Jump to content

"நாய்க்காப்பகம்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வருடமும் நடக்கும் இராபோசண விருந்துக்கு நான் போவது வழமை இந்த இராபோசண விருந்தை ஒழுங்கு செய்வதில் எனது நண்பர் ஒருவரும் முக்கிய பங்கு வகிக்கின்றார்.இந்த தடவையும் சென்றிருந்தேன்  இருபதைந்து டொலருக்கு ஒரு டிக்கட்டை எடுத்து போட்டு நானும் ஷரிட்டிற்க்கு காசு கொடுக்கிறனான் என்று சொல்லுவதில் எனக்கு  ஒரு பெருமை. என்னை மாதிரி கொஞ்ச சனம் புலத்தில இருக்கினம்.இன்னும் சிலர் இருக்கிறார்கள் அமைப்புக்களின் பணத்தை பொருளாதரத்தில் பின்தங்கியவர்களுக்கு கொடுத்து  அதை தாங்கள் வழங்குவது போன்று ஒரு புகைப்படுத்தை எடுத்து முகப்புத்தகத்திலும் வட்சப்பிலும் போட்டுவிடுவார்கள். அதை பார்ப்பவர்கள் நினைப்பார்கள் இவருடைய‌ பணத்தில் தான் உதவிகளை செய்கிறார்கள் என்று.

எது எப்படியோ  தேவையானோருக்கு பணம் போகின்றது. சந்தோசமடைவோம்

 

கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்வு  ஆரம்பமானது .ஒவ்வொரு வருடமும்   பேச்சாளர் தனது உரையில் தாயகத்தில் தனது அமைப்புக்கு என்ன தேவை என்பதனை சொல்லுவார். மக்களும் தங்களால் முடிந்தவற்றை கொடுத்து உதவுவார்கள். ஒவ்வொரு தடவையும் தனது உரையில் ஒன்றைமட்டும் சொல்ல தவ‌றுவதில்லை,இந்திய இராணுவம் கைது செய்து துன்புறுத்தியபடியால் கடுமையாக நோய்வாய்பப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொழுது ,தான் சுகமாகி தப்பி வந்தால் ஏழைகள்,ஆதரவற்றோர்,ஆதரவற்ற முதியோர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேணும்  என நினைத்ததாகவும் அதை தான் தொடர்ந்து செய்வதாகவும் கூறினார்.

யோகர் சுவாமிகள் நாய்குட்டிகளுக்கு எம்மவர்களால் இளைக்கப்படும் துன்பங்களை எண்ணி கவலைப்பட்டவர் என்றார்.

அதே போன்று புத்தரும் ச‌கல உயிரினங்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்ற கொள்கையை உடையவர்.

இதை எங்கோ வாசித்த மகிந்தா கட்டாகாலி நாய்களை பிடிப்பதை தடை செய்து விட்டார்.இதனால் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது அவைகள் பல்கி பெருகி இப்பொழுது பொதுமக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகின்றது என குறைப்பட்டு கொண்டார் அந்த பெரியவர்.

Image result for à®à®à¯à®à®¾à®à®¾à®²à®¿ நாயà¯à®à®³à¯

இந்த நாய்களுக்கு ஓர் காப்பகம் அமைத்து அதை பாரமரிக்க வேண்டு என்று சொன்னவுடன் ,நான் திகைத்து விட் டேன்.இதை அறிந்த ஐயா நகைச்சுவையாக இப்படி கூறினார்" நீங்கள் இப்ப எனக்கு அடிக்க வந்தாலும் வருவியள் எல்லாம் முடிஞ்சு இப்ப உவர் நாய் பாராமரிக்க வந்திட்டார்.எல்லோரும் கை தட்டினோம்

நாங்கள் வளர்ந்த நாட்டில் நாய்களுக்கு எப்படியான மரியாதை கொடுக்கப்பட்டது என்பதை  அறிந்தவன்.

சின்ன வயதில் ஞாபகம் இருக்கின்றது சிறு பிள்ளைகளை பயப்படுத்துவதற்கு  நாய் பிடிக்கிறவன் வானில வந்து பிடிச்சு கொண்டு போய்விடுவான் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.அந்த கால கட்டத்தில் நகரசபைகள் நாய்களை பிடித்து கொண்டு சென்று அழித்துவிடுவார்கள்.

