Jump to content

அந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கரித்துண்டை தூக்கி  அங்காலை எறியுங்கோ

9_F8_DC7_A0-40_B6-4_DD9-83_DC-77_B11_D49

கார்ல் ஒல்காß ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தபோது என்னுள் இருந்த வழமையான கலகலப்பு இல்லாமல் போயிருந்தது.குமாரசாமி அண்ணன் எனது வேலையிடத்துத் தோழன். தோழன் என்று ஒருமையில் சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது தோழர் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் குமாரசாமி அண்ணன் என்னைவிட ஆறு வயதுகள் மூத்தவர். ஆனால் குமாரசாமி அண்ணன் வயது வித்தியாசத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட்டுகவி, கவி..” என்று சொல்லி ஒரு சம வயது நண்பனாகவே என்னுடன் பழகிக் கொண்டிருந்தார்.

“கத்தரிக்காயை  நல்ல மெல்லிய துண்டுகளாகச் சீவி சின்னன் சின்னனா வெட்டி எண்ணையிலை போட்டு  ‘கலகலஎண்டு பொரிச்செடுத்து வைச்சிட்டுஊர் வெங்காயத்தையும் பிஞ்சு மிளகாயையும் குறுணியா வெட்டி பொரிச்ச கத்தரிக்காய்க்குள்ளை போட்டு, அதுக்குள்ளை தேங்காய்ப்பால், மிளகு, சின்னச் சீரகத்தூள், உப்புதேசிக்காய் புளி விட்டு கையாலை நல்லா பினைஞ்சு சாப்பிட்டுப்பார் அந்த மாதிரி இருக்கும். அந்தக் கத்தரிக்காய்ச் சம்பல் ஒண்டு போதும் இரண்டு கோப்பை சோறு சாப்பிடலாம். கொஞ்சமா தண்ணி அடிச்சிட்டாய் எண்டால், கோழி நெஞ்சிறைச்சியை சின்னஞ் சின்னதா வெட்டிப் பொரிச்சு, பிசைஞ்சு வைச்சிருக்கிற கத்திரிக்காய்க்குள் போட்டு குழைச்சு சாப்பிட்டுப் பார் தண்ணி அடிச்ச வாய்க்கு அமிர்தமா இருக்கும்

குமாரசாமி அண்ணன் சொல்லித் தந்த ஒரு சமையல் குறிப்பு அது. அவர் சொன்ன அந்த  கத்தரிக்காய்ச் சம்பலின் ருசி வீட்டில் எல்லோருக்கும் பிடித்துப் போனது. இன்று எனது வீட்டில் நடக்கும் விசேசங்களில் எல்லாம் கத்திரிக்காய்ச் சம்பல் கண்டிப்பாக இருக்கும். ஒவ்வொரு தடவையும் கத்திரிக்காய்ச் சம்பல் செய்யும் போது அவர் முகம் மனதில் வரும்.

இன்று ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் அவரைப் பார்க்கத்தான் வந்திருந்தேன். கார்ல் ஒல்கா ஆஸ்பத்திரியில் இருந்து எனது வீடு  பெரிய தூரம் என்றில்லை எழுபது கிலோ மீற்றர்கள்தான், நெடுஞ்சாலையினூடாகப் பயணித்தால் ஒரு மணித்தியாலத்துக்குள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனாலும் ஆஸ்பத்திரியின் வாசலில் கொஞ்சம் இருந்துவிட்டுப் போகலாம் என்ற எண்ணம் வர வெளியே யாருமே இல்லாமல் தனியாக இருந்த வாங்கிலில் போய் அமர்ந்து கொண்டேன். தனியாக இருக்கலாம் என்று நினத்தால் அந்த வாங்கிலை ஒரு இளம் சோடி வந்து பங்கு போட்டுக் கொண்டது

வேலை இடத்தில் விழுந்தானா இல்லை கால்பந்து விளையாடி காலை முறித்துக் கொண்டானா தெரியவில்லை அந்த சோடியின் இளைஞன் உள்ளங்காலில் இருந்து தொடைவரை பெரிய கட்டுப் போட்டிருந்தான்.

