Jump to content

அந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கரித்துண்டை தூக்கி  அங்காலை எறியுங்கோ

9_F8_DC7_A0-40_B6-4_DD9-83_DC-77_B11_D49

கார்ல் ஒல்காß ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தபோது என்னுள் இருந்த வழமையான கலகலப்பு இல்லாமல் போயிருந்தது.குமாரசாமி அண்ணன் எனது வேலையிடத்துத் தோழன். தோழன் என்று ஒருமையில் சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது தோழர் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் குமாரசாமி அண்ணன் என்னைவிட ஆறு வயதுகள் மூத்தவர். ஆனால் குமாரசாமி அண்ணன் வயது வித்தியாசத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட்டுகவி, கவி..” என்று சொல்லி ஒரு சம வயது நண்பனாகவே என்னுடன் பழகிக் கொண்டிருந்தார்.

“கத்தரிக்காயை  நல்ல மெல்லிய துண்டுகளாகச் சீவி சின்னன் சின்னனா வெட்டி எண்ணையிலை போட்டு  ‘கலகலஎண்டு பொரிச்செடுத்து வைச்சிட்டுஊர் வெங்காயத்தையும் பிஞ்சு மிளகாயையும் குறுணியா வெட்டி பொரிச்ச கத்தரிக்காய்க்குள்ளை போட்டு, அதுக்குள்ளை தேங்காய்ப்பால், மிளகு, சின்னச் சீரகத்தூள், உப்புதேசிக்காய் புளி விட்டு கையாலை நல்லா பினைஞ்சு சாப்பிட்டுப்பார் அந்த மாதிரி இருக்கும். அந்தக் கத்தரிக்காய்ச் சம்பல் ஒண்டு போதும் இரண்டு கோப்பை சோறு சாப்பிடலாம். கொஞ்சமா தண்ணி அடிச்சிட்டாய் எண்டால், கோழி நெஞ்சிறைச்சியை சின்னஞ் சின்னதா வெட்டிப் பொரிச்சு, பிசைஞ்சு வைச்சிருக்கிற கத்திரிக்காய்க்குள் போட்டு குழைச்சு சாப்பிட்டுப் பார் தண்ணி அடிச்ச வாய்க்கு அமிர்தமா இருக்கும்

குமாரசாமி அண்ணன் சொல்லித் தந்த ஒரு சமையல் குறிப்பு அது. அவர் சொன்ன அந்த  கத்தரிக்காய்ச் சம்பலின் ருசி வீட்டில் எல்லோருக்கும் பிடித்துப் போனது. இன்று எனது வீட்டில் நடக்கும் விசேசங்களில் எல்லாம் கத்திரிக்காய்ச் சம்பல் கண்டிப்பாக இருக்கும். ஒவ்வொரு தடவையும் கத்திரிக்காய்ச் சம்பல் செய்யும் போது அவர் முகம் மனதில் வரும்.

இன்று ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் அவரைப் பார்க்கத்தான் வந்திருந்தேன். கார்ல் ஒல்கா ஆஸ்பத்திரியில் இருந்து எனது வீடு  பெரிய தூரம் என்றில்லை எழுபது கிலோ மீற்றர்கள்தான், நெடுஞ்சாலையினூடாகப் பயணித்தால் ஒரு மணித்தியாலத்துக்குள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனாலும் ஆஸ்பத்திரியின் வாசலில் கொஞ்சம் இருந்துவிட்டுப் போகலாம் என்ற எண்ணம் வர வெளியே யாருமே இல்லாமல் தனியாக இருந்த வாங்கிலில் போய் அமர்ந்து கொண்டேன். தனியாக இருக்கலாம் என்று நினத்தால் அந்த வாங்கிலை ஒரு இளம் சோடி வந்து பங்கு போட்டுக் கொண்டது

வேலை இடத்தில் விழுந்தானா இல்லை கால்பந்து விளையாடி காலை முறித்துக் கொண்டானா தெரியவில்லை அந்த சோடியின் இளைஞன் உள்ளங்காலில் இருந்து தொடைவரை பெரிய கட்டுப் போட்டிருந்தான்.