Image result for à®à®à¯à®à®¾à®à®¾à®²à®¿ நாயà¯à®à®³à¯

2006 ஆம் ஆண்டு மகிந்தா நாய்களுக்கும் வாழ உரிமை உண்டு  தெரு நாய்களை பிடித்து கொல்ல கூடாது என சட்டத்தை கொண்டுவந்த பின்பு நகரசபைகள் நாய் பிடிப்பதை நிறுத்தி விட்டனர் .இதனால் தெரு நாய்கள் பெருகி கொண்டு போகின்றது.

சில நாய்கள் மனிதர்களுக்கு கடித்தும் விடுகின்றனவாம்.

யாழ் நகரில் கட்டாகாலி நாய்களை ஜேர்மன் நாட்டு பெண்மணிஒருவர் பார்த்து கவலை அடைந்து  அவரை சந்தித்து இவை பாராமரிப்பற்று இருப்பதன் காராணத்தை கேட்டதாகவும் சொன்னார்.

அந்தபெண்மணியின் பின்னால் அங்கு நின்ற கட்டாகாலி நாய்கள் எல்லாம் வாலை ஆட்டிகொண்டு சென்றதை பார்த்து ஆச்சரியமடைந்த‌தையும் கூறினார்.

ஜேர்மன் பெண்மணி சொன்னாராம் இந்த நாய்கள் எனக்கு பின்னால் வருவதற்கு காரணம் தனது ரத்தத்தில் நாய்பாசம் கலந்துள்ளது அதுதான் இவைகள் எனக்கு பின்னால் வருகின்றன என்றாராம்.

கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுவதால் அங்கு அதிக நாய்கள் தஞ்சமடைந்துள்ளன இதனால் பக்தகோடிகளுக்கும் பிரச்சனைகள் உருவாகின்றன எனவே ஐயா இந்த நாய்களுக்கு ஒரு காப்பகம் அமைக்க முயற்சி செய்துள்ளார் . எமது முன்னாள் பாடசாலை அதிபரின் இரண்டு ஏக்கர் காணி இயக்கச்சி காட்டினுள் உள்ளதாம் அதை அவர் இவரது தொண்டு நிறுவனத்திற்கு அளித்துள்ளார் . இந்த காணியில் காப்பகத்தை அமைக்க ஐயா உத்தேசித்துள்ளார்.

அது வெற்றியடையும் என எதிர்பார்க்கலாம்.ஐயா நகைச்சுவையாக இந்த நாய்களுக்கு சாம்பாரும் சோறும்தான் உணவாக வழங்கப்படும் என்று சொன்னார்

. சுவாமிகளும் ,எனையோரும் ,நாங்களும் ஐயோ நாய்கள் பாவம் என்று சொல்லுகிறோம் ஆனால் ஒருத்தரும் அவற்றை பாதுகாக்க எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை ஆனால் ஐயா செயலில் ஈடுபட்டமை பாராட்ட படவேண்டிய ஒர் விடயமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/29/2018 at 8:54 AM, putthan said:

------யாழ் நகரில் கட்டாகாலி நாய்களை ஜேர்மன் நாட்டு பெண்மணிஒருவர் பார்த்து கவலை அடைந்து  அவரை சந்தித்து இவை பாராமரிப்பற்று இருப்பதன் காராணத்தை கேட்டதாகவும் சொன்னார்.

அந்தபெண்மணியின் பின்னால் அங்கு நின்ற கட்டாகாலி நாய்கள் எல்லாம் வாலை ஆட்டிகொண்டு சென்றதை பார்த்து ஆச்சரியமடைந்த‌தையும் கூறினார்.

ஜேர்மன் பெண்மணி சொன்னாராம் இந்த நாய்கள் எனக்கு பின்னால் வருவதற்கு காரணம் தனது ரத்தத்தில் நாய்பாசம் கலந்துள்ளது அதுதான் இவைகள் எனக்கு பின்னால் வருகின்றன என்றாராம்.

கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுவதால் அங்கு அதிக நாய்கள் தஞ்சமடைந்துள்ளன இதனால் பக்தகோடிகளுக்கும் பிரச்சனைகள் உருவாகின்றன எனவே ஐயா இந்த நாய்களுக்கு ஒரு காப்பகம் அமைக்க முயற்சி செய்துள்ளார் . எமது முன்னாள் பாடசாலை அதிபரின் இரண்டு ஏக்கர் காணி இயக்கச்சி காட்டினுள் உள்ளதாம் அதை அவர் இவரது தொண்டு நிறுவனத்திற்கு அளித்துள்ளார் . இந்த காணியில் காப்பகத்தை அமைக்க ஐயா உத்தேசித்துள்ளார்.

அது வெற்றியடையும் என எதிர்பார்க்கலாம்.ஐயா நகைச்சுவையாக இந்த நாய்களுக்கு சாம்பாரும் சோறும்தான் உணவாக வழங்கப்படும் என்று சொன்னார்.

. சுவாமிகளும் ,எனையோரும் ,நாங்களும் ஐயோ நாய்கள் பாவம் என்று சொல்லுகிறோம் ஆனால் ஒருத்தரும் அவற்றை பாதுகாக்க எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை ஆனால் ஐயா செயலில் ஈடுபட்டமை பாராட்ட படவேண்டிய ஒர் விடயமாகும்.

Bildergebnis für hundefutter in dosen

சிரிப்பான  நல்ல கதை புத்தன்.  ?  

ஜேர்மன்  பெண்களுக்கு, தாய்ப் பாசத்தை விட,  நாய்ப் பாசம்  ? அதிகம் என்பது 100% உண்மை.

எங்களது  ஜேர்மனியில்....  ?️‍?️ தமிழ் பெயரில்... நாயின் உணவு  ?️‍?️ உள்ளதை கவனிக்கவும்.  ⛑️   
ஜேர்மன் உதவியுடன்,  நாய்க் காப்பகம் ? அமைத்தால், நிச்சயம்  நல்ல வருமானம்,  ஐயாவுக்கு வரும். ?

ஏனென்றால்... எங்கள் ஊர் நாய்கள், "ரின் சாப்பாடுகளை" விரும்பி சாப்பிடாமல்,
மிஞ்சின ?  சோறும்,  சாம்பாறும்,  பருப்பு கறியும்   கொடுத்தாலே... நன்றியுடன் வாலை  ஆட்டிக் கொண்டு,  சப்பி  சாப்பிடுவார்கள். ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்லை எனக்கு வழமையான மாதிரி கதை துண்டற விளங்கேல்லை....
இயக்கச்சி எண்டவுடனை  அப்பிடியே விசயத்தை கவ்வி பிடிச்சிட்டன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

முதல்லை எனக்கு வழமையான மாதிரி கதை துண்டற விளங்கேல்லை....
இயக்கச்சி எண்டவுடனை  அப்பிடியே விசயத்தை கவ்வி பிடிச்சிட்டன் 

எனக்கு இயக்கச்சி பக்கம் போய் அனுபவமில்லை எண்டதால கதை விளங்கவில்லை!

என்ன சூக்குமம் இதுக்குள்ள இருக்கும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்காப்பகம் அசத்தல்......கதையாக இருந்தாலும் நிஜமாகவே தெரு நாய்களின் நிலமை பரிதாபம்தான்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

முதல்லை எனக்கு வழமையான மாதிரி கதை துண்டற விளங்கேல்லை....
இயக்கச்சி எண்டவுடனை  அப்பிடியே விசயத்தை கவ்வி பிடிச்சிட்டன் 

இப்ப... முழிப்பது....  புத்தன், கிருபன், சுவி, தமிழ் சிறி  ? 
குமாரசாமி அண்ணை...   "இயக்கச்சி"  கதையை, நீங்கள் சொல்லியே..  ஆக  வேண்டும்.  ஆமா.....   ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் சிரிக்கிறார் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/29/2018 at 2:54 AM, putthan said:

இதை எங்கோ வாசித்த மகிந்தா கட்டாகாலி நாய்களை பிடிப்பதை தடை செய்து விட்டார்.இதனால் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது அவைகள் பல்கி பெருகி இப்பொழுது பொதுமக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகின்றது என குறைப்பட்டு கொண்டார் அந்த பெரியவர்.