 “ஆஸ்பத்திரிக்கு வந்தும் உன்னாலை சிகரெட்டை விட முடியேல்லைபெண் அவனை செல்லமாக கேபித்துக் கொண்டது என் காதில் கேட்டது. அவள் சொன்னது அந்த இளைஞன் காதில் தெளிவாகக் கேட்டிருக்கும் ஆனாலும்  அவன் தன்பாட்டுக்கு புகையை உள் இழுத்து வெளியே தள்ளிக் கொண்டிருந்தான்.

இப்பொழுது எனது மனது பதினைந்து வருடங்களுக்கு பின்னால் போய் நின்றது.

உள்ளே புகை பிடிக்க அனுமதி இல்லாததால்  வேலை இடத்துக்கு வெளியே அடிக்கடி போக வேண்டி இருந்தது. அன்றும்  வேலை நேரத்தில் வெளியே போட்டிருந்த வாங்கிலில் இருந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன்.

“உன்னை அங்கை காணேலை எண்டவுடன் இஞ்சைதான் இருப்பாய் எண்டு நினைச்சன்சிகரெட்டை பற்ற வைச்சுக் கொண்டு  குமாரசாமி அண்ணன் எனக்குப் பக்கத்தில் வந்து இருந்தார்.

“என்ன புதினம் கவி?”

“இண்டைக்கு உங்கடை பிறந்தநாள்

“ஓமடா நேற்று படுக்கைக்கு போகக்கை நினைச்சனான். காலமை எழும்பக்கை அதை மறந்து போனன். பார் என்ரை  மனுசியும் எனக்கு நினைப்பூட்டேல்லை

“பின்னேரம் நீங்கள் வீட்டை போகக்கை  சில நேரம் உங்களுக்கு ஒரு சேர்ப்பிரைஸ் பார்டி  இருக்கலாம்

“இருக்கும் போலைத்தான் கிடக்குது. காலமை என்னைப் பார்த்து மனுசி கொடுப்புக்குள்ளை சிரிக்கக்கை, என்ரை முகத்தைப் பார்த்து சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு எண்ட நினைப்புத்தான் வந்தது  பிறந்தநாளைப் பற்றி யோசனையே வரயில்லை. அது போகட்டும் என்ரை பிறந்த நாளுக்கு நீ என்ன தரப்போறாய்?”

“ஒரு பக்கெற் சிகரெட்?”

“சிகரெட்டோ? இந்தக் கோதாரியை எப்ப விடலாம் எண்டிருக்கிறன்

“எனக்கும்தான் அந்த நினைப்பு இருக்கு

“இதை விட்டால் நல்லதுதாண்டா. உடுப்பு, உடம்பு எல்லாம் ஒரே சிகரெட் மணம்தான். வீட்டிலையும் அப்பப்ப அர்ச்சனையும் விழும். மனுசி மட்டுமில்லை பெட்டைகளும் பேசுவாளுகள்

“அப்ப விட்டிடுங்கோ

“பேய்க்கதை கதைக்கிறாய். நாற்பது வருசமா பத்துறன். உடனை விடேலுமே? வேணுமெண்டால் ஒவ்வொண்டாகக் குறைச்சுக் கொண்டு வந்து...”

“இது நடக்கிற காரியமா இருக்காது. விடுறதெண்டால் ஒரேயடியா விடோணும்

“உதெல்லாம் பேச்சுக்குத்தான் சரிவரும்

“மனசுதாணன்னை எல்லாம்

“இவ்வளவு கதைக்கிறாய் உன்னாலை விடேலுமோ?”

