Jump to content

பலத்த எதிர்பார்ப்புகளுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிய இலங்கை


Recommended Posts

பலத்த எதிர்பார்ப்புகளுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிய இலங்கை

 

 

Untitled-1-139-696x464.jpg
 

மேற்கிந்திய தீவுகள் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகப் பெரிய சவாலாக இருந்தாலும், இலங்கை அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தினால் இந்த தொடரை வெற்றி கொள்ள முடியம் என இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியினர், நேற்று (25) இரவு கரீபியன் தீவுகள் நோக்கி பயணமாகினர்.

 

 

அத்துடன், தனது தந்தையின் திடீர் மரணத்தையடுத்து மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகிக் கொண்டதுடன், அவருக்குப் பதிலாக மாற்று வீரரை இணைத்துக் கொள்ளாமலேயே இலங்கை அணி நேற்று இந்த சுற்றுப்பயணத்துக்காக புறப்பட்டுச் சென்றது.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்குப் புறப்பட்டுச் செல்ல முன், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கொழும்பிலுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வருகை தந்திருந்ததுடன், அதன்போது தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தனர். இதில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரின் ஆயத்தம் குறித்து தினேஷ் சந்திமால் கருத்து வெளியிடுகையில்,

”உண்மையில் இந்த தொடருக்கு முழுமையாக தயாராகியுள்ளோம். குறிப்பாக, கடந்த ஒரு வார காலம் நாங்கள் பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற விசேட பயிற்சி முகாமொன்றில் பங்குபற்றியிருந்தோம். அங்கு நாம் அணி செயற்பாடுகள் மற்றும் மேற்கிந்திய தீவுகளில் எமக்கு கிடைக்கவுள்ள ஆடுகளங்களை அமைத்து அதில் நாம் பயிற்சிகளை முன்னெடுத்திருந்தோம். ஆனால் அவர்கள் தமது நாட்டில் சிறப்பாக விளையாடுவார்கள் என்பதை நன்கு அறிவோம். எனவே ஓர் அணியாக எமது பலத்தையும், திட்டங்களையும் முன்னெடுத்து மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம். ஆனால் இத்தொடர் மிகப் பெரிய சவாலாக அமையும், எனவே முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி அதில் வெற்றியைப் பதிவுசெய்து ஏனைய இரு போட்டிகளிலும் அதேபோன்று விளையாடி தொடரை வெல்வதற்கு முயற்சி செய்வோம்.

அதுமாத்திரமின்றி நாம் 10 வருடங்களுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டெஸ்ட் தொடரொன்றில் விளையாடவுள்ளோம். அதிலும் குறிப்பாக அங்கு நாங்கள் டெஸ்ட் தொடரொன்றை கைப்பற்றவில்லை. எனவே அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தினால் இந்த தொடரை வெற்றி கொள்ள முடியம்” என தெரிவித்தார்.

 

”நானும் அங்கு சென்று ஒரு நாள் மற்றும் டி20 போட்டித் தொடர்களில் மாத்திரமே விளையாடியிருக்கின்றேன். எனவே எனது முதல் டெஸ்ட் தொடரும் இதுதான். ரங்கன ஹேரத்தைத் தவிர எமது அணியில் உள்ள எந்தவொரு வீரரும் அங்கு சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது கிடையாது. அதுவும் மிகப் பெரிய சவால்தான். ஆனால் கடந்த வருடம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்த ஐந்து வீரர்கள் தற்போது எமது டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். அது எமக்கு மிகப் பெரிய அனுகூலத்தைப் பெற்றுக்கொடுக்கும் என நம்புகிறோம்.

அதிலும் குறிப்பாக, மஹேல உடவத்த, குசல் ஜனித் போன்ற வீரர்கள் மீண்டும் டெஸ்ட் அணிக்குள் இடம்பெற்றுள்ளார்கள். எனவே அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கு இந்த தொடர் சிறந்த அடித்தளமாக அமையும்” என தெரிவித்தார்.

இதேநேரம், தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் திடீர் மரணம் மற்றும் அவர் இத்தொடரில் பங்கேற்காமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தினேஷ் சந்திமால் கருத்து வெளியிடுகையில்,

”உண்மையில் தனஞ்சய டி சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். என்னைப் போன்று அணியில் உள்ள சகல வீரர்களுக்கும் தனஞ்சயவின் தந்தை மரணமாகியது மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியது. அதேநேரம், தனஞ்சய டி சில்வா அணியில் இடம்பெறாமை மிகப் பெரிய இழப்பாகும். இறுதியாக நடைபெற்ற நான்கு தொடர்களில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைக் குவித்திருந்ததுடன், அணிக்கு வெற்றியையும், அதேபோன்று அணியை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு காரணமாக இருந்த முக்கிய வீரராகவும் இருந்தார். அவர் அணியில் இடம்பெறாமை எமக்கு மிகப் பெரிய இழப்பாக இருந்தாலும், எமக்கு ஓர் அணியாக முன்னோக்கி செல்ல வேண்டியிருக்கின்றது” என தெரிவித்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை தினேஷ் சந்திமாலின் தலைமையிலான இலங்கை அணி கைப்பற்றி ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய முதல் அணியாக இலங்கை வரலாறு படைத்தது.