ஊரில இன்னும் கொஞ்சகாலம் போனால் இந்த நாய்ப் பிரச்சனையே இருக்காது.

முன்னர் நாய்க்கு குறி சுடும் பழக்கம் இருந்தது.இப்போது நம்ம நாய் அடுத்தவன் நாயோடு கூடி பழகுவதை விரும்பாமல் நாய் கெளரவமாக இருக்க வேண்டுமென்பதற்காக 2000 ரூபா கொடுத்து ஊசி போட்டு வீட்டோடே வைத்துக் கொள்கிறார்கள்.

தமிழன் தாய் பெயரோ மம்மி

அவன் நாய் பெயரோ ஜிம்மி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் ஏறக்குறைய 6 மில்லியன் நாய்கள் இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் .....நாய்களை வாங்கும் போதும்....அல்லது நாய்களை மாற்றும்போதும்.....yagoona வில் உள்ள...நாய்க்காப்பகத்தில் தான் வாங்குவது வழக்கம்!

வெளியில்....நாய் விற்பவர்களிடம் வாங்குவதில்லை! ஏனெனில் அவர்கள்....தாய் நாய்களைப் பிள்ளை பெறும் இயந்திரங்களாக மட்டும் உபயோகித்து விட்டுப்...பின்னர் அவற்றில் பிள்ளை பெறும் காலம் முடிந்ததும் தெருவில் விட்டு விடுவார்கள்!

அவ்வளவு தான் அவர்களது....நாயாபிமானம்!

அநேகமாகச் சிட்னியில் நடக்கும்.... Million paws walks..... நிகழ்வில்....புங்கையும்....ஒரு ஓரத்தில் தனது நாயுடன்...ஓரமாகக நடந்து போவதைக் காணலாம், புத்தன்!

ஒருக்கால்...ஊருக்குப் போன நேரம்.....வெறும் தீச்ச மீன் முள்ளுடனும், புழிஞ்ச தேங்காய்ப் பூவுடனும், கொஞ்சம் சோற்றுடனும் காலத்தை ஓட்டும்...ஊர் நாய் பாவம் எண்டு நினைச்சு...அதுக்கு..அவுஸ்திரேலியன் பேணிச் சாப்பாடு வாங்கிக் கொண்டு போய்க் குடுக்க...அதைப் பார்த்துக் கொண்டிருந்த கொஞ்சம் வயசு போன கிழவி ஒண்டு.....அட...தம்பி...வாசத்தைப் பார்த்தால்...நானே சாப்பிடலாம் போல கிடக்கு எண்டு சொல்ல.... கிழவியின்ர கண் பட்டதோ என்னவோ தெரியாது.....நாய் அவ்வளவு சாப்பாட்டையும்...சத்தி எடுத்து விட்டது!

பிறகு....வெறும் பேணியைக் காட்டினாலே....ஒழுங்கை முடிவுக்கு....ஓடிப்போய் விடும்!

தீச்ச மீனுக்கும்....புழிஞ்ச தேங்காய்ப் பூவுக்கும்..உள்ள மவுசு....நாய்க்குத் தெரியுது....நமக்குத் தான்....புரியுதில்லைப் போல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/31/2018 at 4:20 AM, தமிழ் சிறி said:

மை.

 

ஏனென்றால்... எங்கள் ஊர் நாய்கள், "ரின் சாப்பாடுகளை" விரும்பி சாப்பிடாமல்,
மிஞ்சின ?  சோறும்,  சாம்பாறும்,  பருப்பு கறியும்   கொடுத்தாலே... நன்றியுடன் வாலை  ஆட்டிக் கொண்டு,  சப்பி  சாப்பிடுவார்கள். ?

 

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்  ....உண்மையிலயே ஊர் நாய்கள் என்னத்தையும் சாப்பிடும்...ஐயா வருமானத்தை எதிர்பார்த்து இதை செய்யவில்லை....நாய்கள்மீதும் மனிதர்கள் மீதும் உள்ள அக்கறையால் செய்கின்றார் என நான் நினைக்கிறேன்.

