Jump to content

அவர்கள் வாழட்டும் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் வாழட்டும் 

கலா பாக்யராஜ் தம்பதிகளுக்கு இறைவன் கொடுத்த பிள்ளைச் செல்வங்கள்  மூன்று ஆண்  குழந்தைகள். புலப்பெயர்ந்து  ஜேர்மனி  சென்ற இவர்கள்  படட  கஷ்டங்கள் ஏராளம் 

 குழந்தைகள் இரண்டு வருட இடைவெளியில் பிறந்ததால் மனைவி அவ்ர்களைக் கவனிக்க கணவன்  இரண்டு வேலை செய்து  பிள்ளைகளை அன்போடும் பன்பொடும் கண்ணுங் கரு த்துமாய் வளர்த்தார்.  

உறவினர்கள்  லண்டனில்   வாழ்ந்ததால்  இவர்களும் அங்கு சென்று  குழந்தைகளை வளர்க்க எண்ணினார்கள்.  இடம் மாறி அங்கு சென்ற பின் இலகுவாக இருக்கவில்லை வாழ்க்கை முறை.  மொழிமாற்றம் என  குழந்தைகள் கஷ்ட படவே  ஒரு வாத்தியாரை  ஓழுங்கு  செய்து   ..அவர்களுக்கு ஆங்கிலத்தில் முழுத்தேர்ச்சி அடைய  ஆன  மட்டும் முயற்சி செ ய்தார் தந்தை .  பிள்ளை கள் வளர தேவைகள்  அதிகரிக்க வே  வீட்டு வேலையுடன் சிறார்களை பராமரிக்கும் பகுதி நேர   முயற்சியிலும் மனைவி ஈடு பட்டு வாழ்க்கைச் செலவைப்  பகிர்ந்து கொண்டாள்   குழந்தைகளும் 

கல் வியில்சிறந்து வளர்ந்து  மூத்தவன் இன்ஜினியராகவும்.  இரண்டாவது பையன் சத்திர சிகிச்சை உதவியாளராகவும்     மூன்றாவது கட்டிடநிர்மாணிப்பாளர்களாவும்  ஆயினர். காலப்போக்கில்  ..பருவத்துக்குரிய  ஆசை கள் வரவே மூத்தவன்  ஒரு இந்துப்பெண்ணை காதலித்தார் . இப்போது அவர்கள் வீட்டில் புயல் வீசத்தொடங்கியது ...தாயின் வளர்ப்பு  என  தந்தையும் தாயும் மோதிக் கொண்டு ஆளை  ஆள் குறை கூறிக் கொண்டு  இருந்தனர்.  பாக்கிய ராஜுக்கு கால ஓட்ட்த்தின் வேகம்  நடைமுறை  விளங்க வில்லை...மனைவி எவ்வளவோ  எடுத்துசொல்லிப் பார்த்தார்.  

 மக்கள் மூவரும் தாயின் மீது மிகவும்  நேசமும்  கரிசனையும்  உள்ளவர்கள். பிள்ளைகள்  நண்பர்களை அழை த்து வந்தால்  அவர்களுக்கு சலிக்காது உபசரிப்பார். கணவனின் போக்கு மாறத்தொடங்கியது. குடியில் ஆரம்பித்து ...இவர்களை ப்பிரியும் நிலை ஆகியது ...மனைவியோ  யாரைக் க ட்டினாலும் என் பிள்ளைகள் சந்தோஷமாய்  வாழட்டும் என்னும் நிலையில் இருந்தாள். தந்தை யோ ..குல ம் கோத்திரம் சாதி சம்பிரதாயம் என் இன்னும் மாறாத மனம் உள்ளவராயிருந்தார். ஒரு கோடை  விடுமுறையில்  கணவன் தாயகம்  சென்று ..தனது   பழைய காணிகளை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கினார். ..

மூத்தவனோ தாயுடனும் வருங்கால மனைவியின் பெற்றவர்களுடனும் கலந்து ஆலோசித்து ...திருமண நாள் குறித்து விட்டு அதற்கான ஆயத்தங்களை செய்து    தாயின் ஒன்றுவிட்ட் அண்ணரின் துணையுடன்  திருமணம்  நடக்க இருக்கிறது .. திருமண நாளுக்கு சற்று முன்பாக     தந்தைக்கு அறிவிக்க இருக்கிறார்கள்.  திருமணம்  சுபமே நடக்க நீங்களும் நாங்களும் வாழ்த்துவோம்.   தந்தை வருவாரா ...கலகம் நடக்குமா பொறுத்து இருந்து  பார்க்கலாம் . 