 “ஆஸ்பத்திரிக்கு வந்தும் உன்னாலை சிகரெட்டை விட முடியேல்லைபெண் அவனை செல்லமாக கேபித்துக் கொண்டது என் காதில் கேட்டது. அவள் சொன்னது அந்த இளைஞன் காதில் தெளிவாகக் கேட்டிருக்கும் ஆனாலும்  அவன் தன்பாட்டுக்கு புகையை உள் இழுத்து வெளியே தள்ளிக் கொண்டிருந்தான்.

இப்பொழுது எனது மனது பதினைந்து வருடங்களுக்கு பின்னால் போய் நின்றது.

உள்ளே புகை பிடிக்க அனுமதி இல்லாததால்  வேலை இடத்துக்கு வெளியே அடிக்கடி போக வேண்டி இருந்தது. அன்றும்  வேலை நேரத்தில் வெளியே போட்டிருந்த வாங்கிலில் இருந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன்.

“உன்னை அங்கை காணேலை எண்டவுடன் இஞ்சைதான் இருப்பாய் எண்டு நினைச்சன்சிகரெட்டை பற்ற வைச்சுக் கொண்டு  குமாரசாமி அண்ணன் எனக்குப் பக்கத்தில் வந்து இருந்தார்.

“என்ன புதினம் கவி?”

“இண்டைக்கு உங்கடை பிறந்தநாள்

“ஓமடா நேற்று படுக்கைக்கு போகக்கை நினைச்சனான். காலமை எழும்பக்கை அதை மறந்து போனன். பார் என்ரை  மனுசியும் எனக்கு நினைப்பூட்டேல்லை

“பின்னேரம் நீங்கள் வீட்டை போகக்கை  சில நேரம் உங்களுக்கு ஒரு சேர்ப்பிரைஸ் பார்டி  இருக்கலாம்

“இருக்கும் போலைத்தான் கிடக்குது. காலமை என்னைப் பார்த்து மனுசி கொடுப்புக்குள்ளை சிரிக்கக்கை, என்ரை முகத்தைப் பார்த்து சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு எண்ட நினைப்புத்தான் வந்தது  பிறந்தநாளைப் பற்றி யோசனையே வரயில்லை. அது போகட்டும் என்ரை பிறந்த நாளுக்கு நீ என்ன தரப்போறாய்?”

“ஒரு பக்கெற் சிகரெட்?”

“சிகரெட்டோ? இந்தக் கோதாரியை எப்ப விடலாம் எண்டிருக்கிறன்

“எனக்கும்தான் அந்த நினைப்பு இருக்கு

“இதை விட்டால் நல்லதுதாண்டா. உடுப்பு, உடம்பு எல்லாம் ஒரே சிகரெட் மணம்தான். வீட்டிலையும் அப்பப்ப அர்ச்சனையும் விழும். மனுசி மட்டுமில்லை பெட்டைகளும் பேசுவாளுகள்

“அப்ப விட்டிடுங்கோ

“பேய்க்கதை கதைக்கிறாய். நாற்பது வருசமா பத்துறன். உடனை விடேலுமே? வேணுமெண்டால் ஒவ்வொண்டாகக் குறைச்சுக் கொண்டு வந்து...”

“இது நடக்கிற காரியமா இருக்காது. விடுறதெண்டால் ஒரேயடியா விடோணும்

“உதெல்லாம் பேச்சுக்குத்தான் சரிவரும்

“மனசுதாணன்னை எல்லாம்

“இவ்வளவு கதைக்கிறாய் உன்னாலை விடேலுமோ?”