On 5/31/2018 at 6:05 AM, குமாரசாமி said:

முதல்லை எனக்கு வழமையான மாதிரி கதை துண்டற விளங்கேல்லை....
இயக்கச்சி எண்டவுடனை  அப்பிடியே விசயத்தை கவ்வி பிடிச்சிட்டன் 

அண்ணே அதென்ன இயக்கச்சி கதை நான் இப்ப உண்மையிலயே முழுசிறன்.....:oO:

On 5/31/2018 at 6:49 AM, கிருபன் said:

எனக்கு இயக்கச்சி பக்கம் போய் அனுபவமில்லை எண்டதால கதை விளங்கவில்லை!

என்ன சூக்குமம் இதுக்குள்ள இருக்கும்??

சும்மா ஒருகிறுக்கல் தான் இதில் ஒரு சூக்குமமும் இல்லை....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/31/2018 at 6:50 AM, suvy said:

நாய்க்காப்பகம் அசத்தல்......கதையாக இருந்தாலும் நிஜமாகவே தெரு நாய்களின் நிலமை பரிதாபம்தான்.....!  tw_blush:

நாங்கள் இருந்த காலத்தை விட தற்பொழுது அதிகமாக உள்ளது....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

On 5/31/2018 at 7:00 AM, குமாரசாமி said:

புத்தர் சிரிக்கிறார் :cool:

:)

On 5/31/2018 at 7:19 AM, ஈழப்பிரியன் said:

ஊரில இன்னும் கொஞ்சகாலம் போனால் இந்த நாய்ப் பிரச்சனையே இருக்காது.

முன்னர் நாய்க்கு குறி சுடும் பழக்கம் இருந்தது.இப்போது நம்ம நாய் அடுத்தவன் நாயோடு கூடி பழகுவதை விரும்பாமல் நாய் கெளரவமாக இருக்க வேண்டுமென்பதற்காக 2000 ரூபா கொடுத்து ஊசி போட்டு வீட்டோடே வைத்துக் கொள்கிறார்கள்.

தமிழன் தாய் பெயரோ மம்மி

அவன் நாய் பெயரோ ஜிம்மி

ஆனால் தெரு நாய்களுக்கு 2000 ரூபா கொடுத்து ஒருத்தரும் குடும்பகட்டுப்பாடு செய்யமாட்டினம்tw_blush:.....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/31/2018 at 2:13 PM, Kavi arunasalam said:

யேர்மனியில் ஏறக்குறைய 6 மில்லியன் நாய்கள் இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள்

நன்றிகள் கவி ....வருகைக்கும் தகவ‌லுக்கும்....அங்கு தெருவில் எத்தனை நிற்கின்றன ஒரு ஆயிரம்?எங்கள் நாட்டில் மில்லியன் நாய்கள் தெருவிலும் ஆயிரம் நாய்கள் வீட்டிலும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/31/2018 at 3:20 PM, புங்கையூரன் said:

 

அநேகமாகச் சிட்னியில் நடக்கும்.... Million paws walks..... நிகழ்வில்....புங்கையும்....ஒரு ஓரத்தில் தனது நாயுடன்...ஓரமாகக நடந்து போவதைக் காணலாம், புத்தன்!

 

என‌க்கும் நீண்ட நாட்களாக நாய் வளர்க்க வேணும் என்று ஆசை ஆனால் ம‌னிசி அனுமதி கொடுக்கின்றார் இல்லை.
ஒரு நாள் சண்டையில சொல்லி போட்டார், நாய் வீட்டுக்குள்ள வந்தால் தான் வெளியால போய்விடுவன் ,நாயா? நானா? நீங்களே முடிவெடுங்கள் என்று ...அதற்கு பிறகு நான் நாய் கதையே கதைக்கிறதில்லை எல்லாம் எழுத்துதான்....

அடுத்த‌ முறை Million paws walks பார்கத்தான் வேணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

என‌க்கும் நீண்ட நாட்களாக நாய் வளர்க்க வேணும் என்று ஆசை ஆனால் ம‌னிசி அனுமதி கொடுக்கின்றார் இல்லை.
ஒரு நாள் சண்டையில சொல்லி போட்டார், நாய் வீட்டுக்குள்ள வந்தால் தான் வெளியால போய்விடுவன் ,நாயா? நானா? நீங்களே முடிவெடுங்கள் என்று ...அதற்கு பிறகு நான் நாய் கதையே கதைக்கிறதில்லை எல்லாம் எழுத்துதான்....

