Jump to content

பலத்த எதிர்பார்ப்புகளுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிய இலங்கை


Recommended Posts

பலத்த எதிர்பார்ப்புகளுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிய இலங்கை

 

 

Untitled-1-139-696x464.jpg
 

மேற்கிந்திய தீவுகள் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகப் பெரிய சவாலாக இருந்தாலும், இலங்கை அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தினால் இந்த தொடரை வெற்றி கொள்ள முடியம் என இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியினர், நேற்று (25) இரவு கரீபியன் தீவுகள் நோக்கி பயணமாகினர்.

 

 

அத்துடன், தனது தந்தையின் திடீர் மரணத்தையடுத்து மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகிக் கொண்டதுடன், அவருக்குப் பதிலாக மாற்று வீரரை இணைத்துக் கொள்ளாமலேயே இலங்கை அணி நேற்று இந்த சுற்றுப்பயணத்துக்காக புறப்பட்டுச் சென்றது.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்குப் புறப்பட்டுச் செல்ல முன், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கொழும்பிலுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வருகை தந்திருந்ததுடன், அதன்போது தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தனர். இதில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரின் ஆயத்தம் குறித்து தினேஷ் சந்திமால் கருத்து வெளியிடுகையில்,

”உண்மையில் இந்த தொடருக்கு முழுமையாக தயாராகியுள்ளோம். குறிப்பாக, கடந்த ஒரு வார காலம் நாங்கள் பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற விசேட பயிற்சி முகாமொன்றில் பங்குபற்றியிருந்தோம். அங்கு நாம் அணி செயற்பாடுகள் மற்றும் மேற்கிந்திய தீவுகளில் எமக்கு கிடைக்கவுள்ள ஆடுகளங்களை அமைத்து அதில் நாம் பயிற்சிகளை முன்னெடுத்திருந்தோம். ஆனால் அவர்கள் தமது நாட்டில் சிறப்பாக விளையாடுவார்கள் என்பதை நன்கு அறிவோம். எனவே ஓர் அணியாக எமது பலத்தையும், திட்டங்களையும் முன்னெடுத்து மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம். ஆனால் இத்தொடர் மிகப் பெரிய சவாலாக அமையும், எனவே முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி அதில் வெற்றியைப் பதிவுசெய்து ஏனைய இரு போட்டிகளிலும் அதேபோன்று விளையாடி தொடரை வெல்வதற்கு முயற்சி செய்வோம்.

அதுமாத்திரமின்றி நாம் 10 வருடங்களுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டெஸ்ட் தொடரொன்றில் விளையாடவுள்ளோம். அதிலும் குறிப்பாக அங்கு நாங்கள் டெஸ்ட் தொடரொன்றை கைப்பற்றவில்லை. எனவே அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தினால் இந்த தொடரை வெற்றி கொள்ள முடியம்” என தெரிவித்தார்.

 

”நானும் அங்கு சென்று ஒரு நாள் மற்றும் டி20 போட்டித் தொடர்களில் மாத்திரமே விளையாடியிருக்கின்றேன். எனவே எனது முதல் டெஸ்ட் தொடரும் இதுதான். ரங்கன ஹேரத்தைத் தவிர எமது அணியில் உள்ள எந்தவொரு வீரரும் அங்கு சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது கிடையாது. அதுவும் மிகப் பெரிய சவால்தான். ஆனால் கடந்த வருடம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்த ஐந்து வீரர்கள் தற்போது எமது டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். அது எமக்கு மிகப் பெரிய அனுகூலத்தைப் பெற்றுக்கொடுக்கும் என நம்புகிறோம்.

அதிலும் குறிப்பாக, மஹேல உடவத்த, குசல் ஜனித் போன்ற வீரர்கள் மீண்டும் டெஸ்ட் அணிக்குள் இடம்பெற்றுள்ளார்கள். எனவே அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கு இந்த தொடர் சிறந்த அடித்தளமாக அமையும்” என தெரிவித்தார்.

இதேநேரம், தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் திடீர் மரணம் மற்றும் அவர் இத்தொடரில் பங்கேற்காமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தினேஷ் சந்திமால் கருத்து வெளியிடுகையில்,

”உண்மையில் தனஞ்சய டி சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். என்னைப் போன்று அணியில் உள்ள சகல வீரர்களுக்கும் தனஞ்சயவின் தந்தை மரணமாகியது மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியது. அதேநேரம், தனஞ்சய டி சில்வா அணியில் இடம்பெறாமை மிகப் பெரிய இழப்பாகும். இறுதியாக நடைபெற்ற நான்கு தொடர்களில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைக் குவித்திருந்ததுடன், அணிக்கு வெற்றியையும், அதேபோன்று அணியை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு காரணமாக இருந்த முக்கிய வீரராகவும் இருந்தார். அவர் அணியில் இடம்பெறாமை எமக்கு மிகப் பெரிய இழப்பாக இருந்தாலும், எமக்கு ஓர் அணியாக முன்னோக்கி செல்ல வேண்டியிருக்கின்றது” என தெரிவித்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை தினேஷ் சந்திமாலின் தலைமையிலான இலங்கை அணி கைப்பற்றி ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய முதல் அணியாக இலங்கை வரலாறு படைத்தது.