“ஓகே. நான் விடுறன். உங்கடை பேர்த் டே அண்டு, சிகரெட் பிடிக்கிறதில்லை எண்டு முடிவெடுப்போம்.” 

“நீ விடுறதெண்டால் நானும் ரெடி

குமாரசாமி அண்ணன் அப்படிச் சொன்னதும் பத்திக் கொண்டிருந்த எனது சிகரெட்டை பாதியிலேயே அணைத்தேன்.

“நீ நூத்தால் நானும் நூப்பன்”  என்னைப் பார்த்து தனது சிகரெட்டையும் குமாரசாமி அண்ணை அணைத்துப் போட்டார்.

என் பொக்கெற்றில் இருந்த சிகரெட் பக்கெற்றை எடுத்து அருகில் இருந்த குப்பை வாளிக்குள் போட்டேன்

“புதுப் பக்கெற் போலை இருக்கு?”

“ஓம். இப்பதான் வேண்டினனான். ஒண்டுதான் அதுவும் பாதிதான், இப்ப பத்தினதுசொல்லிவிட்டு எழுந்து கொண்டேன். குமாரசாமி அண்ணனும்  என்னுடன் கூட வந்தார்

இரண்டு நாள் கழித்துப் பார்த்தால் வேலை இடத்தில் வெளியே போட்டிருந்த வாங்கிலில் இருந்து குமாரசாமி அண்ணன் சிகரெட் பத்திக் கொண்டிருந்தார்

“என்னண்ணை திரும்பத் தொடங்கிட்டீங்களே?”

“விட்டால்தானே திரும்பத் தொடங்கிறதுக்கு

நீ சிகரெட் பக்கெற்றைபின்னுக்குள்ளை போட்டுட்டுப் போட்டாய். அநியாயமா ஒரு சிகரெட் பக்க்கெற்றை எறிஞ்சது மனசுக்கு ஒரு மாதிரி இருந்துது. திரும்ப வந்து எடுத்து என்ரை சேர்ட் பொக்கெற்றுக்குள்ளை வைச்சிட்டன். சேர்ட்  பொக்கெற்றுக்கும்  வாய்க்கும் கனக்கத் தூரமில்லைப் பார்

“சரி அந்தப் பக்கெற் முடிஞ்சதுக்குப் பிறகு புதுசு வேண்டிப் போடாதையுங்கோ

“அடப் போடா. இது அதுக்குப் பிறகு இரண்டாவது பக்கெற்

இழுக்க இழுக்க இன்பம் தந்தத சிரெட்தான் குமாரச்சாமி அண்ணனை இப்பொழுது ஆஸ்பத்திரிக் கட்டிலிலுக்கு இழுத்து வந்திருக்கிறது.

“மனுசியிட்டை தேத்தண்ணி போடச் சொல்லிப் போட்டு கதிரையிலை இருந்தனான். திடீரென கண் இருட்டிக் கொண்டு வந்துது. மேசையிலை அப்பிடியே படுத்திட்டன். நல்லவேளை மூத்தமகள் கண்டிட்டு உடனை அம்புலன்ஸுக்கு அடிச்சிட்டாள். ஐஞ்சு நிமிசத்துக்குள்ளை வந்திட்டாங்கள்அவங்கள் வந்துநித்திரை கொள்ளாதை நித்திரை கொள்ளாதைஎண்டு கன்னத்தில் அடிச்சடிச்சு அம்புலன்ஸிலை என்னை ஏத்தின ஞாபகம். சத்தி எடுத்தனான் எண்டும் சொல்லிச்சினம். பிள்ளைகளும் மனுசியும் நல்லா பயந்து போட்டினம் கவி

“இப்ப எப்பிடி இருக்கண்ணை?”

“பாக்கேல்லையே. உடம்பெல்லாம் வயறுகள். 24 மணித்தியாலமும் கொம்புயூற்றரிலை கவனிப்பாம்

“சாப்பிட ஏலுமா இருக்குதுதானே?”