“ஓகே. நான் விடுறன். உங்கடை பேர்த் டே அண்டு, சிகரெட் பிடிக்கிறதில்லை எண்டு முடிவெடுப்போம்.” 

“நீ விடுறதெண்டால் நானும் ரெடி

குமாரசாமி அண்ணன் அப்படிச் சொன்னதும் பத்திக் கொண்டிருந்த எனது சிகரெட்டை பாதியிலேயே அணைத்தேன்.

“நீ நூத்தால் நானும் நூப்பன்”  என்னைப் பார்த்து தனது சிகரெட்டையும் குமாரசாமி அண்ணை அணைத்துப் போட்டார்.

என் பொக்கெற்றில் இருந்த சிகரெட் பக்கெற்றை எடுத்து அருகில் இருந்த குப்பை வாளிக்குள் போட்டேன்

“புதுப் பக்கெற் போலை இருக்கு?”

“ஓம். இப்பதான் வேண்டினனான். ஒண்டுதான் அதுவும் பாதிதான், இப்ப பத்தினதுசொல்லிவிட்டு எழுந்து கொண்டேன். குமாரசாமி அண்ணனும்  என்னுடன் கூட வந்தார்

இரண்டு நாள் கழித்துப் பார்த்தால் வேலை இடத்தில் வெளியே போட்டிருந்த வாங்கிலில் இருந்து குமாரசாமி அண்ணன் சிகரெட் பத்திக் கொண்டிருந்தார்

“என்னண்ணை திரும்பத் தொடங்கிட்டீங்களே?”

“விட்டால்தானே திரும்பத் தொடங்கிறதுக்கு

நீ சிகரெட் பக்கெற்றைபின்னுக்குள்ளை போட்டுட்டுப் போட்டாய். அநியாயமா ஒரு சிகரெட் பக்க்கெற்றை எறிஞ்சது மனசுக்கு ஒரு மாதிரி இருந்துது. திரும்ப வந்து எடுத்து என்ரை சேர்ட் பொக்கெற்றுக்குள்ளை வைச்சிட்டன். சேர்ட்  பொக்கெற்றுக்கும்  வாய்க்கும் கனக்கத் தூரமில்லைப் பார்

“சரி அந்தப் பக்கெற் முடிஞ்சதுக்குப் பிறகு புதுசு வேண்டிப் போடாதையுங்கோ

“அடப் போடா. இது அதுக்குப் பிறகு இரண்டாவது பக்கெற்

இழுக்க இழுக்க இன்பம் தந்தத சிரெட்தான் குமாரச்சாமி அண்ணனை இப்பொழுது ஆஸ்பத்திரிக் கட்டிலிலுக்கு இழுத்து வந்திருக்கிறது.

“மனுசியிட்டை தேத்தண்ணி போடச் சொல்லிப் போட்டு கதிரையிலை இருந்தனான். திடீரென கண் இருட்டிக் கொண்டு வந்துது. மேசையிலை அப்பிடியே படுத்திட்டன். நல்லவேளை மூத்தமகள் கண்டிட்டு உடனை அம்புலன்ஸுக்கு அடிச்சிட்டாள். ஐஞ்சு நிமிசத்துக்குள்ளை வந்திட்டாங்கள்அவங்கள் வந்துநித்திரை கொள்ளாதை நித்திரை கொள்ளாதைஎண்டு கன்னத்தில் அடிச்சடிச்சு அம்புலன்ஸிலை என்னை ஏத்தின ஞாபகம். சத்தி எடுத்தனான் எண்டும் சொல்லிச்சினம். பிள்ளைகளும் மனுசியும் நல்லா பயந்து போட்டினம் கவி

“இப்ப எப்பிடி இருக்கண்ணை?”

“பாக்கேல்லையே. உடம்பெல்லாம் வயறுகள். 24 மணித்தியாலமும் கொம்புயூற்றரிலை கவனிப்பாம்

“சாப்பிட ஏலுமா இருக்குதுதானே?”