வருங்கால இளையோரின் வாழ்வு அவர்கள் முடிவுப்படியே நடக்கும்  நாம் வெறும் பார்வையாளர் ...எங்கள் காலத்தில் நடைபெற்றது போல   ஊர் கூட்டி ...உறவுகள் கூடி பெற்ற்வரின்  எண்ணப்படி நடக்கும் என எண்ண   முடியாது .கால  ஒடடத்துக்கேற்ப நாமும் மாறித்தான் ஆக  வேண்டும். இது உங்கள் வீட்டின் கதையாகவும் இருக்கலாம். .இது என் நண்பியின் வீட்டுக் கதை ...உங்கள் வீடுகளில் இப்படி இருந்தால் எப்படி சமாளிப்பீர்கள்...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலாவதியான சிந்தனைகளோடு தந்தை இருப்பது அவரை பிள்ளைகளிலிருந்து அந்நியப்படுத்தும். இப்படியான சிந்தனை உள்ளவர்களுக்கு சொல்லினாலும் புரியும் என்று நம்பவில்லை. எனவே அன்புச் சிறைக்குள் கட்டுப்படாது மாறிவரும் உலகுக்கு ஏற்ப சரியான முடிவை பிள்ளைகள் எடுக்கவேண்டும். 

உணர்வு ரீதியாக பிள்ளைகளை தந்தை மிரட்டமாட்டார் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பம் ஒரு கதம்பம பல வண்ணம்

தினமும் மதி மயங்கும் பல எண்ணம் 

தேவன் ஒரு பாதை

தேவி ஒரு பாதை

குழந்தை ஒரு பாதை

காலம் செய்யும் பெரு லீலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/26/2018 at 8:14 PM, நிலாமதி said:

உங்கள் வீடுகளில் இப்படி இருந்தால் எப்படி சமாளிப்பீர்கள்...?

இது இன்றைய புலம்பெயர் சமுதாயங்களில் நடக்கும் பிரச்சனைகளில் முதலிடம் வகிக்கின்றது.

மாற்றங்கள் வரவேண்டும். அதை அணுக வேண்டிய முறையில் அணுகி சுமுகமாக தீர்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

காலாவதியான சிந்தனைகளோடு தந்தை இருப்பது அவரை பிள்ளைகளிலிருந்து அந்நியப்படுத்தும். இப்படியான சிந்தனை உள்ளவர்களுக்கு சொல்லினாலும் புரியும் என்று நம்பவில்லை. எனவே அன்புச் சிறைக்குள் கட்டுப்படாது மாறிவரும் உலகுக்கு ஏற்ப சரியான முடிவை பிள்ளைகள் எடுக்கவேண்டும். 

உணர்வு ரீதியாக பிள்ளைகளை தந்தை மிரட்டமாட்டார் என்று நம்புகின்றேன்.

தற்போதைய இளம் சமுதாயத்தின்....
நேற்றைய காதலும்...
இன்றைய திருமணமும்...
நாளைய விவாகரத்தும்....

இவையும் பெற்றோர்களின் வயிற்றில் புளியை கரைக்கின்றது. ஏனெனில் இவையும் கண்முன்னே நடந்தேறுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் மீது எனக்குக் கோபமில்லை!

ஆனால்...அவரைத் தலை மீது சுமப்பவர்கள் மீது தான் ...எனது கோபம் எல்லாம்!

ஸ்டீபன் ஹாககிங்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றவர்கள் நாம் கட்டாயம் மாறியே ஆக வேண்டும். பிள்ளைகள் மாறி வெகுநாட்களாகி விட்டது. நாம் மாறாமல் இருந்து என்னத்தைச் சாதிக்கப் போகிறோம். அவர்கள் வாழட்டும். நாம் வாழ்த்துவோம்

Link to comment
Share on other sites

 புலம்பெயர்ந்த நாடுகளில்  அடுத்துவரும் சந்ததிகள்  முற்று முழுதாக சாம்பாராக மாறும் அபாயம் இருக்கிறது.  4வது சந்ததிக்காரன் இப்படிச் சொல்வான்.  'என்னுடைய அப்பாவின் அப்பா இலங்கைத்தமிழ், அப்பாவின் அம்மா குஜராத்தி , அம்மாவின் அப்பா நையீரியா, அம்மாவின் அம்மா சீனர்.  நான் ஒரு இத்தாலி நாட்டவனைத் திருமணம் செய்யப்போகிறேன்'.   பெற்றோர்கள் விரும்பியோ விரும்பாமலோ மாறப்போகிறார்கள்.    ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆத்மா இப்படி  நினைக்கும். 'யூலைக்கலவரத்தில் நான் 3000 தமிழர்களை அழித்தேன். இப்பொழுது  நாட்டைவிட்டு ஓடியவர்கள் வரும் சந்ததிகளில் முற்றுமுழுதாக தமிழரல்லாதவர்களாக மாறப்போகிறர்கள்.  அழியப்போகிறார்கள்.  புத்தம் சரணம் கச்சாமி, தமிழரைக் கொல்லடா கச்சாமி'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

தற்போதைய இளம் சமுதாயத்தின்....
நேற்றைய காதலும்...
இன்றைய திருமணமும்...
நாளைய விவாகரத்தும்....

இவையும் பெற்றோர்களின் வயிற்றில் புளியை கரைக்கின்றது. ஏனெனில் இவையும் கண்முன்னே நடந்தேறுகின்றது.

காதலிக்கும் முடிவை சடுதியாக எடுத்தாலும், திருமணத்தையும், விவாகரத்தையும் தீர ஆராய்ந்து எடுக்கும்போது அவற்றை ஆதரிப்பதுதான் சரி.