 

இதனையடுத்து நடைபெற்ற இந்தியாவுடனான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என போரடித் தோற்றது. எனினும், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றிய இலங்கை அணி, டெஸ்ட் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி மேற்கிந்திய மண்ணில் டெஸ்ட் தொரொன்றை முதல் தடவையாகக் கைப்பற்றிய அணியாக புதிய டெஸ்ட் வரலாறு படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதுமாத்திரமின்றி கடந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 1000 டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்த வீரராக மாறிய 28 வயதான தினேஷ் சந்திமாலின் தலைமைத்துவம் மற்றும் ஆட்டத் திறமை இத்தொடரிலும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை ஒரு நாள் மற்றும் டி20 அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், இப்போட்டித் தொடருக்கான ஆயத்தம் குறித்து கருத்து தெரிவிக்கையில்,

”நாம் இந்த போட்டித் தொடருக்காக நல்ல முறையில் தயாரிகியிருந்தோம். ஆனால் மழை காரணமாக தடங்கல்கள் ஏற்பட்டாலும், கண்டிக்குச் சென்று பயிற்சிகளை முன்னெடுத்திருந்ததுடன், கொழும்பிற்கு வந்து உள்ளக அரங்கிலும் பயிற்சிகளை செய்தோம். எனவே அங்கு சென்று சிறப்பாக விளையாட முடியும் என எதிபார்த்துள்ளேன்.

angelo-mathews-3.jpgஉபாதை காரணமாக கடந்த காலங்களில் என்னால் விளையாட முடியாது போனது. எனினும், தற்போது பூரண குணமடைந்து எனது உடற்தகுதியை நிரூபித்து மீண்டும் அணிக்குள் இடம்பெற்றுள்ளேன். அதிலும் குறிப்பாக மாகாண அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் போட்டியொன்றிலும், ஒரு நாள் போட்டிகள் மூன்றிலும் விளையாடியிருந்தேன். எனவே நானும் இந்த தொடருக்கு முழுமையாகத் தயாரிகிவிட்டேன்.

நாங்கள் இறுதியாக 2008 இல் மேற்கிந்திய தீவுகள் சென்று டெஸ்ட் தொடரொன்றில் விளையாடியிருந்தோம். அந்த அணியில் ரங்கன ஹேரத் மாத்திரம் இடம்பெற்றிருந்தார். எனவே இம்முறை செல்லவுள்ள அனைவருக்கும் இந்த தொடரானது அறிமுகப் போட்டியாக இருக்கும். ஆனால் பெரும்பாலான வீரர்கள் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியிருக்கின்றோம். எனவே அந்த அனுபவங்களையும் பயன்படுத்தி வெற்றி பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என தெரிவித்தார்.

 

இதில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஒப் ஸ்பெய்னில் அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எனினும், இப்போட்டிக்கு முன்பதாக எதிர்வரும் புதன்கிழமை (30) ட்ரினிடாட்டில் நடைபெறவுள்ள மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது.

இதேவேளை, இரு அணிகளுக்குமிடையில் இதுவரை 17 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், இதில் 8 போட்டிகளில் இலங்கையும், 3 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளும் வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளது. அத்துடன், 6 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன. அதுமாத்திரமின்றி, மேற்கிந்திய மண்ணில் இலங்கை அணி மஹேல ஜயவர்தனவின் தலைமையில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் வெற்றியைப் பதிவுசெய்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தின் போட்டி அட்டவணை

பயிற்சிப் போட்டி – மே 30 தொடக்கம் ஜூன் 1 வரை, ட்ரினிடாட்

முதலாவது டெஸ்ட் போட்டி – ஜூன் 6 தொடக்கம் ஜூன் 10 வரை, ட்ரினிடாட்

இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஜூன் 14 தொடக்கம் ஜூன் 18 வரை, சென். லூசியா

மூன்றாவது டெஸ்ட் போட்டி – ஜூன் 23 தொடக்கம் ஜூன் 27 வரை, பார்படோஸ் (பகலிரவுப் போட்டி)

http://www.thepapare.com

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.