“வட்டம், நீள் வட்டம் சிவப்பு, வெள்ளை எண்டு கொஞ்சக் குளிசைகள் காலமையிலை கொணந்து தருவாங்கள் அதை விழுங்கி தண்ணியும் குடிச்சால் வயிறுபுள்’. அதுக்கு மேலை காலமைச் சாப்பாடு எண்டு பெரிசா எல்லாம் தேவையில்லை. சும்மா சொல்லக் கூடாது மத்தியானம் உண்மையிலை  நல்ல சாப்பாடுதான். என்ன Input,Output எல்லாம் படுக்கையிலை எண்டபடியால் கொஞ்சம் கூச்சமா இருக்கு

“அதுக்காக சாப்பிடாமல் இருக்கேலுமே

“சாப்பிடாடு முக்கியமெல்லே. சாப்பிடுறன்தான். எண்டாலும் கவி, நீ மனதிலை திடமான ஆள்தான். உன்னைப் போலை நானும் அண்டைக்கே சிகரெட்டை விட்டிருக்கோணும்

“இப்ப இங்கை உங்களாலை சிகரெட் இல்லாமல் இருக்க முடியுதுதானே. ஆஸ்பத்திரியை விட்டு வெளியாலை வந்தாப் போலையும் நீங்கள் சிகரெட் இல்லாமல் இருக்கலாம்

“ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வருவேன் எண்டு நினைக்கிறீயே?”

“வருவீங்கள். வெளியிலை வந்த உடனே நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை என்ன எண்டால் அந்த கரித்துண்டை தூக்கி எறியிறதுதான்” 

குமாரசாமி அண்ணனுக்குச் சொல்லிப் போட்டு வந்திருக்கிறேன்.

ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்.

 

கவி அருணாசலம்

31.05.2018

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பழக்கங்களை மரணத்திற்குக் கிட்டவாகப் போய் வந்தாலும் மாத்தலேலாது. 

 

Link to comment
Share on other sites

புகை ஒரு போதையண்ணே. ஒருமுறை ஆட்கொண்டால் அடிச்சு கலைக்கிறது ரொம்ப கஷ்டம். சரி நீங்கள் இப்போ விட்டுவிட்டீங்கள் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

அந்த கரித்துண்டை தூக்கி  அங்காலை எறியுங்கோ

9_F8_DC7_A0-40_B6-4_DD9-83_DC-77_B11_D49

கார்ல் ஒல்காß ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தபோது என்னுள் இருந்த வழமையான கலகலப்பு இல்லாமல் போயிருந்தது.குமாரசாமி அண்ணன் எனது வேலையிடத்துத் தோழன். தோழன் என்று ஒருமையில் சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது தோழர் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் குமாரசாமி அண்ணன் என்னைவிட ஆறு வயதுகள் மூத்தவர். ஆனால் குமாரசாமி அண்ணன் வயது வித்தியாசத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட்டுகவி, கவி..” என்று சொல்லி ஒரு சம வயது நண்பனாகவே என்னுடன் பழகிக் கொண்டிருந்தார்.

“கத்தரிக்காயை  நல்ல மெல்லிய துண்டுகளாகச் சீவி சின்னன் சின்னனா வெட்டி எண்ணையிலை போட்டு  ‘கலகலஎண்டு பொரிச்செடுத்து வைச்சிட்டுஊர் வெங்காயத்தையும் பிஞ்சு மிளகாயையும் குறுணியா வெட்டி பொரிச்ச கத்தரிக்காய்க்குள்ளை போட்டு, அதுக்குள்ளை தேங்காய்ப்பால், மிளகு, சின்னச் சீரகத்தூள், உப்புதேசிக்காய் புளி விட்டு கையாலை நல்லா பினைஞ்சு சாப்பிட்டுப்பார் அந்த மாதிரி இருக்கும். அந்தக் கத்தரிக்காய்ச் சம்பல் ஒண்டு போதும் இரண்டு கோப்பை சோறு சாப்பிடலாம். கொஞ்சமா தண்ணி அடிச்சிட்டாய் எண்டால், கோழி நெஞ்சிறைச்சியை சின்னஞ் சின்னதா வெட்டிப் பொரிச்சு, பிசைஞ்சு வைச்சிருக்கிற கத்திரிக்காய்க்குள் போட்டு குழைச்சு சாப்பிட்டுப் பார் தண்ணி அடிச்ச வாய்க்கு அமிர்தமா இருக்கும்