“வட்டம், நீள் வட்டம் சிவப்பு, வெள்ளை எண்டு கொஞ்சக் குளிசைகள் காலமையிலை கொணந்து தருவாங்கள் அதை விழுங்கி தண்ணியும் குடிச்சால் வயிறுபுள்’. அதுக்கு மேலை காலமைச் சாப்பாடு எண்டு பெரிசா எல்லாம் தேவையில்லை. சும்மா சொல்லக் கூடாது மத்தியானம் உண்மையிலை  நல்ல சாப்பாடுதான். என்ன Input,Output எல்லாம் படுக்கையிலை எண்டபடியால் கொஞ்சம் கூச்சமா இருக்கு

“அதுக்காக சாப்பிடாமல் இருக்கேலுமே

“சாப்பிடாடு முக்கியமெல்லே. சாப்பிடுறன்தான். எண்டாலும் கவி, நீ மனதிலை திடமான ஆள்தான். உன்னைப் போலை நானும் அண்டைக்கே சிகரெட்டை விட்டிருக்கோணும்

“இப்ப இங்கை உங்களாலை சிகரெட் இல்லாமல் இருக்க முடியுதுதானே. ஆஸ்பத்திரியை விட்டு வெளியாலை வந்தாப் போலையும் நீங்கள் சிகரெட் இல்லாமல் இருக்கலாம்

“ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வருவேன் எண்டு நினைக்கிறீயே?”

“வருவீங்கள். வெளியிலை வந்த உடனே நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை என்ன எண்டால் அந்த கரித்துண்டை தூக்கி எறியிறதுதான்” 

குமாரசாமி அண்ணனுக்குச் சொல்லிப் போட்டு வந்திருக்கிறேன்.

ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்.

 

கவி அருணாசலம்

31.05.2018

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பழக்கங்களை மரணத்திற்குக் கிட்டவாகப் போய் வந்தாலும் மாத்தலேலாது. 

 

Link to comment
Share on other sites

புகை ஒரு போதையண்ணே. ஒருமுறை ஆட்கொண்டால் அடிச்சு கலைக்கிறது ரொம்ப கஷ்டம். சரி நீங்கள் இப்போ விட்டுவிட்டீங்கள் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

அந்த கரித்துண்டை தூக்கி  அங்காலை எறியுங்கோ

9_F8_DC7_A0-40_B6-4_DD9-83_DC-77_B11_D49

கார்ல் ஒல்காß ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தபோது என்னுள் இருந்த வழமையான கலகலப்பு இல்லாமல் போயிருந்தது.குமாரசாமி அண்ணன் எனது வேலையிடத்துத் தோழன். தோழன் என்று ஒருமையில் சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது தோழர் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் குமாரசாமி அண்ணன் என்னைவிட ஆறு வயதுகள் மூத்தவர். ஆனால் குமாரசாமி அண்ணன் வயது வித்தியாசத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட்டுகவி, கவி..” என்று சொல்லி ஒரு சம வயது நண்பனாகவே என்னுடன் பழகிக் கொண்டிருந்தார்.

“கத்தரிக்காயை  நல்ல மெல்லிய துண்டுகளாகச் சீவி சின்னன் சின்னனா வெட்டி எண்ணையிலை போட்டு  ‘கலகலஎண்டு பொரிச்செடுத்து வைச்சிட்டுஊர் வெங்காயத்தையும் பிஞ்சு மிளகாயையும் குறுணியா வெட்டி பொரிச்ச கத்தரிக்காய்க்குள்ளை போட்டு, அதுக்குள்ளை தேங்காய்ப்பால், மிளகு, சின்னச் சீரகத்தூள், உப்புதேசிக்காய் புளி விட்டு கையாலை நல்லா பினைஞ்சு சாப்பிட்டுப்பார் அந்த மாதிரி இருக்கும். அந்தக் கத்தரிக்காய்ச் சம்பல் ஒண்டு போதும் இரண்டு கோப்பை சோறு சாப்பிடலாம். கொஞ்சமா தண்ணி அடிச்சிட்டாய் எண்டால், கோழி நெஞ்சிறைச்சியை சின்னஞ் சின்னதா வெட்டிப் பொரிச்சு, பிசைஞ்சு வைச்சிருக்கிற கத்திரிக்காய்க்குள் போட்டு குழைச்சு சாப்பிட்டுப் பார் தண்ணி அடிச்ச வாய்க்கு அமிர்தமா இருக்கும்

