் செய்தார். 10 பந்துகளைச் சந்தித்த ரஸல் 3 சிக்சர்களுடன் 21 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ராம்தின் 25பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 3 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும்.

20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்தது.

வேர்ல்டுலெவன் தரப்பில் ரஷித்கான் 2 விக்கெட்டுகளையும், சோயிப் மாலிக், அப்ரிடி தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.

200 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வேர்ல்டு லெவன் அணி களமிறங்கியது. சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்களாக இருந்தும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது போட்டியை சுவாரஸ்யமில்லாமல் ஆக்கியது.

ரஸல், பத்ரியின் பந்துவீச்சில், 8 ரன்களுக்குள் முதல் 4 விக்கெட்டுகளை இழந்தது, போட்டியைக் காணவந்திருந்த ரசிகர்களின் சுவாரஸ்யத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது. தமிம் இக்பால்(2), நியூசிலாந்தின் ரோஞ்சி டக்அவுட், பில்லிங்ஸ் (4) தினேஷ் கார்த்திக் டக்அவுட் என வருவதும் போவதுமாக இருந்தனர்.

afridijpg

வேர்ல்டு லெவன் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி பந்துவீசிய காட்சி

 

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் பிளந்துகட்டிய தினேஷ் கார்த்திக் 5 பந்துகளைச் சந்தித்தும் ரன் ஏதும் எடுக்காமல் பத்ரி பந்துவீச்சில் வெளியேறியது விருப்பமில்லாமல் கிரிக்கெட் விளையாடியானாரோ என்ற எண்ணத் தோன்றுகிறது.

ஐபில் போட்டிகளில் அபாரமாக ரன்கள் குவித்த தினேஷ் காரத்திக், பில்லிங்ஸ் போன்றோர் டக்அவுட்டில் வெளியேறியது ஏதோ விருப்பமில்லாமல் போட்டியில் கலந்து கொண்டதைப் போல் இருந்தது.

வேர்ல்டு லெவன் அணியில் முக்கிய வீரர்களான சோயிப் மாலிக்(12), அப்ரிடி(11), ராஷித்கான்(9), மெக்லனகன்(11) என சொற்பரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதிலும், இலங்கை வீரர் பெரேரா தனியாகப் போராடி 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். 37 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து பெரேரா ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்சர், 7பவுண்டரிகள் அடங்கும்.

16.4 ஓவர்களில் 127ரன்களுக்கு வேர்ல்டு லெவன் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்களில் தோல்வி அடைந்தது.

மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளையும், பத்ரி, ரஸல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

http://tamil.thehindu.com/sports/article24056283.ece

Link to comment
Share on other sites

இதென்ன கேலிக்கூத்து? மே.இ.தீவுகள்-உலக லெவன் போட்டியில் நடந்த சம்பவம் குறித்து ரசிகர்கள் கடும் சாடல்

Capture

மே.இ.தீவுகளுக்கும் ஐசிசி உலக லெவனுக்கும் இடையே நேற்று நடைபெற்ற டி20 போட்டிக்கு சர்வதேச போட்டி அந்தஸ்து வழங்கப்பட்டதை கேள்விக்குட்படுத்தும் விதமாக நடந்த சம்பவம் ஒன்று ரசிகர்களின் ஆத்திரத்தைக் கிளப்பியுள்ளது

ஆட்டம் லைவ் ஆக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வர்ணனையாளர் நாசர் ஹுசைன் நடு மைதானத்தில் மைக்குடன் நின்று கொண்டிருந்தது அவ்வளவு நல்லதாகப் பார்க்கப்படவில்லை.

 
 

சர்வதேச போட்டி என்றால் அதற்கான பொறுப்புடன் ஆடப்பட வேண்டும், ஆனால் வர்ணனையாளர் நடு ஆட்டத்தில் மைக்குடன் பீல்டர்களூக்கு அருகில் போய் நின்று கொண்டு வர்ணனை செய்கிறேன் பேர்வழி என்றால் அது சர்வதேச ஆட்டம்தானா என்று ரசிகர்கள் கோபாவேசமடைந்துள்ளனர். முதல் ஸ்லிப்பில் நின்று கொண்டு வர்ணை செய்தார் நாசர் ஹுசைன்.

இந்தப்புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக ரசிகர்கள் இதென்ன கேலிக்கூத்து, இப்படியெல்லாம் சர்வதேச போட்டிகளில் நடக்கலாமா என்று கடுமையாக ஆட்சேபித்துள்ளனர்.

லிஸ்ட் ஏ போட்டிகளில் கூட இப்படியெல்லாம் நடந்ததில்லை என்ற ரீதியில் ரசிகர்கள் ஐசிசிக்கு கேள்விக்கணை தொடுத்துள்ளனர்.

"ஆட்டம் நடக்கும் போது களத்தில் மைக்குடன் வர்ணனையாளரா? ஐசிசி இதென்ன கேலிக்கூத்து, இது சர்வதேச போட்டியா, லிஸ்ட் ஏ போட்டியா” என்று ட்விட்டர்வாசி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னொருவர் ‘சர்வதேசப் போட்டியில் ரிப்போர்ட்டர் நாசர் ஹுசைன் மைதானத்தில், இது அனுமதிக்கப்பட முடியாதது’ என்று பதிவிட்டுள்ளார்.

“இந்தக் கேலிக்கூத்துக்குப் பெயர் சர்வதேச போட்டியா?” என்று சாடியுள்ளார்.

பலரும் ஸ்கை கிரிக்கெட், வர்ணனையாளர் நாசர் ஹுசைனின் ‘அடாவடி’ என்றெல்லாம் போட்டுச் சாத்தியுள்ளனர்.

ஏற்கெனவே இந்தப் போட்டியில் உலக லெவன் வீரர்கள் வேண்டா வெறுப்பாக ஆடியதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் வர்ணனையாளர் முதல் ஸ்லிப் அருகே நின்று கொண்டு ஆட்டம் நடக்கும் போது நேரலை வர்ணனை அளிப்பதன் பெயர் புதியன புகுத்தலா, பொறுப்பற்றத் தன்மையா, என்ன இது? என்று ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/article24058586.ece?utm_source=HP&utm_medium=hp-sports

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.