குமாரசாமி அண்ணன் சொல்லித் தந்த ஒரு சமையல் குறிப்பு அது. அவர் சொன்ன அந்த  கத்தரிக்காய்ச் சம்பலின் ருசி வீட்டில் எல்லோருக்கும் பிடித்துப் போனது. இன்று எனது வீட்டில் நடக்கும் விசேசங்களில் எல்லாம் கத்திரிக்காய்ச் சம்பல் கண்டிப்பாக இருக்கும். ஒவ்வொரு தடவையும் கத்திரிக்காய்ச் சம்பல் செய்யும் போது அவர் முகம் மனதில் வரும்.

இன்று ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் அவரைப் பார்க்கத்தான் வந்திருந்தேன். கார்ல் ஒல்கா ஆஸ்பத்திரியில் இருந்து எனது வீடு  பெரிய தூரம் என்றில்லை எழுபது கிலோ மீற்றர்கள்தான், நெடுஞ்சாலையினூடாகப் பயணித்தால் ஒரு மணித்தியாலத்துக்குள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனாலும் ஆஸ்பத்திரியின் வாசலில் கொஞ்சம் இருந்துவிட்டுப் போகலாம் என்ற எண்ணம் வர வெளியே யாருமே இல்லாமல் தனியாக இருந்த வாங்கிலில் போய் அமர்ந்து கொண்டேன். தனியாக இருக்கலாம் என்று நினத்தால் அந்த வாங்கிலை ஒரு இளம் சோடி வந்து பங்கு போட்டுக் கொண்டது

வேலை இடத்தில் விழுந்தானா இல்லை கால்பந்து விளையாடி காலை முறித்துக் கொண்டானா தெரியவில்லை அந்த சோடியின் இளைஞன் உள்ளங்காலில் இருந்து தொடைவரை பெரிய கட்டுப் போட்டிருந்தான்.

 “ஆஸ்பத்திரிக்கு வந்தும் உன்னாலை சிகரெட்டை விட முடியேல்லைபெண் அவனை செல்லமாக கேபித்துக் கொண்டது என் காதில் கேட்டது. அவள் சொன்னது அந்த இளைஞன் காதில் தெளிவாகக் கேட்டிருக்கும் ஆனாலும்  அவன் தன்பாட்டுக்கு புகையை உள் இழுத்து வெளியே தள்ளிக் கொண்டிருந்தான்.

இப்பொழுது எனது மனது பதினைந்து வருடங்களுக்கு பின்னால் போய் நின்றது.

உள்ளே புகை பிடிக்க அனுமதி இல்லாததால்  வேலை இடத்துக்கு வெளியே அடிக்கடி போக வேண்டி இருந்தது. அன்றும்  வேலை நேரத்தில் வெளியே போட்டிருந்த வாங்கிலில் இருந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன்.

“உன்னை அங்கை காணேலை எண்டவுடன் இஞ்சைதான் இருப்பாய் எண்டு நினைச்சன்சிகரெட்டை பற்ற வைச்சுக் கொண்டு  குமாரசாமி அண்ணன் எனக்குப் பக்கத்தில் வந்து இருந்தார்.

“என்ன புதினம் கவி?”