குமாரசாமி அண்ணன் சொல்லித் தந்த ஒரு சமையல் குறிப்பு அது. அவர் சொன்ன அந்த  கத்தரிக்காய்ச் சம்பலின் ருசி வீட்டில் எல்லோருக்கும் பிடித்துப் போனது. இன்று எனது வீட்டில் நடக்கும் விசேசங்களில் எல்லாம் கத்திரிக்காய்ச் சம்பல் கண்டிப்பாக இருக்கும். ஒவ்வொரு தடவையும் கத்திரிக்காய்ச் சம்பல் செய்யும் போது அவர் முகம் மனதில் வரும்.

இன்று ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் அவரைப் பார்க்கத்தான் வந்திருந்தேன். கார்ல் ஒல்கா ஆஸ்பத்திரியில் இருந்து எனது வீடு  பெரிய தூரம் என்றில்லை எழுபது கிலோ மீற்றர்கள்தான், நெடுஞ்சாலையினூடாகப் பயணித்தால் ஒரு மணித்தியாலத்துக்குள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனாலும் ஆஸ்பத்திரியின் வாசலில் கொஞ்சம் இருந்துவிட்டுப் போகலாம் என்ற எண்ணம் வர வெளியே யாருமே இல்லாமல் தனியாக இருந்த வாங்கிலில் போய் அமர்ந்து கொண்டேன். தனியாக இருக்கலாம் என்று நினத்தால் அந்த வாங்கிலை ஒரு இளம் சோடி வந்து பங்கு போட்டுக் கொண்டது

வேலை இடத்தில் விழுந்தானா இல்லை கால்பந்து விளையாடி காலை முறித்துக் கொண்டானா தெரியவில்லை அந்த சோடியின் இளைஞன் உள்ளங்காலில் இருந்து தொடைவரை பெரிய கட்டுப் போட்டிருந்தான்.

 “ஆஸ்பத்திரிக்கு வந்தும் உன்னாலை சிகரெட்டை விட முடியேல்லைபெண் அவனை செல்லமாக கேபித்துக் கொண்டது என் காதில் கேட்டது. அவள் சொன்னது அந்த இளைஞன் காதில் தெளிவாகக் கேட்டிருக்கும் ஆனாலும்  அவன் தன்பாட்டுக்கு புகையை உள் இழுத்து வெளியே தள்ளிக் கொண்டிருந்தான்.

இப்பொழுது எனது மனது பதினைந்து வருடங்களுக்கு பின்னால் போய் நின்றது.

உள்ளே புகை பிடிக்க அனுமதி இல்லாததால்  வேலை இடத்துக்கு வெளியே அடிக்கடி போக வேண்டி இருந்தது. அன்றும்  வேலை நேரத்தில் வெளியே போட்டிருந்த வாங்கிலில் இருந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன்.

“உன்னை அங்கை காணேலை எண்டவுடன் இஞ்சைதான் இருப்பாய் எண்டு நினைச்சன்சிகரெட்டை பற்ற வைச்சுக் கொண்டு  குமாரசாமி அண்ணன் எனக்குப் பக்கத்தில் வந்து இருந்தார்.

“என்ன புதினம் கவி?”