 

இதனையடுத்து நடைபெற்ற இந்தியாவுடனான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என போரடித் தோற்றது. எனினும், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றிய இலங்கை அணி, டெஸ்ட் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி மேற்கிந்திய மண்ணில் டெஸ்ட் தொரொன்றை முதல் தடவையாகக் கைப்பற்றிய அணியாக புதிய டெஸ்ட் வரலாறு படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதுமாத்திரமின்றி கடந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 1000 டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்த வீரராக மாறிய 28 வயதான தினேஷ் சந்திமாலின் தலைமைத்துவம் மற்றும் ஆட்டத் திறமை இத்தொடரிலும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை ஒரு நாள் மற்றும் டி20 அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், இப்போட்டித் தொடருக்கான ஆயத்தம் குறித்து கருத்து தெரிவிக்கையில்,

”நாம் இந்த போட்டித் தொடருக்காக நல்ல முறையில் தயாரிகியிருந்தோம். ஆனால் மழை காரணமாக தடங்கல்கள் ஏற்பட்டாலும், கண்டிக்குச் சென்று பயிற்சிகளை முன்னெடுத்திருந்ததுடன், கொழும்பிற்கு வந்து உள்ளக அரங்கிலும் பயிற்சிகளை செய்தோம். எனவே அங்கு சென்று சிறப்பாக விளையாட முடியும் என எதிபார்த்துள்ளேன்.

angelo-mathews-3.jpgஉபாதை காரணமாக கடந்த காலங்களில் என்னால் விளையாட முடியாது போனது. எனினும், தற்போது பூரண குணமடைந்து எனது உடற்தகுதியை நிரூபித்து மீண்டும் அணிக்குள் இடம்பெற்றுள்ளேன். அதிலும் குறிப்பாக மாகாண அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் போட்டியொன்றிலும், ஒரு நாள் போட்டிகள் மூன்றிலும் விளையாடியிருந்தேன். எனவே நானும் இந்த தொடருக்கு முழுமையாகத் தயாரிகிவிட்டேன்.

நாங்கள் இறுதியாக 2008 இல் மேற்கிந்திய தீவுகள் சென்று டெஸ்ட் தொடரொன்றில் விளையாடியிருந்தோம். அந்த அணியில் ரங்கன ஹேரத் மாத்திரம் இடம்பெற்றிருந்தார். எனவே இம்முறை செல்லவுள்ள அனைவருக்கும் இந்த தொடரானது அறிமுகப் போட்டியாக இருக்கும். ஆனால் பெரும்பாலான வீரர்கள் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியிருக்கின்றோம். எனவே அந்த அனுபவங்களையும் பயன்படுத்தி வெற்றி பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என தெரிவித்தார்.

 

இதில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஒப் ஸ்பெய்னில் அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எனினும், இப்போட்டிக்கு முன்பதாக எதிர்வரும் புதன்கிழமை (30) ட்ரினிடாட்டில் நடைபெறவுள்ள மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது.

இதேவேளை, இரு அணிகளுக்குமிடையில் இதுவரை 17 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், இதில் 8 போட்டிகளில் இலங்கையும், 3 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளும் வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளது. அத்துடன், 6 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன. அதுமாத்திரமின்றி, மேற்கிந்திய மண்ணில் இலங்கை அணி மஹேல ஜயவர்தனவின் தலைமையில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் வெற்றியைப் பதிவுசெய்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தின் போட்டி அட்டவணை

பயிற்சிப் போட்டி – மே 30 தொடக்கம் ஜூன் 1 வரை, ட்ரினிடாட்

முதலாவது டெஸ்ட் போட்டி – ஜூன் 6 தொடக்கம் ஜூன் 10 வரை, ட்ரினிடாட்

இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஜூன் 14 தொடக்கம் ஜூன் 18 வரை, சென். லூசியா

மூன்றாவது டெஸ்ட் போட்டி – ஜூன் 23 தொடக்கம் ஜூன் 27 வரை, பார்படோஸ் (பகலிரவுப் போட்டி)

http://www.thepapare.com

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.