அடுத்த‌ முறை Million paws walks பார்கத்தான் வேணும்

எனக்குத் தெரிந்த வரையில்....வெளி நாடுகளில்...வாழ்பவர்கள்...உடம்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு..ஒரு அருமையானதும்..மலிவானதுமான ஒரு வழி...நாய் வளர்ப்பது தான்!

உங்களுக்காக இல்லாவிட்டாலும்....நாய்க்காகவாவது கட்டாயம் நடக்க வேண்டிய தேவை உள்ளது!

அத்துடன்....நீங்கள் வசிக்கும் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள்...புதிதாக வரும் அயலவர்கள் போன்ற அறிவையும் பெற...நாயுடன் நடப்பது..உதவும்!

அத்துடன்....ஒரு வேளை மனுசி விட்டிட்டுப் போனாலும்....நாய் ஒரு நாளும்...உங்களை விட்டுப் போகாது!?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புங்கையூரன் said:

எனக்குத் தெரிந்த வரையில்....வெளி நாடுகளில்...வாழ்பவர்கள்...உடம்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு..ஒரு அருமையானதும்..மலிவானதுமான ஒரு வழி...நாய் வளர்ப்பது தான்!

உங்களுக்காக இல்லாவிட்டாலும்....நாய்க்காகவாவது கட்டாயம் நடக்க வேண்டிய தேவை உள்ளது!

அத்துடன்....நீங்கள் வசிக்கும் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள்...புதிதாக வரும் அயலவர்கள் போன்ற அறிவையும் பெற...நாயுடன் நடப்பது..உதவும்!

அத்துடன்....ஒரு வேளை மனுசி விட்டிட்டுப் போனாலும்....நாய் ஒரு நாளும்...உங்களை விட்டுப் போகாது!?

 

குந்திக்கொண்டு உதில தட்டிக்கொண்டிருக்காமல் நடந்திட்டு வாங்கோ என்று  சொல்லுறவ இதை சாட்டா வைத்து அனுமதி எடுக்கத்தான் வேணும்....tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

என‌க்கும் நீண்ட நாட்களாக நாய் வளர்க்க வேணும் என்று ஆசை ஆனால் ம‌னிசி அனுமதி கொடுக்கின்றார் இல்லை.
ஒரு நாள் சண்டையில சொல்லி போட்டார், நாய் வீட்டுக்குள்ள வந்தால் தான் வெளியால போய்விடுவன் ,நாயா? நானா? நீங்களே முடிவெடுங்கள் என்று ...அதற்கு பிறகு நான் நாய் கதையே கதைக்கிறதில்லை எல்லாம் எழுத்துதான்....

அடுத்த‌ முறை Million paws walks பார்கத்தான் வேணும்

ஆண்டவன் மிகவும் கருணையுள்ளவர். எப்போதாவதுதான் அருமையாக ஒரு சந்தர்ப்பத்தை போட்டுட்டு போகிறார்......ஆனாலும் விதி வலியது.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

எனக்குத் தெரிந்த வரையில்....வெளி நாடுகளில்...வாழ்பவர்கள்...உடம்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு..ஒரு அருமையானதும்..மலிவானதுமான ஒரு வழி...நாய் வளர்ப்பது தான்!

உங்களுக்காக இல்லாவிட்டாலும்....நாய்க்காகவாவது கட்டாயம் நடக்க வேண்டிய தேவை உள்ளது!

அத்துடன்....நீங்கள் வசிக்கும் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள்...புதிதாக வரும் அயலவர்கள் போன்ற அறிவையும் பெற...நாயுடன் நடப்பது..உதவும்!

அத்துடன்....ஒரு வேளை மனுசி விட்டிட்டுப் போனாலும்....நாய் ஒரு நாளும்...உங்களை விட்டுப் போகாது!?