“இண்டைக்கு உங்கடை பிறந்தநாள்

“ஓமடா நேற்று படுக்கைக்கு போகக்கை நினைச்சனான். காலமை எழும்பக்கை அதை மறந்து போனன். பார் என்ரை  மனுசியும் எனக்கு நினைப்பூட்டேல்லை

“பின்னேரம் நீங்கள் வீட்டை போகக்கை  சில நேரம் உங்களுக்கு ஒரு சேர்ப்பிரைஸ் பார்டி  இருக்கலாம்

“இருக்கும் போலைத்தான் கிடக்குது. காலமை என்னைப் பார்த்து மனுசி கொடுப்புக்குள்ளை சிரிக்கக்கை, என்ரை முகத்தைப் பார்த்து சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு எண்ட நினைப்புத்தான் வந்தது  பிறந்தநாளைப் பற்றி யோசனையே வரயில்லை. அது போகட்டும் என்ரை பிறந்த நாளுக்கு நீ என்ன தரப்போறாய்?”

“ஒரு பக்கெற் சிகரெட்?”

“சிகரெட்டோ? இந்தக் கோதாரியை எப்ப விடலாம் எண்டிருக்கிறன்

“எனக்கும்தான் அந்த நினைப்பு இருக்கு

“இதை விட்டால் நல்லதுதாண்டா. உடுப்பு, உடம்பு எல்லாம் ஒரே சிகரெட் மணம்தான். வீட்டிலையும் அப்பப்ப அர்ச்சனையும் விழும். மனுசி மட்டுமில்லை பெட்டைகளும் பேசுவாளுகள்

“அப்ப விட்டிடுங்கோ

“பேய்க்கதை கதைக்கிறாய். நாற்பது வருசமா பத்துறன். உடனை விடேலுமே? வேணுமெண்டால் ஒவ்வொண்டாகக் குறைச்சுக் கொண்டு வந்து...”

“இது நடக்கிற காரியமா இருக்காது. விடுறதெண்டால் ஒரேயடியா விடோணும்

“உதெல்லாம் பேச்சுக்குத்தான் சரிவரும்

“மனசுதாணன்னை எல்லாம்

“இவ்வளவு கதைக்கிறாய் உன்னாலை விடேலுமோ?”

“ஓகே. நான் விடுறன். உங்கடை பேர்த் டே அண்டு, சிகரெட் பிடிக்கிறதில்லை எண்டு முடிவெடுப்போம்.” 

“நீ விடுறதெண்டால் நானும் ரெடி

குமாரசாமி அண்ணன் அப்படிச் சொன்னதும் பத்திக் கொண்டிருந்த எனது சிகரெட்டை பாதியிலேயே அணைத்தேன்.

“நீ நூத்தால் நானும் நூப்பன்”  என்னைப் பார்த்து தனது சிகரெட்டையும் குமாரசாமி அண்ணை அணைத்துப் போட்டார்.

என் பொக்கெற்றில் இருந்த சிகரெட் பக்கெற்றை எடுத்து அருகில் இருந்த குப்பை வாளிக்குள் போட்டேன்

“புதுப் பக்கெற் போலை இருக்கு?”

“ஓம். இப்பதான் வேண்டினனான். ஒண்டுதான் அதுவும் பாதிதான், இப்ப பத்தினதுசொல்லிவிட்டு எழுந்து கொண்டேன். குமாரசாமி அண்ணனும்  என்னுடன் கூட வந்தார்

இரண்டு நாள் கழித்துப் பார்த்தால் வேலை இடத்தில் வெளியே போட்டிருந்த வாங்கிலில் இருந்து குமாரசாமி அண்ணன் சிகரெட் பத்திக் கொண்டிருந்தார்

“என்னண்ணை திரும்பத் தொடங்கிட்டீங்களே?”

