Jump to content

பழம்பெரும் இயக்குனரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் காலமானார்


Recommended Posts

பழம்பெரும் இயக்குனரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் காலமானார்

அ-அ+

பழம்பெரும் தயாரிப்பாளரும், இயக்குனருமான முக்தா சீனிவாசன் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். #MukthaSrivasan #RIPMukthaSrivasan

 
பழம்பெரும் இயக்குனரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் காலமானார்
 
 
சென்னை:
 
முக்தா சீனிவாசன் (88), தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். அவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 100-வது படமான ‘சூரியகாந்தி’, ரஜினிகாந்த் நடித்த ‘பொல்லாதவன்’ உட்பட, 65 படங்களை இயக்கி உள்ளார். நாயகன் உட்பட, ஏராளமான படங்களைத் தயாரித்தும் உள்ளார். இவர் இயக்குனர் மட்டுமன்றி சிறந்த எழுத்தாளரும் ஆவார்.
 
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்றிரவு காலமானார். அவரது மனைவி பெயர் பிரேமா. அவருக்கு முக்தா சுந்தர், முக்தா ரவி என்ற மகன்களும், மாயா என்ற மகளும் உள்ளனர். 
 
அவரது உடல் தி.நகரில், வைத்திய ராமன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முக்தா சீனிவாசன் ஏறக்குறைய 70 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் பிரபலாமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #MukthaSrivasan #RIPMukthaSrivasan

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/29222637/1166517/Director-cum-Producer-Muktha-Srivasan-passed-away.vpf

 

 

பழம்பெரும் இயக்குநர் முக்தா சீனிவாசன் காலமானார்!

 

பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 

முக்தா சீனிவாசன்

 

1958 -ம் ஆண்டு 'முதலாளி' என்ற படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் முக்தா சீனிவாசன். பின், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோரை வைத்துப் பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். ரஜினி நடித்த 'பொல்லாதவன்' படத்தை இயக்கியவரும் இவரே. ஜெயலலிதாவின் 100 -வது படமான 'சூரியகாந்தி' படத்தையும் இவர்தான் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 65 படங்களை இயக்கிய இவர் தன் முதல் படத்திற்கே தேசிய விருது பெற்றுள்ளார். 'நாயகன்' உட்பட ஏராளமான படங்களை தயாரித்துள்ளார்.

 

இயக்குநர், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி அரசியலிலும் தடம் பதித்துள்ளார். மூப்பானார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த போது, அக்கட்சியின் பொதுச் செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.  இதுவரையிலும் சுமார் 350 சிறுகதைகள், மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதியிருக்கும் சிறுகதைகள் அனைத்தும் 16 தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. மேலும் ‘தமிழ்த் திரைப்பட வரலாறு’, ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரலாறு’, ‘கலைஞர்களோடு நான்’, ‘கதாசிரியர்களோடு நான்’, ‘அறிஞர்களோடு நான்’ போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகித்த இவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. 

https://www.vikatan.com/news/tamilnadu/126277-director-cum-producer-muktha-srinivasan-passed-away.html

Link to comment
Share on other sites

முக்தா சீனிவாசன் எனும் நிறைகுடம்!

 
 
31CHRAJANEDIT1MUKTHASRINIVASAN1
 

தமிழ்த் திரையுலகிலும் அரசியலிலும் அறுபதாண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட முக்தா வி.சீனிவாசன் மறைந்துவிட்டார். பழைய தலைமுறைத் திரைப்பட ரசிகர்கள், கலைஞர்கள், அரசியல் தலைவர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். இன்றைய தலைமுறை ரசிகர்கள் அவரிடம் தெரிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உண்டு.

 

விடுதலைப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த முக்தா வி.சீனிவாசன் 1940-களில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். மணலி கந்தசாமி, கே.பாலதண்டாயுதம், ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி போன்றவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார். கம்யூனிஸ்ட் இயக்கம் தடைசெய்யப்பட்ட போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், அரசுப் பணியை இழக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. தமிழ்த் திரைத் துறைக்கு ஒரு நல்ல தயாரிப்பாளர் இப்படித்தான் கிடைத்தார்.