 

அதோட முஞ்சையை நீட்டாது எப்பவும் வாலை ஆட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2018 at 8:48 PM, suvy said:

ஆண்டவன் மிகவும் கருணையுள்ளவர். எப்போதாவதுதான் அருமையாக ஒரு சந்தர்ப்பத்தை போட்டுட்டு போகிறார்......ஆனாலும் விதி வலியது.....! tw_blush:

 just miss it :)

On 6/2/2018 at 1:41 AM, சுவைப்பிரியன் said:

அதோட முஞ்சையை நீட்டாது எப்பவும் வாலை ஆட்டும்.

அதென்றால் 100% உண்மை

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 5/31/2018 at 3:20 PM, புங்கையூரன் said:

 

ஒருக்கால்...ஊருக்குப் போன நேரம்.....வெறும் தீச்ச மீன் முள்ளுடனும், புழிஞ்ச தேங்காய்ப் பூவுடனும், கொஞ்சம் சோற்றுடனும் காலத்தை ஓட்டும்...ஊர் நாய் பாவம் எண்டு நினைச்சு...அதுக்கு..அவுஸ்திரேலியன் பேணிச் சாப்பாடு வாங்கிக் கொண்டு போய்க் குடுக்க...அதைப் பார்த்துக் கொண்டிருந்த கொஞ்சம் வயசு போன கிழவி ஒண்டு.....அட...தம்பி...வாசத்தைப் பார்த்தால்...நானே சாப்பிடலாம் போல கிடக்கு எண்டு சொல்ல.... கிழவியின்ர கண் பட்டதோ என்னவோ தெரியாது.....நாய் அவ்வளவு சாப்பாட்டையும்...சத்தி எடுத்து விட்டது!

 

முல்லைக்கொடிக்கு தான் ஏறிவந்த  தேரினைக் கொடுத்தவன் பாரி. இதனால்  வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றுவர்.  

 தாயகத்துக்கு செல்லும் போது நாய்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொண்ட முதலாவது தமிழர் புங்கையூரான் அவர்களை இன்று முதல் "  பாரியை விஞ்சிய பூங்கையர்'   என்று அழைக்கப்படுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கந்தப்பு said:

முல்லைக்கொடிக்கு தான் ஏறிவந்த  தேரினைக் கொடுத்தவன் பாரி. இதனால்  வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றுவர்.  

 தாயகத்துக்கு செல்லும் போது நாய்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொண்ட முதலாவது தமிழர் புங்கையூரான் அவர்களை இன்று முதல் "  பாரியை விஞ்சிய பூங்கையர்'   என்று அழைக்கப்படுவார்.

ஆஹா ....அருமையான விருது, போற்றத் தக்கது.....!  விருதை சுருக்கி பாவி புங்கையர் என்றும் அழைக்கலாம்......!  ?

Link to comment
Share on other sites

நேரப்பற்றாக்குறை, மற்றும் பொறுமை இல்லாதபடியால் உங்கள் கதைகளை வாசிக்கமுடியாமல் போய்விட்டது புத்தன். ஆனால் இன்று வாசித்தேன். நல்ல கருப்பொருள். எங்கள் கொக்குவில் வீட்டு நாயின் நினைவும் வந்துவிட்டது கதையை வாசித்தபின்னர். நாய் பிடிப்பதற்கு எதிராக இப்போது இலங்கையில் சட்டம் உள்ளது என்று இன்றுதான் அறிந்துகொண்டேன். நாய் காப்பகம் உண்மையில் நல்ல வரவேற்கத்தக்க முயற்சி. நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தினாலே போதும். அவற்றை பிடித்து கொன்று கட்டாக்காலி நாய்களை அழிக்கவேண்டிய தேவை ஏற்படாது.

On 5/31/2018 at 1:20 AM, புங்கையூரன் said:

நானும் .....நாய்களை வாங்கும் போதும்....அல்லது நாய்களை மாற்றும்போதும்.....yagoona வில் உள்ள...நாய்க்காப்பகத்தில் தான் வாங்குவது வழக்கம்!

வெளியில்....நாய் விற்பவர்களிடம் வாங்குவதில்லை! ஏனெனில் அவர்கள்....தாய் நாய்களைப் பிள்ளை பெறும் இயந்திரங்களாக மட்டும் உபயோகித்து விட்டுப்...பின்னர் அவற்றில் பிள்ளை பெறும் காலம் முடிந்ததும் தெருவில் விட்டு விடுவார்கள்!