“இண்டைக்கு உங்கடை பிறந்தநாள்

“ஓமடா நேற்று படுக்கைக்கு போகக்கை நினைச்சனான். காலமை எழும்பக்கை அதை மறந்து போனன். பார் என்ரை  மனுசியும் எனக்கு நினைப்பூட்டேல்லை

“பின்னேரம் நீங்கள் வீட்டை போகக்கை  சில நேரம் உங்களுக்கு ஒரு சேர்ப்பிரைஸ் பார்டி  இருக்கலாம்

“இருக்கும் போலைத்தான் கிடக்குது. காலமை என்னைப் பார்த்து மனுசி கொடுப்புக்குள்ளை சிரிக்கக்கை, என்ரை முகத்தைப் பார்த்து சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு எண்ட நினைப்புத்தான் வந்தது  பிறந்தநாளைப் பற்றி யோசனையே வரயில்லை. அது போகட்டும் என்ரை பிறந்த நாளுக்கு நீ என்ன தரப்போறாய்?”

“ஒரு பக்கெற் சிகரெட்?”

“சிகரெட்டோ? இந்தக் கோதாரியை எப்ப விடலாம் எண்டிருக்கிறன்

“எனக்கும்தான் அந்த நினைப்பு இருக்கு

“இதை விட்டால் நல்லதுதாண்டா. உடுப்பு, உடம்பு எல்லாம் ஒரே சிகரெட் மணம்தான். வீட்டிலையும் அப்பப்ப அர்ச்சனையும் விழும். மனுசி மட்டுமில்லை பெட்டைகளும் பேசுவாளுகள்

“அப்ப விட்டிடுங்கோ

“பேய்க்கதை கதைக்கிறாய். நாற்பது வருசமா பத்துறன். உடனை விடேலுமே? வேணுமெண்டால் ஒவ்வொண்டாகக் குறைச்சுக் கொண்டு வந்து...”

“இது நடக்கிற காரியமா இருக்காது. விடுறதெண்டால் ஒரேயடியா விடோணும்

“உதெல்லாம் பேச்சுக்குத்தான் சரிவரும்

“மனசுதாணன்னை எல்லாம்

“இவ்வளவு கதைக்கிறாய் உன்னாலை விடேலுமோ?”

“ஓகே. நான் விடுறன். உங்கடை பேர்த் டே அண்டு, சிகரெட் பிடிக்கிறதில்லை எண்டு முடிவெடுப்போம்.” 

“நீ விடுறதெண்டால் நானும் ரெடி

குமாரசாமி அண்ணன் அப்படிச் சொன்னதும் பத்திக் கொண்டிருந்த எனது சிகரெட்டை பாதியிலேயே அணைத்தேன்.

“நீ நூத்தால் நானும் நூப்பன்”  என்னைப் பார்த்து தனது சிகரெட்டையும் குமாரசாமி அண்ணை அணைத்துப் போட்டார்.

என் பொக்கெற்றில் இருந்த சிகரெட் பக்கெற்றை எடுத்து அருகில் இருந்த குப்பை வாளிக்குள் போட்டேன்

“புதுப் பக்கெற் போலை இருக்கு?”

“ஓம். இப்பதான் வேண்டினனான். ஒண்டுதான் அதுவும் பாதிதான், இப்ப பத்தினதுசொல்லிவிட்டு எழுந்து கொண்டேன். குமாரசாமி அண்ணனும்  என்னுடன் கூட வந்தார்

இரண்டு நாள் கழித்துப் பார்த்தால் வேலை இடத்தில் வெளியே போட்டிருந்த வாங்கிலில் இருந்து குமாரசாமி அண்ணன் சிகரெட் பத்திக் கொண்டிருந்தார்

“என்னண்ணை திரும்பத் தொடங்கிட்டீங்களே?”