“விட்டால்தானே திரும்பத் தொடங்கிறதுக்கு

நீ சிகரெட் பக்கெற்றைபின்னுக்குள்ளை போட்டுட்டுப் போட்டாய். அநியாயமா ஒரு சிகரெட் பக்க்கெற்றை எறிஞ்சது மனசுக்கு ஒரு மாதிரி இருந்துது. திரும்ப வந்து எடுத்து என்ரை சேர்ட் பொக்கெற்றுக்குள்ளை வைச்சிட்டன். சேர்ட்  பொக்கெற்றுக்கும்  வாய்க்கும் கனக்கத் தூரமில்லைப் பார்

“சரி அந்தப் பக்கெற் முடிஞ்சதுக்குப் பிறகு புதுசு வேண்டிப் போடாதையுங்கோ

“அடப் போடா. இது அதுக்குப் பிறகு இரண்டாவது பக்கெற்

இழுக்க இழுக்க இன்பம் தந்தத சிரெட்தான் குமாரச்சாமி அண்ணனை இப்பொழுது ஆஸ்பத்திரிக் கட்டிலிலுக்கு இழுத்து வந்திருக்கிறது.

“மனுசியிட்டை தேத்தண்ணி போடச் சொல்லிப் போட்டு கதிரையிலை இருந்தனான். திடீரென கண் இருட்டிக் கொண்டு வந்துது. மேசையிலை அப்பிடியே படுத்திட்டன். நல்லவேளை மூத்தமகள் கண்டிட்டு உடனை அம்புலன்ஸுக்கு அடிச்சிட்டாள். ஐஞ்சு நிமிசத்துக்குள்ளை வந்திட்டாங்கள்அவங்கள் வந்துநித்திரை கொள்ளாதை நித்திரை கொள்ளாதைஎண்டு கன்னத்தில் அடிச்சடிச்சு அம்புலன்ஸிலை என்னை ஏத்தின ஞாபகம். சத்தி எடுத்தனான் எண்டும் சொல்லிச்சினம். பிள்ளைகளும் மனுசியும் நல்லா பயந்து போட்டினம் கவி

“இப்ப எப்பிடி இருக்கண்ணை?”

“பாக்கேல்லையே. உடம்பெல்லாம் வயறுகள். 24 மணித்தியாலமும் கொம்புயூற்றரிலை கவனிப்பாம்

“சாப்பிட ஏலுமா இருக்குதுதானே?”

“வட்டம், நீள் வட்டம் சிவப்பு, வெள்ளை எண்டு கொஞ்சக் குளிசைகள் காலமையிலை கொணந்து தருவாங்கள் அதை விழுங்கி தண்ணியும் குடிச்சால் வயிறுபுள்’. அதுக்கு மேலை காலமைச் சாப்பாடு எண்டு பெரிசா எல்லாம் தேவையில்லை. சும்மா சொல்லக் கூடாது மத்தியானம் உண்மையிலை  நல்ல சாப்பாடுதான். என்ன Input,Output எல்லாம் படுக்கையிலை எண்டபடியால் கொஞ்சம் கூச்சமா இருக்கு

“அதுக்காக சாப்பிடாமல் இருக்கேலுமே

“சாப்பிடாடு முக்கியமெல்லே. சாப்பிடுறன்தான். எண்டாலும் கவி, நீ மனதிலை திடமான ஆள்தான். உன்னைப் போலை நானும் அண்டைக்கே சிகரெட்டை விட்டிருக்கோணும்

“இப்ப இங்கை உங்களாலை சிகரெட் இல்லாமல் இருக்க முடியுதுதானே. ஆஸ்பத்திரியை விட்டு வெளியாலை வந்தாப் போலையும் நீங்கள் சிகரெட் இல்லாமல் இருக்கலாம்

“ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வருவேன் எண்டு நினைக்கிறீயே?”

“வருவீங்கள். வெளியிலை வந்த உடனே நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை என்ன எண்டால் அந்த கரித்துண்டை தூக்கி எறியிறதுதான்” 

குமாரசாமி அண்ணனுக்குச் சொல்லிப் போட்டு வந்திருக்கிறேன்.

ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்.

 

கவி அருணாசலம்

31.05.2018

 

சமூக நலன் சார்ந்த,  அறிவு ஊட்டும்,  விழிப்பு உணர்வு  சார்ந்த அழகான கதை,  ✒️கவி அருணாசலம். ?
அதற்கு மேலும், கதைக்கு... நீங்கள் தயாரித்த முகப்பு படம். ?
மொத்தத்தில்.. மனதை  சிந்திக்க வைத்த  அருமையான கதை.   ?

உங்கள் கதையில்... எதனை  மேற்கோள் காட்டி கருத்து எழுதுவது என்று தெரியாமல்,
?️ முழுக் கதையையும் பதிந்தமைக்கான  காரணம்....
 ? வரி, வரியாக அத்தனை எழுத்துக்களையும்... மனதில் உள் வாங்கி   ரசித்தேன்.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழிப்புணர்வை தரும் ஒரு புகைமூட்டமான கதை. உள்ளே ஒரு பொறி தெரியுது. கடவுளே, அது சிகரெட் பொறியாக இருக்கக் கூடாது....

.!  ☠️  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுடு காட்டு ஞானம் என்று கேள்விப்பட்டிருப்பீங்க. அதுதான் இந்த கரித்துண்டுதூக்கி அங்கால எறியுறதும். வைத்தியசாலையில் வந்து பார்த்து விட்டு இனி இதைத் தொடமாட்டம் எண்டு சத்தியம்செய்திற்றுப்போன பல நண்பர்களைப் பார்த்து நான் சிறிது நிம்மதியானேன். ஆனால் ஒருவரும் இதுவரை தூக்கி எறிந்ததாக தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9_F8_DC7_A0-40_B6-4_DD9-83_DC-77_B11_D49

நானும் ஒரு காலத்திலை பெரிய தம் அடிகாரன் தான்.

ஒருக்கால் விடியப்பறம் ஒரு உலுப்பின உலுப்போடை அம்புலன்ஸ்சிலை ஏத்திக்கொண்டு போனவங்கள் தான்...

அந்த பெரிய கிளினிக்கிலை வைச்சு 68 குளிசையும் தந்து...மூளையையும் நல்லவடிவாய் கழிவி விட்டுத்தான் வெளியிலை விட்டவங்கள். அண்டைக்கு விட்ட கரிக்கோச்சியை இண்டுவரைக்கும் தொடவேயில்லை.

அந்தமாதிரி மூளையை கிளீன் பண்ணிப்போட்டுத்தான்  வெளியிலை விட்டவையள்.


ஆனால் ஒண்டு டெய்லி 20/30 சிகரெட் பத்துற சனமும் நோய்நொடியில்லாமல் இருக்கினம்....

அதே நேரம் ஒரு நாளைக்கு 5 சிகரெட் பத்தினவன் குறுக்காலை போனதும் இருக்கு....

எல்லாம் அவரவர் உடம்பு வாசி கண்டியளோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக இன்னுமொரு குமாரசாமியார் ஏற்கனவே போய் வந்திட்டார். 

15 hours ago, குமாரசாமி said:

அந்தமாதிரி மூளையை கிளீன் பண்ணிப்போட்டுத்தான்  வெளியிலை விட்டவையள்.

கிளீன் என்று நீங்கள் குறிப்பிடுவதற்கு என்னால் இரண்டு அர்த்தம் கொள்ள முடிகிறது. நான் நீங்கள் நினைத்ததையே எடுத்துக் கொள்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 முதலில் கரித்துண்டை ஆர்வ கோளினால் பற்றிக் கொள்வார்கள்  சில காலம் செல்ல அது உங்களை பற்றிக் கொள்ளும் விடாது ..பின் விளைவுகள் ஏராளம்.  அது ஓர் வகை போதை . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.