 

இயக்குநர் சீனிவாசன்

கீழிருந்து மேலே வந்தவர் சீனிவாசன். எழுத்துத் துறையோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தவர். ஆரம்பக் காலத்தில் பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு இருந்தது. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இணைந்து டி.ஆர்.சுந்தரத்திடம் வசனப் பிரிவில் பணியில் இணைந்தார். அங்கேதான் மு.கருணாநிதியுடன் நட்பு ஏற்பட்டது. எல்லீஸ் ஆர்.டங்கன், வீணை எஸ்.பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்தார். அந்த அனுபவம் அவரது திரையுலகப் பயணத்துக்கு உதவியாக இருந்தது.

1957-ல் சீனிவாசன் இயக்கிய முதல் திரைப்படமான ‘முதலாளி’ வெளிவந்தது. முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற பெருமை அவருக்கு உண்டு. சீனிவாசன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த ‘நிறைகுடம்’, ‘அந்தமான் காதலி’, ‘இமயம்’ போன்ற படங்கள் அவருக்குப் பெயர் பெற்றுத் தந்தன. ஜெயலலிதா நடித்த ‘பொம்மலாட்டம்’, ‘அன்பைத் தேடி’ போன்ற படங்களை இயக்கிய பெருமை முக்தா சீனிவாசனுக்கு உண்டு. ஜெயலலிதாவின் சிறந்த நடிப்புத் திறனை வெளிக்கொணர்ந்த ‘சூரியகாந்தி’ முக்தா சீனிவாசனின் படைப்புதான். ஜெயலலிதா, சீனிவாசன் மீது இறுதி வரை மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார்.

சீனிவாசன் இயக்கிய ‘இதயத்தில் நீ’ திரைப்படத்தின் மூலமாகத்தான் ஒரு பாடலாசிரியராகப் பெரும் புகழ் பெற்றார் வாலி. கமல்ஹாசன் நடித்த ‘அந்தரங்கம்’ படம் சீனிவாசன் இயக்கியதே. இப்படத்தில்தான் முதன்முதலில் கமல்ஹாசன் பாடகர் அவதாரம் எடுத்தார் (‘ஞாயிறு ஒளி மழையில்’). ரஜினிகாந்த் நடித்த, ‘சிவப்பு சூரியன்’, ‘பொல்லாதவன்’ போன்ற படங்களையும் இயக்கியிருக்கிறார். என்றாலும் சீனிவாசனின் பெரிய சாதனை என்று அவருடைய தயாரிப்பையே சொல்வேன்.

 

கச்சிதத்துக்குப் பேர் போனவர்

எல்லாவற்றையும் முன்கூட்டி திட்டமிட்டும் கச்சிதமாகப் பணிகளை முடிப்பதும் சீனிவாசனின் பாணி. குறைந்த நாட்களில் படம் எடுப்பதை ஒரு கலையாக அவர் மாற்றினார். அதேசமயம், இயக்குநர்களுக்குக் குறுக்கே நிற்காதவராகவும் இருந்தார். சீனிவாசனும், அவரது அண்ணன் வி.ராமசாமியும் இணைந்து நடத்திய ‘முக்தா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் 45 படங்களைத் தயாரித்தது. இவற்றில் 20 படங்கள் மிகப் பெரிய வசூலைப் பெற்றன. தமிழ்த் திரையுலகின் போக்கை மாற்றிய ‘நாயகன்’ படத்தைத் தயாரித்தவர் சீனிவாசன்தான்.

