Jump to content

``துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்?’’ - கேள்வியைக் காதில் வாங்காமல் நழுவிச்சென்ற ஓ.பன்னீர்செல்வம்


Recommended Posts

``துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்?’’ - கேள்வியைக் காதில் வாங்காமல் நழுவிச்சென்ற ஓ.பன்னீர்செல்வம்

 

``ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.  ஆலையை நிரந்தமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும். சட்ட ரீதியான பணிகளையும் அரசு செய்யும்" எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

108_10096.jpg

 

தூத்துக்குடியில், கடந்த 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின்போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில், 13 பேர் உயிரிழந்தனர். 105 பேர் காயமடைந்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருபவர்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, ராஜலெட்சுமி ஆகியோர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ``ஸ்டெர்லைட் ஆலையை மூட, கடந்த 2013-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஆனால், டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின்மூலம் ஆலைத் தரப்பு உத்தரவுபெற்று ஆலையை இயக்கத் தொடங்கியது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. 

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி, ஆலையை இயக்குவதற்கான அனுமதியை ரத்துசெய்துள்ளது. இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.  ஆலையை நிரந்தமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்கான சட்ட ரீதியான பணிகளை அரசு செய்யும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆட்சிமீது மக்களுக்கு அதிருப்தி இல்லை.

109_10567.jpg

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு துயரச் சம்பவம் நெஞ்சை உருக்குகிறது. இதில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் உடல்நலம்பெற்றுவருகிறார்கள். தூத்துக்குடியில் அமைதி திரும்பி மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிவருகின்றனர்" என்றார். முன்னதாக, "துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்?" என செய்தியாளர்கள் பலமுறை கேட்டும் காதில் விழாதது போலவே, பதில் அளிக்காமல் நழுவிச்சென்றார். அதன்பின், கலெக்டர் அலுவலகத்துச் சென்ற ஓ.பி.எஸ், அங்கு கலவரத்தில் சேதமடைந்த வாகனங்களைப் பார்வையிட்டார். பிறகு, விமான நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

 

நேற்று, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு காயம் அடைந்தவர்களைச் சந்தித்தபோது, அவர்கள் சரியாகப் பேசாததால் பாதியிலேயே கிளம்பிச்சென்றார். இது, மீடியாக்களில் வைரலானது. இன்றும் அதுபோல, அதிருப்தியில் யாரும் பேசிவிடக் கூடாது என்பதற்காகவும், இச்செய்தி மீடியாக்களில் பதிவாகிவிடக் கூடாது என்பதற்காகவும் மீடியாக்கள் யாரும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை. கட்சிக்காரர்களும் வாசலிலேயே நிறுத்திவைக்கப்பட்டனர். 

https://www.vikatan.com/news/tamilnadu/126112-definitely-sterlite-will-closure-says-deputy-cm-ops.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அவர். வேறென்ன செய்வார். மோடி சொல்வதை அப்படியே செய்வார்.மானம்கெட்ட ஈனப்பிறப்புகள்..தமிழ்நாட்டின் சாபக்கேடு. காசு வாங்கி ஓட்டுப்போடும் மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் 1- தூரத்திலிருந்து சுட்டதாக மக்களை நம்பவைத்து...

படம் 2- போராட்டத்தை ஒருங்கிணைந்த தோழர்களை உளவுத்துறை உதவியுடன் அருகிலிருந்து துள்ளியமாக சுட்டு கொலை செய்துள்ளனர். 

DeRp9oFUQAA35l4.jpg DeRp-L5VAAA1KbH.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

படம் 1- தூரத்திலிருந்து சுட்டதாக மக்களை நம்பவைத்து...

படம் 2- போராட்டத்தை ஒருங்கிணைந்த தோழர்களை உளவுத்துறை உதவியுடன் அருகிலிருந்து துள்ளியமாக சுட்டு கொலை செய்துள்ளனர். 

DeRp9oFUQAA35l4.jpg DeRp-L5VAAA1KbH.jpg

 

காவல் துறையினர்..  துப்பாக்கி சூடு செய்வதற்கு முன்பே...  ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த,  CCTV  கமெராக்களை, வேறு திசையில் திருப்பப் பட்டுள்ளதை  பார்க்கும் போது... திட்டமிட்டு  கொலை செய்துள்ளார்கள். 

Image may contain: text

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.