“விட்டால்தானே திரும்பத் தொடங்கிறதுக்கு

நீ சிகரெட் பக்கெற்றைபின்னுக்குள்ளை போட்டுட்டுப் போட்டாய். அநியாயமா ஒரு சிகரெட் பக்க்கெற்றை எறிஞ்சது மனசுக்கு ஒரு மாதிரி இருந்துது. திரும்ப வந்து எடுத்து என்ரை சேர்ட் பொக்கெற்றுக்குள்ளை வைச்சிட்டன். சேர்ட்  பொக்கெற்றுக்கும்  வாய்க்கும் கனக்கத் தூரமில்லைப் பார்

“சரி அந்தப் பக்கெற் முடிஞ்சதுக்குப் பிறகு புதுசு வேண்டிப் போடாதையுங்கோ

“அடப் போடா. இது அதுக்குப் பிறகு இரண்டாவது பக்கெற்

இழுக்க இழுக்க இன்பம் தந்தத சிரெட்தான் குமாரச்சாமி அண்ணனை இப்பொழுது ஆஸ்பத்திரிக் கட்டிலிலுக்கு இழுத்து வந்திருக்கிறது.

“மனுசியிட்டை தேத்தண்ணி போடச் சொல்லிப் போட்டு கதிரையிலை இருந்தனான். திடீரென கண் இருட்டிக் கொண்டு வந்துது. மேசையிலை அப்பிடியே படுத்திட்டன். நல்லவேளை மூத்தமகள் கண்டிட்டு உடனை அம்புலன்ஸுக்கு அடிச்சிட்டாள். ஐஞ்சு நிமிசத்துக்குள்ளை வந்திட்டாங்கள்அவங்கள் வந்துநித்திரை கொள்ளாதை நித்திரை கொள்ளாதைஎண்டு கன்னத்தில் அடிச்சடிச்சு அம்புலன்ஸிலை என்னை ஏத்தின ஞாபகம். சத்தி எடுத்தனான் எண்டும் சொல்லிச்சினம். பிள்ளைகளும் மனுசியும் நல்லா பயந்து போட்டினம் கவி

“இப்ப எப்பிடி இருக்கண்ணை?”

“பாக்கேல்லையே. உடம்பெல்லாம் வயறுகள். 24 மணித்தியாலமும் கொம்புயூற்றரிலை கவனிப்பாம்

“சாப்பிட ஏலுமா இருக்குதுதானே?”

“வட்டம், நீள் வட்டம் சிவப்பு, வெள்ளை எண்டு கொஞ்சக் குளிசைகள் காலமையிலை கொணந்து தருவாங்கள் அதை விழுங்கி தண்ணியும் குடிச்சால் வயிறுபுள்’. அதுக்கு மேலை காலமைச் சாப்பாடு எண்டு பெரிசா எல்லாம் தேவையில்லை. சும்மா சொல்லக் கூடாது மத்தியானம் உண்மையிலை  நல்ல சாப்பாடுதான். என்ன Input,Output எல்லாம் படுக்கையிலை எண்டபடியால் கொஞ்சம் கூச்சமா இருக்கு

“அதுக்காக சாப்பிடாமல் இருக்கேலுமே

“சாப்பிடாடு முக்கியமெல்லே. சாப்பிடுறன்தான். எண்டாலும் கவி, நீ மனதிலை திடமான ஆள்தான். உன்னைப் போலை நானும் அண்டைக்கே சிகரெட்டை விட்டிருக்கோணும்

“இப்ப இங்கை உங்களாலை சிகரெட் இல்லாமல் இருக்க முடியுதுதானே. ஆஸ்பத்திரியை விட்டு வெளியாலை வந்தாப் போலையும் நீங்கள் சிகரெட் இல்லாமல் இருக்கலாம்

“ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வருவேன் எண்டு நினைக்கிறீயே?”

“வருவீங்கள். வெளியிலை வந்த உடனே நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை என்ன எண்டால் அந்த கரித்துண்டை தூக்கி எறியிறதுதான்” 

குமாரசாமி அண்ணனுக்குச் சொல்லிப் போட்டு வந்திருக்கிறேன்.

ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்.

 

கவி அருணாசலம்

31.05.2018

 

சமூக நலன் சார்ந்த,  அறிவு ஊட்டும்,  விழிப்பு உணர்வு  சார்ந்த அழகான கதை,  ✒️கவி அருணாசலம். ?
அதற்கு மேலும், கதைக்கு... நீங்கள் தயாரித்த முகப்பு படம். ?
மொத்தத்தில்.. மனதை  சிந்திக்க வைத்த  அருமையான கதை.   ?

உங்கள் கதையில்... எதனை  மேற்கோள் காட்டி கருத்து எழுதுவது என்று தெரியாமல்,
?️ முழுக் கதையையும் பதிந்தமைக்கான  காரணம்....
 ? வரி, வரியாக அத்தனை எழுத்துக்களையும்... மனதில் உள் வாங்கி   ரசித்தேன்.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழிப்புணர்வை தரும் ஒரு புகைமூட்டமான கதை. உள்ளே ஒரு பொறி தெரியுது. கடவுளே, அது சிகரெட் பொறியாக இருக்கக் கூடாது....

.!  ☠️  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுடு காட்டு ஞானம் என்று கேள்விப்பட்டிருப்பீங்க. அதுதான் இந்த கரித்துண்டுதூக்கி அங்கால எறியுறதும். வைத்தியசாலையில் வந்து பார்த்து விட்டு இனி இதைத் தொடமாட்டம் எண்டு சத்தியம்செய்திற்றுப்போன பல நண்பர்களைப் பார்த்து நான் சிறிது நிம்மதியானேன். ஆனால் ஒருவரும் இதுவரை தூக்கி எறிந்ததாக தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9_F8_DC7_A0-40_B6-4_DD9-83_DC-77_B11_D49

நானும் ஒரு காலத்திலை பெரிய தம் அடிகாரன் தான்.

ஒருக்கால் விடியப்பறம் ஒரு உலுப்பின உலுப்போடை அம்புலன்ஸ்சிலை ஏத்திக்கொண்டு போனவங்கள் தான்...

அந்த பெரிய கிளினிக்கிலை வைச்சு 68 குளிசையும் தந்து...மூளையையும் நல்லவடிவாய் கழிவி விட்டுத்தான் வெளியிலை விட்டவங்கள். அண்டைக்கு விட்ட கரிக்கோச்சியை இண்டுவரைக்கும் தொடவேயில்லை.

அந்தமாதிரி மூளையை கிளீன் பண்ணிப்போட்டுத்தான்  வெளியிலை விட்டவையள்.


ஆனால் ஒண்டு டெய்லி 20/30 சிகரெட் பத்துற சனமும் நோய்நொடியில்லாமல் இருக்கினம்....

அதே நேரம் ஒரு நாளைக்கு 5 சிகரெட் பத்தினவன் குறுக்காலை போனதும் இருக்கு....

எல்லாம் அவரவர் உடம்பு வாசி கண்டியளோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக இன்னுமொரு குமாரசாமியார் ஏற்கனவே போய் வந்திட்டார். 

15 hours ago, குமாரசாமி said:

அந்தமாதிரி மூளையை கிளீன் பண்ணிப்போட்டுத்தான்  வெளியிலை விட்டவையள்.

கிளீன் என்று நீங்கள் குறிப்பிடுவதற்கு என்னால் இரண்டு அர்த்தம் கொள்ள முடிகிறது. நான் நீங்கள் நினைத்ததையே எடுத்துக் கொள்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 முதலில் கரித்துண்டை ஆர்வ கோளினால் பற்றிக் கொள்வார்கள்  சில காலம் செல்ல அது உங்களை பற்றிக் கொள்ளும் விடாது ..பின் விளைவுகள் ஏராளம்.  அது ஓர் வகை போதை . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.