சிக்கனத்துக்கும் நாணயத்திற்கும் பெயர் பெற்ற நிறுவனமாக ‘முக்தா பிலிம்ஸ்’ திகழ்ந்தது. “சம்பளம் கொஞ்சம் குறைவாகக்கூட இருக்கலாம்; ஆனால், சொன்ன தேதியில் சொன்னபடி சல்லிக்காசு பாக்கியில்லாமல் தந்துவிடுவார் சீனிவாசன்” என்ற பெயர் எப்போதும் அவருக்கு இருந்தது. படம் வெற்றியடையாவிட்டால், பெரும்பாலும் முழுமையான சம்பளம் வந்தடையாது என்ற சூழல் நிலவும் தமிழ்த் திரையுலக நிசர்சனத்துடன் ஒப்பிட்டால்தான் சீனிவாசனின் நேர்மையைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு காலத்தில் தெளிவாகத் திட்டமிட்டு திரைப்படங்களைத் தயாரித்து, வெளியிட்டு வசூலில் சாதனை புரிந்து நிறைய சொத்துகளை முக்தா சகோதரர்கள் வாங்கினார்கள். ஆனால், பிற்காலத்தில் பல நஷ்டங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனால், யாரையும் அவர்கள் நஷ்டப்படுத்தவில்லை. முக்தா திருமண மண்டபம், முக்தா தொழிற்கூடம் தொடங்கி அவர்களுடைய வீடுகள் வரை விற்று கடன்களை அடைத்தனர். சென்னையில் இன்று பாஜக தலைமையகம் உள்ள இடம் ஒருகாலத்தில் சீனிவாசனின் வீடாக இருந்தது.

 

அரசியல் பயணம்

காந்தியிடம் சீனிவாசனுக்குப் பெரிய ஈர்ப்பு இருந்தது. அவரிடம் வெளிப்பட்ட எளிமை, சிக்கனம், நேர்மை இவற்றுக்கெல்லாம் காந்தியின் தாக்கம் ஒரு முக்கியமான காரணம் என்று சொல்லலாம். அரசியலில் அவருக்கு ஆர்வம் இருந்தது. 1961-ல் காமராஜர் தலைமையை ஏற்று காங்கிரஸில் இணைந்தார். 1970-களில் சிவாஜி ரசிகர் மன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டார்.

1989-ல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக ஜி.கே.மூப்பனார் நியமிக்கப்பட்ட பின் தேனாம்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்திற்கு நாள்தோறும் வருகைபுரிய ஆரம்பித்தார். இருவரும் பால்ய சிநேகிதர்கள். இருவரும் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்கள். பக்கத்துப் பக்கத்து ஊர்க்காரர்கள். அந்த வகையில் இருவர் இடையிலும் அபரிதமான நட்பும் மரியாதையும் இருந்தது. 1999 மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட சீனிவாசன் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதுவே அவருடைய அரசியல் வீழ்ச்சியாகவும் மாறியது. திரையில் பல வெற்றிகளைக் கண்டிருந்தாலும் அரசியலில் வெற்றி பெறாதது பற்றிய வருத்தம் அவருக்கு இறுதிவரை இருந்தது. அதேபோல எழுத்துலகுடனும் நெருக்கமான உறவில் அவர் இருந்தார். இறுதிக் காலத்தில் ‘திருவிடம்’ என்கிற பதிப்பகத்தைத் தொடங்கி நிறைய நூல்களை எழுதி, வெளியிட ஆரம்பித்தார். ‘தமிழ்த் திரைப்பட வரலாறு’, ‘20 ஆம் நூற்றாண்டு சாதனைகள்’ (5 பாகங்கள்), ‘இணையற்ற சாதனையாளர்கள்’ (5 பாகங்கள்) போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

சென்னைப் புத்தகக்காட்சியில் தனது அரங்கில் புத்தகங்களுக்கு மத்தியில் அமர்ந்திருப்பார். அரங்குக்கு வரும் அனைவரையும் ‘வாங்க.. வாங்க’ என்று வாஞ்சையுடன் வரவேற்பார். அடுத்த புத்தகக்காட்சியில் சீனிவாசனைப் பார்க்க முடியாது. அதேசமயம், அவர் நினைவின்றி எவரும் கடக்கவும் முடியாது!

- ஆ.கோபண்ணா, தலைவர்,

ஊடகத்துறை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

http://tamil.thehindu.com/opinion/columns/article24043228.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.... முத்து முத்தான படங்கள் பல தந்தவர்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா....அமைதியில் உறங்கட்டும்!

ஆழ்ந்த அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.