பிடித்த ஒருவருடனும் வாழும் வாழ்க்கை எப்போதும் இனிக்கும் அதேவேளை பிடிக்காத ஒருவருடனான வாழ்க்கை கசப்பையும் ஏமாற்றங்களையும் தரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

காதலிக்கும் முடிவை சடுதியாக எடுத்தாலும், திருமணத்தையும், விவாகரத்தையும் தீர ஆராய்ந்து எடுக்கும்போது அவற்றை ஆதரிப்பதுதான் சரி.

பிடித்த ஒருவருடனும் வாழும் வாழ்க்கை எப்போதும் இனிக்கும் அதேவேளை பிடிக்காத ஒருவருடனான வாழ்க்கை கசப்பையும் ஏமாற்றங்களையும் தரும்.

காதல்/காமம் எனும் போர்வையில் புரிந்துணர்ந்த பின் விவாகம் செய்து அதன் பின் வரும் விவகாரத்தால் விவாகரத்தை சம்பந்தப்பட்ட இருவரும் தனியாக இருக்கும் போது எடுத்தால் பரவாயில்லை.......

அங்கே சகிப்புத்தன்மை இருவருக்குமேயில்லை என்பது புலனாகி விடுகின்றது.

ஆனால் குழந்தைகள் பெற்ற பின் குழந்தைகளுக்காக வாழாமல் சுயநல மனநிலைகளுக்காக தேடும் விவாகரத்துக்களே தற்போது  கூடுதலாக இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்த இடத்தில் அகதி ....
வேலை இடத்தில்  கூட்டி பெருக்கல் 

இருக்கிறது ஒன்றே ஒன்று யாருக்கும் புரியாத சாதி 
இவர்கள் என்ன வேலையும் செய்யலாம் சாதி மாறாது 
அடுத்தவன் இன்ன இன்ன வேலை செய்தால் இன்ன சாதி.

அதையும் விட சொன்னால் அவன் என்ன செய்வான்? 

இன்னும் ஒரு 20-30 வருஷத்தில்  சுகர் கொலஸ்டரோல் அதுகள் 
இந்த சாதி இருக்கிற உடம்புகளையும் தூக்கி கொண்டு போய்விடும் 
அதுக்கு அப்புறம் இந்த நாடகம் புலம்பெயர் தேசங்களில் மறைந்து விடும் 

ஊருக்கான தொடர்பும் கொஞ்சம் கொஞ்சம் அறுந்து கொண்டு போகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ‌ர்கள் வாழ நாங்கள் தான் மாறவேண்டும்

On 5/28/2018 at 4:23 PM, கந்தப்பு said:

 புலம்பெயர்ந்த நாடுகளில்  அடுத்துவரும் சந்ததிகள்  முற்று முழுதாக சாம்பாராக மாறும் அபாயம் இருக்கிறது.  4வது சந்ததிக்காரன் இப்படிச் சொல்வான்.  'என்னுடைய அப்பாவின் அப்பா இலங்கைத்தமிழ், அப்பாவின் அம்மா குஜராத்தி , அம்மாவின் அப்பா நையீரியா, அம்மாவின் அம்மா சீனர்.  நான் ஒரு இத்தாலி நாட்டவனைத் திருமணம் செய்யப்போகிறேன்'.   பெற்றோர்கள் விரும்பியோ விரும்பாமலோ மாறப்போகிறார்கள்.    ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆத்மா இப்படி  நினைக்கும். 'யூலைக்கலவரத்தில் நான் 3000 தமிழர்களை அழித்தேன். இப்பொழுது  நாட்டைவிட்டு ஓடியவர்கள் வரும் சந்ததிகளில் முற்றுமுழுதாக தமிழரல்லாதவர்களாக மாறப்போகிறர்கள்.  அழியப்போகிறார்கள்.  புத்தம் சரணம் கச்சாமி, தமிழரைக் கொல்லடா கச்சாமி'

எங்கன்ட ஆட்கள் ஜெய்வர்த்தனாவின் வாரிசுகளை  கட்டியிருக்கினம் ,கட்டுவினம் .....அதை எழுத மறந்திட்டியள்....

ஏன் நாலாவது சந்ததிக்கு போவான் இரண்டு மூன்றே அப்படித்தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாடு, எந்த வீடாக இருந்தால் என்ன, எவ்வளவுதான் அன்னியோன்னியமான கணவன் மனைவியானாலும் சரி, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைப்படும்போது பெண் என்பவள் இயல்பாகவே பிள்ளைகளின் பக்கம் சார்ந்து விடுகிறாள்.அதனால் பிள்ளைகள் விடும் தவறுகளையும் அவளின் தாய்ப்பாசம் மறைத்து விடுகின்றது. ஆண்களால் அவற்றை அனுசரித்து போக முடிவதில்லை. அதனால் அவன் ஒரங்கட்ட  படுகிறான் அல்லது தானாகவே ஒதுங்கி கொள்கிறான். இக் கதையிலும் அதுதான் நடக்கிறது. தொடருங்கள்......!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.