அவ்வளவு தான் அவர்களது....நாயாபிமானம்!

அநேகமாகச் சிட்னியில் நடக்கும்.... Million paws walks..... நிகழ்வில்....புங்கையும்....ஒரு ஓரத்தில் தனது நாயுடன்...ஓரமாகக நடந்து போவதைக் காணலாம், புத்தன்!

ஒருக்கால்...ஊருக்குப் போன நேரம்.....வெறும் தீச்ச மீன் முள்ளுடனும், புழிஞ்ச தேங்காய்ப் பூவுடனும், கொஞ்சம் சோற்றுடனும் காலத்தை ஓட்டும்...ஊர் நாய் பாவம் எண்டு நினைச்சு...அதுக்கு..அவுஸ்திரேலியன் பேணிச் சாப்பாடு வாங்கிக் கொண்டு போய்க் குடுக்க...அதைப் பார்த்துக் கொண்டிருந்த கொஞ்சம் வயசு போன கிழவி ஒண்டு.....அட...தம்பி...வாசத்தைப் பார்த்தால்...நானே சாப்பிடலாம் போல கிடக்கு எண்டு சொல்ல.... கிழவியின்ர கண் பட்டதோ என்னவோ தெரியாது.....நாய் அவ்வளவு சாப்பாட்டையும்...சத்தி எடுத்து விட்டது!

பிறகு....வெறும் பேணியைக் காட்டினாலே....ஒழுங்கை முடிவுக்கு....ஓடிப்போய் விடும்!

தீச்ச மீனுக்கும்....புழிஞ்ச தேங்காய்ப் பூவுக்கும்..உள்ள மவுசு....நாய்க்குத் தெரியுது....நமக்குத் தான்....புரியுதில்லைப் போல!

நல்ல விடயம் புங்கையூரன். நானும் கனடாவில் இருந்து சென்றபோது எனது மனைவியின் வீட்டில் உள்ள நாய்க்கு உண்பதற்கு நல்ல பாத்திரம் ஒன்றும், அது உண்பதற்கு நாய்களுக்கு கொடுக்கப்படும் உணவு பெட்டி ஒன்றும் கொண்டு சென்றேன். நான் மனைவியுடன் தொலைபேசியில் கதைக்கும்போது அதனுடனும் கதைத்து குரலை காட்டிக்கொள்வேன். நல்ல புத்திசாலித்தனமான நாய் அது. கனடாவில் நாய் வளர்ப்பதற்கு சூழ்நிலைகள் இடம்கொடுக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்காப்பகம் பற்றி எனக்கு எந்த அனுபவமும் இல்லை. ஆனால் எனது மகள் பல வருடங்களாக கேட்டும் நான் நாய் வளர்ப்பதற்கு  அனுமதிக்கவில்லை. சென்ற வருடம் எனது மருமகள் தாயகம் புறப்பட்டபோது மகள் அவவின் நாய்க்குட்டியை பராமரிக்கும் பொறுப்பை சந்தோசமாக ஏற்றுக்கொண்டார். மறுநாளே மகள் திராட்சைப்பழம் உண்ண நாய்க்குட்டி வாய்பார்க்க மகளும் அதற்கும் ஒரு திராட்சைப்பழத்தை உண்ணக் கொடுத்து விட்டார். பின் என்ன நினைத்தாரோ கணனியை தட்டி வலைத்தளத்தை தேடிய பொழுது அந்த வகை நாய்க்கு திராட்சைப்பழம் விசம்என்று தெரிந்தது. உடனடியாக நாய்க்குட்டியுடன் நாய்வைத்தியரிடம் சென்று ஊசி போட்டு வாந்தி எடுக்க வைத்து திரும்பினார். கொடுத்தது ஒரு திராட்சைப்பழம் செலவழித்ததோ 100 டொலர். கதைக்கு பாராட்டுக்கள் புத்தன்

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

குசும்புக் கிறுக்கல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்து உங்கள் நாய்க் காப்பகத்திலிருந்து தான் தமிழநாட்டுக்கு நாய்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.